சிந்திக்க அமுத மொழிகள்- 292(183)

வாழ்க மனித அறிவு!              வளர்க மனித அறிவு!!

09-05-2020 — சனி

சிந்திக்க அமுத மொழிகள்- 292(183)

நான் யார்? என்ற கேள்வியைக் கேளுங்கள். பதிலை உங்களுக்குள்ளே தேடுங்கள். பிறவியைத் தவிர்க்கும் உபாயம் இதுவே”.

 …. ஸ்ரீ ரமணர்

பயிற்சி:
1) பிறவியைத் தவிர்ப்பது என்றால் என்ன? பிறவியை ஏன் தவிர்க்க வேண்டும்?

2) ‘நான் யார்?’ என்பதற்கான விடை எவ்வாறு பிறவியைத் தவிர்க்கச் செய்யும்?

3) இதில் உள்ள விஞ்ஞானம் என்ன?

4)  ஸ்ரீ இரமண பகவானைத் தரிசிக்க வரும் பக்தர்கள், தங்களின்  துன்பங்கள் நீங்க ஆசி வழங்குமாறு வேண்டி நிற்கும்போது,  “நீ யார் என உணர்ந்துகொள் — Find out who you are.” என்பதே அவரது ஆசிர்வாதம்.  எனவே இதிலிருந்து நான் யார் என அறிந்துகொள்வதால் லாபமும்(பயன்) நான் யார் என அறிந்து கொள்ளாமையால் விளையும் நஷ்டமும்(துன்பமும்) என்ன என்று ஒவ்வொரு மனிதனும் அறிந்து கொள்ள வேண்டியது இன்றியமையாத மூன்றாவது தேவைக்கு அடுத்த நான்காவது தேவையாக  உள்ளதல்லவா?! 

     அதற்கு கட்டாய ஒழுக்கவியல்கல்வி பள்ளியிலும், மாண்பியல் கல்வி கல்லூரியிலும் உருவாக வேண்டாமா அன்பர்களே?! வாழ்த்துவோம்.  கட்டாய  ஒழுக்கவியல் பாடம் பள்ளிகளில் ஏற்படவேண்டும்.

கட்டாய  ஒழுக்கவியல் பாடம்(கல்வி) வாழ்க வளமுடன்! 

வளர்க கட்டாய ஒழுக்கவியல் பாடம்(கல்வி)

வாழ்க அறிவுச் செல்வம்!                        வளா்க அறிவுச் செல்வம்!!


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *