சிந்திக்க வினாக்கள்- 317(271)

வாழ்க மனித அறிவு                 வளர்க மனித அறிவு

lotus

 

சிந்திக்க வினாக்கள்- 317(271)

27-07-2020 – திங்கள்

Jun2004-17a

 i)  யாரை முழு மனிதன் என்கிறார் வேதாத்திரி மகரிஷி அவர்கள்?

 ii)  முழு மனிதன் என்கின்றபோது குறைமனிதர்களும் இருக்கின்றனரா?

iii)  மனிதனுக்கு  வரையறை/வரையறைகள் ஏதேனும்  உள்ளனவா? அவற்றில் மிகப்பொருத்தமான  வரையறை என்று எதனைக் கூறலாம்?

iv)  பொதுவாக மனிதனுக்கு   வரையறை வகுத்தால் முழுமனிதனுக்குத் தனியாக  வரையறை வகுக்க வேண்டுமா?

v)  எப்போது குறைமனிதன் அல்லது சாதாரண மனிதன் முழுமனிதனாக முடியும்?

vi) குறைமனிதர்களும் முழுமனிதர்களும் தற்போது எந்த  விகிதாசாரத்தில்  இருக்கின்றனர்?

vii)  இப்போதுள்ள விகிதாசாரமே இருந்துவிட்டால் என்ன?

viii) முழுமனிதனாக வேண்டிய அவசியம் என்ன?

ix)  சாதாரண மனிதன் முழுமனிதனாக   என்ன செய்ய வேண்டும்?

x)   முழுமனிதனாவதற்கான கலை ஏதேனும் தற்போது உள்ளதா?  அல்லது அந்தக்   கலை இனிமேல்தான் ஏற்படவேண்டுமா?   அந்தக் கலை  இயற்கையின்/இறையின் தன்மாற்ற சரித்திரத்தில் ஏற்கனவே உருவாகிவிட்டதா?   அந்தக்கலை முழுமனிதனாவதற்கு எவ்வாறு உதவியாக உள்ளது?

xi)  எதனை வைத்து முழுமனிதன், குறைமனிதன் என்று பிரித்துப்பார்க்க முடியும்?

xii)  யார் முழுமனிதன் என்று  கூறும் திருவேதாத்திரிய  மந்திரத்தினை (கவியினை) நினைவு கூறவும். 

வாழ்க வளமுடன்!

 

வாழ்க அறிவுச் செல்வம்!                              வளர்க அறிவுச் செல்வம்!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *