April 2022

Monthly Archives

  • சிந்திக்க கவிகள் -12

       வாழ்க மனித அறிவு!                                  வளர்க மனித அறிவு!!

    சிந்திக்க கவிகள்-12

    26-04-2022-செவ்வாய்

    ஒழுக்கவியல் கல்வி

    சாதனையே அறநெறி(21-12-1961)

    அறநெறியை போதிக்கப் புதிய நூல்கள்

    அவசியமே இல்லைஇனி: மேலும் மேலும்

    அறநூல்கள் எத்தனையோ இந்நாள் மட்டும்

    அறிஞர்பலர் அளித்துள்ளார்; அவையே போதும்

    அறம்பிறழா நெறிநின்று,  மக்கள் வாழ

    அவசியமாம் பொருட்களொடு கல்வி கிட்ட,

    அறவோரே திட்டமிட்டு அமுல் செய்வீரே!

    அதன் மூலம் அறம் வளரும்; உலகம் உய்யும்.  .. ஞா.க.க.எண். 533

                                                                . . . வேதாத்திரி மகரிஷி அவர்கள்.  

                

    குறிப்பு: ‘கவியினால் பயன் பெற’  என்பது  கவியினால் சிந்தித்தல் என்பதாகும்.    வாழ்க வளமுடன் அன்பர்களே! பயிற்சிக்கு முன்னர் கவியினால் பயன் பெற புதுயுக்தியை படித்துவிட்டீர்களா அன்பர்களே!

     

    பயிற்சி:

     

    1. என்ன கூறுகின்றார் மகரிஷி அவர்கள்??

    2. அறநெறியை போதிக்கப் புதிய நூல்கள் இனி  அவசியம் இல்லை என எப்படி உறுதியாகக்  கூறமுடிகின்றது இருபதாம் நூற்றாண்டில்?

    3. சாதனையே அறநெறி என்றால் என்ன?

    4. இதுவரை அறநெறி சாதனையாக்கப்படவில்லையா?  ஏன்?  அறநெறி கருத்தியலாகக் கூறப்பட்டும் அதனை செயலுக்கு கொண்டுவர செய்முறை பயிற்சி இதுவரை ஏன் கொண்டுவரப்படவில்லை?  சாதனைக்கான  அவசியம் இதுவரை அறியப்படவில்லையா?

    5.  சாதனைக்கான வழிகள் தெரியவில்லையா? 

    6. அறம் பிறழாமல் மக்கள் வாழ்வதற்கு இப்போது எப்படி  மகரிஷி அவர்களால் தீர்வுகள் கூறமுடிகின்றது?

    7. அவசியமாம் பொருட்கள் கிட்டுவது ஒரு தீர்வாகக் கூறுகிறார்.  அதன் பொருள் என்ன?

    8. கல்வி வேண்டும் என்கிறார். அந்த கல்வி என்ன? அக்கல்விக்கான பெயர் என்ன? அக்கல்வி எப்போது ஆரம்பிக்கப்பட வேண்டும்?

    9. கல்வியால் மட்டுமேவா அறத்தை சாதனைக்கு கொண்டுவர முடியும்?  அறத்தை சாதனைக்கு கொண்டுவருவதற்கு  வேறு வழியில்லையா?

    10.  அறம் என்பது என்ன?  அதில் உள்ள அங்கங்கள் என்ன? அதில்  எது முதன்மையானது?

    11. நம் குருநாதர் வழியில் சிந்திப்போமே!  அவரது  சிந்தனைக்கும், எண்ணத்திற்கும் வலு சேர்ப்போமே! எப்படி? வாழ்க வளமுடன்!  

                                            வாழ்க திருவேதாத்திரியம்!  வளர்க திருவேதாத்திரியம்!!

    வாழ்க அறிவுச் செல்வம்!                         வளர்க அறிவுச் செல்வம்!!


     

  • அ.வி. 334 சாகாவரமும் பரிபக்குவ நிலையும்

    வாழ்க வையகம்!                                                                                     வாழ்க வளமுடன்!!

    இனிய ‘சுபகிருது’ வருட புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    வாழ்க வையகம். வாழ்க வளமுடன்

    அ.வி. 334

    சாகாவரமும் பரிபக்குவ நிலையும்

    14-04-2022-வியாழன்

         படம்: வள்ளலார் திருக்காப்பிட்டுக் கொள்ளும் பொழுது திருவாய் மலர்ந்தது

     

    வாழ்க வளமுடன்!

    நேற்றைய (13.04.2022) சத்சங்கத்தில் சிந்திக்க வினாக்கள் பகுதியில் தொடுக்கப்பட்ட  வினாவின் தொடர்ச்சியாக…

    வள்ளல் பெருமானாரின் ஆன்மா வேதாத்திரி மகரிஷி அவர்களின் உடலில் பத்து வருடங்கள் இருந்து அருள்பாலித்தது மனவளக்கலைஞர்கள் அனைவரும் அறிந்ததே.

    வள்ளலாரின் கடைசி செய்தி:

    1. இதுவரை உங்களுக்கு நேரில் சொல்லி வந்தேன். ஒருவரும் கேட்டுத் திருந்தவில்லை; ஒருவரும் தேறவில்லை.
    2. அகவினத்தாருக்குச் சாகா வரமும் ஏனையோர்க்குப் பரிபாக நிலையும்அளிப்பேன்.
    3. இப்போது இந்த உடலில் இருக்கின்றேன் இனி எல்லா உடம்பிலும் புகுந்து கொள்வோம். எங்கெங்கு சென்றாலும் அங்கங்கும் இருப்போம்.
    4. திருத்திடுவோம். அஞ்சவேண்டாம்.

     

     

    1. ஏன் வள்ளலாரின் ஆன்மா வேதாத்திரி மகரிஷி அவர்களின் உடலில் பத்து வருடம் இருந்தது?
    2. ஒருவரும் தேறவில்லை என்று எதனை குறிப்பிடுகிறார்?
    3. அகவினத்தார் என்பவர்கள் யார்?
    4. சாகாவரம் என்றால் என்ன ?
    5. ஏன் அகவினத்தாருக்கு மட்டும் சாகா வரம் தருகிறேன் என்கிறார்?
    6. ஏனையோர்கள் என்பவர்கள் யாவர்?
    7. ஏன் அவர்களுக்கு பரிவக்குவ நிலை அளிப்பேன் என்கிறார்?
    8. பரிபக்குவ நிலை என்றால் என்ன?
    9. அகவினத்தார்க்கு சாகாவரம் தருவேன் என்கின்ற வரிசையில் மகரிஷி அவர்களிடம் வள்ளலார் ஆன்மா இருந்ததா?
    10. பரிபக்குவநிலை அளிப்பேன் என்ற நம்பிக்கையளிக்கும் உறுதியளிப்பு கவனிக்கப்பட வேண்டியதல்லவா?
    11. “திருத்திடுவோம்.  அஞ்சவேண்டாம்” என்கிறாரே,  அதன் பொருள் என்ன?
    12.  திருத்துதல் நடந்துகொண்டிருக்கின்றதா?  அதனால் கவலைப்படவேண்டாம் என்கிறாரே வள்ளலார் அவர்கள்?
    13. இப்பிறவியில் பரிபக்குவ நிலை கிடைத்தால் சாகா வரம் எப்போது?
      1. அடுத்த பிறவியிலா? காத்திருக்க வேண்டுமே!( வள்ளலார் அவர்கள்  அருட்தந்தை அவர்களுக்கு அருள்பாலித்த நிகழ்ச்சி பற்றி அறிய –please read page 111- of ‘எனது வாழ்க்கை விளக்கம்’ எனும் நூல்)
      2. இப்பிறவியில் பரிபக்குவ நிலை கிடைத்து அடுத்த பிறவியில் சாகாவரம் கிடைக்கும் என்றால் அடுத்த பிறப்பு கருவிலே திருஉடைய‌பிறப்பா?
      3. நினைத்தாலே மகிழ்ச்சியாக உள்ளதா?
      4. ஆனால் அடுத்த பிறவி‌ என்றால் நாம் இல்லையே அப்போது?
      5. நாம் இல்லை என்றால் என்ன ?
      6. நம் பிறவியின் தொடரான மகன் அல்லது பேரன் அல்லது கொள்ளுப் பேரன் அல்லது வம்சாவளி இருப்பார்களன்றோ!?
      7. பல்லாயிரம் பிறவிகள் எடுத்திருந்தாலும் இப்பிறவி ஒன்றே போதும் என உறுதி(ஞா.க.கவி.எண் 1743) அளிக்கின்றாரன்றோ நம் அருட்தந்தை அவர்கள்.

      21.அதற்கு என்ன செய்ய வேண்டும்? 

      1. மற்றொரு உறுதி மொழியும் அளித்துள்ளாரே! அது என்ன?
      2. எவரொருவர் குருவை மதித்தொழுகினாலும் தப்பாது குரு உயர்வு மதிப்போர் தம்மை தரத்தில் உயர்த்திப் பிறவிப் பயனை நல்கும் என்கிறாரே வையகத்துள்ளோரை வாழ்வாங்கு வாழவைக்க வந்த விடிவெள்ளி வேதாத்திரி‌ மகரிஷி அவர்கள்.

      வள்ளலார் அருள் தனக்கு கிடைத்ததுபற்றி மகரிஷி அவர்கள் கூறும் கவியினை நினைவுகூர்தல் நலம்பயக்கும்.

    வாழ்க வளமுடன்!

    வேறொரு சத்சங்கத்தில்  குருவை மதித்தொழுகல் பற்றி விரிவாக சிந்திப்போம்.  அதற்கு இறையருளும் குருவருளும் துணை புரியுமாக!

     

     வாழ்க திருவேதாத்திரியம்!                வளர்க திருவேதாத்திரியம்!!


     

  • சிந்திக்க வினாக்கள்-329

    வாழ்க மனித அறிவு!                                                                 வளர்க மனித அறிவு!!

    சிந்திக்க வினாக்கள்-329

    13-04-2022-புதன்

    Vallalar - Prosper Spritually

    அருட்பிரகாச வள்ளலாரின் கடைசி செய்தி என்ன?

    (இதற்கான விடையை அடுத்த சத்சங்கத்தில் அறிந்து கொள்வோம்)

    வாழ்க வளமுடன்!

    வாழ்க அறிவுச்செல்வம்!                                        வளர்க அறிவுச்செல்வம்!!