2015

Yearly Archives

  • சிந்திக்க அமுத மொழிகள்- 119

    வாழ்க மனித அறிவு                         வளர்க மனித அறிவு

     

    23-10-2015—வெள்ளி

    “செயலொழுக்கம், சேவை, சிந்தனை, சீர்திருத்தம், சிக்கனம் இவை ஐந்தும் செழிப்பான வாழ்வளிக்கும்”

    …..வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

    பயிற்சி—
    1) சீர்திருத்தம் எவ்வாறு செழிப்பான வாழ்வளிக்கின்றது?

    வாழ்க அறிவுச் செல்வம்                        வளா்க அறிவுச் செல்வம்

    Loading

  • சிந்திக்க வினாக்கள்-118

    வாழ்க மனித அறிவு                           வளர்க மனித அறிவு

     

    22-10-2015 – வியாழன்

    (அ) நிறை மனம் என்றால் என்ன?
    (ஆ) அது எப்போது வரும்?

    வாழ்க அறிவுச் செல்வம்               வளர்க அறிவுச் செல்வம்

    Loading

  • FFC – 129-அறிவிற்கு விருந்து

    வாழ்க மனித அறிவு                                    வளர்க மனித அறிவு

     அறிவிற்கு விருந்து

    FFC – 129

    21-10-2015—புதன்

     

    FFC-127-அவ்வையார்- இனிது

     

    அவ்வையார் கூறும் நான்கு இனியவைகளாவன:
    1) ஏகாந்தம் இனிது
    2) ஆதியைத் தொழுதல்
    3) அறிவினரைச் சோ்ந்திருத்தல்
    4) அறிவுள்ளோரைக் கனவிலும் நனவிலும் காண்பது.

    இப்போது சிந்திப்போம்,
    1) மனவளக்கலையால் ஏகாந்தத்தில் இருக்க முடிகின்றதல்லவா!
    2) மனவளக்கலையால் ஆதியைத் தொழுகிறோமல்லவா! — துரியாதீத தவம் இயற்றுகிறோமல்லவா!

    ஆகவே மனவளக்கலைஞர்களாகிய நாம் நம் சந்தோஷச் செய்தியினை மனவளக்கலை தந்த மாமனிதர் வேதாத்திரி மகரிஷி அவர்களுக்கு தெரிவிப்போம்.

    FFC-128-18-10-15-சிந்தையை அடக்கியே-meditation

     

    3) நாம் யாரோடு சேர்ந்திருக்கிறோம்? ‘மாதா பிதா குரு தெய்வம்’ என்பதில் குருவைக்காட்டும் நிகழ்வு சமுதாயத்தில் விடுபட்டு போய் இருந்த நிலையில் தெய்வத்தை காட்டும் குருவோடு இணைந்திருக்கிறோம். அதுவும் அறிவிற்கு இயலை ஏற்படுத்திக் கொடுத்துள்ள அறிவியளாலா் வேதாத்திரி மகரிஷி அவர்களோடு சோ்ந்திருக்கிறோம்,

    4) நாம் யாரைக் கனவிலும் நனவிலும் காண்கிறோம்? அவ்வையார் கூறும் அறிவினரான வேதாத்திரி மகரிஷி அவர்களை கனவிலும் நனவிலும் கண்டுகொண்டே இன்பமுறுகிறோம். எப்படி? மகரிஷி அவர்களின் கருத்துக்களை தினந்தோறும், மணி தோறும், ஏன் நொடிக்கு நொடி சிந்தித்து வருகிறோமல்லவா!
    இத்தருணத்தில் நம் நவயுக பிரம்மரிஷியான வேதாத்திரி மகரிஷி அவர்களுக்கு, பண்பேற்றம் பெற்று வருவதன் மூலம் நமது உளங்கணிந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

    FFC-128-129-குருவின் தொடர்பு
    இதற்கெல்லாம் அறிவிற்குப் பசி வேண்டும். வயிற்றுப் பசியைப் போக்குவதற்கு உணவு தரப்படுகின்றது. உணவால் உடல் மட்டுமே வளர்கின்றது. உடல் மட்டும் வளர்ந்து பயனில்லை. அறிவும் வளர வேண்டும்.(ஆளும் வளரனும். அறிவும் வளரனும் – திரைப்படப்பாடல் வரி) அறிவு வளர்வதற்கு உணவு அவசியம். அதுவும் விருந்தாக இருக்க வேண்டும். ஏன்? விருந்து என்றால் பல உணவு வகைகள் இருக்கும். ருசி ஊட்டப்பட்டிருக்கும். நாவிற்கு மிகச்சுவையாக இருக்கும். ஆனால் தினந்தோறும் வயிற்றுக்கு விருந்து அவசியமில்லை. ஒரு காரணம், எல்லோருக்கும் தினந்தோறும் விருந்து அருந்த வசதி இருக்காது. மற்றொரு காரணம், தினந்தோறும் விருந்து அருந்தினாலும் வயிற்றுக்கு உபாதைகள் வரும். சலிப்பும் வரும்.
    அறிவிற்கு அளிக்கும் உணவு விருந்தாகவே இருக்க வேண்டும். விருந்து சாப்பிடுவதில் அறிவிற்கு சலிப்பே வராது. வயிற்றுக்கு அதிக உணவு அளித்தால் அசீரணம் வருவது போல் அறிவிற்கு விருந்து அளிப்பதில் எந்தவித கெடுதலும் வர வாய்ப்பில்லை. மாறாக அறிவு மேம்பட்டுக் கொண்டே வரும். பல்லாயிரம் பிறவிகள் தோறும் அறிவிற்கு விருந்தில்லாமல் அறிவு இளைத்து மனிதத்தில் பலவீனப்பட்டுள்ளது. ஆகவேதான் பரிணாமக்கசடான விலங்கினப் பண்பையே வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றது மனித அறிவு.
    ஆகவே சரியான அறிவினரைச் சோ்ந்து மதித்து நடந்தால், அறிவிற்கு எப்போதும் விருந்தையே அருந்துவதில் பஞ்சம் இராது.
    அட்சய பாத்திரம் போல் அறிவிற்கு விருந்து தடையின்றி எந்நேரமும் கிடைத்துக் கொண்டே இருக்கும். இது நிச்சயம்.
    அறிவினரைச் சோ்தலால் அறிவிற்கு விருந்து கிடைப்பதால் அது இனிதாகத்தானே இருக்கும்.
    அறிவினரைச் சேர்தலால் எவ்வகையான விருந்து அறிவிற்கு கிடைக்கும்?
    அறிவிற்கு எதெல்லாம் விருந்தாக இருக்க முடியும் என்பதனை 25-10-2015 ஞாயிறன்று அறிவோம்.

    வாழ்க மனித அறிவு                       வளர்க மனித அறிவு

          அன்பு வேண்டுகோள்

    வாழ்க வளமுடன்

    உங்கள் கருத்துக்களை இணையதளத்தில் பதிவு செய்ய புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ள ‘உங்கள் கருத்துக்கள்’ பகுதியில்(click here)பதிவு செய்யவும்.

    நன்றி,

    வாழ்க வளமுடன்

     

     

     

     

    Loading