ஏன் ‘அறிவே தெய்வம்’ எனப்படுகின்றது?

 

வாழ்க மனித அறிவு                                                                                      வளர்க மனித அறிவு

ஏன் ‘அறிவே தெய்வம்’ எனப்படுகின்றது?அ.வி.எண்.57—(2/?)

15-02-2015 – ஞாயிறு

     கடந்த சிந்தனையின்  தொடர்ச்சியாக, இன்றைய விருந்தில், ஆதிநிலையில், வற்றாயிருப்பாக பேராற்றல் மட்டுமே, அறிவு இல்லாது இருந்திருந்தால், உணர்வற்ற சடமாகிய பஞ்சபூதங்களும்கூட உருவாகியிருக்க முடியாது என்கின்ற கூற்றினை எவ்வாறு சரியென பார்க்க இருக்கின்றோம்.

  விண், காற்று நீர், நெருப்பு, மண் ஆகிய பஞ்சபூதங்கள் உயிரற்ற சடப்பொருட்களாக இருந்தாலும்,  ஆதிநிலை வெளியில் ஒருவேளை(perhaps) அறிவு இல்லாமல் இருந்தால், பஞ்சபூதங்களே  உருவாகி இருக்க முடியாது. பஞ்சபூதங்கள் சடப்பொருட்கள்தான். ஆகவே அவற்றிற்கு உணர்ச்சி  இல்லைதான். உணர்ச்சி இல்லாத சடப்பொருட்களுக்கு ஏன் அறிவு  அவசியம் என்பது, ‘அறிவு என்றால் அறியக்கூடியது’ என்றுமட்டும்  பொருள் கொள்ளும் அளவிலே சரிதான். ஆனால் அறிவிற்கு வேறொரு பணியும் உள்ளது.  அது என்ன என்று அறிவோம்.

   முதல் உயிரினம் தோன்றியது பஞ்சபூதங்களின் கூட்டால்.  பஞ்சபூத கூட்டால்  உருவாகிய உயிருக்கு  எவ்வாறு ‘உயிருக்கு இலக்கணமான  உணா்தல்’ உண்டாயிற்று?  அறிவு என்கின்ற ஒன்று இல்லாமல் அந்த முதல் உயிருக்கு உணர்வு ஏற்பட்டிருக்க முடியாது.  அப்படியானால் பஞ்சபூதக் கூட்டாலாகிய உயிரின்  அறிவு  பஞ்சபூதங்களில் இருந்த  பிரிக்கமுடியாத அறிவுதான். ஆகவே வேதாத்திரிய இயற்கையியலில் – வேதாத்திரிய ஒருமையியலில் – வேதாத்திரிய இறையியலில் – வேதாத்திரிய வெட்டவெளி அறிவியலில்/விஞ்ஞானத்தில் உயிரற்ற சடப்பொருட்களிலும் அறிவு இருக்கின்றது என்பது அறிவுபூர்வமானதாக உள்ளது.

   ஆதிநிலையாகிய வெளியில் இருந்த பேரறிவுதான்,  துகளாகியபோதும் சரி, துகள்கள் தோன்றுவதற்கும், மேலும், துகள்கள் ஒன்று சேர்ந்து முதலில் விண்ணாகி பின்னர், விண் கூடிய விகிதாசாரத்திற்கேற்ப மற்ற பூதங்களான காற்று, நீர், நெருப்பு, கெட்டிப் பொருளான மண் உற்பத்திக்கும் (தோன்றியதற்கும்) காரணம்.

  பேரறிவின்  மேற்பார்வை எனும் தன்மையால், துகள்கள் ஒழுங்குடன் கூட்டு சேர்ந்து பல்வேறு அணுக்களாகி, பல்வேறு மூலகங்களாகியது.  உயிர்களில் உணர்ச்சியாகத் திகழ்வதற்கு முன்னரும் உயிரற்ற சடப்பொருட்களிலும்  அறிவின் பணி இருக்கின்றது. அறிவிற்கு உருவம் கிடையாது.  உருவம் இல்லாதது  எது?  ஆற்றலுக்கு உருவம் கிடையாது.  ஆகவே உருவமில்லாத அறிவை அறிவாற்றல்  என்றும் சொல்லலாம்.  உருவமில்லாததற்காக மட்டும் அறிவை ஆற்றல் என்று சொல்லவில்லை.  அறிவு ஆற்றலேதான்.

    பொதுவாக ஆற்றல் என்றால் என்ன?  ஆற்றல் என்றால் ஒன்றைச் செய்து முடிக்கக் கூடிய அல்லது வெளிப்படுத்தக் கூடிய சக்தி அல்லது  திறன் (Capability, ability, capacity) என்று அர்த்தம்.  ஒன்றைச் செய்து முடிக்கக் கூடிய ஆற்றலையுடைய  அறிவாற்றல், அணுக்கள் ஒன்றுசேர்ந்து  சடப்பொருட்களாக காட்சி அளிக்கும் நிகழ்ச்சி மாறாமல், தொடர்ந்து சடப்பொருட்களாகவே காட்சியளிக்கும் நிகழ்ச்சியாக இருக்கக்  காரணமாக உள்ளதால், அறிவினை ஒழுங்காற்றல் என்கிறார் மகரிஷி அவா்கள்.

     குடும்பங்களில் நடக்கும்  நிகழ்ச்சியினைக் கொண்டு, ஒரு செயலை ஒழுங்குடன் செயல்பட அறிவுதான் காரணமாக இருக்கின்றது  என்பதனை அனுபவத்தில் உணர்ந்து அறிவை, ஒழுங்காற்றல் என்று சொல்வது எவ்வளவு  பொருத்தமாக உள்ளது என்று அறிவோம்.

    குடும்பத்தில் பெரியவர்கள், பல முறை அறிவுறுத்தியும்,  சில சிறுவர்கள் ஒரு காரியத்தை மீண்டும் மீண்டும் தவறாகவே செய்து கொண்டிருப்பர்.  பெரியவர்கள்,  “அவனுக்கு  அறிவிருந்திருந்தால் அந்தப் பணியை ஒழுங்காக செய்திருப்பான்.  அவனுக்கு அறிவு என்பதே  கிடையாது.  ஞானசூனியம்” என்று சிறுவர்களைக் கடிந்து கொள்வர்.  அறிவு இல்லாது எந்த உயிரினமும் கிடையாது. ஆகவே சிறுவனுக்கு அறிவு இருக்கின்றது.  ஆனால், சிறுவன் பணியைச் சரியாக, ஒழுங்காக செய்யவில்லை.   பணியை சரியாக, ஒழுங்காக செய்யாமைக்குக் காரணம் அவனது அறிவை  சரியாக பயன்படுத்தாததுதான். சிறுவன் பணியை ஒழுங்காக செய்யாதற்கு பெரியவர்கள், ‘அவனுக்கு அறிவு இல்லை’ என்கின்றனர். ஆகவே இங்கே நாம் கவனிக்க வேண்டியது, எந்த ஒரு இயக்கமும் ஒழுங்காக செயல்படுவதற்கு காரணமாக இருப்பது அறிவே. ஆகவே ஒழுங்கு படுத்தும் (order of function) அறிவாற்றலை ஒழுங்காற்றல்  என்கிறோம்.

   அறிவு ஒழுங்காற்றலாய் இருந்து செயல்படுகின்ற உண்மையினை – மகரிஷி அவர்கள் உணர்ந்த அனுபவத்தை அவர் கூறும் கவியின்  சில வரிகளை அறிந்து பேரின்பமடைவோம்.

             பேரின்ப ஊற்று

        “உணர்ச்சியாய்ச் சிந்தனையாய் உள்ளதே அறிவென்று

            உணா்ந்திருந்தேன் பல நாள்; மேலும் உண்மை விளங்க

                                 உணர்ச்சிக்கு முன்னம் விண்ணில் ஒழுங்காற்றலாய் விளங்கும;

உனது திரு நிலையும் அறிவே என உணர்ந்தேன்”

                                                                        …. வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

உயிரினங்களில் ‘உணர்வதாகவும், சிந்திப்பதாகவும் உள்ளது மட்டுமே அறிவு’ என்று  பல நாட்களாக, அறிந்து வைத்திருந்ததாகக் கூறுகிறார் மகரிஷி அவர்கள்.  மேலும் தொடர்ந்து சிந்திக்க சிந்திக்க உண்மை விளங்கியதாகக் கூறுகிறார்.  அதாவது, அறிவின் பயணத்தில் (journey of Consciousness), உயிரினங்களில் உணர்ச்சியாக செயல்படுவதற்கு  முன்னர் உயிரற்ற சடப்பொருட்களில் (விண்ணில்) அறிவு ஒழுங்காற்றலாக விளங்கியது எனக்கூறுகிறார்.  அறிவு, தன் பயணத்தில் உயிர்களிடம்  உணர்ச்சியாக வருவதற்கு முன்னர் உயிரற்ற சடப்பொருள்களிலும்  இருக்கின்றது.  அப்போது அறிவு ஒழுங்காற்றலாய்த் திகழ்கின்றது.

   உயிரற்ற சடப்பொருள்களில்  அறிவு ஒழுங்காற்றலாய் பணியாற்றுகின்றது.    ‘ஒழுங்காற்றல் பணி’ என்றால் என்ன?  அறிவாகிய ஆற்றல்,

   புரோட்டான், நியுட்ரான், எலக்ட்ரான் ஆகிய தொகுப்புக்களைக் கொண்டு நிகழ்ச்சி நடத்திக் கொண்டிருக்கின்ற  அணுவானது, தொடர்ந்து தனது அமைப்புடன்(structure) இருக்கவும், அதாவது ‘அணு’ என்கின்ற நிகழ்ச்சியினை நடத்திக் கொண்டிருக்கவும்,

   மேலும் அணுக்களின் தொகுப்பால் ஆன (association of atoms – mass) உயிரற்ற சடப்பொருட்கள் ஒழுங்கோடு,  அந்த அணுத்தொகுப்போடு, தொடர்ந்து இயங்கக் காரணமாகவும் இருக்கின்றது.

   அணு அமைப்பை எடுத்துக் கொண்டால்கூட, அமைப்பு கலையாமல் அது ஒழுங்கோடு இருப்பதற்குக் காரணம் அறிவுதான். எனவே அறிவு சடப்பொருட்களில்  ஒழுங்காற்றலாக செயல்படுகின்றது.  ஒழுங்கிற்கு காரணமாக இருக்கும் ஆற்றலை ஒழுங்காற்றல் என்று சொல்லாமல் வேறு எவ்வாறு சொல்வது?

   மலரும் மனிதனும் உரையாடும்,மறைபொருளை விளக்குகின்ற மகரிஷி அவர்களின் கவியில், ஆன்மாவை வருடிக் கொடுக்கின்ற  ஒருசில வரிகள், நம்முடைய இன்றைய சிந்தனைக்கு உதவுவதாக உள்ளன. அவற்றைக் கவனிப்போம்.

 FFC-57-malare malare-படம்

 

‘பண்பாய்க்கூடி’  ‘ஒவ்வோர் அளவில் கூட‘ ஆகிய சொற்றொடர்களை நினைந்து நினைந்து மகிழவும்.  பண்பாய்க்கூடி என்பதன் பொருள் என்ன?  ‘பண்பு’ என்றால் தன்மை-இயல்பு-ஒழுங்கு என்றும்,  ‘கூடி’ என்றால் சேர்ந்து என்றும் பொருள். இந்த பொருளை நினைவில் கொண்டு, ‘பண்பாய்க் கூடி ஒரு கூத்து’ என்கின்ற அந்த நிகழ்வினை மனதில் (contemplation) நினைத்துப் பார்ப்போம்.

  முதலில் துகள்கள் தோன்றின.  கூட்டமாக இருந்த துகள்கள் விண்ணாக மாறியது எவ்வாறு? துகள்கள், பிறகு, விண்கள் மற்றும் இதர பூதங்களான காற்று, நீர், நெருப்பு, மண்ணாக மாறியது ஏதோ தற்செயலான, யதேச்சையான, ஒழுங்குமுறைப்படி இல்லாமல், ஒழுங்கற்ற நிலையில் ஏற்பட்டதன்று  (not in haphazard manner—but in a disciplined manner – in a systematic manner).

    “கரம் கோர்த்தாடும் நாடகத்தோர்” என்கின்ற சொற்றொடரைக் கவனிக்கவும்.Then who is the Director to conduct the Divine Drama? மனக்கண்முன் கொண்டு வந்து மகிழுங்கள்.  (Now imagine and go to that situation and visualise the then happening and love Him – God.  Admire Him and adore Him with your own words — the real way to love Formless God and shedding one’s ego totally.)  யார் இந்த நாடகத்தை நடத்தியது.  யாருடைய இயக்கத்தில் நாடகம் நடந்தேறியது? நடந்தேறிக் கொண்டிருக்கின்றது? உங்களையே தீவிரமாகக் கேளுங்கள், உங்களுக்கே  விடை கிடைக்கும்.

    பேரியக்க மண்டலம் முழுவதும் நீக்கமற நிறைந்து எல்லா இயக்கங்களையும் திருவிளையாடலாக நிகழ்த்திக்  கொண்டிருக்கும் வியத்தகு மறைபொருளை நினைக்கும்போது  பேரின்பம் ஏற்படுவதாகக் கூறும் பாடலை இங்கே நினைவு கூர்வோம்.

                FFC-57-inba ootru-படம்

  அறிவின் பயணத்தில்(Journey of Consciousness), அந்தந்த இடத்திற்கும், சூழ்நிலைக்கும் தகுந்தாற்போல்  முழுமையை (perfection) அடையக்கூடியத் தன்மை இயற்கைக்கு உண்டு என்பது  பற்றியும், இதனைக்குறிக்கும்  ‘entelechy’ என்கின்ற ஆங்கில வார்த்தைக்கான பொருளை வரும்  புதனன்று(18-02-2015-) அறிவிற்கு விருந்தில்(அறியவிருக்கிறோம்.  தொடரும்…