சிந்திக்க அமுத மொழிகள்- 144

வாழ்க மனித அறிவு                          வளர்க மனித அறிவு

16-01-2016 — சனி

“பேரியக்க மண்டலம் தூலம், சூக்குமம், காரணம், ஆகிய மூன்றடுக்கு இயக்க நிலைகளாக இயங்கிக் கொண்டிருக்கின்றன. சூக்குமமும், காரணமும் புலன்களுக்கு எட்டாது. ஆறாவது அறிவுக்கு மாத்திரம் எட்டக் கூடியவை“

                                                                                 ….. வேதாத்திரி மகரிஷி அவர்கள்.
தெளிந்தோர்(28-12-1964)
தூலம், சூக்குமம், தெய்வம் இம்மூன்றுக்கும்
தொடர்பு அறிந்தவர் தெளிந்த அறிவினர்
காலம், தூரம், வேகம், பருமன் நான்கின்
கணக்கையும் உணர்வையும் அறிந்தோர் அன்னார்.

….. வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

பயிற்சி—
1) இரண்டு அருட்கூற்றுக்களையும் ஒப்பிட்டுப் பார்த்து இக்கூற்றுக்கு சொந்தமானவர்
மகிழ்ந்ததுபோல மகிழவும். வாழ்க வளமுடன்.

2) காலம், தூரம், பருமன், வேகம் கணக்கையும், உணர்வையும் அறிதல் என்றால் என்ன?

வாழ்க அறிவுச் செல்வம்                         வளா்க அறிவுச் செல்வம்

அறிவிப்பு:-

வாழ்க வளமுடன்.

    அடுத்த அடுத்த அறிவிற்கு விருந்து சத்சங்கத்தில்

(17-01-2016 ஞாயிறு)

1)   சீர்திருத்தம் எவ்வாறு செழிப்பான வாழ்வளிக்கின்றது? என்கின்ற வினாவிற்கான விடையும்,

 

2)   ‘முதலில் சிலந்தி வலையாக இருக்கும் பழக்கங்கள் பிறகு தேர்வடமாக மாறிவிடும்.’ என்கின்ற …ஸ்பானியப் பழமொழியின் கீழ் கேட்கப்பட்டுள்ள வினாக்களுக்கான விடைகள் பகிர்ந்து கொள்ளப்படும்.

வாழ்க வளமுடன்.

Loading

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments