வாழ்கமனிதஅறிவு! வளர்க மனித அறிவு!!
சிந்திக்க கவிகள்-14 (999th Posting)
24-06-2022—வெள்ளி
பிறவித் தொடர் (19-12-1960)
வித்துவின் மூலம்தான் பிறவித் தொடர். இந்தத்
தத்துவத்தை உணர்ந்தவரே தனையறிய வல்லவர்கள்”
(ஞா.க.1301)
. . . வேதாத்திரி மகரிஷி.
பயிற்சி:-
- என்ன கூறுகிறார் மகரிஷி அவர்கள்?
- பிறவித் தொடர் என்பது என்ன?
- பிறவித் தொடர் தத்துவம் என்பது என்ன?
- தன்னையறிதல் என்பது என்ன?
- தன்னையறிவதற்கு தனித் தகுதி ஏதேனும் உள்ளதா? மனிதனாக இருந்தால் போதாவா? வல்லவர்கள் என்கிறாரே மகரிஷி அவர்கள்!!
- வல்லவர்கள் என்றால் என்ன பொருள்?
- தனையறிதலையும் பிறவித்தொடர் தத்துவம் அறிதலையும் ஏன் தொடர்புபடுத்துகிறார்? எவ்வாறு தொடர்பு படுத்துகிறார்?
- பிறவித் தொடர் பற்றிய உண்மையை(தத்துவம்) அறிந்திருத்தல் எவ்வாறு தன்னிலை அறிதலில் வல்லவராக்க முடியும்/முடிகின்றது?
- பிறவித் தொடர்பு அறிதலையும் நான் யார் அறிதலையும் தொடர்பு படுத்திக் கூறுவதில் உள்ள சூட்சுமம் என்ன? In other words what is the logic in that?(இவ்வினா மேலே உள்ள வினா எண் 7 ஐ பிரதிபலிப்பதாக உள்ளதா?)
வாழ்க அறிவுச் செல்வம்! வளர்க அறிவுச் செல்வம்!!