இன்றைய விருந்து

  • FFC-310- வேதாத்திரியார் – ஓர் அகராதி- 4/5

    வாழ்க மனித அறிவு!                      வளர்க மனித அறிவு!!

    lotus

    வேதாத்திரியார் – ஓர் அகராதி– 4/5

                                FFC-310           

    23-03-2018-புதன்

    உ.ச.ஆ. 23-03-37

    gurudevar

    வாழ்க வளமுடன்!

                சென்ற மூன்று  சத்சங்கங்களில் வேதாத்திரியார் ஓர் அகராதி என்பது பற்றி சிந்தித்து வருகிறோம்.  இன்றைய சத்சங்கத்திலும்  அச்சிந்தனையைத் தொடர்கிறோம்.  இதுவரை சிந்தித்ததை நினைவு படுத்திக் கொள்வோம்.

     முதல் சத்சங்க அறிவிற்கு விருந்து நிகழ்ச்சியில்,

    1. அகராதி என்றால் என்ன,
    2. வேதாத்திரியார் ஓர் அகராதி என்பதில் மனவளக்கலைஞர்களுக்கு ஏற்படும் ஆனந்தம்,
    3. ஏன் சான்றோர்களைத் துணை கொள்ள வேண்டும்,
    4. சான்றோரின் துணை பண்பேற்றத்திற்கு அவசியமாக உள்ளது,
    5. அவ்வாறு அவசியமாக  இருப்பதிலும்  இயல்பூக்கம் செயல்படுவது,
    6. சான்றோரின் துணை இன்பத்திலும் இன்பம் அளிப்பது,
    7. சான்றோரின் துணை சாலச்சிறந்த வழிபாடு,
    8. வாழ்வாங்கு வாழவேண்டும் என்கின்ற சங்கல்பத்திற்கு  உறுதியும் அளித்துள்ளது பற்றியும்,

      இரண்டாவது சத்சங்க அறிவிற்கு விருந்து நிகழ்ச்சியில்,   

    1. வாழ வேண்டிய முறை,
    2. அறத்தின் தோற்றம்,
    3. அறத்தின் மூன்று கண்கள்,
    4. ‘வாழ்வாங்கு’ என்றால் என்ன?
    5. தன்னை அறியாத அறியாமை,
    6. நல்ல குடும்பம் ஒரு பல்கலைக் கழகம்,
    7. வாழும் நிலை அறிந்து தொண்டாற்றி இன்பம் காண்பது,
    8. திருமணப்பந்தம் எதற்காக,
    9. இருபதாம் நூற்றாண்டில் விளக்கப்பட்ட பிறப்பின் விதி,
    10. இந்த புரிதலெல்லாம் வேதாத்திரி வாழ்வியல் அகராதியிலிருந்து கிடைப்பது பற்றியும்சிந்தித்து வந்துள்ளோம் .

     மூன்றாவது சத்சங்க அறிவிற்கு விருந்து நிகழ்ச்சியில், 

    1. ஏன் விரும்பி யாரும் பிறப்பதில்லை,
    2. ஆன்மாஞானம் பெறுவது,
    3. வாழ்வதில் இரண்டு வகை,
    4. மயக்க வாழ்வு பற்றி,
    5. சுய சிந்தனையில் ஓங்குவது,
    6. திருவள்ளுவரின் எச்சரிக்கை,  
    7. அறிவு-வழி வாழ்க்கை,
    8. புகழொடு தோன்றுதல்,
    9. அகம் பூரிப்படைதல்,
    10. அன்று வேதாத்திரி வாழ்வியல்  அகராதி இல்லை,
    11. வாழ்வாங்கு வாழ்வதனை வேதாத்திரிய அகராதி தெரிவிப்பது,
    12. பண்பேற்றம் பெறுவதில் சுயநலமில்லை,
    13. அகராதியின் வரையறைக்கேற்ப வேதாத்திரியம் பொருந்துதல்,
    14. வேதாத்திரியம் என்பது என்ன, 
    15. அறிய வேண்டியதெல்லாம் இருக்கின்றது திருவேதாத்திரியத்தில்,
    16. முயற்சியின் அளவே ஞான விளைவு,
    17. ஒருவர் வாழ்வதைப் பொருத்து வையகம் பயன் பெறுவது அமைவது,
    18. இருபத்தாறு  நூற்றாண்களுக்குப் பின்னர் புத்தர் எண்ணியவாறு வாழ்ந்த ஆன்மா,

     சிந்தனை வளம் பெருகும்; அகம் மகிழுங்களேன்!

    வ்வொரு துணைத் தலைப்புமே விரிவாக அறிய வேண்டிய  செய்தியை சுருக்கமாகத் தெரிவிக்கின்றன. வேதாத்திரி ஓர் அகராதி என்கின்ற தலைப்பில், இதுவரை மொத்தம் 36(8+10+18) துணைத்தலைப்புகளில்(subheadings) விருந்து(rich feasts) படைத்து அருந்தியிருக்கிறோம்.  அவற்றை நினைவு படுத்திக்கொள்கிறோம். ஒவ்வொரு துணைத்தலைப்புகளுமே ஒரு செய்தியினை தெரிவிக்கின்றதாக அமைந்துள்ளதல்லவா?   சிந்தனைக்கு எடுத்துக் கொண்டுள்ள ஒவ்வொரு தலைப்பும் எவ்வாறு ‘வேதாத்திரியார் ஓர் அகராதி’ என்கின்ற முதன்மை தலைப்போடு(Main Heading) தொடர்பு கொண்டுள்ளது என அறியலாம்.  (விரும்பினால்  ஏதேனும் ஒன்றிரண்டு துணைத்தலைப்புகளை எடுத்துக் கொண்டு சிறு சிறு கட்டுரைகள் எழுதி அகம் மகிழுங்களேன். சிந்தனை வளம் பெருகும்)

          36 துணைத்தலைப்புகளையும்  நினைவில் இருத்திக்கொண்டு இன்றைய சத்சங்கத்தில் விருந்து படைத்து அருந்துவோம்.  நம் குருபிரான் துணையும், வாழையடி வாழையாக வருகின்ற திருக்கூட்ட மரபினில் அவதரித்த  அனைத்து அருளாளர்களின் பார்வையுடன் இன்றைய சத்சங்கத்தினை தொடங்குவோம்.    அந்த ஒரே பேரறிவுதானே பல அருளார்களாக வெவ்வேறு பரிணாம/தன்மாற்ற காலகட்டத்தில் மலர்ந்துள்ளது என்பதனை நாம் அறிவோம்.

    வேதாத்திரிய அறிவியல் அகராதியினைப் புரட்டுவோம்:

    கௌதமபுத்தர் அறியாமை, அறிவுடன் வாழ்தல் பற்றி கூறுவதனை ஆழ்ந்து சென்று புரிந்து  கொள்ள இருப்பதால்,  வேதாத்திரிய அகராதிகளுள்  பிரதானமானது அறிவைப்பற்றிக் கூறும்  அறிவியல்(அறிவு+இயல்).   மூளையில் பதிந்துவைத்துள்ள அலமாரியிலிருந்து அகராதியை  எடுத்துக் கொள்வோம். புத்தரின், அபயம் தரும் இந்த அமுதமொழியினை ஏற்கனவே 12-01-2018 அன்று நமது சத்சங்க நிகழ்ச்சியான சிந்திக்க அமுத மொழிகள் பயிற்சிக்காக எடுத்துக் கொண்டோம். (Click here)  அதனை நினைவுபடுத்திக்கொள்வோம்.

    amudhamozhi_38

    “அறியாமையுடன் ஒருவன் நூறு ஆண்டுகள் வாழ்வதைவிட அறிவுடன் ஒரு நாள் வாழும் வாழ்க்கையே மேலானது.” . . .  புத்தர்.

       பயிற்சிக்கான வினாக்கள் பல இருந்தாலும் அவற்றை  சுருக்கி ஒன்பதாக எடுத்துக் கொள்ளப்பட்டது.

    இத்தருணத்தில் அதற்கும் விடைகாண்போம்.

    கௌதமபுத்தரின் பொன்மொழிகளில் சிந்திக்க வைப்பது என்னென்ன?

    அறியாமை,

    அறிவுடன்,

    வாழ்க்கை,

    நூறு ஆண்டுகள் வாழ்வது,

    ஒரு நாள் வாழ்வது

    ஆகியவை நம்மை சிந்திக்க வைக்கின்றன.

        முதல் மூன்று சொற்களுக்கு பொருள் தெரிந்து விட்டால் ஏன் கௌதமபுத்தர் அறியாமையுடன் நூறு ஆண்டுகள் வாழ்வதைவிட அறிவுடன் ஒரு நாள் வாழ்வது மேலானது என்று கூறுகின்றார் என்பது விளங்கிவிடும். அறியாமை, அறிவுடன் என்கின்ற வார்த்தைகளுக்கு வேதாத்திரிய அறிவியல் (அறிவு+இயல்) அகராதியிலிருந்தும், வாழ்க்கையைப் பற்றி பொருள் தெரிந்து கொள்வதற்கு வேதாத்திரிய வாழ்வியல் அகராதியிலிருந்தும் பொருள் தெரிந்துகொள்ள வேண்டும்.  புத்தர் காலம் இருபத்தேழு நூற்றாண்டுகள் முந்தையது.  ‘Fraction(அகம்) demands; Totality(முழுமை-இயற்கை-இறை) supplies’ என்கின்ற அடிப்படையைக்கொண்டு இயற்கையின் பரிணாமம் இயங்குவதால்,   பரிணாமம்/தன்மாற்றம் அடைந்துவரும் வளர்ச்சிக்கேற்ப/மலர்ச்சிக்கேற்ப, அதாவது தனது குழந்தைகளிள் அகம் விரும்புவதற்கேற்ப, இயற்கை அன்னை   தனது மறைந்திருக்கும் அருமை, பெருமைகளைக்கொண்ட ஆற்றலை வெளிப்படுத்தி  வருகிறாள்.  அப்படி 1911 இல் மலர்ந்து ஆல்போல் வளர்ந்து வருவதுதான் திருவேதாத்திரியம்.

    புத்தரின் கூற்று சிந்திக்க வைக்கின்றது:  

     புத்தர் அருளியுள்ள அபயம் தருகின்ற அமுதமொழிக்குள் செல்வோம்.  நூறு ஆண்டுகள் அறியாமையுடன் வாழும் வாழ்க்கையை அறிவுடன் ஒரு நாள் வாழும் வாழ்க்கையோடு ஒப்பிடுகிறார்.  இந்த ஒப்பீடே  நம்மையெல்லாம் சிந்திக்க வைக்கின்றது.  என்ன சிந்திக்க வைக்கின்றது?  எவ்வளவு ஆண்டுகள்  வாழ்ந்தாலும், அறியாமையுடன்   வாழ்வது  வீணே என்பது விளங்குகிறதல்லவா? புத்தரின் இளவலான திருவள்ளுவர் கூறுவதுபோன்று  வாழ்வாங்கு வாழ வேண்டும் என்கின்றது இந்த அமுதமொழி. இச்சிந்தனை அறிவுடன் வாழவேண்டும் என்கின்ற உந்துதலை ஏற்படுத்துகின்றது.   ஆகவே இந்த உந்துதலை பயன்படுத்திக் கொள்ள ‘அறியாமை’, ‘அறிவுடன்’ என்று எவற்றைக் கூறுகிறார் என்பதனை அறிந்து கொள்ள வேண்டும். கௌதபுத்தரின் அறிவுநிலையில் நின்று அறிந்துகொள்வோம்.  ‘அறியாமை’, ‘அறிவுடன்’ என்பது பற்றி அறிந்து கொள்ளவேண்டுமென்றால், அதற்கு    வேதாத்திரிய அறிவியல் அகராதியின் ஏடுகளைப் புரட்டுவோம்.  அறிவிற்கென பிரத்யேகமாக அமைந்துள்ள அறிவியலை  (Exclusive Science of Consciousness) நாம் வேதாத்திரிய அறிவியல் என்று கூறி மகிழ்கிறோம்.

    அகராதியின்  ஏடுகளிலிருந்து  என்னென்ன அறிந்துகொள்ள வேண்டியிருக்கின்றது?

    1)   அறிவு என்பது என்ன?

    2)   பொதுவாக வறுமை என்றால் என்ன?

    3)   அறிவின் வறுமை என்றால் என்ன?

    4)   ‘வறுமை’ என்கின்ற சொல்லின்  பொதுவான பொருளை வைத்துக்கொண்டு, வறுமை அறிவுடன் சேறும்போது அறிவின் நிலை என்ன என்று ஆராய்ந்து,  ‘அறிவின் வறுமை’ என்ன என்று வேதாத்திரிய அறிவியல் அகராதி தெரிவிப்பதோடு ஒப்பீடு செய்து நாம் அறிவின் வறுமையைப்பற்றி சிந்தித்தது  சரியாக உள்ளதா என அறிந்துகொள்வோம்.

    1) அறிவு என்பது என்ன?

    இப்போது அறிவு என்பது என்ன என்று அறிந்துகொள்வோம்.

    கண்களால் காணமுடியாதது அறிவு.

    தன்னையே காணமுடியாதது அறிவு.

    காரணம் அறிவு அரூபமானது.  அதற்கு உருவம் இல்லை. உருவமில்லாததால் அறிவு என்கின்ற ஒன்று இல்லை என்றும் கூறவும் முடியாது.

    பின்னர் எதுதான் அறிவு?  அரூபம் என்பதால் ‘அறிவு என்று ஒன்று இல்லை’ என்று சொல்லிவிடத்தான் முடியுமா?

    உணர்கின்ற ஒன்றினை உயிர் என்கிறோம். உணர்வது என்றால் என்ன?

    உணர்வதன் மூலம் உயிர் புறத்தே உள்ளதனை  அறிந்து கொள்கின்றது.

    உணர்வதன் மூலம் எது அறிந்து கொள்கின்றது? 

    உணர்தலின் மூலம் எது அறிந்துகொள்கின்றது எதுவோ அது அறிவு ஆகும். இதனை முடிவு செய்வதே அறிவுதான்!

    அறிகின்ற காரணத்தால் அது அறிவு என்கின்ற காரணப்பெயரைப் பெறுகின்றது.

    இதுவரை அறிவைப்பற்றி அறிவு இவ்வாறு சிந்தித்திருக்காது?  இப்போது எது  இவ்வாறு சிந்திக்க வைக்கின்றது? வேதாத்திரிய அறிவியல்(அறிவு+இயல்) அகராதி சிந்திக்க வைக்கின்றது.

    ‘உருவமில்லாமலும் இருக்கின்றது’ என்கின்ற கோட்பாடு:

        உருவமில்லாத ஒன்றினை இல்லை என சொல்லிவிடவும் முடியாது என்கின்ற கோட்பாட்டினையும் அறிந்து கொள்ளவேண்டும்.  அறிவைப்பற்றி சிந்திக்கும்போது ‘உருவமிருப்பதுதான் இருப்பது, உருவமில்லாததை  இல்லாதது என்று எப்போதுமே கருதமுடியாது.’ என்று அறிந்துகொண்டோம்.  எப்போதுமே என்றால் ..?? மெய்ப்பொருள் விஷயத்தில் அது பொருந்தாது என்பதுதான் ‘எப்போதுமே’ என்பது.  ஆனால் பொருட்களால் ஆன  உலகில், (உலகியல் வாழ்க்கையில்) ‘உருவமில்லாததை இல்லாதது’ என்றுதான் உலக வழக்கில் சொல்ல முடியும். ஆனால் எவ்வாறு உருவமில்லாமல் இருந்தும் அறிவு, தான் இருப்பதனை ஏற்றுக்கொள்கின்றதோ, அதே ஒப்புவமையில்(analogy),  மெய்ப்பொருளை- ஆதிநிலையை- இறையைத்  தீர்மானம் செய்யும் விஷயத்திலும் ஒன்று மில்லாதது போல் வெட்டவெளி தோன்றினாலும் வெட்வெளியை ‘சாதாரணப் பொருளில் அது  வெளி தான்(empty) என்றுகொள்ளாமல், உறுதிப்பாட்டோடு அந்தவெளி எல்லாம் வல்ல ஆற்றல் மிக்கதுதான் என அறிந்து கொள்ள வேண்டும்.  இதில் இரண்டாவது புரிதலுக்கே இடமில்லை(Second thought).  வெளி ஆற்றல் மிக்கது எனக் கருத்தியலாக புரிந்துகொள்வதில் எள்ளளவும் ஐயம் இருக்க அவசியமில்லை.

       இயற்கையின் ஆதிநிலையான(திருவள்ளுவர் கூறும்) வெட்டவெளியிலிருந்துதானே அறிவு தன் பயணத்தைத் தொடர்ந்திருக்கின்றது.  உயிர்களிடத்தில் உள்ள அறிவு ‘உருவமில்லாது இருந்தாலும் அது இருக்கின்றது’ என ஏற்றுக் கொண்ட அறிவு, வெட்டவெளியைப்பற்றி சிந்திக்கும்போதும் இதே நிலைப்பாட்டைத் தானே எடுக்க வேண்டும். ஆதிநிலையிலேயே அறிவு  இருக்கின்றது. ஆக, ‘உருவமில்லாத, ஆனால் இருக்கின்ற தனிச்சிறப்பினை’ பெற்ற பேரறிவே ஆதிநிலை – வெட்ட வெளி. ஆகவே தான்  ஆதிநிலையான வெட்டவெளிக்கு உருவமில்லாததால், ஒன்றுமில்லாததுபோல் காணப்படுகின்றது.  ஆய்வு செய்ததில் இன்று அறிவைப்பற்றிய சிறப்பான விளக்கத்தினைப் பெற்றுள்ளோம்.

     2) பொதுவாக வறுமை என்றால் என்ன?

       வறுமை  என்கின்ற சொல்லிற்கான பொருள் தெரியும்.  ஆனால் வார்த்தைகளால் எவ்வாறு சொல்வது?  எனவே வறுமை என்கின்ற சொல்லிற்கான பொருள் என்ன என்று பார்ப்போம்.  வறுமை என்பது அடிப்படைப் பொருளாதார வசதி  இல்லாத  நிலை(poverty) என்று பொருள்.  அடிப்படைத் தேவைகளான உண்ண உணவு, உடுக்க உடை, உறைவதற்கு உறைவிடம் ஆகியவற்றை பெறுவதற்குக்கூடப்  பொருள் வசதி இல்லாமை என்று பொருள். வறுமையால் வரும் துன்பங்கள் எண்ணிலடங்கா?  தனிமனிதன் மட்டும் துன்பமடைவதில்லை. அதன் காரணமாக, பிறரும், சமுதாயமும் துன்பங்களைச் சந்திக்க நேரிடுகின்றது.

     3) அறிவின் வறுமை என்றால் என்ன?

        அறிவு, வறுமை(பொதுவான பொருளில்)  என்றால் என்ன என்றும் அறிந்து கொண்டோம்.  அறிவுடன் வறுமை சேர்ந்துவிட்டால் அறிவின் நிலை என்ன என்று அறிந்து கொள்ளவேண்டும். ‘அறிவின் வறுமை’  என்பது இரண்டு சொற்களைக் கொண்ட சொற்றொடர்.  நமக்குத் தெரிந்தவரையில் 1911 வரை இப்படியொரு சொற்றொடர் இதுவரை  அறியப்பட்டதாக தெரியவில்லை. 1911  க்கு பிறகு வேதாத்திரிய அறிவைப்பற்றிய அறிவியல் (அறிவு+ இயல்) அகராதிதான் இச்சொற்றொடரை வெளியிட்டுள்ளது.  இது மிகவும் கவனிக்கப்படவேண்டிய ஒன்று. எனவே நாம் கவனிப்போம்.  அறிவின் வறுமை என்றால் என்ன? வறுமை என்கின்ற சொல்லிற்கான பொருளை  சற்று முன்னர்  நினைவிற்கு கொண்டு வந்துள்ளோம். அதனை நினைவில் கொண்டு அறிவின் வறுமை என்ன  என்பதனை அறிந்து கொள்வோம்.

         வறுமை என்பது அடிப்படைத் தேவைக்குக்கூட, அதாவது வாழ்க்கைக்கு ஆதாரமாக விளங்குகின்ற  பொருளாதாரம் இல்லாத நிலை. அறிவு+வறுமை  அறிவின் வறுமை ஆகின்றது. ஆகவே அறிவோடு வறுமை சேர்வதால் ஏற்படுகின்ற நிலை என்ன? அறிவின் அடிப்படைத் தேவைக்கே வறுமை ஏற்பட்டுவிட்டது என்றாகின்றது. அப்படியானால் அறிவின் அடிப்படைத் தேவை என்பதனை ஆராய வேண்டும்.

     அறிவின் அடிப்படைத் தேவை என்பது என்ன?

         இப்போது அறிவின் அடிப்படைத் தேவை என்றால் என்ன என்று அறிந்துகொள்ள வேண்டியுள்ளது.  உயிரினங்களிலே மனித உயிரினம் மிகச்சிறப்புடையது.  எதனால் சிறப்புடையதாகின்றது?  இதனை இயற்கை சொல்லவில்லை.  மனிதன்தான்  கூறுகின்றான். ஆறாம் அறிவு இருப்பதனால் தன்னை சிறப்புடையவன் என்கிறான் மனிதன். உண்மைதான். அத்தகைய சிறப்புடைய ஆறாம் அறிவு வறுமையில் இருந்தால் விளைவு என்ன?  இழப்புதானே! தனக்கும். பிறர்க்கும், அவன் வாழும் சமுதாயத்திற்கும்.!!  ஆறாம் அறிவின் அடிப்படைத் தேவை என்றால் என்ன பொருள்?  ஆறாம் அறிவின் அடிப்படைத் தேவை என்றால் அதனை எவ்வாறு பொருள்கொள்வது?

        ஆறாம் அறிவு எவ்வாறு திகழவேண்டுமோ அவ்வாறு திகழ்வதுதான்  ஆறாம் அறிவின் அடிப்படைத் தேவையாகின்றது.

     எப்போது அறிவு வறுமையில் உள்ளதாகிவிடும்?

                      அறிவு திகழவேண்டிய நிலை உருவாகவில்லை என்றால் அப்போது அறிவு வறுமையில் இருப்பதாகத்தானே கொள்ள முடியும்?!  ஆறாம் அறிவு எவ்வாறு திகழவேண்டும்   எனச் சுருக்கமாக சொல்ல வேண்டுமெனில் இரண்டொழுக்கப் பண்பாடான அன்பும் கருணையும் வெளிப்படுத்துவதாக அமைய வேண்டும்.  அவ்வாறில்லை எனில்  அறிவு வறுமையில் உள்ளதாகத்தானே கொள்ள முடியும்?!  அறிவைப்பற்றி ஆராய்ச்சி செய்துள்ள  அறிவின் அறிவியலாரான வேதாத்திரி மகரிஷி அவர்கள் அறிவிற்கு வறுமை இருப்பதனைக் கண்டுபிடித்துள்ளார்.  இதற்கு ஏதும் விஞ்ஞான நிரூபணம் தேவையா?  தேவையில்லை.  ஆழ்ந்த பல நாள் தொடர் ஆராய்ச்சியின் முடிவில் அறிவு,  அறிவுபூர்வமாக அறிந்துகொண்டாலே அது அறிவியல் ரீதியான கண்டுபிடிப்புதான். அப்படிப் பார்க்கும்போது அறிவின் இரண்டொழுக்கப் பண்பாடான அடிப்படைத்தேவை வெளிப்படவில்லை எனில் அறிவு வறுமையில் உள்ளது என்று அறிவே ஏற்றுக்கொள்கின்றது.

      அறிவின் இரண்டொழுக்கப் பண்பாடான அடிப்படைத்தேவை வெளிப்படாமல் இருப்பதற்குக் காரணத்தை என்ன பெயரிட்டு அழைக்க முடியும்? அதனை அறியாமை, அலட்சியம், உணர்ச்சிவயம் என்றுதானே மகரிஷி அவர்களால் சொல்ல முடியும். ஆகவேதான் அறியாமை, அலட்சியம். உணர்ச்சிவயம் ஆகிய மூன்று வகையிலும்  அறிவு வறுமை நிலவுகின்றது என்று கூறுகிறார்  மகரிஷி அவர்கள்.  ‘இந்த மூன்றும் நீங்கிய  நிலையே’ புத்தர் கூறும் ‘அறிவுடன்’ என்பது. இப்போது கௌதமபுத்தர் கூறும் அபயம் தரும் அமுதமொழி விளங்கிவிட்டதல்லவா?  அறியாமையால் தனக்கும், பிறர்க்கும், தான் வாழும் சமுதாயத்திற்கும் சொல்லொனாத்(ஒன்றா, இரண்டா) தீமைகள் வருவதால் அறியாமையுடன் வாழ்பவன் தானும் அவதியுற்று, பிறரையும் அவதியுறச்செய்வதே நடக்கின்றது.  இரு தரப்பினரும் அவதியுறுவது முதலாமவரின் அறியாமைச் செயல்களால் நடக்கின்றது. எப்படி இருந்தாலும், ‘விளைவை அறிந்து தவறு செய்தாலும், விளைவை அறியாது தவறு செய்தாலும்’ விளைவு ஒன்றுதான்.  அறியாமையில் தவறு செய்தாலும் விளைவு உண்டு. இதனைத்தான் ‘கல்லார் கற்றார் செயல்விளைவாய் காணும் இன்பதுன்பமவன்’ என்று இறைவனே துன்பப்படுகிறான் என எடுத்துக் காட்டியுள்ளாரே இறைவணக்கத்தில் முதல் பாடலிலேயே மகரிஷி அவர்கள்.  எனவேதான் நூறு ஆண்டுகள் அறியாமையில் வாழ்வதைவிட அறிவுடன் ஒரு நாள் வாழ்வது மேலானது என்கிறார் கௌதமபுத்தர்.  மற்றொரு சத்சங்கத்தில் அறிவின் வறுமைபற்றி தனியாக ஆராய்வோம். இப்போது ‘வேதாத்திரியம் ஓர் அகராதி’ என்பது  அகராதி  என்பதற்கேற்ப எவ்வாறு பொருந்தி வருகின்றது என்பதற்குள்  செல்வோம்.  அதனை அடுத்த சத்சங்கத்தில்  (27-03-2022 ஞாயிறு)ஆராய்வோம்.  வாழ்க வளமுடன்.

      

    வாழ்க அறிவுச் செல்வம்!           வளர்க அறிவுச்செல்வம்!!


  • FFC-309-வேதாத்திரியார் – ஓர் அகராதி- 3/?

    வாழ்க மனித அறிவு                            வளர்க மனித அறிவு

    lotus

    வேதாத்திரியார் – ஓர் அகராதி- 3/5

    FFC- 309

     

                                                                                  20-03-2022-   ஞாயிறு.

    உ.ச.ஆ. 20.03.37

    Scientist of Consciousness

    வாழ்க வளமுடன்!

    சென்ற இரண்டு சத்சங்கங்களில் வேதாத்திரியார்-ஓர் அகராதி என்பது பற்றி சிந்தித்து வருகிறோம். இன்றைய சத்சங்கத்திலும் அச்சிந்தனையைத் தொடர்கிறோம். இதுவரை சிந்தித்ததை நினைவு படுத்திக் கொள்வோம்.

    முதல் சத்சங்க அறிவிற்கு விருந்து நிகழ்ச்சியில்,
    அகராதி என்றால் என்ன,
    வேதாத்திரியார் ஓர் அகராதி என்பதில் மனவளக்கலைஞர்களுக்கு ஏற்படும் ஆனந்தம்,
    ஏன் சான்றோர்களைத் துணை கொள்ள வேண்டும்,
    சான்றோரின் துணை பண்பேற்றத்திற்கு அவசியமாக உள்ளது,
    அவ்வாறு அவசியமாக இருப்பதிலும் இயல்பூக்கம் செயல்படுவது,
    சான்றோரின் துணை இன்பத்திலும் இன்பம் அளிப்பது,
    சாலச்சிறந்த வழிபாடு செய்வது,
    வாழ்வாங்கு வாழவேண்டும் என்கின்ற சங்கல்பத்திற்கு உறுதியும் அளித்துள்ளது பற்றியும்,

    இரண்டாவது சத்சங்க அறிவிற்கு விருந்து நிகழ்ச்சியில்,

    வாழ வேண்டிய முறை,
    அறத்தின் தோற்றம்,
    அறத்தின் மூன்று கண்கள்,
    ‘வாழ்வாங்கு’ என்றால் என்ன?
    தன்னை அறியாத அறியாமை,
    நல்ல குடும்பம் ஒரு பல்கலைக்கழகம்,
    வாழும் நிலை அறிந்து தொண்டாற்றி இன்பம் காண்பது,
    திருமணப்பந்தம் எதற்காக,
    இருபதாம் நூற்றாண்டில் விளக்கப்பட்ட பிறப்பின் விதி,
    இந்த புரிதலெல்லாம் வேதாத்திரி வாழ்வியல் அகராதியிலிருந்து கிடைப்பது பற்றியும்
    சிந்தித்து வந்துள்ளோம்.

    இவற்றையெல்லாம் மனதில் இருத்திக் கொண்டு இன்றைய சிந்தனையைத் தொடர்வோம்.

    விரும்பி யாரும் பிறப்பதில்லை:

    அப்படி என்றால் என்ன பொருள்? சற்று சிந்திப்போம். ‘நாம்’ என்று தனியாக இருந்து கொண்டு இன்னாருக்குப் பிறக்கவேண்டும் என்று விரும்பிப் பிறப்பதில்லை என்பதைத்தான் ‘விரும்பி யாரும் பிறப்பதில்லை’ என்கிறோம். பிறப்பு இயற்கையின் நிகழ்வு. நாமும் இயற்கையின் ஒரு சிறு அங்கம்தானே! நாம் யார்? ஆன்மாதானே நாம்! ‘வினைப்பயனே தேகம் கண்டாய்’ என்கின்ற பிறப்பின்-விதிக்கேற்ப, வினைப்பதிவின் சுமையை இறக்கிவிட்டுத் தூய்மை பெறுவதற்கு(ஞா.க.1646-17,18 அடிகள்) ஆன்மாவிற்கு பிறவி(உடல்) தேவையாகின்றது. எனவேதான் வினைப்பதிவுகளின் சுமை தாங்கிய ஆன்மாவாக உள்ள நாம் பிறவி எடுக்கின்றோம். இல்லை. ‘நாம் பிறவி எடுக்கின்றோம்’ என்று சொல்வதைவிட ‘ஆன்மா பிறவி எடுத்துள்ளது’ என்று சொல்வதே சரியாக இருக்கும்.

    ஆன்மாஞானம் பெற . . .

    வேதாத்திரிய வாழ்வியல் அகராதி நம்முள் இறக்கி வைத்திருப்பதால், நாம் ‘மனிதன் வாழ்கிறான் என்று சொல்வதைவிட வினை வாழ்கின்றது’ என்கிறோம் நாம். ஏன்? இதில் பொருள் உள்ளதுதானே? எவ்வாறு, இவ்வாறு கூறமுடிகின்றது? ‘மனிதன் வாழ்கிறான்’ என்பதற்கான பொருள் ‘வினை வாழ்கின்றது’ என்பதாகும். ஆன்மாதான் மனிதனாக உள்ளது. இந்த புரிதல் அவசியமா? இல்லையா? அவசியம்தான்! ஏனெனில் ஆன்மாவே மனிதனாக உள்ளது என்கின்ற ஆன்மஞானம் பெறுவதற்கு இந்த புரிதல் அவசியமே! இந்த புரிதல் வேதாத்திரியத்தால் கிடைப்பதால், வேதாத்திரியத்தை அகராதி; வாழ்வியல் அகராதி என்று அகம் மகிழ்ந்து கூறுகிறோம் நாம்.

    வாழ்வதில் இரண்டு வகை:

    பிறந்துவிட்டோம். வாழ்ந்தே ஆக வேண்டும். எப்படியாவது வாழ்வது மனிதவாழ்க்கை அல்ல. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர், திருவள்ளுவர் எண்ணியதுபோல் வாழ்வாங்கு வாழ வேண்டும். இதுவரை எப்படி வாழ்வது என்று தெரியாமல் வாழ்ந்து விட்டது சமுதாயம். வாழ்வதில் இரண்டு வகை இருப்பதாக தெரிந்து கொள்கிறோம்.

    அவையாவன:

    1. புலன் வழி வாழ்க்கை
    2. அறிவு வழி வாழ்க்கை

    புலன் வழி வாழ்க்கை:

    ‘மனம் போன போக்கெல்லாம் போகவேண்டாம்’ என்று ஆன்றோர்கள் அறிவுறுத்தியும், அதனை செவிமடுக்காமல், மனம் போன போக்கினில் வாழ்வது ஒன்று. இது புலன் வழி வாழ்க்கை.

      அதாவது அளவு மீறியும்(Exceeding the Limit), முறையும் மாறியும் (changing the Method),

       புலன்களை கருவியாகப் பயன்படுத்துவதை தவிர்த்துவிட்டு, அதுவரை இயற்கையில் கருவிகளாக இருந்த புலன்களை, மனிதன் தனது அறியாமையால் இயற்கைக்கு முரணாகப் பொறிகளாக்கி(திருவள்ளுவர் புலன்களை ஐம்பொறிகள்–five traps என்று கூறுவதுபோல்)

        அறிவை புலன்- பொறிகளில் சிக்கவைத்து, அடிமையாக்கி வாழ்வது மயக்க வாழ்வு.

        ஐந்தில் அளவு, முறை காத்தல் என்பதனை விளக்கியுள்ளது வேதாத்திரிய வாழ்வியல் அகராதி.

    மயக்க வாழ்வு என்பது என்ன?

    உணர்வு நிலையிலேயே மயக்கத்துடன் இருப்பது. They are not conscious of themselves (not in coma). So to say they are not aware of their existence resulting in not being conscious of their deeds in their life. அதாவது மயக்க வாழ்வு வாழ்பவர்கள் ஐயுணர்வில் மயங்கியவர்கள். இவர்களை வேரறுந்த மரத்தோடு ஒப்பிடுகிறார் மகரிஷி அவர்கள். அருட் கவிஞர் எதனோடு ஒப்பிடுகிறார் பாருங்களேன்! வேரறுந்த மரத்தோடு ஒப்பிடுகிறார்.  அப்பாடலை நினைவு கூர்வோம்.

     பேரியக்க மண்டலத்தை அளந்து நிற்கும்

    பேரறிவால் தோற்றம், இயக்கம், விளைவு

    சீரறிந்த தெளிவினிலே சிக்கல் இன்றித்

    திருவினை ஆற்றும் பெரியோர் வழிபின்பற்ற,

    நேரறிவு, செயல்திருத்தம், நினைவுத் தூய்மை

    நிச்சயமாய்; ஐயுணர்வில் மயங்கி ஆற்றல்

       வேரறுந்த மரமொக்கும் விழித்து உணர்வீர்!

    விளைவும் முதலும் உணர்ந்து ஆற்ற இன்பம். 

    …  வேதாத்திரி மகரிஷி(ஞா.க.1399)

        சமுதாயத்தின் மீது அவர் கொண்டுள்ள அக்கறையைக் காட்டுகின்றது இக்கவி.   

    சுய சிந்தனையில் ஓங்க . . :

          சுயமாக சிந்தித்தால்தான் உணர்வு நிலையிலேயே இருக்கும் மயக்கத்தில் இருந்து விழித்துக்கொள்வது சாத்தியமாகும். அந்த சுய சிந்தனையை ஊக்குவிக்கும் முகமாகத்தான் நம் அருட் கவிஞரான நம் குருநாதர் ஐயுணர்வில் மயங்கியவர்களை, சாய்ந்து கீழே விழ இருக்கின்ற வேரறுந்த மரத்தோடு ஒப்பிடுகிறார். இவ்வாறாக அருளாளர்கள் அனைவருமே ஐயுணர்வில் மயங்குவது பற்றி கூறி எச்சரித்து இருக்கின்றனர். காரணம் உண்மையைக் கூறுவது அச்சுறுத்துவதற்காக அல்ல. அப்படியாவது சிலராவது உணர்ந்து கடைத்தேறட்டுமே என்றுதான் அவ்வாறு ஒப்பிடுகிறார்கள். சிலராவது என்று கூறுவதுகூட discouraging ஆக இருப்பதுபோன்றோ அல்லது மிகைப்படுத்திக் கூறுவதுபோன்றோ தோன்றலாம்! உண்மையில் அப்படியல்ல. எதார்த்த நிலையே அதுதான்! நாம் ஒவ்வொருவருமே இதனை ஒப்புக்கொண்டுதான் ஆகவேண்டும். அருட்கவிகளை வாசிப்பவர்கள் அனைவருமே சுயசிந்தனை ஓங்கி பயன் பெற்றார்களானால் நன்மைதான். 1911 பிறகு தான் சமுதாயத்தில் சுயசிந்தனையில் ஓங்கி வருபவர்களைக் காண முடிகின்றது.

            ஆனால் அதே நேரத்தில்,

           சிந்தனையுடன் பந்தித்து நிற்றல்தான் உண்மையில் நலம் பயக்கும் என்பதனையும், சுயசிந்தனையில் ஓங்கி வருபவர்கள் கவனிக்க வேண்டியது அவசியமாகின்றது.       

       ஐயுணர்வில் மயங்காமலோ

                   அல்லது

     புலன்மயக்கத்தில் இருந்து விடுபடவோ

                அல்லது

    உணர்வு நிலையிலேயே மயக்கமுற்றிருப்பதிலிருந்து விழித்தெழவோ,

          இன்பதுன்ப இயலின் தாரக மந்திரமான அளவும், முறையும் காக்கின்ற நினைவில் உறுதியாக இருக்கக் கற்றுக்கொள்ளுதல் அவசியமாகின்றது.

    ‘ஒவ்வொரு தனிமனிதனும் உணர்ந்து திருந்துவது எந்நாளோ’ என அறிந்த உலக நல ஆர்வலரும், உலக நலத் தொண்டரும், நாம் பெருமிதம் கொள்ளத்தக்கவருமான நம் குருநாதர் வகுத்துக் கொடுத்த உலக சமாதானத் திட்டங்கள் தான் ஒட்டு மொத்த சமுதாயத்தையே(en masse) புலன் மயக்கத்திலிருந்து விழித்தெழச்செய்யும் என்பதில் ஐயமே இல்லை. இதனைக் கருதிதான் ஆங்கிலப்புத்தாண்டு தினத்தையும், மகரிஷி அவர்களின் பிறந்தநாள் விழாவினையும் உலக அமைதி வேள்வி தினமாகக் கொண்டாட அன்புடன் நம்மைக் கேட்டுக்கொண்டுள்ளார்கள் மகரிஷி அவர்கள்.

    திருவள்ளுவரின் எச்சரிக்கை:

       திருவள்ளுவர் ஐயுணர்வில் எச்சரிக்கையாக இருக்க ஐம்பொறிகளை கருவி(instrument) என்கின்ற பொருளில் பயன்படுத்தவில்லை. ‘பொறி’ என்பதற்கு கருவி என்றொரு பொருள் இருந்தாலும், அதற்கு மற்றுமொரு பொருளும் இருப்பதனை மறந்துவிடக்கூடாது. அதாவது ‘பொறி’* என்பதற்கு வசப்படுத்தும் கருவி (உதாரணம்: எலிப்பொறி. ஆங்கிலத்தில் trap) என்கின்ற பொருளில்தான் அறிஞர் திருவள்ளுவர் கூறியிருக்கிறார். சமுதாயத்தில் துன்பம் நிலவுவதற்கு உள்ள பல காரணங்களில் முதன்மை வகிப்பது, ஐயுணர்வில் மயங்குவது. (நமது சத்சங்க அறிவிற்கு விருந்தில் 22.07.2015 அன்று சிந்தித்த ஐவகை மயக்கம் சிந்தனையைக் காண Click here) புலன்களை கருவிகளாக மட்டுமே பயன்படுத்தத் தெரியாமல் அதனை வசப்படுத்தும் கருவியாக நாம் ஆக்கி, அதனுள் அகப்பட்டுக் கொள்வது. ஞானம் என்பதற்கு விளக்கம் கொடுக்க வந்த மகரிஷி அவர்கள், ‘தெளிவு என்பது பொதுவான விளக்கம், எனினும் அறிவை அறிந்த தெளிவு என்பதே சிறப்பான விளக்கம்’ என்கிறார். அவர்தான் அறிவை அறிந்து அதனை சமுதாயத்திற்கு வெளிப்படுத்தி, அறிவிற்கே இயல் ஏற்படுத்திய குருநாதர் ஆயிற்றே! ஆகவே அவர் ஞானம் அடைந்த ஞானிக்கு இலட்சணம் கூறுகையில் இன்பதுன்ப இயல் அறிந்து ‘அளவும், முறையும்’ காப்பதே ஆகும் என்பார்.

    இன்பத்தின் அளவு முறை மாறும்போது
    ஏற்படும் ஓர் பொருத்தமிலா உணர்ச்சியேதான்,
    இன்பத்தின் மறுபெயராம் துன்ப மாயும்
    இரண்டும் அறிவின் அலைகளாயும் கண்டேன்.’

    என்கிறார். எதார்த்தத்தில் இன்பம்தானே துன்பமாகின்றது?! உதாரணத்திற்கு உணவு ருசியாக இருக்கின்றது என்பதால், அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் அஜீரணமாகின்றதல்லவா? அஜீரணம் துன்பம்தானே! எனவே எல்லாப் புலன்களையும் பயன்படுத்துகையில் எச்சரிக்கையாக இருந்து அளவும், முறையும் காக்க வேண்டும். அதற்கு அறிவு-வழி வாழ்க்கை வாழவேண்டும். இனி அறிவு வழி வாழ்க்கை வாழ்வது எப்படி எனப்பார்ப்போம்.

    * பொறிவாயில்(trap) ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
    நெறிநின்றார் நீடுவாழ் வார்.                                                      . . . குறள் எண். 6

    தத்துவச் சிந்தனையாளர்கள் காலம் காலமாக இந்த பொறியில் (trap) சிக்கிக் கொள்வதை ‘விட்டில் பூச்சி’ உதாரணம்  மற்றும்  காய்ந்துபோன சுவையற்ற எலும்பினைக் கடிக்கும் நாய், தன் வாயில் இருந்து வரும் தனது ரத்தத்தை,  எலும்பிலிருந்துதான்  வருகின்றது என்று தெரியாமல், சுவைத்து இன்புற்று மேலும்  வேகமாய் கடிக்கும் உதாரணத்தையும் கூறி  நம்மை எச்சரித்துள்ளனர்.

    அறிவு-வழி வாழ்க்கை:

    சான்றோரைச் சார்ந்திருக்க வேண்டும். மூத்தோர் சொல் வார்த்தை அமிர்தம் என்பதனை உணர்ந்து நினைவில் கொள்ள வேண்டும். சான்றோரைச் சார்ந்திருந்து, அவர்களின் துணைகொண்டு சிந்தனையில் உயர்வதால், அளவும், முறையும் காத்து, புலன்பொறிகளில் சிக்காமல் வாழ்வாங்கு வாழ்வது அறிவு-வழி(ஆறாம்) வாழும் வாழ்க்கை. இவ்வாறு வாழ்வது அரிதினும் அரிதாக இருந்தது 1911 வரை. ஆனால் 1911 லிருந்து ஆன்மீக வரலாற்றில் திருப்புமுனை ஏற்பட்டு இன்ப-துன்ப இயல் உருவாகியிருப்பதால் அளவு மாறாமலும், முறை மீறாமலும் அறிவு புலன்களுக்கு அடிமையாகாமல் வாழ்வாங்கு வாழும் நிலை மனவளக்கலைஞர்களால் அதிகரித்து வருகின்றது என்றால் அது மிகையாகாது. அறிவு வழி வாழ்வது அயரா-விழிப்புணர்-வாழ்வு(life in constant awareness). ஏனெனில் அறிவு வழி வாழ்வு எப்போதுமே விழிப்புணர்வில்(constant awareness) இருக்கச் செய்கின்றது.

    புகழொடு தோன்றுக!

    மனம்போன போக்கில் வாழும் வாழ்க்கையை பல்லாயிரம் பிறவிகளாக வாழ்ந்து விட்டது சமுதாயம். அவ்வாறு வாழ்ந்ததன் விளைவுகளை சமுதாயத்தில், அதன் அங்கமான நாம் இப்போதுதான் அறிந்து கொள்கிறோம். மனிதனாகப் பிறப்பவர் புகழுக்குக் காரணமான குணத்தோடு பிறக்க வேண்டும். அக்குணம் இல்லாதவர் பிறக்காமல் இருப்பதே நல்லது என்கிறார் திருவள்ளுவர். அதனை அவர் வாய்மொழியாகவே கேட்போம்.

    dheaivappulavar

    தோன்றின் புகழொடு தோன்றுக; அஃதிலார்
    தோன்றலின் தோன்றாமை நன்று’         . . .   குறள் 236.

    மனிதனாகப் பிறப்பவர் புகழுக்குக் காரண குணத்தோடு பிறக்க வேண்டுமெனில் யார் அதற்குப் பொறுப்பு? பிறந்தவனா பொறுப்பு? பெற்றோர்களே பொறுப்பு. வித்து நன்றாக இருந்தால்தான் முளைக்கும் பயிரும் நன்றாக இருக்கும். வித்து சரியில்லை என்றால் பயிரைக் குறை கூறி என்ன பயன்? அதாவது பெற்றோர்கள் தங்களது வம்சாவளியை கருவில் திருவுடையவர்களாகப் பிறப்பிக்கச் செய்ய வேண்டும். அதற்கு பெற்றோர்கள் வாழ்வு ஆங்கு(இல்லறத்தில்) இருக்கும்படி வாழவேண்டும். பெற்றோர்களின் கருமையங்களில் புகழுக்கு எதிரான கலங்கங்கள் இருப்பின் அவர்களின் வம்சாவளி எப்படி புகழுக்குக்காரண-குணத்தோடு பிறக்க முடியும்?

    ஆகவே திருமணத்திற்கு முன்பே ஆணும், பெண்ணும் ஒழுக்கச்சீலர்களாக திகழ்வதற்கான மனவளக்கலை போன்ற அரிய பயிற்சிகளை மேற்கொண்டு தேர்ச்சி பெற்றிருத்தல் அவசியமாகின்றது.

    அகம் பூரிப்படைகின்றது:

    எதனால் அகம் பூரிப்படைகின்றது? எப்படி வாழ்வது என்று அறியுங்கால், இதுவரை ஒரு பயனும் இல்லாமல் வாழ்ந்து விட்டோமே என எண்ணத் தோன்றுகிறது இப்போது! பிறவி தொடர்ந்து கொண்டே போகின்றதே என்கின்ற வருத்தம் வந்துவிட்டது. இந்நேரத்தில் இருபத்தோறு நூற்றாண்டுகளுக்குப் பிறகு, இப்போதாவது, இந்த நூற்றாண்டிலாவது ‘வாழ்வாங்கு வாழ்வது’ பற்றி அறிந்துகொள்கிறோம் என்பதனை நினைத்து அகம் பூரிப்படைகின்றது. ‘பூரிப்பு’ என்றால் என்ன என்று தெரியும். ‘பூரி’ என்பது வினைச்சொல். பூரிப்பு என்பது பெயர்ச்சொல். ‘பூரி’ என்றால் பெருமித உணர்வு ஏற்படுதல்(BE ELATED). ‘பூரிப்பு’ என்றால் பெருமித உணர்வு; மிகுந்த மகிழ்ச்சி(ELATED FEELING; EXULTATION) என்று பொருள்.

    பல்லாயிரம் பிறவிகளாக எப்படியாவது வாழ்வது என்கின்ற நிலை ஏன் ஏற்பட்டது? அதற்கானக் காரணம் இப்போது புரிகின்றது. என்ன புரிதல்?

    அன்று வேதாத்திரி வாழ்வியல் அகராதி இல்லை:

    எவ்வாறு வாழவேண்டும் என்பதனை தெரிந்து கொள்ள வேதாத்திரிய வாழ்வியல் அகராதி 1911 வரை உருவாகவில்லை. ஆகவே இதுவரை ஆன்மா பல்லாயிரம் பிறவிகளை வீணாக்கிவிட்டது என்று புரிய ஆரம்பித்து விட்டது.

    இருப்பினும், பல்லாயிரம் பிறவிகள் வீணாகிப்போனாலும், இப்போதாவது, வாழ்வாங்கு வாழ்வது பற்றி தெரிந்து கொள்ள வேதாத்திரிய வாழ்வியல் அகராதி உருவாகியுள்ளதால், அறிவு சிந்திக்க ஆரம்பித்துள்ளது. வாழ்வாங்கு வாழ்ந்து பிறவியின் பயனை இப்பிறவியிலாவது அடைவோம் எனத் தீர்மானிக்கின்றது. ஆனால் எவ்வாறு ‘வாழ்வாங்கு வாழ்வது’ என்பது ஆறாம் அறிவிற்குத் தெரியவில்லை.

    வாழ்வாங்கு வாழ்வதனைத் தெரிவிக்கின்றது வேதாத்திரிய அகராதி:

    இதுவரை ‘வாழ்வாங்கு வாழ்வது’ பற்றித் தெரியாமல் இருந்ததை இப்போது தெரிந்து கொள்வதற்கு, எப்படி மொழியில் தெரியாத சொற்களுக்கு பொருள் தெரிந்து கொண்டு பயன் பெறுவதற்கு அகராதி இருகின்றதோ அதுபோன்று, வாழ்வாங்கு வாழ்தலுக்கானப் பொருளைத் தெரிந்து கொண்டு மனித சமுதாயம் பயன் பெறுவதற்கு வேதாத்திரியம் அகராதியாகத் திகழ்கின்றது. எனவே வேதாத்திரியம் ஓர் அகராதி என்று கூறி அகம் மகிழ்கிறோம். வாழ்வாங்கு வாழ்வதற்கு என்னவெல்லாம் திருவேதாத்திரியம் ஆறாம் அறிவிற்குத் தெரிய வைத்துள்ளது என்கின்ற கோணத்தில் இன்றைய சிந்தனை மேற்கொள்ளப்படுகின்றது.

    அகராதி என்பது என்ன, அதன் பயன் என்ன என்று அறிவோம். அதனை நினைவில் கொண்டே, திருவேதாத்திரியம் ஆறாம் அறிவிற்கு என்னவெல்லாம் தெரிய வைக்கின்றது என்பதனை ஆராய்கிறோம். முடிவில் வேதாத்திரியம் ஓர் அகராதி என்பது சாலப் பொருந்துகின்றது என்று உறுதியாக ஒப்புக்கொள்ள இருக்கிறோம். எதற்கெல்லாம் வேதாத்திரியம் அகராதியாகத் திகழ்கின்றது என்பதனையும் முடிவு செய்ய இருக்கிறோம். இஃதெல்லாம் எதற்காக? நம் சுயநலத்திற்காக! இங்கு சுய நலம் என்பதால் தவறில்லை. எப்படி?

    பண்பேற்றம் பெறுவதில் சுயநலமில்லை:

    ஒருவர் பண்பேற்றம் பெறுவதில் சுயநலம் மட்டும் இல்லை. அதில் பிறர் நலமும் இருக்கின்றது.  எனவே ஒருவரின் பண்பேற்ற-சுயநலத்தின் பயன், சமுதாயத்திற்கும் அல்லவா போய்ச் சேர்கின்றது! ஒரு மனிதனின் பண்பேற்றம் அவன் பயன்பெறுவதோடு மட்டும் நின்றுவிடுவதில்லை. ஒருவரின் பண்பேற்றம் சமுதாயத்திற்கு துன்பம் அளிக்காமல், நன்மையே செய்து கொண்டிருக்கும் கடமையையும் வளர்க்கின்றதல்லவா? இரண்டொழுக்கப் பண்பாடு அல்லவா வளர்கின்றது! ஒருவரின் பண்பேற்றம் வான்காந்தக் களத்தை அல்லவா தூய்மை செய்கின்றது! இப்படியெல்லாம் நினைந்து பண்பேற்றம் பெறுவதற்கு இயல்பூக்கத்தை பயன்படுத்திக் கொள்கிறோம்.

    அகராதியின் வரையறைக்கேற்ப வேதாத்திரியம் பொருந்துதல்:

    இப்போது அகராதி என்பது என்ன என்று நினைவில் கொள்வதற்கு எளிதாக, ஒரு சில வரிகளில் அதனை வரையறை(Define) செய்து கொள்வோம். அகராதியின் வரையறைக்கேற்ப(Definition) வேதாத்திரியம் ஓர் அகராதி என்பது எவ்வாறு பொருந்தி வருகின்றது என அறிந்துகொள்வோம்.

    அகராதி என்பது ஒரு மொழியில் நமக்குத் தெரியாமல் உள்ள புதிய புதிய சொற்களுக்குப் பொருளும் அச்சொற்களுக்கான இலக்கணமும், அவற்றை எவ்வாறு உபயோகிப்பது பற்றியும் தெரிந்து கொள்வதன் மூலமாக அம்மொழியில் வளம் பெற்று, அம்மொழியில் ஆளுமை பெறுவதற்கு பயன் படும் ஒரு நூல். சுருக்கமாக அறியாமை நீங்கி, அறிவு வளம் பெற்று அறிவை உடைமையாக்கிக் கொள்ள உதவுகின்ற ஒர் அரிய நூல் அகராதி.

    அகராதியின் இந்த வரையறை வேதாத்திரியத்திற்கு பொருந்தி வருமானால் ‘வேதாத்திரியம் ஓர் அகராதி’ என்பது சரியாக இருக்கும் அல்லவா? மொழியின் மீது ஆளுமை பெறும் கலைக்கு அகராதி உதவுவதுபோல், மனித அறிவு, மனம் போன போக்கினில் போகாமல், புலன்களின் மீது ஆளுமை புரிந்து அறிவு ஆட்சி செய்யும் கலையை கைவல்யம் செய்துகொள்வதற்கு (அறிவாட்சித்தரம் உயர்வதற்கு) வேதாத்திரியம் உதவுவதால் வேதாத்திரியத்தை அகராதி(வாழ்வியல்) என்கிறோம்.

    அகராதியை வரையறை செய்து கொண்டோம். அந்த வரையறையை வைத்து வேதாத்திரியம் எவ்வாறு அகராதி வரையறையில் பொருந்தி வருகின்றது என மேலும் அறிந்து கொள்வோம்.

    வேதாத்திரியம் என்பது என்ன?

    வேதாத்திரி மகரிஷி அவர்கள் வாயிலாக இயற்கை/இறை ஏற்படுத்திய எல்லா இயல்களையும் உள்ளடக்கிய (all Sciences needed for successful and peaceful living) வாழ்வியல் முறையே வேதாத்திரியமாகும். ஆன்மா உடலெடுக்கின்றது. ஒரு நாள் உடலை உதிர்த்துவிடுகின்றது. இதற்கிடையில் நடப்பதுதான் வாழ்க்கை. துன்பமில்லாமல் வாழவேண்டும். அதற்கான வழிமுறைகளையும், அதே நேரத்தில் எல்லா உயிரினங்களையும் விட மனிதஇனம் சிறப்புடையதால் பெரு வாழ்வு வாழவேண்டும். அதற்கு வழிகாட்டுதல் வேண்டும். அந்த வழியைத் தெரிந்து கொள்வதற்கு உதவுவதுதான் வேதாத்திரிய அகராதி. எப்படி?

    ஒரு மொழியில், தெரியாத புதிய வார்த்தைகளுக்கு பொருள் அறிந்து கொண்டு வார்த்தைகளைப் பயன்படுத்துவதற்கு அகராதி உதவுவதுபோல், இதுவரை தெரியாதிருக்கின்ற, நன் முறையில் வாழ்வதற்கான வழிமுறைகளைத் தெரிந்து கொண்டு,

    • வாழ்வு ஆங்கு (இல்லறத்தில்) நடைபெறும் வண்ணம்,
    • திருவள்ளுவர் எண்ணியதுபோல் வாழ்வாங்கு வாழ்வதற்கு உதவுகின்றது  இருபதாம் நூற்றாண்டின் திருவள்ளுவரின் சீடரான வேதாத்திரி மகரிஷி அவர்கள் இயற்றியுள்ள வாழ்வியல் அகராதி.

    இப்போது வேதாத்திரிய வாழ்வியல் அகராதியில் என்னென்ன அறிந்து கொள்ளமுடிகின்றது என்பதனை தெரிந்துகொள்ள மாதிரிக்காக(sample) சுருக்கமாக சிறு அளவிலே ஒரு பட்டியல் வரைவோம். அதற்கு முன்னர் ஒன்றை நினைவுபடுத்திக் கொள்வோம்.

    அறிய வேண்டியதெல்லாம் இருக்கின்றது திருவேதாத்திரியத்தில்:

    அறிய வேண்டியவை எல்லாம் இருப்பதால் திருவேதாத்திரியத்தை ஏற்கனவே சத்சங்கத்தில் ‘வேதாத்திரியம் ஒரு பாரிஜாத மலர்’  (click here) எனப் போற்றியிருக்கிறோம். மனவளக்கலைஞரல்லாத யாராவது ஒருவர் “நீங்கள் வேதாத்திரிய தாசனாக உள்ளீர்களே, அப்படி என்னதான் உள்ளது வேதாத்திரியத்தில்?” என்று நம்மை வினவினால் என்ன கூறுவோம்? வேதாத்திரியத்தில் என்னென்ன உள்ளன என பட்டியலிட்டுக் கூறுவதற்கு பதிலாக, “கேளுங்கள்! சொல்லப்படும்” என்போம். உங்கள் அறிவு எதனை அறிந்துகொள்ள ஆவலாக இருக்கின்றதோ அதனைக் கேளுங்கள். அது வேதாத்திரியத்தில் இருக்கின்றது எனக் கூறுகிறேன்” என்போம். ஏனெனில் அவர்கள் ஒருவர் அறிய வேண்டியது/விரும்புவதெல்லாம் இருக்கின்றது திருவேதாத்திரியத்தில். திருவேதாத்திரியத்தில் அறியவேண்டியவைகள் ஏராளம்! ஏராளம்!! எவ்வாறு அப்படிக் கூறமுடிகின்றது? எல்லையில்லாததைக்(Infinite) காண்பித்துவிட்டது; உணர்த்திக்கொண்டே இருக்கின்றது திருவேதாத்திரியம். எல்லையில்லாதனை உணர்த்துகின்ற திருவேதாத்திரியத்தில் உள்ளதனை பட்டியலிட்டு கூறமுடியுமா? பட்டியலில்தான் அடங்குமா திருவேதாத்திரியக் கண்டுபிடிப்புகள்? எனவேதான் நாம் அவ்வாறு கூறவேண்டியுள்ளது. சிந்தனை வளம் பெறுவதற்கு என்ன வளம் இல்லை இந்த திருவேதாத்திரியத்தில்? ஒழுங்காய் பாடுபட்டால் வாழ்வாங்கு வாழலாம். முயற்சியின் அளவே ஞானம் என்கிறார் நம் குருநாதர். அதனை அவரே மொழிய நாம் அதனைக் கேட்டு இன்புறுவோம்.

    முயற்சியின் அளவே ஞான விளைவு(1955)

    வித்து, நிலம், உரம்,  தண்ணீர் காவற்கேற்ப

            விளைவுதரும்; அதுபோல உனக்கு ஆசான்
        அத்துவித தத்துவ வித்தறிவி லிட்டால்
            அதற்கொழுக்கம் என்றஉரம், அறிவை ஒன்றும்
       நித்த தவம், ஆராய்ச்சி என்ற தண்ணீர்
            நீ சலனமுற்று அறு குணங்களாஆகா
       வித்தை எனும் காவல், இவையனைத்தும் வேண்டும்.
          விளைவாக நீயடையும் கனியே ஞானம்.
                                                                                 . . . ஞா.க. 1483.

    குறிப்பு: காவற்கேற்ப, அத்துவித தத்துவ, வித்தறிவி லிட்டால், வித்தைஎனும் காவல்ஆகிய அருஞ்சொற்களைக் கவனிக்கவும் அன்பர்களே!

    ஒருவர் வாழ்வதைப் பொருத்து வையகம் பயன் பெறுவது அமையும்:

    இங்கே புத்தர் வாழ்வைப்பற்றிக் கூறுவதனை நினைவிற்கொள்வோம். என்ன கூறுகிறார்? நூறு ஆண்டுகள் வாழ்வதைக் காட்டிலும் ஒரு நாள் வாழ்வது மேலானது என்கிறார். என்ன கூறுகிறார் புத்தர்? எப்படி வாழவேண்டும் என்பதற்கு நிபந்தனை ஏதும் வைத்துள்ளாரா புத்தர்? ஆம்! அந்த நிபந்தனை என்ன? கடினமானதல்ல அந்நிபந்தனை! ஒருவர் அறிவாளியாக வாழவேண்டும் என்கிறார் புத்தர். அவ்வளவுதான். ஒருவர் நூறு ஆண்டுகள்கூட வாழலாம். நூறு ஆண்டுகள் வாழ்வதால் மட்டுமே அவர்தான் என்ன பயன் பெற்றிருக்கப்போகிறார்?! இவ்வையகம் தான் என்ன பயன் பெற்றுவிடமுடியும்? ஆகவே ஒருவர் எவ்வாறு வாழ்கின்றார் என்பதனை அறிய ஆவல் கொள்கின்றது இவ்வையகம். அவர் வாழ்வதைப் பொருத்து இவ்வையகம் பயன் பெறும்.

    இருபத்தாறு நூற்றாண்களுக்குப் பின்னர் புத்தர் எண்ணியவாறு வாழ்ந்த ஆன்மா:

    அறியாமையில், அளவு மீறியும், முறை மாறியும் புலன்வழி வாழ்க்கை மட்டுமே நூறு ஆண்டுகள் வாழ்வதால் பயன் அடைவது யார்? புலன் மயக்கத்தில் மயங்கிய அறிவு ஐம்புலன்கள் தான் (தான்-நான்) பயன் அடைகின்றன என ஒருவேளை சொல்லலாம். இங்கே ஆழ்ந்து சிந்திக்கலாமே வேதாத்திரிய இன்பதுன்ப அகராதியின் துணையுடன். அறிவு புலன் உணர்விற்கு அடிமையாகி புலன்கள் மறைமுகமாக விரித்திருக்கும் வலையில்(trap) சிக்கிக் கொண்டு தவிப்பதுதான் எஞ்சுகின்றது என்பதனை அறியமுடியும்.

    உதாரணத்திற்கு நம் குருதேவர் வேதாத்திரி மகரிஷி அவர்களையே எடுத்துக் கொள்ளலாம். புத்தருக்குப் பின்னர் அவர்(புத்தர்) விரும்பியபடி, வாழையடி வாழையாக வருகின்ற திருக்கூட்ட மரபினில் அவதரித்த ஆன்மாக்கள் பலர். இருபதாம் நூற்றாண்டில் உடலெடுத்த ஆன்மாக்களில் நமக்குத் தெரிந்த அளவில்,

    உலகம் உள்ளவரை நினைவு கொள்ளக் கூடிய வகையில்
    *புத்தரின் ஆதங்கத்தை தீர்ப்பதற்காக 90 ஆண்டுகளுக்கும் மேலாக (96-5=91) அறிவுடன் வாழ்ந்த ஆன்மாவாக,
    உலகமக்களுக்கெல்லாம் ஆன்ம ஞானத்தை எளிமையாக அருளியிருக்கின்ற ஒர் ஆன்மா வாழ்ந்திருக்கின்றது என்றால் அது ‘வேதாத்திரி’ என்கின்ற ஆன்மா. அத்தகைய ஆன்மாவை, நமக்கு குருநாதராக அமைத்துக் கொடுத்தமைக்கு, நமது பெற்றோர்களுக்கும், குருநாதருக்கும், இயற்கைக்கும்/இறைக்கும், நன்றி கூறும் வகையிலே, இப்பிறவியிலேயே பிறவிப்பயனை பெற்றிடுவோம் என்கின்ற உறுதிமொழியினை அளிக்க மனம் விழைகின்றதல்லவா?

    இப்போது, புத்தர், ‘வாழ்க்கை எவ்வாறு இருக்க வேண்டும்’ என்று கூறியதை நேரிடையாகவே அவர் வாய்மொழியாகவே அறிந்துகொள்வோம்.

    amudhamozhi_38

    * “அறியாமையுடன் ஒருவன் நூறு ஆண்டுகள் வாழ்வதைவிட அறிவுடன் ஒரு நாள் வாழும் வாழ்க்கையே மேலானது.” என்கிறார் கௌதம புத்தர்.
    இதற்கான விளக்கத்தை அடுத்த சத்சங்கத்தில் ஆராய்வோம். இத்துடன் இன்றைய சத்சங்கத்தை நிறைவு செய்துகொள்வோம்.  அடுத்த சத்சங்கத்தில், அதாவது (23-03-2022) சிந்தனையைத் தொடர்வோம். வாழ்க வளமுடன்! இவ்வையகம் வாழட்டும்!!

     

    வாழ்க அறிவுச் செல்வம்!          வளர்க அறிவுச் செல்வம்!!


  • வேதாத்திரியார் – ஓர் அகராதி-2/? (FFC-308)

    வாழ்க மனித அறிவு                      வளர்க மனித அறிவு

    lotus

    வேதாத்திரியார் – ஓர் அகராதி -2/5

                                FFC-308           

    18-03-2022-வெள்ளி

    உ.ச.ஆ: 18-03-37

    வாழ்க வளமுடன்!

          சென்ற அறிவிற்கு விருந்தில்,

             அகராதி என்றால் என்ன,

     வேதாத்திரியார் ஓர் அகராதி என்பதில்                   மனவளக்கலைஞர்களுக்கு ஏற்படும் ஆனந்தம்,

       ஏன் சான்றோர்களைத் துணை கொள்ள வேண்டும்,

     சான்றோரின் துணை பண்பேற்றத்திற்கு அவசியமாக உள்ளது,

     அவ்வாறு அவசியமாக  இருப்பதிலும்  இயல்பூக்கம் செயல்படுவது,

        சாலச்சிறந்த வழிபாடு எது என்பனவற்றை எல்லாம்  

         அறிவை விரித்து சிந்தனை ஆற்றி,

    திருவேதாத்திரியத்தால் ஆறாமறிவின் திறனையும் திறமையும் வளர்த்துக் கொண்டு,

      வாழ்வாங்கு வாழவேண்டும் என்கின்ற சங்கல்பத்திற்கு  உறுதியும் அளித்துள்ளோம்.

         இன்று அதன் தொடர்ச்சியாக வாழவேண்டிய முறை என்ன என்பது பற்றி சிந்திக்க ஆரம்பித்து மேலும் என்னவெல்லாம் அறியவேண்டும் என இயற்கையின்/இறையின் சித்தமோ அவற்றை எல்லாம் சிந்திப்போம்.

       வாழ வேண்டிய முறை என்பது என்ன? 

        மீண்டும் இப்போது இல்லறவியலில் இல்வாழ்க்கை எனும் அதிகாரத்தில் உள்ள கடைசிக் குறளை நினைவு படுத்திக்கொள்வோம்.

    வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையுந்

    தெய்வத்துள் வைக்கப் படும்.        . . . குறள் எண்:50

     பொருள்:

           இவ்வுலகத்திலே வாழவேண்டிய முறைப்படி வாழ்பவன் விண்ணிலுள்ள தேவருள் ஒருவனாக மதிக்கப்படுவான் என்கிறார் திருவள்ளுவர்.

        ‘வாழவேண்டிய முறை’ப்படி என்றால் என்ன என்று ஐயம் எழலாம்.  அறநெறிப்படி வாழ்தல் என்பதே வாழ வேண்டிய முறை ஆகும். அடுத்த ஐயம்,‘அறநெறி என்றால் என்ன’,என்பது.  மனிதஇனப் பரிணாமத்தை ஆராய்ச்சி செய்து வரும்போது, அறம் தோன்றிய முதல் நாளைக் கண்டுபிடித்துள்ளார்  வேதாத்திரி மகரிஷி அவர்கள்.  அந்நிகழ்ச்சியினை அவர் வாய் மொழியாகவே அறிந்துகொள்வோம். 

    gurudevar

         அறத்தின் தோற்றம்(20-12-1959)

    பிறஉயிர் உணர்தலாய் பெற்றிடும் சுகதுக்க அளவினை

        உறவு கொண்டுள்ளத்தால் யூகித்து உணர்ந்திரங்கி     உதவும்

           சிறந்த திருப்பம் அறிவில் சிந்தனையில் முதல் உலகில்     பெற்ற நாள்

     அறம் தோன்றிற்றது மதமாம்; அதை வளர்த்தோர் பெயர்களினால் பல ஆயிற்று.

                           . . . மாக்கோலம்–(21-12-1959-அறத்தின் தோற்றம் என்கின்ற தலைப்பில்)

                                         … ஞா.க. எண் 494-அறமே மதம் என்கின்ற தலைப்பில்

     அறத்தின் மூன்று கண்கள்:

          ++ம் என்கின்ற மூன்று சொற்களைக் கொண்ட அறத்தைக் கண்டுபிடித்த மகரிஷி அவர்கள் அதற்கு மூன்று கண்கள் இருப்பதனையும் கண்டுபிடித்துள்ளார்,  அவையே ஒழுக்கம், கடமை, ஈகை என்கிறார். இரண்டு கண்கள்(physical eyes) ஏற்கனவே மனிதனுக்கு உள்ளதே! புதிதாக  மூன்று கண்கள் தேவையா?  மற்ற உயிரினங்களுக்கும் கூட இரண்டு கண்கள் உள்ளன? புலிக்கு உள்ள இரண்டு கண்கள் மானைப் பார்த்தால் அதனைக் கொன்று உணவாக்கிக் கொள்ள உதவுகின்றது. விலங்கினத்திலிருந்து வந்த ஆறாம் அறிவுடைய மனிதனுக்கு இருக்கின்ற  இரண்டு கண்கள் சிறப்புடையதாக இருக்க வேண்டுமல்லவா?

         சாதாரண  இரண்டு கண்கள்  புலன்களாக மட்டுமே செயல்படுகின்றன. நல்லவற்றையும் பார்க்கும். தீயவற்றையும் பார்க்கும்.  எனவே ஆறாம் அறிவு மேலோங்கிய நிலையில் அதே கண்கள் புலன் உணர் கருவியாக செயல்படுவதோடு மட்டுமல்லாமல்  பார்க்கின்ற பொருட்கள் புனிதமாகக்கூடிய, மக்களெல்லாம் தூய்மை அடையக்கூடிய உள்ளொளியை பாய்ச்சுவதாகவும் அமைதல் வேண்டும்(துரிய தவத்தில் ஞானாசிரியரின்(வேதாத்திரி மகரிஷியின்) அருளப்பட்டுள்ள ஆசியினை எப்போதும் நினைவில் கொள்ளுதல் வேண்டும்).

        புலன் உணர் கருவியான கண்கள் வழியாக, உள்ளொளியைப் பாய்ச்சுவதற்கு  தேவைப்படுவதுதான் அறமென்னும் மூன்று அகக்கண்கள்.   சாதாரண கண்கள்(ordinary physical eyes), கண்களுக்குத் தெரிவது போல் கண்களுக்குத் தெரியாத கண்கள்(not physical eyes).  ஆனால் மனிதனின் செயலில் புலப்படுவது  அறக்கண்கள். மறைபொருளான மெய்(இறை), உயிர், மனம் ஆகிய மூன்று மறைபொருட்களை அறிந்து கொள்ள அறக்கண்களாகிய ஒழுக்கம், கடமை, ஈகை ஆகிய மூன்றும் திறக்க வேண்டும்.  சிற்பி சிலையை வடிவமைக்கும்போது கண்களை கடைசியில் வடிவமைப்பார்.  அதுவரை கல்லாகவே தோன்றிய அந்த சிற்பம் கண்கள் திறக்கப்பட்ட பிறகு உயிரோட்டம் பெற்றதாக மாறும்.  அதே போன்று ஒழுக்கம், கடமை, ஈகை ஆகிய மூன்று அறக்கண்கள் வாழ்வில் திறந்த பிறகுதான் மனித-உயிர் உயிரோட்டம் பெறுகின்றது. 

     வாழ்வாங்கு என்றால் என்ன?

          ‘வாழ்வாங்கு’ என்று திருவள்ளுவர் கூறியதை, பரிமேலழகர் வாழ்வு, ஆங்கு(வாழ்வு+ஆங்கு) என்று பிரித்து அதற்கு ‘இல்லறத்தோடுகூட’ என்று பொருள் கொள்கிறார்.  அதாவது ‘வாழ்வாங்கு வாழ்பவன்’ என்பதற்கு இல்லறத்தில் வாழ்பவன் என்கிறார். மக்களெல்லாம் இல்லறத்தில்தான் வாழ்கின்றனர். எனினும்  இல்லறத்தில் வாழ்கின்ற அனைவரையும் குறிப்பிடவில்லை பரிமேலழகர். ‘ஆங்கு’ என்பது ‘அங்கே=இல்லறத்தில்’ என்று பொருளாகின்றது.  ஆங்கு (இல்லறத்தில்), வாழ்பவர்களை  மட்டுமே இல்லறத்தில் வாழ்வாங்கு வாழ்பவன் என்று பொருள் கொள்கிறார். அப்படியானால் மற்றவர்கள் இல்லறத்தில் வாழ்ந்தும் வாழாதவர்கள் என்று பொருளாகின்றது. எப்படி மெய்ஞ்ஞானத்தில் பொருள், மெய்ப்பொருள் என இரண்டாகப்பிரித்து பேசப்படுகின்றதோ, அதுபோல் இல்லறத்தில் இருப்பவர்கள்,  வாழ்பவர்கள்,  வாழாதவர்கள் என இரண்டாகப் பிரிக்கப்படுகின்றனர்.

     ஆங்கு(அங்கு) வாழ்பவர்கள் யார்?

         அப்படியானால் இல்லறத்தில் வாழ்பவர்கள் என்பவர்கள் யார் யார்?  ‘வாழ்தல்’ என்கின்ற இலக்கணத்திற்கேற்ப(இல்லற தருமத்திற்கேற்ப) வாழ்பவர்களைத்தான் வாழ்பவர்கள் எனக் கருதுகிறார் பரிமேலழகர்.  அப்படி வாழும்போதுதான், ஆங்கே (இல்லறத்தில்) வாழ்வு நடைபெறுவதாகக் கருதுகிறார். ஐந்தாவது அதிகாரத்தில் உள்ள இக்குறளுக்கு பொருள் கூறுகின்றபோது இருபத்து நான்காவதானபுகழ்’ என்னும் அதிகாரத்தில் கடைசியில் உள்ள  குறளை நினைவு படுத்துகிறார் பரிமேலழகர். அக்குறள் என்ன என்பதனையும் அறிந்து கொள்வோம்.

    dheaivappulavar

                புகழ்(அதிகாரம் 24)

    வசையொழிய வாழ்வாரே வாழ்வா ரிசையொழிய

     வாழ்வாரே வாழா தவர்                 . . . . குறள் எண் 240

     கருத்துரை:  தமக்குக் கெட்ட பெயர் உண்டாகாமல் வாழ்பவரே வாழ்பவர்; புகழ் உண்டாகாமல் வாழ்கின்றவர் இறந்தவர் ஆவார். 

    ஆகவே அறக்கண்கள் திறந்து வாழும் வாழ்க்கையிலேதான்   ‘மனித-உயிர் உயிரோட்டம் பெறுகின்றது’ என வேதாத்திரிய அகராதியினை நம்முள்ளே வைத்துள்ள மனவளக்கலைஞைர்களாகிய நாம் கூறுகின்றோம்.

     தன்னை அறியாத அறியாமை:

           மெய், உயிர், மனம் ஆகிய மூன்றையும் கருத்தியலாக தெரிந்து கொள்வதோடு, செய்முறைப்படுத்துவதுதான் இறை உணர்வு.  அந்த இறைஉணர்வு, அறவுணர்வில்லாமல் சாத்தியமாகாது. இறைஉணர்வும் அறஉணர்வும் ஒன்றை ஒன்று பின்னிப் பிணைந்துள்ளது.  எவ்வாறு ரயில் வண்டி தடம்பிறழாமல் ஓடுவதற்கு இரண்டு தண்டவாளங்கள் அவசியமாகின்றதோ அதுபோல் வாழ்வாங்கு வாழ இறைஉணர்வும், அறஉணர்வும் அவசியமாகின்றன.    எப்படி எல்லா பாவங்களுக்கும் தன்முனைப்பு ஆணிவேராக உள்ளதோ அதுபோல் எல்லா அறியாமைகளுக்கும்  ‘தன்னை அறியாத அறியாமை’ முதன்மையானதாக உள்ளது(Out of all ignorances ‘not knowing the self’ is the prime ignorance and it is the root cause for all ignorances resulting to all sins). மனிதப்பிறவியின் நோக்கம் அறியாதஅறியாமை அதாவது தன்னை அறியாத அறியாமை திருவேதாத்திரிய வாழ்வியல்-அகராதியால் நீக்கப்படுகின்றது.

     நல்ல குடும்பம் ஒரு பல்கலைக்கழகம்:

         வாழ வேண்டிய முறையைப் பற்றிப் பார்த்தோம்.  குடும்பத்திலும், சமுதாயத்திலும் நன்முறையில் நடந்து கொள்வதே வாழவேண்டிய முறையாகும். அதனால்தான் ‘நல்ல குடும்பம் ஒரு பல்கலைக்கழகம்’ என்கின்றனர் ஆன்றோர் பெருமக்கள்.  குடும்பம் என்று சொல்லாமல் ‘நல்ல’ என்கின்ற பெயரெச்சத்தைச்(adjective)  சேர்த்து நல்ல குடும்பம் என்கின்றனர்.  எதார்த்த நிலையைக் கருத்தில் கொண்டு குடும்பம் என்று சொல்லாமல் குடும்பத்திற்கு பெயரெச்சத்தைச் சேர்த்து ‘நல்ல குடும்பம்’ என்று கூறுகின்றனர்.          

       குடும்பத்தில் கணவன் மனைவி, தாத்தா, பாட்டி, மகன், மகள் ஆகியவர் இருப்பர். ஆறுபேர் இருக்கின்ற குடும்பம்  பல்கலைக்கழகமா? எப்படி? பல்கலைக்கழகம் என்பது பட்டப்படிப்பு வகுப்புகள் நடத்தி தேர்வு நடத்துவது மற்றும்  ஆராய்ச்சிகள்  நடத்தும் ஓர் உயர்கல்வி நிறுவனம். அவ்வாறிருக்க  குடும்பம் எதற்காக  பல்கலைக்கழகத்தோடு ஒப்பிட்டு உயர்த்திச் சொல்லப்படுகின்றது?  பல்கலைக்கழகத்திற்கான பொருளில் பார்த்தால் குடும்பத்தையும் பல்கலைக்கழகம் என்பது கூட சரியே!  அதாவது குடும்பம் என்பது என்ன? ஆணும் பெண்ணும் சேர்ந்து இல்லறம் நடத்துகின்ற அமைப்பே குடும்பம் ஆகின்றது. சமுதாயத்தின் ஒரு சிறிய அலகே(unit) குடும்பம்.    ஆணும்,பெண்ணும் குடும்பத்தலைவன், குடும்பத்தலைவி ஆவதற்கு முன்பு ஒருவேளை,  வாழ்வியல் பாடத்தைக்  கற்காதிருந்தால், குடும்பமான பிறகாவது இருவரும்  பொறுப்புடன் குடும்பத்தை வாழ்வியல் விஞ்ஞானத்தை கற்கும் களமாக பயன்படுத்திக் கொண்டும் (to use family as a field of  learning Science of living), அதே நேரத்தில், அவர்களது  குழந்தைகளுக்கும் கற்றுத்தரும் நிறுவனமாக செயல்பட வேண்டியிருப்பதால்  அக்குடும்பம் ஒரு பல்கலைக்கழகம் எனப்படுகின்றது.  

    வாழும் நிலை அறிந்து தொண்டாற்றி இன்பம் காண்போம்!

        ‘மக்கள் எல்லாம் வாழ்வாங்கு வாழவேண்டும்’ என்று  மகரிஷி அவர்களின் மானசீகக் குருவான திருவள்ளுவர் விரும்பியது,  திருவள்ளுவரின் இருபதாம் நூற்றாண்டின் சீடரான மகரிஷியிடம் நிறைவேறியுள்ளது என்றால் அது மிகையாகாது. மேலும் மகரிஷி அவர்கள் தான் வாழ்வாங்கு வாழ்ந்ததோடு தன்னுடைய மாணவர்களையும் மனவளக்கலையின் வாயிலாக வாழ்வாங்கு வாழ்வதற்கு வழிகாட்டும் அகராதியாகத் திகழ்கிறார் என்பதில் மனவளக்கலைஞர்களுக்கு அலாதியான ஆனந்தம் ஏற்படுகின்றது.   மகரிஷி அவர்கள் எவ்வாறு வாழ்வாங்கு வாழ்வது என்பதனை இறைவணக்கப்பாடலில் கூறியுள்ளதனை இங்கே நினைவு கூர்வோம்.

    இறைவணக்கம்

    ஆதியெனும் பரம்பொருள் மெய் எழுச்சிபெற்று,

      அணுவென்ற  உயிராகி, அணுக்கள் கூடி,

    மோதியிணைந்து இயங்குகின்ற நிலைமைக்கு ஏற்ப,

      மூலகங்கள் பலவாகி, அவை இணைந்து,

    பேதித்த அண்ட கோடிகளாய் மற்றும்

      பிறப்பு இறப்பிடை உணர்தல் இயக்கமாகி,

    நீதிநெறி உணர் மாந்தராகி,  வாழும்

      நிலையுணர்ந்து தொண்டாற்றி இன்பம் காண்போம்.

                      . . . .. வேதாத்திரி மகரிஷி.  –  ஞா.க. கவி எண் 1

     திருமணப்பந்தம் எதற்காக?

             ஆணும் பெண்ணும் உயிரினப் பரிணாம அபிவிருத்திக்காக இயற்கையிலேயே அமைந்த  பாலுணர்வுத் தேவைக்காக மட்டுமே திருமண பந்தத்தில் இயற்கையால்/இறையால் இணைக்கப் படுவதில்லை.

          ‘‘*வினைப்பயனே தேகம் கண்டாய்’ என்கிற பட்டினத்து சுவாமிகள் கண்டுபிடித்த பிறப்பு-விதியின்படி(Law of birth),

           முன் பிறவியில் ஆற்றிய வினைப்பயனை அனுபவிக்கவே  ஆன்மாவிற்கு பிறவியினை  ஏற்படுத்தி,  

                    அவ்வாறு பிறவி எடுத்துள்ள ஆணும். பெண்ணும் திருமணபந்தத்தால் இணைக்கப்பட்டு,

                    தான் கொண்டு வந்த சஞ்சித கர்மா மூட்டையைக் காலி செய்தும், நல்ல பிராரப்த, ஆகாம்ய

                    கர்மாக்களை நிரப்பியும்,  

                   இப்பிறவியிலேயே பிறவியின் பயனை அடைந்தும்,

                  ஒரு வேளை பழக்கப்பதிவுகள் விளக்கப்பதிவுகளை வெற்றி கொள்வதாக இருக்கும்

                  பட்சத்தில்,  பிறப்பு-விதிக்கு ஏற்ப பிறப்பு ஏற்படுவதால்,

               அடுத்த பிறவியிலாவது பிறவிப்பயனை எய்துவதற்கேற்ப இப்பிறவியின் முடிவில் தன்னை                   கருவில் திருஉடையவராக்கிக் கொள்ளும்,

            அதேநேரத்திலும் தனது  வம்சாவளிக்கு நல்வினைப்பதிவுகளை நிரப்பிய சஞ்சித மூட்டையைக் கொடுத்தனுப்பி, கருவிலேயே  திருவுடைய  வம்சாவளியினை உருவாக்கவுமே திருமண பந்தம் ஏற்படுத்தப்படுகின்றது இயற்கையால்/இறையால்.  இந்த அறிவினை/தெளிவினைத் தெரிய வைப்பது திருவேதாத்திரிய வாழ்வியல் அகராதியே!

           மற்ற உயிரினத்திற்கு கடைசி வரை குடும்ப அமைப்பு அவசியமில்லாதபோது,  மனிதஉயிரினத்திற்கு மட்டும் இயற்கையால்/இறையால் குடும்ப அமைப்பு ஏற்படுத்திய நோக்கம் நிறைவேறுவதற்காக,   அயரா விழிப்புணர்வு(constamt awareness), இணக்கம், சகிப்பு, தியாகம், (Adjustment, tolerance, sacrifice), கற்பனையான எதிர்பார்ப்பில் ஏமாற்றத்தை  தவிர்த்தல் ஆகியவற்றையெல்லாம்  கற்பதற்கான களமே  குடும்பம்.  எனவேதான் குடும்ப அமைப்பின் நோக்கத்திற்கேற்ப அமைகின்ற குடும்பத்தை  நல்லதோர் குடும்பம் பல்கலைக்கழகம் எனப்படுகின்றது.

          விலங்கினத்திற்கு  குடும்பம் கிடையாது. ஆனால் விலங்கினத்திலிருந்து தன்மாற்றம் அடைந்து வந்த மனிதஇனத்திற்கு குடும்பம் அவசியமாக இருப்பதால் அக்குடும்பம் குடும்பக்கலையை பயின்ற/பயில்கின்ற பல்கலைக்கழகமாக இருக்கவேண்டும்  என்பது   ஆன்றோர்களின் விருப்பமும், எண்ணமும் ஆகும். 

     இருபதாம் நூற்றாண்டில் விளக்கப்பட்ட பிறப்பின் விதி:

        வினைப்போகமே தேகம் கண்டாய்’ என்று பிறப்பின் விதி அன்று பட்டினத்து சுவாமிகளால் சுட்டிக்காட்டப்பட்டது. அது இருபதாம் நூற்றாண்டில், இயற்கையால்/இறையால்  பட்டினத்து சுவாமிகளின் இளவலான வேதாத்திரி மகரிஷி அவர்களின் வாயிலாக   மேலும் பிறப்பின்-விதி எளிதாக விளக்கம் ஆக்கப்பட்டுள்ளது. அது என்ன என்று அறிந்துகொள்வோம்.  பேரின்ப ஊற்று  என்கின்ற தலைப்பில்  அருளப்பட்டுள்ள கவியின் கடைசி நான்கு வரிகளை மட்டும் நினைவுகூர்வோம்.

    Analysis_of_Thought

     பேரின்ப ஊற்று(07-03-1986)

    வினைப்பதிவாம் சுமையை விடுத்துத் தூய்மை பெறவே,

    நினைவாய் உடலெடுத்தேன், நிலம் மீது விழுந்தபின்னே,

    எனை மறந்தேன்! என்றன்வினை மறந்தேன்! இறைவா!

    உனை மறந்தேன்! ஆனால் நீ, உள்நிறைந்து எனை மீட்டு,

     இன்ப ஊற்றாய்  நிறைந்த இறைவா! –  எங்கும்

    இன்ப ஊற்றாய், அறிவாய், இயங்கும் இறைவா!

         . . . . வேதாத்திரி மகரிஷி.

     இந்த புரிதலெல்லாம் எங்கிருந்து கிடைக்கின்றது?

         இந்த புரிதல் எல்லாம் எவ்வாறு மனவளக்கலைஞர்களுக்கு ஏற்படுகின்றது?  ஆன்மீக வாழ்க்கை மற்றும் உலகியல் வாழ்க்கை என பிரிந்து இருந்த  நிலையினை, இணைத்த வேதாத்திரிய மனிதவாழ்க்கை எனும் அகராதியினை தங்களுக்குள்ளே இறக்கியிருப்பதால்தான் அனைத்து அருளாளர்களின் அனுபவங்களை புரிந்து கொண்டு பயன்பெற முடிகின்றது.    வாழையடி வாழையாக வருகின்ற திருக்கூட்ட மரபினில் அவதரிக்கின்ற அனைத்து அருளாளர்களையும் மானசீகமாக குருவாக எற்றுக் கொண்டு ஆசி பெற முடிகின்றது.

        இத்துடன் இன்றைய சிந்தனையை நிறைவு செய்து கொள்வோம்.  மேலும் சிந்திப்போம் 20-03-2022 ஞாயிறு சத்சங்கத்தில் அறிவிற்கு விருந்து நிகழ்ச்சியில்.    மேலும் மேலும் என்னவெல்லாம் அறியவேண்டும் என இயற்கையின்/இறையின் சித்தமோ அவற்றை எல்லாம் சிந்திப்போம்.  நாளை 19-03-2022 சனிக்கிழமை சத்சங்க சிந்திக்க வினாக்கள் நிகழ்ச்சியில் சந்திப்போம்.  வாழ்க வளமுடன்.

    * வினைப்போகமே ஒரு தேகம் கண்டாய்வினை தான்ஒழிந்தால்

    தினைப்போது அளவுநில் லாதுகண்டாய்சிவன் பாதம்நினை

    நினைப்போரை மேவு நினையாரை நீங்கிஇந் நெறியில்நின்றால்

    உனைப்போல் ஒருவர்உண் டோமன மேஎனக்கு உற்றவரே. 

                                                                      . . .  பட்டினத்தார்

    வாழ்க வளமுடன்!                               வாழ்க வையகம்!!

     வாழ்க அறிவுச் செல்வம்          வளர்க அறிவுச் செல்வம்


  • FFc 307-வேதாத்திரியார் – ஓர் அகராதி-1/5

     

     


     

    வாழ்க மனித அறிவு!                           வளர்க மனித அறிவு!!

     

    வேதாத்திரியார் – ஓர் அகராதி-1/?

    FFC-307                                              

                                                                                                                                                                                               17-03-2022 –வியாழன்

     உலக சமய ஆண்டு 17-03-37

    maharishi lighting a new year lamp

     

    வாழ்க வளமுடன்!

         இன்று வேதாத்திரி மகரிஷி அவர்களுக்கு புகழாரம் சூட்டும் முகத்தான் குழுமி உள்ளோம்.  எனவே இன்றைய அறிவிற்கு விருந்தாக எடுத்துக் கொண்ட தலைப்பு ‘வேதாத்திரியார் ஓர் அகராதி’ என்பதாகும்.  இங்கே ஒன்றை கவனிக்க வேண்டும். அன்பர்களே!

    மகரிஷியின் கும்பகோணம் நிகழ்ச்சி:

        பொருள், புகழ், செல்வாக்கு, புலனின்பம் ஆகிய நான்கினில் புகுந்து அழுந்தி மனதைப் புண்ணாக்கிக் கொள்வதில் உள்ள அறிவியலை உணர்த்திய வேதாத்திரி மகரிஷி அவர்களுக்கா  புகழ் தேவை?!  அல்ல. அவர்  வகுத்த  உயர்புகழ் இலக்கணத்திற்கேற்ப அவரே வாழ்ந்தவராயிற்றே! அவரா புகழை எதிர்பார்ப்பார்?  அவர் நம்மிடம் எதிர்பார்ப்பது என்ன? அவருக்கும் நமக்கும் ஏற்பட்ட புனித உறவில் நடந்த  ஒரு நிகழ்ச்சியினை நினைவு கொள்வோம்.  கும்பகோணத்தில் மூன்று நாட்கள் சிறப்புக் கூட்டம் நடத்தினார் மகரிஷி அவர்கள். அப்போது நிறைவு நாளன்று கூறியதை நினைவு கூர்வோம். ஆன்மிகத் துறையில் சீடர்கள் குருவிற்கு காணிக்கைக் கொடுப்பது வழக்கம். ஆனால் அவ்வாறாக மகரிஷி அவர்கள் குருகாணிக்கை ஏதும் வாங்குவதில்லை. அதற்கு பதிலாக அவர் சீடர்களை நோக்கி  “குருகாணிக்கையாக உங்களிடம் உள்ள  அறுகுணங்களை இன்றிலிருந்து என்னிடம் கொடுத்துவிடுங்கள்” என்று வெளிப்படையாகவே வேண்டுகோள் விடுத்துள்ளார்.    அது இப்போதும் பொருந்தும் அல்லவா?

    இயற்கை/இறை நம்மிடம் எதிர்பார்ப்பது என்ன? 

        மூத்தோர் சொல் வார்த்தை  அமிர்தம் என அவ்வைத்தாய் மொழிந்துள்ளதற்கேற்ப, மகரிஷி அவர்கள் கூறுவதனைக் கேட்டு, ஆராய்ந்த பிறகு திருத்த-மாற்றத்திற்கு(information, confirmation, transformation) முயன்று வெற்றி பெற வேண்டும் என்பதே மகரிஷி அவர்கள் எதிர்பார்ப்பது.  அவர்மட்டுமல்ல. இயற்கையே/இறையே அதைத்தான் எதிர்பார்த்து இருபதாம் நூற்றாண்டில் திருவேதாத்திரியத்தை அருளியுள்ளது.

    வான் காந்தத்தில் பரவவிட குழுமியிருக்கிறோம்:

        வேதாத்திரி மகரிஷி அவர்களுக்கு புகழாரம் சூட்டுகிறோம்  என்று சொல்வதைவிட, வேதாத்திரியத்தின்  அருமை, பெருமை, அரும்பயன்களை உணர்ந்து கொண்டு அனுபவித்து வருவதற்கு மனிதஅறிவு அவரை வணங்கி கூறுகின்ற நன்றி வார்த்தைகளே ‘வேதாத்திரியார் ஓர் அகராதி’ என்பது.அப்படியானால்  நாம் செலுத்தும் புகழாரம்  திருவேதாத்திரியத்திற்கே.  திருவேதாத்திரியத்தின் அருமை, பெருமைகள் சக நண்பர்கள் அனைவருக்கும் மற்றும் இந்த சமுதாயத்தின் 1590 கோடி(790×2=1590) காதுகளுக்கும் சென்றடைய வேண்டும் என்கின்ற அடிப்படை நோக்கத்தில் திருவேதாத்திரியத்திற்கு புகழார எண்ண அலைகளை  வான்காந்தக் களத்தில் பரவவிட  குழுமி இருக்கிறோம். ‘Fraction demands Totality supplies’ என்ற அடிப்படையில் தன்மாற்றம்/பரிணாமம்  நடைபெற்று வருவதால் அதனை நினைவில் கொண்டு உலகம் முழுவதும் திருவேதாத்திரியம் பரவ வேண்டும் என்கின்ற எண்ண அலைகளை வான்காந்தத்தில் பரவ விடுவோம்.  

    ஆனந்தத்தைத் தருகின்றது:

        எது ஆனந்தத்தைத் தருகின்றது?   ‘வேதாத்திரியார் ஓர் அகராதி’ என்று சொல்லக் கேட்பதற்கே மனதிற்கு  ஆனந்தத்தைத் தருகின்றது. எவ்வாறு வேதாத்திரி மகரிஷி அவர்கள் ஓர் அகராதியாகத் திகழ்கின்றார் என்று ஆராய்ந்து அறியும்போது, நாம் அடைந்திருக்கும் மற்றும் இன்னும் அடைய இருக்கும் பயனை எண்ணும்போது ஏற்படும் மகிழ்ச்சிக்கும், பெருமைக்கும் எல்லையே கிடையாது. எப்படி? பயன்கள் அடைகிறோம்; பயன்கள் அடைவதில் மகிழ்ச்சிதானே இருக்க முடியும்?

          என்ன பயன்கள்? ‘மகிழ்ச்சிக்கும், பெருமைக்கும் எல்லையே கிடையாது’ என்று வார்த்தைகளால் மட்டும் சொன்னால் போதாது. எவ்வாறு எல்லையில்லா மகிழ்ச்சிக்கும், பெருமைக்கும் திருவேதாத்திரியம் காரணமாக உள்ளது என்பதனையும் அறிந்துகொள்ள வேண்டும். மகிழ்ச்சி மற்றும் பெருமை ஆகிய   சொற்கள் அனைவருக்கும் தெரிந்ததுதான்.  இருப்பினும் மகிழ்ச்சியும், பெருமையும் என்ன என்பதனை ஆழ்ந்து  சிந்தித்து அறிந்து கொள்வோம்.

    மகிழ்ச்சி என்பது என்ன?

         அனைவரும் அறிந்ததே!  மகிழ்ச்சி என்றால் இன்பம், உவகை, சந்தோஷம் என்று பொருள்.

    இன்பம் எப்போது ஏற்படும்?

         விரும்புகின்ற அல்லது மனதிற்கு நிறைவு தருகின்ற அனுபவத்தினால் மனதிற்கு ஏற்படுகின்ற இதமான உணர்வே இன்பம் என்பதாகும்.

         மேலும் மகிழ்ச்சி என்பது பணிவுடன் நன்றியைத் தெரிவிக்கும் போது கூறுகின்ற சொல் ஆகும்.  உதாரணத்திற்கு ஒரு நிகழ்ச்சியினை எடுத்துக் கொள்வோம்.

    நன்றி தெரிவித்தல்:

         நூல் வெளியீட்டு விழா நடக்கின்றது. ஆசிரியருக்கு நன்றி தெரிவிக்கின்றனர் பதிப்பகத்தார்.அப்போது பதிப்பகத்தார், ‘தங்கள் நூலை வெளியிடுவதில்  நாங்கள் பெரு மகிழ்ச்சி அடைகிறோம்’ என்கிறார்கள். இதற்கு என்ன பொருள்? இங்கே ‘மகிழ்ச்சி’ என்கின்ற சொல், பணிவுடன் நன்றியினை தெரிவிக்கப் பயன்படுகின்றது.

       தான்  எழுதிய  நூலை பதிப்பதற்கு இசைவு தந்தமையால், அந்த சிறந்த நூலை வெளியிடுவதில் தங்களுக்கு ஏற்படவிட இருக்கின்ற  உயர்வு கருதி, பதிப்பகத்தார் தங்களது உளமார்ந்த நன்றியினை  பணிவோடு தெரிவிப்பதற்கு,  ‘பெரும் மகிழ்ச்சி’ அடைகிறோம்’ என்று கூறும்போது மகிழ்ச்சி என்கின்ற சொல் பயன்படுகின்றது.

    நன்றி உணர்வே ஆகும்:

        ஏன் நன்றி உணர்வாகின்றது?  மாதா, பிதா செய்த புண்ணியத்தால், ‘மாதா, பிதா, குரு தெய்வம்’ என்பதற்கேற்ப குருவை காண்பித்துக் கொடுக்கும் நிகழ்வே மறைந்து விட்ட  சூழலில் பிறந்த நாம்  வேதாத்திரி மகரிஷி அவர்களை தரிசித்து அவரை ஆழ்மனதுடன்  குருவாக ஏற்றுக்கொள்ளச் செய்த  இயற்கைக்கும்/இறைக்கும் தெரிவிக்கும் நன்றி உணர்வே ‘வேதாத்திரியார் ஓர் அகராதி’ என்று மகிழ்ச்சியோடு தெரிவிப்பது. அடுத்ததாக பெருமை என்று கூறுவதற்கானக் காரணம் என்ன?

    பெருமை என்றால் என்ன?    

     பெருமை என்பதும்  மன உணர்வினை வெளிப்படுத்துகின்ற சொல்.

    உயர்ந்த நிலையினை அல்லது தகுதியினை அடைய இருக்கும்போதோ

    அல்லது அடைந்தபோதோ,

    அல்லது அதுபோன்று  வெற்றியினை அடைய இருக்கும்போதா

    அல்லது அடைந்தபோதோ,

    மனம் அடையும் இதமான உணர்வினை அனுபவிப்பதோ அல்லது நமக்கு நாமே தெரிவித்துக்கொள்வதோ   பெருமை எனக்கொள்ளப்படுகின்றது.

    அவ்வைத்தாயும் அறிஞர் திருவள்ளுவரும் மொழிவது என்ன?

    அவ்வைத்தாய்

    சான்றோர் இனத்திரு,                    (ஆத்திச்சூடி-44)

    சேரிடம் அறிந்து சேர்,                     (.. ” ….    49)

    செய்வனத்திருந்தச் செய்           ( …  ” …   50)

    நேர்பட ஒழுகு                                        ( …  ” …   72)

    புகழ்ந்தாரைப் போற்றி வாழ்   ( …  ” …  80)

    பெரியாரைத் துணைக்கொள் ( …  ” …  82)

    என மக்களுக்கு அறிவுரைக் கூறுகின்றாள்.

         திருவள்ளுவரோ ‘பெரியாரைத்துணைக்கோடல்’ என்னும் அதிகாரத்தையே ஒதுக்கி பத்துக் குறட்பாக்களை அருளியுள்ளார். இவ்வதிகாரம் அரசனுக்காக அருளியதுபோல் தோன்றினாலும் இது அனைவருக்குமே பொருந்தும்.  எப்படி?  அரசன் நாட்டை ஆள்கின்றவன்.  ஒவ்வொருவருக்கும் குடும்பம் இருக்கின்றது.  வருங்கால வலிமையுள்ள சமுதாயத் தூண்களை(pillars of Society) உருவாக்குகின்ற பொறுப்பில், குடும்பத்தை நல்முறையில் நிர்வாகம் செய்ய கணவன், மனைவி தலைவன், தலைவியாக இருக்கின்றனர்.  எனவே அரசனுக்கு கூறும் அறிவுரை எல்லோருக்குமே அந்தந்த நிலையில் பொருந்தும்.

    ஏன் சான்றோர்களைத் துணைக் கொள்ள வேண்டும்?

           விலங்கினத்திலிருந்து தன்மாற்றம் அடைந்துள்ள மனித இனம்  மனிதப்பண்பில் ஏற்றம் பெறுவது இன்ப வாழ்விற்கு நிச்சயமாக அவசியம். ஆகவே பண்பேற்றத்திற்கு  சான்றோர்களின் துணை அவசியம்.  எவ்வாறு சான்றோர்களின்  துணை பண்பேற்றத்திற்கு உதவுகின்றது என அறிந்துகொள்வோம்.  இயல்பூக்க நியதி அங்கும் செயல்படுகின்றது. அதாவது இயல்பூக்க நியதி கூறுவது யாதெனில்,  ‘எந்த  ஒரு பொருளை, எந்த ஒரு செயலை, எந்த ஒரு குணத்தை, எந்த ஒரு உயிரையும் அடிக்கடி ஒருவர் நினைந்து வர, வர  அப்பொருளின் தன்மையாக அவரது  ஆற்றல் அறிவினிலும், உடலினிலும் மாற்றம் காண்கின்ற பெருமையை அடையச்செய்யும் என்பதே.  அதேபோன்று அறிவினரைச் சேர்ந்திருப்பதும் இன்பம் என்றும், அவரைக் கனவிலும் நினைவிலும் காண்பது அதனைவிட இன்பம் என்றும் அவ்வைத்தாய் கூறியுள்ளதனையும் நினைவில் கொள்ள வேண்டும்.  ஒருவருக்கு பெருமை உணர்வு எப்போது ஏற்படும்?  சற்று முன்னர் ‘பெருமை’ என்கின்ற சொல்லுக்கான பொருள் கண்டோம்.  ஒருவர் உயர்ந்த நிலையினை, தகுதியினை அடைய இருக்கும் போது, அது இன்பமாகவும், அது பெருமைபடக்கூடிய உணர்வாகவும் அல்லவா இருக்கும்?  அதற்கேற்ப இன்பம்  ஏற்படும்.  ஆகவே .சான்றோர்களின்  உயர்ந்த நிலையை அறியும் போது, மனம் தனக்குள் பெருமை கொள்வது இயல்பு (தற்பெருமை கொள்வது தன்முனைப்பு போன்று ஆகாது இங்கு).  சார்ந்திருக்கின்ற சான்றோரின் உயர்ந்த நிலையை நினைக்க நினைக்க மனதிற்கு ஏற்படும் இதமான உணர்வும் பெருமைதான்.

    இருபதாம் நூற்றாண்டிலிருந்தாவது உலக மக்கள் உய்ய மனவளக்கலை: 

    கடந்தது கடந்து போகட்டும்.  இருபதாம் நூற்றாண்டிலிருந்தாவது,  

    இப்பூவுலக மக்கள் உய்வதற்கான நிரந்தர தீர்விற்காக(உலக சமாதானம்), திருவேதாத்திரியத்தை அருளுவதற்கு,

    இயற்கை/இறை அன்று(இருபதாம் நூற்றாண்டில்) வாழ்ந்த ஆன்மாக்களில்  ஒரு ஆன்மாவைத்  தேர்ந்தெடுத்த, பெருமைக்குரிய உத்தமர்  ஒருவரான

    வேதாத்திரியாரை குருநாதராக  அடைந்திருப்பதால்,

    ஏற்படுகின்ற நிறைவால் மனம் வளம் அடைந்து கொண்டு, முழுமையை நோக்கி அறிவு பயணித்துக்கொண்டிருப்பது   பெருமை கொள்ளக்கூடிய  நிகழ்வுதானே?!

    எனவேதான், நாம் அடைந்து கொண்டிருக்கும், இன்னும் முழுமையாக அடைய இருக்கின்ற பயன்களை எண்ணி, அவர் எவ்வாறு பயனடைய உதவியாக இருக்கின்றார் என்பதனை நன்றியோடு தெரிவிக்கும் முகத்தான்  ‘வேதாத்திரி மகரிஷி அவர்களை அகராதியாகத் திகழ்கின்றார் என்பதில் மனவளக்கலைஞர்களுக்கு ஏற்படும் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை.

    மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை:

         எதனால் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை?  எல்லையில்லா பெருவெளியை நோக்கிய பயணத்தில் அடையும் மகிழ்ச்சியும் எல்லையில்லாமல் இருக்கும் என்பது உண்மைதானே? பேரறிவே ஆறாம் அறிவாகியும், பல லட்சம் ஆண்டுகளாகத் திக்குத் தெரியாத இருண்ட காட்டில் வழி தெரியாமல் அலைந்து கொண்டிருந்த நிலையில்  அறிவொளியைத் தந்து வழிகாட்டுகின்றது  திருவேதாத்திரியம்.

           எனவே பேரறிவு இதுவரை தனது பயணத்தில்/தன்மாற்றத்தில் ஆறாம் அறிவாகி, பல்லாயிரம் ஆண்டுகளாகியும், தெரிந்து கொள்ளாதிருந்த,  ஆனால் ‘அறிவின் இலக்கணத்திற்கேற்ப’ அறிந்து கொள்ளவேண்டிய உண்மைகளை அறிந்து  கொள்வதால் ஏற்படும்  பேரின்ப வார்த்தைகளே  ‘வேதாத்திரியார் ஓர் அகராதி’ என்கின்ற புகழாரமாக அமைகின்றன.

    மகரிஷி அவர்களை எதற்காக  அகராதி என்று கூறி மகிழ்கிறோம்?  

        அகராதி என்றால் என்ன என்றும், அகராதியின் பயன் என்ன என்றும் தெரியும். எனவே அதே ஒப்புவமையில் (analogy) அகராதியால் பெறும் பயன்களைப்போன்றே,  ஆறாம் அறிவின் பயன்களை திருவேதாத்திரியத்தால் நாம் பெறுவதால்  திருவேதாத்திரியத்தை இயற்றிய மகரிஷி அவர்களை அகராதி என்று கூறி மகிழ்கிறோம்.  அகராதியின் பயன்களை நினைவு கூர்ந்தால் மகரிஷி அவர்களை அகராதி என்று கூறுவது எவ்வளவு பொருத்தமாக இருக்கும் என்பது விளங்கிவிடும்.

    அகராதி என்பது என்ன?

        அகராதி என்பது ஒரு நூல். சொற்களை அகர வரிசையில் அமைத்துப் பொருள் முதலியவற்றைத்  தருகின்ற நூல்.  ஒவ்வொரு மொழிக்கும் அகராதி உண்டு. உதாரணத்திற்கு, தமிழ், ஆங்கிலம் போன்ற மொழிகளுக்கு அகராதிகள் இருக்கின்றன.  தமிழ்-தமிழ், தமிழ்-தமிழ்-ஆங்கிலம், ஆங்கிலம்-ஆங்கிலம், ஆங்கிலம்-ஆங்கிலம்-தமிழ் என்று பலவகை அகராதிகள் இருக்கின்றன.  அகராதி எதற்கு, எப்போது பயன்படுகின்றது? ஒரு சொல்லுக்குப் பொருள் தெரியவில்லையெனில் அகராதியை நாடுகின்றோம். மேலும் பொருள் தெரிந்து கொள்ளும் அதே நேரத்தில் அச்சொல்லைப்பற்றி இலக்கணமும் அறியப்படுகின்றது. அச்சொல்லை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்கின்ற புரிதலும் ஏற்படுகின்றது. ஆகவே  மொழிவளத்தைப் பெருக்கிக் கொள்ள புதிய புதிய சொற்களைத் தெரிந்து கொள்வதற்கு (vocabulary) அகராதியை நாடுகிறோம்.

    மொழி வளம் என்றால் என்ன?

       மொழிவளம் என்பது பற்றி அறிந்து கொள்ள மொழி, மற்றும் வளம் என்பது என்ன என்று  தனித்தனியே அறிந்து கொள்ள வேண்டும். மொழி என்பது கருத்தையும், உணர்வையும் வெளிப்படுத்துவதற்கு உதவும் ஒலிக்குறியீட்டுத் தொகுதி.  வளம் என்பது நிறைவு மற்றும் மேம்பட்ட நிலை ஆகும்.  மொழி வளம் என்பது மொழியின் மேம்பட்ட நிலை ஆகும். மொழி என்பது எப்போது மேம்பட்ட நிலையில் இருக்க முடியம்? மொழிவளம் என்பது ஒரு மொழியில் சொற்கள் அதிகமாகவும் இருந்து கருத்துக்களையும், உணர்ச்சிகளையும் எளிதாக வெளிப்படுத்துவதற்கு பயன்படுபவையாகவும், பிறருக்கும் எளிதாகப் புரியவைப்பதாகவும் இருப்பதாகும். மொழி,  ‘வளமாக’ இருந்தால் ஒருவரின் மொழி ஆளுமையும் அதிகமாக இருக்க முடியும்.  மொழி ஆளுமை அதிகமாக இருந்தால் தான் எண்ணியதை பிறருக்கு தெரிவிக்க விரும்பும்போது தங்கு தடையின்றியும் சரளமாக பேசவும், எழுதவும் முடியும்.

     ‘DICTIONARY’ என்றால் என்ன?

        அகராதி  ஆங்கிலத்தில் ‘DICTIONARY’ எனப்படுகின்றது.  ஆங்கிலத்தில் அறிவாளியை  (knowledgeable person)  ‘He is walking or living Dictionary’ என்கிறோம்.அப்படி என்றால் ‘well informed person’ என்று பொருள். அருளாளரான வேதாத்திரி மகரிஷி அவர்களை அகராதி- ‘well informed person’ என்றால் என்ன பொருள்?  அவர் யாரால் அறிவிக்கப்பட்டவர்(informed by whom?) யார் அந்த அறிவித்தவர்  (Who  had informed him?)இயற்கையே/இறையேதான்   (Nature/God).  ஆகவே அருளாளரான  வேதாத்திரி மகரிஷியை அகராதி  என்கின்றபோது அவர் இயற்கையால்/இறையால் தெரிவிக்கப்பட்டவர்.  அறிவுறுத்தப்பட்டவர்  மட்டுமல்ல. சமுதாயத்திற்கு  இருபதாம் நூற்றாண்டின் உலகிற்கு அறிவிப்பாளராகவும்(informer) இயற்கையால்/இறையால் தேர்ந்தெடுக்கப்பட்ட மனவளக்கலையின் முதல் இறைத்தூதுவர் அவர்.  அவரை மனவளக்கலைக்கு முதல் வித்தாக்கி அவர் வழியாக  பல்லாயிரக் கணக்கில் இறைத் தூதுவர்களை உருவாக்கி வருகின்றது இயற்கை/இறை என்றால் அது மிகையாகாது.  எனவே மனவளக்கலைஞர்கள் தங்களுக்கு கிடைத்த நல்வாய்ப்பினை பாக்கியமாகக் கருதி நன்முறையில் பயன்படுத்துவதே நாம் மேற்கொள்ளும் சாலச்சிறந்த இறைவழிபாடாகும்.

    Scientist of Consciousness

    வாழ்வாங்கு வாழ . . .    

        ஒரு மொழியில்  தெரியாத, புரியாத புதிய சொற்களுக்கு பொருள் தெரிந்து கொள்ள உதவுவது அகராதி.

    அகராதி பயன்படுவதுபோல் திருவேதாத்திரியம் ஒருவர் ஆறாமறிவின் திறனையும், திறமையும் வளர்த்துக்கொண்டு வாழ்வாங்கு(வாழ்வு ஆங்கு-இல்லறத்தோடு கூட) வாழ்வதற்குப் பயன்படுவதால் திருவேதாத்திரியத்தின் பயனாளிகளான நாம் அவரை ஓர் அகராதி என்று கூறி மகிழ்கிறோம். வாழ்வாங்கு வாழ்வது என்பது எப்படிவேண்டுமானாலும் மனம்போன போக்கில் வாழ்வதைத் தவிர்த்து ‘வாழும் இயல்பை’க் கொண்டு வாழ வேண்டும்.  அப்படிப்பட்டவன்தான் தெய்வத்துள் வைக்கப்படுவான் என்கிறார் அறத்துப்பாலில் இல்லறத்திற்கென்று தனியாக ஓர் இயலை(science of living) ஏற்படுத்திக் கொடுத்த தெய்வப்புலவர் திருவள்ளுவர்.

                இல்லறவியல்

    வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையுந் தெய்வத்துள் வைக்கப்படும்.                                      . . . குறள் எண் 50

    பொருள்:

       இவ்வுலகத்திலே வாழவேண்டிய முறைப்படி வாழ்பவன் விண்ணிலுள்ள தேவருள் ஒருவனாக மதிக்கப்படுவான் என்கிறார்.

        மேலும், ஒன்றே பலவாகியது என்கின்ற வோதாத்திரிய சுத்த அத்வைத தத்துவத்தின்படி(Vethathric Pure Advaidic Science) இறையே மனிதனாக தன்மாற்றம் அடைந்திருந்தாலும் அவன் எப்போது தெய்வத்திற்கு ஒப்பாகிறான்  என்பதனை மற்றொரு குறட்பாவில் நீத்தார் பெருமை என்னும் அதிகாரத்தில் திருவள்ளுவர் கூறுவதனை இங்கு நினைவுகூர்வதும் நலம் பயக்கும்.

     நீத்தார் பெருமை

    சுவைஒளி ஊறுஓசை நாற்றம் என்று ஐந்தின்

    வகைதெரிவான் கட்டே உலகு.

                                                          குறள் எண். 27

     

    இன்று இத்துடன் நிறைவு செய்துகொள்வோம்.  இதன் தொடர்ச்சியை நாளை சிந்திப்போம்.   வாழ்க வளமுடன்!

     

    வாழ்க அறிவுச் செல்வம்!             வளர்க அறிவுச் செல்வம்!!