சிந்திக்க வினாக்கள்

  • உலக சமாதானம் விரைவில் மலரட்டும் அதன்பொருட்டு அருள் உள்ளங்கள் பெருகட்டும்!

    வாழ்க திருவேதாத்திரியம்!                          வளர்க திருவேதாத்திரியம்!!

    வாழ்க அறிவுச்செல்வம்!                                   வளர்க அறிவுச்செல்வம்!!

    குருசீடர் உரையாடல்- 7

        (1002 வது பதிவு)

    நாள்:02-01-2024

                                                                                              உ.ச.ஆண்டு:02-01-39

    உலக சமாதானம் விரைவில் மலரட்டும்

    அதன்பொருட்டு அருள் உள்ளங்கள் பெருகட்டும்!

     

     

     

     

     

     


     

     

     

     

     

     

    வாழ்க வையகம்!                                                            வாழ்க வளமுடன்!!

  • உலக சமாதானம் விரைவில் மலரட்டும் அதன்பொருட்டு அருள் உள்ளங்கள் பெருகட்டும்!

    வாழ்க திருவேதாத்திரியம்!                           வளர்க திருவேதாத்திரியம்!!

                    வாழ்க அறிவுச்செல்வம்!                                        வளர்க அறிவுச்செல்வம்!!

    குருசீடர் உரையாடல்- 6

        (1001 வது பதிவு)

    நாள்:01-01-2024

                                                                                              உ.ச.ஆண்டு:01-01-39

    உலக சமாதானம் விரைவில் மலரட்டும்

    அதன்பொருட்டு அருள் உள்ளங்கள் பெருகட்டும்!

     

     

     

    குரு-சீடர் உரையாடல் ஆரம்பம்…

     

    வாழ்க வையகம்!                                                            வாழ்க வளமுடன்!!

  • சிந்திக்க வினாக்கள்-333 (996th Posting) சுத்த அத்வைதம்

    வாழ்க மனித அறிவு!                           வளர்க மனித அறிவு!!

    சிந்திக்க வினாக்கள்-333 (996th Posting)

    29-05-2022-ஞாயிறு

    சுத்த அத்வைதம்!!!

    பிரதான வினா(Main Question): 333

    இருபதாம் நூற்றாண்டில்அவதரித்த அத்வைதத்தின்  இரண்டாம் தந்தை வேதாத்திரி   மகரிஷி அவர்களால் வெகுகாலமாக இருந்து வந்த அத்வைத தத்துவத்தை இந்த நவயுக விஞ்ஞானத்திற்கேற்ப எல்லோராலும்  எளிதில் புரிந்துகொள்ளுமாறு, தெளிவுபடுத்தி  சுத்த  அத்வைத தத்துவமாக   அருள முடிந்தது  எப்படி/எவ்வகையில்/எவ்வாறு? 

     துணை வினாக்கள் (Sub questions):

    1)  இந்த வினாவின் நோக்கம்  என்ன?

    2) அத்வைதம் என்பது என்ன?

    3) சுத்த அத்வைதம் என்கின்றபோது அத்வைதத்தில்  இரண்டு உள்ளதுபோல்   தோன்றுகிறதா?

    4) ஒன்றே பலவாகியது என்று  அத்வைதம் உரைத்தாலும் அந்த ஒன்று எது, அது எவ்வாறு பலவாகியது என்று இதுவரை(1911) கூறப்பட்டுள்ளதா?

    5) பலவாகியது என்றால் விண், பஞ்சபூதங்கள், மனிதன் உள்பட எல்லா உயிரினங்களுமே அந்த பலவற்றில் அடங்கும் அல்லவா?

    6)  ஆனால் ஒன்றிலிருந்து மற்றொன்று தொடர் நிகழ்ச்சியாகத்தானே நடந்திருக்கும்!?

    7) இரண்டற்ற நிலை என்றுதானே அத்வைதம் கூறுகின்றதல்லவா!?

    8) அதாவது பரமாத்மாவும், ஜீவாத்மாவும் வெவ்வேறல்ல என்றுதானே அத்வைதம் கூறுகின்றது!?

    9) ஆனால் எது, எந்த ஒன்று பலவாகியது, எவ்வாறு மனிதன் வரை  பலவாகியது, அந்த ஒன்றின் பயணம் எவ்வாறு மனிதனில் முடிவடைந்து மனித அறிவை முழுமை அடையச் செய்கின்றது என்கின்ற  செயல்முறையை(process) இன்றுவரை அத்வைதம் எவ்வாறு விளக்கியுள்ளது?

    10) ‘வேதாத்திரிய சுத்த அத்வைதமும்’ ஒன்றே பலவாகியது என்றாலும் எந்த ஒன்று  என்பதனை உறுதியாக அச்சமின்றி அறிவேதான் தெய்வம் என்று கூறுவதாலும், ஏன், அது   எவ்வாறு, பலவாகியுள்ளது  என்பதனை அறிவுபூர்வமாகவும், அறிவியல் ரீதியாகவும் கூறுகின்றதல்லவா?

    11) ஆகவே வேதாத்திரிய அத்வைதத்தை வேதாத்திரிய மாணவர்கள் சுத்த அத்வைதம் என்று கூறி மகிழ்வுறுவது சரிதானே!?

     

    வாழ்க திருவேதாத்திரியம்!  வளர்க திருவேதாத்திரியம்!!

       உலகெங்கிலும் பரவட்டும் திருவேதாத்திரியம்!!!

     

    வாழ்க அறிவுச் செல்வம்!                  வளர்க அறிவுச்   செல்வம்!!


     

  • சிந்திக்க வினாக்கள்-332 (995th Posting)

    வாழ்க மனித அறிவு!                           வளர்க மனித அறிவு!!

    சிந்திக்க வினாக்கள்-332 (995th Posting)

    24-05-2022-செவ்வாய்

    மேலும் பல உண்மை விளங்க . . .

                              

    பிரதான வினா(Main Question): 332

    அறிவிற்கு அறிவியல் அருளிய அறிவின் அறிவியலின் தந்தை  வேதாத்திரி மகரிஷி அவர்கள் ‘பேரறிவு உணர்ச்சியாயும், சிந்தனையாயும் உள்ளது’ என்று அறிந்திருந்த நிலையில் மேலும் உண்மை விளங்க உணர்ச்சிக்கு முன்னர்  பேராற்றல் ஒழுங்காற்றலாயும் விளங்குகின்றது என்கின்ற அரிதினும் அரிதான உண்மையினை மகரிஷி அவர்கள் கண்டுபிடித்துள்ளார்கள்.   அவருக்கு மேலும் விளங்கிய  அந்த உண்மை என்ன?  அந்த உண்மை ஒன்றா, பலவா?  

     துணை வினாக்கள் (Sub questions):

    1)  இந்த வினாவின் நோக்கம்  என்ன?

    2) மேலும் மகரிஷி அவர்களுக்கு விளங்கிய உண்மைகளை நாம் ஏன் அறிந்துகொள்ள வேண்டும்?  அதன் பயன் என்ன?  புலன்கள் வழியாக இன்பத்தை துய்ப்பதைவிட   மேலான இன்பமா புலன்களின் உதவியின்றி உண்மையினை அறிவது?  எவ்வளவு மேலான இன்பம் உண்மையினை அறிவது?  அளவு ஏதாவது கூறமுடியுமா அவ்வின்பத்திற்கு?  அதுதான் பேரின்பமா?

    3) மகரிஷி அவர்களின்  சிந்தனை ஓட்டம்,  எப்படி/எவ்வாறு/எந்த திசையில்  இருந்திருந்தால் அவருக்கு உண்மை விளங்கி உணர்ச்சிக்கு முன்னர் அறிவு ஒழுங்காற்றலாய் விளங்குகின்றது எனக் கண்டுபிடித்திருப்பார்?  இதனை அவரது மாணவர்களாகிய நாம் அறிய வேண்டாமா?  அவருடைய மாணவர்கள் உண்மை அறிதலில்  அனுபவிப்பதில் அவரது ஆன்மாவும் சேர்ந்து அல்லவா இன்புறும்?!

    4) அறிவின் ஒழுங்காற்றல் என்கின்ற நிலையினை மகரிஷி அவர்கள் கண்டுபிடிக்காமல் இருந்திருந்தால் இன்று சமுதாயத்திற்கு     முழுமையான அறிவிற்கு அறிவியல் கிடைத்திருக்குமா?

    4) அறிவின்  இயக்க படிநிலைகள் என்னென்ன?

    5) அவற்றில் எந்தெந்த படிகள் ஒழுங்காற்றலாய் விளங்கும் அறிவின் திருநிலைகள்?

    5) அறிவு உணர்ச்சிக்கு முன்னர் ஒழுங்காற்றலாய் விளங்குகின்ற அரிய உண்மையைக் கண்டுபிடிக்காமல் இருந்திருந்தால் அவரால் அறிவின் இயக்கமாக  உள்ள படிநிலைகளை முழுவதுமாக அவர் கண்டுபிடித்திருக்க முடியுமா?

    6) அறிவு என்றால் அறிவு?  அதற்கு ஏன் ஒழுங்காற்றல் என மற்றொரு புனிதப் பெயரைச் சூட்ட வேண்டும் மகரிஷி அவர்கள்?

    7) இயற்கையின் ஆதிநிலையில் பேராற்றலும், அறிவும் இருந்துள்ளது என்பதனை நாம் அறிவோம்.   அறிவு என்றால் அது உணர்ச்சியாயும்(எல்லா உயிர்களிலும்) சிந்தனையாகவும்(மனிதனில்) இயங்குகின்றது என்பதனையும் அறிவோம்.  ஆனால் அவ்வாறு அறிவு அறிந்திருக்கும் நிலையில் அறிவிற்கு ஒழுங்காற்றல் என்கின்ற  மற்றொரு பெயர் சூட்டப்படுவதன் காரணம் விளங்கிவிட்டதா அன்பர்களே!?  வாழ்க வளமுடன்!

    8) ஒழுங்காற்றல் என்கின்ற அறிவின் மற்றொரு புனிதப்பெயரைக் கொண்டு இப்போது நம் அறிவு என்ன பேரின்பத்தை அனுபவிக்க முடிகின்றது?

    (அ)  அறிவைப்பற்றிய தெளிவு கிடைக்கின்றதா?

    (ஆ) எப்போது ஒன்றைப்பற்றிய தெளிவு ஏற்படும்?

    (இ) அறிவை அறிவு தெளிவாக அறிந்துகொள்வதில் ஏற்படும் ஐயங்கள் தெளிவாகியுள்ளனவா?

    (ஈ) என்னென்ன ஐயங்கள் அறிவாற்றுலுக்கு தீர்ந்துள்ளன ஒழுங்காற்றல் என்கின்ற திருப்பெயரால்?

    9) அறிவு தன்னை அறிய வேண்டும் என்பதில் இன்றைய சிந்தனையின் முக்கியம் என்ன?

    10) நான் யார் என அறிவதில் இன்றைய சிந்தனையும் அடங்குமா?

    11) ஒழுங்காற்றலுக்கும், ஒழுங்கிற்கும்,  ஒழுக்கத்திற்கும் உள்ள  தொடர்பு என்ன?   ஆறாம் அறிவின் நடத்தையில்/குணத்தில்/மனிதப்பண்பில்/ மனிதனாக நடந்துகொள்வதில்/இறைவழிபாட்டிலும்  ஒழுங்காற்றலின்(order of function) பங்கு என்ன? ஒழுங்காற்றலின் பங்கிற்கு மனிதன் இடம் தராமல் இருந்தால் அது இறைவழிபாடாகுமா?

    12) ஒழுங்காற்றலைக்கொண்டு இயற்கை/இறை மனிதனுக்கு  கட்டிக்கொடுத்த உடலை துன்பம் வராமல் பராமரிப்பது  ஆறாம் அறிவின் கடமைதானே? ஆறாம் அறிவு  ஒழுக்கநிலையில்தானே அந்த கடமையை ஆற்ற முடியும்?! ஆகவே ஒழுங்காற்றலாக உள்ள அறிவு மனிதனில் ஆறாம் அறிவாக செயல்படும்போது  ஒழுக்க நிலையில் செயல்பட மனிதன்தான் பொறுப்பேற்கவேண்டுமல்லவா?  இங்கேதான்  அறியாமையிலும், அலட்சியத்திலும், உணர்ச்சிவயத்திலும் மனித வாழ்வில்  சிக்கல்கள் ஏற்படுகின்றதல்லவா? ஆறாம் அறிவு மனிதனில் ஒழுக்கறிவாக, ஒழுக்கப்பழக்கறிவாக  செயல்பட மனிதன் அக்கறை எடுத்துக்கொள்ளவில்லையெனில் துன்பம்தான் வருமன்றோ? அதனால்தானே ஒழுக்கம் உயரினும் மேலாகக் கருதப்படவேண்டும் என்கிறார் திருவள்ளுவர்?

    13) மேலும் ஏதேனும் வினாக்கள் இருப்பின் அவற்றையும் எழுப்பிக்கொண்டு விடைகள்  அறிந்து அறிவைப்(தெய்வத்தைப்) பற்றிய தெளிவினை அடைவோம்  இந்த புனித நாளில்.

    அதற்கு நம் குருபிரான் உள்பட இயற்கையின்/இறையின் நேரிடை பிரதிநிதிகளான/தூதுவர்களானஅறிவில் அறிவாய் நிலைத்து அறம் வகுத்து அதனை வாழ்ந்து காட்டிய அனைத்து அறவோர்களிள் அருளும் இறையின் திருவருளும் நிச்சயமாக துணை நிற்குமாக. வாழ்க வளமுடன்!

    வாழ்க திருவேதாத்திரியம்!  வளர்க திருவேதாத்திரியம்!!

       உலகெங்கிலும் பரவட்டும் திருவேதாத்திரியம்!!!

     வாழ்க அறிவுச் செல்வ                   வளர்க அறிவுச்   செல்வம்!!


     

  • சிந்திக்க வினாக்கள்-331-வருங்காலம் உணர்தல்

    வாழ்க மனித அறிவு!                                 வளர்க மனித அறிவு!!

    சிந்திக்க வினாக்கள்-331

    15-05-2022-ஞாயிறு        

    வருங்காலம் உணர்தல்

                                                               

    வாழ்க வளமுடன்!

    பிரதான வினா(Main Question): 331  – (993rd Posting)

    எந்த அடிப்படையில்,  வருங்காலத்தை உணர்தல் ஒரு வியப்பிற்கான செயலே அல்ல என மானுடத்தை உள்ளடக்கிய இயற்கைக்கு  இயல் ஏற்படுத்தித் தந்துள்ள  வேதாத்திரி மகரிஷி அவர்கள் கூறுகிறார்?

    துணை வினாக்கள் (Sub questions):

    1) வியப்பில்லை என்றால் வருங்காலம் உணர்தல் என்பது ஒரு சாதாரண நிகழ்ச்சிதான் அல்லவா? ESP(Extra Sensory Perception) இல்லைதானே!?

    2) சாதாரண நிகழ்ச்சி என்றால் எல்லோருக்கும் இது சாத்தியம்தானே!?

    3) எல்லோருக்கும் சாத்தியமில்லை எனில் யார் யாருக்கு  வருங்கால உணர்தல் சாத்தியம்?

    4) வருங்கால உணர்தல் நிகழ்வதற்கு  ஏதாவது நிபந்தனைகள் உண்டா?

    5) எப்படி அவர்களுக்கு மட்டும் சாத்தியமாகின்றது?

    6) அவர்கள்  தனிப்பிறவிகளா?

    7) வருங்காலம் உணர்தல் ஒரு சாதாரண நிகழ்ச்சி என்று  எந்த அடிப்படையில் மகரிஷி அவர்களால் மட்டுமே கூறுமுடிகின்றது?  பால பருவத்திலேயே இயற்கை/இறை நான்கு மகோன்னத கேள்விகளை*   அவருள் எழுப்பியதல்லவா?

    (* மகானாக்கிய  மகோன்னத கேள்விகள்:  1. இன்பம், துன்பம் என்பது என்ன? அவைகள் எவ்வாறு வருகின்றன? 2. உயிர் என்பது என்ன? 3. கடவுள் என்பவர் யார்? அவர் ஏன் இந்த பிரபஞ்சத்தைப்(universe) படைத்தார்? 4.வறுமை ஏன் வருகின்றது?)

    8) மனவளக்கலைஞர்களுக்கு வருங்காலம் உணர்தல் என்பது சாத்தியமா? எப்படி? எவ்வாறு?

    9) மகரிஷி அவர்கள் தான் அனுபவித்ததைத்தான் சமுதாயத்திற்குத்  தெரிவிப்பார் என்பதால் வருங்கால உணர்தலாக  மகரிஷி அவர்கள்  கூறியுள்ளது என்னென்ன?

    10)  இதுவரை அவர் கூறியது என்னென்ன நடந்துள்ளன?

    11) என்னென்ன நடக்க வரிசையில் காத்திருக்கின்றன?

    12) “ஓருலக ஆட்சி வரும் என்று நான் நினைத்துவிட்டேன். ஓர் உலக ஆட்சி வந்தே தீரும்”   என்று மகரிஷி அவர்கள் கூறியுள்ளது வருங்கால உணர்தல் தானே?!

    13) ‘வருங்காலம் உணர்தல்’பற்றி ஒருவருக்கு மட்டுமேவா பொறுப்பு?  மற்றவர்களின் பொறுப்பு என்ன அதில் உள்ளது?

    14) வருங்கால உணர்தல் யாரால் நிகழ்கின்றது? இயற்கையால்/இறையால் நிகழ்கின்றதா அல்லது மனிதனால் நிகழ்கின்றதா?

    15) வருங்கால உணர்தல் எப்போது, எவ்வாறாக நிகழ்கின்றது?

    16)வருங்கால உணர்தல் என்பது என்ன? இன்றைய சூழலில் வருங்காலம் உணர்தல் பற்றிய சிந்தனை எந்த வகையில் மனிதகுலத்திற்கு  அவசியமாகின்றது? 

    17) வருங்கால உணர்தல் ஓர் அறிவியல் அடிப்படையில் தானே உள்ளது?

    18)’எண்ணமே பரிணாமத்தின் வாகனம்’  என்கின்ற பரிணாம அறிவியலுக்கும், வருங்காலம் உணர்தல் என்கின்ற அறிவியலுக்கும் தொடர்புள்ளதா? என்ன தொடர்பு அது?

    19) ஒருவர் வருங்காலம் பற்றி அறிவித்ததில் மற்றவர்கள் பங்கு என்ன?

    20) குறிப்பாக  மனவளக்கலைஞர்களின் பொறுப்புகளும், கடமைகளும் என்னென்ன?

     

    வாழ்க வளமுடன்!

    வாழ்க அறிவுச் செல்வம்!                   வளர்க அறிவுச்   செல்வம்!!


     

  • சிந்திக்க வினாக்கள்-330

    வாழ்க மனித அறிவு!                             வளர்க மனித அறிவு!!

    சிந்திக்க வினாக்கள்-330

                                                                                    06-05-2022-வெள்ளி

    இயற்கை/இறை மனவளக்கலைஞர்களை தடுத்தாட்கொள்ளல்

         

    பிரதானவினா(Main Question)

    ஒவ்வொரு மனிதனின் அடித்தளத்தில் இருப்பது அன்பும் கருணையும் என்கிறார் அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி அவர்கள். 

    அடைத்திருக்கும் அழுக்குகள் நீங்கி எப்போது அந்த அன்பும், கருணையும் பீறிட்டு மேலோங்குகின்றன என்கிறார் மகரிஷி அவர்கள்?

    துணைக் கேள்விகள்(Sub questions)

    1. என்ன கூறுகிறார் மகரிஷி அவர்கள்?
    2. ஒவ்வொரு மனிதனும் சமுதாயப் பிராணியாகத்தான்(social being) வாழவேண்டியிருப்பதால் துன்பமில்லாமல் இன்பமாக வாழ்வதற்கு பிணக்கில்லா இணைக்கத்தை ஏற்படுத்தும் ஒவ்வொருவரிடமுள்ள அன்பும் கருணையும் மேலோங்கித்தானே ஆக வேண்டும்?!
    3. ஒவ்வொரு மனிதனுமே மற்றவரிடம் அன்பையும் கருணையையும் தானே எதிர்பார்க்கின்றான்.  அப்படியிருக்கும்போது தான்   எதனை மற்றவரிடம் எதிர்பார்க்கின்றானோ  அதனைத் தானே இவனும் மற்றவருக்குத் தரவேண்டுமல்லவா? இது இயற்கை நியதிதானே?
    4. அடித்தளம் என்றால் என்ன?
    5. ஒவ்வொருவரிடமும் அடித்தளத்தில் அன்பும், கருணையும் உள்ளது என்பது எந்த அடிப்படையில் அமைந்துள்ளது?
    6. பீறிட்டு’ என்றால் என்ன?
    7. மேலோங்குதல்’ என்றால் என்ன?
    8. சஞ்சித அழுக்கு மூட்டையில் விலங்கினப்பண்பையும் இருப்பாகக் கொண்டு பிறந்த மனிதனிடம் அன்பும் கருணையும் எப்போது பீறிட்டு மேலோங்கும் என்கிறார்?
    9. ‘அறிந்தது சிவம்; மலர்ந்தது அன்பு’  என்கின்ற ஆன்றோர் மொழியைப்  பிரதிபலிக்கும் புனித நிகழ்வல்லவா அன்பும் கருணையும் பீறிட்டு மேலோங்குவது?
    10. இந்நிலை மேலோங்குவதற்கு, தவம், தற்சோதனை பயிற்சிகள் தவிர வேறு ஏதேனும் பிரத்யேகப் பயிற்சி/பாடம் உள்ளனவா? அந்த பயிற்சிக்கு/பாடத்திற்கு  என்ன பெயர் வைத்துள்ளார்?
    11. தனக்கு வாழ்வில் ஏற்பட்ட எந்த இரண்டு வாழ்க்கை நிகழ்ச்சிகள் அந்தப் பாடத்தை  மனவளக்கலையில் அமைக்கவைத்தது?
    12. அந்த   வாழ்க்கை நிகழ்ச்சிகளால்   கண்டுபிடிக்கப்பட்ட  ‘உணர்ச்சி அறிவை வெல்வது இயல்பு’ எனும் மானுட இயல்பை  ‘அறிவால் உணர்ச்சியை   வெல்வது உயர்வு’ என்கின்ற முழுமனிதப்பண்பாக மாற்றியமைக்க, முயன்று பயிற்சி செய்து வெற்றியடைந்து  நற்பேறு பெற்றதன்  விளைவாகப் பெற்ற அந்த அனுபவமே மனவளக்கலையில்  பாடமாகியதன் பெயர் என்ன?
    13. அழுக்குச்சாமி, பாரதியாரிடம் வந்து தான் சுமந்துவந்த அழுக்கு மூட்டையை இறக்கி வைத்துவிட்டு  “நான் என் அழுக்கு மூட்டையை இறக்கிவிட்டேன்.  நீ எப்போது உன் அழுக்கு மூட்டையை இறக்கிவைக்கப்போகிறாய்?” என்று வினவிய  நிகழ்ச்சியின் வாயிலாக இறையருள் பாரதியாரை தடுத்தாட்கொண்டதுபோல் அல்லவா உள்ளது இறைநிலை வேதாத்திரி மகரிஷி அவர்களை தூதுவராக்கி மனவளக்கலைஞர்களை ஒட்டுமொத்தமாக(enmass)  தடுத்தாட்கொள்வது உள்ளது மகரிஷிஅவர்களின் இக்கூற்று?
    வாழ்க  அறிவுச்செல்வம்!                                              வளர்க அறிவுச் செல்வம்!!

     

     

  • சிந்திக்க வினாக்கள்-329

    வாழ்க மனித அறிவு!                                                                 வளர்க மனித அறிவு!!

    சிந்திக்க வினாக்கள்-329

    13-04-2022-புதன்

    Vallalar - Prosper Spritually

    அருட்பிரகாச வள்ளலாரின் கடைசி செய்தி என்ன?

    (இதற்கான விடையை அடுத்த சத்சங்கத்தில் அறிந்து கொள்வோம்)

    வாழ்க வளமுடன்!

    வாழ்க அறிவுச்செல்வம்!                                        வளர்க அறிவுச்செல்வம்!!


     

     

     

     

  • சிந்திக்க வினாக்கள்-328

    வாழ்க மனித அறிவு!                                                                 வளர்க மனித அறிவு!!

    சிந்திக்க வினாக்கள்-328

    ஆசை பேராசையாக  மாறும் நிலை

    31-03-2022-வியாழன்

                               

    வாழ்க வளமுடன்!

                           பிரதான வினா(Main Question): 328

     

    மெய்யுணர்வோடு இணைந்து இயங்காத எந்த ஆசையும் பேராசையாகத்தான் முடியும் என்று  வேதாத்திரி மகரிஷி அவர்கள் எதன்  அடிப்படையில்  கூறுகிறார்?

    துணைக் கேள்விகள்(Sub questions)

    1. இக்கூற்றினில் ஐயம் உள்ளதா?     

    2. இதில் எச்சரிக்கை உள்ளதா? என்ன எச்சரிக்கை? 

    3. அவ்வளவு துல்லியமாக வாழ்க்கையை நடத்த வேண்டுமா?  அறிவு அந்த துல்லியத்தை எங்கிருந்து பெறுவது?  அல்லது எவ்வாறு பயிற்சி செய்வது? சிரமமாக இருக்குமே?!  அமைப்பு(pattern), துல்லியம்(precision), ஒழுங்கமைப்பு(regularity) ஆகிய முக்கண்களைக் கொண்ட பேரறிவேதான் மனித அறிவாக இருக்கும்போது சிரமம் இருக்குமோ?

    4. ஆசைக்கும், பேராசைக்கும் உள்ள வரையறை என்ன?

    5. பேராசை கூடாது என்கின்றபோது இக்கூற்றினை எவ்வாறு ஆராய்ந்து எதனை நடைமுறைக்குக் கொண்டு வருவது?

    6. மெய்யுணர்வு என்றால் என்ன?

    7. ‘மெய்யுணர்வோடு இணைந்து இயங்காத’ என்றால் என்ன பொருள்?

    8. ‘விழிப்புணர்வுடன் இணைந்து இயங்காத’ எனக் கொள்ளலாமா?

    9. விழிப்புணர்வு அயராது எப்போதும் அயராவிழிப்புணர்வோடு இருக்க வேண்டும் என்கிறாரா?

    10. ‘சீரமைக்காத ஆசை பேராசையாக முடியும்’ என்கிறாரா?

    11. விழிப்புணர்வு இல்லாது ஆசைப்படும்போது அது  பேராசையாக முடியும் என்கிறாரா?

    12. அயராவிழிப்புணர்வும் மெய்யுணர்வும் ஒன்றா? வேறு வேறா?

    13.  சிந்தனைப் பயிற்சி என்பதால் ஒரு கூற்றினை(information)  உறுதிப்படுத்தி (confirmation) நடைமுறைக்கு கொண்டுவர (transformation)இவ்வளவு துணைக்கேள்விகளுக்கும் விடை காணவேண்டுமா?

    வாழ்க வளமுடன்!

    வாழ்க அறிவுச்செல்வம்!                                        வளர்க அறிவுச்செல்வம்!!


     

     

     

     

  • சிந்திக்க வினாக்கள்–327

    வாழ்க மனித அறிவு!          வளர்க மனித அறிவு!!

    lotus

    சிந்திக்க வினாக்கள்–327

    28-03-2022 – திங்கள்

     

    gurudevar

    எதிர்பார்த்தலில் எந்த நான்கும் ஒத்து வராது என்கிறார் மகரிஷி அவர்கள்? எவ்வாறு ஒத்து வருவதில்லை?

    வாழ்க அறிவுச் செல்வம்!                                            வளர்க அறிவுச் செல்வம்!!

  • சிந்திக்க வினாக்கள்-326-எண்ணமும் பரிணாமமும்

     

    வாழ்க மனித அறிவு!                                                                 வளர்க மனித அறிவு!!

     

    lotus

    சிந்திக்க வினாக்கள்-326

    எண்ணமும் பரிணாமமும்

                                                                                           24-03-2022-வியாழன்                            

    வாழ்க வளமுடன்!

    பிரதான வினா(Main Question): 326 

    எண்ணமே பரிணாமத்தின் வாகனம்’ என்பது எப்படி?

    துணை வினாக்கள் (Sub questions):

    1) பரிணாமம் அதாவது தன்மாற்றம் என்பது என்ன?

    2) எண்ணம் என்பது என்ன?

    3) எண்ணத்திற்கும்  பரிணாமத்திற்கும் தொடர்பு இருக்க முடியுமா?

    4) எதற்காக இயற்கை இரண்டிற்கும்  தொடர்பு வைத்துள்ளது?  இயற்கை எண்ணத்திற்கும் பரிணாமத்திற்கும் தொடர்பு வைத்துள்ளது என்று சொல்வதைவிட ,  எண்ணத்திற்கும் பரிணாமத்திற்கும் தொடர்பு இயற்கையிலேயே  உள்ளது. அவ்வாறெனில்   அது  எதற்காக என்று மனித அறிவு கேட்கின்றது?

    5) பரிணாமத்திற்கு  வாகனம்    என்றால் என்ன பொருள்?

    6) பரிணாமம் இன்னும் பூர்த்தியாகவில்லை என்கிறார்களே, அது சரியா?

    7) பரிணாமத்திற்கு பூர்த்தியாதல் என்பது உண்டா?

    8) பரிணாமத் தோட்டத்தில் கடைசியாக பூத்த மலர் மனிதன் என்கின்றபோது பரிணாமம் பூர்த்தியாகி விட்டதுதானே?!

    9) இயற்கையில் பரிணாமம் பூர்த்தியாக வேண்டுமெனில் எந்த எத்திசையில்(direction) பூர்த்தியாகும்?

    10)  அதனால் மனிதகுலத்திற்கு என்ன நன்மை ஏற்பட  உள்ளது?

    11) பரிணாமத்திற்கு நம் எண்ணம் அவசியமா?

    12) அவசியமெனில் நாம் எவ்வாறு  பரிணாமத்திற்கு உதவலாம்? 

    13) பரிணாமத்திற்கு உதவி புரிவது என்பது இயற்கைக்கே/இறைக்கே துணைபுரிவதாகுமன்றோ?! 

    14) இயற்கையின்/இறையின்  மனிதஇன பரிணாமத்தொழிற்சாலையில்  மனிதனும் பங்குதாரர்தானே(partner)!? இயற்கை, இறை,  மனிதன் வேறா என்ன? சொல்லுங்களேன்!

    15) பரிணாமத்திற்கும் இயல்பூக்கத்திற்கும் தொடர்பு உள்ளதா?  உள்ளது எனில் எவ்வாறு தொடர்பு உள்ளது?

    16) இயல்பூக்கம் தொடர்ந்து நடைபெற்று இயல்பு முழுவதுமாக வெளிப்பட   மனித   எண்ணம் எவ்வாறு துணையாக இருக்கலாம்? 

    17)  “Fraction demands Totality supplies” என்று வேதாத்திரி மகரிஷி அவர்கள் கூறுவதனை இப்போது இங்கு நினைவு கூர்வது பொருத்தமாக இருக்குமன்றோ?!  வாழ்க வையகம்!  வாழ்க வளமுடன்!!

    18) மேலும் ஏதாவது வினாக்கள் உங்களுள் இருந்தால் அவ்வினாக்களையும் எழுப்பி ‌நீங்களே சிந்திக்கலாமே!

     

    வாழ்க அறிவுச் செல்வம்!                                    வளர்க அறிவுச்   செல்வம்!!


     

     

  • சிந்திக்க வினாக்கள்-325–எண்ணம்

    வாழ்க மனித அறிவு                            வளர்க மனித அறிவு

    எண்ணம்

    சிந்திக்க வினாக்கள்-325

                                                                                              21-03-2022-திங்கள்

                                                                                               உ.ச.ஆ.21-03-2037 

    வாழ்க வளமுடன்!

    பிரதான வினா(Main Question): 325

             எண்ணமே இயற்கையின் சிகரம்,    இயற்கையின் உச்சமே எண்ணம் என்று எப்படிக்  கூறுகிறார் வேதாத்திரி மகரிஷி அவர்கள்?

    துணை வினாக்கள் (Sub questions):

    1)  எண்ணம் என்பது என்ன?

    2)  எண்ணத்திற்கும் இயற்கைக்கும் உள்ள தொடர்பு என்ன?

    3) எண்ணம் எவ்வாறு தோன்றுகின்றது?

    4)  எண்ணத்தைப் பற்றி  மனிதகுலம் ஏன், என்ன அறிந்துகொள்ள வேண்டும் என நினைத்து 28 கவிகளை(ஞா.க. 6.23. 1525—1552) வேதாத்திரி மகரிஷி அவர்கள் அருளியுள்ளார்? நேரம் ஒதுக்கி,  நேரம் கிடைக்கும்போது, அனைத்து கவிகளையும்  வாசித்து பயனடையலாமே!

    5) இன்று மனிதகுலம் வாழ்ந்துகொண்டிருக்கின்ற சூழலில் எண்ணத்தைப் பற்றி மனிதன் அறிந்துகொள்ள வேண்டியது  அவசியமாகின்றதா?  எப்படி?

    6) மனவளக்கலையில்  தற்சோதனைப் பயிற்சியில் எண்ணம் ஆராய்தல் பயிற்சியினை ஏன் முதலாவதாக வைத்துள்ளார் வேதாத்திரி மகரிஷி அவர்கள்?

    7) வேறு ஏதேனும் வினாக்கள் உங்களுள் எழுந்தால் அதனையும் எழுப்பி ஆராய்ந்து விடை காணவும்.

    வாழ்க வளமுடன்!

     

    வாழ்க அறிவுச் செல்வம்!               வளர்க அறிவுச்   செல்வம்!!

     

  • விழிப்பு நிலை -சிந்திக்க வினாக்கள்-324

    வாழ்க மனித அறிவு!                                       வளர்க மனித அறிவு!!

    விழிப்பு நிலை

    சிந்திக்க வினாக்கள்-324

                                                                           19-03-2022-சனி                            

    வாழ்க வளமுடன்!

     

    பிரதான வினா(Main Question): 324

    ஏன் வேதாத்திரி மகரிஷி அவர்கள் ஐயுணர்வில் மயங்குவதை வேரறுந்த மரத்திற்கு ஒப்பிடுகிறார்?

    துணை வினாக்கள் (Sub questions):

    1) மயக்க நிலையில் உணர்வு இருக்காது.  ஆனால் இங்கே ஐயுணர்வில் மயங்குதல் என்கின்றாரே வேதாத்திரி மகரிஷி அவர்கள்!? ஐயுணர்வில் மயங்குதல் எனில் உணர்வு இருக்கின்றதே!  அப்படியானால் அவர் கூறும் மயங்குதல் என்றால் என்ன பொருள்? ஐவகை மயக்கமா?

    2) வேரறுந்த செடிக்கு ஒப்பிட்டிருக்கலாம்?  ஏன் வேரறுந்த மரத்திற்கு ஒப்பிடுகிறார்? அவ்வாறு ஒப்பிடுவது கவிஞரின், (அதுவும் அருட்கவிஞரின்)  சுதந்திரமோ?! அவருக்கு இயற்கை/இறை கொடுத்த வார்த்தையோ?!  அல்லது இதில் நாம் புரிந்துகொள்ள வேண்டியது உள்ளதோ!?

    3) வேரறுந்த மரத்தோடு ஒப்பிடுவதில்  என்ன புனிதம்(முக்கியத்துவம்) உள்ளது?(Is there any sanctity in it?)

     

    வாழ்க அறிவுச் செல்வம்!                    வளர்க அறிவுச்   செல்வம்!!

    குறிப்பு: நாளை(20.03.2022) சத்சங்க நிகழ்ச்சியில் அறிவிற்கு விருந்து(Feast for Consciousness) நடைபெறும்.  அதில் இடம் பெறும் தலைப்பு ‘வேதாத்திரியார் ஓர் அகராதி’ மூன்றாம் பகுதி.  பகிர்ந்துகொள்ள கலந்துகொள்ளவும்.  வாழ்க வளமுடன்!