2014

Yearly Archives

  • சிந்தனை விருந்து என்றால் என்ன? சிந்தனை விருந்து என்றால் என்ன? (நேற்றையத் தொடா்ச்சி) 2/2

    வாழ்க மனித அறிவு                                                                    வளர்க மனித அறிவு
                          சிந்தனை விருந்து என்றால் என்ன?                                                                                         
       07-11-2014

                                                                                  FFC – 11

       அறிவிற்கு சிந்தனை என்கின்ற உணவின் அவசியத்தையும், சிறப்பையும் கருதி அதனை விருந்து என அழைக்கப்படுகின்றது, அதாவது சிந்தனை விருந்து. சிந்தனை செய்ய எந்த ஆராய்சிக் கூடமோ, கருவியோ அவசியமில்லை. உயிருள்ள, மனமுள்ள, அதாவது அறிவுள்ள மனிதன் சிந்திக்கலாம். அறிஞர்கள் தானாகவே சிந்திப்பர். சிலர் அறிஞர்களின் தூண்டுதலால் சிந்திப்பர். நாளடைவில் அந்த சிலரும் சுயமாகச் சிந்திக்க ஆரம்பித்துவிடுவர். சிந்திப்பது அரிய கலை. சிந்திக்கப் பழக வேண்டும். சிறந்த சிந்தனை
                      • அறிவிற்கு உயர்வை அளிக்கும்.
                     • வாழ்க்கையில் தெளிவினை உண்டாக்கும்.
                      • சிந்தனை இருளைப் போக்கி வாழ்வில் விளக்கேற்றும்.
                      • சிந்தனைப் பிரச்சனைகளைத் தீர்க்கும்.
                      • சிந்தனை அறிவிற்குச் செல்வமாகும்.
                      • சிந்தனை எப்போதும் விழிப்பு நிலையிலேயே இருக்கச் செய்யும்.
          மூச்சை யாரும் விரும்பி விடுவதில்லை. அது இயல்பாக நடக்கின்றது. அதுபோல் சிந்தனை செய்வது இயல்பாக இருக்க வேண்டும். பழக்கமாகிவிட்டால் மூச்சு விடுவது போல் சிந்தனையும் இயல்பாகிவிடும்.   அதற்கு ஒரு உதாரணம் வேதாத்திரி மகரிஷிகளாவார் மகரிஷி அவர்கள் வாழ்வின் அன்றாட நிகழ்ச்சிகளை ஆராய்ச்சி செய்வது தனக்கு நாளடைவில் பழக்கமாகி விட்டது என்கிறார் தனது வாழ்க்கை விளக்கத்தில். சிந்தனை   சுகம் தரும்.
          தினம் தினம் சிந்திக்க வேண்டுமா? நேரம் கிடைக்கும் போது சிந்திக்கலாமா? எந்நேரமும் சிந்திக்க வேண்டும். மற்ற வேலைகள் பாதிக்காதா? மற்ற பணிகளைச் செய்து கொண்டே சிந்தனை செய்ய முடியுமா? ஒன்றே பலவாகிய நாடகத்தில்(சுத்த அத்வைதம்). எந்த பணியைச் செய்வதும் அது இறையின் நிகழ்ச்சி தானே. அதனால் எந்தப் பணியிலும் இறையின் செயல்பாட்டினை அறிந்து கொண்டு மகிழலாமே.
             மனிதன் எண்ணுகின்றானே. அது சிந்தனை இல்லையா? எல்லோரும்தான் எண்ணுகின்றனர். எண்ணுவது சிந்தனை இல்லை. “சி;ந்தனையாளர்” என்று இந்த சமுதாயம் ஒரு சிலரை மட்டுமேதான் அழைக்கின்றது. எண்ணுவது சிந்தனையால் எல்லாருமே சிந்தனையாளர்களா? சிந்தனை ஆழ்ந்து இருக்க வேண்டும். விருப்பத்தோடு சிந்திக்க வேண்டும். விடையும், தெளிவும் கிடைக்கும் வரை சிந்திக்க வேண்டும். ஏன், எதற்கு, எப்படி என வினா எழ வேண்டும்.
             சிந்தனையாளருக்கு இயற்கையே ஆசானாகவும் வழிகாட்டியாகவும் விளங்குகின்றது. இயற்கை வழிகாட்டவில்;லை எனில் வேறு யார் வழிகாட்டுவது? சிந்தனையால் உள்ளொளி பெருகும்.
         சிந்தனையின் சிறப்பையும் முக்கியத்துவத்தையும் கருதிதான் வானொலி, தொலைக்காட்சி, செய்தித்தாள் போன்ற ஊடகங்களில் ஒவ்வொரு நாளும் சிந்திப்பதற்கான நிகழ்ச்சிகள் இடம் பெறுகின்றன.
             சென்னை வானொலி நிலையம் காலையில் குறளமுதம், பிறகு சான்றோர் சிந்தனை போன்ற நிகழ்ச்சிகள் ஒலி பரப்பி வருகின்றது. செய்தித் தாள்களில் ஆன்மிக சிந்தனை என்கின்ற தலைப்பிலே அன்றைய சிந்தனை விருந்து இடம் பெறுகின்றது.
         தொலைக்காட்சி வந்த பிறகு வானொலி கேட்பவரின் எண்ணிக்கை மிகமிகக் குறைந்து விட்டது. தொலைக்காட்சியிலும் சிந்தனைக்கான நிகழ்ச்சிகள் உண்டு. அவை காலை 6.00 மணிக்கு மட்டுமேதான் இடம் பெறும். அப்படி வானொலி கேட்பவர்களில் சான்றோர் சிந்தனை, குறளமுதம், போன்ற நிகழ்ச்சிகளைக் கேட்பவர்கள் மிக மிகக் குறைவாகத்தான் இருப்பர். ஏனெனில், காலையில் ஆறு மணிக்கு படுக்கையிலிருந்து எழுந்திருப்பதே அரிது. அப்படி எழுந்தாலும் அலுவலகம் புறப்படுவதற்கே நேரம் சரியாக இருக்கும். அவ்வாறு வாழ்க்கை இயந்திரமயமாகிவிட்டது.
           ஊடகங்கள் மூலமாக சிந்திக்க வைக்கின்ற நிகழ்ச்சிகளை ஒவ்வொருவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
         எழும்போதே சிந்தனையில் அந்த நாளைத் துவக்கினால் அந்த நாள் முழுவதும் அறிவு அதே சிந்தனையில் விழிப்புடன் இருக்கும். அதுதான் அறிவிற்கு விருந்து. அதில் சுகம் உண்டு.   அதோடு மட்டுமல்லாது சிந்தனையை வளர்க்கக் கூடிய நூல்களையும் தினமும் படிக்கும் பழக்கம் வேண்டும்.
          ஊடகங்களில் ஒன்றுதான் இணையதளமும். இதன் மூலம் அறிவிற்கு சிந்தனை விருந்து அளிக்கவே “அறிவிற்கு விருந்து” என்கின்ற பகுதி தொடங்கப்பட்டுள்ளது. அந்த விருந்தினை உண்டு களிப்பதற்கு அன்புமிக்க பார்வையாளர்களாகிய உங்களது ஒத்துழைப்பு மிக மிக அவசியம். நீங்கள் பயன் பெற வேண்டும். உங்கள் நண்பர்களுக்கும் இந்த ‘Prosper Spiritually’ (ஆன்ம செழிப்புறு) இணைய தள சத்சங்கத்தைப்(Satsangh through Website) பற்றித் தெரிவியுங்கள். உங்கள் கருத்துக்களையும், படித்துப் பயன் பெற்றதையும் (feed back) தயவு செய்து தெரிவிக்கவும்.
     வாழ்க மனித அறிவு, வளர்க மனித அறிவு.
    வாழ்க அறிவுச் செல்வம். வளர்க அறிவுச்; செல்வம்.
    *****
    வாழ்க அறிவுச் செல்வம்                                                             வளா்க அறிவுச் செல்வம்

    Loading

  • சிந்தனை விருந்து என்றால் என்ன?1/2

    1

    வாழ்க மனித அறிவு                                                                        வளர்க மனிதஅறிவு

                                       சிந்தனை விருந்து என்றால் என்ன?1/2

      06-11-2014

    FFC – 10

     

       உணவு, விருந்து என்றால் என்ன என்று எல்லோருக்கும் தெரியும். உணவு என்பது சாதாரணமானது. அன்றாடம் சாப்பிடுவது. விருந்து என்றால் சிறப்பான உணவு(FEAST, DINNER). பிறந்தநாள். திருமணம். வரவேற்பு போன்ற நிகழ்ச்சிகளுக்கு விசேஷமாக அளிக்கப்படும் உணவை விருந்து எனக் கூறுகிறோம்.
         உணவு எதற்காக? உடலுக்கு உணவு அவசியம். வயிற்றுப் பசியினைப் போக்க உணவு அவசியம்.   எளிமையான. சத்துள்ள. சுகாதாரமான உணவு போதுமான அளவு. சரியான நேரத்தில் தேவை. விருந்தில் பல்வேறு வகையான சுவைமிக்க உணவு வகைகள் இருக்கும். விருந்து என்றாலே உணவுப் பண்டங்கள் அளவு(LIMIT) மீறியும் முறை(METHOD) மாறியும் இருக்கும். .
         விருந்தை விரும்பிச் சாப்பிடுவோம். உணவாக இருந்தாலும். விருந்தாக இருந்தாலும் சாப்பிட்ட நான்கு மணி நேரத்தில் சீரணமாகி சத்துக்கள் உறிஞ்சப்பட்டு சக்கை இருபத்து நான்கு மணி நேரத்தில் மலமாக வெளியேறும். இதனை யாவரும் அறிந்ததே.
           ஆனால் இங்கு நாம் சிந்தனை விருந்து என்கிறோம். இந்த விருந்து உடலுக்கா அல்லது அறிவிற்கா?   மண்ணாகப் போகின்ற உடலுக்கு மட்டும் உணவு அவசியம் என அறிந்திருக்கின்றோம்.   ஆனால் உடலைத் தவிர உயிர் இருக்கின்றது. உயிர் இருப்பதால் மனமும். அறிவும் இயங்குகின்றது. இந்த மூன்றிற்கும் உணவு அளிக்கப்படுவதில்லை.
             உயிர் அழிவதில்லை. உயிரை ஒட்டிய கருமையமும் (ஆன்மாவும்) அழிவதில்லை. அழியாத கருமையத்திற்கும் உணவு அவசியம்.   ஆனால் உணவு அளிப்பதில்லை. அழிகின்ற உடலுக்கு மட்டும் உணவு அளிக்கின்றோம். ஏன்?
           உயிரோ. கருமையமோ. அறிவோ கண்களுக்குத் தெரிவதில்லை. கண்களுக்குத் தெரியாத. வாய் இல்லாத ஒன்றிற்கு உணவு அவசியமா என ஐயம் எழலாம். அறிவிற்கும் உணவு அவசியம்தான். அதுவும் அது விருந்தாக இருக்க வேண்டும். வயிற்றுப் பசிக்கு உணவு அளவுடன் இருக்க வேண்டும். இல்லையெனில் அசீரணம் ஏற்படும்.   ஆனால் அறிவி்ற்கு விருந்து தேவையாய் இருக்கின்றது. இங்கே அளவு கிடையாது.
         ஏனெனில் எல்லையில்லா(infinite) இயற்கையின் ஆதிநிலையாகிய பேரறிவே மனித சிற்றறிவாக வந்துள்ளதால், அது தன்னை அறிந்து கொள்ள தெளிந்த தெளிவு பெறவேண்டும். அதற்கு தினந்தோறும் அறிவிற்கு விருந்துதான் அவசியம். தினந்தோறும் அறிவிற்கு அளிக்கப்படும் விருந்தால் அசீரணம் ஏற்படாது. மாறாக மேலும் மேலும் தெளிவினை அளித்து எப்படி வாழ வேண்டும் என் உறுதி செய்து அதுபோல் வாழ்ந்து இப்பிறவியிலேயே பிறவிப்பயனை நல்கிவிடும்.
             ஆறாவது அறிவின் சிறப்பே சிந்தனைதான். பேசுவது. எழுதுவது, படிப்பது. பட்டம் பெறுவது, இயற்கை வளத்தை வாழ்வின் வளமாக மாற்றுவது மட்டும் ஆறாவது அறிவின் சிறப்புகளல்ல.
               ஆறாவது அறிவு அறிய வேண்டியதை அறிய வேண்டும். அறிய வேண்டியது என்பது தனது மூலத்தை(Source), மூலத்திலிருந்து இன்று வரையுள்ள தன்னுடைய மாற்றமான, தன்மாற்றத்தை (Self realisation/God Realisation/Liberation/Perfection of Consciousness) அறிதலாகும். உடலுக்கு அவசியமான உணவை உட்கொள்ளும் போது அறிவுதான் சுவையை உணர்கின்றது.   ஆனால் தனக்கே தேவையான உணவு (அறிவிற்கு) கிடைப்பதில்லை.   ஆறாவது அறிவிற்கு தேவையான உணவுதான் சிந்தனையாகும். மற்ற உயிர்களுக்குச் சிந்திக்கத் தெரியாது.      ஆனால் மனிதன் சிந்திக்க முடியும். ஆனால் சிந்திப்பதில்லை.
     மனிதனும் சிந்திக்காமல் இருந்தால், ஐந்தறிவு விலங்கினத்திலிருந்து வந்த மனிதனுக்கும் விலங்கினத்திற்கும் வித்தியாசம் இல்லாமல் போய்விடும். உடல் வளர்ச்சிக்கும், நலத்திற்கும், வளத்திற்கும் உணவு அவசியம் என்பது போல் அறிவின் வளர்ச்சிக்கும், நலத்திற்கும், வளத்திற்கும் உணவு அவசியம்.   உருவமற்ற (அரூபமான) அறிவிற்குத் திட உணவையும், திரவ உணவையும் அளிக்க முடியாது. உருவமற்ற அறிவிற்கு உருவமற்ற உணவுதான் அளிக்க முடியும். அந்த உருவமற்ற உணவுதான் சிந்தனை.    
                                                             …… இதன் தொடர்ச்சியை நாளைச் சிந்திப்போம்.
    வாழ்க அறிவுச் செல்வம்                                                         வளா்க அறிவுச் செல்வம்

    Loading

  •   வேதாத்திரியம்ஒருபாரிஜாதமலர் 2/2

     வேதாத்திரியம்ஒருபாரிஜாதமலர் 2/2

    FFC-8

     4-11-2014

                    

     

    மனித வாழ்வு முழுமை அடைவதற்கு, இத்தனை பிறவிகளில் ஏற்படாத தெளிவு இப்போது அறிவிற்கு அவசியமாகின்றது. இதனை அறிவு விரும்பிக் கொண்டிருக்கின்றது. ஆனால் மனிதன் அதனை அறியாமல், “மனம் போன போக்கெல்லாம் போக வேண்டாம்”; என்கின்ற அறிவுரை இருந்தும் மனம் போன போக்கெல்லாம் போய்க்; கொண்டு அல்லலுறுகிறான்.
    மனிதன் விரும்புவதெல்லாம் எதுவாக இருக்க வேண்டும்? உடல் நலம், நீளாயுள், நிறைசெல்வம், உயர்புகழ், மெய்ஞானம் ஆகிய ஐந்து வளங்களையும் மனிதன் விரும்புவதாக இருக்க வேண்டும். இவற்றில் முதல் நான்கு கிடைத்து விடலாம். ஐந்தாவது வளம் கிடைப்பதற்கு அறிவு மேம்பட வேண்டும். அந்த அறிவு மேம்பட, அறிவிற்கு சிந்தனை ஆற்றல் வளர வேண்டும். சிந்தனையை அறிவின் செல்வமாக்கிடவேண்டும்.
    அதற்கு ‘வாழ்க மனித அறிவு. வளர்க மனித அறிவு. வாழ்க அறிவுச் செல்வம். வளர்க அறிவுச் செல்வம்’ என்கின்ற எண்ண ஆதரவு (Slogan)கோருதலின் வாயிலாக மனித எண்ணங்களின் ஆதரவினைத் திரட்ட வேண்டும். பாரிஜாத மலர் விரும்பியதையெல்லாம் கொடுக்கும் என்பதுபோல், இயற்கைக்கு புறம்பாக இல்லாமல், நியாயமான, இறுதியாக மனிதன் விரும்ப வேண்டிய மெய்ஞ்ஞானத்தை அடைய, மனித அறிவு தெளிந்த நல்லறிவாவதற்கு வேண்டிய விருந்திற்கெல்லாம் விருந்தினை அளிக்க வல்லது வேதாத்திரியம்.
    மனிதன் தன்னிடம் எழும் எல்லா ஐயங்களுக்கும், புரிதலையும் தெளிவையும் விரும்புவான். அந்த விரும்புதலை அள்ளித் தர வல்லதுதான் வேதாத்திரியம். ஆகவேதான் இதனை ஒரு பாரிஜாத மலர் என்கிறோம். விரும்பியதையெல்லாம் அளிக்கும் பாரிஜாத மலர் இன்று வேதாத்;;;திரியத்தின்; அருமை பெருமைகளைக் கூறி அறிவுத் தேனீக்களை ஈர்க்க, எடுத்துச் சொல்வதற்கு உவமையாக இருந்துள்ளதை நினைக்கும் போது உள்ளம் பூரிக்கின்றது. இப்போது வேதாத்;;;;;திரியம் மெய்ஞான மலராகிவிட்டது.
    இதுவரை எத்தனையோ ஆன்மீக மலர்களை காலத்திற்கேற்ப மனித அறிவின் நிலைகளுக்கேற்ப இயற்கை மலரச்; செய்துள்ளது. ஆனால் இன்று பூக்களிலேயே சிறந்த பூவான, விரும்பியதைக் கொடுக்கும்; பாரிஜாத வேதாத்திரிய மலரை அளித்துள்ளது இயற்கையின் கருணையன்றோ. வேதாத்திரியத்தி;ல் என்னென்ன உள்ளன என்று கேட்பதைவிட, உங்களுக்கு எது தேவையோ அது இருக்கின்றதா என்று கேளுங்கள். இருக்கும். தட்டுங்கள் திறக்கப்படும். இது மிகையல்ல. வேதாத்திரிய பாரிஜாத மலரில் கிடைக்கும் ‘அறிவுத் தேன்’ நான்கு வகைகளில் கிடைக்கின்றன.
    1) கடவுள் என்பவர் யார்? இயற்கை என்பது எது?
    2) உயிர் என்பது என்ன?
    3) இன்பதுன்பம் என்பது என்ன?
    4) வறுமை ஏன் வருகின்றது?
    ஆகிய நான்கு வினாக்களுக்கான விடைகளின் வாயிலாக, அறிவுத் தேனீக்கள் வேதாத்திரிய பாரிஜாத மலரிலுள்ள தேனை நான்கு வழிகளில் அருந்தலாம். இது தவிர வேறு எது மனிதஅறிவிற்குத் தேவையாக இருக்க முடியும்? இந்த நான்கும் மகோன்னத கேள்விகள். எனவே இந்த மகோன்னத கேள்விகளுக்குத் தெளிவைப் பெறுவது என்பது, இதுவரை அறிவு விரும்பியதன்றோ! இது வரை இது மறைமுக விரும்புதலாக (latent desire) இருந்து வந்தது. ஆகவேதான் வேதாத்திரியம் ஒரு பாரிஜாத மலர் என புகழ் ஏத்தி வணங்குகிறோம். வாழ்க வேதாத்திரியம். வளர்க வேதாத்திரியம்.
    மலர் என்று ஒன்று இருந்தால் அதிலுள்ள தேனை அருந்துவதற்காக தேனீக்கள் வந்து மொய்ப்பதை போன்று இன்று மலா்ந்துள்ள பாரிஜாத மலரான வேதாத்திரியத்தில் உள்ள அறிவுத் தேனை பருக அறிவுத் தேனீக்கள் ஏற்கனவே மொய்த்துக் கொள்ள ஆரம்பித்துவிட;டன. ஆகவே இதனை கண்ணுறும் அனைவரும் வேதாத்;திரி அறிவுத்தேனைப் பருக ஓடோடி வாருங்கள். அனுபவித்துவிட்டு மற்றவர்களையும் பாமர அறிவிலிருந்து அறிவுத்தேனீயாக்க வழியைக்காட்டி புண்ணியத்தைச் சேர்த்திடுங்கள்.
    வாழ்க வேதாத்திரியம், வளர்க வேதாத்திரியம்;
    வாழ்க மனித அறிவு, வளர்க மனித அறிவு.
    வாழ்க அறிவுச் செல்வம், வளர்க அறிவுச் செல்வம்.
    வாழ்க உலக மக்கள் அனைவரும்.
    வாழ்க உலக அமைதி;. வருக உலக அமைதி விரைவில்.
    *****

     

    Loading