September 2015

Monthly Archives

  • சிந்திக்க அமுத மொழிகள்- 112

    வாழ்க மனித அறிவு                       வளர்க மனித அறிவு

    26-09-2015—சனி

     

    யாருக்கு இதுவே கடைசி பிறவியாக இருக்கின்றதோ, அவர்களே முந்தைய பிறவிகளில் செய்த செயல்களின் பலனை குறிப்பாக அதிக துன்பத்தை அனுபவிக்கிறார்கள்.

    …அன்னை சாரதா தேவியார்.

    பயிற்சி—
    1) இது எவ்வாறு விளக்கவும்?
    2) இது அதிக துன்பப்படுபவர்கள் அனைவருக்குமே பொருந்துமா? சிந்திக்கவும்.

    வாழ்க அறிவுச் செல்வம்                             வளா்க அறிவுச் செல்வம்

  • சிந்திக்க அமுத மொழிகள்- 111

    வாழ்க மனித அறிவு                வளர்க மனித அறிவு

     

    25-09-2015—வெள்ளி

     

    “வெளிச்சம் மாத்திரம் தோற்றமாகவும், இதில் நிறைந்திருக்கும் இருள் தோற்றமற்றதாகவும் இருப்பது
    போல தெய்வநிலை தோற்றமற்று இருக்கின்றது.”

    …..வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

    பயிற்சி—
    1) உவமானம் அளித்துள்ளதை ரசித்து மகிழவும். இதே போன்று மகரிஷியின் எல்லா கண்டுபிடிப்புகளையும் அறிந்து கொள்வதோடு, ரசித்தும் மகிழ்ந்தும் வாருங்கள். .“தான் உயராது, மற்றவரது உயர்வை மதிக்கவும் முடியாது, ரசிக்கவும் முடியாது” என்கின்ற இயல்பூக்க நியதியின் கிளைத்தேற்றம் உங்களிடம் நிரூபணமாகும். வாழ்கவளமுடன்.

    வாழ்க அறிவுச் செல்வம்                                 வளா்க அறிவுச் செல்வம்

  • சிந்திக்க வினாக்கள்-110

    வாழ்க மனித அறிவு                 வளர்க மனித அறிவு

    24-09-2015 – வியாழன்

     

    ஒரு நாள் பழகினாலும் மேலோருடைய நட்பானது பூமி பிளக்கும்படி வேரூன்றி நிற்கும் என்கின்றது வெற்றி வேற்கை.

    இது எப்போது சாத்தியம்? விளக்கவும். வாழ்க வளமுடன்.

     

    வாழ்க அறிவுச் செல்வம்                      வளர்க அறிவுச் செல்வம்