அறிவிற்கு விருந்து2/2-25-10-2017
வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு
அ.வி.261
25-10-2017-புதன்
அறிவிற்கு விருந்து2/2
அவ்வையார் கூறும் அந்த அறிவினர் யார்?
அருட்தந்தை வேதாத்திரி மகரிஷிகளே ஆவார். ஆன்மீக உலகில் பல அறிவினர்கள் தோன்றியிருந்தாலும் சமீபத்தில் இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்த நம்மை அருள் துறையில் ஊக்குவித்து உயர்த்தி, சிறந்து விளங்க வைத்து, அவர் நிலைக்கு உயர்த்துவதற்காக கருணையான நல்லெண்ணம் கொண்ட இறையின் அவதாரமான மகரிஷி அவர்களே ஆவார்.
அவ்வையார்கூறும்அப்படிப்பட்டஅறிவினர்யார்?
ஏறக்குறைய நாற்பத்துஏழு ஆண்டுகளுக்கு முன்னர் ஆயிரத்து தொள்ளாயிரத்து எழுபதாம் ஆண்டு அன்பர்களுக்கு அழைப்பு விடுத்துள்ள வேதாத்திரி மகரிஷிகளாவார். அவரது அழைப்பை நினைவு படுத்திக் கொள்வோமே.
ஆகவே, பலநூற்றாண்டுகளுக்கு முன்னர் அவ்வையார் “அறிவினரைச் சேர்வது இனியது” என்று கூறியது இப்போது, இந்தநூற்றாண்டில், அறிவை அறிந்து அனுபவித்து, “அறிவின் இருப்பிடம் அறிந்து இன்பமுற, “அன்பர்களேவாரீர்” என உலக மக்கள் அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ள வேதாத்திரி மகரிஷி அவர்களின் வாயிலாக இயற்கை நடத்திக் கொண்டிருக்கின்றது. வாழ்க வேதாத்திரி மகரிஷியின் அறிவாற்றல்.
வேதாத்திரியம் ஒரு பாரிஜாத மலர்:
வேதாத்திரியம் என்ன விருந்து படைக்கின்றது என்று வினவினால், வேதாத்திரியம் ஒரு பாரிஜாதமலர் என்பதுதான் பதில். ஒரு புராணக்கதையில் வரும் பாரிஜாதமரம் போன்றது வேதாத்திரியம்.
அந்தப்புராணக்கதைக்கூறுவது: தேவலோகத்தில் பாரிஜாதமரம் உள்ளதாகவும், அம்மரத்தில் பூக்கும் பாரிஜாதமலர் விரும்பியதை எல்லாம் கொடுக்கும் என்று அக்கதை கூறுகின்றது. மகரிஷியின் அறிவாற்றல், அதாவது வேதாத்திரியம் ஒரு பாரி ஜாதமலரைப் போன்றது. அப் பாரிஜாதமலரில் அறிவுத்தேன் நிரம்பிவழிகின்றது. அறிவிற்கு வேண்டிய விருந்தைத் தரும் மகரிஷியின் அறிவாற்றல். அறிவுத் தேனிக்களாகிய நாம் எல்லோரும் பருகிக்கொண்டு ஆனந்த போதையில் உள்ளோம். யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்பதற்கேற்ப, அவ்வறிவுத் தேனை மற்றவர்களும் பருகி ஆனந்தமடைய வழிகாட்டும் அறிவுத்தொண்டாற்றி மகிழ்ந்து, எப்போதும் இறைஅருளுக்குப்பாத்திரமாகி, அதே நேரத்தில் இப்பிறவிப்பயனை அடுத்தப்பிறவிக்கு தள்ளிப்போடாமல், இப்பிறவியிலேயேப் பெற்றிடுவோம். ஆம்! இப்பிறவியிலேயேப்பெற்றிடுவோம்!
அறிவிற்கு விருந்தை எவ்வாறு தயார் செய்து அருந்த வேண்டும் எனத்தோன்றும்! அவ்வையார் கூறுவது போன்று மூன்றாம்நிலை இனியதைக் கொடுக்கக் கூடியதான அறிவினரைச் சேர்ந்து, நான்காம்நிலையும் இறுதியானதுமான அறிவினரைக் கனவிலும், நனவிலும் காண்பதாலும் அறிவிற்கான விருந்தை அருந்த முடியும். வயிற்றுக்கு விருந்து நாவிற்கு மிகுந்த சுவையைத் தரும். வயிற்றுப் பசியினைப் போக்கும். வயிறு, உணவிலுள்ள சாறை உடல் வளர்ச்சிக்காக எடுத்துக்கொண்டு, சக்கையை மலமாக வெளியே அனுப்பி விடுகின்றது. இப்படியாக வளர்ந்து வந்த உடல் மீண்டும் பஞ்ச பூதங்களாகி மறைந்து விடுகின்றது(மரணம்).
ஆனால் அறிவிற்கு அளித்த விருந்து அப்படியாவதில்லை. உடல் அழிந்தாலும் அறிவிற்கு அளித்த விருந்து வம்சாவளி வம்சாவளியாகச் சென்று கொண்டிருக்கின்றது. எப்படி? கருமையத்தின் தரத்தை மேம்படுத்து வதற்காக அறிவிற்கு விருந்து அளிப்பதால், அளிக்கும் ஒவ்வொரு விருந்தும் அதற்குரிய தரமாற்றத்தை அளிக்கின்றது. அந்த தரமாற்றம் என்றுமே அழியாத ஆன்மாவாகிய கருமையத்தில் பதிவதால், அந்த கருமையத்தின் செராக்ஸ் நகலே ஒருவரின் அடுத்த வம்சாவளி என்பதால் அறிவிற்கு அளிக்கும் விருந்தால் ஏற்படும் தரஉயர்வு தன்னுடைய வம்சாவளிக்குச் சென்றடையும். இவ்வாறாகத்தான், நல்ல தரமுள்ள வம்சாவளியை உருவாக்குவதன் மூலம் மனிதகுலத்தை உய்யச் செய்ய முடியும். இஃதன்றி மனிதகுலத்தை எவ்வாறு உய்வடையச் செய்ய முடியும்? இது இயற்கையின் புனித ஏற்பாடு.
அறிவிற்கு விருந்து தெளிவினைத் தரும். அது அறிவிற்கு ஆனந்தத்தைத் தரும். அதனால்தான் அவ்வையார் அறிவினரைச் சேர்ந்திருக்கச் சொல்கிறார். அறிவினர் என்று அவ்வையார் கூறுவது அறிவையறிந்த குருவைச் சோ்ந்திருக்கச் சொல்கிறார். அறிவையறிந்த குருவை அடைதலின் பயனை, திருமூலர் அருளிச் செய்துள்ள பாடலின் மூலம் நினைவிற்குக் கொண்டுவருவோம்.
குருஅருளேதிருவருள்
அவ்வைத் தாய் கூறுவதனையும் நினைவுபடுத்திக்கொள்ளலாம்.
தினசரி வாழ்வில் கடைபிடிக்க வேண்டிய நீதிகள்
ஆத்திச்சூடி
- சான்றோர் இனத்து இரு. (சான்றோர்களிடம் சேர்ந்திரு)
- பெரியாரைத் துணைக் கொள். (அறிவிற் சிறந்த பெரியவா்களை உனக்குத் துணையாக வைத்துக்கொள்)
- மேன்மக்கள் சொல் கேள். (உயர்ந்தவர்களுடைய சொல்லைக்கேட்டுநட)
- மூத்தோர் சொன்ன வார்த்தை அமிர்தம்.(பெரியவர்கள் சொன்ன வார்த்தை தேவாமிர்தம் போல் இன்பம் செய்யும்)
பொருள்: நல்லாரைக் காண்பது, அவர் சொல்லைக் கேட்பது, அவர் குணங்களைப் பேசுவதும், அவரோடு கூடியிருப்பது நமக்கு நல்லறிவையும் நல்லொழுக்கத்தையும் உண்டாகும். உலகநீதி
மூத்தோர் சொன்ன வார்த்தைகளை மறக்க வேண்டாம்” …..என்கிறார் உலகநாதர்.
மனிதனுக்கு வேண்டிய 133 அறிவிப்புகள்:
திருவள்ளுவர் 133 அதிகாரங்களை இயற்றியுள்ளார் என்றால் என்னபொருள்? அந்த 133 அதிகாரத் தலைப்புகள் தெரிவிப்பவைகள் அத்தனையும் மனிதனுக்கு அவசியமானது. சொல்ல வேண்டிய ஒரு வாழ்வியல் உண்மையை ஒரு குறளிலே சொன்னால் அது போதாது என்று எண்ணி பத்து கோணங்களில் கூறுவதற்குப் பத்து குறட்பாக்களில் கூறியுள்ளார். ஒழுக்கத்திற்கென்று தனி அதிகாரத்தை ஒதுக்கி பத்து குறட்பாக்களை அருளியுள்ளார். அதுபோல் அறிவைப் பற்றி பத்து பாக்களில் கூறி அறிவுடைமை அதிகாரத்தை ஏற்படுத்தியுள்ளார்.
சமுதாயம் அதனைக் கண்டு கொள்ளவே இல்லை!?:
இயற்கை, தனது மனிதகுலத் தன்மாற்ற தொழிற்சாலையில், விலங்கினப்பண்பால் மனிதகுலத்திற்கு வந்துவிட்ட பரிணாமக்கசடுகளை நீக்க, அறிஞர்கள் வழியாக அறநெறி அறவுரைகள் வழங்கினாலும் சமுதாயம் அதனைக் கண்டு கொள்ளவே இல்லை. எப்படி, உடலுக்கு நோய் வந்தால் மருந்தைக் கொண்டு சரி செய்து கொள்ள மனித சமுதாயம் கண்டுபிடித்துள்ளதோ அதுபோல், பிறவிப்பிணிக்கு, இயற்கை இவ்வளவு அறநெறிகளை தனது மூத்த குழந்தைகளில் ஒரு சிலர் வழியாகத் தெரிவித்து வந்தாலும் மனித சமுதாயம்அதனை ஏற்றுக் கொள்வதில்லை. கைமேல் பலன் தரும் புலனின்பத்தை அனுபவித்துக் கொண்டு துன்பத்துக்குள்ளாகின்றது. இதனைத்தான்அறிஞர்கள் எல்லோருமே புலன்மயக்கம் என்கின்றனர்.
எனவே புலன் இன்பம் மட்டுமே அனுபவிக்க ஆன்மா இந்த உடல் எடுக்க வில்லை. அதுதான் பிறப்பிற்கானக் காரணம் என்றால், ஆன்மா மீண்டும், மீண்டும் பிறவி எடுத்து வெறும் பிறப்பு-இறப்புசூழலில் (cycle mere of birth and death only?) சிக்கித் துன்பக் கடலில் தத்தளிக்கவேண்டுமா? சலிப்பிற்கும், நடைமுறையில் மனிதனால், அளவும், முறையும் கடைபிடிக்க முடியாமல் வரும் துன்பங்களுக்குக் காரணமான புலன் இன்பம் மட்டுமே அனுபவிக்கும் அற்ப நோக்கத்திற்காகவா, எல்லாம் வல்ல இறை ஆதி மனிதனிலிருந்து இன்றுவரை, கடலிலுள்ள நீர்த்துளிகள் எவ்வளவு என்று கணக்கிட முடியாதோ, அதுபோல், ஆதிமனிதனிலிருந்து இன்று வரைக் கணக்கிட முடியாத அளவில் பல கோடிகோடி மக்களாக வெறும், பிறப்பு –இறப்பு சுழற்சிக்காகவா தன்மாற்றம் அடைந்தது? இதிலே என்ன ரசனை இருக்கின்றது இறைக்கு? அல்லது இருக்கமுடியும்!
முகம் பார்க்க கண்ணாடி வேண்டும்:
இறையாகிய பேரறிவு, ஆதிநிலையில் வெளியாக இருந்தபோது இல்லாத சிறப்பினை மனிதவடிவில் தன்னை அறியும் போது பெறுகின்றது. இந்த சுத்த அத்வைத தத்துவத்தை நமக்குத் தெளிய வைப்பதற்கு, மனிதனை “Man is a sophisticated God” என்பார் மகரிஷி அவர்கள்.
God = man-impurities’ என்பார் மகரிஷி .
Man is none other than God but with impurities such as ego, sinful imprints and maya.
வெட்ட வெளியில் பேரறிவிற்கு உணர்வு கிடையாது. உணர்வு அடக்கமாக இருந்தது. ஆகவே பேரறிவிற்கு, மனிதனாகி இப்போது தன்னை உணர்ந்து பேரின்பம் அடைகின்ற நிலை, வெட்டவெளியாக இருந்த போது கிடையாது. இயற்கை இரகசியங்களை மனித அறிவின் மூலமாக அறிந்து மகிழ்ச்சி அடைகின்றது. முகம் பார்ப்பதற்குக் கண்ணாடித் தேவைப்படுவது போல், தன்னையே ரசிக்க பேரறிவிற்கு மனிதஉடலும், ஆறாம் அறிவும் தேவையாய் இருந்தது. முகம் பார்க்கக் கண்ணாடி வேண்டும். அழகனோ, அழகியோ தனது அழகினை இரசிக்கக் கண்ணாடி வேண்டும். கண்ணாடியே இல்லாத ஊரில் பிறந்த அழகனோ அல்லது அழகியோ எவ்வாறு தன் அழகினை இரசிக்க முடியும்?
அதுபோல், இயற்கைக்கும்/இறைக்கும் தன் சிறப்பினை யெல்லாம் அறிந்து மகிழ்வதற்கு, மனிதவடிவக் கண்ணாடி தேவைப்பட்டது.
இறைவன் கள்வன்??? !!!!
என்ன இறைவன் கள்வனா?? மேலே கூறிய சுத்த அத்வைத நிலையினை ரசித்த ஓர் அறிஞர், இறையை கள்வன் என்கிறார். ஏனெனில் இறைவன் மனிதஉடலைக் கொண்டுதான் தன்னையே இரசிப்பதால் இறையை கள்வன் என்று இறையை அனுபவித்து, துவைதத்தில் சொல்கின்றார். சொல்வது துவைதம் தான். ஆனால்அறிஞர் அனுபவித்தது சுத்த அத்வைதம். சுத்த அத்வைதத்தை அனுபவிக்காமல் இப்படியொரு “இறைவன் கள்வன்” என்கின்ற உள்ளம் பூரிப்படைந்த ஆனந்த வர்ணனை வெளிவராது.
அத்வைதியானாலும் நடைமுறையில் துவைதியாகத்தான் பேச முடிகின்றது, இருக்க வேண்டியுள்ளது. ஆனால் அத்வைத நினைப்பு அயரா விழிப்புநிலையில் இருக்கவேண்டும். உண்மையில் உடலும், அறிவும் இறைவன் தானே. மனிதன் யாரோ, அறிவு எதுவோ, கடவுள் யாரோஅல்லவே. “இறைவன் கள்வன்” என்பது அத்வைதத்தை அனுபவித்து சொல்வது மட்டும் துவைத்தில் சொல்வதாக உள்ளது. சுத்த அத்வைதத்தை ரசித்துஅனுபவித்து, சுத்த அத்வைதத்திலேயே சொல்வதென்றால் “இறையே தன்மாற்றம் அடைந்து மனிதவடிவில் அறிவாக இருந்து கொண்டு தன் பெருமைகளையும், தன்னையும்ரசிக்கின்றது. (God Himself enjoys His beauties, admirations and Himself) காஞ்சீபுரத்தில் இறைவனுக்கு கள்வன் என்கின்ற பெயரிலே கோயில் இருப்பதாகச்சொல்லப்படுகின்றது.
ஏன் அசைந்தேனோ? – இறை(வெட்டவெளி)
ஆனால் இப்பேறு பெற்ற மனிதன் புலன் இன்பங்களிலேயே மூழ்கி அல்லலுறுகிறான். வேதாத்திரி மகரிஷி அவர்கள், ஆதங்கமாகவும், வேடிக்கையாகவும் “ஏன் அசைந்தேனோ? இவ்வாறு மனித வடிவில் துன்பங்களை அனுபவிக்க வேண்டியுள்ளதே என்று இறைவன் நினைப்பான்” என்று நகைச் சுவையாக, ஆனால் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்துவார். ஆகவே ஆன்மா தனது பழிச்செயல் பதிவுகளை நீக்கிக்கொண்டு, மீண்டும் இப்பிறவியில் பழிச்செயல்கள்புரியாத அயராவிழிப்புடன் இருந்து, தன்னை உணர்ந்து, ஆன்ம உணர்விலேயே வாழ்ந்து பெருவாழ்வு வாழ்வதற்கு அறிவிற்கு விருந்தை அருந்துவதற்காக செய்ய வேண்டியவைகள் என்னென்ன?
விருந்து அருந்த அறிவுசெய்யவேண்டியவைகள்:
- முதலில் சரியான அறிவினரைத் தேடி அவருடன் இணைந்திருத்தல் வேண்டும்.
- அந்த அறிவினர் கூறும் அறநெறிகள் சரியானவையா என சுயசிந்தனையின் மூலம் வேதாத்திரி மகரிஷி அவர்கள் கூறுவது போல் “Information, Confirmation, Transformation”சோதித்து அறிய வேண்டும். அறிந்து நடந்து அதுபோல் நடக்கவேண்டும்.
- வானொலி, மற்றும் தொலைக் காட்சியின் வாயிலாக ஒலி, ஒளிபரப்பப்படும் நிகழ்சிகளான சான்றோர் சிந்தனைகளைக் கேட்க வேண்டும். செய்தித்தாளில் “அறிவோமாஆன்மீகம்” போன்ற பகுதிகளை ஆர்வமாகப் படிக்கவேண்டும்.
- மகரிஷி அவர்களின் வாழ்க்கை மலர்களிலுள்ள சிந்தனை விருந்தை அன்றாடம் தவறாமல் படிக்கவேண்டும்.
- அறிஞா்களின் அறநூல்களைத் தினந்தோறும் ஒருமணி நேரமாவது படிக்க வேண்டும்.
- சத்சங்கத்தில் நேரிடையாகக் கலந்து கொள்ளவேண்டும். வாய்ப்பில்லாதபோது அறநூல்களை தினந்தோறும் வாசிப்பதே சத்சங்கம். அந்த அறநூல்கள் அருளிய அறிஞரின் அறிவாற்றலுடன் இணைகிறோம்.
- இவைகளுக்கெல்லாம் வாய்ப்பில்லாதபோது தானே சிந்திப்பது பேரறிவோடு, சிற்றறிவு சத்சங்கத்தில் கலந்து கொள்வதேயாகும்.
நவீன தொழில்நுட்பத்தில், www.prosperspiritually.com ஏற்பாடாகி அது சத்சங்கமாகப் பயன்பட்டு, கருத்துக்கள் பரிமாறிக் கொள்ளப்படுவதற்காகவே உருவானதுதான் இந்த ‘அறிவிற்கு விருந்து’ என்கின்றபகுதி. இதனைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு உலகசகோதரிகளும், சகோதரர்களும், அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். வாழ்கவளமுடன். வாழ்க www.prosperspiritually.com வளர்க www.prosperspiritually.com.
வாழ்க அறிவுச் செல்வம் வளர்க அறிவுச் செல்வம்.