வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு
19-12-2015—சனி
இருட்டாக இருக்கும்போதே விடியலை உணர்ந்து பாடத் துவங்கும் பறவையைப் போன்றது நம்பிக்கை.
….. ஓர் அறிஞா்
பயிற்சி—
1) நம்பிக்கை எல்லோருக்கும் அவசியம்தானே?
2) இறையுணர் ஆன்ம சாதகா்களுக்கு இந்த அமுத மொழி எவ்வாறு உதவியாக இருக்கும்?
3) அறிஞர் நம்பிக்கை பற்றி தெரிவிக்க எடுத்துக் கொண்ட உவமானத்தை ரசிக்கவும். இது போன்று சிந்திக்க சிந்திக்க மகிழ்ச்சியினைக் கொடுக்கும்.
வாழ்க அறிவுச் செல்வம் வளா்க அறிவுச் செல்வம்
முக்கிய அறிவிப்பு
வாழ்க வளமுடன், 16-12-2015
அடுத்த அறிவிற்கு விருந்தில் (20-12-2015 ஞாயிறு) ‘சிந்திக்க வினாக்கள்’ பகுதியில் வந்துள்ள வினாவிற்கான விடையை அறியலாம். படித்துவிட்டு தங்களின் மேலான கருத்துக்களை மற்ற சத்சங்க உறுப்பினர்கள் அறியும் வகையில் ‘உங்கள் கருத்துக்கள்’ பகுதி வழியாக இணைய தளத்திற்கு அனுப்பும்படி அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகின்றது.
வாழ்க வளமுடன்