சிந்திக்க அமுதமொழிகள்

  • சிந்திக்க அமுத மொழிகள்- 312

    வாழ்க மனித அறிவு!             வளர்க மனித அறிவு!!

     

    சிந்திக்க அமுத மொழிகள்- 312

    26.06.2020— வெள்ளி

    “மலர்களைச் சுற்றி மணம் கமழும். அதுபோல்தான் செயற்கரிய செயல்களை சூழ்ந்து புகழ் திகழும்.”

                                                                                                 . . .   அறிஞர்சாக்ரடீஸ்

    பயிற்சி:

    1. என்ன கூறுகிறார் அறிஞர் சாக்ரடீஸ்?
    2. மலர்களை சுற்றி மணம் கமழ்கின்றது எனில் மணம் தனியாக இருக்கின்றதா? மலர் வேறு மணம் வேறா? மணம் எவ்வாறு வருகின்றது?
    3. செயற்கரிய செயல்களின்  விளைவைப் பற்றி கூறுகையில் ‘மலர்களைச் சுற்றி மணம் கமழும்’ நிகழ்வை  ஏன் உவமானம் கா்ட்டுகிறார் அறிஞர் சாக்ரடீஸ்? அவ்வாறு காட்டுவதன் நோக்கம்/எண்ணம் என்ன? 
    4. செயல்கள் எவ்வாறு இருக்க வேண்டும் என விரும்புகிறார் அறிஞர் சாக்ரடீஸ்?
    5. புகழுக்காக செயல்களா?
    6. இல்லையென்றால் எதற்காக செயல்கள்?
    7.  புகழ் – உயர் புகழ் பற்றி  கூறுகின்றாரா அறிஞர் சாக்ரடீஸ்?

     

    குறிப்பு: 

         அன்பர்களே வாழ்க வளமுடன்! 

    இந்தப் பயிற்சியில் இதுவரை 7 வினாக்கள் கேட்கப்பட்டுள்ளன.  இவ்வளவு வினாக்கள் மட்டும் தான் உள்ளனவா இப்பயிற்சியில் சிந்திப்பதற்கு என ஐயம் எழலாம். இதற்கு மேலும் வினாக்கள் இருக்கும்/இருக்கலாம்/இருக்கின்றன! ஒவ்வொரு வினாக்களுக்குள்ளும் பல துணைக்கேள்விகள் மறைந்திருக்கலாம் (hidden questions). இப்பயிற்சியினை செய்யும்போது மேலும் ஏதேனும் மறைந்துள்ள துணை வினாக்கள் தங்களுக்குள் எழுந்தால் அவற்றையும் சேர்த்து சிந்தித்து விடை கண்டு மகிழவும். சிந்தனைத் திறனை மேலும் மேலும் தினந்தோறும் நொடி தோறும் வளர்த்துக் கொள்ள அன்பு வேண்டுகோள்.  வாழ்க வளமுடன்!

    வாழ்க சிந்தனைச் செல்வம்!  வளர்க சிந்தனைச் செல்வம்!!

    வாழ்க அறிவுச் செல்வம்!                  வளா்க அறிவுச் செல்வம்!!


    Loading

  • சிந்திக்க வினாக்கள் – 306

    வாழ்க மனித அறிவு!                                                               வளர்க மனித அறிவு!!

    சிந்திக்க வினாக்கள் – 306

                                                                                                                                                                            21.06.2020 –  ஞாயிறு.

    6 ஆவது சர்வதேச யோகா தினம்:  21.06.2020.

     

    வாழ்க சர்வதேச யோகா தினம்!    வளர்க சர்வதேச யோகா தினம்!
    வாழ்க சர்வதேச யோகா தினம்!     வளர்க சர்வதேச யோகா தினம்!
    வாழ்க சர்வதேச யோகா தினம்!     வளர்க சர்வதேச யோகா தினம்!

     

    வாழ்க வையகம்!  வாழ்க வளமுடன்!!

     

    வினா: திருவேதாத்திரியம் உலக மக்களுக்கு என்னென்ன அளித்துக்கொண்டிருக்கிறது? 

    விடை:

    1)    உடல் நலத்திற்கு,  மனவளத்திற்கு,  மனிதனுக்கும் இறைக்கும் புனித இணைப்பினை(Yoga is bridging Jeevathma and Paramathma) ஏற்படுத்துவதற்கு மனவளக்கலை யோகாவை அளிக்கின்றது. 

    2)    உடல் நலத்திற்கு எளியமுறை உடற்பயிற்சி அளிக்கின்றது.

    3)    முதுமையைத் தள்ளிப்போடுவதற்கு காயகல்ப பயிற்சியிளை அளிக்கி்ன்றது.

    4)    மனவளத்திற்கு தவப்பயிற்சியினை அளிக்கி்ன்றது.

    5)    மனிதனின் தரத்தை உயர்த்தும் தெய்வீகப் பயிற்சியான தற்சோதனை அளிக்கின்றது.

    6)   அறிவின் இருப்பிடத்தை தெரிவிக்கின்றது.

    7)   அறிவின் பயணத்தை, தன்மாற்றத்தைத் தெரிவிக்கின்றது.

    8)   அறிவின் இயக்கத்தைத் தெரிவிக்கின்றது.

    9)    துணிந்து தெய்வம் அரூபமான வெட்டவெளி என்கின்றது.

    10)   வெட்டவெளி சக்தியில்லையானால் வேறு எந்தப்பொருள் வலிது என வினா எழுப்பியுள்ளது.

    11)   வெட்ட வெளி ஒன்றுமில்லாதது என நினைக்கப்படும் நிலையில் வெட்டவெளிக்கு தரங்களையும், திறன்களையும் கூறுகின்றது.

    12)   ‘துணிந்துரைப்போம் அறிவே தெய்வம்’ என்கின்றது.

    13)   ஆன்மீகத்தையும் அன்றாட வாழ்க்கையையும் இணைத்துள்ளது.

    14)   வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்குகின்றது.

    15)  ஒழுக்கம் உயிரைவிட மேலானது என்பதனை வலியுறுத்தி செயல்படுத்துவதற்கு இரண்டொழுக்கப் பண்பாட்டினைத் தந்துள்ளது.

    16)  ஒழுக்கம் பழக்கமாகிட, கல்வியில் ஒரு அங்கமாக ஒழுக்கப்பழக்கறிவை சேர்த்துள்ளது.

    17)  உயர் புகழ் அளிக்கக் கூடிய தொண்டிற்கு நல்வாய்ப்பினை அளித்துள்ளது.

    18)  அறிவு தனது பூர்வீகச் சொத்தான அமைதியினை அனுபவிக்க மனவளக்கலைலைய வடிவமைத்துள்ளது.

    19)  உலக சமாதானத்திட்டங்களை அளித்துள்ளது.

    20)  சமுதாயச் சிக்கல்களை எடுத்துரைத்து, அதற்கான தீர்வுகளைக் கூறுகின்றது.

    21)  தனிமனிதன், சமுதாயம், இயற்கை ஆகிய மூன்றிணைப்பைக் கருத்தில் கொண்டு ஆலோசனைகளைக் கூறுகின்றது.

    22)  போரில்லா நல்லுலகத்திற்கு வழிகாட்டுகின்றது.

    23)  ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்கின்ற உண்மையை எடுத்துரைக்கின்றது.

    24)  ஒன்றே பலவாகியது என்கின்ற ஒருமை இயலைத் தந்துள்ளது.

    25)  தனிமனிதனையும் உலகையும் உய்வித்து வாழவைக்கும் ‘வாழ்க வையகம். வாழ்க வளமுடன்’ என்கின்ற தாரக மந்திரத்தை அருளியுள்ளது.

    26)  மனிதன் சிந்தனையை வளர்த்துக் கொண்டிருக்கின்றது

    27)  மனிதனின் அறிவாட்சித்தரத்தை வளர்த்துக் கொண்டிருக்கின்றது.

       இன்னும் எவ்வளவோ சொல்லிக் கொண்டே போகலாம். திருவேதாத்திரியம், Infiniteஎல்லையற்றதைப் பற்றிய விஞ்ஞானத்தைத் தருவதால்,      திருவேதாத்திரியத்தில் என்னென்ன கூறப்பட்டிருக்கின்றன எனக் கேட்டால் பட்டியல் எல்லையற்று நீண்டு கொண்டே போகும் என்பதால்,    அதற்கு பதிலாக, ஒன்றைக் குறிப்பிட்டு ‘இது பற்றி ஏதாவது கூறப்பட்டிருக்கின்றதா’ எனக் கேட்டால்,    ‘இருக்கின்றது’ என்கின்ற பதிலைத்தரும் எடுக்க, எடுக்க, அள்ள, அள்ளக் குறையாத அட்சய பாத்திரமாக திகழ்கின்றது திருவேதாத்திரியம். ஏனெனில் பிரபஞ்ச களத்தில் பிறந்தது திருவேதாத்திரியம். தாய்த்திரு நாட்டின் புகழைக்கூறும் ‘என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்’ என்கின்ற திரைப்பாடல் வரியைப் போன்று என்ன வளம் இல்லை, இந்த மனவளத்தைப் பெருக்கும் மனவளக்கலை அருளியுள்ள இந்த திருவேதாத்திரியத்தில்’ என மகிழ்ச்சி பொங்கவே கூறுவர், ஐயமின்றி, இறையும்-மனமும் ஒன்றுபட்ட லட்சோப லட்ச பயனாளிகளான மனவளக்கலைஞர்கள்.

     வாழ்க திருவேதாத்திரியம்!   வளர்க திருவேதாத்திரியம்!!

    வாழ்க வையகம்!              வாழ்க வளமுடன்!!


    Loading

  • சிந்திக்க அமுத மொழிகள்- 311

    வாழ்க மனித அறிவு!             வளர்க மனித அறிவு!!

     

    சிந்திக்க அமுத மொழிகள்- 311

    20.06.2020— சனி

    வாழ்வில்நமக்குசொந்தம்என்றுசொல்லக்கூடியசொத்துநம்செயல்களே

    ஜேம்ஸ் ஆலன்

    பயிற்சி:

      1. என்ன கூற விரும்புகிறார் அறிஞர் ஜேம்ஸ் ஆலன்?
      2. சொந்தம் என்றால் என்ன?
      3. சொந்தம், சொத்து, செயல்கள் ஆகிய மூன்றையும் ஏன் இணைத்தும்தன் கண்டுபிடிப்பை சமுதாயத்திற்கும் கூறுகிறார்?
      4. எப்படி மூன்றையும் இணைத்து கூற முடிகிறது அறிஞரால்? இதுவரை நாம் இவ்வாறு சிந்திக்கவில்லையே!   அறிஞர்கள்  மட்டும் தான் சிந்திக்க முடியுமாஇப்போது சிந்திக்கின்றோமே! அது எவ்வாறு சாத்தியமாகின்றது?
      5. வாழ்வில் வேறு சொந்தம் ஏதும் இல்லையா? அது பற்றி ஒன்றும் கூறவில்லையே!
      6. சொத்து என்றால் என்னநம்முடைய செயல் எப்படி சொத்தாகின்றது?
      7. நம்முடைய செயலை நம் சொத்து என்கிறார். சரிஒப்புக்கொள்கிறோம்செயல் புரிந்துதான் சொத்து சேர்க்க முடியும். ஆனால் நாம்  செயல் ஏதும் புரியாமலேயே நமக்கு ஒரு சொத்து இருக்கின்றது.   அந்த சொத்தில் எல்லோருக்குமே பங்கு உண்டு. அது எது
      8. நாம் செயல் புரியாமலேயே நமக்காக சொத்து ஒன்று காத்துக்கொண்டிருக்கின்றதுஅதனைத் தேடிக் கண்டுபிடித்து நமதாக்கிக் கொள்ள வேண்டாமா?!  அந்த சொத்தை  அனுபவிப்பது தானே நமது பிறப்புரிமை
      9. அதற்கு நாம் என்ன பெயர் சூட்டலாம்ஏற்கனவே பெயர் சூட்டியிருக்கிறோமா
      10. அறிஞர்களின் அமுத மொழிகளை அறிந்துகொண்டால் மட்டுமே போதாவாஅறிந்து கொண்டு மகிழ்வதே போதுமானதா?! இவ்வாறெல்லாம் சிந்திக்க வேண்டுமாஏன் சிந்திக்க வேண்டும்?
      11. இல்லையென்றால் இயல்பூக்க நியதியினை எவ்வாறு பயன்படுத்தி பயன் பெறமுடியும்?
      12. சுருக்கமாக, அமுதமொழிகளின் ஆழ்ந்து  ஆழ்ந்த புரிதலின் பயன்கள் என்ன? ஒன்றா? பலவாவாழ்க வளமுடன்!

     

    குறிப்பு: 

         அன்பர்களே வாழ்க வளமுடன்! 

    இந்தப் பயிற்சியில் இதுவரை 12 வினாக்கள் கேட்கப்பட்டுள்ளன.  இவ்வளவு வினாக்கள் மட்டும் தான் உள்ளனவா இப்பயிற்சியில் சிந்திப்பதற்கு என ஐயம் எழலாம். இதற்கு மேலும் வினாக்கள் இருக்கும்/இருக்கலாம்/இருக்கின்றன! ஒவ்வொரு வினாக்களுக்குள்ளும் பல துணைக்கேள்விகள் மறைந்திருக்கலாம் (hidden questions). இப்பயிற்சியினை செய்யும்போது மேலும் ஏதேனும் மறைந்துள்ள துணை வினாக்கள் தங்களுக்கு எழுந்தால் அவற்றையும் சேர்த்து சிந்தித்து விடைகண்டு மகிழவும். இவ்வாறாக சிந்தனைத் திறனை மேலும் மேலும் தினந்தோறும் வளர்த்துக் கொள்ளலாம். 

    வாழ்க சிந்தனைச் செல்வம்!  வளர்க சிந்தனைச் செல்வம்!!

    வாழ்க அறிவுச் செல்வம்!                  வளா்க அறிவுச் செல்வம்!!


    Loading

  • சிந்திக்க அமுத மொழிகள்- 310

    வாழ்க மனித அறிவு!             வளர்க மனித அறிவு!!

     

    சிந்திக்க அமுத மொழிகள்- 310

    19.06.2020— வெள்ளி

    ஞானம் அடைந்துவிட்டால் அனைத்தும் நமதாகிறது, நாமே அனைத்துமாகிறோம்”

    பகவான் ஸ்ரீ ரமண மகரிஷி

    பயிற்சி:

    1. என்ன அருளுகிறார் ஸ்ரீரமணமகரிஷி அவர்கள்?
    2. “ஞானம் அடைந்து விட்டால் அனைத்தும் நமதாகிறது” என்றால் அந்த ஞானம் என்பது என்ன?
    3. அந்த ஞானத்தின் வரையறைபடி எப்படி அனைத்தும் நமதாகிறதோ அப்போது, ‘தான்’, ‘தனது’ இல்லாமல் போய் விடுமா?
    4. அவ்வாறு, தான் தனது அற்ற நிலையால் எது மறைகிறது?
    5. நாமே அனைத்துமாகிறோம் எனில் உலக சகோதரத்துவம் விளங்கி செயலுக்கல்லவா வந்துவிடும் என்கிறாரா பகவான் ஸ்ரீரமணமகரிஷி அவர்கள்?
    6. இதனையே மகரிஷி அவர்கள் எவ்வாறு கூறுகின்றார்?

     

    வாழ்க அறிவுச் செல்வம்!                  வளா்க அறிவுச் செல்வம்!!


    Loading

  • மனிதத் தேர்வு – PERSONALITY TEST-292(96) (மீள்பதிவு)

    வாழ்க மனித அறிவு!                                                        வளர்க மனித அறிவு!!

    மனிதத் தேர்வு – PERSONALITY TEST

    (மீள்பதிவு) FFC – 292(96)

                                                          17-06-2020-புதன்

    (01-07-2015)

     Personality_test-Q

        ‘மனிதத் தேர்வு’ என்கின்ற தலைப்பில் ஏற்கனவே நம் சத்சங்கத்தில் 30-10-2014 அன்று சிந்தித்து இருக்கிறோம்.  இருப்பினும் மீண்டும் அதே தலைப்பை எடுத்துக் கொண்டு ஆழ்ந்து/விரிவாக இன்று சிந்திக்க இருக்கிறோம்.  எட்டு மாதங்களுக்கு முன்னர், அதாவது இந்த இணைய தள www.prosperspiritually.com சத்சங்க ஆரம்பித்த இரண்டாம் நாள் இந்த தலைப்பில் சிந்தித்து இருக்கிறோம். அப்போது இணையதளம் ஆரம்பித்து ஒரிரு நாட்களே ஆனதால்  இணையதள சத்சங்கத்தில் கலந்து கொண்ட அன்பர்கள் மிகமிகக் குறைவு.  மீண்டும் அதே தலைப்பில் இன்று சிந்திக்க இருக்கிறோம்.  இரண்டிற்கும் உள்ள வித்தியாசத்தைக் கவனிக்கவும்.

       முன்பு சிந்தித்ததைவிட இப்போது ஆழ்ந்து கூடுதலாக சிந்திக்க இருக்கிறோம்.   இது எதனால் சாத்தியமாகியது? இணையதள சத்சங்க அன்பர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாலும், அவர்களின் எண்ணஅழுத்தத்தாலும், இன்னும் என்ன தெரிந்து கொள்ளப் போகிறோம் என்கின்ற அவர்களின் ஆர்வமிகு எதிர்ப்பார்ப்பாகிய அறிவுப்பசியைத் தீர்த்துவைக்கும் முகமாக இயற்கை/இறை  நடத்தி வைக்கும் நிகழ்வுதான் இந்த தலைப்பை மீண்டும் விரிவாக சிந்திக்க எடுத்துக் கொண்டது,  இதனை மேலும் உறுதிபடுத்துகின்ற நிகழ்வை இச்சிந்தனையின் இறுதியில் அறிவோம்.

        தலைப்பு  ‘மனிதத் தேர்வு’ என இருக்கின்றது.  தேர்வு என்றால் என்ன  என்பது யாவருக்கும் தெரியும்.    தேர்வு என்றால் கல்வி நிறுவனங்களில் அல்லது அலுவலகங்களில் ஒருவருடைய  படிப்பு, திறமை முதலியவற்றை சோதித்துப்பார்த்து  மதிப்பெண்கள் வழங்கப்படும். உதாரணத்திற்கு கணிதத் தேர்வை எடுத்துக் கொள்வோம். தேர்வு என்பது, குறிப்பிட்ட பாடதிட்டத்திற்குள் (syllabus) மாணவனிடம் வினாக்கள் கேட்டு, மாணவன் விடைகள் அளித்து, அது சரிபார்க்கப்பட்டு மதிப்பெண்கள் வழங்கப்படும்.  மதிப்பெண்களைப் பொருத்து மாணவன் தேர்வில் தேர்ச்சி பெற்றாரா, இல்லையா என்று அறிவிக்கப்படும்.

    ஆனால் மனிதத் தோ்வு என்றால் என்ன?  யார், யாரை, எதில் தோ்வு செய்வது?  இது ஒரு புதுமாதிரியானத் தேர்வாக உள்ளதே!   மனிதத் தேர்வு என்பது மனிதத்தை தேர்வு செய்வது. மனிதத் தேர்வில், ‘எதில்’ என்பதற்கு விடைகிடைத்துவிட்டது, மனிதத்தை யார் தேர்வு செய்வது? தங்களுடைய மனிதத்தை தாங்களேதான் தேர்வு செய்து கொள்வது மனிதத் தேர்வு.  ஏன் மனிதத் தேர்வு என்கின்ற தலைப்பில் சிந்திக்க வேண்டிய அவசியம் என்ன?

       உயிரினப்பரிணாமத்தில் விலங்கினமாக வந்தஉயிர்தான், பின்னர், சடுதி மாற்றத்தால் (mutation)  மனித உயிராக வந்துள்ளது. ஆகவே விலங்கினத்தின்  பண்பாகிய பிறர்வளம் பறித்தல் என்கின்ற குணமும் மனித உயிரில் சேர்ந்து வந்துவிட்டது. மனிதன் என்றால் அவனிடம் அன்பும் கருணையும் இருக்க வேண்டும்.  இதுதான் மனிதம் எனப்படுகின்றது.  மனிதம் இருந்தால் தான்  அவன் மனிதன்.   மனம்+இதம்=மனிதன்.  இதம் என்றால் அன்பும் கருணையுமாக ஒத்தும் உதவியும் இருப்பது என்று பொருள் என்கிறார் மகரிஷி அவர்கள்.

    ஆகவே ஆன்மா தன்பரிணாமச்  சுழற்சியை முடித்துக்கொள்ள, தன்னைத் தூய்மைப்படுத்திக் கொண்டு பேரான்மாவாகிய இறைநிலையுடன் இணைந்து விடவேண்டும்.  இதற்காகவேதான் மனிதப்பிறவி.   ஆன்மா,  பிறவிஎடுத்தபிறகு,  மனிதனின் வாழ்க்கை தொடங்க ஆரம்பிக்கின்றது.   மனித வாழ்க்கை என்பது இயற்கை மனிதனைத் தேர்வு செய்யும் நிகழ்ச்சி எனக்கொள்ளலாம்.

    கல்வித்தேர்வில் மாணவர்கள் விடை அளித்ததன் அடிப்படையில் பூச்சியத்திலிருந்து நூறு மதிப்பெண்கள்வரை வழங்கப்படுகின்றன. எல்லோராலும் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் எடுக்கமுடிவதில்லை. ஒரு சிலரால் மட்டுமே நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் எடுக்க முடிகின்றது, ஆகவே தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு குறைந்தது நாற்பது மதிப்பெண்களாவது  எடுக்கவேண்டும்  என்கின்ற கட்டாயம்உள்ளது.

    தேர்வில் தேர்ச்சி பெறாதவர் மீண்டும் தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டும்.  அந்தத் தேர்விலும் தேர்ச்சி பெறாதவர் மீண்டும் மறுமுறை தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டும்.  இதனையாவரும் அறிவர்.  தேர்ச்சி பெற்றால்தான் அந்தகல்வித்தகுதியை வைத்து வேலை கிடைத்து, வாழ்க்கைக்கு வேண்டிய பொருளை  ஈட்டி நிறைவாக  வாழ முடியும்.

            அதே போன்று தான் இயற்கை நடத்துகின்ற வாழ்க்கை என்கின்ற மனிதத்தேர்வில், அதாவது மனிதம் வெளிப்படுவத்துவதில்,  தேர்ச்சிபெறவேண்டும்.  மனிதம் வெளிப்படாததன் காரணமாக, ஏற்பட்டுள்ள வினையின் பயனை அனுபவிக்கத்தான் ஆன்மா மீண்டும் பிறவி எடுத்துள்ளது.   மனிதம் வெளிப்படுத்துவதில் நூறு மதிப்பெண்கள் எடுத்துத் தேர்ச்சி பெறுவது விரும்பத்தக்கதுதான் (Desirable).  நடைமுறையில் அப்படி இல்லை.  ஒரு கோடியில் ஒருவர்தான் நூறு மதிப்பெண்கள் எடுத்து மனிதத்தேர்வில் தேர்ச்சி பெற முடிகின்றது. பெரும்பாலோர் குறைந்தது நாற்பது மதிப்பெண்கள் கூட எடுத்து தேர்ச்சி பெறுவதில்லை. தேர்ச்சிக்கான குறைந்தபட்ச மதிப்பெண்களான நாற்பது விழுக்காட்டிற்கும்  கீழ்,  பூஜ்ஜியத்திலிருந்து முப்பத்தொன்பது வரை எடுக்கும் நிலைதான் உள்ளது.

            இந்த மனிதத் தேர்வில் நூறு மதிப்பெண்கள் எடுத்தவர்கள்தான் அறிவின் முழுமை அடைந்த அறிஞர் அல்லது ஞானி எனக் கருதப்படுகிறார்கள்.  எப்படி கல்வித் தேர்வில் நூறு மதிப்பெண்கள் எடுத்தவருக்கு, அவருக்கும் குறைவாக மதிப்பெண்கள் பெற்றவர்களை விட நல்ல வேலை கிடைத்து, பொருளை செழிப்பாக ஈட்டி வாழ முடிகின்றதோ, அதுபோல் வாழ்க்கையில் நூறு மதிப்பெண்கள் எடுத்து, முதன்மையான ஞானி, இன்பத்திற்கெல்லாம் பெரிதான பேரின்ப வாழ்வு வாழமுடிகின்றது.

            மனிதத் தேர்வில் தேர்ச்சி பெற்றமற்றவர்கள் அவரவர் மதிப்பெண்களுக்குத் தக்கவாறு இன்பத்தையும் துன்பத்தையும் கலந்துதான் நுகரலாம்.  நூறு மதிப்பெண்கள் எடுத்தவரைப் போன்று சலிப்பில்லா,  துன்பமில்லாப்  பேரின்ப வாழ்வு வாழ முடியாது.

            மனிதத் தேர்வில் தேர்ச்சியே பெறாதவர்கள் இன்னும் மனித உடலில் விலங்கினமாகவே வாழ்பவர்கள் ஆவர்.  இங்கே மகரிஷி அவர்கள் மனிதனைப்பற்றி கூறும் கவியினைக் கவனி்ப்போம்

    perfect_man

       மனிதன் என்கின்ற உருவினிலே மாக்களும், மக்களும் இருக்கிறார்கள் என்கின்றார்.  விலங்கினப் பண்பை போக்கிக்கொள்ளாத, பிறர்வளம் பறிக்கின்றவர்களை மாக்கள் என்கிறார். விலங்கினப்பண்பை போக்கிக் கொண்டு வாழ்பவர்களை மனிதா்கள் என்கிறார்.  அதிலும் மனதை அறிந்து மனதை இதமாக வைத்துக் கொண்டு மற்ற உயிரினங்களுக்கும், மக்களுக்கும்  மனமுவந்து தொண்டாற்றுபவர்களை முழுமனிதன் என்கிறார்.

        மனிதத் தோ்வில் தேர்ச்சி பெறாதவர்கள்  துன்பத்தையே அனுபவிக்க வேண்டியிருக்கும்.  கல்வித்  தேர்விலாவது மீண்டும் ஒருமுறையோ அல்லது  இரண்டு அல்லது மூன்றாவது முறையோ தேர்வு எழுதி தேர்ச்சி பெறுவது சாத்தியமாகின்றது.  ஆனால் மனிதத் தேர்வில் மட்டும் மீண்டும் மீண்டும் பல்லாயிரம் முறை  பிறவிகள் எடுத்தாலும் தேர்ச்சி பெற முடிவதில்லை.  இந்த அவல நிலைதான் இன்று மனிகுலத்தின் அமைதியின்மைக்குக் காரணம்.

             இந்த நிலையை மாற்றியமைக்க, மனிதன் தோன்றி பல்லாயிரம் ஆண்டுகள் தேவையாக இருந்தது இயற்கைக்கு.

    இச்சூழ்நிலையில்,

    1)  மனிதத் தேர்வில் முதலில் மனிதனை மனிதனாக்கி,  அதாவது மனிதத்தேர்வில்  40-99 மதிப்பெண்கள் எடுக்கவைப்பது. (வள்ளலார் கூறும் பரிபாக நிலை)

    2)   பிறகு improvement exam எழுதி அதிக மதிப்பெண்கள் எடுப்பது போல் அந்த மனிதனை இந்தப் பிறவியிலேயே நூறு மதிப்பெண்கள் எடுக்கச் செய்து அறிவை அறிந்த அறிஞராக்குவது; அறிவியலாளராக்குவது.(வள்ளலார் கூறும் சாகாவரம்)

        ஆகிய இரண்டு பணிகளைச் செய்து மனித சமுதாய வாழ்க்கையில் புரையோடிக் கிடக்கின்ற மூடப்பழக்கங்களையும்,   தேவையற்றவைகளையும் அடியோடு நீக்கி, புதிதாக நலம் தரும் அறிவுப் பூர்வமான பழக்க வழக்கங்களை ஏற்படுத்தி எந்நிலையிலும் ஒழுக்கவாழ்வு மலர்வதற்கு(revamp) இயற்கை கொண்டு வந்த திட்டம் தான் திருவேதாத்திரியம் என்கின்ற பெயரால் சமுதாயத்திற்குக் கிடைத்துள்ளது.  திருவேதாத்திரியம் கூறும் மந்திரத்தை நினைவில் கொள்வோம்.  திருவேதாத்திரியம்,

           “உத்தம நண்பர்காள் உங்கட்கும் உரியது” என்கின்றது.

        மேலும் பல்லாயிரம் பிறவிகளாக ஆன்மா சோ்த்து வந்த பழிச்செயல் பதிவுகளை ஒரு பிறவியிலே நீக்கிக் கொண்டு தூய்மை அடையலாம் என்கின்றார் மகரிஷி அவர்கள்.

    this_birth_is_enough_for_liberation

    பழிச் சுமைப்பதிவுகளை தூய்மை செய்வதால், மீண்டும் அந்தப்பதிவின் விளைவுகளாக துன்பம் வராமல் இருக்குமாதலால்.  நன்மை கிடைக்கின்றது என்கிறார்.

       விலங்கினப் பதிவுகளால்தான் பழிச்செயல்கள் வந்து சேர்ந்துள்ளன ஆன்மாவிற்கு.  ஆகவே விலங்கினப்பதிவுகள் நீங்கினால்தான்  பழிச்சுமைப்பதிவுகள் நீங்கும்.  விலங்கினப்பண்புகள் நீங்கிய ஆன்மா  மனிதனாகலாம் என்கிறார்.

       அதற்கு மேலும் திருவள்ளுவர் கூறுவது போல் ஐயப்படாது அகத்தை உணர்ந்தவர் தெய்வமாகலாம் என்றும் மகரிஷி அவர்கள் கூறுகிறார்கள்.

      இதுதான் இயற்கை மனிதனுக்கு வைத்துள்ள தேர்வு எனக்கொள்கிறோம்.  யாரும் விரும்பிப் பிறப்பதில்லை.  வினைப்பயனை அனுபவிக்கவே மனிதன் பிறக்கிறான். வினைப்பயனை தீர்த்துக் கொண்டு பிறவிக் கடலை நீந்தி மீண்டும் பிறவாது இருக்க வேண்டும் என்பதனை இயற்கை மனிதப்பிறவிக்கு வைத்துள்ள நோக்கம் அல்லது தோ்வாகும்.

      எனவே தான் சங்கல்பத்தில் உடல்நலம், நீளாயுள், நிறைசெல்வம் என்கின்ற உலகியல்  வாழ்க்கைக்கு வேண்டியத் தேவைகளை மட்டும் வைக்காமல்,  சாதாரண மனிதன் உலகியல் வாழ்க்கை வாழ்ந்து கொண்டே மாண்புடையவனாக, மற்ற  சங்கல்பங்களாகிய, ‘சிவம் அறியப்படுவதால் மலர்கின்ற அன்பால்’ செய்கின்ற தன்னலமற்றத் தொண்டால் வரும் உயர்புகழ் மற்றும் மெய்ஞ்ஞானம் ஆகிய இரண்டையும் இணைத்துள்ளார்.  மகரிஷி அவர்கள்.  மனவளக்கலைஞர்களை இறைத்தூதுவர்கள் என்று கூறி, அருளை நிதியாகக் கொண்டவர்களாக்கி அருள்நிதி என்கின்ற பட்டத்தையும் சூட்டுகிறார் மகரிஷி அவர்கள்.

       மேலும் “யோகமும் மனித மாண்பும் -– Yoga for Human Excellence” என்கின்ற படிப்பை பல்கலைக்கழகங்களில் ஏற்படுத்திக் கொண்டு வருகின்றது இயற்கை/இறை. ஆகவே ஒவ்வொருவரும் மனித மாண்புத்தேர்வில் EXCELLENT GRADE ஐ பெறுகிறோம் என உறுதி கொள்வோம்.

    Personality_test-Answer

    எனவே இப்போதைய காலத்தின் கட்டாயத்தால்,இயற்கைகருணையோடுஅளித்துள்ள இந்த திருவேதாத்திரியத்தை  வாழ்த்துவோம். வணங்குவோம்.

                       வாழ்க திருவேதாத்திரியம்.  வளர்க திருவேதாத்திரியம்.

                                     வாழ்கவையகம்.வாழ்கவளமுடன்.

        ‘மனிதத் தேர்வு’ என்கின்ற இச்சிந்தனையை பதிவேற்றத்திற்கு (upload) தயார் செய்து  வைத்திருந்த வேளையில், 30-06-2015—செவ்வாய், ‘The Hindu’ ஆங்கில நாளிதழில் வந்துள்ள A personality test on Gita values’ என்கின்ற தலைப்பின் கீழ் வந்துள்ள செய்தியினை  நம் சிந்தனையுடன் இணைத்துக் கொள்வோம். அதனுடன் நகலைக் கீழே காண்கிறீர்கள்.  இந்து நாளிதழுக்கு நன்றி.   நாம் எடுத்துக் கொண்டுள்ள ‘மனிதத் தேர்வு’ என்கின்ற தலைப்பிற்கும், A personality test’ என்கின்ற இந்து நாளிதழில் வந்துள்ள தலைப்பிற்கும் உள்ள பொருத்தத்தைக் காணுங்கள்.  மனிதனுடைய personality ஐ, பகவத்கீதை போதிக்கின்ற விழுமியங்கள் அடிப்படையில் அளவிடுவதற்கு ஒரு இணைய தளம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது என செய்தியிலிருந்து தெரிய வருகின்றது.

     Personality_Test_The_ Hindu_30th_Jun_2015

    முக்குணங்களால் மனித  உண்மை நிலையை புரிந்து கொள்ள முடிகின்றது எனப்படுகின்றது. இதுவரை அந்த இணையதளத்தின் வழியாக மாணவர்கள் உள்பட 10000 க்கும் மேல் தங்களை சோதித்துக் கொண்டதாக செய்தி கூறுகின்றது.  சத்வ, ரஜ, தமோ ஆகிய மூன்றையும், சோதிக்கின்றது என்கிறார் இணையதளத்தை உருவாக்கிய அன்பர், திரு. சதீஷ் மோத் அவர்கள்.  அவர் ஒரு பகவத்கீதை ஆராய்ச்சியாளர். அந்த இணையதளம் டாக்டர். மோத் அவா்களின் 20 வருட ஆராய்ச்சியினைக் கொண்டது என்கிறது செய்தி.  மீண்டும் ‘The Hindu’ நாளிதழுக்கு நன்றியினை இணையதள சத்சங்க அன்பர்கள் சார்பாக தெரிவித்துக் கொள்ளப்படுகின்றது.

        இந்த நிகழ்வு தற்செயலானதா அல்லது திட்டமிட்ட தெய்வீக நிகழ்ச்சியா (divine coincidence)? நாம் இந்த தலைப்பின் கீழ்  ஏற்கனவே சிந்தித்திருக்கிறோம்.  மீண்டும் இச்சிந்தனையை  ஆழ்ந்து சென்று கருத்துக்களை இன்று பதிவேற்றம் செய்ய விருந்தோம்.    இதனை, ‘The Hindu’ நாளிதழோ, திரு. சதீஷ் மோத் அவர்களோ அறிய வாய்ப்பில்லை. அதுபோல் நேற்று, ‘தி இந்து’ நாளிதழில் ‘A personality test on Gita values’ என்கின்ற செய்தி வரப்போகின்றது என்று நமக்கும் தெரியாது. இந்நிலையில் நேற்று அந்த நாளிதழில் வந்துள்ள  செய்தியும் நாம் எடுத்துக் கொண்ட தலைப்பும் ஒன்றாக இருக்கின்றது.  இந்த இருநிகழ்வையும் இணைத்து வைத்தது இயற்கை/இறை/அருட்பேராற்றலேதான்.  ஆகவே இயற்கைக்கு மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறோம்.  இயற்கை நமக்கு எப்போதும் உறுதுணையாக இருக்கவும் வேண்டுகிறோம்.

         ஆகவே  அவரவர்களே தன்னை அறிவாட்சித்தரத்தில் சோதித்து பார்க்க வேண்டிய அவசியத்தை இயற்கை  அறிவுறுத்துகின்றது.  நாம் எடுத்துக் கொண்ட தலைப்பையும் ஆமோதிக்கின்றது. ஒருவருடைய குணத்தை சோதித்துப்பார்த்துக் கொள்ள ஒரு இணையதளமே உருவாக்கிக் கொடுத்துள்ளது இயற்கை.   ஆகவே ஒவ்வொருவரும் தன்னைத் திருத்திக் கொள்வதில் ஆர்வம் கொண்டு முயற்சி செய்து மனித மாண்பினை உயர்த்திக் கொள்ள வேண்டும். மனிதத் தேர்வில் மதிப்பெண்கள் அளிப்பது  என்பது இயலாது.  ஏனெனில் இது குணம் சார்ந்தது. மற்ற சோதனைகள் போன்று, எடைஅளவு, உயரம், மார்புச்சுற்றளவு,  ஆகியவைகளை எடுத்துக் கூறுவதற்கு அளவு கோல்கள் உள்ளது போல் மனிதத் தேர்வில் மனிதத்தை எடுத்துச் சொல்வதற்கு அளவுகோல்கள் இல்லை. என்றாலும் தனது இயல்பை அடிக்கடி அடிக்கடி சோதித்துக் கொள்ள வேண்டும் என்பதனை எடுத்துச் சொல்வதற்காகவே மனிதத் தேர்வு என்கின்ற தலைப்பு  சிந்தனைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது.

        வேதாத்திரியம் அன்பும் கருணையும் மனிதனிடம் இயல்பாக மலர்வதற்கு இரண்டொழுக்க பண்பாட்டினை தவத்தின் முடிவில் ஓதச் சொல்கிறது.  இதனுடைய அடுத்த விரிவாக்கம், மனிதன் அன்றாடவாழ்வில் எந்தப்பணியைச் செய்து கொண்டிருந்தாலும் இடையிடையே இதனை ஓதி நினைவில் கொண்டிருக்க வேண்டும்.  அதாவது ஒருமணிநேரத்திற்கு ஒரு முறை 30 வினாடி நேரம் தேவையிருக்கும் இரண்டொழுக்கப் பண்பாட்டின் விரிவாக்கத்தைச் செயல்படுத்துவதற்கு.   அதாவது ஒரு மணிநேரத்தில் 30 வினாடி நேரம் செலவு செய்து ‘நான் இந்த ஒரு மணிநேரத்தில் இறையருளுக்கு பாத்திரமாக இருந்துள்ளேனா?’ என்று நம்மை நாமே கேட்டுக் கொள்ள வேண்டும். இது போன்ற பழக்கம் வந்துவிட்டால் நாளடைவில் ஒழுக்கத்தில் அயரா விழிப்புணர்வு நிலை வந்துவிடும்.  மனிதத் தோ்வில் மதிப்பெண்கள் கூடிக்கொண்டே வரும்நம்முடைய மனசாட்சிதான் நமக்கு மதி்ப்பெண்கள் அளிக்க வேண்டும்.  அதாவது நான் திருந்திக் கொண்டு வருகிறேன். விளக்க வழி வாழ்வதில் நாள்தோறும் முன்னேறி வருகிறேன் என்பதனை உறுதி செய்ய வேண்டும்.

    மகரிஷி அவர்கள் கூறுவதுபோல், மனதை அறிந்து,  மனதை இதமாக வைத்துக் கொண்டு, எந்த உயிர்களுக்கும் துன்பம் அளிக்காமல், மக்களுக்கு மனம் உவந்து தொண்டாற்றி மாமனிதாகி முழுமனிதனாவோம்.

    “குருவருள் இன்றேல் திருவருள் இல்லை”  என்கின்ற நிதர்சனத்தை மனதில் கொண்டு முதன் அறிவின் அறிவியலாளரும் நமது அருட்தந்தையுமான வேதாத்திரி மகரிஷி அவர்களின் பொற்பாதங்களை மானசீகமாக வணங்கி ஆசி பெற்று இன்புறுவோம்.  வாழ்க திரு வேதாத்திரியம்.  வளர்க திருவேதாத்திரியம்.

    வாழ்க திருவேதாத்திரியம்!                     வளர்க திருவேதாத்திரியம்!!


    Loading

  • சிந்திக்க கவிகள்-10

       வாழ்க மனித அறிவு!                                  வளர்க மனித அறிவு!!

    சிந்திக்க கவிகள்10

    14-06-2020-ஞாயிறு

    “நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றுந்தன்

    உண்மை யறிவே மிகும்”.

    —குறள்        

     பயிற்சி:

    1. என்ன கூறுகிறார் பொய்யாமொழி தெய்வப்புலவர்?
    2. குறள் எந்த பாலில் எந்த அதிகாரத்தில் எந்த அதிகாரத்திற்கு பின் வருகின்றது? அதற்கான காரணங்கள் ஏதேனும் இருக்குமா?
    3.  ‘நுண்ணிய நூல்பல கற்பினும்’ என்றால் என்ன?
    4.  ‘மற்றும் தன் உண்மை அறிவே மிகும்’ என்பதில்   ’ மிகும்’  என்கின்ற சொல்லால் அறிந்துகொள்ள வேண்டியது என்ன ?
    5. பொதுவாக உரையாசிரியர்கள் கூறும் பதவுரை என்னென்ன?
    6. திருவள்ளுரை மானசீக குருவாகக் கொண்ட இருபதாம் நூற்றாண்டின் சீடரான பெருமைக்குரிய நம் குருநாதர் வேதாத்திரி மகரிஷி அவர்கள் இக்குறள் பற்றி கூறும் விளக்கம் என்ன?
    7. எந்த நூலில் மகரிஷி அவர்கள் இக்குறளுக்கு விளக்கமளிக்கிறார்?
    8. அதில் இந்த அதிகாரத்தில் மேலும் ஒரு குறளுக்கு விளக்கம் அளித்துள்ளதை நாம் மீண்டும் ஒருமுறை நினைவுகூர்வோம்.
    9. திருவள்ளுவரும் அவரது இருபதாம் நூற்றாண்டு சீடரும் சேர்ந்து ஒருமித்துக் கூறும் செய்தி என்ன?
    10.  இறையுணர்வு கருத்தியல் பாடத்தில் மிகுந்த தெளிவையும்(Theoretical understanding) செய்முறை பாடத்தில்(Practical realisation through Meditation-துரியாதீத தவத்தில்) தேர்ச்சியையும் வலியுறுத்துகிறார்களோ  இரு அறிஞர்களும்!?

    வாழ்க வள்ளுவம்! வளர்கவள்ளுவம்!!

    வாழ்க திருவேதாத்திரியம்!  வளர்க திருவேதாத்திரியம்!!

    வாழ்க அறிவுச் செல்வம்!                         வளர்க அறிவுச் செல்வம்!!


     

    Loading

  • சிந்திக்க அமுத மொழிகள்- 309

    வாழ்க மனித அறிவு             வளர்க மனித அறிவு

     

    சிந்திக்க அமுத மொழிகள்- 309

    13.06.2020— சனி

    உழைப்பு மூவகைத் தீமைகளைப் போக்குகிறது. அவையாவன, பொழுது போகாமை, கெட்ட பழக்கம், வறுமை.”

    …… அனுபவமொழி

    பயிற்சி:

    1) ‘பொழுது போகாமை’ அவ்வளவு கொடுமையானதா? எப்படி? நன்மை இழக்கப்படுகின்றதா?

    2) பொழுது போகாமைக்கும் கெட்டபழக்கத்திற்கும் என்ன தொடர்பு?

    3) இதனாலன்றோ ‘An idle mind is devil’s paradise’ என்கின்றனர்?

     

    வாழ்க அறிவுச் செல்வம்                  வளா்க அறிவுச் செல்வம்


    Loading

  • சிந்திக்க அமுத மொழிகள்- 308

    வாழ்க மனித அறிவு!             வளர்க மனித அறிவு!!

     

    சிந்திக்க அமுத மொழிகள்- 308

    12.06.2020— வெள்ளி

    வாழ்வின் லட்சியம் இன்பம் என எண்ணியே நாம் ஓடிக் கொண்டிருக்கிறோம். ஆனால் ஞானம் பெறுவது தான் நம் வாழ்வின் உண்மையான லட்சியம்.”

    — சுவாமி விவேகானந்தர்

    பயிற்சி:

    1. என்ன கூறுகிறார் சுவாமி விவேகானந்தர்?
    2. வாழ்வு என்பது என்ன? அதில் லட்சியம் என்பது என்ன?
    3. இன்பம் என்பது என்ன?
    4. சுவாமி விவேகானந்தர் கூறுவது உண்மை தானே? அவரின் ஆதங்கம் வேதாத்திரிய தோற்றத்திற்குப் பின் நிறைவேறி வருகின்றதா? எப்படி?
    5. ஞானம் என்றால் என்ன?
    6. அந்த விளக்கப்படி ஞானம் பெறுவது தான் வாழ்வின் லட்சியமா?
    7. மனிதன் இறை உணர்வு பெறுவது  வாழ்வின் நோக்கம் எனப்படுகின்றது. அப்படியானால் இறை உணர்வு பெறுவதும் ஞானம் அடைவதும் எவ்வாறு ஒன்றாகின்றன?
    8. ஞானம் பெறுவதிலும், இறை உணர்வு பெறுவதிலும்  உள்ள அறிவியல் என்ன?

    வாழ்க அறிவுச் செல்வம்!                  வளா்க அறிவுச் செல்வம்!!


    Loading

  • சிந்திக்க அமுத மொழிகள்- 307(58)

    வாழ்க மனித அறிவு             வளர்க மனித அறிவு

     

    சிந்திக்க அமுத மொழிகள்- 307(58)

    10.06.2020— புதன்

    உண்மையில் கடவுளும், குருவும் வேறல்லர். ஓர் உருவானவரே.

                                                                                                                                 …ஸ்ரீ ரமணா்

    பயிற்சி—

    1) எப்படி?

    2) இந்த அமுத மொழி அறிவுறுத்துவது என்ன?

    3) இதே பொருளை திருவள்ளுவர்  எந்த குறட்பாவில் கூறுகிறார்?

    4) எப்போது, குருவின் சேர்க்கை பிறவிப் பயனை நல்கும் என்கிறார் மகரிஷி அவர்கள்?

     

    வாழ்க அறிவுச் செல்வம்                  வளா்க அறிவுச் செல்வம்


    Loading

  • சிந்திக்க அமுத மொழிகள்- 306(62)

    வாழ்கமனிதஅறிவு                                               வளர்கமனிதஅறிவு

    சிந்திக்க அமுத மொழிகள்- 306(62)

    07.06.2020-ஞாயிறு

     

    உழைப்பில் உறுதிகொண்டு வாழ்நாளைப் பயனுள்ளதாக்குங்கள். உலகில் பிறந்ததற்கு அறிகுறியாக ஏதாவது நல்ல செயலைச் செய்து உங்கள் அடையாளத்தை உலகில் விட்டுச்செல்லுங்கள்.”

    – சுவாமிவிவேகானந்தர் 

    பயிற்சி—

    1. இந்த ஆலோசனை எல்லோருக்கும்தானே? எல்லோருக்கும் இது சாத்தியமா?
    2. பிறந்ததற்கான அடையாளத்தை உலகில் விட்டுச் செல்வதற்கான நற்செயல்கள் என்னென்ன இருக்கின்றன?
    3. அவற்றுள் இன்றுள்ள உலக சூழ்நிலையில் எது முக்கியமானதாக இருக்கும்?
    4. ஒருசிலராவது அடையாளம் நிலைப்பதற்கான நற்செயல்களைப் பெருக்கினால் எப்படி இருக்கும் இவ்வுலகம்? சற்று கற்பனை செய்துபாருங்களேன்!

     வாழ்கஅறிவுச்செல்வம்               வளா்கஅறிவுச்செல்வம்


    Loading

  • சிந்திக்க அமுத மொழிகள் – 305(282)

    வாழ்க மனித அறிவு! வளர்க மனித அறிவு!!

    lotus

    சிந்திக்க அமுத மொழிகள் – 305(282)

     

    06-06-2020 — சனி

    பழக்கம் என்பது மிகவும் சக்தி வாய்ந்தது. எனவே நல்ல செயல்களையே பழகிக்கொள்ள வேண்டும்”   

    . . .    ஓர் அறிஞர்.

    பயிற்சி—
    1) என்ன கூறுகிறார் அறிஞர்?
    2) பழக்கம் என்பது என்ன?
    3) பழக்கம் என்பது மிகவும் சக்தி வாய்ந்தது என்றால் என்ன பொருள்?
    4) பழக்கம் என்பது சக்தி வாய்ந்தது என்று சொல்லி இருக்கலாம் அறிஞர். ஆனால் மிகவும் சக்தி வாய்ந்தது என்கிறார் அறிஞர். இதனை எவ்வாறு எடுத்துக் கொள்ள வேண்டும்?
    5) ஒழுக்கம் என்பதற்கும் பழக்கம் என்பதற்கும் ஏதேனும் தொடர்புள்ளதா?
    6) பழக்கத்திற்கும் எண்ணத்திற்கும் தொடர்புள்ளதா?
    7) இந்த அறிஞரும் வேதாத்திரி மகரிஷி அவர்களும் பழக்கம் மிகவும் சக்தி வாய்ந்தது என்கின்ற கண்டுபிடிப்பில் எவ்வாறு இணைகிறார்கள்?
    8) விளக்கம் என்பதற்கும் பழக்கம் என்பதற்கும் ஏதேனும் தொடர்புள்ளதா?
    9) பண்பேற்றம், பழக்கம், விளக்கம், ஒழுக்கம் இந்நான்கிற்கும் என்ன தொடர்பு?
    10) அறிஞர் ரூஸோ ஒழுக்க வாழ்வு பற்றி என்ன கூறுகிறார்? (இந்த இணையதள சத்சங்கத்தில் அது பற்றி உரையாடி இருக்கிறோம். Click here)
    11) ‘இளமையில் கல்’ என்று ஏன் கூறப்படுகிறது?
    12) ‘ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா?’ ,’தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும்’ என்பதற்கும் பழக்கத்திற்கும் என்ன தொடர்பு?
    13) இச்சிந்தனையின் முடிவில் நாம் என்ன முடிவிற்கு வர இருக்கிறோம்?
    14) வேதாத்திரியக் கல்வி முறையில் ஒழுக்கப்பழக்க அறிவு இடம் பெற்றிருப்பதாலும், கல்வி என்பது பள்ளியிலிருந்து ஆரம்பிப்பதால், கருத்தியலும், செய்முறையும் இணைந்த ஒழுக்கவியல் பாடம் ஒன்றாம் வகுப்பிலிருந்து பன்னிரண்டாம் வகுப்பு வரை மற்ற பாடங்களைப்போல் கட்டாயப் பாடமாக்க வேண்டும். இந்த புனித அலைகளை எல்லா அருளாளர்களையும் மனதில் நினைந்து வணங்கி வான்காந்தத்தில் பரவவிடுவோம்.

     

    வாழ்க திருவேதாத்திரியம்! வளர்க திருவேதாத்திரியம்!!

     

    வாழ்க அறிவுச் செல்வம்!                                                                  வளா்க அறிவுச் செல்வம்!!

    Loading

  • சிந்திக்க அமுத மொழிகள் – 304(281)

    வாழ்க மனித அறிவு!                                                        வளர்க மனித அறிவு!!

    lotus

    சிந்திக்க அமுத மொழிகள் – 304(281)

    05-06-2020 — வெள்ளி

    மனிதனுடைய சிந்தனையும் செயலும் சேர்ந்து செயல்படும்போது உண்டாகும் இன்பம் பேரின்பமாகும்.”

    . . . புளூடார்க்.

    பயிற்சி—
    1) என்ன கூறுகிறார் அறிஞர் புளூடார்க்?
    2) சிந்தனையும் செயலும் சேர்வது என்பது என்றால் என்ன பொருள்?
    3) சிந்தனையும் செயலும் சேர்ந்து செயல்படும்போது இன்பம் உண்டாகுமா? எப்படி?
    4) அந்த இன்பம் எப்படி பேரின்பமாகும்?
    5) மனித மனம் லாபம் பார்த்து (கணக்குப்பார்த்து – human mind is so calculative) செயல் புரியும் தன்மை உடையதால், இன்பத்தைவிட பேரின்பம் அதிகமாக இருக்கும்போது அறிஞர் புளூடார்க் கூறுகின்றபடி சிந்தனையையும் செயலையும் சேர்த்து செய்து பேரின்பம் அடையலாமே!
    6) இதே போன்று சிந்தனையுடன் செயலையும் இணைத்து ஏதாவது கவி அருளியுள்ளாரா வேதாத்திரி மகரிஷி அவர்கள்?
    7)  இரு அறிஞர்களும் எவ்வாறு இணைகிறார்கள் இவ்வுண்மையின் கண்டுபிடிப்பில்?

     

    வாழ்க அறிவுச் செல்வம்! வளா்க அறிவுச் செல்வம்!!


    Loading