இன்றைய விருந்து

  • அறிவிற்கு விருந்து – 288

    வாழ்க மனித அறிவு!                                                                வளர்க மனித அறிவு!!

    அறிவிற்கு விருந்து – 288

                                                                                                                          29-04-2020—புதன்

     

         உண்மை ஒன்றுதான்!  இரண்டு பட்டதல்ல!!

    வாழ்க வளமுடன்!

             நேற்று செய்வாய்க்கிழமை சத்சங்கம் இல்லை.  வாரத்தில் ஒரு நாள் சத்சங்கம் இல்லை.  பரபரப்பான உலகில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.  இருப்பினும் ஆன்மீகப் பயிற்சிகளை தவறாது மேற்கொண்டு வருகிறோம்.  அப்பயிற்சிகளில் ஒன்றுதான் இந்த இணையதள சத்சங்கம்.  முதல் முறையாக ஒரு பொருள் பற்றி சிந்திக்கும்போது நேரமின்மையால் ஆழ்ந்து சிந்தித்திருக்கமாட்டோம். வேகமாக படித்திருப்போம்.  “ அறிவை அறிய நினைத்தால் அறிவுக்கு ஓய்வு இல்லை”என்கின்ற நம் குருநாதரின் பொன்னான வாக்கிற்கிணங்க நாம் படித்த ஆன்மீகக் கருத்துக்கள்  நமது அன்றாட வேலைகளிலும்கூட அவ்வேலைகளுக்கு குந்தகமில்லாமல் மனதில் சுழன்று கொண்டு தான் இருக்கும்.   இது ஓர் நல்ல திருப்பம் ஆன்ம சாதகர்களுக்கு.   இது வேறான்றுமில்லை. அயரா விழிப்புணர்விற்கு அழைத்துச் செல்கின்றது  பேரறிவு.  மனவளக்கலை பயிற்சியின் நோக்கமே அதுதானே!!!  ஆறு நாட்களில்  சிந்தித்ததை மீண்டும் ஒரு முறையோ  பல முறையோ சிந்திப்பதற்காகவே செவ்வாய்க்கிழமைகளில் சத்சங்கம் இல்லை.  ஆகவே நேற்றைய தினத்தில் ஆறு நாட்களில், புதன்கிழமையிலிருந்து  திங்கட்கிழமை வரை  சிந்தித்ததை அசைபோட்டு மேலும் மேலும் ஆழ்ந்து ஆழ்ந்து சிந்தித்திருப்போம்.

              26-04-2020— ஞாயிறு அன்று சத்சங்கத்தில் ஆராய்ந்த சிந்தனையின் தொடர்ச்சியாக அதனை  மேலும் ஆழ்ந்து ஆழ்ந்து சிந்திக்க இன்று நேரம் அளித்த  இறையின் கருணையையும், சத்சங்க அன்பர்களின் பேரவாவால் கொண்ட நியாமான எதிர்பார்ப்பையும் கருத்தில் கொண்டு  நன்றி கூறி  இன்றைய சிந்தனையைத் தொடர்வோம்.  வாழ்க வளமுடன்!

           இயற்கை என்றால் யாவருக்கும் பொது என்று சென்ற சத்சங்கத்தில் கூறியிருந்தோம் அல்லவா?  யாவருக்கும் என்றால் யார் அவர்கள்?

    முற்றுப் புள்ளி ஏற்படட்டும்

         யாவருக்கும் என்றால் என்ன பொருள்?  சமுதாயத்தில் இறைநம்பிக்கை உள்ளவர்களும், இறை நம்பிக்கை இல்லாதவர்களும் இருப்பதால் இயற்கை என்றே பொதுவாக அழைக்கலாம்.  இதில் இறைநம்பிக்கை உள்ளவர்கள் விட்டுக்கொடுத்து, இயற்கை, இறை என்பதில் இயற்கை என்பது இரு சாரர்களுக்கும் பொதுவானதாக  உள்ளதால்  இயற்கை என்றே அழைப்போம்.   பிறவிதோறும் இறையைக்  காணமுடியாததால், இறைநம்பிக்கை இல்லாதவர்களாகிவிட்ட ஆன்மாக்களால்  “இறை இல்லை” என்பதுபோல  “இயற்கை இல்லை” என மறுக்க முடியுமா?  முடியாது.  இரு தரப்பினருமே இயற்கை அன்னையின் குழந்தைகள்தானே! எனவே  இருதரப்பினருமே ஏற்றுக் கொள்வர்.  ஆகவே இயற்கை என்றாலும், இறை என்றாலும் ஒன்றே.  ஆகவேதான் பிரபஞ்சத்திற்கு  மூலப்பொருளான மெய்ப்பொருளை இயற்கை/இறை என்றே அழைத்து வருகிறோம் நமது சத்சங்கத்தில். சமுதாயத்தில், உண்மையை(Truth) ‘இறை உள்ளது’ என்று ஒரு தரப்பினர் கூறுவதும்,  மற்றொரு தரப்பினர் ‘இறை என்ற  ஒன்று இல்லவே இல்லை’ என்று கூறிவதும்  ‘உண்மையை  இரண்டு பட்டதாக கூறுவதுபோல் உள்ளது. உண்மை ஒன்று தான்.  எப்போதும் மாறாதது.

    உண்மையில் இரண்டுபட்ட நிலை கிடையாது.   அதாவது  இயற்கை/இறை/பேரறிவு, அதன் குழந்தைகளால் வாதப்பொருளாக்கப்பட்ட நிலைமைக்கு முற்றுப்புள்ளி ஏற்படட்டும். 

    அற ஊற்று வற்றாத ஜீவநதியாக ஓட வேண்டும்,  which is the need of the Hour

         இருதரப்பினருமே இணைந்தே நீதி நெறி உணர்ந்த மாந்தர்களாகி  உலக நலத்தின்பால் அக்கறை கொண்டு மனித சமுதாயம் உய்வதற்காகவே எண்ணுவோம், உழைப்போம்,  பாடுபடுவோம். யார் பாடுபட்டாலும் சமுதாயத்தில் அறம் ஊற்றெடுத்து வற்றாத ஜீவநதியாக ஓட வேண்டும். 

        எனவே,

    நல்ல பயனுள்ள அறச்செயல்களும். அதற்கேற்ற எண்ணங்களும் எவரிடம் நிலவுகின்றனவோ, அவரைச்சுற்றிலும் நுண்ணலையாகிய அருட்பேராற்றல்(இயற்கை/இறை ஆற்றல்) சூழ்ந்து கொண்டு காப்பளித்து, வெற்றியளித்து, அதனால் மகிழ்ச்சியையும் நிறைவையும்  அளிக்கின்ற”

    கருணை இயற்கைக்கு/இறைக்கு உள்ளது என்பதால் இயற்கை/இறை அருளுக்கு பாத்திரமாவதற்கு, அறச்செயல்களில் ஈடுபடுவோம்.  ‘அருள் என்கின்ற  காப்பினை’ அளித்து அதன் விளைவாக  வெற்றியை உண்டாக்கி, மனதிற்கு மகிழ்ச்சியையும், நிறைவையும் அளிப்பதால்  பேராற்றலான இயற்கையை/இறையை அருட்பேராற்றல் என்கின்ற பொது நாமத்தால்(பெயரால்) அழைப்போம்.    

             இயற்கையை/இறையை அருட்பேராற்றல் என்கின்ற பொது நாமத்தால் மனங்குளிர உள்ளன்போடு அழைப்பதும் மட்டுமல்லாது, தன்முனைப்பு என்கின்ற மாயத் திரையை விலக்கி  இயற்கையை/இறையை  நெஞ்சார மதித்தும், போற்றியும் அதன் நிலையை அறிவதற்கு ஏற்ற முறையில் வணங்குவோம். வழிபடுவோம்.    இயற்கையின்/இறையின் தன்மையை  விளங்கிக்கொள்ளவே ஆங்கிலத்தில் ஒரு வார்த்தை(Entelechy) இருந்து வந்தது. ஆனால் இப்போது இல்லை. அவ்வார்த்தை இப்போது இல்லாமல் போனது  அதிர்ச்சியையும், ஆதங்கத்தையும், கவலையையும் அளிக்கின்றது இயற்கையை/இறையை நேசிப்பவர்களுக்கு.   அச்சொல் இல்லாமல் போனதற்கான காரணத்தை பின்னர் அறிவோம். இப்போதைய கவலைக்கான காரணம் என்னவெனில், எவ்வாறு/எப்போது இந்த சமுதாயம் இயற்கையின் இறையின் தன்மாற்ற சரித்திரத்தை முதலில் கருத்தியலாக வியப்பின்றியும் பின்பு , தெளிவாக நேரிடை அனுபவமாக, தன் அனுபவமாக, அதாவது  அகக்காட்சியாக    அறிந்து கொள்ளப்போகின்றது என்பதே.  இருப்பினும் அந்த கவலையை நீக்க வேதாத்திரி மகரிஷி அவர்களின் வாயிலாக இயற்கை/இறை 20 ஆம் நூற்றாண்டில் ஏற்படுத்திய  ஆன்மீகத் திருப்புமுனையின் வாயிலாக Entelechy என்கின்ற ஆங்கில வார்த்தைக்கு புத்துயிர் அளித்ததை நினைத்து ஆனந்தம் ஏற்படுன்றது

            அறம் ஊற்றெடுத்து வற்றாத ஜீவநதியாக ஓட வேண்டும்.  மனித வாழ்வு அர்த்தமுள்ளதாக இருக்க வேண்டும்; அறவாழ்வு வாழவேண்டும் மனிதகுலம்.  அப்போதுதான் மனித வாழ்விற்கு ஓர் அர்த்தம் உண்டு. இந்த அர்த்தத்தை இயற்கை/இறை மனிதனுக்கு அறிவுறுத்தாவிடில் விலங்கினத்திலிருந்து மனித  இனமாக தன்மாற்றம் அடைந்த இயற்கைக்கு/இறைக்கு திறமை (Entelechy of Consciousness) இல்லை என்றாகிவிடுமல்லவா?  இது விளங்கிக்கொள்வதற்கான  கூற்றுதானே ஒழிய உண்மையில் இயற்கையின்/இறையின் திறைமையே தனி. ஆனால் இருபதாம் நூற்றாண்டுவரை இயற்கை/இறை காத்திருக்க வேண்டியிருந்தது.  அதாவது மனிதகுலத்தின் பரிபக்குவ நிலை அப்போதுதான் ஆரம்பித்தது என்று கூறுலாம்.  அதாவது  ‘Fraction Demands;  Totality supplies’ என்கின்ற அடிப்படையில் தான்  உயிரினத் தன்மாற்றம்/பரிணாமம்  படிப்படியாக மலர்ச்சி பெற்று வருகின்றது. அதாவது  ஆன்மா நினைத்தால், பேரான்மா   செய்யக் காத்திருக்கின்றது.   மேலும் சிந்திப்போம்.

          ஏற்கனவே விலங்கினத்திலிருந்து மனித இனம் தோன்றியுள்ளதால், அதன் மரபணுவில் பிறர் வளம் பறிக்கும்’ விலங்கினப் பண்பாகிய

          ‘பிறர் வாழும் சுதந்திரத்தை பறிப்பது.

          சித்திரவதை செய்வது,

          கொல்லுதல்’

    ஆகிய ஐந்தறிவு விலங்கினத்திற்கே உரிய, ஆனால் வெட்கப்படக்கூடிய ஆறாம் அறிவு சீவ இனத்திற்கு தேவையில்லாத அநாகரீகக் குணங்கள் வந்துவிட்டன.   தன்மாற்றத்தில்(பரிணாமத்தில்) உருவம் மாறியும், நாகரீகம் அடைந்தும் இன்னமும் அந்த அநாகரீகக்குணங்கள் அழியாமல்; செயலிழக்கப்படாமலே உள்ளது என்பதனை ஐயமறத் தெளிவாக    நம் குருதேவரின் வாயிலாக நாம் நன்கு அறிந்திருக்கிறோம்.  

       உலகை உய்விக்க வந்த மகான்!  உன் புகழ் வாழ்க வாழ்கவே!! வாழ்க திருவேதாத்திரியம்!  வளர்க திருவேதாத்திரியம்!!

    சமுதாய அக்கறை கொண்ட சமுதாய நல ஆர்வலர்களாக உள்ளதால் நம் உள்ளத்தில் வருத்தம் ஒரு புறம் இருந்தாலும் வள்ளலார், சுவாமி விவேகானந்தர், வேதாத்திரி மகரிஷி போன்ற அருளாளர்கள்   “மனித குலத்தை திருத்திவிடலாம், அஞ்சவேண்டாம்” என்று கூறியுள்ளதாலும், இறைஉணர்வு பெறுவது  மனிதனின் பிறப்புரிமை என்பதனை தெள்ளத் தெளிவாக்கியுள்ளதாலும், மனித அறிவு மேலும் மேலும் மேம்பட்டு, அறிவு(இறை) ச் செல்வத்தை மேலும் மேலும் வளர்த்துக் கொண்டு, பல்வேறு தொண்டுகளில் ஒன்றான முதன்மையான அறிவுத் தொண்டினை  முழுமையான நம்பிக்கையோடு செய்து வருகிறோம் என்பதனை எப்போதும் நினைவில் கொண்டு சலிப்பின்றி தொண்டாற்றி வருகிறோம்.  வாழ்க மனவளக்கலை!  வளர்க மனவளக்கலை!!  வாழ்க அறிவுத் தொண்டு!  வளர்க வளர்கவே அறிவுத் தொண்டு!!!

    வள்ளலாரின் சத்ய வாக்கில்  இணைவோம்

         “அறத்தின் மாண்புணர்ந்து அறம் ஊக்கி அறம் காக்கும் தகைமையே இறைஉணர்வு” என நம் குருநாதர் வேதாத்திரி மகரிஷி அவர்கள் உரைக்கின்றார்.  உண்மைதானே! சத்யவாக்குதானே அது!

          இறைஉணர்வின் பயன்,  

          துன்பம் அளிக்கக்கூடிய,

          மீண்டும், மீண்டும் பிறவி என்கின்ற  சலிப்பையேத் தருகின்ற பிறவித் தொடரை

          இந்த பிறவியோடு  அருத்துக்கொண்டு; அமரநிலை எய்தி,

          வள்ளலாரின் கடைசி புனிதச் செய்தியிலுள்ள “அகவினத்தாருக்கு சாகா வரமும், ஏனையோருக்கு பரிபாக நிலையும் அளிப்போம்” என்கின்ற உறுதியான சத்யவாக்கில்  வள்ளலாருடன் இணைந்து, வேதாத்திரி மகரிஷி அவர்களின் திருவழிக்காட்டுதலில் பூத உடலை நீத்த பிறகும் திருச்சேவை புரிய அருளாளர்கள் உலகில் சஞ்சரிக்க  இறைஉணர்வு பேற்றினைப் பெற்றே ஆக வேண்டும்.   

          அதற்கு திருவள்ளுவர் கூறும் பிறவிப் பெருங்கடலை நீந்தி கரைசேர்ந்து எங்கிருந்து வந்தோமா அந்த அரூபமான இறைக்கடலில் சேர்ந்து கொள்வதற்கு,   அறம் ஊற்றெடுத்து ஓடுகின்ற வற்றாத ஜீவநதியில்   மூழ்கி,  குளித்து, திளைத்து மகிழ்வோம்.   

    மனிதன் திருந்தி நல்லவனாக வாழ்தலுக்கு, இயற்கைக்கு/இறைக்கு ஒத்த வாழ்க்கையை  வரையறை செய்து கொண்டு, தக்க வழிகாட்டுதலுடன் வாழ்தலே சிறப்பான இறைவழிபாடாக அமைகின்றது.

            இதுவரை இயற்கையும் இறையும் ஒன்றே என்பதனை உறுதி செய்தோம். இனி இயற்கை/இறை நீதி என்பது என்ன என்று ஆராய்வோம். 

                                                 ……  தொடரும்

    வாழ்க அறிவுச்செல்வம்!                                                  வளர்க அறிவுச்செல்வம்!!


  • அறிவிற்கு விருந்து – 287

    வாழ்க மனித அறிவு!                                                                வளர்க மனித அறிவு!!

    அறிவிற்கு விருந்து – 287

                                                                                                                          26-04-2020—ஞாயிறு

    வாழ்க வளமுடன்!

    22-04-2020 அன்று சிந்திக்க வினாக்கள் பகுதியில் “இனியொரு விதி செய்வோம்! அதை எந்த நாளும் காப்போம்!! ” என்ற மகா கவி பாரதியாரின் அமுத மொழியினை சிந்திக்க எடுத்துக் கொண்டோம். அப்பயிற்சியில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு இன்று அறிவிற்கு விருந்து பகுதியில் விடை காண்போம். அக்கேள்விகளை மீண்டும் நினைவு படுத்திக்கொள்வோம்.

     “இனியொரு விதி செய்வோம்!  அதை எந்த நாளும் காப்போம்!! ” என்கிறாரே மகா கவி பாரதியார்!

      என்ன விதி அது?

      ‘இனி’ என்பதால் இது வரை அவர் கூறும் விதி இல்லையா? 

      அவர் கூறி ஒரு நூற்றாண்டு  ஆகிவிட்டதல்லவா? 

     அவ்விதி  இருக்கின்றது; அதனை  மேம்படுத்த வேண்டும் என்கிறாரா பாரதியார்? 

    ஒரு வேளை அவ்விதி  இல்லையெனில் அவரது எண்ணம் எப்போது நிறைவேறும்?

     விதி ஏற்படுத்துவதோடு அது எந்நாளும் காப்பற்றப்பட வேண்டும் என்கிறாரே மகா கவி.  இதற்கு  என்ன பொருள்?

     எந்நாளும் காப்பற்றப்படக்கூடிய விதி எவ்வாறு இருக்க  வேண்டும்?                        

    சிந்திப்போம்! 

      விதி என்றால் என்ன?  

    சற்று நேரம் மௌனம் இருந்து சிந்திப்போம். எதனை விதி என்போம்?

    1.   விதி என்பது முன்கூட்டியே வகுக்கப்பட்டதாகவும் மனிதனால் மாற்ற முடியாததாகவும் கருதப்படும் நியதி; ஊழ்(destiny, fate) மனிதனால் மாற்ற முடியாததாகவும் கருதப்படுவதால்  இது இயற்கை நியதி.

    2.  ஒன்றைச் செய்வதற்கு வகுக்கப்பட்ட ஒழுங்கு முறை; (rules) செய்வது என்றால் யார் செய்வது?  மனிதன் ஒன்றைச் செய்வதற்கு அவனால், சமுதாயத்தால் வகுக்கப்பட்ட ஒழுங்கு முறை.  இயற்கையே சமுதாயமாகியுள்ளது  என்பதால் இயற்கையின் சார்பில் சமுதாயம் . இயற்கையின் இனிமை கெடாமல் நியதியினை   ஏற்படுத்திக்கொண்டு நல்வாழ்வு    வாழ முடியும்.

    3.   இயற்கையின் நிகழ்வில் உள்ள ஒழுங்கு (Law of Nature). இது மனிதனால் மாற்ற முடியாதது.

    இந்த மூன்றில் எந்த விதியை செய்வோம் என்கிறார் மகா கவி பாரதியார் என்பது நமது ஐயமாக உள்ளது. மூன்றுமே இயற்கை நியதிதான்.  அப்படி இருக்கும் போது சமுதாயம்  மகா கவி பாரதியார் கூறும் எந்த விதியை செய்ய வேண்டும்?

    மூன்றுமே இயற்கையினால் வகுப்பட்டதாக இருந்தாலும், இரண்டாவது விதியை இயற்கையின் அங்கமான மனித சமுதாயம் இயற்கைக்கு இனிய முறையில் விதியை செய்து கொள்ளலாம்/கொள்ளவேண்டும்.   இந்த இரண்டாம் விதியைத்தான் மகா கவி பாரதியார் “இனியோர் விதி செய்வோம்” என்று கூறுவதோடு மட்டுமல்லாமல் “அதை எந்த நாளும் காப்போம்” என்பது நம்மை மேலும் ஆழ்ந்து சிந்திக்க வைக்கின்றது.

    இயற்கை ஒன்றுதான். அதில் ஏதும் பிரிவு இல்லை. ஆகையால் இயற்கையில் உள்ளது ஒரு நீதிதான்.  அது இயற்கை நீதி எனப்படுகின்றது. இயற்கையாகிய ஆற்றல் எங்கும் எதிலும் இறைந்துகிடப்பதாலும், அதுவே “எது இறை? யார் இறை?” என்கின்ற வினாவிற்கு திருவள்ளுவர் அவரது முதற் குறட்பாவில் கூறும்  விடையாகவும் இருப்பதால் அது இறை என்கின்ற காரணப்பெயரால்  அழைக்கப்படுகின்றது.

    இயற்கை முந்தியதா அல்லது இறை முந்தியதா என ஒருவர் வினவினால் அதற்கு பதில் “இயற்கையும் இறையும் ஒன்றே”.  அப்படியிருக்கும்போது முந்தையது பிந்தையது என்று எப்படி இருக்கமுடியும்?  உயிரினங்கள் உள்பட பிரபஞ்சத்திற்கு மூலம் எது என்பதனை, யார் யாருக்கு எப்படி அழைக்க விருப்பமோ அவ்வாறே இயற்கை எனவும் இறை எனவும் அழைக்கலாம்.  பொதுவாக இயற்கை என்றால் யாவருக்கும் பொதுவாக இருப்பதால் இயற்கை என்றே அழைத்துக் கொள்ளலாம் அல்லவா?

                                                                                                                                         . . .  தொடரும்.

    வாழ்க அறிவுச்செல்வம்!                                                  வளர்க அறிவுச்செல்வம்!!

  • ஆன்ம அலங்காரம் – 3/3

    வாழ்க மனித அறிவு!                         வளர்க மனித அறிவு!!

    lotus

     FFC. C286.

    04-04-2018–புதன்

    3. மனத்தூய்மையால் ஆன்ம அலங்காரம்

     

           ஆன்ம அலங்காரத்தை செயலுக்கு கொண்டு வரும் போது அலங்காரத்தின் நோக்கமான மகிழ்ச்சி வாழ்வில் நிறைவேறும். அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பது ஆன்றோர் மொழி. அகத்தின் அழகு என்பது எதனைக் குறிக்கின்றது. அகம் என்றோலோ உள்ளே இருப்பது என்று பொருள். உள்ளே இருப்பதை எதனைக் குறிக்கின்றது? ஆன்மாவைத்தான் குறிக்கின்றது. ஆன்ம தூய்மைக்கு ஏற்பத்தான் உள்ளமும் இருக்கும். அந்த உள்ளத்தின் அழுகு எப்படியோ அதுபோல்தான் முகமும். அதனால்தான், யாருடைய குழந்தையாக இருந்தாலும் எல்லோருக்கும் பிடிக்கின்றது. குழந்தையின் உள்ளம் களங்கமில்லாதது. எனவே அந்த அழகு முகத்தில் தெரிகின்றது.

    ஆன்ம அலங்காரம் என்பது ஆன்மாவைத் தூய்மைப் படுத்துவதாகும். கோயிலில் கடவுள் சிலைக்குச் சில விசேஷ நாட்களில் செய்யும் அலங்காரம் மறுநாள் கலைக்கப்பட்டுவிடும். ஆனால் ஆன்மா அலங்காரம் என்பதிலோ ஒவ்வொரு நாளும் செய்யப்படும் அலங்காரம் கலைக்கப்படாமல், மேலும் மேலும் ஆன்மாவிற்கு அழகு கூடிக் கொண்டே இருக்கும். இன்முகமும் எளிமையும் செல்வமாகிவிடும்.

    ஆன்ம அலங்காரம் என்பது

    • ஏற்கனவே பதிந்துள்ள பாவப்பதிவுகள் செயலற்றுப் போக,
    • பாவப்பதிவுகளைப் போக்கும் வழிகளான
    • பிராயச்சித்தம்,
    • மேல்பதிவு செய்தல்,
    • பாவப்பதிவுகளை முறிவு அல்லது சமன் செய்தல் ஆகியவற்றின் மூலம்
    • ஆன்மாவைத் தூய்மைப்படுத்தி அலங்கரித்தலாகும்.

    ஆன்ம அலங்காரமே தான் ஆன்மதூய்மை, மனத்தூய்மை என்பது.அப்படி இருக்க ஏன் புதிதாக ஆன்ம அலங்காரம் என்கின்ற சொற்றொடரைச் சேர்க்க வேண்டும்?

    மெய்ஞானமும் விஞ்ஞானமும் இன்னும் முழுமையாக இணைக்கப்படவில்லை. விஞ்ஞானத்தில் மறை பொருள் இல்லை. ஆதலால் ஏதேனும் ஒன்றைப் பற்றித் தெரிவிக்க போதிய மொழி வளம் இருக்கின்றது. ஆனால் மெய்ஞானத்தில் ஒன்றைப் பற்றித் தெரிவிப்பது என்பது அவரது சொந்த அனுபவத்தைக் கொண்டுதான் சொல்ல வேண்டியுள்ளது. அப்போது தன் அனுபவத்தை பிறருக்குத் தெரிவிக்க உவமையுடன் தெரிவிக்க வேண்டியுள்ளது. சில நேரங்களில் சரியான சொற்களையும் பயன்படுத்த வேண்டியிருக்கின்றது. அப்போது மொழிவளம் தேவைப்படுகின்றது.
    ஒரு மொழிக்கு புதிய புதிய சொற்களையோ அல்லது சொற்றொடர்களையோ உருவாக்கித் தரும் போது அந்த மொழியின் வளம் அதிகமாகும். அந்த வகையில் தமிழ் மொழிக்கு, குறிப்பாக ஆன்மீகத் தமிழில் மறை பொருட்களைப் பற்றியப் புரிதலை தெளிவாகத் தெரிவிப்பதற்கு, கருமையம், உயிரறிவு, காந்தத் தன்மாற்றம் தன்னிருக்கச் சூழ்ந்தழுத்தும் ஆற்றல், சீவகாந்தம், தெய்வீக நீதி மன்றம், இயல்பூக்கம் போன்ற சொற்களையும், சொற்றொடா்களையும் வேதாத்திரியம் தந்துள்ளது.

    இறை உணர் ஆன்மீகத்தில் மறைபொருள் கருத்துக்களைத் தெளிவாகத் தெரிவிக்க புதிய புதிய சொற்கள் தேவைப்படுகின்றன. (That is to say, more vocabulary is needed in spiritual language ) அந்த வகையிலே ஆன்ம அலங்காரம் என்கின்ற சொற்றொடரைச் சேர்த்துக் கொள்வோம்.
    இச்சமுதாயத்தில் வறண்டு போன அறனை வலியுறுத்த வந்த, இருபதாம் நூற்றாண்டில் அவதரித்த வேதாத்திரி மகரிஷியின் குருவான முதல் நூற்றாண்டில் அவதரித்த திருவள்ளுவர் கூறுகிறார்.

    “மனத்துக்கண் மாசிலன் ஆதல்; அனைத்து அறன்;
    ஆகுல நீர பிற.”

    பொருள்: மனிதன், மனதில் குற்றம் இல்லாதவனாக இருக்க வேண்டும் என்கிறார் திருவள்ளுவர். அறன் என்பது அவ்வளவுதான் என்கிறார். மனத்தூய்மை இல்லாத மற்றவை ஆரவாரத்தன்மை (vain show, pomp-outward show) உடையவை என்கிறார் திருவள்ளுவர். ஆகவே மனத்தூய்மையால் ஆன்மாவை அலங்காரம் செய்து அழகு பார்ப்போம்.

    மகரிஷி அவர்கள் உடை ஒழுக்கம் பற்றி கூறுவதைக் கவனிப்போம். உடை அணிவதிலும் ஒழுக்கம் அவசியம் என்கிறார் மகரிஷி அவர்கள்.

    FFC-107-ஆன்ம அலஙகாரம்
    எனவே தேகாபிமானத்தை(body consciousness) நீக்கி ஆன்மாபிமானம் (soul consciousness) ஏற்படுத்தும் ஆன்மீகப் பயிற்சியில், உடல் அலங்காரத்தைத் தவிர்த்தல் நலம் பயக்கும். உடல் அலங்காரத்தைவிட ஆன்ம அலங்காரத்திற்கு முக்கியம் அளிக்க வேண்டும். ஆன்ம அலங்காரத்தில் அக்கறை வந்துவிட்டால் உடல் அலங்காரம் எதற்கு என விளங்கிவிடும். உடல் அலங்காரம் அவசியமில்லை என்பது உடலைப் புறக்கணித்தலாகாது. உடலை சுத்தமாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ள வேண்டும். மிகையான உடல்  அலங்காரம் உடல் சுத்தத்தையும், ஆரோக்கியத்தையும் கெடுக்கும். இன்முகமும் எளிமையும்தான் ஆன்மீகத்தின் உச்ச நிலையும் செல்வமுமாகும். இன்முகம் மற்றும் எளிமை பற்றியும், வேதாத்திரி மகரிஷி அவர்கள் கூறுவதனை இங்கே நினைவு கூர்வோம். இதனையெல்லாம் எதற்காக இயற்கை/இறை கூறுவதற்கு ஏற்பாடு(மகான்களின் வாயிலாக கவிகள் மற்றும் அருளுரைகள்) செய்துள்ளது? வருங்கால சமுதாயம் அதனை மதித்து நடக்கவே இயற்கை/இறை மகான்களின் வாயிலாக அருளி அறிவுறுத்துகின்றது.

    FFC-107- ஆன்ம அலங்காரம்-துறவு

    வாழ்க வளமுடன்!

  • ஆன்ம அலங்காரம்

    வாழ்க மனித அறிவு!                                                   வளர்க மனித அறிவு!!

    lotus

    FFC. C285

    01-04-2018–ஞாயிறு

    2. ஒழுக்கமே ஆன்மாவை அலங்கரிக்கின்றது

    swamiji_in_coat

            ஆன்மாவைப் பற்றி அறிந்து கொள்வோம். ஒருவரைப் பற்றி எடுத்துரைக்கும்போது ‘அவர் நல்ல மனிதர்’ என்று சொல்வோம். இன்னும் அவரது நற்குணங்களை உண்மையாகப் போற்றிச் சொல்வதற்கு ‘அவர் ஒரு நல்ல ஆத்மா/ஆன்மா’ என்பது வழக்கம். இக்கூற்றில் முதலாவதாக “அவர் ஆன்மா” என்கின்ற ஒன்று உறுதிப்படுத்தப்படுகின்றது. அவரை நல்ல மனிதர் என்பதனை எதை வைத்துச் சொல்கிறோம்? அவரது நற்குணங்கள் மற்றும் பண்புகளை வைத்து அவரை நல்ல மனிதர் என்கிறோம். அவரது நற்குணங்கள் அவரது ஆன்மாவில் பதிந்து அவரது ஆன்மாவை அலங்கரித்திருக்கின்றது. அந்த ஆன்ம அலங்காரத்தால்தான், அழகின் இலக்கணமான, மனிதனுக்கேற்ற குணங்கள், மனிதனுக்குத் தகுதியானத் தன்மை, மற்றும் ஒழுக்க முறை ஆகியவைகள் அவரிடமிருந்து வெளிப்படுவதால் அவருடைய ஆன்மா அழகுறுகின்றது. எனவேதான் அந்த நல்லவரை நல்ல ஆத்மா/ஆன்மா என்கிறோம்.

          ஆத்மா/ஆன்மா என்பது என்ன? இதற்கு முதலில் உயிர் என்பது என்ன என்று அறிந்து கொள்ள வேண்டும். உயிரை இதுவரை யாரும் பார்த்ததில்லை. ஆனால் உயிரை உணர்ந்தவர்கள் இருக்கிறார்கள். இறைஉணர் அல்லது ஆன்ம உணர்வு ஆன்மீகத்தில் உயிர் மேல் மனம் வைத்து அகத்தவ வழிபாட்டை மேற்கொள்பவா்கள் உயிரை உணர்ந்திருக்கிறார்கள். ஆன்மாவை அறியமுடியாத ஆன்மீகம் ஆன்மீகமாகுமா? ஆன்மாவை அறியமுடியாத ஆன்மீகம் இருக்கமுடியாது. வேதாத்திரி மகரிஷி அவர்களின் ஆன்மீகத்தின் நோக்கம், மனிதன் உயிரறிவைப் பெறுதலேயாகும். அதாவது ஆன்மாவைத் தெரிந்து கொள்ளுதலாகும். உயிரினுடைய மூலம், அதன்நிலை, உயிரின் முடிவு, அதன் முக்கியத்துவம் ஆகியவைகளைத் தெரிந்து கொள்வது உயிரறிவாகும். ஆன்மாவிற்கும் உயிருக்கும் தொடர்பு ஏதேனும் உள்ளதா என்றால் உள்ளது என்பதுதான் பதில்.

         உயிர் என்றாலே கண்களுக்குத் தெரியாத ஒன்று. கண்களால் பார்க்க முடியாத நுண்ணிய பொருள்தான் உயிர். உயிர் அணுதரிசினியாலும் (microscope) பார்க்க முடியாது. உயிராற்றல் என்று கூறுகிறோமே, அதனை எவ்வாறு ஆற்றல் என்று சொல்ல முடியும்? உடல் ஒர் இயந்திரம். பொதுவாக எந்த இயந்திரமும் இயங்குவதற்கு ஆற்றல் தேவையிருப்பது போல் உடலாகிய இயந்திரம் இயங்குவதற்கும் ஆற்றல் தேவை. அந்த காந்த ஆற்றலை கொடுப்பது உயிர்தான் எவ்வாறு உயிர் காந்த ஆற்றலைத் தருகின்றது என்பதனை பிரிதொரு சமயத்தில் பார்ப்போம். அந்த காந்த ஆற்றல் சீவனுடைய உடலில் இருப்பதால் சீவகாந்தம் எனப்படுகின்றது. சீவ காந்த ஆற்றல் தான் உடலியக்கத்திற்கு ஆற்றலாகச் செலவழிக்கப்படுகின்றது. இரத்தம் உடல் முழுவதும் ஓடிக்கொண்டிருந்தாலும் அதற்கு இதயம் மையமாக இருப்பது போன்று, சீவகாந்தம் உடல் முழுவதும் ஓடிக்கொண்டிருந்தாலும் அது ஒரு மையத்தைக் கொண்டிருக்கும். அங்கு சீவ காந்தம் அடர்த்தியாக இருக்கும். அந்த அடர்த்தி பெற்ற சீவகாந்தம் தான் ஆன்மா என்பது. இதன் சிறப்பைப் பார்ப்போம்.

         இப்பிரபஞ்சத்தில் அலை இயக்கம் நடந்து கொண்டே இருக்கின்றது. இயற்கையின் திறன்களில் பதிதல்(recording) என்னும் நிகழ்வு மிகவும் சிறப்பானது. இந்த பதிதல் என்கிற திறன் மட்டும் இல்லாதிருந்தால் உயரினப் பரிணாமமே ஏற்பட்டிருக்காது. ஒன்றிலிருந்து தரம் மாற்றம் ஏற்படுவதே இந்த பதிதல் நிகழ்ச்சியால்தான். பதிதலுக்கு ஒர் ஊடகம்(medium) தேவை. அந்த ஊடகம் தான் காந்தம். இயற்கையாக நடக்கும் பதிதல் நிகழ்ச்சிக்கும் சரி அல்லது மனிதனால் செயற்கையாக நடக்கின்ற பதிதல் நிகழ்ச்சிக்கும் சரி காந்தம் தான் ஊடகமாக இருக்கின்றது. உதாரணத்திற்கு, ஒலி-ஒளி நாடாவில்(video tape) பிளாஸ்டிக் நாடாவில் காந்தப் பூச்சு (magnetic coating) தான் உள்ளது. இப்பிரபஞ்சத்தில் எது நடந்தாலும் பதிதல் இல்லாமல் இல்லை.

         ஆகவே இயற்கையில், மனிதனில் நடக்கும் எண்ணம், சொல். செயல் ஆகிய முத்தொழிலையும் பதிவு செய்யும் ஒரு மறை காந்த குறுந்தகடுதான் இந்த ஆன்மா. அது என்ன மறை காந்த குறுந்ததகடு? அது கண்களுக்குப் புலப்படாது மறைந்துள்ளதால் அதற்கு மறை என்கின்ற அடைமொழி சேர்க்கப்பட்டுள்ளது. மனிதன் பதிவு செய்யும் குறுந்தகட்டில் உள்ளதை அவன் விரும்பும் போது அதனை அதற்குரிய சாதனத்தின்(deck) வழியாக பார்க்கலாம் அல்லது கேட்கலாம்.

    ஆன்மாவாகிய மறை குறுந்தகட்டில் உள்ள பதிவுகள் அவ்வப்போது எண்ணங்களாகவும் வருகின்றன. அதே சமயத்தில் செயல்விளைவு விஞ்ஞானத்தின் படி ஆன்ம — குறுந்தகட்டில் உள்ள பதிவுகளின் படி, எங்கும் பேரறிவு இருப்பதால் அவ்வப்போது விளைவுகளையும் கொடுக்கும். பதிவுகளின் தன்மை மற்றும் தரத்தைப் பொருத்து விளைவுகள் நல்லதாகவும் இருக்கலாம். அல்லது தீயதாகவும் இருக்கலாம். இந்த ஆன்ம – குறுந்தகட்டில் உள்ள பதிவுகள் தான் தன்னுடைய வம்சாவளியின் ஆன்ம – குறுந்தகட்டிலும் பதிகின்றது. ஆகவே நல்வாழ்வு வாழ்வதற்கு ஆன்மதூய்மை அவசியமாகின்றது. ஆகவேதான் வம்சாவளியின் ஆன்மா பெற்றோர்களின் செராக்ஸ் நகல் எனப்படுகின்றது. அதாவது குழந்தைகள் பெற்றோர்களின் செராக்ஸ் நகல் என்கிறார் வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

         இந்த ஆன்மாவின் விளக்கத்தை வைத்து ஓரளவிற்கு ஆன்மா அலங்காரம் என்பது என்ன என்று யூகிக்க முடிகின்றதல்லவா? ஆன்ம தூய்மை என்கின்ற சொற்றொடர் இருக்கையில் ஏன் ஆன்ம அலங்காரம் என்கின்ற சொற்றொடரால் அழைக்க வேண்டும்?

         தூய்மை என்பது சாதாரணமாக எல்லோருக்கும் தெரிந்த ஒன்று. ஆனால் அலங்காரம் என்கின்ற சொல் சிறப்பையும், முக்கியத்துவத்தையும் தெரிவிக்கின்றது. இது ஒரு catchy phrase. இந்த சொற்றொடர் ஆரம்பத்திலேயே, அதாவது கேட்பதற்கே இதமாக உள்ளது. அதாவது அச் சொற்றொடரே அலங்காரச் சொற்றொடராக உள்ளது.

         ஒழுக்கமே ஆன்மாவை அலங்கரிக்கின்றது என்கிறோம். மனிதனிடமிருந்து மனிதம் வெளிப்பட வேண்டும். மனிதம் என்பது அன்பையும், கருணையையும் வெளிப்படுத்துதலே ஆகும். அன்பும் கருணையும் வெளிப்பட வேண்டுமெனில் ஒழுக்கத்தால் தான் முடியும். எவ்வாறு? இதுவரை ஒழுக்கம் என்பதனை சரியாக வார்த்தைகளால் வரையறுக்கப்படாத நிலையில், மகரிஷி அவர்கள் கூறியுள்ள ஒழுக்கத்திற்கான வரையறையைக் கவனிக்க வேண்டும்.

         ஒழுக்கம் என்பது தனக்கோ, பிறருக்கோ, நிகழ்காலத்திலோ, எதிர்காலத்திலோ, உடலுக்கோ, உணர்ச்சிக்கோ துன்பம் விளைவிக்காத எண்ணமும், செயலும்தான் என்கிறார் மகரிஷி அவர்கள். ஆகவே இத்தகைய ஒழுக்கம் என்பது அன்பும், கருணையின் வெளிப்பாடேயாகும். மனிதத்தை வெளிப்படுத்த வேண்டிய மனிதன், தனது கருமையத்தை ஒழுக்கத்தால் அன்றி வேறு எவ்வாறு அலங்கரிக்க முடியும்? ஆகவே தான் ஒழுக்கமே ஆன்மாவை அலங்கரிக்கும் என்கிறோம். அடுத்த விருந்தில் 04-04-2018—புதனன்று மனத்தூய்மையால் ஆன்ம அலங்காரம் பற்றி சிந்திப்போம்.

  • ஆன்ம அலங்காரம்

    வாழ்க மனித அறிவு!                             வளர்க மனித அறிவு!!

    lotus

    FFC. C.284

    28-03-2018—புதன்

    1. அலங்காரம் எதற்காக?

    இன்றைய சிந்தனைக்கு எடுத்துக் கொண்ட பொருள்   ‘ஆன்ம அலங்காரம்’. தலைப்பில் ஆன்மா மற்றும் அலங்காரம் ஆகிய இரண்டு சொற்கள் உள்ளன. ஆன்மா எது என்பது பற்றி அறியாதவர்கள் அநேகர் இருக்கலாம். ஆனால் மனவளக்கலைஞர்கள் ஆன்மாவைப் பற்றி அறிந்தவர்கள். அலங்காரம் என்கின்ற சொல்லின் பொருள் பற்றி எல்லோருமே அறிவர். இருப்பினும் அலங்காரம் என்பதனை ஆன்மாவுடன் இணைத்துச் சிந்தித்துப் பார்ப்போம். அலங்காரம் என்றால் என்ன? அலங்காரம் எதற்காக?
    ‘அலங்கரி’ என்றால் அழகுபடுத்து என்று பொருள். அலங்காரம் என்பது ஒப்பனையால் அலங்கரிக்கப்பட்ட நிலை. அழகு படுத்துவது அலங்காரம். எது அழகு? எதற்காக அழகுபடுத்துதல் அவசியமாகின்றது? அழகு என்பது கண்களாலோ, காதுகளாலோ, மனதாலோ அனுபவிக்கும் இனிமை அல்லது மகிழ்ச்சி. அழகு என்ற சொல்லுக்கு,

    • பொருத்தமான குணம்,
    • தகுதியான தன்மை.
    • ஒழுங்கு முறை ஆகிய பொருட்களும் (meanings) உண்டு.

    அலங்காரத்தில் சிகை அலங்காரம், ஆடை அலங்காரம், நகை அலங்காரம் இவ்வாறாக பல வகைகள் உள்ளன. வாசனைப் பொருட்களும் பயன்படுத்தப்படுகின்றன.
    • இயற்கையாக, இயல்பாக இருக்கும் அழகைவிட செயற்கையால், மிகைப்படுத்திக் காண்பிக்கவும், பார்க்கவும்,
    • தன்னை அழகுபடுத்தி தானே மகிழ்ந்து கொள்ளவும்,
    • பிறருக்கு தன்னை எடுத்துக்காட்டி, பிறர் புகழ தான் மகிழ்ச்சி அடைவதற்காகவும்,
    • முதுமையை மறைத்து இளமையாகக் காட்டிக் கொள்வதற்கும்,
    • தற்காலிக போலி இன்பம் காண்பதற்காகவும், தற்காலிகமாக போலியாக மகிழ்ச்சி அடைவதற்காகவும்,
    அலங்காரம் செய்து கொள்ளப் படுகின்றது.

    அசலில்(original) அழகில்லை என்றுதானே செயற்கையாக அழகூட்டப்படுகின்றது. அலங்காரம் ஒரு போலிச்செயல். அலங்காரம் நிலையானது அல்ல. அலங்காரம் கலையக்கூடியது. ஆதலால் அலங்காரம் கலைந்தால், அழகில்லை எனக்கருதப்பட்ட முந்தைய அசல்தான் மிஞ்சும்.

    சுருங்கச் சொல்வதென்றால்,
    மிகைப்படுத்திய அலங்காரம் தன்முனைப்பின் மறைமுக வெளிப்பாடு.
    • தன்னை உடலுடன் தவறாக அடையாளம் காண்பது.
    • தன்னுடைய சரியான அடையாளத்தை மறந்துவிடுவதாகின்றது.
    • தான் ஆன்மா என்பதனை மறந்துவிடுதல். இவைகளெல்லாம் தன்முனைப்பின் வெளிப்பாடுதானே?
    • இதனால் தானே பிறவிதோறும், மீண்டும், மீண்டும் பிறவி எடுக்கின்ற வினைகள் ஆன்மாவில் அழுத்தமாகப் பதிந்து கொள்கின்றது.
    • மண்ணிற்கோ அல்லது நெருப்பிற்கோ இரையாகவிருக்கின்ற உடலை அலங்காரம் செய்துகொள்வதில் இருக்கின்ற ஆர்வம் அழியாத ஆன்மாவை அலங்காரம் செய்து கொள்வதில் ஆர்வம் இல்லாதது, அறியாமைதானே!

    இதற்கெல்லாம் காரணம்,
    1. ஆன்மா கண்களுக்குத் தெரியாததே.
    2. ஆன்மா என்றும் அழியாதது, மற்றும் செயல்களை பதிவு செய்து (recording) அதற்கேற்ற விளைவுகளைத் தரும்(playing) தெய்வீக நீதிமன்ற, காந்த குறுந்தகடு (மறைந்துள்ள – invisible but existing magnetic compact disc) என்கின்ற விஞ்ஞானத்தை அறியாதிருத்தல்.
    3. தெய்வீக நீதி மன்றம் என்று கருத்தியலாக (theoretically) தெரிந்திருந்தாலும், அதனை செயல்முறையில் (practically) உறுதி படுத்தாமை.

    ஆகவே ஆன்மாவை (கருமையத்தை) பெரும்பாலோர் அலங்காரம் செய்து கொள்வதில்லை.
    அரூபமாகிய தெய்வத்தை ஆலயத்தில் சிலை வடிவத்தில் அலங்காரப்படுத்திப் பார்த்து இன்பம் அடையும் மனிதன், அதுபோலவே
    தன்னுடைய ஊனுடம்பு ஆலயத்திலும்,
    அதே அரூபமான தெய்வம்,
    மனதின் மறுமுனையாகவும், கருமையாகவும் நீதி வழுவாவமல் செயல்பட்டுக் கொண்டிருப்பதால்,
    கருமையத்தைத் தூய்மை செய்து,
    ஆன்மாவை அலங்காரம் செய்து பேரின்பத்தை அனுபவிக்க வேண்டும்.

    கண்களுக்குத் தெரியாமல் அகத்தே அரூபமாக இருக்கும் ஆன்மாவை எப்படி அலங்காரம் செய்வது என்கின்ற ஐயம் எழலாம். அகத்தின் அழகு முகத்தில் தெரியும் எனப்படுவது எதனைத் தெரிவிக்கின்றது? மனத்தூய்மை என்கின்றச் சொற்றொடர் எதனைக் குறிக்கின்றது? ஆன்மாவைப் போல் மனதிற்கும்தான் உருவமில்லை. உருவமில்லாத மனதை எவ்வாறு தூய்மை செய்ய முடியும் என்கின்ற ஐயம் அங்கே எழவில்லையே! அகத்தின் அழகு எனப்படுவது எதனைக் குறிக்கின்றது,? அகம் என்றால் உள்ளே என்று பொருள். ஆகவே உள்ளம் என்பது உள்ளே இருக்கின்ற மனதின் மறுமுனையான உள்ளத்தைக் குறிக்கின்றது. உள்ளத்திற்கு உருவம் இருக்கின்றதா? அகத்தின் அழகு என்பது எதனைக் குறிக்கின்றது? உள்ளே இருக்கும் மனதின் மறுமுனையான உள்ளமாகிய தெய்வத்தைத் தான் குறிக்கின்றது.

    அதனால்தான் திருவள்ளுவர்,

    “ ஐயப் படா அது அகத்து உணர்வானைத்
    தெய்வத்தோடு ஒப்பக்கொளல்” . . . . .என்கிறார்

    பொதுவாக தூய்மை என்பது என்ன? சுத்தமாக இருப்பது தூய்மை. மனம் சுத்தமாக இருந்தால் அது தூய்மையாக இருக்கின்றது எனப் பொருள். மனிதனின் முத்தொழில்களான எண்ணம், சொல். செயல் ஆகிய மூன்றும் எப்போதும் தனக்கும் பிறர்க்கும் சமுதாயத்திற்கும் நலம் பயப்பதாக இருக்க வேண்டும். இதற்கு மனதில் எப்போதுமே நல்ல எண்ணங்களே நிறைந்திருக்க வேண்டும். இதுதான் மனத்தூய்மை எனப்படும். நற்சொற்களுக்கும், நற்செயல்களுக்கும் விதை நல்லெண்ணம், நிலம் மனம். ஆகவே மனதை நல்லெண்ணங்களால் அலங்கரிக்க வேண்டும். மனதில் தோன்ற வேண்டிய நல்லெண்ணங்கள் எங்கிருந்து தோன்றுகின்றன? ஆன்மாவில் உள்ள பதிவுகளுக்கேற்பவே மனதில் நல்ல எண்ணங்களும் தீய எண்ணங்களும் தோன்றுகின்றன. அலங்காரத்தில் தூய்மை இடம் பெற்றிருப்பதால் ஆன்மாவைத் தூய்மைப் படுத்துவதைத்தான் அலங்காரம் என்கிறோம்.

    அந்த தெய்வீகக் கருமையத்தில்தான் மனிதன் செய்கின்ற முத்தொழில்களான எண்ணம், சொல், செயல் ஆகிய மூன்றும் கணக்கில் வைக்கப்பட்டுள்ளன. அந்தத் தெய்வீக நீதி மன்றத்தில் பதிவான பதிவுகளின் அடிப்படையில் வழங்கப்படும் தெய்வீகத் தீர்ப்பின்படிதான்(divine judgement) வாழ்க்கையில் இன்பம் துன்பம் அனுபவிக்க வேண்டியுள்ளது. அடுத்த விருந்தில் 01-04-2018—ஞாயிறு எது ஆன்மாவை அலங்கரிக்கின்றது என்பது பற்றி சிந்திப்போம்.