வாழ்க மனித அறிவு! வளர்க மனித அறிவு!!
சிந்திக்க வினாக்கள்-310
02-07-2020 – வியாழன்
பயிற்சி:
- ஆறறிவு உடைய மனிதனை “மனிதன் என்ற உருவினிலே மாக்கள் உண்டு மக்கள் உண்டு*” என்பதனை எதன் அடிப்படையில் வேதாத்திரி மகரிஷி அவர்கள் கண்டுபிடித்துள்ளார்?
- விலங்குகளிலிருந்து மனிதன் வந்துள்ளதால் அவனிடம் விலங்குகளுக்கே உரிய பிறர் வளம் பரித்தல் குணம் தொடர்வதால் மனிதர்களை இரண்டாகப் பிரித்து அவ்வாறு கூறுகின்றாரா?
- இந்தக் காரணமட்டுமன்றி வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளனவா?
- அப்படி உண்டென்றால் அவை என்னென்ன?
- அல்லது ஆன்மாவின் ஐந்து கோசங்களை வைத்து அவ்வாறு கூறுகின்றாரா?
- அப்படி கூறுகின்றார் என்றால் ஐந்தறிவு சீவன்கள் எந்தெந்த கோசங்களில் மட்டும் இயங்குகின்றன? ஆறாம் அறிவு எந்தெந்த கோசங்களில் இயங்க வேண்டும்? பெரும்பாலும் மனித அறிவு எந்த கோசத்தில் இயங்குகின்றது?
- கோசங்களில் கடைசி கோசம் என்ன? அந்த கோசத்தில் எந்த ஆன்மாவின் அறிவு இயங்குகின்றது?
- ஏன் இந்த கோணத்தில் சிந்திக்க வேண்டும்? இவ்வாறு சிந்தித்தலின் பயன் என்ன?
- திருவேதாத்திரியத்தினை ஆழமாகவும், தெளிவாகவும் புரிந்துகொண்டு
9.1. பேரின்பம் அனுபவிக்கவும் ,
9.2. ‘யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்’ என்கின்ற மனிதனின் இயல்பான எண்ணம் நன்றியுணர்வின்பொருட்டு எழுவதனை செயலாக்கவும்,
9.3 தான் புரிந்துகொள்ளும் அதே வேளையில் சமுதாயத்திற்கு எடுத்துரைத்து புரியவைத்து அதிலும் கூடுதலாக பேரின்பம் அனுபவிப்பதற்காவும்,
9.4. ஐந்தறிவிற்கும் ஆறறிவிற்கும் இடையில் வேறு ஏதேனும் துணைப்பிரிவை ஏற்படுத்திக்கொண்டு சிந்திக்க அவசியம் உள்ளதா?
10. அவசியமிருப்பின் அது என்ன பிரிவு ? சிந்தித்து பேரின்பம் அனுபவிக்கலாமே!
வாழ்க திருவேதாத்திரியம்!! வளர்க வளர்கவே திருவேதாத்திரியம்!!
* ஞானக் களஞ்சியம் – கவி எண். 297 – முழுமனிதன் – 03-01-1959
அன்புடையீர்! தங்களின் மேலான கருத்துக்களை கருத்துரைக்க பகுதிக்கு அனுப்ப Click the link below
https://www.prosperspiritually.com/contact-us/
வாழ்க அறிவுச் செல்வம்! வளர்க அறிவுச் செல்வம்!!
![]()



Please advise where I can buy your book, Naan Yaar? Thank you
மனிதன் உணர்ச்சி வயப்படும் பொழுது அறிவு வெளியே போய்விடும் என்பது சரியே. உணர்ச்சிவயத்தில் அறிவு கீழ் நிலையில் உள்ளது. அறிவு தெளிவாக சிந்திக்க முடிவதில்லை. இராஜயோகம் என்றாலே…
[…] சு. வாசன் Submitted on 06 Oct, 2015 at 7:04 am […]
[…] நாகேஸ்வரன் Submitted on 11 Oct, 2015 at 1:35 am […]
நான்கு அடி கவிக்கு 13 சிந்தனை வினாக்களா? பிரம்மிக்க வைக்கின்றன தங்கள் பயிற்சி முறைகள். நீங்களும் உங்கள் அன்புக் குடும்பமும் வாழ்க வளமுடன். நன்றி.