சிந்தித்தலின் அன்றாட சுயசோதனை பயிற்சி
-
-
-
அறிவிப்பு-14-03-2018-புதன்
வாழ்க மனித அறிவு! வளர்க மனித அறிவு!!
அறிவிப்பு
14-03-2018-புதன்
அன்பர்களே!
வாழ்க வளமுடன்!இனி வாரந்தோறும் 20-03-2018 முதல் செவ்வாய்க்கிழமைகளில் சிந்திக்கக் கவிகள் பயிற்சி பதிவேற்றம் செய்யப்படும். (Click)
சிந்திக்கக் கவிகள் பயிற்சி பகுதியினை பயன்படுத்தி மகிழ்வுற்று, தங்களின் சிந்தனை ஆற்றலை வளர்த்துக் கொள்ளுமாறு வேண்டப்படுகின்றது.
தங்களின் மேலான கருத்துக்களைத் இணைய தளத்திற்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றது.
வாழ்க வளமுடன்!வாழ்க அறிவுச் செல்வம்! வளர்க அறிவுச் செல்வம்!!
-
சிந்தித்தலின் அன்றாட சுயசோதனை பயிற்சி
சி.அ.சு.ப.எண்- 05-01
இப்பயிற்சியின் நோக்கம் அவரவர்களே தங்களை சோதித்துக் கொள்ளுதலாகும். இதற்காக ஒரு நாட்குறிப்பை (diary) வைத்துக் கொள்ளுங்கள். அதில் தினந் தோறும், காலையிலிருந்து இரவு படுக்கைக்குச் செல்லும் வரை நீங்கள் அறிஞர்களின் வாயிலாகத் தெரிந்து கொண்டது, மற்றும் நீங்களாக சிந்தித்தது ஆகியவைகளைக் குறித்து வாருங்கள். உலாவச்செல்லும்போது கூட நாட்குறிப்பை எடுத்துச் செல்லுங்கள். சில நேரங்களில் அரிய கருத்துக்கள் உதிக்கும். அவற்றைக் குறித்து வைத்துக்கொள்ளுங்கள். இல்லையெனில் அக்கருத்துக்கள் மறந்து போகலாம். மீண்டும் நினைவிற்கு வராமல் போகும்.
*****