சிந்திக்க அமுத மொழிகள்- 175

வாழ்க மனித அறிவு                 வளர்க மனித அறிவு

 

06-05-2016 — வெள்ளி

இறைநிலையான மன அலை விரிந்த சுத்த வெளியுடன் அபூர்வமாக ஒன்றிணைந்து தனது சொந்த ஆற்றலையே ஒவ்வொரு இடத்திலும், ஒவ்வொரு பொருளிலும் அதன் செயல் ஒழுங்காக மெய்யுருவாக்கிக் காணும்போது, அது இன்பமும், திருப்தியும், கலந்த உணர்வாக அமைவது பேரின்பம்.

. . . வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

பயிற்சி—
1) ஏன் அபூர்வமாக என்கிறார் மகரிஷி அவர்கள்?
2) ‘தனது சொந்த ஆற்றல்’ என்பதன் பொருள் என்ன?
3) ஒவ்வொரு இடத்திலும், பொருளிலும் என்பதன் பொருள் என்ன?
4) ‘செயல் ஒழுங்காக’ என்பதன் பொருள் என்ன?
5) ‘மெய்யுருவாக்கிக் காணும்போது’ என்பதற்குப் பொருள் என்ன?
6) மகரிஷி அவர்கள் சுருங்கச் சொல்வதென்ன?

வாழ்க அறிவுச் செல்வம்            வளா்க அறிவுச் செல்வம்