சிந்திக்க அமுத மொழிகள்-335 (994th Posting)

வாழ்க மனித அறிவு!                               வளர்க மனித அறிவு!!

சிந்திக்க அமுத மொழிகள்-335  (994th Posting)

            

    22-05-2022 — ஞாயிறு

 அறிவு வளர்ச்சி

மனிதனுடைய மகத்துவத்தை அவனே அறிந்துகொண்டு மனிதனாகவே வாழ்வதற்கு ஏற்ற சூழ்நிலைகள் உலகமுழுதும் குறுகிய காலத்திலேயே உருவாகிவிடும் என்பது திண்ணம்.”

                                                      . . . வேதாத்திரி மகரிஷி.

பயிற்சி—

  1. மனிதகுலம் தன்னுடைய மகத்துவத்தை தற்போது அறிந்துகொள்ளவில்லை என்கிறாரா மகரிஷி அவர்கள்?
  2. ந்த அடிப்படையில் அவ்வாறு கூறுகிறார்?
  3. மனிதகுலம் தன்னுடைய மகத்துவத்தை அறியாததுதான் இன்று மனிதகுலம் படும் எல்லாத்துன்பங்களுக்கும் காரணமா?
  4. மனிதனின் மகத்துவம் பற்றி மகரிஷி அவர்கள் ஏதேனும் கவிகளின் வாயிலாகத் தெரிவித்துள்ளாரா? ஞா.க. கவிகள் [எண் 290(1955) மற்றும் 297(03-01-1959)] என்ன கூறுகின்றன?
  5. முன்னாள் ஜனாதிபதியும் தத்துவஞானியுமான டாக்டர். இராதாகிருஷ்ணன் பரிணாமம் இன்னும் பூர்த்தியாகவில்லை-Evolution is  still incomplete) என்று கூறியுள்ளதையே மகரிஷி அவர்கள் ’மனிதகுலம் தன்னுடைய மகத்துவத்தை தற்போது அறியவில்லை’ என்கிறாரா? 
  6. ஆதிமனிதனிலிருந்து கருத்தொடராக வந்துள்ள இன்றைய மனிதகுலம் பல்லாயிரம் ஆண்டுகள் ஆகியும் தன்னுடைய மகத்துவம் தெரியாமலா இருக்கின்றது?
  7. பல்லாயிரம் ஆண்டுகளாக தன் மகத்துவத்தை உணராத மனிதகுலம் தன் மகத்துவத்தை உணர்கின்ற காலம் அருகிலேயே உள்ளது என்பது ஆச்சரியத்தை அல்லவா தருகின்றது? எப்படி அவருக்கு அந்த வருங்கால உணர்தல் சாத்தியமாகின்றது? நமக்கு அதுபோன்ற வருங்கால உணர்தல் திறன் இல்லாமல்தானே உள்ளது! எப்போது வரும்?
  8. மனிதனாக வாழ்கின்ற சூழ்நிலைகள் விரைவிலேயே உருவாகிவிடும் என்றால், தற்போது மனிதன் எவ்வாறு வாழ்கின்றான் என்கிறார் மகரிஷி அவர்கள்?
  9. விரைவிலேயே உருவாகிவிடும் என்பது வருங்கால உணர்தல் என்பதுதானே? வருங்காலத்தைப்பற்றி அறிஞர்கள் கூறும் போது இரண்டுவிதமாகக்  கூறலாம்? ஒன்று  நல்ல காலம் விரைவில் வரவேண்டும் என்று தன்விருப்பத்தைக் கூறலாம்.  மற்றொன்று வரும் என்று உறுதியாகவும் கூறலாம். நல்ல காலம்  உருவாகிவிடும் என்பது திண்ணம் என்று கூறியுள்ளதால் அந்த நல்ல காலம் வந்துவிடும் என்று றுதியாகத்தான்(positively) கூறுகிறார் அல்லவா?
  10. இவ்வாறு எதன் அடிப்படையில் றுதியாகக் கூறமுடிகின்றது மகரிஷி அவர்களால்? 
  11. *ஒன்றுமிலா ஒன்றிலிருந்து ஆரம்பித்த இயற்கை/இறை தனது தன்மாற்றப் பயணத்தின் இறுதி கட்டத்தை எட்டியுள்ளதால்தான் மனிதகுலம் தோன்றியுள்ளது.  தன்மாற்றமாக இருப்பதால்(தானே மாறியுள்ளதால்) இயற்கைக்கு /இறைக்குள்ள மகத்துவம் மனிதனுக்கும் உண்டல்லவா?  அம்மனிதனுக்கும் தெரியுமல்லவா? ஆகவே அதனை வைத்து உறுதியாகக் கூறுகிறாரா?(* மனித புலனறிவிற்கு) 
  12. மனிதன் தோன்றி பல்லாயிரம் ஆண்டுகள் ஆகிவிட்டன. அப்படியிருக்கும்போது இத்தனை நாட்களாக மனிதன் தன் மகத்துவத்தை அறியாத நிலை நிலவும்போது விரைவில் மகத்துவத்தை உணரும் நிலை உருவாகிவிடுமா என்கின்ற ஐயமல்லவா ஏற்படுகின்றது! பல்லாயிரம் ஆண்டுகளில் உருவாகாத அணுவியல் விஞ்ஞானம்(atomic theory) இருநூறு ஆண்டுகளுக்கு முன்னர் உருவாகி இயற்கை தன் ரகசியங்களை விஞ்ஞானத்தின் மூலம் அறிவித்துவருவதுபோல் மனிதனும் தன் மகத்துவத்தை அறிந்து கொள்ளும் நிலை வெகுவிரைவில் உருவாகும் என்கிறாரா?
  13. இயற்கையில் பல்லாயிரம் ரகசியங்கள் உள்ளன.   ஆனால் அவற்றையெல்லாம் மனிதன் குறுகிய ஆயுட்காலத்தில் தனது அறிவால் அறியமுடியாது என்றாலும்  மனிதகுல வாழ்வு சிறப்புற எதனை அறியவேண்டுமோ,  அதாவது இயற்கை/இறை தன்னுடை மாற்றத்தை ஆதிநிலையிலிருந்து தான் அசைந்ததிலிருந்து  ஆரம்பித்து படிப்படியாக விளக்கி ஆறாம் அறிவுடைய மனிதன் வரை வேதாத்திரி மகரிஷி அவர்களால் மூலம் விளக்கி,   மனிதன் தன் மகத்துவத்தை அறிந்துகொள்ளும் சூழ்நிலைகள் விரைவில் உருவாகிவிடும் என்பதனையும் வேதாத்திரி மகரிஷி அவர்களின் வாயிலாகவே தெரிவிக்கின்றதா?
  14. மேலும் புலி மானை அடித்துக் கொல்லும் உதாரணத்தை எடுத்துக்கொண்டு சிந்திப்போமா அன்பர்களே?! Discovery Channel-ல் புலி மானைத் துரத்திப் பிடிக்கும் காட்சிகளைக் கண்ணுறுபவர்களின் நெஞ்சங்கள் பதைபதைக்கும். அதற்காக புலிகளெல்லாம் இனி மான்களை வேட்டையாடக்கூடாது, வருங்காலங்களில் புல்லை மட்டுமே தின்னவேண்டும் என்று  எதிர்பார்ப்பது போலவா உள்ளது மகரிஷி அவர்கள் கூறுவது? அல்லவே! மனிதன் தன் மகத்துவத்தை உணர்ந்து மனிதனாக வாழ்வது நடைமுறையில் சாத்தியம் தானே!  என்ன அன்பர்களே?
  15.  மனிதன் தன்  மகத்துவத்தை அறிகின்ற சூழ்நிலை விரைவிலேயே உருவாகிவிடும் காலம் எந்த நியதியின் ஊக்கத்தால்  நடக்கும்?
  16.  இனி நம் பொறுப்புகளும் கடமைகளும்# என்னென்ன?   (# இயற்கை ஐந்தறிவு வரை அதுவே அயரா விடாமுயற்சி செய்து தனது தன்மாற்றத் தொழிற்சாலையில்(Transformation industry) தானே ஒரே முதலாளியாக (sole proprietor) இருந்து நடத்தி வந்தது. ஆதி மனிதனாக வந்த பிறகு, ஆறாம் அறிவு வளர்ந்த போது மனிதனும், இயற்கையின் தன்மாற்ற தொழிற்சாலையில் பங்குதாரராகிவிட்டான்(share holder). மனிதன் பங்குதாரராகிவிட்டாலும் இயற்கை/இறையேதான் செயல் இயக்குனா் (Ever Managing Director) என்பதனை நினைவில் கொள்ள வேண்டும். இயற்கையின் மனித –- தன்மாற்றத் தொழிற்சாலையில் பங்குதாரராகிவிட்ட பிறகு, அந்த தொழிற்சாலையின் இலாபத்திற்கும் (வாழ்க்கையில் மகிழ்ச்சி) நஷ்டத்திற்கும் (துன்பம்) பொறுப்பு ஒவ்வொரு தனிமனிதனுக்கும் உண்டு.

      இயற்கையின் தன்மாற்ற தொழிற்சாலையில், கடைசியான மனித உற்பத்தியில், இன்னமும் ஒழுங்கு படுத்தப்பட்ட உற்பத்தி regular production ஆரம்பிக்கப் படவில்லை என்றுதான் சொல்ல வேண்டியுள்ளது. இதனைக் கருத்தில் கொண்டுதான் முன்னாள் ஜனாதிபதியும், தத்துவஞானியுமான டாக்டர். இராதாகிருஷ்ணன் “பரிணாமம் இன்னமும் பூர்த்தியாகவில்லை – Evolution is still incomplete” என்கிறார். ஆதிமனிதன் தோன்றி பல லட்சம் ஆண்டுகள் ஆகியும், இன்னமும், இயற்கையின் தன்மாற்ற மனித உற்பத்தியில் மாதிரி முறையில்தான் (prototype) உற்பத்தி (மகான்கள், அறிஞா்கள்) நடை பெற்று வருகின்றது. ‘எண்ணமே பரிணாமத்தின் வாகனம்’ என்பதனை நினைவில் கொள்ள வேண்டும். எண்ணாமல் பரிணாம வளர்ச்சி இல்லை. ஆகவே மனவளக்கலைஞர்களின் ஆதங்க எண்ணங்கள் குருபிரானின் புனிதஎண்ணங்களோடு இணைந்து வலுப்பெற்றால்தான் மனிதனுடைய மகத்துவத்தை அவனே அறிந்துகொண்டு மனிதனாகவே வாழ்வதற்கு ஏற்ற சூழ்நிலைகள் உலகம் முழுதும் குறுகிய காலத்திலேயே உருவாகிவிடும் என்கின்ற  மகரிஷி அவர்களின் புனித எண்ணங்கள் நிறைவேறி மனிதகுலம் தனது பூர்வீக சொத்தான (hereditary wealth) அமைதியை அனுபவித்து இன்புற்றிருக்கும்! வாழ்க வளமுடன்!)

மகரிஷி அவர்களின் அழைப்பில் உறுதி இருப்பதைக் கவனிப்போம்.

வாழ்க அறிவுச் செல்வம்!                 வளர்க அறிவுச் செல்வம்!!