September 2015

Monthly Archives

  • FFC -123-அயரா விழிப்புணர்வு

    வாழ்க மனித அறிவு                         வளர்க மனித அறிவு

    ( Constant Awareness )

     அயரா விழிப்புணர்வு

    FFC -123

    30-09-2015–புதன்

    FFC-123-விழிப்பு நிலை சீவன்முக்தி-பாடல்1

     

    அறிவின் மூன்றாம் வளர்நிலை

    3) எண்ணம், சொல், செயல் ஆகியவற்றில் விழிப்புடன் இருத்தல்.

    அயரா விழிப்புணர்வு என்கின்ற தலைப்பை எடுத்துக் கொண்டு சிந்தித்து வருகிறோம். இன்று அறிவின் வளர் நிலைகளில் மூன்றாவது நிலையான ‘எண்ணம், சொல், செயல் ஆகியவைகளில் விழிப்புடன் இருத்தல்’ பற்றி சிந்திக்க இருக்கிறோம். மனிதனின் கர்மா. எண்ணம், சொல், செயல் ஆகிய மூன்றின் வழியாகத்தான் நடைபெறுகிறது. மனிதனின் கர்மாவிற்கு ஏற்ப விளைவுகள் வருவதால், அதற்கேற்ப இன்ப-துன்பம் வருவதால், துன்பத்தை தவிர்க்க எண்ணம், சொல், செயல் ஆகிய மூன்றிலும் விழிப்பு நிலை வேண்டும்.

    மேலே உள்ள கவியின் வாயிலாக எண்ணம்-செயல், விளக்க வழியே இல்லாமல், பழக்க வழியே இருக்குமானால் இறைஉணர்வை எய்த முடியாது என்பதனை அறிய வேண்டும். விழிப்பு வந்தால் சீவனில் இறைத்தன்மைளைக் காணலாம் என்கிறார் மகரிஷி அவர்கள். இதனைக் கருத்தில் கொண்டுதான் மகரிஷி அவர்கள் அறிவின் வளர்நிலைகளில் ‘எண்ணம், சொல், செயல், ஆகியவற்றில் விழிப்பு’ இருத்தலை மூன்றாவதும் கடைசியுமாக சோ்த்துள்ளார்,

    இருபத்து நான்கு மணிநேரத்தில் எட்டு மணிநேரம் உறக்கத்திற்காக செலவழிந்து விடுகின்றது. மீதமுள்ள பதினாறு மணி நேரம் விழித்துக் கொண்டுதான் இருக்கிறான் மனிதன். அப்போதுதான் அவனுக்கு தவறுகள் செய்யும் சிக்கல்கள் வருகின்றன. தூங்காமல் இருக்கும் போது விழித்துக் கொண்டிருக்கிறான். அப்போது அவனுக்கு உணர்வும் உள்ளது. அப்படியிருக்கும் போது, அறிவிற்கு அது உணர்வு நிலைதான் என்றாலும் அப்போதும் அதற்குப் பிரத்தியேகமான விழிப்பு உணர்வு வேண்டும் என்கிறார்.

    அதனை அயரா விழிப்பு நிலை என்கிறார். அதனை அறிவிற்கான வெளிச்சம் என்கிறார். அந்த வெளிச்சத்தில் வாழ்க்கையை நடத்தச் சொல்கிறார். பேரறிவின் தன்மாற்றத்தில், மனித அறிவு ஞானத்தைப் (அறிவையறிந்த தெளிவு) பெறுவற்கான பயணத்தில், அறிவு அறிந்த அனுபவங்களில் (knowledge) அயரா விழிப்புணர்வு என்பது உச்ச நிலை என்கிறார் வேதாத்திரி மகரிஷி அவர்கள். “Awareness is a higher stage of knowledge in its evolutionary progress towards Wisdom” என்கிறார் வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

    மனிதன் உறங்கும் போது தவறுகள் செய்ய முடியாது. விழித்துக் கொண்டிருக்கும் போதுதான் அவன் தவறுகள் செய்கிறான். எனவேதான் கண் விழித்துக்கொண்டு, உணர்வுகள் உள்ள நிலையில் அயரா விழிப்பு நிலை வேண்டும் என்கிறார். இந்த அயரா விழிப்பு நிலையை மேன்மையாகக் கூறுகிறார். இந்த நிலையை ஞானம் என்கிறார் மகரிஷி அவர்கள். இந்த அயரா விழிப்பு நிலையைத்தான் மெய்ஞானம் என்கிறார். அறிவிற்குள்ள விழிப்புணர்வு பற்றி இரண்டு விதமான கருத்துக்கள் (School of thoughts) இருக்கின்றன.

    ஒன்று Materialistic awareness. மற்றொன்று Esoteric Awareness. Materialistic awarenss என்பது உலகியல் சம்பந்தப்பட்டது. சமையல் அறையில் சமைப்பதிலிருந்து ஆய்வுக் கூடத்தில் செய்யும் ஆராய்ச்சி வரையுள்ள விழிப்புணா்வாகும். ஆனால் “Esoteric Awareness“ என்பது இயற்கையின் இரகசியங்களை அறிவதிலும், அறிந்து அதுபோல் வாழ்க்கை வாழ்வதிலும் வேண்டிய விழிப்புணர்வாகும். மனிதனுக்கு “ஆன்ம விழிப்புணர்வு–Spiritual awakening” வேண்டும். . வேதாந்த நூல்கள் கூறுதாவது:- “ In Awakened Consciousness, Awareness is at its Zenith(உன்னத நிலை).” “Awareness Is God” என்கின்றது வேதாந்தம்.

    இந்த உயர்ந்த விழிப்பு நிலை வந்து விட்டால் மனிதன் பிறர் தவறுகளைக் குறையாக எண்ணமாட்டான். அதில் விழிப்புணர்வோடு இருப்பான். அப்படிக் குறைகளாக இருந்தாலும் அதனைச் சுட்டிக்காட்டாமல், “அவர்களுடைய அறிவு நிலை அவ்வளவுதான். அதற்கேற்ப அவர்கள் செயல்களைச் செய்து வருகிறார்கள். அதற்கு நாம் எந்த விதத்தில் அவர்களுக்கு உதவ முடியும்” என்கின்ற உயர்ந்த நிலைக்கு வந்துவிடுவான். தன்னுடைய செயல்களில் குற்றம் இருக்காது. மாறாக தன்னுடைய குற்றம் கண்டு தன்னைத் திருத்தி எப்போதும் நன்மையே செய்யும் தகைமை அவனுக்கு வந்துவிடும் என்கிறார் வாழ்வியல் விஞ்ஞானியும் மற்றும் அறிவியல்(அறிவு+இயல்=அறிவியல்) விஞ்ஞானியுமான, *அறிவியலாளர் (Scientist Science of Consciousness) வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

    விஞ்ஞானத்தில் இன்றுவரை, அறிவு பற்றிய விளங்கங்கள் இல்லாமலே விடுபட்டுள்ளது. “அறிவே தெய்வம்”, இறை எங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறது, “எல்லாவற்றையும் அறியக்கூடியது இறை” என்று ஆன்மீக நூல்கள் கூறியிருந்தாலும், வேதாத்திரி மகரிஷி அவர்கள் அளித்துள்ள அறிவைப் பற்றிய விளக்கம்தான் மெய்ஞானத்தை தெளிவாக்குகிறது. மெய்ஞானத்தில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளது. வேதாத்திரியத்தின் தோற்றம் மெய்ஞான உலகில் ஒரு மைல்கல். பிரபஞ்ச உருவாக்கம் பற்றி விஞ்ஞானத்தில் இல்லாத தெளிவான விளக்கம் வேதாத்திரியத்தில் உள்ள அறிவைப்பற்றிய விளக்கத்தால் கிடைத்துள்ளது.

    ஆகவே அறிவைப்பற்றிய தெளிவான அறிவுபூர்வமான விளக்கங்களை அளித்து, அறிவிற்கான இயலை (அறிவு+இயல்=அறிவியல்) (Science of Consciousness) ஏற்படுத்தியுள்ள மகரிஷி அவர்களை *அறிவியலாளர், அறிவியல் விஞ்ஞானி என்கிறோம். சுவாமி விவேகானந்தர் மற்றும் உலகப் புகழ் விஞ்ஞானி வாயிலாக “விஞ்ஞானமும் மெய்ஞானமும் இணைய வேண்டும்” என்று ஏற்கனவே இயற்கை விருப்பம் தெரிவித்திருந்ததை, அவா்களுக்கு இளையவரான வேதாத்திரி மகரிஷி அவர்களின் வாயிலாக, நடத்தி பூர்த்தி செய்து விட்டது. விஞ்ஞானமும் மெய்ஞானமும் இணைக்கப்பட்டு விட்டது. அத்வைத விஞ்ஞானத்தை (Advaidic Science) உருவாக்கிவிட்டது இயற்கை.

    விழிப்புணா்வின் மேன்மையைப் பற்றி வேதாத்திரி மகரிஷி அவர்கள் விளக்கும் போது, “தன்குற்றம் உணர பிறர் குற்றம் மன்னிப்போம்” என்று மகரிஷி அவர்கள் கூறுவதனை அடுத்த ஞாயிறன்று(04-10-2015) நினைவு கூர்வோம். வாழ்க வளமுடன்.

  • சிந்திக்க வினாக்கள்-111

    வாழ்க மனித அறிவு                  வளர்க மனித அறிவு

    28-09-2015 – திங்கள்

    கோடிட்ட இடங்களைப் பூர்த்தி செய்து வாசித்து மகிழவும்.

    உடலுக்கு ஆன்மா —————– ஆன்மா உடலைக் ———— கொள்ளும் தெளிந்த நிலையே ——————-துறவு ஆகும்.

    வாழ்க அறிவுச் செல்வம்                     வளர்க அறிவுச் செல்வம்

  • FFC- 122-அயரா விழிப்புணர்வு

    வாழ்க மனித அறிவு                          வளர்க மனித அறிவு

    Constant Awareness

    அயரா விழிப்புணர்வு

    அ வி (FFC) – 122

    27-09-2015–ஞாயிறு

    அறிவின் முதல் வளர் நிலை—மனம் விரிவு பெறுதல்

     

    FFC-122-NAG-மனித_மாண்பு

     

    ‘அறிவின் வளர் நிலை’ என்கின்றபோதே ஆறாம் அறிவு தன்மாற்றத்தில், அதாவது பரிணாமத்தில் இன்னும் தன்னுடைய தரத்தை எட்டவில்லை என்றாகின்றது.

    விலங்கினத் தன்மையை உட்பதிவாகக் கொண்ட(பரிணாமக்கசடுகள்) மனிதனை உயா் மனிதனாக வாழச் செய்யும் கலையே மனவளக்கலை என்கிறார் மகரிஷி அவர்கள். அதாவது அறிவை மயக்க நிலையிலிருந்து விழிப்பு நிலைக்கு கொண்டு வருவதற்கான பயிற்சியே மனவளக்கலையாகும். ‘நான் யார்?’ என்கின்ற ஆன்மீகத் தேடல்—வினாவிற்கு நிறைவானப் பதிலைப் பெறுவதற்கான பயிற்சியினை கருத்தியலாகவும், செய்முறையாகவும் கொடுத்து வருகின்றது மனவளக்கலை.
    அறிவிற்கு வேண்டிய மூன்று வளர் நிலைகளை ஏற்படுத்தும்படியாக மனவளக்கலையை வடிவமைத்திருக்கிறார் வாழ்வியல் விஞ்ஞானி வேதாத்திரி மகரிஷி அவர்கள். அவையாவன:

    1) மனம் விரிவு பெறுதல்:

    மனம் விரிவு பெற வேண்டும். அப்படியென்றால் என்ன? மனம் என்பது விரிவடையக்கூடிய Elastic பொருளா? தற்போது மனம் குறுகியுள்ளது. தான், தன் குடும்பம் என்கின்ற அளவிலேதான் உள்ளது மனதின் நிலை. ஆனால் வாழவைத்துக் கொண்டிருக்கின்ற சமுதாயத்தின் மீது அக்கறை கொள்ளும் அளவிற்கு மனம் இன்னும் விரியவில்லை இது வரை. ஆனால் மனவளக்கலையின் வாயிலாக, மனதை, அதனுடைய மூலம் (origin) வரை விரியச் செய்து அந்த மூலமே மாற்றமாகி இருக்கும் சமுதாயத்தின் மீதும் அக்கறை கொள்ளும் அளவிற்கு இயற்கை இப்போது செய்து வருகின்றது.

    மனம் குறுகியுள்ளது என்றால், தன்முனைப்பால், “தான்”. “தனது” என்கின்ற இரு எண்ணக் கோடுகளைக் உருவாக்கிக் கொண்டது என்கிறார் மகரிஷி அவர்கள். “தான்” “தனது” என்பது வெறும் எண்ணக் கோடுகள் தானே தவிர, உண்மையில் இயற்கையில் அவ்வாறு இல்லை. மனிதனைத்தவிர மற்றவைகள் பிறர்க்காகத்தான் வாழ்கின்றன. மரம் கனிகள் கொடுக்கின்றது. இது தனக்காகவா கொடுக்கின்றது? இல்லை. மனிதனுக்காகக் கொடுக்கின்றன. மரம் தனக்கென கனிகளை வைத்துக் கொள்ளவில்லை. வைத்துக்கொண்டால் பழம் அழுகிவிடும். பசு தனக்காக பால் தருவதில்லை. மனிதனுக்காக பால் தருகின்றது.

    இயற்கையில் மனிதனைத் தவிர வேறு எந்த உயிரினங்களுக்கும் “தான்”, “தனது” என்கின்ற எண்ணக்கோடுகள் இல்லாமையால் அவற்றிற்குத் துன்பங்கள் இல்லை. இப்படி இயற்கை அமைப்பு இருக்கும் போது, மனிதன் மட்டும் இயற்கையை அறியாத தன்முனைப்புடன், “தான்” “தனது” என்கின்ற இரு எண்ணக் கோடுகளுடன் இருப்பதால் அந்த இரண்டு தம்பதிகளுக்குப் பிறக்கும் ஆறு அவலக்குழந்தைகள் தான்

    பேராசை,
    சினம்,
    • கடும்பற்று,
    உயர்வுதாழ்வு மனப்பான்மை,
    • வஞ்சம் ஆகியவையாகும்
    என்கிறார் இயற்கையியல் மற்றும் வாழ்வியல் விஞ்ஞானியான வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

    வேதாத்திரியம் ௬றும் ‘தான்’ ‘தனது’ என்கின்ற தன்முனைப்பு விஞ்ஞானத்தில் (Science of Ego) இயற்கையைப் பற்றியும் உள்ளது. மனித வாழ்க்கையைப் பற்றியும் உள்ளது. இயற்கையின் ஆதிநிலையாகிய பேரறிவின் தன்மாற்ற நிகழ்ச்சியைப்பற்றிய விஞ்ஞான உண்மையும் உள்ளது.

    அதே நேரத்தில் மனிதனின் வாழ்க்கைச் சிக்கலுக்குக்கான அறிவு பூர்வமானக் காரணத்தையும் குறிப்பிடுகிறார். ஆகவே மகரிஷி அவர்களை இயற்கையியல் மற்றும் வாழ்வியல் விஞ்ஞானி என அழைத்து மகிழ்வதோடு மட்டமல்லாது, அதே நேரத்தில், அந்த மகிழ்ச்சி இந்த வாழ்வியல் கல்வி, உலக மக்களிடையே பரவிட ஊக்கத்தையும் அக்கறையையும் நமக்கு அளிக்குமாக. உலக மக்கள் அனைவரும் தனது பூர்வீக சொத்தான அமைதியை அனுபவித்து வளமுடன் வாழட்டும். கீதா சாரம் கூறும் உலக நியதியினைக் கவனிப்போம்

    FFC_46-geetha chaaram-

    சிந்திக்கவும் கீதாசாரம் கூறுவதனை.

    ”எது இன்று உன்னுடையதோ, அது நாளை மற்றவருடையதாகின்றது.

    மற்றொரு நாள், அது வேறொருவருடையதாகும்”

    இதுவே உலக நியதியும், எனது படைப்பின் சாராம்சமாகும்” என்கிறார் பகவான் ஸ்ரீகிருஷ்ணர்.

    விளக்கம்:-

    தந்தைக் கட்டிய வீடு

    தந்தைக்குப் பிறகு மகனுக்கு சென்று விடுகின்றது.

    மகனுக்குப்பிறகு பேரனுக்குச் சென்று விடுகின்றது.

    தந்தை தான் கட்டிய வீட்டினை, இப்பூவுலகத்தைவிட்டுப் போகும் போது எடுத்துச் செல்ல முடிவதில்லை. ஆனால் தந்தை முயற்சி செய்தால் வீட்டிற்கெல்லாம் வீடாகிய வீடு பேற்றினை மனவளக்கலையால் அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்றினையும் அனுபவித்து பெறுதற்கெல்லாம் அரிய பேறான வீடு பேற்றினை அடையாலாம். வாழ்க மனவளக்கலை. வளா்க மனவளக்கலை. வாழ்க மனவளக் கலைஞர்கள். வளர்க மனவளக் கலைஞர்கள்.

    இந்த கீதாசாரத்தின் உலகியல் எதார்த்தத்தை அறிவு அறியாததால் மனம் குறுகி நிற்கின்றது. பாவம் அறிவு என்ன செய்யும்? பரிணாமக் கசட்டினை அகற்றுவதற்கே அதற்குப் பல்லாயிரம் பிறவிகள் தேவையிருக்கின்றது.

    பரிணாமக் கசடு அகன்றால்தான் புலன்மயக்கம் தீரும். அந்த நிலையில்தான் கீதாசாரம் விளங்க ஆரம்பிக்கின்றது.

    தின்றுத் திரிந்து உறங்கிக் கொண்டிருந்த நிலையில் அறிவை விழித்தெழச் செய்திருக்கின்றது வேதாத்திரி மகரிஷியின் வாயிலாக இயற்கை.

    பரிணாமக் கசடாலும், புலன்மயக்கத்தாலும் மனதிற்கு, அறவே வேண்டா குணங்களான பேராசை, சினம், கடும்பற்று, முறையற்ற பால் கவர்ச்சி, உயர்வு தாழ்வு மனப்பான்மை, வஞ்சம் ஆகிய அறுகுணங்கள் ஏற்பட்டுவிட்டன.

    இதன் விளைவு செயலுக்கு ஏற்ற விளைவு உண்டு என்கின்ற இயற்கை நீதிப்படி விளைவு தனக்கே துன்பங்கள் வரும். பிறர்க்கும் துன்பம் வரும். ஆகவே மனதை விரிவு பெறச் செய்ய வேண்டும். இதற்கான பயிற்சியாக உயிர் மீது தவம் இயற்றும் தவமுறை வகுத்துக் கொடுத்து, உடலளவிலே குறுகியிருக்கும் மனதை இப்பிரபஞ்சம் வரையும், அதற்கும் மேலாக எங்கிருந்து மனம் உருவாகியதோ அந்த எல்லையில்லாப் பெருவெளி வரை மனதை விரித்து பழுகுவதற்கானப் பயிற்சியினை அளித்துள்ளார் மகரிஷி அவர்கள்.

    2) இயற்கை விதி அறிதல்:

    மேலும் மனிதன் பெரும்பாலும் தவறுகளைச் செய்து கொண்டுதான் இருக்கிறான். அவன் செய்யும் தவறுகள் சொல் மற்றும் செயல் வடிவில் இல்லையாயினும் அது எண்ண வடிவில் இருந்து கொண்டுதான் உள்ளது. தவறுகள் எண்ண வடிவில் இருந்தாலும் அதற்கும் விளைவுகள் உண்டு.

    செயலுக்கேற்ற விளைவு நிச்சயமாக உண்டு என்பதையும், அவ்விளைவைக் கொடுப்பது இயற்கையே என்பதனையும் அறிய வேண்டும். செயலிலே விளைவாக வருவது வேறு எதுவும் இல்லை. இறைவனே என்பதனை உணர்த்துகின்றது.

    அதனால்தான் மனதை சரி செய்யக்கூடிய, செம்மைப்படுத்தக் கூடிய கலையை உருவாக்கி அதற்கு மன+வளக்கலை எனப் பெயரிட்டுள்ளார். இத்துடன் இல்லாமல் அதனை ஒரு அளவு கோலால் சரிபார்த்துக் கொள்ளச் செய்துள்ளார். அதுதான் அறிவிற்கான மூன்றாவது வளர் நிலை. அதனை சத்சங்க நிகழ்வுப்படி புதனன்று (30-09-2015) சத்சங்கத்தில் சிந்திப்போம். வாழ்க வளமுடன்.

    வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு