குரு சீடர் உரையாடல்

  • உலக சமாதானம் விரைவில் மலரட்டும் அதன்பொருட்டு அருள் உள்ளங்கள் பெருகட்டும்!

    வாழ்க திருவேதாத்திரியம்!                          வளர்க திருவேதாத்திரியம்!!

    வாழ்க அறிவுச்செல்வம்!                                   வளர்க அறிவுச்செல்வம்!!

    குருசீடர் உரையாடல்- 7

        (1002 வது பதிவு)

    நாள்:02-01-2024

                                                                                              உ.ச.ஆண்டு:02-01-39

    உலக சமாதானம் விரைவில் மலரட்டும்

    அதன்பொருட்டு அருள் உள்ளங்கள் பெருகட்டும்!

     

     

     

     

     

     


     

     

     

     

     

     

    வாழ்க வையகம்!                                                            வாழ்க வளமுடன்!!

  • உலக சமாதானம் விரைவில் மலரட்டும் அதன்பொருட்டு அருள் உள்ளங்கள் பெருகட்டும்!

    வாழ்க திருவேதாத்திரியம்!                           வளர்க திருவேதாத்திரியம்!!

                    வாழ்க அறிவுச்செல்வம்!                                        வளர்க அறிவுச்செல்வம்!!

    குருசீடர் உரையாடல்- 6

        (1001 வது பதிவு)

    நாள்:01-01-2024

                                                                                              உ.ச.ஆண்டு:01-01-39

    உலக சமாதானம் விரைவில் மலரட்டும்

    அதன்பொருட்டு அருள் உள்ளங்கள் பெருகட்டும்!

     

     

     

    குரு-சீடர் உரையாடல் ஆரம்பம்…

     

    வாழ்க வையகம்!                                                            வாழ்க வளமுடன்!!

  • வயிற்றுப்பசியும் அறிவுப்பசியும் -அறிவிற்கு விருந்து – FFC-296

    வாழ்க மனித அறிவு!                         வளர்க மனித அறிவு!!

    அறிவிற்கு விருந்து – FFC-296

    12.07.2020- ஞாயிறு

     

    அன்பர்களே!

    வாழ்க வளமுடன்!

            தலைப்பு ‘வயிற்றுப்பசியும் அறிவுப் பசியும்’ என்றிருக்கின்றது.  பசி என்பது யாவரும் அறிந்த ஒன்றுதான்.  புதிதானது அல்ல.  எல்லோரும் அனுபவித்திருக்கின்ற ஒன்றுதான். ஆனால் தலைப்பு, வயிற்றுப்பசியுடன் அறிவுப்பசி என்று சேர்த்துக் கொடுக்கப்பட்டுள்ளது.   ஆகையால், பசியில் இரண்டு வகைகள் உள்ளன, அந்த இரண்டைப்பற்றியும்  சிந்திக்கப் பணிக்கப்பட்டுள்ளது இயற்கையால்/இறையால் இன்று. மகிழ்ச்சியுடன் சிந்திப்போம்.  இத்தலைப்பை ஏற்றுக்கொண்டு சிந்திப்பதன் வாயிலாக, இயற்கைக்கு/இறைக்கு உள்ளப்பூர்வமான  நன்றியினை அகத்திலிருந்து செலுத்துகின்றோம். 

    முதலில் பசியின் இரண்டு வகைகள் என்னென்ன என்று பார்ப்போம். 

                                  ஒன்று வயிற்றுப்பசி.  

                                  மற்றொன்று அறிவுப்பசி.

          வயிற்றுப் பசி எல்லா சீவன்களுக்கும் பொதுவானது.  ஆனால் அறிவுப்பசி என்பது ஐந்தறிவிலிருந்து ஆறாம் அறிவாக மலர்ந்த மனிதனுக்கு மட்டுமே பிரதானமாக இருக்கக் கூடியது.  ஆன்மா ஐந்து கோசங்கள் (போர்வைகள்) கொண்டிருந்தாலும் ஐந்தறிவு சீவன்களின் வாழ்க்கை முதல் இரண்டு கோசங்களான அன்னமய கோசம் மற்றும் மனோமய கோசத்திலேயே புலன்வழி இச்சையோடு முடிந்து விடுகின்றது.  அவ்வளவுதான் அவற்றின் வாழ்க்கை. இந்த புலன்வழி இச்சைக்கான வாழ்க்கை வாழ்வதற்காகவா பேரறிவு நாமாக(மனிதனாக) தன்மாற்றம் அடைந்துள்ளது?! சிந்திக்கலாமே!  சிந்தித்தாலே பிறவியின் நோக்கம் அறியும் முயற்சியிலோ, இறைத்தேடலிலோ விரைவில் வெற்றி பெற்றிடலாம்!

    ‘இச்சையின்றேல் ஏது இப்பிரபஞ்சம்?’

          இச்சையைப்பற்றி 80 வரிகள் கொண்ட கவியில் இருபத்தைந்தாவது  வரி ‘இச்சையின்றேல் ஏது இப்பிரபஞ்சம்?’ என்பது. அக்கவியின் எல்லா வரிகளுமே உலகியல் வாழ்க்கையை மட்டும் பிரதானமாக நடத்தும் மனிதர்களுக்கும் உலகியல் வாழ்க்கையையும் இறையுணர்வு ஆன்மீகத்தையும் இணைத்து நடத்திக் கொண்டிருக்கும் ஆன்ம சாதகர்களுக்கும் பொதுவானதுதான். இருந்தாலும், மேலும் அக்கவியின் மற்றொரு வரியினையும் இத்தருணத்தில் நாம் கவனத்தில் கொள்ள வேண்டியது உசிதமானது.  அதாவது 63-வது வரியில் “இச்சையின்றேல் உயர் ஞானந்தான் ஏது?” என வினவுகிறார் இன்ப-துன்ப அறிவியளாலரான ஜகமே போற்றுவதற்கு உரியவரான இருபதாம் நூற்றாண்டின் ஜகத்குருவாக அவதரித்த நம் குருநாதர் வேதாத்திரி மகரிஷி அவர்கள். சிந்தித்தால், மனிதனின் வாழ்க்கை மிக மிகச் சிறப்புடையது என்பதனை நன்கு உணரலாம்; அறியலாம் அனுபவப்பூர்வமாக.  மனிதனின் சிறப்பு பற்றி வேதாத்திரி மகரிஷி அவர்கள்  ‘மனிதனின் சிறப்பு’ (1955) என்கின்ற தலைப்பில் 100 வரிகளில் கவி ஒன்றை அருளியுள்ளார். வாசித்து இன்புறலாம்.

     

    மனிதனின் சிறப்பை  அறிந்து   ஐந்தறிவிலிருந்து ஆறாம் அறிவாக மலர்ந்துள்ள மனிதனால் மற்ற மூன்று கோசங்களிலும்  வாழ்க்கையை நடத்தாமல் வாழ்க்கை வாழ்வது சரியா என்பதனை அறிந்துகொள்ள முடியும்.   நடைமுறையில் ஐந்து கோசங்களிலும் ஆன்மா செயல்படுவதில்லையே!  ஏன்?

    கடினமானதா?

        மற்ற மூன்று கோசங்களில் வாழ்க்கையை நடத்துவது கடினமானதா? மற்ற மூன்று கோசங்கள் என்னென்ன?  அவற்றில் பெரும்பாலோர் கடைசி மூன்று கோசங்களில் வாழ்வதில்லை; வாழ முடிவதில்லை?   ‘வாழ்வதில்லை’ என்றால்  அது தனிமனிதனின் பொறுப்பின்மையையாகின்றது.   ‘வாழ முடிவதில்லை’ என்றால் அதற்குக் காரணம் சமுதாயம்.  பாரதியார் மொழிந்துள்ளதுபோல் ‘வாழவேண்டிய நன்முறையை’ சமுதாயமோ, விஞ்ஞானமோ  மனிதர்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும்.  அந்த நன்முறையினை  சமுதாயத்தின்  சார்பாகவும் விஞ்ஞானத்தின் சார்பாகவும்  திருவேதாத்திரியம் செய்துகொண்டிருக்கின்றது  என்பது மிகையே அன்று. 

    கடைசி மூன்று கோசங்கள் என்னென்ன?

       அவையாவன:

                    3) பிராணமய கோசம்

                    4) விஞ்ஞானமய கோசம்

                    5) ஆனந்தமய கோசம் (முழுமை பெற்று நிறைவாக நிற்கின்றது மனம்)

         முதல் இரண்டு கோசங்களையும் சேர்த்துத்தான் ஐந்து கோசங்களிலும் ஆன்மா செயல்படவேண்டியுள்ளது. ஆனால் முதல் இரண்டு கோசங்களிலேயே வாழ்வது என்பது

         அறியாமையின் காரணமாகவோ

                  அல்லது

        அறிந்தும் அலட்சியப்படுத்தி வாழ்வதன் காரணமாகவோ

                 அல்லது

        தக்க வழிகாட்டுதல் கிடைக்காமலோ மனிதர்கள் அல்லலுறுவதைக் கண்கூடாகப் பார்க்கும்போது  சகமனிதர்களாகிய மனவளக்கலைஞர்களுக்கெல்லாம் கவலை ஏற்படுகின்றது.  கவலை ஏற்பட்டாலும், அந்நிலையினை மாற்றி அமைக்க  மகரிஷி அவர்களின் வழியில், தொண்டுகளிலே சிறந்ததான அறிவுத் தொண்டாற்றி இன்பம் கண்டு வருகிறோம்.   இன்றைய  ‘அறிவிற்கு விருந்து’ (FFC: Feast For Consciousness) – க்கான முன்னுரையை (like starter served in Dinner to create appetite) இத்துடன் முடித்துக்  கொண்டு நேரிடையாக தலைப்பிற்குள் செல்வோமாக.

    பசி என்பது என்ன?

          ‘பசி’ என்பதனை எல்லோரும் அறிவர்.  பசி என்பது அறிவிற்கு ஏற்படும் ஒரு துன்ப உணர்வு. அது தோன்றுமிடம் வயிறு. நான் பசியுடன் இருக்கிறேன். I am hungry என்போம். அல்லது வயிறு பசிக்கின்றது என்போம். உடல் இயக்கத்திற்கு சக்தி தீர்ந்ததும், சக்தி தேவை என்கின்ற நிலையை அறிவிப்பது பசி என்கின்ற துன்ப உணர்வு.  அந்தப் பசிக்கு  ‘வயிற்றுப் பசி’ எனப் பெயர் வைத்துள்ளோம்.

        வயிற்றுப் பசியைப் போக்க உணவு உட்கொள்வோம். அந்த உணவு வயிற்றுக்குள் சென்று சீரணிக்கப்பட்டு உடலுக்கு வேண்டிய ரசம், இரத்தம், தசை, கொழுப்பு, எலும்பு, மஜ்ஜை, சுக்கிலம் என்ற ஏழு வித தாதுக்களாகி பிறகு எது எது, எந்தெந்த உடல் உறுப்புகளுக்குப் போய்ச் சேர வேண்டுமோ அங்கு போய்ச் சேரும்.   இதனை செய்வது யார்?  நாமா?  இல்லையே! இயற்கைதான்/இறைதான் செய்கின்றது.     வாயிலிருக்கும் உணவை நாக்கால் உணவுக் குழாய்க்குள் தள்ளும் வரை நமது வேலை முடிந்துவிடுகின்றது.  உண்ணும் உணவை சீரணம் செய்து ஏழு வித தாதுக்களாகப் பிரித்து அந்தந்த உடலுறுப்புகளுக்கு அனுப்புவது  யார் அல்லது எது அனுப்புகின்றது? இது இயற்கையாக நடக்கின்றது என்போம். ஆனால் இயற்கை செய்கின்றது என்று சொல்ல மாட்டோம்.   

    காரணம் என்ன?

           காரணம் 1911 வரை அவ்வாறெல்லாம்  சிந்தித்ததில்லை மனிதஅறிவு. சிந்தித்துப் பழக்கமில்லை. ஆனால் 1911 ற்குப்  பிறகு மனிதஇனத் தன்மாற்றத்தில்  அல்லது  ஆன்மீகத்தில்  ஒரு புதிய திருப்பத்தை சடுதிமாற்றமாக எட்டியிருக்கின்றது இயற்கை/இறை. எனவே இப்போது  சீரணம் செய்யவைத்து ஏழுவித தாதுக்களாகப் பிரித்து அந்தந்த உடலுறுப்புகளுக்கு அனுப்புவதை  இயற்கை என்கின்றது 1911 ல் ஏற்பட்டுள்ள  சடுதிமாற்றத்திற்குள் வந்த மனிதஅறிவு.   இதில் யாருக்கும் கருத்து வித்தியாசம் இருக்க முடியாது. இது கருத்து என்றுகூட சொல்ல முடியாது. இதுவே உண்மை. எனவே உண்மையை ஏற்றுக் கொள்வதில் கருத்து வித்தியாசத்திற்கே இடமில்லை.  

    விந்தையை நினைத்து மகிழலாமன்றோ!

           மனிதன் உண்ட உணவு சீரணிக்கப்பட்டு ஏழு வித தாதுக்களாகப் பிரித்து அந்தந்த உடலுறுப்புகளுக்கு அனுப்பப்படும் விந்தையை நினைத்து மகிழலாமன்றோ?  இயற்கையை/இறையை* நினைவில் கொண்டோ அல்லது  முன் வைத்து ஒருமை இயலில் (in advaidic sense or in  Oneness Science)  பேசப் பழகிக் கொள்ள வேண்டும்.  இல்லையெனில் நான், தான், தனது என்கின்ற தன்முனைப்பில்(Ego = Edging God Out= E + G+ O = EGO) மூழ்கிவிடும் அறிவு.  தன்முனைப்பு வந்துவிட்டால் அறிவு தடுமாற்றம் அடைந்து தடமாற்றத்தில் சென்றுவிடும்.  விழிப்புணர்வு அயர்ந்துவிடும்.  அயராவிழிப்புணர்வேதான் இயற்கையின் ஆதிநிலையான பேரறிவு.  பேரறிவேதான் இப்போது ஆறாமறிவாக தன்மாற்றம் அடைந்துவிட்டாலும், மனிதஅறிவு விழிப்புநிலையில் அயர்ந்துவிட்டதால் அது மயக்கத்தில்- மாயையில்(புலன்மயக்கத்தில்) சிக்கித் தவித்துக்கொண்டு வாழ்கின்றது.  காரணம் பேரறிவு நேரிடையாக மனிதனாக தன்மாற்றம் அடையவில்லை என்பதனை கவனத்தில் கொள்ளவேண்டும். இதுவும்கூட ஒருவகை விழிப்புணர்வைச்சார்ந்ததே!  பேரறிவு நேரிடையாக மனிதஅறிவாக மாறுவதற்கு வாய்ப்பில்லை.  ஓரறிவிலிருந்து ஐந்தறிவாகி மனிதனாகி வந்துள்ளதால் பேரறிவின் பின்னமான மனிதஅறிவு விழிப்புணர்வில் ஏற்பட்டுள்ள அயர்ச்சியைப் போக்கி அயராநிலைக்கு வந்து அயராவிழிப்புணர்வாகிய பேரறிவோடு கரைந்து ஆனந்தமயகோசத்தில் இன்புறவேண்டும்.  இதுவேதான் மனிதப்பிறவியின் நோக்கங்களிலே பெரும் நோக்கமானதாகவும் உன்னதமானதாகவும் உள்ளது. இந்த அறிவு பற்றிய அறிவியல் உண்மையை மனவளக்கலையின் வழியாக மலரச்செய்து கொண்டிருக்கின்றது  திருவேதாத்திரியம். 

    (*திருவள்ளுவர் மொழிந்துள்ளது போல் ஐயப்படாது அகத்தினை உணர்ந்தவர்கள்  இயற்கையை இறை என்றனர். ‘இயற்கையை’ இயற்கை என்று சொல்லாமல் ஏன் இறை என்கின்றனர்?  காரணப் பெயராக இயற்கையை இறை என்கின்றனர்.  இயற்கை எனும் பேராற்றல் எங்கும் இருப்பதால், அதாவது இறைந்து கிடப்பதால் அதனை இறை  என்று கூறுகின்றனர்.)

    அளவும் முறையும் அவசியம்

          உணவில் சாதாரண உணவும் உண்டு.  விருந்தும் உண்டு. சாதாரண உணவும் பசியினைப் போக்கும். விருந்தும் பசியினைப் போக்கும். விருந்தில் பல வகையான உணவுகள் பரிமாறப்படும். விருந்தில், உணவு செயற்கையாக ருசியைக்கூட்டித் தயாரிக்கப்படும். உணவு கிடைக்கின்ற பெரும்பாலோருக்கும் சாதாரண உணவுதான் கிடைக்கின்றது.  இந்த சாதாரண உணவு கூடக் கிடைக்காத வறுமை நிலையும் உள்ளது இந்த சமுதாயத்தில் என்பது மிக மிக வருத்தத்திற்குரியது.  வறுமை என்பது சமுதாயத்தின் ஒரு பெரிய கொடும் துன்பம். கருணையாலும்,  சமுதாயத்தின்  மீது கொண்ட அக்கறையின் காரணமாக  “தனி ஒருவனுக்கு உணவு இல்லையெனில் ஜகத்தினையே அழித்திடுவோம்” என்று கூறுகிறார் மகாகவி – பன்முகமாக  சிந்தித்த மாமனிதர்  (multifaceted Personality). அதாவது உலகில் வாழும் ஒருமனிதனுக்குக்கூட உணவு இல்லை என்கின்ற நிலை இருக்கக்கூடாது  எனக்கருதியே அவ்வாறு கூறி அதற்காக “இனியொரு விதி செய்வோம். அதனை எந்தநாளும் காப்போம்” என்கிறார் மகா கவி பாரதியார்.  

        விருந்து ஒரு சிலருக்குத்தான் எப்போதாவது கிடைக்கின்றது. சாதாரண உணவே போதுமானது. ருசி இருந்தால் தான் நாக்கு, உணவை உணவுக்குழாய்க்குள் தள்ளும் என்பது உண்மைதான். இருந்தாலும் பசிக்காகத்தான் உணவு. ருசிக்காக உணவு இல்லை என்பதனையும் மறந்து விடக்கூடாது, ருசியை செயற்கையாக அதிகமாக்கினால் சில நேரங்களில் தீமையையும் விளைவிக்கும்.

       எனவே வயிற்றுப் பசிக்கு சாதாரண உணவே போதுமானது. விருந்து கிடைப்பதாக வைத்துக்கொண்டாலும் தினந்தோறும் விருந்தை உண்ண முடியாது. சலிப்பு ஏற்படும். விருந்து என்பது தேவைக்கு அதிகமான உணவுதானே?  தினந்தோறும் விருந்து உண்பது வயிற்றுக்குத் தீங்கையும் விளைவிக்கும். உணவு உண்பதில்   “அளவும்” (limit) முறையும் (method) அவசியம்.  அளவு என்பது அதிகமாகவோ, குறைவாகவோ, அனுபவிக்கக் கூடாது.  முறை என்பது இயற்கைக்கு முரண்படாமல் ஒத்த முறையில் அனுபவிப்பதாகும்.  இன்பம் துய்த்தலில் அளவும் மீறி, முறையும் மாறினால் இன்பமே துன்பமாக மாறும் என்கின்ற இயற்கை நியதியைக் கவனிக்க வேண்டும்.

           வயிற்றுப் பசியைப் பற்றி அறிந்து கொண்டோம்.    மூன்று முக்கியமான உண்மைகளைத் தெரிந்து கொண்டோம்.

    1. உணவு சீரணமாகி உடலுக்கு வேண்டிய சக்தியாக மாற்றுவது இயற்கை அல்லது மறுபெயரைக்கொண்ட இறை என்றும்,
    2. உணவு உட்கொள்வதில் அளவும் முறையும் கடைபிடிக்க வேண்டும் என்றும்,
    3. இல்லையெனில் இயற்கையின் நீதி மீறப்பட்டு இன்பமே துன்பமாக மாறிவிடும் என்பதனை அறிந்து கொண்டோம்.

    அறிவுப் பசி என்பது என்ன?

           இப்போது அறிவுப்பசி பற்றி அறிந்து கொள்வோம். வயிற்றுப் பசி என்பது சரி.  அறிவுப் பசி என்பது வார்த்தை ஜாலமா? உண்மையில் அறிவிற்குப் பசி இருக்குமா என ஐயம் எழலாம். அறிவோ அரூபம். அதாவது உருவமில்லாதது. உருவமில்லா அறிவிற்குப் பசி எவ்வாறு ஏற்பட முடியும் என ஐயம் எழலாம்? அறியவேண்டியதை அறியவேண்டும் என்கின்ற அவா எழுந்தால் அதுவே அறிவிற்கானப் பசி ஆகும்.  அந்த அறிவுப்பசியினைப் போக்குவதுதான்  மனவளக்கலை எனும் விருந்து.  மனவளக்கலை அறிவை அறியும் பயிற்சியாயிற்றே!  அது அறிவிற்கு ஆனந்தத்தைத்தான் தரும்.  அதுதான் அறிவு முழுமை பெற்று நிறைவாக இருக்கின்ற நிலை.     வயிற்றுப் பசியின் போது வயிற்றில் ஏற்படும் பசியாகிய துன்ப உணர்வை அறிவது அறிவு.  அதேபோல் மற்ற உடல் உறுப்புகளில் ஏற்படும் துன்ப உணர்வுகளையும் அறிந்து கொள்கின்றது அறிவு. அப்படி இருக்கும்போது தனக்கேகூட(அறிவிற்கேகூட) துன்ப உணர்வு ஏற்படுமா? பசி என்பது துன்ப உணர்வு என்பதால் அறிவுப்பசி என்பது அறிவிற்கு ஏற்படும் துன்பம் என்றுதானே பொருள்?

        அப்படியானால் அறிவுப்பசி என்பது என்ன என்று அறிந்து கொள்ள வேண்டும். வயிற்றுப் பசியில் பசி என்கின்ற துன்ப உணர்வை, உணவை உட்கொண்டு சரி செய்து கொள்கிறோம். வயிறு ஓர் உறுப்பு. உருவமுள்ளது. வயிற்றில் இரைப்பை உள்ளது.  நாம் அருந்தும் உணவு இரைப்பையில் நிறைகின்றது. வயிறும் பருப்பொருள். உணவும் பருப்பொருள்(கெட்டிப் பொருளாகவோ அல்லது நீர்ப்பொருளாகவோ இருக்கும்) வகையைச் சார்ந்தது. ஆனால் அறிவோ அரூபம். அதாவது உருவமில்லாதது. அப்படி இருக்கும்போது உருவமில்லா அறிவிற்கு ஏற்படும் பசியை எவ்வகையான உணவுப் பொருளைக் கொண்டு அறிவு தனது பசியைப் போக்கிக் கொள்ள முடியும்?

    எத்தகைய உணவு அறிவிற்கு விருந்து?

         உருவத்தைக் கொண்ட வயிறு பருப்பொருள்(உருவமுள்ள) உணவைக் உட்கொண்டு பசியைப் போக்கிக் கொள்வதுபோல் அறிவு தன் பசியை போக்கிக் கொள்வதற்கு பருப்பொருள் உணவு ஏதும் கிடையாது. உருவமில்லா உணவைக் கொண்டுதான் அறிவு தன் பசியைப் போக்கிக் கொள்ள வேண்டும்.   அதுதான் சிந்தனை. எனவேதான் சிந்தனையை சிந்தனை விருந்து என்றும் அறிவிற்கு விருந்து என்றும் சொல்கிறோம். அறிவு ஐம்புலன்கள் வாயிலாக புற நிகழ்ச்சிகளை உணர்கின்றது.  இன்பதுன்பங்களை உணர்கின்றது.  இதுமட்டுமேவா அறிவின் வேலை?  இது மட்டுமே அறிவிற்கு இன்பம் தரமுடியுமா?

    அறிவு அறிய வேண்டியது எது?

        அப்படியானால் அறிவுப்பசி என்பது என்ன? அறிவது அறிவு.  அறிய வேண்டிய இறுதியானதை(அதாவது தன்னையே) அறியவேண்டும் அறிவு. உடலுக்கு ஏற்படுகின்ற இன்பதுன்ப உணர்வுகளை அறிந்து கொள்வது எதுவோ அது அறிவு. புறத்தே நடக்கின்ற நிகழ்ச்சிகளை எல்லாம் அறிகின்றது. இவற்றை எல்லாம் அறிந்து கொண்டு, இவற்றிற்கெல்லாம் மேலாக, அறிய வேண்டி இறுதியானதை அறியக் கூடியது அறிவு(Capable).  அப்படியானால் அறிவு அறிய வேண்டியது எது?  அறிவு  ‘தான் யார்’ என்றும்,  ‘தன் இருப்பிடம்’ எது என்றும் அறிய வேண்டும். உயிரினங்களிலேயே இந்தச் சிறப்பை உடையது மனிதஇனம். தன்னை உணரும்போதுதான்  அறிவு முழுமை பெறும்.  மகாகவி கூறும் தெளிந்த நல்லறிவாகும் அறிவு

    அறிவுப்பசிக்கான விருந்துதான் திருவேதாத்திரியம்

        அறிவு தனது பூர்வீகத்தை அறிய வேண்டும். இது வரை அறிவைப்பற்றிய விஞ்ஞான பூர்வமான தகவல் ஏதும் இல்லாதபோது அறிவைப்பற்றிய(Consciousness) தகவல்களை எங்கிருந்து அறிவது என்கின்ற ஐயம் எழலாம். அறிவுப்பசியைப் போக்கிட இயற்கை/இறை தயாரித்துள்ள விருந்துதான் திருவேதாத்திரியம். இயற்கையின்/இறையின் தன்மாற்றப்படி பேரறிவிற்கு  எது பிரியமோ அதனை மனிதஅறிவு அறிய வேண்டும். அப்போதுதான் மனிதஅறிவிற்கு பேரின்பம். இந்த நிலை மனிதஅறிவிற்கு இல்லாதபோது மனிதஅறிவு அல்லலுறுகின்றது. அல்லலைப் போக்கிக்கொள்ள வேண்டும் என்கின்ற வேட்கை மனிதஅறிவிற்கு வந்துவிட்டால் அதுவே அறிவுப்பசியாகிவிடுகின்றது. தனக்குப்(அறிவிற்கு) பிரியமானதை அறியாமல்,  அறிந்தாலும் அதற்கான வழியும் தெரியாமல்  காலம் கடத்துவது அறிவிற்குத் துன்பம்தான். எந்த நோக்கத்திற்காக அறிவு(இந்த ஆன்மா உடல் எடுத்ததோ) இந்த உடலில் அறிவாக இயங்க வந்ததோ அதனை அடைவதற்கான ஏக்கம் தான் அறிவுப்பசி.

    அறிவிற்கு ஓய்வேது?

           அறிவிற்கு தன்னை அறிவதில் விருப்பம் வந்துவிட்டால் தன்னை அறிகின்ற வரை அதற்கு ஓய்வே கிடையாது என்பார் வேதாத்திரி மகரிஷி அவர்கள். எப்போது தன்னை உணா்கின்றதோ அன்றுதான் அறிவிற்கு ஓய்வு. அன்றுதான் அறிவின் பசி முழுவதுமாகத் தீரும். அன்றுதான் அறிவிற்கு முழு விருந்துமாகும்.  அதுவே அறிவின் முழுமைப்பேறு.  ஆகவே ஆறாம் அறிவுடைய மனிதன் சிந்திக்க வேண்டும். சிந்தித்தலின் வாயிலாக வாழ்வின் நோக்கத்தை தானே அறிந்து, அதுபோல் வாழ்க்கை வாழ்ந்து, மற்றவர்களுக்கும் வழிகாட்டும் புண்ணியக் கடமையை ஆற்றும் போதுதான் அறிவிற்குப் பசி தீரும். இப்பூமியில்  வந்து போனதற்கான சுவட்டினை விட்டுவிட்டுச் செல்லவேண்டும்.  வயிற்றுக்குப் பசி இருப்பதுபோன்று அறிவிற்கும் பசி உண்டு என்பதனை அறிந்து கொள்ள வேண்டும்.  சிந்தனை விருந்துதான் அறிவின் பசியினைப் போக்க முடியும். அறிவு  அன்னமய கோசத்தைக் கடந்து விஞ்ஞானமய கோசத்திற்குள்ளும், ஆனந்தமய கோசத்திற்குள்ளும் பயணிக்க வேண்டும்.

           இதுவரை அறிந்து கொண்டது என்ன என்று சுருக்கமாகப் பார்ப்போம்.

    1. எந்த நோக்கத்திற்காக அறிவு(இந்த ஆன்மா உடல் எடுத்ததோ) இந்த உடலில் அறிவாக இயங்க வந்ததோ அதனை அடைவதற்கான ஏக்கம் தான் அறிவுப்பசி.
    2. சிந்தனைதான் அறிவுப் பசியைத் தீர்க்கும்.
    3. அறிய வேண்டிய இறுதியானதை அறியாத அறியாமையால் வருவது துன்பம்..
    4. அறிவுப் பசியைத் தீர்க்க இயற்கை தயாரித்துள்ள விருந்துதான் திருவேதாத்திரியம்.

    வாழ்க திருவேதாத்திரியம்!           வளர்க திருவேதாத்திரியம்!!

  • குருபூர்ணிமா-அறிவிற்கு விருந்து-FFC – C295

    வாழ்க வையகம்!                                        வாழ்க வளமுடன்!!

    அறிவிற்கு விருந்து
    FFC – C295

    05.07.2020 – ஞாயிறு

    குருபூர்ணிமா

    vysa_maharishi_and_vethathiri_maharishi

    வாழ்கவளமுடன்

    அறிவில் அறிவாய் நிலைத்து அறம் வகுத்து அதனை வாழ்ந்து காட்டியவர்கள் அனைவரையும் குருபூர்ணிமா கொண்டாடும் இந்த தினத்தில் நினைவு கூர்வோம்.

    வருடத்தில் ஒரு நாள் குருபூர்ணிமா விழாவாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது. இவ்விழா வியாசமுனிவரை நினைவுகூர்வதற்காக ஏற்படுத்தப்பட்ட விழாவாகும். வியாச முனிவர் நான்கு வேதங்களையும் தொகுத்து வழங்கியுள்ளார். பதினெட்டு புராணங்களை வழங்கியுள்ளார். மகாபாரதம் மற்றும் ஸ்ரீமத்பாகவதம் அருளியுள்ளார். வியாசமுனிவரை நினைவு கூறும் இவ்வேளையில் ஆன்மீக சாதகர்கள் அவரவர்களுடைய நேரிடை குருவினையும் நினைவு கூர்தல் நலம் பயக்கும்.


    எனவே இத்தருணத்தில் நமது குருவாகிய அருட்தந்தை அவர்களை நினைவு கூர்வோம். அப்படியென்றால் மற்ற நாட்களில் நமது குருவை மறந்து விட்டிருக்கிறோம் என்று பொருளல்ல. என்றைக்கு அவருடைய உயிராற்றல் நம்முடன் கலப்புற்றதோ அன்றைய தினத்திலிருந்து அவருடன் நாம் இணைந்தேதான் உள்ளோம்.

    எப்படியெனில் அருட்தந்தை அவர்கள் நமக்கு சிந்திக்கக் கற்றுக் கொடுத்து, அதற்கான பொருளையும், நமக்கு அறிமுகப்படுத்தி விட்டார். மூச்சு விடுவதுபோல் சிந்திப்பதும் நமக்கு சகஜமாகிவிட்டதால் சிந்திக்கும் போதெல்லாம் நம்முடைய குருவின் அறிவாற்றலுடன் தொடர்பு கொள்வதோடு மட்டுமல்லாது, சிந்திப்பதற்கு அவர் அறிமுகப்படுத்திக் கொடுத்த பொருளுடனும்(மெய்ப்பொருளுடனும்) தொடர்பு கொண்டு இணைந்து கொண்டிருக்கிறோம். சொல்லப்போனால் மூச்சு விடுவது தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருப்பது போல், சகஜ நிஷ்டை போல் எப்போதுமே சிந்தனையோடு இருப்பதால் எப்போதுமே குருவின் நினைவோடும் அதே நேரத்தில் அவர் அறிமுகப்படுத்திக் கொடுத்த சிந்தனைக்குரிய பொருளுடனே(மெய்ப்பொருள்) இணைந்தேதான் வாழ்கிறோம்.

    குருவோடு தொடர்பு கொள்வதோடு மட்டுமல்லாது அவரையும்(எப்பொருளை), அவரது செயலையும்(எச்செயலை), அவரது குணத்தையும்(எக்குணத்தை) அவரது உயிரையும்(எவ்வுயிரை) எப்போதும் (அடிக்கடி) நினைந்து கொண்டேதான் இருக்கிறோம். விளைவு இயல்பூக்க நியதிப்படி நம்முடைய அறிவினிலும் உடலினும் மாற்றங்கள் ஏற்பட்டு நம்முடைய மனிதப் பண்பேற்றம் நடை பெற்றுக் கொண்டு வருவதை நாம் உணர்ந்து கொண்டு வருவதில் ஆனந்தம் அடைகிறோம்.பிறவிப்பயனாகிய லட்சியம் நிறை வேற அந்த லட்சிய நாளுக்கு ஏங்கிக் காத்துக் கொண்டிருக்கிறோம்.
    அவரது செயலாலும் குணத்தாலும் அடைந்த உயர் புகழையும் நாம் மேலும் மேலும் நினைக்கிறோம். அறிந்து மகிழ்கிறோம். அவருடைய சூக்கும உடலுக்கு உளம் கனிந்த நன்றியினையும் அவரது அறிவாற்றலை சிரம் தாழ்த்தி வணங்கி போற்றுகிறோம். பாராட்டுகிறோம்.

    அருட்தந்தை அவர்கள் அருளுவதாவது:

    வினைப்பயனைப் போக்காமல் வீட்டையடைய விரும்புவதோ பொருந்திடாது
    தட்டுங்கள் திறக்குமென்றார் தனக்குள்ளேயே பேராற்றல் புதையல் கண்டோர்
    தக்கவழி அருட்குருவின் தாள் பணிந்து தவம் பயின்று தனை உணர்தல்”

    என்றும்

    எவரொருவர் குருவை மதித்து ஒழுகினாலும்
    தப்பாது குருவுயர்வு மதிப்போர் தம்மைத்
    தரத்தில் உயர்த்திப் பிறவிப்பயனை நல்கும்”

    என்றும் அருள்கூர்ந்து தெரிவிக்கிறார் நமக்கு.

    அருள் துறையில் நுழைவதற்கே ஆர்வமில்லாமலும் வாய்ப்பில்லாமலும் இருக்கும் இச்சமுதாயத்தில், நாம் விரும்பி வாய்ப்புக் கிடைத்து, அருட்தந்தையின் சீடர்களாக வந்துள்ள நமக்கு, பயிற்சியின் வெற்றி தள்ளிப்போகும் போது நம்பிக்கை இழந்து பயிற்சியில் தொய்வு ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக நம்பிக்கை ஊட்டும் வகையில் அருட்தந்தை அவர்கள் மேலும் அருளுவதாவது

    “பலஆயிரம் பிறவி எடுத்து ஏற்ற பழிச்சுமைப் பதிவுகளை ஒரு பிறவி காலத்திலே மாற்றலாம்”என்கிறார்.

    இந்த தெய்வீக வரிகள் வாயிலாக நமக்கு உற்சாகத்தையும் உறுதியையும் அளிக்கின்றார். அதற்கு வழி கருமையத்தூய்மையாகும் என்கிறார். அதற்கு தவமும் அறமும் தேவை என்கிறார். மேலும் இறையுணர் பாதையிலே என்றும் விழிப்புடனே வாழ்வதுதான் அவ்வழி என்கிறார்.

    மேலும் “உத்தம நண்பர்காள் உங்களுக்கும் உரியது”என்கின்ற அவரது கருணை மொழி ‘பயணம் முடியாமல் தள்ளிப்போய்க் கொண்டிருக்கின்றதே, எப்போது வரும் அந்தநாள்’ என்கின்ற தீரா ஆன்மீக தாகத்திற்கு தெய்வீக நீரை அளிப்பது போல் உள்ளது.மேலும் நமக்கு நம்பிக்கை அளிக்கின்றது.

    மேலும் நாம் முக்கியமாக கவனிக்க வேண்டிய ஒன்று உள்ளது. தரம் உயர்த்துவது என்பது:– விலங்கினத்திலிருந்து சடுதிமாற்றமாக வந்த ஆதிமனிதனின் கருத்தொடர்தான் இன்றுள்ள நாமும்.

          எனவே

        நம்மிடம் உள்ள விலங்கினப் பதிவுகளைச் செயலிழக்கச் செய்து,

      பொருள், புகழ், செல்வாக்கு, புலனின்பம் ஆகிய நான்கிலும் புகுந்து அழுந்தி மனதை புண்ணாக்கிக் கொள்ளாமல்  .

     எப்போதும் அயராவிழிப்பிலே(Awareness is God) இருந்து கொண்டு,

     மனிதப் பண்பான  அன்பிற்கும், கருணைக்கும் பாத்திரமாக திகழ்ந்து அறிவுத் தொண்டினை  செய்து வருதலே, கோடான கோடி மக்கள் வாழ்கின்ற இச்சமுதாயத்தில் நமக்கு மட்டும் குரு-சீடர் உறவு கிடைத்திருப்பதை நாள்தே்ாறும் நினைவு கொண்டு சுயதிருத்தம் பெற்று வருவதே நாம் நம் குருவிற்கும், அவர் வழியாக இறைக்கும் செலுத்தும் நன்றியாகும்.

    “தந்தை சொல் மிக்க மந்திரமில்லை”என்று அருளிய தெய்வத்தாய் அவ்வையை மதித்து தந்தைகளுக்கெல்லாம் தந்தையாக விளங்கும் நம்முடைய அறிவுக் கண்களையெல்லாம், திறந்து அறிவொளி வீசச் செய்துள்ள அருட்தந்தை அவர்களின் சொற்களையெல்லாம் மந்திரங்களாகக் கொண்டு எப்போதும் நினைந்து மதித்து நடந்து இப்பிறவியிலேயே பிறவிப்பயனை எய்துவோம். நம்முடன் வாழும் சக மனிதர்களையும் உய்விக்க அறிவுத் தொண்டாற்றி மகிழ்ந்து குருவின் சூக்கும சரீரத்திற்கு நன்றியினை செலுத்திப் பூரிப்படைவோம். அவரது கனவான ஓர் உலக ஆட்சியும், உலக அமைதியும் விரைவில் நிஜமாக, உறுதியான  எண்ண அலைகளை அழுத்தமாக பரப்புவோம். இதுவல்லவோ பிறவிப்பயன். மனிதப்பிறவியின் பயனில் இரண்டு அங்கங்கள் உள்ளன.

         ஒன்று, மனிதப் பிறவி எடுத்த நோக்கத்தையும் நிறை வேற்றிக் கொள்ள வேண்டும்.

        மற்றொன்று மனிதப் பிறவியின் நோக்கம் நிறைவேறிய பிறகு,

      நோக்கம் நிறைவேறிய பிறவி சமுதாயத்திற்கும் பயன்படும் வகையில் அறிவுத்தொண்டாற்றுவது.

    இங்குதான் பிறவியின் நோக்கமும் நிறைவேறுகின்றது.

    நோக்கம் அறிந்த பிறவியும் சமுதாயத்திற்கும் பயனாகின்றது.

    வாழ்க வையகம். வாழ்க வளமுடன்.

    guru_paadham

    வாழ்க திருவேதாத்திரியம்!                              வளர்க திருவேதாத்திரியம்!!


  • மனிதத் தேர்வு – PERSONALITY TEST-292(96) (மீள்பதிவு)

    வாழ்க மனித அறிவு!                                                        வளர்க மனித அறிவு!!

    மனிதத் தேர்வு – PERSONALITY TEST

    (மீள்பதிவு) FFC – 292(96)

                                                          17-06-2020-புதன்

    (01-07-2015)

     Personality_test-Q

        ‘மனிதத் தேர்வு’ என்கின்ற தலைப்பில் ஏற்கனவே நம் சத்சங்கத்தில் 30-10-2014 அன்று சிந்தித்து இருக்கிறோம்.  இருப்பினும் மீண்டும் அதே தலைப்பை எடுத்துக் கொண்டு ஆழ்ந்து/விரிவாக இன்று சிந்திக்க இருக்கிறோம்.  எட்டு மாதங்களுக்கு முன்னர், அதாவது இந்த இணைய தள www.prosperspiritually.com சத்சங்க ஆரம்பித்த இரண்டாம் நாள் இந்த தலைப்பில் சிந்தித்து இருக்கிறோம். அப்போது இணையதளம் ஆரம்பித்து ஒரிரு நாட்களே ஆனதால்  இணையதள சத்சங்கத்தில் கலந்து கொண்ட அன்பர்கள் மிகமிகக் குறைவு.  மீண்டும் அதே தலைப்பில் இன்று சிந்திக்க இருக்கிறோம்.  இரண்டிற்கும் உள்ள வித்தியாசத்தைக் கவனிக்கவும்.

       முன்பு சிந்தித்ததைவிட இப்போது ஆழ்ந்து கூடுதலாக சிந்திக்க இருக்கிறோம்.   இது எதனால் சாத்தியமாகியது? இணையதள சத்சங்க அன்பர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாலும், அவர்களின் எண்ணஅழுத்தத்தாலும், இன்னும் என்ன தெரிந்து கொள்ளப் போகிறோம் என்கின்ற அவர்களின் ஆர்வமிகு எதிர்ப்பார்ப்பாகிய அறிவுப்பசியைத் தீர்த்துவைக்கும் முகமாக இயற்கை/இறை  நடத்தி வைக்கும் நிகழ்வுதான் இந்த தலைப்பை மீண்டும் விரிவாக சிந்திக்க எடுத்துக் கொண்டது,  இதனை மேலும் உறுதிபடுத்துகின்ற நிகழ்வை இச்சிந்தனையின் இறுதியில் அறிவோம்.

        தலைப்பு  ‘மனிதத் தேர்வு’ என இருக்கின்றது.  தேர்வு என்றால் என்ன  என்பது யாவருக்கும் தெரியும்.    தேர்வு என்றால் கல்வி நிறுவனங்களில் அல்லது அலுவலகங்களில் ஒருவருடைய  படிப்பு, திறமை முதலியவற்றை சோதித்துப்பார்த்து  மதிப்பெண்கள் வழங்கப்படும். உதாரணத்திற்கு கணிதத் தேர்வை எடுத்துக் கொள்வோம். தேர்வு என்பது, குறிப்பிட்ட பாடதிட்டத்திற்குள் (syllabus) மாணவனிடம் வினாக்கள் கேட்டு, மாணவன் விடைகள் அளித்து, அது சரிபார்க்கப்பட்டு மதிப்பெண்கள் வழங்கப்படும்.  மதிப்பெண்களைப் பொருத்து மாணவன் தேர்வில் தேர்ச்சி பெற்றாரா, இல்லையா என்று அறிவிக்கப்படும்.

    ஆனால் மனிதத் தோ்வு என்றால் என்ன?  யார், யாரை, எதில் தோ்வு செய்வது?  இது ஒரு புதுமாதிரியானத் தேர்வாக உள்ளதே!   மனிதத் தேர்வு என்பது மனிதத்தை தேர்வு செய்வது. மனிதத் தேர்வில், ‘எதில்’ என்பதற்கு விடைகிடைத்துவிட்டது, மனிதத்தை யார் தேர்வு செய்வது? தங்களுடைய மனிதத்தை தாங்களேதான் தேர்வு செய்து கொள்வது மனிதத் தேர்வு.  ஏன் மனிதத் தேர்வு என்கின்ற தலைப்பில் சிந்திக்க வேண்டிய அவசியம் என்ன?

       உயிரினப்பரிணாமத்தில் விலங்கினமாக வந்தஉயிர்தான், பின்னர், சடுதி மாற்றத்தால் (mutation)  மனித உயிராக வந்துள்ளது. ஆகவே விலங்கினத்தின்  பண்பாகிய பிறர்வளம் பறித்தல் என்கின்ற குணமும் மனித உயிரில் சேர்ந்து வந்துவிட்டது. மனிதன் என்றால் அவனிடம் அன்பும் கருணையும் இருக்க வேண்டும்.  இதுதான் மனிதம் எனப்படுகின்றது.  மனிதம் இருந்தால் தான்  அவன் மனிதன்.   மனம்+இதம்=மனிதன்.  இதம் என்றால் அன்பும் கருணையுமாக ஒத்தும் உதவியும் இருப்பது என்று பொருள் என்கிறார் மகரிஷி அவர்கள்.

    ஆகவே ஆன்மா தன்பரிணாமச்  சுழற்சியை முடித்துக்கொள்ள, தன்னைத் தூய்மைப்படுத்திக் கொண்டு பேரான்மாவாகிய இறைநிலையுடன் இணைந்து விடவேண்டும்.  இதற்காகவேதான் மனிதப்பிறவி.   ஆன்மா,  பிறவிஎடுத்தபிறகு,  மனிதனின் வாழ்க்கை தொடங்க ஆரம்பிக்கின்றது.   மனித வாழ்க்கை என்பது இயற்கை மனிதனைத் தேர்வு செய்யும் நிகழ்ச்சி எனக்கொள்ளலாம்.

    கல்வித்தேர்வில் மாணவர்கள் விடை அளித்ததன் அடிப்படையில் பூச்சியத்திலிருந்து நூறு மதிப்பெண்கள்வரை வழங்கப்படுகின்றன. எல்லோராலும் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் எடுக்கமுடிவதில்லை. ஒரு சிலரால் மட்டுமே நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் எடுக்க முடிகின்றது, ஆகவே தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு குறைந்தது நாற்பது மதிப்பெண்களாவது  எடுக்கவேண்டும்  என்கின்ற கட்டாயம்உள்ளது.

    தேர்வில் தேர்ச்சி பெறாதவர் மீண்டும் தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டும்.  அந்தத் தேர்விலும் தேர்ச்சி பெறாதவர் மீண்டும் மறுமுறை தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டும்.  இதனையாவரும் அறிவர்.  தேர்ச்சி பெற்றால்தான் அந்தகல்வித்தகுதியை வைத்து வேலை கிடைத்து, வாழ்க்கைக்கு வேண்டிய பொருளை  ஈட்டி நிறைவாக  வாழ முடியும்.

            அதே போன்று தான் இயற்கை நடத்துகின்ற வாழ்க்கை என்கின்ற மனிதத்தேர்வில், அதாவது மனிதம் வெளிப்படுவத்துவதில்,  தேர்ச்சிபெறவேண்டும்.  மனிதம் வெளிப்படாததன் காரணமாக, ஏற்பட்டுள்ள வினையின் பயனை அனுபவிக்கத்தான் ஆன்மா மீண்டும் பிறவி எடுத்துள்ளது.   மனிதம் வெளிப்படுத்துவதில் நூறு மதிப்பெண்கள் எடுத்துத் தேர்ச்சி பெறுவது விரும்பத்தக்கதுதான் (Desirable).  நடைமுறையில் அப்படி இல்லை.  ஒரு கோடியில் ஒருவர்தான் நூறு மதிப்பெண்கள் எடுத்து மனிதத்தேர்வில் தேர்ச்சி பெற முடிகின்றது. பெரும்பாலோர் குறைந்தது நாற்பது மதிப்பெண்கள் கூட எடுத்து தேர்ச்சி பெறுவதில்லை. தேர்ச்சிக்கான குறைந்தபட்ச மதிப்பெண்களான நாற்பது விழுக்காட்டிற்கும்  கீழ்,  பூஜ்ஜியத்திலிருந்து முப்பத்தொன்பது வரை எடுக்கும் நிலைதான் உள்ளது.

            இந்த மனிதத் தேர்வில் நூறு மதிப்பெண்கள் எடுத்தவர்கள்தான் அறிவின் முழுமை அடைந்த அறிஞர் அல்லது ஞானி எனக் கருதப்படுகிறார்கள்.  எப்படி கல்வித் தேர்வில் நூறு மதிப்பெண்கள் எடுத்தவருக்கு, அவருக்கும் குறைவாக மதிப்பெண்கள் பெற்றவர்களை விட நல்ல வேலை கிடைத்து, பொருளை செழிப்பாக ஈட்டி வாழ முடிகின்றதோ, அதுபோல் வாழ்க்கையில் நூறு மதிப்பெண்கள் எடுத்து, முதன்மையான ஞானி, இன்பத்திற்கெல்லாம் பெரிதான பேரின்ப வாழ்வு வாழமுடிகின்றது.

            மனிதத் தேர்வில் தேர்ச்சி பெற்றமற்றவர்கள் அவரவர் மதிப்பெண்களுக்குத் தக்கவாறு இன்பத்தையும் துன்பத்தையும் கலந்துதான் நுகரலாம்.  நூறு மதிப்பெண்கள் எடுத்தவரைப் போன்று சலிப்பில்லா,  துன்பமில்லாப்  பேரின்ப வாழ்வு வாழ முடியாது.

            மனிதத் தேர்வில் தேர்ச்சியே பெறாதவர்கள் இன்னும் மனித உடலில் விலங்கினமாகவே வாழ்பவர்கள் ஆவர்.  இங்கே மகரிஷி அவர்கள் மனிதனைப்பற்றி கூறும் கவியினைக் கவனி்ப்போம்

    perfect_man

       மனிதன் என்கின்ற உருவினிலே மாக்களும், மக்களும் இருக்கிறார்கள் என்கின்றார்.  விலங்கினப் பண்பை போக்கிக்கொள்ளாத, பிறர்வளம் பறிக்கின்றவர்களை மாக்கள் என்கிறார். விலங்கினப்பண்பை போக்கிக் கொண்டு வாழ்பவர்களை மனிதா்கள் என்கிறார்.  அதிலும் மனதை அறிந்து மனதை இதமாக வைத்துக் கொண்டு மற்ற உயிரினங்களுக்கும், மக்களுக்கும்  மனமுவந்து தொண்டாற்றுபவர்களை முழுமனிதன் என்கிறார்.

        மனிதத் தோ்வில் தேர்ச்சி பெறாதவர்கள்  துன்பத்தையே அனுபவிக்க வேண்டியிருக்கும்.  கல்வித்  தேர்விலாவது மீண்டும் ஒருமுறையோ அல்லது  இரண்டு அல்லது மூன்றாவது முறையோ தேர்வு எழுதி தேர்ச்சி பெறுவது சாத்தியமாகின்றது.  ஆனால் மனிதத் தேர்வில் மட்டும் மீண்டும் மீண்டும் பல்லாயிரம் முறை  பிறவிகள் எடுத்தாலும் தேர்ச்சி பெற முடிவதில்லை.  இந்த அவல நிலைதான் இன்று மனிகுலத்தின் அமைதியின்மைக்குக் காரணம்.

             இந்த நிலையை மாற்றியமைக்க, மனிதன் தோன்றி பல்லாயிரம் ஆண்டுகள் தேவையாக இருந்தது இயற்கைக்கு.

    இச்சூழ்நிலையில்,

    1)  மனிதத் தேர்வில் முதலில் மனிதனை மனிதனாக்கி,  அதாவது மனிதத்தேர்வில்  40-99 மதிப்பெண்கள் எடுக்கவைப்பது. (வள்ளலார் கூறும் பரிபாக நிலை)

    2)   பிறகு improvement exam எழுதி அதிக மதிப்பெண்கள் எடுப்பது போல் அந்த மனிதனை இந்தப் பிறவியிலேயே நூறு மதிப்பெண்கள் எடுக்கச் செய்து அறிவை அறிந்த அறிஞராக்குவது; அறிவியலாளராக்குவது.(வள்ளலார் கூறும் சாகாவரம்)

        ஆகிய இரண்டு பணிகளைச் செய்து மனித சமுதாய வாழ்க்கையில் புரையோடிக் கிடக்கின்ற மூடப்பழக்கங்களையும்,   தேவையற்றவைகளையும் அடியோடு நீக்கி, புதிதாக நலம் தரும் அறிவுப் பூர்வமான பழக்க வழக்கங்களை ஏற்படுத்தி எந்நிலையிலும் ஒழுக்கவாழ்வு மலர்வதற்கு(revamp) இயற்கை கொண்டு வந்த திட்டம் தான் திருவேதாத்திரியம் என்கின்ற பெயரால் சமுதாயத்திற்குக் கிடைத்துள்ளது.  திருவேதாத்திரியம் கூறும் மந்திரத்தை நினைவில் கொள்வோம்.  திருவேதாத்திரியம்,

           “உத்தம நண்பர்காள் உங்கட்கும் உரியது” என்கின்றது.

        மேலும் பல்லாயிரம் பிறவிகளாக ஆன்மா சோ்த்து வந்த பழிச்செயல் பதிவுகளை ஒரு பிறவியிலே நீக்கிக் கொண்டு தூய்மை அடையலாம் என்கின்றார் மகரிஷி அவர்கள்.

    this_birth_is_enough_for_liberation

    பழிச் சுமைப்பதிவுகளை தூய்மை செய்வதால், மீண்டும் அந்தப்பதிவின் விளைவுகளாக துன்பம் வராமல் இருக்குமாதலால்.  நன்மை கிடைக்கின்றது என்கிறார்.

       விலங்கினப் பதிவுகளால்தான் பழிச்செயல்கள் வந்து சேர்ந்துள்ளன ஆன்மாவிற்கு.  ஆகவே விலங்கினப்பதிவுகள் நீங்கினால்தான்  பழிச்சுமைப்பதிவுகள் நீங்கும்.  விலங்கினப்பண்புகள் நீங்கிய ஆன்மா  மனிதனாகலாம் என்கிறார்.

       அதற்கு மேலும் திருவள்ளுவர் கூறுவது போல் ஐயப்படாது அகத்தை உணர்ந்தவர் தெய்வமாகலாம் என்றும் மகரிஷி அவர்கள் கூறுகிறார்கள்.

      இதுதான் இயற்கை மனிதனுக்கு வைத்துள்ள தேர்வு எனக்கொள்கிறோம்.  யாரும் விரும்பிப் பிறப்பதில்லை.  வினைப்பயனை அனுபவிக்கவே மனிதன் பிறக்கிறான். வினைப்பயனை தீர்த்துக் கொண்டு பிறவிக் கடலை நீந்தி மீண்டும் பிறவாது இருக்க வேண்டும் என்பதனை இயற்கை மனிதப்பிறவிக்கு வைத்துள்ள நோக்கம் அல்லது தோ்வாகும்.

      எனவே தான் சங்கல்பத்தில் உடல்நலம், நீளாயுள், நிறைசெல்வம் என்கின்ற உலகியல்  வாழ்க்கைக்கு வேண்டியத் தேவைகளை மட்டும் வைக்காமல்,  சாதாரண மனிதன் உலகியல் வாழ்க்கை வாழ்ந்து கொண்டே மாண்புடையவனாக, மற்ற  சங்கல்பங்களாகிய, ‘சிவம் அறியப்படுவதால் மலர்கின்ற அன்பால்’ செய்கின்ற தன்னலமற்றத் தொண்டால் வரும் உயர்புகழ் மற்றும் மெய்ஞ்ஞானம் ஆகிய இரண்டையும் இணைத்துள்ளார்.  மகரிஷி அவர்கள்.  மனவளக்கலைஞர்களை இறைத்தூதுவர்கள் என்று கூறி, அருளை நிதியாகக் கொண்டவர்களாக்கி அருள்நிதி என்கின்ற பட்டத்தையும் சூட்டுகிறார் மகரிஷி அவர்கள்.

       மேலும் “யோகமும் மனித மாண்பும் -– Yoga for Human Excellence” என்கின்ற படிப்பை பல்கலைக்கழகங்களில் ஏற்படுத்திக் கொண்டு வருகின்றது இயற்கை/இறை. ஆகவே ஒவ்வொருவரும் மனித மாண்புத்தேர்வில் EXCELLENT GRADE ஐ பெறுகிறோம் என உறுதி கொள்வோம்.

    Personality_test-Answer

    எனவே இப்போதைய காலத்தின் கட்டாயத்தால்,இயற்கைகருணையோடுஅளித்துள்ள இந்த திருவேதாத்திரியத்தை  வாழ்த்துவோம். வணங்குவோம்.

                       வாழ்க திருவேதாத்திரியம்.  வளர்க திருவேதாத்திரியம்.

                                     வாழ்கவையகம்.வாழ்கவளமுடன்.

        ‘மனிதத் தேர்வு’ என்கின்ற இச்சிந்தனையை பதிவேற்றத்திற்கு (upload) தயார் செய்து  வைத்திருந்த வேளையில், 30-06-2015—செவ்வாய், ‘The Hindu’ ஆங்கில நாளிதழில் வந்துள்ள A personality test on Gita values’ என்கின்ற தலைப்பின் கீழ் வந்துள்ள செய்தியினை  நம் சிந்தனையுடன் இணைத்துக் கொள்வோம். அதனுடன் நகலைக் கீழே காண்கிறீர்கள்.  இந்து நாளிதழுக்கு நன்றி.   நாம் எடுத்துக் கொண்டுள்ள ‘மனிதத் தேர்வு’ என்கின்ற தலைப்பிற்கும், A personality test’ என்கின்ற இந்து நாளிதழில் வந்துள்ள தலைப்பிற்கும் உள்ள பொருத்தத்தைக் காணுங்கள்.  மனிதனுடைய personality ஐ, பகவத்கீதை போதிக்கின்ற விழுமியங்கள் அடிப்படையில் அளவிடுவதற்கு ஒரு இணைய தளம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது என செய்தியிலிருந்து தெரிய வருகின்றது.

     Personality_Test_The_ Hindu_30th_Jun_2015

    முக்குணங்களால் மனித  உண்மை நிலையை புரிந்து கொள்ள முடிகின்றது எனப்படுகின்றது. இதுவரை அந்த இணையதளத்தின் வழியாக மாணவர்கள் உள்பட 10000 க்கும் மேல் தங்களை சோதித்துக் கொண்டதாக செய்தி கூறுகின்றது.  சத்வ, ரஜ, தமோ ஆகிய மூன்றையும், சோதிக்கின்றது என்கிறார் இணையதளத்தை உருவாக்கிய அன்பர், திரு. சதீஷ் மோத் அவர்கள்.  அவர் ஒரு பகவத்கீதை ஆராய்ச்சியாளர். அந்த இணையதளம் டாக்டர். மோத் அவா்களின் 20 வருட ஆராய்ச்சியினைக் கொண்டது என்கிறது செய்தி.  மீண்டும் ‘The Hindu’ நாளிதழுக்கு நன்றியினை இணையதள சத்சங்க அன்பர்கள் சார்பாக தெரிவித்துக் கொள்ளப்படுகின்றது.

        இந்த நிகழ்வு தற்செயலானதா அல்லது திட்டமிட்ட தெய்வீக நிகழ்ச்சியா (divine coincidence)? நாம் இந்த தலைப்பின் கீழ்  ஏற்கனவே சிந்தித்திருக்கிறோம்.  மீண்டும் இச்சிந்தனையை  ஆழ்ந்து சென்று கருத்துக்களை இன்று பதிவேற்றம் செய்ய விருந்தோம்.    இதனை, ‘The Hindu’ நாளிதழோ, திரு. சதீஷ் மோத் அவர்களோ அறிய வாய்ப்பில்லை. அதுபோல் நேற்று, ‘தி இந்து’ நாளிதழில் ‘A personality test on Gita values’ என்கின்ற செய்தி வரப்போகின்றது என்று நமக்கும் தெரியாது. இந்நிலையில் நேற்று அந்த நாளிதழில் வந்துள்ள  செய்தியும் நாம் எடுத்துக் கொண்ட தலைப்பும் ஒன்றாக இருக்கின்றது.  இந்த இருநிகழ்வையும் இணைத்து வைத்தது இயற்கை/இறை/அருட்பேராற்றலேதான்.  ஆகவே இயற்கைக்கு மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறோம்.  இயற்கை நமக்கு எப்போதும் உறுதுணையாக இருக்கவும் வேண்டுகிறோம்.

         ஆகவே  அவரவர்களே தன்னை அறிவாட்சித்தரத்தில் சோதித்து பார்க்க வேண்டிய அவசியத்தை இயற்கை  அறிவுறுத்துகின்றது.  நாம் எடுத்துக் கொண்ட தலைப்பையும் ஆமோதிக்கின்றது. ஒருவருடைய குணத்தை சோதித்துப்பார்த்துக் கொள்ள ஒரு இணையதளமே உருவாக்கிக் கொடுத்துள்ளது இயற்கை.   ஆகவே ஒவ்வொருவரும் தன்னைத் திருத்திக் கொள்வதில் ஆர்வம் கொண்டு முயற்சி செய்து மனித மாண்பினை உயர்த்திக் கொள்ள வேண்டும். மனிதத் தேர்வில் மதிப்பெண்கள் அளிப்பது  என்பது இயலாது.  ஏனெனில் இது குணம் சார்ந்தது. மற்ற சோதனைகள் போன்று, எடைஅளவு, உயரம், மார்புச்சுற்றளவு,  ஆகியவைகளை எடுத்துக் கூறுவதற்கு அளவு கோல்கள் உள்ளது போல் மனிதத் தேர்வில் மனிதத்தை எடுத்துச் சொல்வதற்கு அளவுகோல்கள் இல்லை. என்றாலும் தனது இயல்பை அடிக்கடி அடிக்கடி சோதித்துக் கொள்ள வேண்டும் என்பதனை எடுத்துச் சொல்வதற்காகவே மனிதத் தேர்வு என்கின்ற தலைப்பு  சிந்தனைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது.

        வேதாத்திரியம் அன்பும் கருணையும் மனிதனிடம் இயல்பாக மலர்வதற்கு இரண்டொழுக்க பண்பாட்டினை தவத்தின் முடிவில் ஓதச் சொல்கிறது.  இதனுடைய அடுத்த விரிவாக்கம், மனிதன் அன்றாடவாழ்வில் எந்தப்பணியைச் செய்து கொண்டிருந்தாலும் இடையிடையே இதனை ஓதி நினைவில் கொண்டிருக்க வேண்டும்.  அதாவது ஒருமணிநேரத்திற்கு ஒரு முறை 30 வினாடி நேரம் தேவையிருக்கும் இரண்டொழுக்கப் பண்பாட்டின் விரிவாக்கத்தைச் செயல்படுத்துவதற்கு.   அதாவது ஒரு மணிநேரத்தில் 30 வினாடி நேரம் செலவு செய்து ‘நான் இந்த ஒரு மணிநேரத்தில் இறையருளுக்கு பாத்திரமாக இருந்துள்ளேனா?’ என்று நம்மை நாமே கேட்டுக் கொள்ள வேண்டும். இது போன்ற பழக்கம் வந்துவிட்டால் நாளடைவில் ஒழுக்கத்தில் அயரா விழிப்புணர்வு நிலை வந்துவிடும்.  மனிதத் தோ்வில் மதிப்பெண்கள் கூடிக்கொண்டே வரும்நம்முடைய மனசாட்சிதான் நமக்கு மதி்ப்பெண்கள் அளிக்க வேண்டும்.  அதாவது நான் திருந்திக் கொண்டு வருகிறேன். விளக்க வழி வாழ்வதில் நாள்தோறும் முன்னேறி வருகிறேன் என்பதனை உறுதி செய்ய வேண்டும்.

    மகரிஷி அவர்கள் கூறுவதுபோல், மனதை அறிந்து,  மனதை இதமாக வைத்துக் கொண்டு, எந்த உயிர்களுக்கும் துன்பம் அளிக்காமல், மக்களுக்கு மனம் உவந்து தொண்டாற்றி மாமனிதாகி முழுமனிதனாவோம்.

    “குருவருள் இன்றேல் திருவருள் இல்லை”  என்கின்ற நிதர்சனத்தை மனதில் கொண்டு முதன் அறிவின் அறிவியலாளரும் நமது அருட்தந்தையுமான வேதாத்திரி மகரிஷி அவர்களின் பொற்பாதங்களை மானசீகமாக வணங்கி ஆசி பெற்று இன்புறுவோம்.  வாழ்க திரு வேதாத்திரியம்.  வளர்க திருவேதாத்திரியம்.

    வாழ்க திருவேதாத்திரியம்!                     வளர்க திருவேதாத்திரியம்!!


  • குரு – சீடர் உரையாடல் பயிற்சி-5

    வாழ்க மனித அறிவு!                                வளர்க மனித அறிவு!!

    lotus

    குரு – சீடர் உரையாடல் பயிற்சி-5

    பேரின்பம்

    நாள்- 27-05-2018-ஞாயிறு
    உ.ச.ஆ.27-05-33.

    Maharishi

    guru seedan

    கண்களில் தாரையாக வழிந்தோடும் கண்ணீரை துடைத்தவாறு அமைதியுடன் அமர்ந்துள்ளார் சீடன். தான் வருவதை அறிந்து எழுந்திருக்க முயல்வதை கவனிக்கிறார் குரு.

    குரு: உட்கார் குழந்தாய்! உட்கார்.

    சீடன்: (வார்த்தைகள் ஏதும் வராதநிலையில் இருகரங்களைக்கூப்பி சிரம் தாழ்த்தி வணங்குகிறார்)

    குரு: வாழ்க வளமுடன்! வாழ்க வளமுடன்! என்ன…..? நீண்ட நேரம் அழுதுள்ளாய் போலுள்ளது. உனக்கு ஒரு உண்மை சொல்லட்டுமா?! எவரொருவருக்கு இறைவனை நினைக்கும்போதே கண்களில் நீர்வருகிறதோ அவருக்கு அதுவே கடைசி பிறவி. இதை நான் கூறவில்லை. அவதார வரிஷ்டரான* இராமகிருஷ்ண பரமஹம்சர் கூறுகிறார். அது சரி இறைநிலை தவம் அப்படியென்ன உன்னில் மாற்றத்தை கொடுத்துள்ளது?

    சீடன்: எப்படி கூறியுள்ளார் கவனித்தீர்களா ஸ்வாமிஜி, நம் மகரிஷி அவர்கள் இறைநிலைத்தவத்தில்! இறைநிலையின் தன்மாற்ற சரித்திரத்தை அப்பட்டமாகவல்லவா கூறிவிட்டார்!

    குரு: That is our Vethathiri Maharishi!

    சீடன்: Absolutely swamiji! Maharishi is Great! ஸ்வாமிஜி. நான் பலமுறை இங்கு இறைநிலைத் தவத்தில் கலந்துகொண்டு தவம் இயற்றியுள்ளேன். ஆனால் இன்று கிடைத்த இன்ப அனுபவத்தைப்போல் என்றுமே கிடைத்ததில்லை. அப்படி ஒரு அனுபவம்! அப்படி ஒரு திருப்தி!

    குரு: இன்ப அனுபவம்… திருப்தி….ஆஹா..!

    சீடன்: ஆம் ஸ்வாமிஜி!  மனதிற்கு மிகவும் திருப்தியாக உள்ளது. இதுபோல எப்பொழுதும் கிடைத்தால் எப்படி இருக்கும் என்று ஏங்கிக்கொண்டிருக்கிறது எனது மனம்.

    குரு: என்ன சொன்னாய்..!? ‘ஏங்கிக்கொண்டிருக்கிறேன் நான் என்று கூறாமல், ‘ஏங்கிக்கொண்டிருக்கிறது எனது மனம்’ என்று கூறுகிறாய். வாழ்க வளமுடன்! ஆம் இந்த மனமேதான் பந்தந்திற்கும் காரணம்; மோட்சத்திற்கும் காரணம்.

    சீடன்: ஆனால் எனக்கு ஒரு சந்தேகம் ஸ்வாமிஜி!

    குரு: சந்தேகமா!?

    சீடன்: ஆம் ஸ்வாமிஜி. இன்றைய தினம் தவத்தில் எனக்கு ஏற்பட்ட அனுபவம் ஏன் ஸ்வாமிஜி எப்பொழுதும் கிட்டுவவதில்லை?

    குரு: உன்போன்ற ஆரம்பகால சாதகர்களுக்கு இப்படியொரு அனுபவம் கிட்டுவது பாக்கியமே! மகரிஷி அவர்கள் தான் எழுதிய ‘சமுதாய சிக்கல்களுக்கான ஆய்வுத்தீர்வுகள் எனும் புத்தகத்தில் மூன்றாம் சிக்கல் எனும் மூன்றாவது அத்தியாயத்தில் மனித உடலும் மனமும் சார்ந்த செயல்களையும் மதிப்புகளையும் அறியாமை; இன்ப துன்பத்தின் இயல்பு; அவற்றிற்கான உண்மைக் காரணங்கள்; மனதின் தன்மையும் அதன் அகநிலை மற்றும் புறநிலை செயல் வல்லமைகளும்.’ எனத்தலைப்பு வழங்கி அதில் பேரின்பத்திற்க்கான வரையறையைக் கொடுத்துள்ளார்.

    சீடன்: பேரின்பத்தை வரையறுத்துள்ளாரா!!!?

    குரு: ஆம். அப்பேரின்பத்தை வரையறுக்க நம் அருளாளர்கள்தான் எப்படி முட்டிமோதியுள்ளனர் தெரியுமா? ஒரு அருளாளர் தனக்கு துன்பம் வந்தபோதும் அந்த ஈசன்நிலையை, மாசில்லாத வீணையின் நாதம் (ஒலி), அந்திபகலில்லா மாலை நேர மதி(ஒளி), தென்றலின் இதமான தீண்டல் (அழுத்தம்) நறுமணம் வீசும் மலர்களை (மணம்) வட்டமிட்டு தேனைச் சுவைக்கும் வண்டுகளின் ரீங்காரம், குளிர்ச்சியான பொய்கை போன்றது என சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் ஆகிய பஞ்ச தன்மாத்திரைகள் மூலம் விவரிக்கிறார். வேதாத்திரி மகரிஷி அவர்களின் வரையறை, சற்று மாறுபட்ட கோணம்.

    (இச் சம்பாஷணைக்கிடையில் மகரிஷி அவர்கள் எழுதிய ‘சமுதாய சிக்கல்களுக்கான ஆய்வுத்தீர்வுகள் புத்தகத்தை ஒரு தொண்டர் கொண்டு வருகிறார். அப்புத்தகத்தை பெற்றுக்கொண்ட குரு அதனை சீடனிடன் கொடுத்து….)

    எங்கே அந்த 23ம் பக்கத்தில் உள்ள பேரின்பத்திற்க்கான வரையரையை படி பார்க்கலாம்!!


    சீடன்: “இறைநிலையான மனஅலை விரிந்த சுத்தவெளியுடன் அபூர்வமாக ஒன்றிணைந்து தனது சொந்த ஆற்றலையே ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு பொருளிலும் அதன் செயல் ஒழுங்காக மெய்யுருவாக்கிக்காணும்போது அது இன்பமும் திருப்தியும் கலந்த உணர்வாக அமைகிறது. இதுவே பேரின்பம் ஆகும்”.


    குரு: இதில் கவனித்தாயா அபூர்வமாக (Rarely) என்று கொடுத்துள்ளார். மனமானது துன்பம், இன்பம், அமைதி என்ற படிகளைக் கடந்த நிலையில்…இன்னும் சுருக்கமாக கூறவேண்டுமென்றால் மனம் ஒடுங்கிய நிலையில் அமைதியாக இருக்கும் போது இந்த அபூர்வநிலை நமக்கு வாய்த்து விடுகிறது. மனம் விரிந்த நிலையிலேயே இருக்கும்போது நீ கூறியவாறு இன்பமும் திருப்தியும் கலந்த உணர்வு அதாவது பேரின்ப நிலை சித்திக்கிறது. எப்பொழுதெல்லாம் அமைதி நிலையில் மன விரிவு கிடைக்கிறதோ அப்பொழுதெல்லாம் பேரின்பமயம் தான்! உறைந்து உறைந்து இந்நிலையை பழகிக் கொள்ளச்சொல்கிறார் நம் குருதேவர். இந்த பேரின்ப – பிரம்மானந்த நிலையைப் பற்றி மேலும் விரிவாக மற்றோரு சமயத்தில் discuss செய்வோமா?

    சீடன்: அப்படியே ஸ்வாமிஜி! மிக்க நன்றி ஸ்வாமிஜி!

    குரு: வாழ்க வளமுடன்! வாழ்க வளமுடன்!

    *அவதாரங்களுள் தலை சிறந்தவர்

    வாழ்க அறிவுச் செல்வம்!                            வளர்க அறிவுச் செல்வம்!!


  • குரு – சீடர் உரையாடல் பயிற்சி-4

    வாழ்க மனித அறிவு! வளர்க மனித அறிவு!!

    குரு – சீடர் உரையாடல் பயிற்சி-4

    (தொடர்ச்சி)

    ஆறாம் அறிவு

    நாள்- 20-05-2018-ஞாயிறு
    உ.ச.ஆ.20-05-33.

    lotus

     

    Maharishi

    guru seedan

    IMAGE-கு-சீ- உ- நோக்கம்

    சீடன்: (இரு கைகளைக் கூப்பி.. சற்று உரத்த குரலில்) வாழ்க வளமுடன் ஸ்வாமிஜி!

    குரு: வாழ்க வளமுடன்! வாழ்க வளமுடன்! என்ன…..? இன்றைக்கு குரல் பலமாகவும் உற்சாகமாகவும் இருக்கிறதே?! சரி சரி உட்கார். நேற்றைக்கு ஆறாவது அறிவின் நோக்கம் என்ன என்று கேட்டாயல்லவா?

    சீடன்:  ஆம் ஸ்வாமிஜி.

    குரு: கூறுகிறேன்… எல்லாம் வல்ல தெய்வமே, நானாகவும் நாமாகவும் இருக்கிறது என்பதை புரிந்து கொண்டோமல்லவா? அதனைச் செயல் முறையில் உணர்வுப்பூர்வமாக சதா ஸர்வக்ஷணமும் அறிவதே ஆறாவது அறிவின் நோக்கமும், பயனும்.

    சீடன்:  ஸ்வாமிஜி தங்களுடைய விளக்கம் மனதிற்கு திருப்தியைத் தருகிறது. ஆனால்…

    குரு: என்ன ஆனால்… என்று இழுக்கிறாயே…?

    சீடன்:  ஒன்றுமில்லை ஸ்வாமிஜி. செயல் முறையில் உணர்வுப்பூர்வமாக சதா ஸர்வக்ஷணமும் இருப்பதில் தான் ஸ்வாமிஜி எனது சிக்கல். அந்த நிலையில் எப்போதுமே இருக்க முடிவதில்லை. இல்லை..இல்லை அந்த நிலையே எனக்குக் கிட்டவில்லைதான் என்றுதான் சொல்லவேண்டும். இப்படி புரிந்தும் அந்த நிலை கிடைக்காததற்கு காரணம் என்ன ஸ்வாமிஜி?

    குரு:  கடலில் இருந்த நீர் கடலுக்குத் திரும்பிச் சேரும் வரை நீருக்கு அமைதி இல்லை. இடையில் மேகமாக இருக்கிறது. மழையாக அருவியாக… ஆறாக இருக்கிறது. ஆனால் கடலை நோக்கியே சென்று கொண்டிருக்கிறது. கடலை அடைந்தால்தான் அதற்கு ஓய்வும் அமைதியும்.

    சீடன்: பிரம்மம் தன்னைத் தானே அறிவதற்குக் கடலோடு ஒப்பிடலாமா ஸ்வாமிஜி?

    குரு: பிரம்மம் அதன் நிலையிலேயேதான் இருக்கிறது. உண்மையில் தன்னைத் தானே அறியவேண்டியது யார் என்றால் இந்த தனித்த நிலையில் ஐயுணர்வு மயக்கத்தில் வாழ்ந்து வரும் மனிதன் தான்.

    சீடன்: மனிதன் ஐயுணர்வு மயக்கத்தில் வாழ்ந்து வரக்காரணம் என்ன ஸ்வாமிஜி?

    குரு:  மனிதனிடம் தன்னிலையை அறியத் தக்க ஆறாவது அறிவு கூடியுள்ள போதும் அவன் உடலளவிலும் ஐயுணர்வு மயக்கத்திலும் தான் வாழ்ந்து வருவதுதான் சிக்கல்களுக்கெல்லாம் காரணம்.

    சீடன்: எப்போது அந்த மயக்கம் தெளிந்து விழிப்பு ஏற்படும்?

    குரு:  மனம், அதற்கு மூலமானது உயிர், அதற்கும் மூலமான இருப்பு நிலை மெய்ப் பொருள் – என்ற உண்மை விளக்கம் பெற்றால் தான், தன்னிடம் பிரகாசிக்கும் அதே மெய்ப் பொருள் தான் எவ்விடத்தும், எவரிடத்தும் இருந்து பிரகாசிக்கிறது என்ற விழிப்பு ஏற்படும்.

    சீடன்: ஸ்வாமிஜி, ‘விளக்கம் பெற்றால் தான்’ என்று கூறாமல், ‘உண்மை விளக்கம் பெற்றால் தான்’ எனக் கூறுகிறீர்களே?

    குரு: நவயுக வியாசரான நம்முடைய குருதேவர் கூறுவது போல், விளக்கம் என்பது information. உண்மை விளக்கம் என்பது confirmation. இந்த confirmation கிடைத்துவிட்டால் போதும், தன்னிடம் பிரகாசிக்கும் அதே மெய்ப் பொருள் தான் எவ்விடத்தும், எவரிடத்தும் இருந்து பிரகாசிக்கிறது என்ற Transformation ஏற்பட்டு விடும். இன்னும் சற்று விரிவாகக் கூறுகிறேன் கேள்!

    சீடன்: (இரு கைகளைக் கூப்பி..) I am all ears swamiji!

    குரு: பள்ளி, கல்லூரிகளில் கருத்தியல் செயல்முறை பயிற்சி இருக்கிறதல்லவா?! அதுபோல்தான் information என்பது கருத்தியல். confirmation என்பது செயல்முறை.

    சீடன்: ! ! ! !

    குரு: இப்படி confirmation கிடைத்து Transformation ஏற்படும்போது தன்னிடம் பிரகாசிக்கும் அதே மெய்ப் பொருள் தான் எவ்விடத்தும், எவரிடத்தும் இருந்து பிரகாசிக்கிறது என்கிற உறுதிப்பாட்டில் நிலைக்கமுடிகிறது.

    சீடன்: அருமை ஸ்வாமிஜி. நன்றி !

    குரு: ஆனால் இந்நிலையை அடைய அயரா விழிப்புநிலை தேவை.

    சீடன்: அவ்விழிப்புநிலையை அடைவது எப்படி ஸ்வாமிஜி!

    குரு: இவ்விழிப்பைத் தருவது எளிய முறைக் குண்டலினி யோகமே. நீ உன்னை அறிந்து கொள்ள முயற்சி செய். மனிதன் என்ற வடிவத்தையும், உன் செயல் பதிவுகளாக உள்ள வினைப் பதிவுகளையும் கழித்துப்பார். உன்னில் மிஞ்சுவது எல்லாம்வல்ல பரம்பொருளே. உருவத்திலே தான் மனிதன், ஆனால் அதைக் கடந்து விண்ணறிவுக்குப் போனால் அணு, அணுவைக் கடந்து போனால் சிவம். அந்த மூன்றாவது படிக்குப் போய் விட்டால், எந்தப் பொருளுமே சிவம் தான். இறை நிலையே தான். இறைவனே தான். அசைவிலே அணுவாகி, கூட்டிலே காட்சியாக இருக்கிறான்.
    பிரம்ம ஞானம் எனும் அறிவின் பேரொளி தான் மனிதனை முதலில் விலங்கினச் செயல் பதிவுகளிலிருந்து விடுவிக்கும். மேலும், புலன் கவர்ச்சிகளில் மயக்கமும், பறித்துண்ணல் என்ற தீயவினைப் பதிவுகளும் எந்த அளவில் குறைகின்றனவோ, அந்த அளவுக்குப் பிரம்ம ஞானம் தானாக ஒளிவீசத் தொடங்கிவிடும். படிப்படியாகப் பிரம்மமே தானாக இருக்கும் அறிவாட்சித்திறம் உண்டாகும்.

    சீடன்: ….!!!!

    குரு: என்ன..? அறிவாட்சித்திறம் எப்படி கைவல்யமாகும் என்றுதானே உனது மனம் வினவுகிறது?

    சீடன்: (ஆச்சரியத்துடன்) ஆம் ஸ்வாமிஜி !

    குரு: இன்னும் சற்று நேரத்தில் இறைநிலைத் தவம் தொடங்கவிருக்கிறது. தவம் முடியட்டும். மாலை சந்திப்போம்!

    சீடன்: உத்தரவு ஸ்வாமிஜி !

    வாழ்க அறிவுச் செல்வம்!                            வளர்க அறிவுச் செல்வம்!!

  • குரு – சீடர் உரையாடல் பயிற்சி-3

    வாழ்க மனித அறிவு!                                                                                                                                  வளர்க மனித அறிவு!!

    குரு – சீடர் உரையாடல் பயிற்சி-3

    (தொடர்ச்சி)

    நாள்: 13-05-2018-ஞாயிறு

    உ.ச.ஆ.13-05-33

    lotus

    Maharishiguru seedan

    gurussss

    சீடன்: வாழ்க வளமுடன்!

    குரு: வாழ்க வளமுடன்! உட்கார். இன்றைக்கு என்ன வினாவோடு வந்துள்ளாய்?

    சீடன்:  ‘நான்’ என் தத்துவமே நாமாகியுள்ளோம் என்று கூறுகின்றார்களே? எப்படி ஸ்வாமி?

    குரு:  சொல்கிறேன்… உதாரணத்திற்கு… சமுத்திரம் ஆறு, ஏரி, குளம், குட்டை, மேகம்,மழை போன்றவற்றை எடுத்துக் கொள்வோம். இதில் பொதுவான விஷயம் ஏதாவது உள்ளதா?

    சீடன்:  ம்ம்..பொதுவான விஷயம்… இருக்கிறது ஸ்வாமிஜி!

    குரு:  என்ன அது?

    சீடன்:  தண்ணீர் ஸ்வாமிஜி.

    குரு:  Good!இப்போது சொல்.. தண்ணீர் என்று ஒரு பொதுப் பெயர் இருக்கும்போது ஏன் சமுத்திரம் ஆறு, ஏரி, குளம், குட்டை, மேகம்,மழை என்று கூறவேண்டும்?

    சீடன்:  சமுத்திரம் மிகப் பெரியது… மற்ற இடங்களில் உள்ள நீரின் இருப்பு, தன்மை, ஓட்டம் மற்றும் சுற்றுப்புறம் இவற்றிக்கேற்ப வெவ்வேறு பெயர்களால் அழைக்கப்படுகிறது.

    குரு: சரியாகச் சொன்னாய். வாழ்க வளமுடன்! இப்போது ஆதி எனும் பரம்பொருள் மெய்… என்ற இறைவணக்கப் பாடலை முழுவதுமாகப் பாடு பார்க்கலாம்.

    சீடன்: (கண்களை மூடிக்கொண்டு)

    …….. ……. …… (சிறிது மெளனம்)

    ஆதியெனும் பரம்பொருள் மெய்யெழுச்சி பெற்று
    அணுவென்ற உயிராகி அணுக்கள் கூடி
    மோதியிணைந்து இயங்குகின்ற  நிலைமைக்கு ஏற்ப
    மூலகங்கள் பலவாகி  அவையிணைந்து
    பேதித்த அண்டகோடிகளாய் மற்றும்
    பிறப்பு இறப்பிடை உணர்தல் இயக்கமாகி
    நீதிநெறி உணர்  மாந்தராகி வாழும்
    நிலையுணர்ந்து தொண்டாற்றி இன்பம் காண்போம்!

    (சிறிது நேரம் நிசப்தம் நிலவுகிறது)

    குரு:  வாழ்க… வாழ்க…வளமுடன்! பேதித்த அண்டகோடிகளாய் மற்றும்
    பிறப்பு இறப்பிடை உணர்தல் இயக்கமாகி தனித்த நிலையில் நான் என்று கூறிக்கொண்டிருக்கிறோம்.

    சீடன்: … … … … …

    குரு:  இறையே நானாக உள்ளது. இறையேதான் நாமாக உள்ளது. இறையேதான் எல்லாமாகவும் உள்ளது. எனவே இங்கே ஒரு சமன்பாடு வருவதனைக் காணமுடிகின்றது. அது என்ன?

    சீடன்: இறை=நான்=நாம்=எல்லாம்.

    குரு:  Excellent!!  வாழ்க வளமுடன்! ஞானக்களஞ்சியம் பாகம் ஒன்று வைத்துள்ளாயா?

    சீடன்:  (தன் தோள் பையிலிருந்து எடுக்கிறார் சீடன்) இதோ ஸ்வாமி!

    குரு:  (கண்களில் ஆச்சரியத்துடன்) பரவாயில்லையே! கையிலேயே வைத்துக்கொண்டுள்ளாயே! எங்கே மகரிஷி அவர்கள் எழுதிய “நான்” என்ற தத்துவமே நாம் என்று தொடங்கும் பாடலைப் படி. பாடல் எண் 876 என நினைக்கிறேன்.

    சீடன்: ஆம் ஸ்வாமி 876 தான்.

    (பாடலைப் படிக்கிறார்)

    நான் என்ற தத்துவமே நாமாய் உள்ளோம்
    நாடுகள் பலவற்றில் வாழுகின்றோம்
    ஊன் உருவம் வரை அறிவை எல்லையாக்கி
    ஒருவருக்கொருவர் இன, தேச, ஜாதி,
    தான் – தனது எனும் பேதம் கொண்டு வாழ்வில்
    தனித்தியங்கித் துன்புற்று ஆழ்ந்தாராய்ந்து,
    ஆன்ம நிலையறிந்ததனால், பேதமற்ற

    அரூபசக்தி நிலையில் நாம் ஏகனானோம்!.”

    குரு:  சமுத்திரம் ஆறு, ஏரி, குளம், குட்டை, மேகம்,மழை என்று தண்ணீர் அழைக்கப்படுவது போல ‘நான் என்ற தத்துவம்தான் – அரூபசக்தி தான்,நாம் என்ற பலராக, அனேகக் கோடி சீவன்களாக, மனிதர்களாக அறிவியக்கங்களாக இருக்கிறது.

    சீடன்: இப்போது புரிகிறது. நன்றி ஸ்வாமிஜி!  ஆனால் இந்த ஆறாவது அறிவின் நோக்கம் என்ன?

    குரு:  நாளை சந்திப்போம். வாழ்க வளமுடன்.

    வாழ்க அறிவுச் செல்வம்!                                                       வாழ்க அறிவுச் செல்வம்!!

    மறுநாள் சீடன் குருவை சந்திக்க வருகிறான். அந்த நிகழ்வை அடுத்த ஞாயிறன்று அறிந்து கொள்வோம்.

  • குரு-சீடர் உரையாடல்-2

    வாழ்க மனித அறிவு!                                                        வளர்க மனித அறிவு!!

    குரு-சீடர் உரையாடல்-2

    ஆறாம் அறிவு

    நாள்: 06-05-2018-ஞாயிறு

    உ.ச.ஆ.06-05-33

    lotusIMAGE-கு-சீ- உ- நோக்கம்

    (நிகழ்வு-குருவை அன்றாடம் தரிசித்து ஆசிகளைப் பெறுவதில் ஆனந்தம் அடைவது போன்று அன்றும் வழக்கம்போல் குருவை தரிசிக்க வருகிறான் சீடன்.)

    guru seedan

    (சீடன் வருவதனை பார்த்ததும்)

    குரு: வா… வா..  உட்கார்.  ஏதோ தெரிந்துகொள்ள வேண்டுமென்ற ஆவலும் வேகமும் உன்முகத்தில் தெரிகின்றதே!? 

    சீடன்:  ஆம் ஸ்வாமி. ஆறாம் அறிவு பற்றி அறிய எனது அறிவு விரும்புகிறது குருவே!

    குரு:    ஆறாம் அறிவு பற்றி அறிய ஆறாம் அறிவு விரும்புகிறது என்று கூறு. அதாவது உன்னைப் பற்றியே அறிய விரும்புகிறாய். அப்படிதானே?

    சீடன்: ம்ம்……ஆம் குருவே!

    குரு: மிக்க மகிழ்ச்சி!  உன் சிந்தனையை தூண்டிய வினா தான் என்ன? 

    சீடன்: மகா கவி பாரதியார் சுத்த அறிவே தெய்வம் என்கிறாரே! அப்படியானால் ஆறாம் அறிவையா தெய்வம் என்கிறார் குருவே?

    குரு: ஆம். இதில் என்ன உனக்கு சந்தேகம். ஐயமின்றி ஆறாம் அறிவுதான் தெய்வம். தாயுமானவரும் அறிவைத் தான் தெய்வம் என்றார். தாயுமானவரை மானசீகக் குருவாகக் கொண்ட வேதாத்திரி மகரிஷி அவர்களும் அறிவைத்தான் தெய்வம் என்கிறார்.

    சீடன்: அடுத்த கேள்வி கேட்கலாமா குருவே?.

    குரு: கேள்.

    சீடன்: ஐந்தறிவு உயிரினம் இருக்கும்போது ஆறாவது உயிரினம் தோன்றுவதற்குக் காரணம் என்ன?

    குரு: நான் இப்போது உன்னை ஒரு கேள்வி கேட்கிறேன்.

    சீடன்: கேளுங்கள் குருவே! உங்கள் ஆசீர்வாதத்தால் விடை தெரிந்தால் பதில் கூறுகிறேன்.

    குரு: உனக்கே விடை தெரியும். விடை கூறுவாய். ஐந்தறிவு சீவன்கள் எதை உணர்கின்றன?

    சீடன்:  அழுத்தம், ஒலி,ஒளி, சுவை மணம் ஆகிய வற்றை உணர்கின்றன குருவே.

    குரு:  இதோடு தன்மாற்றம்(பரிணாமம்) நின்று விடாமல் ஏன் ஆறாவது உயிரினம் தோன்றியது என்று சிந்திக்கலாமே. நீ.

    (சற்று நேரம் மௌனமாக இருந்து சிந்தித்துவிட்டு சீடன் பதில் கூறுகிறான்)

    சீடன்: பிரபஞ்ச நிகழ்ச்சிகள் ஐந்து. ஐந்தையும் உணர்ந்த பிறகு உணர்வதற்கு வேறு ஏதும் இல்லை. ஆனால் இந்த பிரபஞ்ச நிகழ்ச்சிகள் ஐந்தும் ஏன் தோன்றுகின்றன, எவ்வாறு தோன்றுகின்றன, எதிலிருந்து தோன்றுகின்றன என்பதனை அறிவு உணரவேண்டியவற்றில் மீதம் உள்ளதால் அதனை உணரவே ஆறாம் அறிவு தோன்றியது எனலாமா குருவே!

    குரு: இதில் என்ன ஐயம் உனக்கு? நீ சொல்வது சரியே. அதாவது அறிஞர் திருவள்ளுவர் மொழிந்துள்ளதுபோல் பிரபஞ்ச நிகழ்ச்சிகள் ஐந்தின் வகை அறியும்போது தெய்வமே நானாக உள்ளது அறியப்படும். இதுவே ஆறாவது அறிவின் நோக்கம்.

    சீடன்: தெய்வமே அறிவாக இருந்தும் மனிதன் அல்லலுருகிறான். ஏன் குருவே?

    குரு: ஐந்தாம் அறிவுக்கப்பால் அறிவு இறைநிலை நோக்கி எழுகிறது. அதன் வேகத்தைத் தடுத்து நோக்கத்தை திருப்பி புலன் உணர்ச்சியில் விடும்போதுதான் முரண்பாடுகள் விளைகின்றன என்கிறார் வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

    சீடன்: அப்படியானால் புலன் உணர்வு கூடாதா குருவே?

    குரு: புலன்கள் இருப்பது உணர்வுகளை அறிவதற்காகத்தான். ஆனால் அறிஞர் திருவள்ளுவர் மொழிந்துள்ளதுபோல்(கு.எண்.6.) வாழ்வதற்கு புலன் இன்பத்தில் வேதாத்திரி மகரிஷி அவர்களின் இன்ப-துன்ப சாம்யமான ‘அளவும் முறையும்’ கடைபிடிப்பதில் விழிப்போடு இருக்க வேண்டும்.

    சீடன்: அப்படியானால் இன்றைய உலகத்தின் சிக்கல்கள், குழப்பங்கள், துன்பங்கள் அனைத்துக்கும் காரணம் அறிவிற்குத் தன் லட்சியப் பூர்த்தி கிடைக்காத நிலைதானா குருவே?

    குரு: ஆம். அந்த லட்சியத்தை மறந்து, அறியாமையில், தன்னை அறிய எழுந்த வேகம் புலன் உணர்வில் மட்டுமே செயல்படும்போது துன்பங்களின் எண்ணிக்கையும், அளவும் மிகுகின்றன.

    சீடன்:  ஆறாம் அறிவின் பயன் என்ன?

    குரு:  ஆறாம் அறிவாகிய பிரம்மம் தன்னைத் தானே உணர்ந்து கொள்வது ஆறாம் அறிவின் பயன்.

    சீடன்:  பரிணாமத்தின் நோக்கமும் ஆறாம் அறிவின் பயனும் ஒன்றா?

    குரு:  ஆம் ஒன்றுதான்.

    சீடன்:  பரிணாமம் பூர்த்தியாகி விட்டதா இப்போது?

    குரு:  இதற்கான பதிலை, தத்துவ ஞானியும், முன்னாள் இந்திய ஜனாதிபதியுமான இராதாகிருஷ்ணன் ‘Evolution is still incomplete’ என்று கூறுயிருப்பதிலிருந்து அறிந்து கொள்ளலாம்.

    சீடன்: அப்படியானால் பரிணாமம் இன்னு பூர்த்தியாக வில்லை என்று சொல்கீறீர்களா சுவாமி?

    குரு: நீயே பதில் கூறலாமே.

    சீடன்: நீங்களே பதில் கூறுங்களேன் சுவாமி

    குரு: அமைதியிலிருந்து தனது பயணத்தைத் தொடங்கிய பிரம்மம் இறுதியாக மனிதனில் முடிவடைகின்றது என்பதனை நீ அறிவாய் அல்லவா?

    சீடன்: ஆம். அறிவேன் சுவாமி.

    குரு: அப்படியானால் மனித குலம் பூர்வீக சொத்தான(hereditary wealth) அமைதியினை தற்போது அனுபவிக்கின்றதா?

    சீடன்: இல்லையே சுவாமி!

    குரு: பின்னர் எவ்வாறு வாழ்ந்து கொண்டிருக்கின்றது இன்று மனிதகுலம்?

    சீடன்: இன்பம் துன்பம் என்கின்ற சுழலில் (cycle of enjoyment and suffering)அல்லவா மாறி மாறி உழன்று கொண்டிருக்கின்றது.

    குரு: மனதின் மூன்றாவது இயக்க நிலைக்கு வருவதற்கு வழி தெரியாமல் அல்லவா தவிக்கின்றது மனித குலம்.

    சீடன்: மனதின் மூன்றாவது இயக்க நிலை என்பது என்ன?

    குரு: கேள்விகளை அடுக்கடுக்காக கேட்கிறாய். எனக்கு கேள்வி கேட்டால் பிடிக்கும். ஏன் தெரியுமா உனக்கு? கேள்வி எழுந்தால் மனிதன் சிந்திக்கிறான் என்று பொருள். மனிதன் சுயமாகச் சிந்திக்க வேண்டுமல்லவா? மனதின் மூன்றாவது இயக்க நிலை அமைதி. அமைதி நிலைக்கு வருவதற்கு வழி தெரியாமல் அல்லவா மனிதகுலம் தவித்துக் கொண்டிருக்கின்றது!

    சீடன்: அமைதி இழந்த தற்போதைய நிலை எப்போது மாறும் குருவே?

    குரு: நீ வேதாத்திரி மகரிஷி அவர்களை தரிசித்து இருக்கிறாயா?

    சீடன்: அவரை அறிவேன். கேள்விப்பட்டிருக்கிறேன். அவரது நூல்களைப் படித்திருக்கிறேன்.

    குரு: அவரது எந்த எந்த நூல்களைப் படித்திருக்கிறாய்? உலக சமாதானம் என்கின்ற நூலைப் படித்திருக்கிறாயா?

    சீடன்: ஆம். உலக சமாதானம் என்கின்ற நூலைப் படித்திருக்கிறேன்.

    குரு: அப்படியானால் நீயே ‘அமைதி இழந்த தற்போதைய நிலை எப்போது மாறும்?’ என்கின்ற வினாவிற்கு பதில் கூறலாமே!

    சீடன்: வேதாத்திரி மகரிஷி அவர்கள் அருளியுள்ள உலக சமாதானத் திட்டம் அமுலுக்கு வரும்போது மனிதகுலம் தனது பூர்வீகச் சொத்தான அமைதியினை அனுபவிக்க முடியும் குருவே.

    குரு: நீ ஒரு சிந்தனையாளரே! பல கேள்விகளை உன்னுள் வைத்துள்ளாய். சில கேள்விகளுக்கான பதிலும் உன்னுள்ளே இருக்கின்றது. அதனை நீ அறியவில்லை. கேள்விகளைக் கேட்டு நீயே பதிலை அறிந்து கொள்ளும முயற்சியில் ஈடுபடு. சிந்திப்பவர்களுக்கு இயற்கையே ஆசான் என வேதாத்திரி மகரிஷி அவர்கள் கூறுவதனை நினைவில் கொள். வாழ்க வளமுடன்! உன் ஆர்வத்தைப் பாராட்டுகிறேன். இத்துடன் இன்றைய சத்சங்கத்தை நிறைவு செய்து கொள்வோமா? நாளை சந்திப்போமா மகனே?

    சீடன்: ஆம் குருவே! நாளை  வருகிறேன் சுவாமி. வணக்கம் சுவாமி.

    வாழ்க அறிவுச் செல்வம்!                                                     வளர்க அறிவுச் செல்வம்!!

    ——

    (குருவை  மறுநாளும் சந்திக்கின்றான் சீடன்.  அந்த நிகழ்வு பற்றி அடுத்த ஞாயிறன்று இணையதள சத்சங்கத்தில் அறிவோம். வாழ்க வளமுடன் அன்பர்களே!)

  • அறிவிப்பு-14-03-2018-புதன்

    வாழ்க மனித அறிவு!                         வளர்க மனித அறிவு!!

    அறிவிப்பு

    14-03-2018-புதன்

    அன்பர்களே!
    வாழ்க வளமுடன்!

    இனி வாரந்தோறும் 20-03-2018 முதல் செவ்வாய்க்கிழமைகளில் சிந்திக்கக் கவிகள் பயிற்சி பதிவேற்றம் செய்யப்படும். (Click)

    சிந்திக்கக் கவிகள் பயிற்சி பகுதியினை பயன்படுத்தி மகிழ்வுற்று, தங்களின் சிந்தனை ஆற்றலை வளர்த்துக் கொள்ளுமாறு வேண்டப்படுகின்றது.

    தங்களின் மேலான கருத்துக்களைத் இணைய தளத்திற்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றது.
    வாழ்க வளமுடன்!

    வாழ்க அறிவுச் செல்வம்! வளர்க அறிவுச் செல்வம்!!

  • சி.கு-சீ-உ-.எண்- 04-01

    • குறிப்பு: முகப்பிலுள்ள இப்பயிற்சியின் நோக்கத்தை வாசிக்காதவர்களின் வசதிக்காக, இப்பயிற்சிக்குள் செல்லும் முன் இப்பயிற்சியின் நோக்கத்தை அறிந்து விட்டு பயிற்சிக்குள் செல்வதற்காக மீண்டும் இப்பயிற்சியின் நோக்கம் இங்கே தரப்பட்டுள்ளது. இப்பயிற்சியின் நோக்கத்தை முகப்பில் வாசித்தவர்கள் நேரிடையாக பயிற்சிக்குள் செல்லலாம். வாழ்க வளமுடன்.

    மூன்று வகையான சிந்தனைப் பயிற்சியின் நோக்கங்களை தனித்தனியாக இதுவரைப் பார்த்தோம். இப்போது நான்காவதான குரு – சீடர் உரையாடல் என்கின்ற சிந்தனைப் பயிற்சியின் நோக்கத்தை அறிவோம். தழிழ் இலக்கியம் இயல், இசை. நாடகம் ஆகிய மூன்றைக் கொண்டது. இப்போது . மூன்றாவதான நாடக வடிவில் இந்த பயிற்சி அமையும். ஆகவே இணைய சத்சங்கம். இயல், இசை. நாடகம் ஆகிய மூன்றாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

    நாடகம் என்பது என்ன? சமுதாய நலன் கருதி சொல்லவேண்டியக் கருத்தை நாடக வடிவில் எடுத்துக் கூறப்படும். நாடகத்தில் வெவ்வேறு கதாபாத்திரங்கள் நடிப்பார்கள். சொல்ல வேண்டியக் கருத்தை நேரிடையாகச் சொன்னால் புரியாமல் போகலாம். ஆகவே அக்கருத்தை நாடக வடிவில் சொல்லப்படுகின்றது. மகாத்மா காந்தி அடிகள் சிறு வயதில், அரிச்சந்திரன் நாடகம் பார்த்துவிட்டுத்தானே உண்மையே பேசவேண்டும் என்கின்ற உறுதி பூண்டார். நாடகம் தானே அவரை உண்மையைப் பேசுவதற்குத் தூண்டி விட்டது.

    ஒரு பொருளைப் பற்றி நேரிடையாகக் கூறுவதற்கு அதிக நேரம் தேவையில்லை. ஆனால் நாடக வடிவில் காட்சிப் படுத்திக் கூறும் போது நாடகம் முடிந்த பிறகும், அது மனதில் நின்று சிந்திக்கச் செய்யும். குரு – சீடர் உரையாடல் பயிற்சியில் இரண்டு பாத்திரங்களே உள்ளனர். குரு மற்றும் சீடர். குருவிடம் மாணவன் ஒரு பொருள் பற்றி அறிந்து கொள்ள கேள்விகளைக் கேட்பார். குரு அதற்குப் பதில் சொல்வார். சீடர் அறிய வந்த பொருள் பற்றி அவரது ஐயங்களைப் பல கேள்விகளாகக் கேட்பார். குருவும் சீடரின் நிலை அறிந்து பதில் கூறுவார், சீடருக்கு முற்றிலுமாக ஐயமின்றி அறியவந்த பொருள் பற்றி அறியும் வரை குரு – சீடர் நாடகம் தொடரும். சீடர் அறிய வந்த பொருள் அறிந்ததும் நாடகம் முடிவுறும்.

    பயிற்சிக்குள் செல்வோம் நாள் 28-10-2014

    குரு- சீடர் உரையாடல்

    தலைப்பு—உயிர்.

    சீடர்: வணக்கம் ஐயா.
    குரு: வா. உட்கார். நலமாக இருக்கிறாயா? என்ன சந்தேகம் உனக்கு இன்றைக்கு?
    சீடர்: உயிர் என்பது என்ன?
    குரு: உயிர் என்பது ஆற்றல்.
    சீடர்: ஆற்றல் என்றால் என்ன?
    குரு: ஆற்றல் என்பது சக்தி. ஆங்கிலத்தில் Energy என்று பெயர்.
    சீடர்: எதற்கு ஆற்றல் வேண்டும்?
    குரு: உடல் ஓர் இயந்திரம். இயந்திரம் இயங்குவதற்கு ஆற்றல் தேவையல்லவா? மாவு அரைக்கும் இயந்திரத்திற்கு மின்சாரம் தேவையில்லையா? அது போல் உடலாகிய இயந்திரம் இயங்க ஆற்றல் தேவை. அந்த ஆற்றலைத் தருவது உயிர் தான். எனவே தான் உயிரை ஆற்றல் என்கிறோம்.
    சீடர்: உடலை ஏன் இயந்திரம் என்கீறிர்கள் குருவே!
    குரு: உடலுக்குள் பல உறுப்புகள் இருக்கின்றன. அவை தானாகவே இயங்கிக் கொண்டிருக்கின்றன. அதேபோன்று கைகள், கால்கள், கண், மூக்கு, காது, வாய், நாக்கு ஆகிய வெளி உறுப்புகள் இருக்கின்றன. எல்லா உறுப்புகளும் இயங்கி மனிதன் தன் பணியைச் செய்வதால் உடலை இயந்திரம் என்கிறோம்.

    …..தொடரும்