September 2016

Monthly Archives

  • சிந்திக்க அமுத மொழிகள்- 209

    வாழ்க மனித அறிவு         வளர்க மனித அறிவு

     

    02-09-2016—வெள்ளி

    ‘நிலையான பாறையால் புயல்காற்றுக்கும்  அசையாமலிருக்க முடிவதுபோல்  ஞானிகள் புகழ்ச்சிக்கும், இகழ்ச்சிக்கும் அசைவதில்லை.

    . . . புத்தரின் போதனைகள்.

    பயிற்சி—
    1) எது ஞானிகளை புகழ்ச்சிக்கும் இகழ்ச்சிக்கும் அசையாமல் இருக்கச் செய்கின்றது?
    2) புத்தர் கூறுவது ஞானிக்கு மட்டுமேவா பொருந்தும் ?
    3) இந்நிலை அவசியமா வாழ்வில்?
    4) மனவளக்கலையில் எது புகழ்ச்சிக்கும், இகழ்ச்சிக்கும் அசையாமல் இருக்கச் செய்கின்றது?

    வாழ்க அறிவுச் செல்வம்                 வளா்க அறிவுச் செல்வம்


    Loading

  • சிந்திக்க வினாக்கள்-207

    வாழ்க மனித அறிவு               வளர்க மனித அறிவு

     

    01-09-2016 – வியாழன்

    உணர்ச்சி வயம் என்றால் என்ன? ஏன் உணர்ச்சிவயம் மனிதஅறிவின் குறைபாடாகக் கருதப்படுகின்றது? அறிவு உணர்ச்சிகளை உணர்வதற்காகத்தானே உள்ளது. அவ்வாறு இருக்கும்போது ஏன் அறிவு உணர்ச்சி வயமாகக்கூடாது?

    வாழ்க அறிவுச் செல்வம்                      வளர்க அறிவுச் செல்வம்


    Loading