சிந்திக்க அமுத மொழிகள்- 324

வாழ்க மனித அறிவு!             வளர்க மனித அறிவு!!

சிந்திக்க அமுத மொழிகள்- 324

01-08-2020  — சனி

ஆனந்தம் நம் உள்ளத்தில் எந்த அளவுக்கு மறைமுகமாக உண்டாகின்றதோ அந்த அளவுக்கு நாம் ஆன்மீக வாழ்வில் முன்னேற்றம் உடையவர்களாக இருக்கிறோம்.”

-சுவாமி விவேகானந்தர்.

பயிற்சி:

  1. என்ன கூறுகிறார் சுவாமி விவேகானந்தர்?
  2. ஆன்ம சாதனையில் ஆனந்தம் ஏன் மறைமுகமாக  ‘உண்டாகிறதோ’ எனக் கூறுகிறார்?
  3. நேரடியாக ஆனந்தம் தெரியாதா? மறைமுகமாகத் தான் இருக்குமா? மறைமுகமாக உண்டானால் எப்படி ஆன்மசாதகன் அறிந்துகொள்ள முடியும்?
  4. ஆன்ம சாதனையில் ஏற்படும் முன்னேற்றத்திற்கு அளவுகோலா?
  5. ஆன்மசாதகனுக்கு மறைமுகமாக உண்டாகும் ஆனந்தம் தெரியவந்தால் விளக்கப்பதிவு வலிமை பெற்று வருகின்றது என்றுதானே பொருள்?
  6. பழக்கப்பதிவு வலிமை இழந்து வருகின்றது என்றுதானே பொருள்?
  7. உள்ளத்தில் ஆனந்தம் உண்டானால், அன்னமய கோசம் மற்றும் மனோமய கோசத்தில் மட்டுமே இயங்கிவந்த ஆன்ம சாதகனின் ஆன்மா, அவற்றையெல்லாம் கடந்து, பிராணமய கோசம், விஞ்ஞானமய கோசம் மற்றும் ஆனந்தமய கோசத்திற்கு வந்துவிட்டது என்றுதானே பொருள்?
  8. பலன் ஏதும் இல்லாமல் எந்த ஒரு செயலையும் எவ்வாறு தொடரமுடியும்? அவ்வாறிருக்க ஆத்ம சாதகனுக்கு அந்த மறைமுக ஆனந்தம்தானே பயிற்சியை தொடர்ந்து செய்வதற்கு ஊக்கம் தரும்?
  9. இந்த அமுதமொழி ஆன்மசாதகர்களுக்கு ஊக்கம் அளிக்கிறதல்லவா? 

வாழ்க திருவேதாத்திரியம்!  வளர்க  திருவேதாத்திரியம்!!

 

வாழ்க அறிவுச் செல்வம்!                  வளா்க அறிவுச் செல்வம்!!