சிந்திக்க வினாக்கள்

  • சிந்திக்க வினாக்கள்-304

    வாழ்க மனித அறிவு!                                                                                      வளர்க மனித அறிவு!!

    சிந்திக்க வினாக்கள்-304

    15-06-2020 – திங்கள்

    மனதைப் பற்றி தெளிவான விளக்கம் இல்லாத நிலையில், மனதை அறிந்தால் உயிரை அறியலாம், உயிரை அறிந்தால் இறையை அறியலாம் என்று கூறும்,   மனதை  அறிந்த மாமேதை வேதாத்திரி மகரிஷி அவர்கள் மனதை  எவ்வாறு விளக்குகிறார்? 

    அவர் எவ்வாறு விளக்குகிறார் என்பதனை நீங்களே நேரிடையாகக் கண்டு இன்புறுவீர்களாக!   

    வாழ்க வளமுடன்!

                                                                                           —————————-

     


        அன்புடையீர்!  தங்களின் மேலான கருத்துக்களை கருத்துரைக்க பகுதிக்கு அனுப்ப   Click the link below

    http://www.prosperspiritually.com/contact-us/

          வாழ்க அறிவுச் செல்வம்!                                        வளர்க அறிவுச் செல்வம்!!


     

  • சிந்திக்க கவிகள்-10

       வாழ்க மனித அறிவு!                                  வளர்க மனித அறிவு!!

    சிந்திக்க கவிகள்10

    14-06-2020-ஞாயிறு

    “நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றுந்தன்

    உண்மை யறிவே மிகும்”.

    —குறள்        

     பயிற்சி:

    1. என்ன கூறுகிறார் பொய்யாமொழி தெய்வப்புலவர்?
    2. குறள் எந்த பாலில் எந்த அதிகாரத்தில் எந்த அதிகாரத்திற்கு பின் வருகின்றது? அதற்கான காரணங்கள் ஏதேனும் இருக்குமா?
    3.  ‘நுண்ணிய நூல்பல கற்பினும்’ என்றால் என்ன?
    4.  ‘மற்றும் தன் உண்மை அறிவே மிகும்’ என்பதில்   ’ மிகும்’  என்கின்ற சொல்லால் அறிந்துகொள்ள வேண்டியது என்ன ?
    5. பொதுவாக உரையாசிரியர்கள் கூறும் பதவுரை என்னென்ன?
    6. திருவள்ளுரை மானசீக குருவாகக் கொண்ட இருபதாம் நூற்றாண்டின் சீடரான பெருமைக்குரிய நம் குருநாதர் வேதாத்திரி மகரிஷி அவர்கள் இக்குறள் பற்றி கூறும் விளக்கம் என்ன?
    7. எந்த நூலில் மகரிஷி அவர்கள் இக்குறளுக்கு விளக்கமளிக்கிறார்?
    8. அதில் இந்த அதிகாரத்தில் மேலும் ஒரு குறளுக்கு விளக்கம் அளித்துள்ளதை நாம் மீண்டும் ஒருமுறை நினைவுகூர்வோம்.
    9. திருவள்ளுவரும் அவரது இருபதாம் நூற்றாண்டு சீடரும் சேர்ந்து ஒருமித்துக் கூறும் செய்தி என்ன?
    10.  இறையுணர்வு கருத்தியல் பாடத்தில் மிகுந்த தெளிவையும்(Theoretical understanding) செய்முறை பாடத்தில்(Practical realisation through Meditation-துரியாதீத தவத்தில்) தேர்ச்சியையும் வலியுறுத்துகிறார்களோ  இரு அறிஞர்களும்!?

    வாழ்க வள்ளுவம்! வளர்கவள்ளுவம்!!

    வாழ்க திருவேதாத்திரியம்!  வளர்க திருவேதாத்திரியம்!!

    வாழ்க அறிவுச் செல்வம்!                         வளர்க அறிவுச் செல்வம்!!


     

  • சிந்திக்க வினாக்கள்-303

    வாழ்க மனித அறிவு                                                                   வளர்க மனித அறிவு

    lotus

    சிந்திக்க வினாக்கள்-303 

                                                11-06-2020 – வியாழன்

    அன்பர்களே!

    வாழ்க வளமுடன்.

    சென்ற திங்கட்கிழமை 08.06.2020 அன்று சிந்திக்க வினாக்கள் பயிற்சியில் கலந்து கொண்டு கோடிட்ட இடங்களைப் பூர்த்தி செய்து வேதாத்திரி மகரிஷி அவர்களின் வைரமொழிகளை வாசித்து ஆனந்தம் அடைந்து இருப்பீர்கள். இன்றைய சத்சங்கத்தில் அவ்வினாக்களுக்கு விடைகள் தரப்பட்டுள்ளன. விடைகளை சரிபார்த்து மீண்டும் முழுமையாக மகரிஷி அவர்களின் வைர மொழிகளை வாசித்து, உள்வாங்கி, மீண்டும் ஆனந்தம் அடையலாம். வாழ்க வளமுடன்!

    கோடிட்ட  இடங்களைப் பூர்த்தி செய்து வாசித்து இன்புறலாமே! 

    அறிவொளியைப் பெருக்கிக்கொள்ளலாமே! வாழ்க வளமுடன்!

    1. கதிரவன் காலத்தே காணாத ___________  , புதிர்போன்ற அறிவுநிலை ___________   இயங்குங்கால் தோன்றா!

    2. எல்லையற்றதை ___________  பார்ப்பது ___________ குறைபாடு.

    3. மனிதனுடைய ___________ பிரபஞ்சத்திற்கு ___________உள்ள ___________.

    விடை:

    1. கதிரவன் காலத்தே காணாத விண்மீன்போல் , புதிர்போன்ற அறிவுநிலை  புலன் இயங்குங்கால் தோன்றா!

    2. எல்லையற்றதை எல்லையுடையதாய் பார்ப்பது அறிவின் குறைபாடு.

    3. மனிதனுடைய அறிவானது பிரபஞ்சத்திற்கு ஆதிப்பொருளாக  உள்ள தெய்வநிலை.

    வேதாத்திரி மகரிஷி அவர்கள்

     


     அன்புடையீர்!  தங்களின் மேலான கருத்துக்களை கருத்துரைக்க பகுதிக்கு அனுப்ப   Click the link below

    http://www.prosperspiritually.com/contact-us/

          வாழ்க அறிவுச் செல்வம்!              வளர்க அறிவுச் செல்வம்!!


  • சிந்திக்க வினாக்கள்-302

    வாழ்க மனித அறிவு                                                                   வளர்க மனித அறிவு

    lotus

    சிந்திக்க வினாக்கள்-302 

     

                                                08-06-2020 – திங்கள்

    கோடிட்ட  இடங்களைப் பூர்த்தி செய்து வாசித்து இன்புறலாமே! 

    அறிவொளியைப் பெருக்கிக்கொள்ளலாமே! வாழ்க வளமுடன்!

    1. கதிரவன் காலத்தே காணாத ___________ ,புதிர்போன்ற அறிவுநிலை ___________ இயங்குங்கால் தோன்றா.

    2. எல்லையற்றதை ___________ பார்ப்பது ___________ குறைபாடு.

    3. மனிதனுடைய ___________ பிரபஞ்சத்திற்கு ___________உள்ள ___________.

    வேதாத்திரி மகரிஷி அவர்கள்

     


     அன்புடையீர்!  தங்களின் மேலான கருத்துக்களை கருத்துரைக்க பகுதிக்கு அனுப்ப   Click the link below

    http://www.prosperspiritually.com/contact-us/

          வாழ்க அறிவுச் செல்வம்!              வளர்க அறிவுச் செல்வம்!!


  • சிந்திக்க வினாக்கள்-301

    வாழ்க மனித அறிவு                                                                   வளர்க மனித அறிவு

    lotus

    சிந்திக்க வினாக்கள்-301 

                                                04-06-2020 – வியாழன்

    1. மனிதப்பிறவியின்  முத்தொழில்கள் என்னென்ன?
    2. அவற்றில் பயனுள்ள சொற்களைப் பேசுதல் எதனைச் சார்ந்தது?
    3. திருக்குறளில் இந்தப் பொருள் பற்றி கூறும் அதிகாரம் என்ன?
    4. அந்த அதிகாரம் எந்த அதிகாரத்திற்குப் பின்னரும் எந்த அதிகாரத்திற்கு முன்னரும் வைக்கப்பட்டுள்ளது திருவள்ளுவப் பெருந்தகையால்? அதில் உள்ள முக்கியத்துவம் என்ன?
    5. அந்த அதிகாரம் அறிவுறுத்துகின்ற சுருக்கமான பொருள் என்ன?
    6. செயல் விளைவு தத்துவப்படி பயனற்ற சொற்களைப் பேசுவதால் பாவமா? புண்ணியமா?
    7. பயனற்ற சொற்களை பேசுவது விளைவறிந்த செயலா?
    8. அப்படி பேசுவதன் இழப்புகள் என்னென்ன?
    9. அறிந்தும் அப்படி பேச காரணம் என்ன?

     அன்புடையீர்!  தங்களின் மேலான கருத்துக்களை கருத்துரைக்க பகுதிக்கு அனுப்ப   Click the link below

    http://www.prosperspiritually.com/contact-us/

          வாழ்க அறிவுச் செல்வம்!              வளர்க அறிவுச் செல்வம்!!


  • சிந்திக்க வினாக்கள்-300

    வாழ்க மனித அறிவு                                                                   வளர்க மனித அறிவு

    lotus

    சிந்திக்க வினாக்கள்-300 

                                                01-06-2020 – திங்கள்

    •  இறைவனுக்குத் தெரியாமல் மனிதன் எந்த ஒரு செயலையும் (எண்ணமாக இருந்தாலும் கூட) செய்துவிட முடியாது  என்கிறார் நம் குருநாதர் வேதாத்திரி மகரிஷி அவர்கள்.  எல்லா அருளாளர்களும் இவ்வாறே கூறியுள்ளனர். அவர்கள் எதனைக்கொண்டு உறுதியாக அவ்வாறு கூறுகின்றனர்? 
    • தனித்துவ ஞானி வேதாத்திரி மகரிஷி அவர்கள் எவ்வாறு இவ்வுண்மையினை கூறுகின்றார்?

    ஒரு குறிப்பு: —  உங்கள் சிந்தனையை கருமைய விளக்கத்திற்குள் குவியச் செய்து (Focus your pondering) விடை காண முயலுங்கள். வாழ்க வளமுடன் அன்பர்களே!!

     அன்புடையீர்!  தங்களின் மேலான கருத்துக்களை கருத்துரைக்க பகுதிக்கு அனுப்ப   Click the link below

    http://www.prosperspiritually.com/contact-us/

          வாழ்க அறிவுச் செல்வம்!              வளர்க அறிவுச் செல்வம்!!


  • சிந்திக்க வினாக்கள்-299(263)

    வாழ்க மனித அறிவு                                                                   வளர்க மனித அறிவு

    lotus

    சிந்திக்க வினாக்கள்-299(263)   

    28-05-2020 – வியாழன்    

    1. ஒழுக்க வாழ்விற்கு மனதோடு போராட வேண்டியுள்ளது என அறிஞர் ரூஸோ கூறுகிறாரே! ஏன்?
    2. இச்சிந்தனையையொட்டிய வேதாத்திரிய சிந்தனைகளை பட்டியலிடுக. 

     

    வாழ்க அறிவுச் செல்வம்                                                                வளர்க அறிவுச் செல்வம்


  • சிந்திக்க வினாக்கள்-298

    வாழ்க மனித அறிவு!                                                            வளர்க மனித அறிவு!!

     

    சிந்திக்க வினாக்கள்-298

                                                                                          25-05-2020 – திங்கள்.

     

    1. இந்திரியங்கள் என்றால் என்ன?
    2. ‘இந்திரியங்கள்’ என்பதோடு  ‘ஞானம்’ என்பதனையும் சேர்த்து ஏன் ஞானேந்திரியங்கள் எனஅழைக்கப்படுகின்றது?
    3. அப்படி அழைக்கப்படுவதன் நோக்கம் என்ன?
    4. இந்திரியங்கள் ஞானத்திற்கு வழிகோலுகின்றதா?
    5. இறைஉணர் ஆன்ம சாதகர்கள் அறிய வேண்டியது ஏதேனும் உள்ளதா இதில்? வாழ்க வளமுடன்!
    6. உள்ளது எனில் என்ன அது?

     

        அன்புடையீர்!  தங்களின் மேலான கருத்துக்களை கருத்துரைக்க பகுதிக்கு அனுப்ப   Click the link below

    http://www.prosperspiritually.com/contact-us/

          

     

    வாழ்க அறிவுச் செல்வம்!                                             வளர்க அறிவுச் செல்வம்!!          

     

                

     

        

     

       

     

  • சிந்திக்க வினாக்கள்-297

    வாழ்க மனித அறிவு!                                                            வளர்க மனித அறிவு!!

    சிந்திக்க வினாக்கள்-297

                                                21-05-2020 – வியாழன்

     

    ஞானிக்கு இலட்சணம் அளவு முறை காப்பது என்கிறார் வேதாத்திரி மகரிஷி அவர்கள்.  எப்படி ’அளவு முறை’ என்கின்ற சூத்திரத்திற்குள்/என்பதற்குள் ஞானியின் வரையறை வருகின்றது? விரிவாக சிந்திக்கவும்.  வாழ்க  வளமுடன்!.      

        

        அன்புடையீர்!  தங்களின் மேலான கருத்துக்களை கருத்துரைக்க பகுதிக்கு அனுப்ப   Click the link below

    http://www.prosperspiritually.com/contact-us/

          

     

    வாழ்க அறிவுச் செல்வம்!                                             வளர்க அறிவுச் செல்வம்!!          

     

                

     

        

     

       

     

  • சிந்திக்க வினாக்கள்-296(198)

    வாழ்க மனித அறிவு                    வளர்க மனித அறிவு

    சிந்திக்க வினாக்கள்-296(198)

    18-05-2020 – திங்கள்

    எண்ணம், இயற்கை, இறை இவையெல்லாம் வெவ்வேறானவை அல்ல என்கிறார் மகரிஷி அவர்கள். மேலும் எண்ணத்தை இயற்கையின் சிகரம் என்கிறார். எவ்வாறு அவ்வாறு கூறுகிறார்? எண்ணமே இயற்கையின் சிகரமாக இருப்பினும், எண்ணத்தை உடைய மனிதன் ஏன் அல்லலுறுகிறான்? விரிவாக ஆழ்ந்து தெளிவு பெறவும். வாழ்க வளமுடன்.

    வாழ்க அறிவுச் செல்வம்                    வளர்க அறிவுச் செல்வம்


  • சிந்திக்க வினாக்கள்-296(205)

    வாழ்க மனித அறிவு                    வளர்க மனித அறிவு

    சிந்திக்க வினாக்கள்-296(205)

    14-05-2020 – வியாழன்

    அறியாமை

     

    அ) பொதுவாக அறியாமை என்பது என்ன?

    (ஆ) அதனால் விளைவது என்ன?

    (இ) வாழ்வியலோடு இணைத்து அறியாமைக்கு பொருள் கூறவும்.

    (ஈ) எவையெல்லாம் அறியாமைகள்?

    (உ) ஒருவரின் அறியாமையால் மற்றவருக்கு பாதிப்பு உண்டா? எவ்வாறு?

    (ஊ) அவ்வாறு பாதிப்பு உண்டாகும்போது முதலாமவரின் நிலை என்ன?

    (எ) முதலாமவர் அந்நிலையினை எவ்வாறு ஏற்றுக் கொள்வது?

    (ஏ) ஏன் இயற்கையில் இந்த நிலை?! இது நியாயமா?

    (ஐ) அறியாமையை சமுதாயத்தில் எவ்வாறு நீக்கலாம்?

    (ஒ) இவ்வினாக்களுக்கான விடையைத் தொகுத்து அறியாமை என்கின்ற தலைப்பில் கட்டுரை எழுதிப்பார்க்கலாமே!

     

    வாழ்க அறிவுச் செல்வம்                வளர்க அறிவுச் செல்வம்


  • சிந்திக்க வினாக்கள்-295(188)

    வாழ்க மனித அறிவு              வளர்க மனித அறிவு

    11-05-2020 – திங்கள்

    சிந்திக்க வினாக்கள்-295(188)

    வினாக்கள்:

    பொருள் நிலை, நிகழ்ச்சி நிலை என்பதனை எவ்வாறு விளக்குகிறார் மகரிஷி அவர்கள்? அதற்கு  எந்தக்குறளை எடுத்துக்காட்டாகக் கூறுகிறார் மகரிஷி அவர்கள்?

    வாழ்க அறிவுச் செல்வம்                வளர்க அறிவுச் செல்வம்