வாழ்க மனித அறிவு! வளர்க மனித அறிவு!!
சிந்திக்க கவிகள்–9
03-06-2020–புதன்
வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி
தொகுத்தார்க்கும் துய்த்த லரிது.—குறள்
பயிற்சி:
- என்ன கூறுகிறார் செந்நாப் புலவர் ?
- இக் குறள் எந்த பாலில், எந்த அதிகாரத்தில், எந்த அதிகாரத்திற்கு அடுத்ததாக வருகின்றது? அதற்கு ஏதாவது காரணம் இருக்க முடியுமா?
- வகுத்தான் வகுத்த வகையல்லால் துய்த்தல் அரிது என்றால் என்ன பொருள்?
- ‘கோடி தொகுத்தார்க்கும்’ என்றால் என்ன பொருள்?
- பொதுவாக உரையாசிரியர்கள் என்ன பதவுரை வழங்குகின்றனர் இக்குறளுக்கு?
- திருக்குறளுக்கு உட்பொருள் விளக்கம் அருளிய நம் குருநாதர் வேதாத்திரி மகரிஷி அவர்கள் இக்குறளுக்கு கூறும் விளக்கம் என்ன?
- திருவள்ளுவரும், அவரது இருபதாம் நூற்றாண்டின் சீடருமான பாமர மக்களின் தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி அவர்களும் சேர்ந்து ஒருமித்துக் கூறும் செய்தி என்ன?
வாழ்க வள்ளுவம்! வளர்கவள்ளுவம்!!
வாழ்க திருவேதாத்திரியம்! வளர்க திருவேதாத்திரியம்!!
வாழ்க அறிவுச் செல்வம்! வளர்க அறிவுச் செல்வம்!!