சிந்திக்க வினாக்கள்
-
-
சிந்திக்க வினாக்கள்- 323(255)
வாழ்க மனித அறிவு! வளர்க மனித அறிவு!!
சிந்திக்க வினாக்கள்- 323(255)
17-08-2020 – திங்கள்
கருவில் திருவுடைமை
ஞானிகளைப்பற்றிக் கூறும்போது அவர் கருவில் திருவுடையவராகப் பிறந்தார் என்று எந்த பொருளில் கூறுகிறோம்?
(இந்த பொருள் பற்றி மேலும் ஆழ்ந்தும், அகலமாகவும் சிந்திக்கவும், நடைமுறைப்படுத்த வேண்டியதை அறியவும், இந்த முதன்மை வினாவிற்குரிய துணை வினாக்களையும் எடுத்துக் கொண்டு சிந்திப்போம். வாழ்க வளமுடன்!)
துணை வினாக்களுக்குள் செல்வோம்.
i) ‘திரு’ என்றால் என்ன?
ii) ‘கரு’ என்றால் என்ன?
iii) ‘உடைமை’ என்றால் என்ன?
iv) ‘கருவில் திருஉடைமை’ என்றால் என்ன?
v) திருஉடைமையின் பயன்கள் என்ன?
vi) கருவில் திரு உடைமையை அறிவியல் ரீதியாக எவ்வாறு கொண்டு வருவது? அல்லது எவ்வாறு கருவில்/கருமையத்தில் ‘திரு’ வை சேர்ப்பது?
vii) கருவில்/கருமையத்தில் ‘திரு’ வை சேர்ப்பது என்ன பொருள்?
viii) கருவில் ‘திரு’ வை சேர்ப்பது என்றால் அது யாருடைய பொறுப்பு?
ix) கருமையத்தில் ‘திரு’ வை சேர்ப்பது என்றால், அப்போது அது யாருடைய பொறுப்பாகின்றது? அந்தபொறுப்பு எப்போது இன்றியமையாததாகின்றது?
x) இச்சிந்தனை ஆன்ம சாதகனுக்கு எப்போது எழும்/எழலாம்? ஆன்ம சாதகர்கள் எல்லோருக்குமே இச்சிந்தனை எழவேண்டியது அவசியமா?
xi) ஏன் அவசியமாகின்றது? ஆழ்ந்து சிந்திக்கலாமே!
xii) ‘கருவில் திரு’ பற்றி மகரிஷி அவர்கள் கூறுவதனை நினைவு படுத்திக்கொள்ளலாமே!
xiii) கருவில் திருஉடைமையாகப் பிறந்துவிட்டால் ஆன்ம வெற்றிக்கு சிரமமில்லையோ!
xiv) தெய்வீகப் பண்பான முயற்சி மனிதனிடம் உள்ளதால் அதனைக்கொண்டு ஒரு பிறவியிலேயே கருவை திருஉடையதாக்கி பிறவிப்பயனை அடையலாமன்றோ!?
xv) பல்லாயிரம் பிறவிகளில் கொண்டு வந்த பழிச்செயல் பதிவுகள் கருமையத்தில் இருந்தாலும் அவற்றை ஒரு பிறவிக்காலத்திலேயே மாற்றி அமைக்கலாம் என்கின்ற உத்திரவாதம் உள்ளதே! அதனை யார் கொடுத்துள்ளது?
குருநாதர் வழிகாட்டுதலும், அவரின் அருளாசியும், அவரால் கிடைத்துள்ள திருவருளும் துணை நிற்கட்டுமாக. வாழ்க வளமுடன்!
வாழ்க மனிதஅறிவு! வளர்க மனித அறிவு!!
வாழ்க அறிவுச் செல்வம்! வளர்க அறிவுச் செல்வம்!!
வாழ்க திருவேதாத்திரியம்! வளர்க திருவேதாத்திரியம்!!
வாழ்க வையகம்!!!!!
வாழ்க அறிவுச் செல்வம்! வளர்க அறிவுச் செல்வம்!!
-
சிந்திக்க வினாக்கள்- 322(161)
வாழ்க மனித அறிவு! வளர்க மனித அறிவு!!
சிந்திக்க வினாக்கள்- 322(161)
13-08-2020 – வியாழன்
பயிற்சி:
எத்தகைய தடைகள் இருந்தாலும் மெய்ப்பொருளைக் கண்டே தீர்வேன்’ என ஆர்வத்துடன் கூறும் அழகணி சித்தரின் தடங்கல் அனுபவம் இறை உணர் ஆன்மீகப் பயிற்சியாளருக்கு ஏற்பட வேண்டியது அவசியமா?
‘இல்லை’ என்றாலும், ‘ஆம்’ என்றாலும் காரணம் கூறவும்.
வாழ்க வளமுடன்!
வாழ்க அறிவுச் செல்வம்! வளர்க அறிவுச் செல்வம்!!
-
சிந்திக்க வினாக்கள்- 321
வாழ்க மனித அறிவு! வளர்க மனித அறிவு!!
சிந்திக்க வினாக்கள்- 321
10.08-2020 – திங்கள்
அலை இயக்கம்
பயிற்சி:
(அ) அலை இயக்கத்திற்கும் மனிதனின் கருமையத்திற்கும் தொடர்பு உள்ளதா?
(ஆ) உள்ளது எனில் எவ்வாறு தொடர்பு உள்ளது? விளக்கவும்.
(இ) கோள்களின் அலைவீச்சிலிருந்து ஆக்கமும்,அழுத்தமும் எவ்வாறு வருவதாக மகரிஷி அவர்கள் கூறுகிறார்கள்?வாழ்க வளமுடன்!
வாழ்க அறிவுச் செல்வம்! வளர்க அறிவுச் செல்வம்!!
-
சிந்திக்க வினாக்கள்- 320
வாழ்க மனித அறிவு! வளர்க மனித அறிவு!!
சிந்திக்க வினாக்கள்- 320
06.08-2020 – வியாழன்
பாராட்டு
பயிற்சி:
- பாராட்டு என்றால் என்ன?
- மனிதன் அடைய வேண்டிய நன்மதிப்புகளில் ஒன்றா பாராட்டு?
- ‘பாராட்டு’ ஒரு சொல்லா அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட சொற்களைக் கொண்டதா?
- பாராட்டு என்பதற்கு நம் குருபிரான் வேதாத்திரி மகரிஷி அவர்கள் கூறும் விளக்கம் என்ன?
- பாராட்டு என்பது மனிதனுக்கு அவசியமா? ஏன்?
- பாராட்டால் பாராட்டுபவரும் பாராட்டப்படுபவரும் அடையும் நன்மைகள் என்ன?
- பாராட்டுதலுக்கும் நன்றியுணர்வுக்கும் தொடர்பு உள்ளதா? எப்படி?
- பாராட்டுதலில் இயல்பூக்க நியதிக்கோ அல்லது அதன் கிளைத்தேற்றத்திற்கோ தொடர்பு இருக்கின்றதா?
வாழ்க வளமுடன்!
வாழ்க அறிவுச் செல்வம்! வளர்க அறிவுச் செல்வம்!!
-
சிந்திக்க வினாக்கள்- 319
வாழ்க மனித அறிவு! வளர்க மனித அறிவு!!
சிந்திக்க வினாக்கள்- 319
03.08-2020 – திங்கள்
பிராயச்சித்தம்
பயிற்சி:
- பிராயச்சித்தம் என்றால் என்ன?
- பழிச்செயல் புரியும் மனிதனால், பிராயச்சித்தம் நடைமுறையில் தவறாமல் செய்யப்படுகின்றதா?
- இல்லையெனில் ஏன்? பிராயச்சித்தம் எளிமையாகத் தானே உள்ளது!
- பிராயச்சித்தம் எந்தெந்த முறைகளில் செய்யலாம்?
- அவற்றில் எந்த முறையில் பிராயச்சித்தம் செய்வதற்கு மனம் ஒத்துழைப்பு தருவதில்லை? ஏன்? பிராயச்சித்தம் செய்யாதபோது அதுவே மற்றொரு பழிச்செயல் புரிவதாகிவிடாதா?
- பிராயச்சித்தம் செய்யவில்லை எனில் அதன் விளைவு என்ன? செய்தால் அதன் பயன் என்ன?
- ஆறாம் அறிவின் சிறப்புகளில் ஒன்று அதன் ‘ Logic – ஏரணம்’ – அறிவு அடிப்படையில் ஏற்கும் உண்மை). அப்படியிருக்கும்போது பிராயச்சித்தம் செய்வதில் என்ன தயக்கம் மனிதனுக்கு?
- தனக்கு பிறரால் பழிச்செயல் ஏற்படும்போது அவரிடமிருந்து பிராயச்சித்தம் எதிர்பார்க்கும் மனிதன், தான் பிறர்க்கு பழிச்செயல் புரிந்தபோது மட்டும் பிராயச்சித்தம் ஏன் செய்வதில்லை/தயங்குகிறான்? Is it logic for the consciousness? Is illogical behaviour of consciousness corrcct? அது மனிதனின் பண்பா?
- கர்மாக்கள் எத்தனை வகைப்படுகின்றன? பிராயச்சித்தத்தால் எந்த கர்மாவின் தீய விளைவைப் போக்க முடியும்? அவ்வளவு துல்லியமாக பிராயச்சித்தங்கள் செய்ய வேண்டுமா?
- முன்னோர்கள் வழியாக வந்த கர்மாவின் தீய விளைவுகளை பிராயச்சித்தத்தால் தவிர்க்க முடியுமா?
- முடியாது என்றால் அதற்கான காரணம் என்ன?
- முடியாதபோது முன்னோர்கள் வழியாக வந்த கர்மாவை எவ்வாறு போக்குவது?
வாழ்க வளமுடன்!
அறிவிப்பு:
வரும் 06.08.2020 அன்று வியாழக்கிழமை, சிந்திக்க வினாக்கள் பகுதியில் ‘பாராட்டு’ குறித்த வினாக்களை சிந்திக்க இருக்கின்றோம்.
வாழ்க வளமுடன்!
வாழ்க அறிவுச் செல்வம்! வளர்க அறிவுச் செல்வம்!!
-
சிந்திக்க வினாக்கள்- 318
வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு
சிந்திக்க வினாக்கள்- 318
30-07-2020 – வியாழன்
மனிதனின் அடையாளம்
- மனிதவாழ்வில் துன்பங்கள் ஏன்?
- மனிதன் தன்னை தவறாக அடையாளம் காண்பதாலா துன்பங்களை அனுபவிக்கிறான்?
- மனிதனுக்குத் தன்னுடைய அடையாளம் தெரியாதா?
- வாழ்க்கையில் என்ன வேண்டும்?
- எதில் வெற்றி பெற வேண்டும்?
- பிறவியின் நோக்கமே தன்னை(self realization)அறிய வேண்டும். அதற்கான வினாதான் “நான் யார்?” என்பது. அதாவது நான் யார் என அறிய வேண்டும் என்கின்றபோதே தான் யார் எனச் சரியாக அடையாளம் காணப்படவில்லை என்றாகின்றது அல்லவா?
- தன்னை அறிவதுதான் வாழ்வின் நோக்கம் எனில், தன்னைத் தவறாக அடையாளம் காண்பது என்பது பிறவியின் நோக்கத்திற்கு எதிரானது தானே?
- இயற்கை/இறைதான் மனிதாக வந்துள்ளது. தன்னுடைய சரியான, உண்மை நிலையை அறியாமல் தவறாகத் தன்னை அடையாளம் காண்பதென்பது இயற்கைக்கு முரணானதுதானே?
- ஆகவே, இயற்கை எதற்காக மனிதனாக வந்ததோ, அதற்கு எதிர் மறையாக வாழ்ந்து இயற்கையின் இனிமையைக் கெடுத்தால் விளைவு துன்பம் தானே?
- மனிதன் கொண்டிருக்கின்ற தவறான அடையாளம் எது?
- மனிதன் தன்னை சரியாக அடையாளம் காணின் என்னென்ன நன்மைகளை அடைகிறான்? அதனால் சமுதாயம் அடையும் நன்மைகள் என்னென்ன?
- தன்னை இறையுடன் அடையாளம் காட்டிக் கொள்வது சிறப்பா? அல்லது அழிகின்ற உடலுடன் அடையாளம் காட்டிக் கொள்வது சிறப்பா? எது சிறப்பு? நீங்களே சிந்தித்துப் பாருங்களேன்!
வாழ்க வளமுடன்!
வாழ்க வேதாத்திரியம்! வளர்க வேதாத்திரியம்!!
-
சிந்திக்க வினாக்கள்- 317(271)
வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு
சிந்திக்க வினாக்கள்- 317(271)
27-07-2020 – திங்கள்
i) யாரை முழு மனிதன் என்கிறார் வேதாத்திரி மகரிஷி அவர்கள்?
ii) முழு மனிதன் என்கின்றபோது குறைமனிதர்களும் இருக்கின்றனரா?
iii) மனிதனுக்கு வரையறை/வரையறைகள் ஏதேனும் உள்ளனவா? அவற்றில் மிகப்பொருத்தமான வரையறை என்று எதனைக் கூறலாம்?
iv) பொதுவாக மனிதனுக்கு வரையறை வகுத்தால் முழுமனிதனுக்குத் தனியாக வரையறை வகுக்க வேண்டுமா?
v) எப்போது குறைமனிதன் அல்லது சாதாரண மனிதன் முழுமனிதனாக முடியும்?
vi) குறைமனிதர்களும் முழுமனிதர்களும் தற்போது எந்த விகிதாசாரத்தில் இருக்கின்றனர்?
vii) இப்போதுள்ள விகிதாசாரமே இருந்துவிட்டால் என்ன?
viii) முழுமனிதனாக வேண்டிய அவசியம் என்ன?
ix) சாதாரண மனிதன் முழுமனிதனாக என்ன செய்ய வேண்டும்?
x) முழுமனிதனாவதற்கான கலை ஏதேனும் தற்போது உள்ளதா? அல்லது அந்தக் கலை இனிமேல்தான் ஏற்படவேண்டுமா? அந்தக் கலை இயற்கையின்/இறையின் தன்மாற்ற சரித்திரத்தில் ஏற்கனவே உருவாகிவிட்டதா? அந்தக்கலை முழுமனிதனாவதற்கு எவ்வாறு உதவியாக உள்ளது?
xi) எதனை வைத்து முழுமனிதன், குறைமனிதன் என்று பிரித்துப்பார்க்க முடியும்?
xii) யார் முழுமனிதன் என்று கூறும் திருவேதாத்திரிய மந்திரத்தினை (கவியினை) நினைவு கூறவும்.
வாழ்க வளமுடன்!
வாழ்க அறிவுச் செல்வம்! வளர்க அறிவுச் செல்வம்!!
-
சிந்திக்க வினாக்கள்-316(277)
வாழ்க மனித அறிவு! வளர்க மனித அறிவு!!
சிந்திக்க வினாக்கள்-316(277)
ரிஷிகேஷில் சிறப்பு பயிற்சியின்போது ஒரு நாள் கங்கைநதிக்கரையில் எடுத்த படம்
23.07.2020- வியாழன்
உடைமை
வாழ்க வளமுடன்!
பயிற்சி வினாக்கள்:
- உடைமை என்றால் என்ன?
- செல்வம் என்றால் என்ன? செல்வமும் உடைமையும் ஒன்றா அல்லது வேறா?
- எத்தனை வகை உடைமைகள் அவசியம் என்கிறார் வேதாத்திரி மகரிஷியின் மானசீகக் குருவான அறிஞர் திருவள்ளுவர்?
- ஒவ்வொரு உடைமையும் எவ்வாறுஒவ்வொரு மனிதனுக்கும் அவசியமாகின்றது?
- திருவள்ளுவர் கூறும் எல்லா உடைமைகளும் தனிமனிதனிடம் தற்போது உள்ளனவா?
- என்னென்ன உடைமைகள் ஒவ்வொரு தனிமனிதனிடம் தற்போது உள்ளன?
- தனிமனிதடம் இல்லாத உடைமைகள் என்னென்ன?
- ஏன் அந்த உடைமைகள் இல்லை?
- இல்லாத உடைமைகளைப் பெறுவதற்கு என்ன செய்ய வேண்டும்?
- இல்லாத உடைமைகளைப்பற்றியும் சுயசோதனை செய்ய வேண்டியது அவசியமா?
- உடைமைகளிலே முதன்மையானது என்று எந்த உடைமையைக் குறிப்பிட முடியும்? ஏன்?
- திருவள்ளுவர் கூறும் உடைமைகளின் பயன்களையும், தீமைகளையும் பட்டியலிட வேண்டியது அவசியமா? பட்டியலிட்டு சுயசோதனை செய்து பார்க்கலாமே! வாழ்க வளமுடன்!
வாழ்க அறிவுச் செல்வம்! வளர்க அறிவுச் செல்வம்!!
-
சிந்திக்க வினாக்கள்-315(SV143 & FFC-166)
வாழ்க மனித அறிவு! வளர்க மனித அறிவு!!
சிந்திக்க வினாக்கள்- 315 (FFC-166)
20-07-2020 – திங்கள்
மகரிஷி அவர்கள் தன் அறிவைக் கவர்ந்த ஒரே ஒரு பெருநூல் என்று எதனைக் குறிப்பிடுகிறார்? ஏன் அதனை அவ்வாறு கூறுகிறார்?
விடை:
‘சிந்திக்க வினாக்கள் பயிற்சியில்’ வேதாத்திரி மகரிஷி அவர்கள், தன்னைக் கவர்ந்த ஒரே ஒரு பெருநூலாகக் கூறுவது எது எனக் கேட்கப்பட்டிருந்தது. மகரிஷி அவர்களின் அறிவைக் கவர்ந்த நூல் எதுவாக இருக்கும் என அறிந்து கொள்வது மகரிஷி அவர்களின் சிந்தனாப்பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் மாணவர்களின் கடமை ஆகும். கடமை என்று கூறுவது நமது நன்மைக்காகத்தான்.
எதற்காக இயற்கை/இறை நமக்கு இந்த நூற்றாண்டிலே கிடைத்தற்கரிய குருவான வேதாத்திரி மகரிஷியிடம் புனித உறவை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது?
- பல்லாயிரம் பிறவிகள் எடுத்து,
- ஆனால் பிறவியின் நோக்கமும் ஆறாம் அறிவின் ஒரே பயனுமான, அறிவாகிய தெய்வத்தை அறிந்து கொள்ளாமல்,
- அனைத்துப் பிறவிகளையும் பிறப்பது–இறப்பது என்பதனையேதான் சாதனை வாழ்க்கையாகக் கொண்டு, சாதாரணப் பிறவிகளாகவே வீணாக்கிவிட்ட நிலையில்,
- இப்பிறவியில், நம்முடைய மாதாவும், பிதாவும் செய்த புண்ணியத்தால், நம்முடைய குடும்பத்திலேயே மற்றவர்களுக்கு (ஒரு வேளை உடன்பிறப்புகளுக்கு குரு-சீடா் உறவு கிடைக்காத) கிடைக்காத நிலையில்,
- நம்முடைய தற்போதையப்பிறவி பரிபக்குவ நிலையினை அடைந்துள்ளமையால்தான்,
- நெடுங்காலமாக பல்லாயிரம் பிறவிகளாகத் தொடர்புகொண்டுள்ள கருமையம் ஏற்ற பழிச்சுமைப் பதிவுகளை இந்த ஒரு பிறவிகாலத்திலேயே மாற்றி அமைத்துப், பயனடைய அகத்தாய்வும், அகத்தவமும் இறையுணர்பாதையிலே விழிப்புடன் வாழ்ந்து,
- நம்முடனே வாழ்ந்து கொண்டிருக்கும் சக மனிதர்களுக்கும் இறைத்தூதுவர்களாக இறைத் தொண்டு-அறிவுத்தொண்டு செய்து வாழ்வாங்கு வாழ்வதற்கேயாம்.
வாழ்க வேதாத்திரியம். வளர்க வேதாத்திரியம்.
நம்முடைய சத்சங்கத்தில் வேதாத்தரி மகரிஷி அவர்கள் உள்பட எல்லா அருளாளர்களும் எப்போதும் சூக்குமமாக எழுந்தருளி நமக்கெல்லாம் உற்ற வழிகாட்டிட வேண்டும்.
ஆகவே இன்றைய சிந்தனை, மனிதனின் சொத்தாகிய முழுப்பண்பேற்றத்தையும் விரைவில் இப்பிறவியிலேயே அடைவதற்காக இயல்பூக்க நியதியினை பயன்படுத்திக் கொள்ளும் வகையில் நமது குருபிரான் வேதாத்திரி மகரிஷியின் அரிய பெருமைகளை அறிந்து கொள்வதற்காக அமையட்டும்.
குரு-சீடா் உறவு நிரந்தரமில்லா இவ்வுலகில், இழந்த நிரந்தர மற்றும் மூல உறவை மீட்டெடுத்து சீடருக்குத் தரும் தெய்வீக இணைப்பை இயற்கை ஏற்படுத்தித் தரும் புனித உறவு ஆகும் குரு-சீடா் உறவு.
மகரிஷி அவர்கள் எல்லா அருளாளர்களையும் வணங்கி ஆசி பெற்றுக் கொண்டவர். இதனை அவர், தன்னுடைய சீடர்கள் எவ்வாறு குருவணக்கம் செய்ய வேண்டும் என இயற்றிய பாடலிலுள்ள கடைசி இரண்டு வரிகளான,
‘அறிவில் அறிவாய் நிலைத்து அறம்வகுத்தோர்,
அதனை வாழ்ந்து காட்டினோர், நினைவு கூர்வாம்.’என்பதிலிருந்து தெரிந்து கொள்ள முடிகின்றது.
அப்படியிருக்கும்போது எந்த அருளாரின் நூல் அவரைக் கவர்ந்த ஒரே ஒரு பெருநூல் என்று எதனைக் குறிப்பிடுவார்? அதற்கான விடையை குருவணக்கப்பாடலில் உள்ள முதல் ஆறுவரிகளிருந்து யூகிக்க முடிகின்றது. அப்பாடலின் முதல் ஆறு வரிகளில் நான்கு குருமார்களின் பெயர்களைக் குறிப்பிடுகிறார். அந்த அருளாளர்கள் தாயுமானவர், திருவள்ளுவர், திருமூலர், இராமலிங்கா் ஆகியவர்களே ஆவார்கள்.
இவர்களில் எந்த அருளாளர் அருளிய நூல் மகரிஷி அவர்களின் அறிவைக் கவர்ந்ததாக இருக்க முடியும்? மகரிஷி அவர்கள் சிறுவனாக இருந்தபோது பக்தி சிரத்தையோடு கலந்து கொண்ட பஜனையில் பாடப்பட்ட பாடல்களில் ஒன்றான ‘அங்கிங்கெனாதபடி’ எனத் தொடங்கும் பாடலால் தனது உள்ளம் லயித்துவிடும் என்று தனது வாழ்க்கை விளக்கம் எனும் நூலில் குறிப்பிடுகிறார். அதன் மூலம் உணர்ந்த முடிவே, கடவுள் அரூபம் என்கின்ற தெளிவு என்கிறார். இந்தப்பாடலே அவரது உள்ளுணர்வைத் தூண்டி தத்துவத்திலே தெளிவை அளித்து. இறைநிலையை உணர உதவியதாகக் கூறுகிறார் மகரிஷி அவர்கள். எனவே அப்பாடல் அருளிய அருளாளர் தாயுமானவரை மானசீகக் குருவாக ஏற்றுக் கொண்டார்.
அடுத்ததாக அகத்துதான் மெய்பொருள் என்று எடுத்துக்காட்டி அறிவதனை அறிவித்தார் என்று கூறி திருவள்ளுவரை மானசீகக் குருவாக ஏற்றுக் கொண்டார்,
மூன்றாவதாக திருவள்ளுவர் அறிவித்த அறிவை அறிவதற்கு வழிகள் சொன்ன அறிஞா் திருமூலர் அவர்களையும் மானசீகக் குருவாக ஏற்றுக் கொண்டார்.
நான்காவதாக, தன்னுள் வள்ளாரின் ஆன்மா பத்துவருடங்கள் தங்கி வழிகாட்டியதால், அவரை குருவாக வணங்குகிறார் மகரிஷி அவர்கள்.இந்த நான்கு அருளாளர்கள் இயற்றியுள்ள நூல்களில் ஒன்றைத்தானே மகரிஷி அவர்களைக் கவர்ந்த ஒரு பெருநூலாக மகரிஷி அவர்கள் கூறியிருக்க முடியும்?
அறிவைக் கவர்ந்த என்று சொல்வதானால் அது எந்த நூலாக இருக்க முடியும்?
தாயுமானவர் ‘அறிவே தெய்வம்’ என்பது அவரைக் கவர்ந்திருக்கின்றது.
அடுத்ததாக அகமாக உள்ளதுதான் மெய்ப்பொருள் என்று எடுத்துக்காட்டி அதுவே அறிவு என்று திருவள்ளுவர் தனக்கு உணர்த்தியதாகக் மகரிஷி அவர்கள் கூறுகிறார்.
அறிஞா் திருமூலர் அவ்வறிவை அறிவதற்கு வழிகள் சொல்லியதாகக் கூறுகிறார்.
நான்காவதாக அருளார்கள் எது தெய்வம் என்று கூறிய அறிவில் ஆழ்ந்து ஆனந்தக்கவியாத்தார் வள்ளார் என்பதாகக் கூறுகிறார் மகரிஷி அவர்கள் .
இந்த நான்கு அருளார்களின் ஒருவரான திருவள்ளுவர் இயற்றிய திருக்குறள்தான் தன் அறிவைக் கவர்ந்த ஒரே ஒரு பெருநூல் என்று குறிப்பிடுகிறார். காரணம் என்ன?
திருக்குறளை அறிவுக் கடல் என்கிறார்.
நாம் மகரிஷி அவர்களை அருட்தந்தை என்று அழைப்பதுபோல். மகிரிஷி அவர்கள் திருவள்ளுவரை தெய்வத்தந்தை என்று அழைக்கிறார்.
எளிதில் எல்லோராலும் புரிந்து கொள்ள முடியாத ஐம்பது பாக்களுக்கு மட்டும் உரிய பொருளை திருக்குறள் உட்பொருள் விளக்கம் என்னும் நூலில் விளக்கியுள்ளார் மகரிஷி அவர்கள்.
மகரிஷி அவர்களின் அறிவைக் கவர்ந்திருக்கக் கூடிய ஒரு சில பாக்களை நாம் யூகத்தால் அறிந்து கொண்டதை நினைவு கூர்வோம் இத்தருணத்தில்.அகத்ததுதான் மெய்ப்பொருள் என்று எடுத்துக்காட்டி, அறிவதனை அறிவித்தார் திருவள்ளுவர் என குருவணக்கப்பாடலில் மொழிந்துள்ளதால் குறள் எண் 702 ஐ நினைவு கூர்வோம்.
“ஐயப்படாஅது அகத்து உணர்வானைத்
தெய்வத்தோடு ஒப்பக் கொளல்.”இக்குறளுக்கு சாதாரணமாகக் கூறப்படும் பொருள் யாதெனில், சந்தேகமின்றி மனதில் உள்ளதை உணரவல்லவனை, அவன் மனிதனே ஆனாலும் தெய்வத்தோடு ஒப்பாகக் கொள்ள வேண்டும் என்பது.
ஆனால் நம்குருதேவர் கூறும் உட்பொருள் விளக்கத்தினை அறிந்து மகிழ்வோம். எவர் ஒருவா் ஆன்மாவை உணர்கின்றாரோ அவர் ஆன்மாவில் இயங்கும் அறிவை தெய்வமாகவே உணர்ந்தவராவார். ஆகவே ஆன்மாவை அதன் இயல்பு, இயக்கம், விளைவு இவைகளை சிறிதுகூட ஐயமின்றி உணர்ந்து கொள்ள வல்லவர் இறைவனாகவே மதிக்கப்படத்தக்கவர் என்று திருவள்ளுவர் கூறுவதாக நம்முடைய மகரிஷி அவர்கள் கூறுகிறார்கள். இதன் மூலம் அறிவினுடைய மதிப்பையும் அதனை அறிய வேண்டிய அவசியத்தையும் உணர்த்துகிறார் அக்குறளின் வாயிலாக என்கிறார் மகரிஷி அவர்கள்.
மேலும் மூன்று குறட்பாக்களை அறிந்து விட்டு இன்றைய சிந்தனையை முடித்துக் கொள்வோம்.
“பொருளல்ல வற்றைப் பொருளென்று உணரும்
மருளானாம் மாணாப் பிறப்பு.” . குறள் எண் 351“எப்பொருள் எத்தன்மையாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு.“ குறள் எண் 355“எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு. குறள் எண் 423மேற்குறிப்பிட்டுள்ள குறட்பாக்கள் பொருள்நிலை, மற்றும் நிகழ்ச்சி நிலை இரண்டையும் இறைஉணர் ஆன்மீகப்பயிற்சியில் வெற்றி பெற அவசியம் தெரிந்துகொள்ள வேண்டியத் தெளிவை, இன்று நமக்கெல்லாம் எளிமையாக எடுத்துக்கூறுவதற்கு மகரிஷி அவர்களுக்கு உதவியாக இருந்திருக்கலாம்.
மேற்குறிப்பிட்டுள்ள குறட்பாக்கள் பொருள்நிலை, மற்றும் நிகழ்ச்சி நிலை இரண்டையும் இன்று நமக்கெல்லாம் தெளிவாக கூறுவதற்கு உதவியாக இருந்திருக்கலாம்.
மேலும் இது பற்றி விரிவாக அறிய இந்த இணையதள ஆசிரியர் இயற்றிய “நான் யார்?” எனும் நூலில், இறைவன் ஏன் மெய்ப்பொருள் என அழைக்கப்படுகிறான்? என்கின்ற பத்தாவது அத்தியாயத்தில், மெய்ப்பொருள் பற்றி வள்ளுவமும், வேதாத்திரியமும் என்ன கூறுகின்றன என்பது பற்றி விரிவாக விளக்கப்பட்டுள்ளதனை வாசித்து பயன் பெறுமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகின்றது.
இப்போது தெய்வப்புலவர் திருவள்ளுவரை வணங்குவோம். திருவள்ளுவரை உலகமே போற்றுவதாலும், திருக்குறள் உலகப் பொதுமறை நூல் எனப்போற்றப்படுவதாலும், திருக்குறள் உலகின் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டிருப்பதிலிருந்தும் திருவள்ளுவரின் அரிய பெருமைகள் தெரிய வந்தாலும், திருவள்ளுவரின் அறிவாற்றலை நினைத்துப்போற்றுவதாலும், இயல்பூக்க நியதியின் பயனை அடைய முடியும் என்பதற்காக, நம் குருதேவர் வழியாக திருவள்ளுவர் பற்றி அறிவது சிறப்புடையதாகும்.
திருக்குறளை அறிவுக்கடல் என்கிறார் நம் மகரிஷி அவர்கள். அதனை நாம் ஆராய்ச்சி செய்து அதனை ஏற்றுக்கொள்ளலாமே.
இறைஉணர் பயிற்சியாளர்கள் பயிற்சியில் எவ்வாறு வெற்றி பெறுவது?
முதல் படி:
ஆராய்ச்சியாகும்.
1) முதலில் இறை என்பது எது,
2) இறை எவ்வாறு இப்பிரபஞ்சமாகியது,
3) இறை எவ்வாறு நாமாக ஆகியுள்ளது அல்லது இறைக்கும் நமக்கும் உள்ள தொடர்பு என்ன,
4) கண்களால் காணமுடியாத ஒன்று எவ்வாறு இறையாக இருக்கமுடியும்,
5) அப்படியானால் இறையைக் கண்டதாக அருளாளர்கள் கூறுவது என்ன
போன்ற வினாக்களின் மூலமாக ஆராய்ச்சியினைத் தொடங்க வேண்டும்.
இரண்டாவது படி: தெளிவு பெறுதலாகும்.
இவ்வளவு ஆராய்ச்சி செய்ததன் முடிவு என்னவாக இருக்க வேண்டும்? தெளிவு பெறவேண்டும் என்பதேயாகும். என்ன தெளிவு அது?
1) இறை என்பது எது,
2) அதற்கும் நமக்கும் உள்ள உறவு என்ன,
3) பிறந்து இறக்கப்போகின்ற இவ்வாழ்க்கையின் பொருள் என்ன,
4) புலன்இன்பங்களில் அளவு மீறி, முறையையும் மாற்றி, மயக்கமுற்று புலன்களுக்கு அடிமையாகிய அறிவை மீட்டு விடுதலை செய்து (Liberation) தன்னையே உணர்வது ஒன்றேதான் என்கின்ற தெளிவுதான் முதற்படியான ஆராய்ச்சியின் முடிவு அது.
5) இதனைத் தவிர்த்து வேறு ஒன்றும் இல்லை என்பதனை உறுதியாக கருத்தில் கொண்டு கடமை ஆற்றுவதே மனித வாழ்க்கையின் பொருள், அர்த்தம், நோக்கம், பயன், பேரின்பம். மரணமிலா பெறுவாழ்வு வாழ்தல் என்கின்ற தெளிவு.
மூன்றாவது படி: பயிற்சியாகும்.
ஆராய்ச்சி செய்து, தெளிவு பெற்ற பிறகு செய்யவேண்டியது பயிற்சியாகும். ‘கற்க கசடறக் கற்பவை; கற்ற பின் நிற்க அதற்குத் தக’ என்பதற்கேற்ப, முறையான பயிற்சியாகிய மனவளக்கலையை மேற்கொள்ள வேண்டும்.
நான்காவது படி: வெற்றி பெறுவதாகும்.
வெற்றி பெறுவது. இது கர்மயோக வாழ்வு வாழ்ந்து மரணமிலா பெறுவாழ்வு வாழ்வதாகும்.
மனித வாழ்வில் முழுப்பயனளிக்கக்கூடிய, எக்காலத்திற்கும், எவ்விடத்திற்கும், பொருத்தமானவையாக இருக்கும் நூல்கள் எது எனக்கூறுகிறார் மகரிஷி அவர்கள். அவை, ஆய்வு, தெளிவு, பயிற்சி, வெற்றி என்கின்ற நான்கு படிகளின் வழியாக திறமை அடைந்த அறிஞர்கள் எழுதும் நூல்களே என்கிறார் மகரிஷி அவர்கள். அத்தகைய நூல்களில் மிகச் சிலவே உள்ளதாகவும் கூறுகிறார். அவற்றில் ஓர் சிறந்த உயர்வைப் பெற்று மிளிர்வதுதான் திருக்குறள் என்கிறார்.
அத்தகைய நூலாசிரியரின் திறமை எவ்வாறு இருக்க வேண்டும் எனவும் கூறுகிறார்.
1) மெய்ப்பொருள் விளக்க நிலை பெற்று முழுமை பெற்றிருக்க வேண்டும் அந்த நூலாசிரியர் என்கிறார்.
2) மேலும் கூறுகிறார் மகரிஷி அவர்கள்:– விரிந்த அறிவோடு வாழ்க்கை அனுபவங்களைக் கொண்டிருக்க வேண்டும்.
3) சிறப்புற்று வாழ்வதற்கான நெறிகளை வகுத்திருக்கப்பட வேண்டும் அந்த நூலில் என்கிறார் மகரிஷி அவர்கள்.
அத்தகைய சிறப்புக்களுடைய ஒரு நூல் திருக்குறள் என்கிறார் மகரிஷி அவர்கள். இனிமேல் திருவள்ளுவர் அல்லது திருக்குறள் என்கின்ற பெயரைச் உச்சரிக்கும்போதே இத்தனை சிறப்புக்களும் காதுகளில் வந்து ஒலிக்க வேண்டும். மகரிஷி அவர்கள் தான் அடைந்த பயனின் நன்றி உணர்வாக தன்னுடைய மானசீகக்குருவாகிய திருவள்ளுரை போற்றுகிறார்.
நம் நம்குருவிடம் பெற்று வருகின்ற கிடைத்தற்கரிய பயனை அடைந்து வருவதால், நாம் போற்ற வேண்டியது, மேற்கண்ட சிறப்புகள் அத்தனையும் பெற்ற ஒரு நூலாசிரியரும், நூலும் முறையே வேதாத்திரி மகரிஷி அவர்களும், அவர் அருளியுள்ள நூலான திருவேதாத்திரியமும் ஆகும் என நினைந்து நினைந்து பணிவுகலந்த பெருமையினால் மனம் குளிர்ந்து, குளிர்ந்து, குருவின் காணிக்கையாக அறுகுணங்களிலிருந்து விடுதலை பெற்று, நாம் பிறவிப்பயனை இப்பிறவியிலேயே பெற்று விடுவதேயாகும். வாழ்க திருவேதாத்திரியம். வளர்க திருவேதாத்திரியம்.
ஆகவே ஆன்மீகப் பயிற்சியில் விரைவில் பண்பேற்றம் பெறுவதற்கு மகரிஷி அவர்கள் கூறியபடி இயல்பூக்க நியதியினைப் பயன்படுத்திக்கொள்வதற்கான வழியான ‘எப்பொருளை, எச்செயலை, எவ்வுயிரை, எக்குணத்தை அடிக்கடி நினைந்து வந்தால் நினைப்பவரின் ஆற்றல் அப்பொருளினுடைய தன்மையினை அறிவிலும் உடலிலும் மாற்றம் பெறக்காணலாம்’ என்கின்ற சூட்சுமத்தை பயன்படுத்திய வகையில் இன்றைய அறிவிற்கு விருந்து, தெய்வப்புலவர் திருவள்ளுவர் மற்றும் அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி அவர்களின் ஆன்மாக்கள், செயல்கள், குணங்களைப்பற்றியும் ஆழ்ந்து சிந்திப்பதற்கான தருணத்தை ஏற்படுத்திக் கொடுத்தது குருவருளும், திருவருளும் என்பதனை நினைக்கும்போது உள்ளம் பூரிக்கின்றது.
வாழ்க திரு பொருந்திய திருவேதாத்திரியம், வளர்க திரு பொருந்திய திருவேதாத்திரியம். வாழ்க வையகம். வாழ்க வளமுடன்.
வாழ்க அறிவுச் செல்வம்! வளர்க அறிவுச் செல்வம்!!
-
சிந்திக்க வினாக்கள்-314(207)
வாழ்க மனித அறிவு! வளர்க மனித அறிவு!!
சிந்திக்க வினாக்கள்-314(207)
16-07-2020 – வியாழன்
வாழ்க மனித அறிவு! வளா்க மனித அறிவு!!
உணர்ச்சிவயம்
வாழ்க வளமுடன்!
1) முதலில் வார்த்தை விளக்கம் காணவும்.
i ) உணர், உணர்வு, உணர்ச்சி என்றால் என்ன?
ii ) வயம், வசம் என்றால் என்ன?
iii ) உணர்ச்சி வயம் என்றால் என்ன?
2) ஏன் உணர்ச்சிவயம் மனிதஅறிவின் குறைபாடாகக் கருதப்படுகின்றது?
3) அறிவு உணர்ச்சிகளை உணர்வதற்காகத்தானே உள்ளது! அவ்வாறு இருக்கும்போது ஏன் அறிவு உணர்ச்சி வயமாகக்கூடாது?
4) விழிப்புணர்விற்கும் உணர்ச்சிவயத்திற்கும் என்ன தொடர்பு? அது விரும்பத்தக்கதா?
5) அயரா விழிப்புணர்வே இறை எனப்படும்போது, உணர்ச்சிவயம்???
6) அமைதி பூர்வீக சொத்து எனப்படும்போது, உணர்ச்சிவயம் பூர்வீகச்சொத்தை அனுபவிக்க அனுமதிக்குமா?
7) உணர்ச்சிவயத்திற்கு எதிர்சொல் உண்டா?
8) மனவளக்கலை இயம்புகின்ற அறிவின் ஐந்து சிறப்புகள் என்னென்ன?அறிவு உணர்ச்சிவயப்பட்டால் ஏதேனும் ஒன்றாவது மலருமா?
9) அதேபோன்று அறிவு பெறவேண்டிய ஐந்து பேறுகள் என்னென்ன? அவற்றினை அடைய முடியுமா?
10) ஆன்ம பலம் என்றால் என்ன? ஆன்ம பலத்திற்கும் உணர்ச்சிவயத்திற்கும் தொடர்பு உள்ளதா? உள்ளது எனில் அது எவ்வாறு தொடர்புள்ளது?
11) i)ஆன்ம பலம், உலகியல் வாழ்க்கை வாழ்கின்றவர்களுக்கும், இறைஉணர் சாதகர்களுக்கும் அவசியம் தானே?!
ii) அவசியம் எனில் எவ்வாறு அவசியமாகி்ன்றது?
iii) இயற்கையில்/இறை ஆற்றலில் நடந்துகொண்டிருக்கின்ற தன்மாற்ற நிகழ்வில் இரு தரப்பினர் என்று இருக்கின்றனரா?
12) மனிதனுக்குத் தேவையான மற்ற பலங்களோடு ஒப்பிடுகையில் ஆன்ம பலத்தின் சிறப்பு என்ன? ஆன்ம பலமே சிறந்ததா?
13) இறையே மனித அறிவாக இருக்கும்போது மனிதஅறிவு உணர்ச்சிவயத்தில் இருந்தால் இறை அருளை எவ்வாறு பெறமுடியும்?
14) அறிவு எப்போது முழுமை பெறுவது? வீடுபேறு பெறுவது எப்போது? ஒவ்வொரு மனிதனும் வீடுபேறு அடையும் படலம் தொடங்கியாகிவிட்டது என்பதனை நினைவில் கொள்ளவேணடும். மகா கவி பாரதியார் “ எல்லா உயிர்களிலும் நானே இருக்கின்றேன்” என்றுரைத்தான் கண்ணபிரான் என்று கூறி “எல்லாரும் அமரநிலை எய்தும் நன்முறையை இந்தியா உலகிற்கு அளிக்கும் – ஆம் இந்தியா உலகிற்களிக்கும் – ஆம் இந்தியா உலகிற்களிக்கும் ” என அழுத்தமாகவும் தீர்க்கதரிசனமாகவும், சத்தியவாக்காகவும் கூறியுள்ளார். நான் யார் என்கின்ற வினா அளிக்கும் அறிவிற்கானத் தெளிவினை மனவளக்கலை மூலமாக ஆன்மீகத்தில் ஏற்பட்டுள்ள சடுதிமாற்றத் திருப்புமுனையாக இயற்கை/இறை ஏற்படுத்திக்கொண்டு வருகின்றதல்லா? அறிவிற்கு ஏற்படும் தெளிவு – விழிப்புணர்வு உணர்ச்சி வயத்திற்கு இடமளிக்குமா?
வாழ்க திருவேதாத்திரியம்! வளர்க வளர்கவே திருவேதாத்திரியம்!!
குறிப்பு:
இந்தப் பயிற்சியில் இதுவரை 14 வினாக்கள் கேட்கப்பட்டுள்ளன. இவ்வளவு வினாக்கள் மட்டும் தான் உள்ளனவா இப்பயிற்சியில் சிந்திப்பதற்கு என ஐயம் எழலாம். இதற்கு மேலும் வினாக்கள் இருக்கும்/இருக்கலாம்/இருக்கின்றன! ஒவ்வொரு வினாக்களுக்குள்ளும் பல துணைக்கேள்விகள் மறைந்திருக்கலாம் (hidden questions). இப்பயிற்சியினை செய்யும்போது மேலும் ஏதேனும் மறைந்துள்ள துணை வினாக்கள் தங்களுக்குள் எழுந்தால் அவற்றையும் சேர்த்து சிந்தித்து விடை கண்டு மகிழவும். சிந்தனைத் திறனை மேலும் மேலும் தினந்தோறும், நொடிதோறும் வளர்த்துக் கொள்ள அன்பு வேண்டுகோள். வாழ்க வளமுடன்!
வாழ்க அறிவுச் செல்வம்! வளர்க அறிவுச் செல்வம்!!
-
சிந்திக்க வினாக்கள்-313(57)
வாழ்க மனித அறிவு! வளர்க மனித அறிவு!!
சிந்திக்க வினாக்கள்-313(57)
13-07-2020 – திங்கள்
வாழ்க வளமுடன்.
குருவருள்
1) ‘மாதா, பிதா, குரு, தெய்வம்’ என்கின்ற ஆன்றோர் மொழி என்ன தெரிவிக்கின்றது?
2) மேற்கண்ட ஆன்றோர் மொழியின்படி, அதில் கூறப்பட்டுள்ள நிகழ்வு சமுதாயத்தில் இப்போது நிகழ்கின்றதா? நிகழவில்லை என்றால் ஏன் நிகழ்வதில்லை? எந்நிகழ்வு அது? எப்போது இந்நிகழ்வு நிகழ்ந்திருக்கும்? இந்நிகழ்வு நிகழாமையின் விளைவு என்ன?
3) இந்த நூற்றாண்டிலாவது அந்நிகழ்வு புனருத்தாரணம் செய்யப்பட்டுள்ளதா இயற்கையால்/இறையால்? அதாவது மீண்டும் அந்நிகழ்வு நிலைநிறுத்தப்பட்டுள்ளதா(revive, redeem)?
4) ஆம் என்றால், எவ்வகையில் புனருத்தாரணம் செய்யப்பட்டுள்ளது?
5) அதனால் நீங்கள் அடைந்த பயன் என்ன?
6) இப்போது குருவருள் பற்றிய சிந்தனைக்குள் செல்வோம். குருவருள் என்றால் என்ன?
7) ‘குருவருள் இன்றேல் திருவருள் இல்லை’ என்பதன் பொருள் என்ன?
8) குரு சீடர் உறவின் அவசியத்தைப் பற்றிக் கூறும் கவியினை நினைவு படுத்திக் கொள்ளவும். (ஞா.க. பாகம்-2—க.எண் 1586 அல்லது ஞா. வாழ்வும்- கவி. 148)
9) அக்கவியில் ‘இருளே மிஞ்சும்’ என்று கடைசி வரியில் கூறும் எச்சரிக்கை என்ன?
10) உறவுகள் பல உள்ளன. அவற்றில் குரு-சீடர் உறவு என்றால் என்ன? அந்த உறவு எவ்விதத்தில் அவசியமாக உள்ளது? அதன் பயன் என்ன?
11) குரு-சீடர் உறவின் பயனை எவ்வாறு அடைவது? குரு-சீடர் உறவின் பயன் எந்த விதியின் கீழ் நடைபெறுகின்றது? அவ்விதி என்ன கூறுகின்றது?
12) எப்படி பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் சடுதிமாற்றத்தில் மனிதஇனம் தோன்றலாயிற்றோ, அதுபோன்றே இருபதாம் நூற்றாண்டில், ஆன்மீக உலகில் இயற்கை/இறை ஏற்படுத்திய சடுதிமாற்ற திருப்புமுனை வரிசையில், உலகை உய்விக்க முதலாம் கருவியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நம் குருதேவர் ஜகத்குரு வேதாத்திரி மகரிஷி அவர்கள் குரு-சீடர் உறவின் பயனை ஏற்படுத்தும் விதி பற்றி அருளியுள்ள கவியினை நினைவு கூர்ந்து சொல்லொணா ஆனந்தமடைந்து பிறவிப்பயனை அடைவோம்.
13) பயிற்சி என்பதால், மேற்கண்ட வினாக்களுக்கான விடைகளை முறைப்படுத்தி ‘குருவருள்’ என்கின்ற தலைப்பில் எழுதி பயன் பெறலாமே!
வாழ்க வளமுடன்!
வாழ்க திருவேதாத்திரியம்! வளர்க வளர்கவே திருவேதாத்திரியம்!!
குறிப்பு:
இந்தப் பயிற்சியில் இதுவரை 13 வினாக்கள் கேட்கப்பட்டுள்ளன. இவ்வளவு வினாக்கள் மட்டும் தான் உள்ளனவா இப்பயிற்சியில் சிந்திப்பதற்கு என ஐயம் எழலாம். இதற்கு மேலும் வினாக்கள் இருக்கும்/இருக்கலாம்/இருக்கின்றன! ஒவ்வொரு வினாக்களுக்குள்ளும் பல துணைக்கேள்விகள் மறைந்திருக்கலாம் (hidden questions). இப்பயிற்சியினை செய்யும்போது மேலும் ஏதேனும் மறைந்துள்ள துணை வினாக்கள் தங்களுக்குள் எழுந்தால் அவற்றையும் சேர்த்து சிந்தித்து விடை கண்டு மகிழவும். சிந்தனைத் திறனை மேலும் மேலும் தினந்தோறும், நொடிதோறும் வளர்த்துக் கொள்ள அன்பு வேண்டுகோள். வாழ்க வளமுடன்!
வாழ்க மனித அறிவு! வளா்க மனித அறிவு!!
வாழ்க அறிவுச் செல்வம்! வளர்க அறிவுச் செல்வம்!!