சிந்திக்க வினாக்கள்-331-வருங்காலம் உணர்தல்

வாழ்க மனித அறிவு!                                 வளர்க மனித அறிவு!!

சிந்திக்க வினாக்கள்-331

15-05-2022-ஞாயிறு        

வருங்காலம் உணர்தல்

                                                           

வாழ்க வளமுடன்!

பிரதான வினா(Main Question): 331  – (993rd Posting)

எந்த அடிப்படையில்,  வருங்காலத்தை உணர்தல் ஒரு வியப்பிற்கான செயலே அல்ல என மானுடத்தை உள்ளடக்கிய இயற்கைக்கு  இயல் ஏற்படுத்தித் தந்துள்ள  வேதாத்திரி மகரிஷி அவர்கள் கூறுகிறார்?

துணை வினாக்கள் (Sub questions):

1) வியப்பில்லை என்றால் வருங்காலம் உணர்தல் என்பது ஒரு சாதாரண நிகழ்ச்சிதான் அல்லவா? ESP(Extra Sensory Perception) இல்லைதானே!?

2) சாதாரண நிகழ்ச்சி என்றால் எல்லோருக்கும் இது சாத்தியம்தானே!?

3) எல்லோருக்கும் சாத்தியமில்லை எனில் யார் யாருக்கு  வருங்கால உணர்தல் சாத்தியம்?

4) வருங்கால உணர்தல் நிகழ்வதற்கு  ஏதாவது நிபந்தனைகள் உண்டா?

5) எப்படி அவர்களுக்கு மட்டும் சாத்தியமாகின்றது?

6) அவர்கள்  தனிப்பிறவிகளா?

7) வருங்காலம் உணர்தல் ஒரு சாதாரண நிகழ்ச்சி என்று  எந்த அடிப்படையில் மகரிஷி அவர்களால் மட்டுமே கூறுமுடிகின்றது?  பால பருவத்திலேயே இயற்கை/இறை நான்கு மகோன்னத கேள்விகளை*   அவருள் எழுப்பியதல்லவா?

(* மகானாக்கிய  மகோன்னத கேள்விகள்:  1. இன்பம், துன்பம் என்பது என்ன? அவைகள் எவ்வாறு வருகின்றன? 2. உயிர் என்பது என்ன? 3. கடவுள் என்பவர் யார்? அவர் ஏன் இந்த பிரபஞ்சத்தைப்(universe) படைத்தார்? 4.வறுமை ஏன் வருகின்றது?)

8) மனவளக்கலைஞர்களுக்கு வருங்காலம் உணர்தல் என்பது சாத்தியமா? எப்படி? எவ்வாறு?

9) மகரிஷி அவர்கள் தான் அனுபவித்ததைத்தான் சமுதாயத்திற்குத்  தெரிவிப்பார் என்பதால் வருங்கால உணர்தலாக  மகரிஷி அவர்கள்  கூறியுள்ளது என்னென்ன?

10)  இதுவரை அவர் கூறியது என்னென்ன நடந்துள்ளன?

11) என்னென்ன நடக்க வரிசையில் காத்திருக்கின்றன?

12) “ஓருலக ஆட்சி வரும் என்று நான் நினைத்துவிட்டேன். ஓர் உலக ஆட்சி வந்தே தீரும்”   என்று மகரிஷி அவர்கள் கூறியுள்ளது வருங்கால உணர்தல் தானே?!

13) ‘வருங்காலம் உணர்தல்’பற்றி ஒருவருக்கு மட்டுமேவா பொறுப்பு?  மற்றவர்களின் பொறுப்பு என்ன அதில் உள்ளது?

14) வருங்கால உணர்தல் யாரால் நிகழ்கின்றது? இயற்கையால்/இறையால் நிகழ்கின்றதா அல்லது மனிதனால் நிகழ்கின்றதா?

15) வருங்கால உணர்தல் எப்போது, எவ்வாறாக நிகழ்கின்றது?

16)வருங்கால உணர்தல் என்பது என்ன? இன்றைய சூழலில் வருங்காலம் உணர்தல் பற்றிய சிந்தனை எந்த வகையில் மனிதகுலத்திற்கு  அவசியமாகின்றது? 

17) வருங்கால உணர்தல் ஓர் அறிவியல் அடிப்படையில் தானே உள்ளது?

18)’எண்ணமே பரிணாமத்தின் வாகனம்’  என்கின்ற பரிணாம அறிவியலுக்கும், வருங்காலம் உணர்தல் என்கின்ற அறிவியலுக்கும் தொடர்புள்ளதா? என்ன தொடர்பு அது?

19) ஒருவர் வருங்காலம் பற்றி அறிவித்ததில் மற்றவர்கள் பங்கு என்ன?

20) குறிப்பாக  மனவளக்கலைஞர்களின் பொறுப்புகளும், கடமைகளும் என்னென்ன?

 

வாழ்க வளமுடன்!

வாழ்க அறிவுச் செல்வம்!                   வளர்க அறிவுச்   செல்வம்!!