வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு
06-12-2014
“பிறப்பும் இறப்பும் உருவத்தோற்றமான உடலுக்கே அன்றி உயிருக்கு அல்ல”
…..வேதாத்திரி மகரிஷி அவர்கள்
குறிப்பு: கருத்தைச் சிந்திக்கவும்.
1) உடல் அழியக் கூடியது. அழிந்து விடும் ஒரு நாள்.
2) உயிர் அழியாதது. இது, யாவருக்கும் இப்போது தெரிய வருகின்றது. ஆனால் இதற்கு முன்னர் இப்படி ஒரு சிந்தனை இல்லை. மரணத்திற்கு பின் அதாவது உயிர் உடலை விட்டு வெளியேறிய பிறகு, உடல் தான் எரிக்கப்படுகின்றது அல்லது புதைக்கப்படுகின்றது. உயிரை எரிப்பதில்லை. அல்லது உயிரைப் புதைப்பதில்லை. ஆகவே உயிர் அழியாதது எனத் தெளிவாகின்றது.
3) இப்படிப்பட்ட உயிரின் நிலை பிறப்பிற்கு முன்னும், இறப்பிற்கும் பின்னும் என்ன?
4) உயிரறிவு என்பது என்ன? ஏன் உயிரறிவு பெறவேண்டும் மனிதர்கள்?
5) அதனால் தனிமனிதனுக்கும், சமுதாயத்திற்கும் என்னென்ன பயன்கள்?
வாழ்க அறிவுச் செல்வம் வளா்க அறிவுச் செல்வம்