வாழ்க மனித அறிவு! வளர்க மனித அறிவு!!
சிந்திக்க அமுத மொழிகள்-339
இணையதள பதிவேற்றம் -1010
உணர்ச்சிவயத்தின் விளைவு
08-07-2024
உ.ச.ஆ. 07-07-39
உணர்ச்சி அரியணையில் அமர்ந்திருக்கும்போது, அறிவு வெளியே போய்விடும்
. . . . . ஹென்றி ஃபோர்ட்
பயிற்சி:
1.என்ன கூறுகிறார் ஹென்றி அவர்கள்?
2.இந்த அமுதமொழியை வாசிக்கும் போது நமக்கு என்ன தோன்றுகின்றது?
3.உணர்ச்சி் என்பது என்ன? உணர்ச்சிவயம் என்பது என்ன?
4. உணர்ச்சி அரியணையில் அமர்ந்திருத்தல் என்றால் என்ன?
5. உணர்ச்சி அதுவாகவே அரியணையில் அமர்ந்ததா?
6. யார் உணர்ச்சியை அரியணையில் அமர வைத்தது?
7. எப்போது உணர்ச்சி் அரியணையில் அமரும்? அரியணையில் உணர்ச்சி அமராதபோது துன்பம் தராதா?
8. அறிவின் முதல் அறிவியாளர் உணர்ச்சியுடன் எவ்வாறு அறிவைத் தொடர்பு படுத்திக் கூறுகிறார்? Click here
9. “அறிவு வெளியே போய்விடும்” என்று ஹென்றி கூறுவதனை அறிவை அறியும் பயிற்சியில் உள்ளவர்கள் எவ்வாறு பொருள் கொள்ள முடிகின்றது?
10. வறுமை என்பது என்ன? வறுமையில் பிரிவுகள் உள்ளனவா? அவற்றில் எந்த வறுமை மிகுந்த துன்பத்தை தரும்? துயரத்தை தரும்? பழிக்கு ஆளாக்கிவிடும்?
11. எப்போது உணர்ச்சி் அரியணையில் அமரும்? அரியணையில் உணர்ச்சி அமராதபோது துன்பம் தராதா?அறிவிற்கு வறுமை உள்ளதா? அதனை எவ்வாறு சரி செய்துகொள்வது?
12. இரு அறிஞர்களும் ‘உணர்ச்சிவயம்’ என்கின்ற கண்டுபிடிப்பில் ஒன்றிணைந்திருப்பதை அறிய முடிகின்றதல்லவா?
இன்னும் ஏதேனும் கேள்விகள் இருப்பின் அவற்றையும் எழுப்பி விடைகாண வேதாத்திரி மகரிஷி அவர்களின் காப்பு இருந்துகொண்டே இருக்கும்.
வாழ்க அறிவுச் செல்வம்! வளர்க அறிவுச் செல்வம்!!