சிந்திக்க அமுதமொழிகள் – 284
02-10-2019 – செவ்வாய்
“ அறிவின் பயனை அடைய சினத்தை தவிர்க்க வேண்டும்.”
அண்ணல் காந்தி அடிகள்.
பயிற்சி—
- என்ன கூறுகிறார் அண்ணல் காந்தி அடிகள்?
- அறிவின் பயன் ஒன்றா? பலவா?
- என்னென்ன?
- இறுதியான பயன் என்ன?
- இதுவரை சினத்தின் தோற்றம், விளைவுகள் பற்றி சிந்தித்தது உண்டா?
- அறிவின் பயனை அடைவதற்கு சினம் எவ்வாறு தடையாக இருக்கும்? எவ்வாறு தடையாக உள்ளது?
- அத்தடையாகிய சினத்தை எவ்வாறு தவிர்ப்பது?
- விலங்கினப் பண்பிலிருந்து மனிதனிடம் வந்துள்ள சினத்தை தவிர்ப்பது சாத்தியமா?
- எவ்வாறு சாத்தியம்?
வாழ்க அறிவுச் செல்வம்! வளர்க அறிவுச் செல்வம்!!