சிந்திக்க கவிகள்-14 (999th Posting)

வாழ்கமனிதஅறிவு!                                   வளர்க மனித அறிவு!!

சிந்திக்க கவிகள்-14 (999th Posting)

                                                                                                            24-06-2022—வெள்ளி

பிறவித் தொடர் (19-12-1960)

 வித்துவின் மூலம்தான் பிறவித் தொடர்.  இந்தத்  

தத்துவத்தை உணர்ந்தவரே தனையறிய வல்லவர்கள்”

                                     (ஞா.க.1301)

. . .  வேதாத்திரி மகரிஷி.

பயிற்சி:-

  1. என்ன கூறுகிறார் மகரிஷி அவர்கள்?
  2. பிறவித் தொடர் என்பது என்ன?
  3. பிறவித் தொடர் தத்துவம் என்பது என்ன?
  4. தன்னையறிதல் என்பது என்ன?
  5. தன்னையறிவதற்கு தனித் தகுதி ஏதேனும் உள்ளதா? மனிதனாக இருந்தால் போதாவா? வல்லவர்கள் என்கிறாரே மகரிஷி அவர்கள்!!
  6. வல்லவர்கள் என்றால் என்ன பொருள்?
  7. தனையறிதலையும் பிறவித்தொடர் தத்துவம் அறிதலையும் ஏன் தொடர்புபடுத்துகிறார்? எவ்வாறு  தொடர்பு படுத்துகிறார்?
  8. பிறவித் தொடர் பற்றிய உண்மையை(தத்துவம்) அறிந்திருத்தல் எவ்வாறு தன்னிலை அறிதலில் வல்லவராக்க முடியும்/முடிகின்றது?
  9. பிறவித் தொடர்பு அறிதலையும் நான் யார் அறிதலையும் தொடர்பு படுத்திக்  கூறுவதில் உள்ள சூட்சுமம் என்ன? In other words what is the logic in that?(இவ்வினா  மேலே உள்ள   வினா எண் 7  ஐ பிரதிபலிப்பதாக உள்ளதா?)

வாழ்க அறிவுச் செல்வம்!             வளர்க அறிவுச் செல்வம்!!