வாழ்க மனித அறிவு! வளர்க மனித அறிவு!!
சிந்திக்க கவிகள்–11
01-07-2020–புதன்
பயிற்சி:
- என்ன கூறுகிறார் உலக நல தொண்டரான நம் குருநாதர் வேதாத்திரி மகரிஷி அவர்கள்?
- வாழ்வு என்பது என்ன?
- வாழ்வில் வளம் என்பது என்ன?
- வினை, உயிர், மெய், அறிவதால் வளம் கிடைக்கின்றதா? இவற்றை அறிவதால் எவ்வாறு வளம் கிடைக்கும்?
- பஞ்சதன்மாற்றங்களின் வகை தெரிவான் கட்டே உலகு என்று 20 நூற்றாண்டுகளுக்கு முன்னர் திருவள்ளுவர் உரைத்தது போல அவரது 20 ஆம் நூற்றாண்டின் சீடரான வேதாத்திரி மகரிஷி அவர்கள் வினை, உயிர், மெய் ஆகியவற்றின் வகை அறிய என்ன செய்தார்?
- பகலிரவாய் எண்ணி எண்ணி என்றால் என்ன?
- ஆழ்ந்து ஆழ்ந்து சிந்தித்தேன் என்பதற்கு என்ன பொருள்? உத்தம நண்பர்காள் உங்கட்கும் உரியது என்கின்ற உறுதியை நினைவில் கொண்டு மற்ற பணிகளுக்கும்-கடமைகளுக்கும் குந்தகம் ஏற்படாமல் சிந்தித்து ஆன்மபலன் பெறலாமே?
- விடாமல் தொடர்ந்து ஆழ்ந்து ஆழ்ந்து சிந்தித்ததால் அவர் அடைந்த பலன்கள் என்ன? நாமும் அவ்வாறே பலன்களை அடையலாமே!
- வினாக்கள் எல்லாம் விடையாயிற்று என்றால் என்ன பொருள்?
- ஊழ் உணர்ந்தேன் என்றால் என்ன பொருள்?
- ஊழ், உயிர், வினை உணர்ந்தால் வாழ்வில் வளம் பெருகும் என்கிறாரே! இது எளிமையாக உள்ளது அல்லவா?
- உயர் தொண்டு என்றால் என்ன? என்ன வகையான தொண்டு மகரிஷி அவர்களுடையது?
- தொண்டால் எப்படி மனநிறைவு உண்டாகும்? அந்த மனநிறைவை வரையறுக்க முடியுமா?
வாழ்க திருவேதாத்திரியம்! வளர்க திருவேதாத்திரியம்!!
வாழ்க அறிவுச் செல்வம்! வளர்க அறிவுச் செல்வம்!!