May 2022

Monthly Archives

  • சிந்திக்க அமுத மொழிகள்-336  (997th Posting)-அறிவிற்கு அமைதி எப்போது?

    வாழ்க மனித அறிவு!                               வளர்க மனித அறிவு!!

    சிந்திக்க அமுத மொழிகள்-336 பகுதி – I  (997th Posting)

                

        30-05-2022 — திங்கள்

     

    அறிவிற்கு அமைதி எப்போது?

    அறிவை அறிய ஆர்வம் எழுந்துவிட்டால் அது   தன்னையறிந்து முடிக்கும் வரை அமைதி பெறாது.”

    . . .   வேதாத்திரி மகரிஷி 

    பயிற்சி- பகுதி – I

    1) என்ன கூற வருகிறார் மகரிஷி அவர்கள்?
    2) ‘அமைதி பெறாது’ என்பது  எதிர்மறை(negative) போல்  அல்லவா தோன்றுகின்றது? அப்படி இருக்க முடியுமா? என்ன சூட்சுமம் உள்ளது இக்கூற்றில்?
    3) அமைதி என்பது மனம் இயங்கும் இன்பம், துன்பம் என்கின்ற இரண்டு படிகளைக் கடந்து  மூன்றாவது படியான அமைதியைக் கடந்துதானே  இறுதிப் படியான  பேரின்ப  நிலைக்குச் செல்ல முடியும் என்றல்லவா  பேரின்பவியலாளர் வேதாத்திரி மகரிஷி அவர்கள் கூறுகிறார்?
    4) ‘அமைதி பெறாது’ என்றால் அமைதியின் கீழ்படிகளான இன்பம் மற்றும்  துன்பம் படிகளுக்கு அல்லவா மனம் சென்றுவிடும்!?  அப்படி இருக்க முடியுமா? மனவளக்கலையின் நோக்கம் அதுவல்லவே!?
    5) பேரின்பத்திற்கு இயல் ஏற்படுத்தியுள்ள(ஞா.க. கவி எண். 1849), எப்போதும் பேரின்ப நிலையிலேயே இருக்கும்  நம் குருநாதா்  தன் அனுபவத்தை  இந்த அமுதமொழியின் வாயிலாக வெளிப்படுத்தியதோடு, “உத்தம நண்பர்காள் உங்கட்கும் உரியது” (ஞா.க. எண். 1650) என்று மகரிஷி அவர்கள் வாழ்த்தியுள்ளதாலும்  நாமும் அவர்  அனுபவத்தைப் பெறவேண்டித்தானே கூறுகிறார் அன்றோ? ஆழ்ந்து ஆழ்ந்து சிந்தித்து இந்த பொன்மொழியின் அமுதத்தை பருக வேண்டுமல்லவா அன்பர்களே!? வாழ்க வளமுடன்!
    6)  எது வரை  அமைதி பெறாது என்று கூறுகிறார்?  அமுத மொழியின் முற்பகுதியைக் கவனிப்போம் இப்போது?  என்ன கூறுகின்றது?  ‘அறிவை அறிய ஆர்வம் எழுந்துவிட்டால்’  என்கிறார் மகரிஷி அவர்கள்.  ‘வரை’ என்றுதானே கூறுகிறார்? அப்படியானால் என்ன பொருள்படுகின்றது(implied meaning)? எதற்குப்பிறகு அறிவு அமைதி பெறும் என்பதைத்தானே கூற வருகிறாரல்லவா?

    7) ஆர்வம் எழுந்துவிட்டால் என்றால் என்ன பொருள்?  பொதுவாக ஏதேனும் ஒரு பயிற்சியை மேற்கொள்பவர் யாராயினும்  அதனை விருப்பத்துடன்  பயிற்சியைத் தொடர்வதுதானே இயல்பு?

    8) ‘ஆர்வம் எழுந்துவிட்டால்’ என்று மகரிஷி அவர்கள் கூறுவதில் ஆர்வம் என்பது புறத்தே(புறமனதிலிருந்து) எழாமல்,   ஆத்மாவிலிருந்து(அடிமனம்) ஆர்வம் எழவேண்டும் என்பதனைத்தானேக் குறிப்பிடுகிறார்? இதேபோன்றுதானே வாழ்வின் நோக்கம் கண்டறிதலிலும் ஆர்வம் ஆத்மாவிலிருந்துதானே எழவேண்டும்?

    9) ‘தன்னை அறிவதில்’,  ‘அறிவை அறிவதில்’ அதாவது ‘நான் யார்?-தன்னைப்பற்றி அறிதலில்’  ஒருவருக்கு  ஆர்வம் இல்லாமலா இருக்கும்!?

    10)  அதற்கானத் தவப்பயிற்சியினை செய்து வரும் நிலையில் தன்னை அறிந்து முடிப்பதற்கு எவ்வளவு காலம் ஆகும்?

    11) ஆக்கினையில் தவம் ஆரம்பித்து. சாந்தி நிலை தவமும் செய்து, துரியநிலை, சக்திகள தவம் செய்து கடைசியில் அறிவை அறிந்து இன்புற அறிவின் இருப்பிடமான வெட்டவெளிக்குச் செல்கின்ற  துரியாதீத தவம் செய்து வந்தாலே போதுமன்றோ- அறிவுக்கு அமைதி கிடைக்குமன்றோ?

    12)  அறிவை அறிந்து பேரின்பமுற மேற்கொள்ளும் மனவளக்கலை பயிற்சியில் தவப்பயிற்சி மட்டுமே போதுமா?

    13)  பிறகு என்ன செய்ய வேண்டும்?

    14) ஒரு பாடத்தில் அல்லது கலையில் (உதாரணத்திற்கு   தொழிற் கல்வி-மருத்துவம், பொறியில், மற்றும் பள்ளியில் இயற்பியல்மற்றும் வேதியல் பாடங்கள்)  வெற்றி பெற கருத்தியல்(theory) மட்டுமல்லாமல் செய்முறை(practical) பாடமும் உண்டு என்பதனை யாவரும் அறிந்தது தானே?  அதுபோன்றுதானே வாழ்வியல் கலையான மனவளக்கலையிலும் வெற்றி பெறுவதற்கு கருத்தியல் பாடமும்(விளக்கமும்), செய்முறை பாடமும் உள்ளன அல்லவா?

    15) மனவளக்கலையில் கருத்தியல் பாடத்தினால் விளக்க ஞானம் பெறமுடியுமல்லவா?

    16) விளக்க ஞானம் மட்டுமே போதுமானதா?  விளக்கத்தை பயிற்சி செய்து அதனை பழக்கத்திற்கு கொண்டு வரவேண்டுமல்லவா? விளக்கமும் பழக்கமும் கைகோர்த்துச் செல்ல வேண்டுமல்லவா?  பழக்கம்  தொய்வில்லாமல், விரைவில் இலக்கை அடைந்து வெற்றி பெற விளக்கஅறிவில் அழுத்தம் ஏற்படவேண்டுல்லவா? 

    வாழ்க வளமுடன்! 

    ஆழ்ந்து ஆழ்ந்து சிந்தித்து பயன் பெற வேண்டியிருப்பதால் மேலும் சிந்திக்க வேண்டியுள்ள வினாக்கள் உள்ளன.  அவற்றை அடுத்த சிந்திக்க அமுதமொழிகள் பயிற்சியில் ஆராய்வோம்.  வாழ்க வளமுடன்!

    . . .   தொடரும்

     

    வாழ்க திருவேதாத்திரியம்!  வளர்க திருவேதாத்திரியம்!!உலகெங்கிலும் வெகு விரைவில் பரவட்டும் திருவேதாத்திரியம்!!!

    வாழ்க அறிவுச் செல்வம்!                  வளர்க அறிவுச்   செல்வம்!!


     

  • சிந்திக்க வினாக்கள்-333 (996th Posting) சுத்த அத்வைதம்

    வாழ்க மனித அறிவு!                           வளர்க மனித அறிவு!!

    சிந்திக்க வினாக்கள்-333 (996th Posting)

    29-05-2022-ஞாயிறு

    சுத்த அத்வைதம்!!!

    பிரதான வினா(Main Question): 333

    இருபதாம் நூற்றாண்டில்அவதரித்த அத்வைதத்தின்  இரண்டாம் தந்தை வேதாத்திரி   மகரிஷி அவர்களால் வெகுகாலமாக இருந்து வந்த அத்வைத தத்துவத்தை இந்த நவயுக விஞ்ஞானத்திற்கேற்ப எல்லோராலும்  எளிதில் புரிந்துகொள்ளுமாறு, தெளிவுபடுத்தி  சுத்த  அத்வைத தத்துவமாக   அருள முடிந்தது  எப்படி/எவ்வகையில்/எவ்வாறு? 

     துணை வினாக்கள் (Sub questions):

    1)  இந்த வினாவின் நோக்கம்  என்ன?

    2) அத்வைதம் என்பது என்ன?

    3) சுத்த அத்வைதம் என்கின்றபோது அத்வைதத்தில்  இரண்டு உள்ளதுபோல்   தோன்றுகிறதா?

    4) ஒன்றே பலவாகியது என்று  அத்வைதம் உரைத்தாலும் அந்த ஒன்று எது, அது எவ்வாறு பலவாகியது என்று இதுவரை(1911) கூறப்பட்டுள்ளதா?

    5) பலவாகியது என்றால் விண், பஞ்சபூதங்கள், மனிதன் உள்பட எல்லா உயிரினங்களுமே அந்த பலவற்றில் அடங்கும் அல்லவா?

    6)  ஆனால் ஒன்றிலிருந்து மற்றொன்று தொடர் நிகழ்ச்சியாகத்தானே நடந்திருக்கும்!?

    7) இரண்டற்ற நிலை என்றுதானே அத்வைதம் கூறுகின்றதல்லவா!?

    8) அதாவது பரமாத்மாவும், ஜீவாத்மாவும் வெவ்வேறல்ல என்றுதானே அத்வைதம் கூறுகின்றது!?

    9) ஆனால் எது, எந்த ஒன்று பலவாகியது, எவ்வாறு மனிதன் வரை  பலவாகியது, அந்த ஒன்றின் பயணம் எவ்வாறு மனிதனில் முடிவடைந்து மனித அறிவை முழுமை அடையச் செய்கின்றது என்கின்ற  செயல்முறையை(process) இன்றுவரை அத்வைதம் எவ்வாறு விளக்கியுள்ளது?

    10) ‘வேதாத்திரிய சுத்த அத்வைதமும்’ ஒன்றே பலவாகியது என்றாலும் எந்த ஒன்று  என்பதனை உறுதியாக அச்சமின்றி அறிவேதான் தெய்வம் என்று கூறுவதாலும், ஏன், அது   எவ்வாறு, பலவாகியுள்ளது  என்பதனை அறிவுபூர்வமாகவும், அறிவியல் ரீதியாகவும் கூறுகின்றதல்லவா?

    11) ஆகவே வேதாத்திரிய அத்வைதத்தை வேதாத்திரிய மாணவர்கள் சுத்த அத்வைதம் என்று கூறி மகிழ்வுறுவது சரிதானே!?

     

    வாழ்க திருவேதாத்திரியம்!  வளர்க திருவேதாத்திரியம்!!

       உலகெங்கிலும் பரவட்டும் திருவேதாத்திரியம்!!!

     

    வாழ்க அறிவுச் செல்வம்!                  வளர்க அறிவுச்   செல்வம்!!


     

  • சிந்திக்க வினாக்கள்-332 (995th Posting)

    வாழ்க மனித அறிவு!                           வளர்க மனித அறிவு!!

    சிந்திக்க வினாக்கள்-332 (995th Posting)

    24-05-2022-செவ்வாய்

    மேலும் பல உண்மை விளங்க . . .

                              

    பிரதான வினா(Main Question): 332

    அறிவிற்கு அறிவியல் அருளிய அறிவின் அறிவியலின் தந்தை  வேதாத்திரி மகரிஷி அவர்கள் ‘பேரறிவு உணர்ச்சியாயும், சிந்தனையாயும் உள்ளது’ என்று அறிந்திருந்த நிலையில் மேலும் உண்மை விளங்க உணர்ச்சிக்கு முன்னர்  பேராற்றல் ஒழுங்காற்றலாயும் விளங்குகின்றது என்கின்ற அரிதினும் அரிதான உண்மையினை மகரிஷி அவர்கள் கண்டுபிடித்துள்ளார்கள்.   அவருக்கு மேலும் விளங்கிய  அந்த உண்மை என்ன?  அந்த உண்மை ஒன்றா, பலவா?  

     துணை வினாக்கள் (Sub questions):

    1)  இந்த வினாவின் நோக்கம்  என்ன?

    2) மேலும் மகரிஷி அவர்களுக்கு விளங்கிய உண்மைகளை நாம் ஏன் அறிந்துகொள்ள வேண்டும்?  அதன் பயன் என்ன?  புலன்கள் வழியாக இன்பத்தை துய்ப்பதைவிட   மேலான இன்பமா புலன்களின் உதவியின்றி உண்மையினை அறிவது?  எவ்வளவு மேலான இன்பம் உண்மையினை அறிவது?  அளவு ஏதாவது கூறமுடியுமா அவ்வின்பத்திற்கு?  அதுதான் பேரின்பமா?

    3) மகரிஷி அவர்களின்  சிந்தனை ஓட்டம்,  எப்படி/எவ்வாறு/எந்த திசையில்  இருந்திருந்தால் அவருக்கு உண்மை விளங்கி உணர்ச்சிக்கு முன்னர் அறிவு ஒழுங்காற்றலாய் விளங்குகின்றது எனக் கண்டுபிடித்திருப்பார்?  இதனை அவரது மாணவர்களாகிய நாம் அறிய வேண்டாமா?  அவருடைய மாணவர்கள் உண்மை அறிதலில்  அனுபவிப்பதில் அவரது ஆன்மாவும் சேர்ந்து அல்லவா இன்புறும்?!

    4) அறிவின் ஒழுங்காற்றல் என்கின்ற நிலையினை மகரிஷி அவர்கள் கண்டுபிடிக்காமல் இருந்திருந்தால் இன்று சமுதாயத்திற்கு     முழுமையான அறிவிற்கு அறிவியல் கிடைத்திருக்குமா?

    4) அறிவின்  இயக்க படிநிலைகள் என்னென்ன?

    5) அவற்றில் எந்தெந்த படிகள் ஒழுங்காற்றலாய் விளங்கும் அறிவின் திருநிலைகள்?

    5) அறிவு உணர்ச்சிக்கு முன்னர் ஒழுங்காற்றலாய் விளங்குகின்ற அரிய உண்மையைக் கண்டுபிடிக்காமல் இருந்திருந்தால் அவரால் அறிவின் இயக்கமாக  உள்ள படிநிலைகளை முழுவதுமாக அவர் கண்டுபிடித்திருக்க முடியுமா?

    6) அறிவு என்றால் அறிவு?  அதற்கு ஏன் ஒழுங்காற்றல் என மற்றொரு புனிதப் பெயரைச் சூட்ட வேண்டும் மகரிஷி அவர்கள்?

    7) இயற்கையின் ஆதிநிலையில் பேராற்றலும், அறிவும் இருந்துள்ளது என்பதனை நாம் அறிவோம்.   அறிவு என்றால் அது உணர்ச்சியாயும்(எல்லா உயிர்களிலும்) சிந்தனையாகவும்(மனிதனில்) இயங்குகின்றது என்பதனையும் அறிவோம்.  ஆனால் அவ்வாறு அறிவு அறிந்திருக்கும் நிலையில் அறிவிற்கு ஒழுங்காற்றல் என்கின்ற  மற்றொரு பெயர் சூட்டப்படுவதன் காரணம் விளங்கிவிட்டதா அன்பர்களே!?  வாழ்க வளமுடன்!

    8) ஒழுங்காற்றல் என்கின்ற அறிவின் மற்றொரு புனிதப்பெயரைக் கொண்டு இப்போது நம் அறிவு என்ன பேரின்பத்தை அனுபவிக்க முடிகின்றது?

    (அ)  அறிவைப்பற்றிய தெளிவு கிடைக்கின்றதா?

    (ஆ) எப்போது ஒன்றைப்பற்றிய தெளிவு ஏற்படும்?

    (இ) அறிவை அறிவு தெளிவாக அறிந்துகொள்வதில் ஏற்படும் ஐயங்கள் தெளிவாகியுள்ளனவா?

    (ஈ) என்னென்ன ஐயங்கள் அறிவாற்றுலுக்கு தீர்ந்துள்ளன ஒழுங்காற்றல் என்கின்ற திருப்பெயரால்?

    9) அறிவு தன்னை அறிய வேண்டும் என்பதில் இன்றைய சிந்தனையின் முக்கியம் என்ன?

    10) நான் யார் என அறிவதில் இன்றைய சிந்தனையும் அடங்குமா?

    11) ஒழுங்காற்றலுக்கும், ஒழுங்கிற்கும்,  ஒழுக்கத்திற்கும் உள்ள  தொடர்பு என்ன?   ஆறாம் அறிவின் நடத்தையில்/குணத்தில்/மனிதப்பண்பில்/ மனிதனாக நடந்துகொள்வதில்/இறைவழிபாட்டிலும்  ஒழுங்காற்றலின்(order of function) பங்கு என்ன? ஒழுங்காற்றலின் பங்கிற்கு மனிதன் இடம் தராமல் இருந்தால் அது இறைவழிபாடாகுமா?

    12) ஒழுங்காற்றலைக்கொண்டு இயற்கை/இறை மனிதனுக்கு  கட்டிக்கொடுத்த உடலை துன்பம் வராமல் பராமரிப்பது  ஆறாம் அறிவின் கடமைதானே? ஆறாம் அறிவு  ஒழுக்கநிலையில்தானே அந்த கடமையை ஆற்ற முடியும்?! ஆகவே ஒழுங்காற்றலாக உள்ள அறிவு மனிதனில் ஆறாம் அறிவாக செயல்படும்போது  ஒழுக்க நிலையில் செயல்பட மனிதன்தான் பொறுப்பேற்கவேண்டுமல்லவா?  இங்கேதான்  அறியாமையிலும், அலட்சியத்திலும், உணர்ச்சிவயத்திலும் மனித வாழ்வில்  சிக்கல்கள் ஏற்படுகின்றதல்லவா? ஆறாம் அறிவு மனிதனில் ஒழுக்கறிவாக, ஒழுக்கப்பழக்கறிவாக  செயல்பட மனிதன் அக்கறை எடுத்துக்கொள்ளவில்லையெனில் துன்பம்தான் வருமன்றோ? அதனால்தானே ஒழுக்கம் உயரினும் மேலாகக் கருதப்படவேண்டும் என்கிறார் திருவள்ளுவர்?

    13) மேலும் ஏதேனும் வினாக்கள் இருப்பின் அவற்றையும் எழுப்பிக்கொண்டு விடைகள்  அறிந்து அறிவைப்(தெய்வத்தைப்) பற்றிய தெளிவினை அடைவோம்  இந்த புனித நாளில்.

    அதற்கு நம் குருபிரான் உள்பட இயற்கையின்/இறையின் நேரிடை பிரதிநிதிகளான/தூதுவர்களானஅறிவில் அறிவாய் நிலைத்து அறம் வகுத்து அதனை வாழ்ந்து காட்டிய அனைத்து அறவோர்களிள் அருளும் இறையின் திருவருளும் நிச்சயமாக துணை நிற்குமாக. வாழ்க வளமுடன்!

    வாழ்க திருவேதாத்திரியம்!  வளர்க திருவேதாத்திரியம்!!

       உலகெங்கிலும் பரவட்டும் திருவேதாத்திரியம்!!!

     வாழ்க அறிவுச் செல்வ                   வளர்க அறிவுச்   செல்வம்!!