சிந்திக்க வினாக்கள்-314(207)

வாழ்க மனித அறிவு!                                                  வளர்க மனித அறிவு!!

lotus

சிந்திக்க வினாக்கள்-314(207)

 

16-07-2020 – வியாழன்

வாழ்க மனித அறிவு!                                                            வளா்க மனித அறிவு!!

உணர்ச்சிவயம்

வாழ்க வளமுடன்!

1) முதலில் வார்த்தை விளக்கம் காணவும்.

     i ) உணர், உணர்வு, உணர்ச்சி என்றால் என்ன?

    ii ) வயம், வசம் என்றால் என்ன?

    iii ) உணர்ச்சி வயம் என்றால் என்ன?

2) ஏன் உணர்ச்சிவயம் மனிதஅறிவின் குறைபாடாகக் கருதப்படுகின்றது?

3) அறிவு உணர்ச்சிகளை உணர்வதற்காகத்தானே உள்ளது! அவ்வாறு இருக்கும்போது ஏன் அறிவு உணர்ச்சி வயமாகக்கூடாது?

4) விழிப்புணர்விற்கும் உணர்ச்சிவயத்திற்கும் என்ன தொடர்பு? அது விரும்பத்தக்கதா?

5) அயரா விழிப்புணர்வே இறை எனப்படும்போது, உணர்ச்சிவயம்???

6) அமைதி பூர்வீக சொத்து எனப்படும்போது, உணர்ச்சிவயம் பூர்வீகச்சொத்தை அனுபவிக்க அனுமதிக்குமா?

7) உணர்ச்சிவயத்திற்கு எதிர்சொல் உண்டா?

8) மனவளக்கலை இயம்புகின்ற அறிவின் ஐந்து சிறப்புகள் என்னென்ன?அறிவு உணர்ச்சிவயப்பட்டால்  ஏதேனும் ஒன்றாவது மலருமா?

9) அதேபோன்று அறிவு பெறவேண்டிய ஐந்து பேறுகள் என்னென்ன?  அவற்றினை  அடைய முடியுமா?

10) ஆன்ம பலம் என்றால் என்ன? ஆன்ம பலத்திற்கும் உணர்ச்சிவயத்திற்கும் தொடர்பு உள்ளதா?  உள்ளது எனில் அது எவ்வாறு தொடர்புள்ளது?

11) i)ஆன்ம பலம், உலகியல் வாழ்க்கை வாழ்கின்றவர்களுக்கும், இறைஉணர் சாதகர்களுக்கும் அவசியம் தானே?! 

 ii) அவசியம் எனில் எவ்வாறு அவசியமாகி்ன்றது?

 iii) இயற்கையில்/இறை ஆற்றலில் நடந்துகொண்டிருக்கின்ற தன்மாற்ற நிகழ்வில் இரு தரப்பினர் என்று இருக்கின்றனரா?

  12) மனிதனுக்குத் தேவையான மற்ற பலங்களோடு ஒப்பிடுகையில் ஆன்ம பலத்தின் சிறப்பு என்ன? ஆன்ம பலமே சிறந்ததா?

13) இறையே மனித அறிவாக இருக்கும்போது மனிதஅறிவு   உணர்ச்சிவயத்தில் இருந்தால் இறை அருளை எவ்வாறு பெறமுடியும்?

14) அறிவு எப்போது முழுமை பெறுவது? வீடுபேறு பெறுவது எப்போது?  ஒவ்வொரு மனிதனும் வீடுபேறு அடையும் படலம் தொடங்கியாகிவிட்டது என்பதனை நினைவில் கொள்ளவேணடும்.  மகா கவி பாரதியார் “ எல்லா உயிர்களிலும் நானே இருக்கின்றேன்” என்றுரைத்தான் கண்ணபிரான் என்று கூறி  எல்லாரும் அமரநிலை எய்தும் நன்முறையை இந்தியா உலகிற்கு அளிக்கும் – ஆம் இந்தியா உலகிற்களிக்கும் – ஆம் இந்தியா உலகிற்களிக்கும் ”  என அழுத்தமாகவும்  தீர்க்கதரிசனமாகவும்,  சத்தியவாக்காகவும்  கூறியுள்ளார்.  நான் யார் என்கின்ற வினா அளிக்கும் அறிவிற்கானத் தெளிவினை  மனவளக்கலை மூலமாக  ஆன்மீகத்தில்  ஏற்பட்டுள்ள சடுதிமாற்றத்  திருப்புமுனையாக இயற்கை/இறை ஏற்படுத்திக்கொண்டு வருகின்றதல்லா?   அறிவிற்கு ஏற்படும் தெளிவு – விழிப்புணர்வு  உணர்ச்சி வயத்திற்கு இடமளிக்குமா?

வாழ்க திருவேதாத்திரியம்!         வளர்க வளர்கவே திருவேதாத்திரியம்!!

குறிப்பு:

இந்தப் பயிற்சியில் இதுவரை 14 வினாக்கள் கேட்கப்பட்டுள்ளன.  இவ்வளவு வினாக்கள் மட்டும் தான் உள்ளனவா இப்பயிற்சியில் சிந்திப்பதற்கு என ஐயம் எழலாம். இதற்கு மேலும் வினாக்கள் இருக்கும்/இருக்கலாம்/இருக்கின்றன! ஒவ்வொரு வினாக்களுக்குள்ளும் பல துணைக்கேள்விகள் மறைந்திருக்கலாம் (hidden questions). இப்பயிற்சியினை செய்யும்போது மேலும் ஏதேனும் மறைந்துள்ள துணை வினாக்கள் தங்களுக்குள் எழுந்தால் அவற்றையும் சேர்த்து சிந்தித்து விடை கண்டு மகிழவும். சிந்தனைத் திறனை மேலும் மேலும் தினந்தோறும், நொடிதோறும் வளர்த்துக் கொள்ள அன்பு வேண்டுகோள்.  வாழ்க வளமுடன்!

 

வாழ்க அறிவுச் செல்வம்!                                           வளர்க அறிவுச் செல்வம்!!