வாழ்க மனித அறிவு! வளர்க மனித அறிவு!!
சிந்திக்க கவிகள்–10
14-06-2020-ஞாயிறு
“நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றுந்தன்
உண்மை யறிவே மிகும்”.
—குறள்
பயிற்சி:
- என்ன கூறுகிறார் பொய்யாமொழி தெய்வப்புலவர்?
- குறள் எந்த பாலில் எந்த அதிகாரத்தில் எந்த அதிகாரத்திற்கு பின் வருகின்றது? அதற்கான காரணங்கள் ஏதேனும் இருக்குமா?
- ‘நுண்ணிய நூல்பல கற்பினும்’ என்றால் என்ன?
- ‘மற்றும் தன் உண்மை அறிவே மிகும்’ என்பதில் ’ மிகும்’ என்கின்ற சொல்லால் அறிந்துகொள்ள வேண்டியது என்ன ?
- பொதுவாக உரையாசிரியர்கள் கூறும் பதவுரை என்னென்ன?
- திருவள்ளுரை மானசீக குருவாகக் கொண்ட இருபதாம் நூற்றாண்டின் சீடரான பெருமைக்குரிய நம் குருநாதர் வேதாத்திரி மகரிஷி அவர்கள் இக்குறள் பற்றி கூறும் விளக்கம் என்ன?
- எந்த நூலில் மகரிஷி அவர்கள் இக்குறளுக்கு விளக்கமளிக்கிறார்?
- அதில் இந்த அதிகாரத்தில் மேலும் ஒரு குறளுக்கு விளக்கம் அளித்துள்ளதை நாம் மீண்டும் ஒருமுறை நினைவுகூர்வோம்.
- திருவள்ளுவரும் அவரது இருபதாம் நூற்றாண்டு சீடரும் சேர்ந்து ஒருமித்துக் கூறும் செய்தி என்ன?
- இறையுணர்வு கருத்தியல் பாடத்தில் மிகுந்த தெளிவையும்(Theoretical understanding) செய்முறை பாடத்தில்(Practical realisation through Meditation-துரியாதீத தவத்தில்) தேர்ச்சியையும் வலியுறுத்துகிறார்களோ இரு அறிஞர்களும்!?
வாழ்க வள்ளுவம்! வளர்கவள்ளுவம்!!
வாழ்க திருவேதாத்திரியம்! வளர்க திருவேதாத்திரியம்!!
வாழ்க அறிவுச் செல்வம்! வளர்க அறிவுச் செல்வம்!!