வாழ்க மனித அறிவு! வளர்க மனித அறிவு!!
சிந்திக்க அமுத மொழிகள்- 322(268)
25-07-2020 — சனி
எண்ணத்தின் வலிமை
மனிதத் தன்மை, மேன்மை கைக்கு எட்டாத வானமல்ல, நாம் விரும்பினால் கைக்கு எட்டக்கூடியதே!
. . . கன்பூசியஸ்
பயிற்சி—
1) என்ன கூறுகிறார் சீன அறிஞர் கன்பூசியஸ்?
2) மனிதன் என்பவன் யார்?
3) மனிதனை வரையறை செய்ய முடியுமா(Can man be defined)?
4) i)தன்மை என்றால் என்ன?
ii) மனிதத் தன்மை என்றால் என்ன?
iii) மனிதனின் சிறப்புகள் பற்றி நம் குருநாதர் வேதாத்திரி மகரிஷி அவர்கள் என்ன கூறுகிறார்?
iv) அக்கவியினை (ஞா.க.கவி எண் 290)நினைவு கூர்வோம்?
v) அவற்றில் எத்தனை நம்மிடம் உள்ளன என தற்சோதனை செய்து பார்க்கலாமே!
5) i) மேன்மை என்றால் என்ன?
ii) மனித மேன்மை என்றால் என்ன?
6) அறிஞர் கன்பூசியஸ் ஒப்புமையில் பயன்படுத்துகின்ற உவமேயத்தின் சிறப்பு என்ன? ஏன் வானம் என்கின்ற உவமேயத்தைப் பயன்படுத்துகிறார் அறிஞர் கன்பூசியஸ்?
7) கைக்கு எட்டினால் …………….. ????!!!!
8) அறிஞர் கன்பூசியஸ் மொழிகின்ற அமுத மொழியின் அறிவியல் என்ன?
9) அறிஞர் கன்பூசியஸ் கண்டுபிடித்த உண்மைக்கும் மனவளக்கலையின் சங்கல்பத்திற்கும் தொடர்பு/உறவு இருக்கின்றதா? எவ்வாறு தொடர்புள்ளது?
10) பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் கன்பூசியஸ் எண்ணியது இப்போது நிறைவேறி வருகின்றதா? இப்போது என்றால் ………… ?????!!!!!
11) எண்ணத்தின் வலிமைதான் என்னே! நாமும் அது போன்ற சமுதாயநல எண்ணங்களை பிரயோகிப்போமே!
12) அன்று கன்பூசியஸ் கூறிய ‘விருப்பம் கைகூடக்கூடியது’ என்பதனை இந்த நூற்றாண்டில் நிறைவேற்றிக் கொண்டிருப்பது எது?
வாழ்க சிந்திக்க வைக்கின்ற திருவேதாத்திரியம்!
வளர்க சிந்திக்க வைக்கின்ற திருவேதாத்திரியம்!!
வாழ்க சிந்தனைச் செல்வம்! வளர்க சிந்தனைச் செல்வம்!!
வாழ்க அறிவுச் செல்வம்! வளா்க அறிவுச் செல்வம்!!