May 2020

Monthly Archives

  • சிந்திக்க அமுத மொழிகள்-290

    வாழ்க மனித அறிவு!                                                             வளர்க மனித அறிவு!!

    சிந்திக்க அமுத மொழிகள்-290

     

    02-05-2020-சனி

    தெய்வநிலை அறிந்தோர்கள் கோடி என்றால்,

    தெளிவாக அறிவறிந்தோர் ஒருவராகும்.”

                                            . . . . .    வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

     பயிற்சி:

    1. என்ன கூறுகின்றார் மகரிஷி அவர்கள்?
    2. தெய்வநிலை அறிந்தோர்களில் இருவகை உள்ளனர் என்பதுபோலல்லவா கூறுகின்றார்?
    3. தெய்வம் ஒன்றுதான். அவ்வாறிருக்கும்போது தெய்வநிலை அறிந்தவர்களில் இரண்டு வகையினர் எவ்வாறிருக்க முடியும்?    
    4. உயிரை உணர்ந்தவர்கள் தான் தெளிவாக தெய்வத்தை அறிந்தவர்களோ?
    5. தெளிவாக அறிவறிந்தவர் ஒருவராகும் என்பதால் அறிவே தெய்வம் என அறிந்தவர்கள்தான் கோடியில் ஒருவரா?
    6. அப்படியானால் வேதாத்திரி மகரிஷி அவர்களின் சீடர்களாகிய நாம் கோடியில் ஒருவரா?  அந்த புண்ணியம், பெரும்பாக்கியம்  செய்தவர்கள்தானே  நாம் அனைவரும்?! அவர் கூறும் ஒருவர் இப்போது பலராகிவருகின்றனரா அவருடைய போதனையும்  சாதனையும்  கொண்ட மனவளக்கலையால்?
    7. என்ன சொல்ல வருகிறார் மகரிஷி அவர்கள்? அதனை அறிய ஞானக்களஞ்சியம் பாடல் எண். 1693 ஐ வாசிக்கவும்.
    8. வேறுயாராவது இது போன்று(in this context)  கூறியுள்ளனரா? 

    வாழ்க வளமுடன்!

                       

     வாழ்க அறிவுச் செல்வம்!                         வளர்க அறிவுச் செல்வம்!!


    அன்புடையீர்!  தங்களின் மேலான கருத்துக்களை கருத்துரைக்க பகுதிக்கு அனுப்ப   Click the link below

    https://www.prosperspiritually.com/contact-us/

     வாழ்க அறிவுச் செல்வம்!                                                வளர்க அறிவுச் செல்வம்!!   


     

       

     

    Loading

  • சிந்திக்க அமுத மொழிகள்-289

    வாழ்க மனித அறிவு!                                                                  வளர்க மனித அறிவு!!

    சிந்திக்க அமுத மொழிகள்-289

                                                                                                                          01-05-2020-வெள்ளி

             புலனில்  வாழ்க்கை இனியுண்டோ? நம்மி லந்த

             வாழ்க்கை இனியுண்டோ’’ 

    . . . . .    மகா கவி பாரதியார்.

    பயிற்சி:

    1. என்ன கூறுகின்றார் மகா கவி பாரதியார்?
    2. இந்த அமுத மொழியினைக் கண்ணுறும்போது நமது சிந்தனை எங்கு செல்கின்றது?
    3. புலனில் வாழ்க்கை என்றால் என்ன பொருள்?
    4. இனியுண்டோ என்பதனால் புலனில் வாழ்க்கை விரும்பத்தக்கதல்ல என்றுதானே கூறுகிறார் மகா கவி? புலனில் வாழ்க்கையால் துன்பம் என்கிறார்தானே?
    5. அப்படியானால் எந்த வாழ்க்கை வாழ வேண்டும் என்கிறார்?
    6. பாரதியாருக்கு 19 நூற்றாண்டுகளுக்கு முன்னர் அவதரித்த ஐயன் திருவள்ளுவர் புலனில் வாழ்க்கையின் தொடர்பாக என்ன கூறியுள்ளார்?
    7. திருவள்ளுவர் புலன் வழி வாழ்க்கையைப் பற்றி கூறி 19 நூற்றாண்டுகள் கடந்தும்  மக்கள் மாறினார் இல்லை என்பதால்  மகா கவி பாரதியாரும் புலன் வழி வாழ்க்கையைப் பற்றி கூறுகிறார்?   
    8. மேலும் கூறுகிறார் “நம்மில் புலனில் வாழ்க்கை இனி இருக்குமா? என வினவுகிறார்?
    9. இதனைக் கூறி ஒரு நூற்றாண்டு ஆகின்றது? அவர் கூறிய புலனில் வாழ்க்கை இன்னமும் நடக்கின்றதா? இல்லை மாறிவிட்டதா சமுதாயம்?
    10. புலன்கள் ஐந்து இருக்கின்றன. வாழ்வதற்குத்தானே அப்புலன்கள் உள்ளன!  புலனில் வாழ்க்கை கூடாது என்றால் எவ்வழி  வாழ்க்கை வாழ வேண்டும்?
    11. அவ்வழி வாழ்க்கைக்கு 21 நூற்றாண்டிலாவது ஏதாவது அறிகுறி தோன்றியுள்ளதா?
    12. இதற்கு இறைநேசச் செல்வர்கள், உலக நல ஆர்வலர்களின் பதில் என்ன?

                        வாழ்க அறிவுச் செல்வம்!                         வளர்க அறிவுச் செல்வம்!!


    அன்புடையீர்!  தங்களின் மேலான கருத்துக்களை கருத்துரைக்க பகுதிக்கு அனுப்ப   Click the link below

    https://www.prosperspiritually.com/contact-us/

     வாழ்க அறிவுச் செல்வம்!                                                வளர்க அறிவுச் செல்வம்!!   


     

       

     

    Loading