வாழ்க மனித அறிவு! வளர்க மனித அறிவு!!
சிந்திக்க அமுத மொழிகள்- 324
01-08-2020 — சனி
ஆனந்தம் நம் உள்ளத்தில் எந்த அளவுக்கு மறைமுகமாக உண்டாகின்றதோ அந்த அளவுக்கு நாம் ஆன்மீக வாழ்வில் முன்னேற்றம் உடையவர்களாக இருக்கிறோம்.”
-சுவாமி விவேகானந்தர்.
பயிற்சி:
- என்ன கூறுகிறார் சுவாமி விவேகானந்தர்?
- ஆன்ம சாதனையில் ஆனந்தம் ஏன் மறைமுகமாக ‘உண்டாகிறதோ’ எனக் கூறுகிறார்?
- நேரடியாக ஆனந்தம் தெரியாதா? மறைமுகமாகத் தான் இருக்குமா? மறைமுகமாக உண்டானால் எப்படி ஆன்மசாதகன் அறிந்துகொள்ள முடியும்?
- ஆன்ம சாதனையில் ஏற்படும் முன்னேற்றத்திற்கு அளவுகோலா?
- ஆன்மசாதகனுக்கு மறைமுகமாக உண்டாகும் ஆனந்தம் தெரியவந்தால் விளக்கப்பதிவு வலிமை பெற்று வருகின்றது என்றுதானே பொருள்?
- பழக்கப்பதிவு வலிமை இழந்து வருகின்றது என்றுதானே பொருள்?
- உள்ளத்தில் ஆனந்தம் உண்டானால், அன்னமய கோசம் மற்றும் மனோமய கோசத்தில் மட்டுமே இயங்கிவந்த ஆன்ம சாதகனின் ஆன்மா, அவற்றையெல்லாம் கடந்து, பிராணமய கோசம், விஞ்ஞானமய கோசம் மற்றும் ஆனந்தமய கோசத்திற்கு வந்துவிட்டது என்றுதானே பொருள்?
- பலன் ஏதும் இல்லாமல் எந்த ஒரு செயலையும் எவ்வாறு தொடரமுடியும்? அவ்வாறிருக்க ஆத்ம சாதகனுக்கு அந்த மறைமுக ஆனந்தம்தானே பயிற்சியை தொடர்ந்து செய்வதற்கு ஊக்கம் தரும்?
- இந்த அமுதமொழி ஆன்மசாதகர்களுக்கு ஊக்கம் அளிக்கிறதல்லவா?
வாழ்க திருவேதாத்திரியம்! வளர்க திருவேதாத்திரியம்!!
வாழ்க அறிவுச் செல்வம்! வளா்க அறிவுச் செல்வம்!!