வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு
சிந்திக்க வினாக்கள்-303
11-06-2020 – வியாழன்
அன்பர்களே!
வாழ்க வளமுடன்.
சென்ற திங்கட்கிழமை 08.06.2020 அன்று சிந்திக்க வினாக்கள் பயிற்சியில் கலந்து கொண்டு கோடிட்ட இடங்களைப் பூர்த்தி செய்து வேதாத்திரி மகரிஷி அவர்களின் வைரமொழிகளை வாசித்து ஆனந்தம் அடைந்து இருப்பீர்கள். இன்றைய சத்சங்கத்தில் அவ்வினாக்களுக்கு விடைகள் தரப்பட்டுள்ளன. விடைகளை சரிபார்த்து மீண்டும் முழுமையாக மகரிஷி அவர்களின் வைர மொழிகளை வாசித்து, உள்வாங்கி, மீண்டும் ஆனந்தம் அடையலாம். வாழ்க வளமுடன்!
கோடிட்ட இடங்களைப் பூர்த்தி செய்து வாசித்து இன்புறலாமே!
அறிவொளியைப் பெருக்கிக்கொள்ளலாமே! வாழ்க வளமுடன்!
1. கதிரவன் காலத்தே காணாத ___________ , புதிர்போன்ற அறிவுநிலை ___________ இயங்குங்கால் தோன்றா!
2. எல்லையற்றதை ___________ பார்ப்பது ___________ குறைபாடு.
3. மனிதனுடைய ___________ பிரபஞ்சத்திற்கு ___________உள்ள ___________.
விடை:
1. கதிரவன் காலத்தே காணாத விண்மீன்போல் , புதிர்போன்ற அறிவுநிலை புலன் இயங்குங்கால் தோன்றா!
2. எல்லையற்றதை எல்லையுடையதாய் பார்ப்பது அறிவின் குறைபாடு.
3. மனிதனுடைய அறிவானது பிரபஞ்சத்திற்கு ஆதிப்பொருளாக உள்ள தெய்வநிலை.
வேதாத்திரி மகரிஷி அவர்கள்
அன்புடையீர்! தங்களின் மேலான கருத்துக்களை கருத்துரைக்க பகுதிக்கு அனுப்ப Click the link below
http://www.prosperspiritually.com/contact-us/
வாழ்க அறிவுச் செல்வம்! வளர்க அறிவுச் செல்வம்!!