வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு
25-06-2016—சனி
“தூய்மை உள்ளவர்களுக்குத்தான் பந்தங்களிலிருந்து விடுதலை கிடைக்கும்?”
….. சுவாமி விவேகானந்தர்
பயிற்சி—
1) என்ன கூறுகிறார் சுவாமி விவேகானந்தர்?
2) இந்த அறிவுரை யோகம் பயில்பவர்கள், பயிலாதவர்கள் அனைவருக்குமேதானே?.
3) தூய்மைக்கும் பந்தத்திற்கும் என்ன தொடர்பு?
4) இது ஆன்மீகவாதிகளின் கருத்தா?
5) இதில் விஞ்ஞானமுள்ளதா?
6) பந்தங்களிலிருந்து விடுதலை அவசியமா?
7) விடுதலை கிடைக்கும் என்றால் இப்போ சிறைப்பட்டிருக்கிறோமா?
8) ‘தவம் மற்றும் தற்சோதனையின் இறுதிப்பயனான இறைஉணர்வு பெறுதலுக்கும்’ ‘பந்தங்களிலிருந்து விடுதலை பெறுவதற்கும் ஏதேனும் தொடர்பு உள்ளதா?’
வாழ்க அறிவுச் செல்வம் வளா்க அறிவுச் செல்வம்