சிந்திக்க கவிகள்-9

   வாழ்க மனித அறிவு!                                  வளர்க மனித அறிவு!!

சிந்திக்க கவிகள்9

03-06-2020புதன்

வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி
தொகுத்தார்க்கும் துய்த்த லரிது.

—குறள்        

 பயிற்சி:

  1. என்ன கூறுகிறார் செந்நாப் புலவர் ?
  2. இக் குறள் எந்த பாலில், எந்த அதிகாரத்தில், எந்த அதிகாரத்திற்கு அடுத்ததாக  வருகின்றது? அதற்கு ஏதாவது காரணம் இருக்க முடியுமா?
  3. வகுத்தான் வகுத்த வகையல்லால் துய்த்தல் அரிது என்றால் என்ன பொருள்?
  4. ‘கோடி தொகுத்தார்க்கும்’ என்றால் என்ன பொருள்?
  5. பொதுவாக உரையாசிரியர்கள் என்ன பதவுரை வழங்குகின்றனர் இக்குறளுக்கு?
  6. திருக்குறளுக்கு உட்பொருள் விளக்கம் அருளிய நம் குருநாதர் வேதாத்திரி மகரிஷி அவர்கள் இக்குறளுக்கு கூறும் விளக்கம் என்ன?
  7. திருவள்ளுவரும், அவரது இருபதாம் நூற்றாண்டின் சீடருமான பாமர மக்களின் தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி அவர்களும் சேர்ந்து ஒருமித்துக் கூறும் செய்தி என்ன?

வாழ்க வள்ளுவம்! வளர்கவள்ளுவம்!!

வாழ்க திருவேதாத்திரியம்!  வளர்க திருவேதாத்திரியம்!!

வாழ்க அறிவுச் செல்வம்!                         வளர்க அறிவுச் செல்வம்!!