June 2020

Monthly Archives

  • சிந்திக்க வினாக்கள் – 307

    வாழ்க மனித அறிவு!                                                               வளர்க மனித அறிவு!!

    சிந்திக்க வினாக்கள் – 307

                                                                                                                                                                         

                                                22-06-2020 – திங்கள்

     

    அயராவிழிப்புணர்வு

     பயிற்சி:

    1. விழிப்பு’ என்றால் என்ன?
    2.  ‘உணர்வு’ என்றால் என்ன?
    3.  ‘விழிப்பு’ ’உணர்வு’ என்கின்ற இரு சொற்களையும் சேர்த்து ‘விழிப்புணர்வு’ என்று கூறுவதன் பொருள் என்ன?
    4.  விழிப்புணர்வை வகைப் படுத்த முடியுமா? முடியும் என்றால் எத்தனையாக வகைபடுத்தலாம்?
    5. அலட்சியம், உணர்ச்சிவயம் எவ்வகை விழிப்புணர்வைச் சேர்ந்தவை எனலாம்?
    6. அயர்’ என்கின்ற சொல்லின்  பொருள் என்ன?  ‘விழிப்புணர்வு’, ‘அயரா’ என்கின்ற இரு சொற்களைச் சேர்த்து அயரா ‘விழிப்புணர்வு’  என்கின்றபோது அதன் பொருள் என்ன?
    7.  விழிப்புணர்வு மனிதனுக்கு அவசியமா? எந்தவகை விழிப்புணர்வு அவசியம்? ஏன் அவசியம்?
    8.  பேராசை, சினம், கவலை எந்தவகை விழிப்புணர்வைச் சேர்ந்தவை?
    9. AWARENESS is GOD’ என்கின்றன சில ஆங்கில ஆன்மீக நூல்கள். இதற்கு நீங்கள் உடன்படுகீறீர்களா?  ஆம் என்றால் எப்படி?
    10.  விழிப்புணர்வு அயர்ந்துவிட்டால் ஏற்படுவது நன்மையாக இருக்குமா?
    11.  செயலுக்கு விளைவு உண்டு என்கின்ற பிரதான உண்மையில் ‘விளைவறிந்த விழிப்பு நிலை’ எனப்படுவது அயரா விழிப்புணர்வாகுமா?
    12.  ஞானமும் அயராவிழிப்புணர்வும் இரண்டும் ஒன்றா? அல்லது வெவ்வேறா? ஒன்று எனில் எப்படி ஒன்றாகும்?
    13.  அயரா விழிப்புணர்விற்கு அடிப்படையான, அவசியமான மனிதத்தன்மைகள்/குணங்கள் என்னென்ன? அவற்றில் முதன்மை வகிப்பதை சொல்ல முடியுமா?
    14.  நுண்மாண் நுழைபுலனிற்கு அயரா விழிப்புணர்விற்கும் தொடர்பு உண்டா? உண்டு எனில் என்ன தொடர்பு அது?
    15.  அயராவிழிப்புணர்வு யாருக்கு/எதற்கு இருக்க வேண்டும்?
    16.  இப்பிரபஞ்சத்தில் எது அயரா விழிப்புணர்வோடு இருக்கின்றது? இருக்க முடியும்? மனிதனில் எது அயரா விழிப்புணர்வோடு இருக்க வேண்டும்? ஏன்?
    17.  எந்த நிலை அயரா விழிப்பு நிலை?
    18. எந்த ஒன்று மனிதனில் அயராவிழிப்புணர்வோடு இருந்தால் அவர் பிரம்மஞானியாவார்?

       

         குறிப்பு:

        அன்புடையீர்!

                                   வாழ்க வளமுடன்! 

    • அயரா விழிப்புணர்வு பொருள் பற்றி சிந்திப்பதற்கு 18 வினாக்கள் மட்டுமில்லை, இதற்கு மேலும் இருக்கின்றன. 
    • ஒவ்வொரு வினாக்களிலும் துணை வினாக்கள் மறைந்து இருக்கலாம்/இருக்கின்றன.  (இப்பயிற்சி வினாக்களில்  மட்டுமில்லை.  ஞானிகளின் அருளுரைகளிலும், அருள் உரைநடைகளிலும், கவிகளிலும்     வரிகளுக்கு இடையே வரிகள் (hidden lines in between lines) மறைந்திருக்கலாம்;  இருக்கும். எனவே வரிகளுக்கு இடையேயும் வாசிக்க வேண்டும்(We must read in between lines)  வாசிக்கும்போதே அவற்றையும் சேர்த்துப் படித்து பொருள் தெரிந்துகொண்டு  மகிழவேண்டும். மகிழ்வது மட்டுமல்ல தெளிவிலும் தெளிவு பெறவேண்டும்.    We must be agile in understanding the theory of Gnanis’ (particularly Sri Vethathri Maharishi)  writings/findings. Please remember  the agility you have in solving the simultaneous equation in Maths in Schools and derivations. The agility may be again used here also.
    •  பயிற்சியின்போது அந்த துணை வினாக்கள் உங்கட்குள் உதிக்குமானால் அவற்றையும் சேர்த்து சிந்தித்து விடை கண்டு மகிழலாம்.
    • பிறர்க்கு எடுத்தும் கூறலாம். அதுவே அறிவுத் தொண்டாகும். வினைகள் தீர்வதற்குள்ள பல வழிகளில்/பயிற்சிகளில் ஒன்று நம் குருநாதர் போன்று தொண்டுகளில் அவசியமான, சிறப்பானதான தன்முனைப்பில்லா அறிவுத்தொண்டு செய்து உலகநலத்தொண்டராக  திகழ்வதாகும்.
    • திருவேதாத்திரியம் செழிப்புடன் வளர்வதற்கு ஒவ்வொரு பயிற்சியாளரின் சிந்தனைச்செல்வமும் வளரவேண்டும்; சொல்லொனா அளவிற்கு வளர்ச்சி அடைய வேண்டும்.

           வாழ்க திருவேதாத்திரியம்!  வளர்க திருவேதாத்திரியம்!!

              

        அன்புடையீர்!  தங்களின் மேலான கருத்துக்களை கருத்துரைக்க பகுதிக்கு அனுப்ப   Click the link below

    http://www.prosperspiritually.com/contact-us/

           வாழ்க அறிவுச் செல்வம்!   வளர்க அறிவுச் செல்வம்!!


  • சிந்திக்க வினாக்கள் – 306

    வாழ்க மனித அறிவு!                                                               வளர்க மனித அறிவு!!

    சிந்திக்க வினாக்கள் – 306

                                                                                                                                                                            21.06.2020 –  ஞாயிறு.

    6 ஆவது சர்வதேச யோகா தினம்:  21.06.2020.

     

    வாழ்க சர்வதேச யோகா தினம்!    வளர்க சர்வதேச யோகா தினம்!
    வாழ்க சர்வதேச யோகா தினம்!     வளர்க சர்வதேச யோகா தினம்!
    வாழ்க சர்வதேச யோகா தினம்!     வளர்க சர்வதேச யோகா தினம்!

     

    வாழ்க வையகம்!  வாழ்க வளமுடன்!!

     

    வினா: திருவேதாத்திரியம் உலக மக்களுக்கு என்னென்ன அளித்துக்கொண்டிருக்கிறது? 

    விடை:

    1)    உடல் நலத்திற்கு,  மனவளத்திற்கு,  மனிதனுக்கும் இறைக்கும் புனித இணைப்பினை(Yoga is bridging Jeevathma and Paramathma) ஏற்படுத்துவதற்கு மனவளக்கலை யோகாவை அளிக்கின்றது. 

    2)    உடல் நலத்திற்கு எளியமுறை உடற்பயிற்சி அளிக்கின்றது.

    3)    முதுமையைத் தள்ளிப்போடுவதற்கு காயகல்ப பயிற்சியிளை அளிக்கி்ன்றது.

    4)    மனவளத்திற்கு தவப்பயிற்சியினை அளிக்கி்ன்றது.

    5)    மனிதனின் தரத்தை உயர்த்தும் தெய்வீகப் பயிற்சியான தற்சோதனை அளிக்கின்றது.

    6)   அறிவின் இருப்பிடத்தை தெரிவிக்கின்றது.

    7)   அறிவின் பயணத்தை, தன்மாற்றத்தைத் தெரிவிக்கின்றது.

    8)   அறிவின் இயக்கத்தைத் தெரிவிக்கின்றது.

    9)    துணிந்து தெய்வம் அரூபமான வெட்டவெளி என்கின்றது.

    10)   வெட்டவெளி சக்தியில்லையானால் வேறு எந்தப்பொருள் வலிது என வினா எழுப்பியுள்ளது.

    11)   வெட்ட வெளி ஒன்றுமில்லாதது என நினைக்கப்படும் நிலையில் வெட்டவெளிக்கு தரங்களையும், திறன்களையும் கூறுகின்றது.

    12)   ‘துணிந்துரைப்போம் அறிவே தெய்வம்’ என்கின்றது.

    13)   ஆன்மீகத்தையும் அன்றாட வாழ்க்கையையும் இணைத்துள்ளது.

    14)   வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்குகின்றது.

    15)  ஒழுக்கம் உயிரைவிட மேலானது என்பதனை வலியுறுத்தி செயல்படுத்துவதற்கு இரண்டொழுக்கப் பண்பாட்டினைத் தந்துள்ளது.

    16)  ஒழுக்கம் பழக்கமாகிட, கல்வியில் ஒரு அங்கமாக ஒழுக்கப்பழக்கறிவை சேர்த்துள்ளது.

    17)  உயர் புகழ் அளிக்கக் கூடிய தொண்டிற்கு நல்வாய்ப்பினை அளித்துள்ளது.

    18)  அறிவு தனது பூர்வீகச் சொத்தான அமைதியினை அனுபவிக்க மனவளக்கலைலைய வடிவமைத்துள்ளது.

    19)  உலக சமாதானத்திட்டங்களை அளித்துள்ளது.

    20)  சமுதாயச் சிக்கல்களை எடுத்துரைத்து, அதற்கான தீர்வுகளைக் கூறுகின்றது.

    21)  தனிமனிதன், சமுதாயம், இயற்கை ஆகிய மூன்றிணைப்பைக் கருத்தில் கொண்டு ஆலோசனைகளைக் கூறுகின்றது.

    22)  போரில்லா நல்லுலகத்திற்கு வழிகாட்டுகின்றது.

    23)  ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்கின்ற உண்மையை எடுத்துரைக்கின்றது.

    24)  ஒன்றே பலவாகியது என்கின்ற ஒருமை இயலைத் தந்துள்ளது.

    25)  தனிமனிதனையும் உலகையும் உய்வித்து வாழவைக்கும் ‘வாழ்க வையகம். வாழ்க வளமுடன்’ என்கின்ற தாரக மந்திரத்தை அருளியுள்ளது.

    26)  மனிதன் சிந்தனையை வளர்த்துக் கொண்டிருக்கின்றது

    27)  மனிதனின் அறிவாட்சித்தரத்தை வளர்த்துக் கொண்டிருக்கின்றது.

       இன்னும் எவ்வளவோ சொல்லிக் கொண்டே போகலாம். திருவேதாத்திரியம், Infiniteஎல்லையற்றதைப் பற்றிய விஞ்ஞானத்தைத் தருவதால்,      திருவேதாத்திரியத்தில் என்னென்ன கூறப்பட்டிருக்கின்றன எனக் கேட்டால் பட்டியல் எல்லையற்று நீண்டு கொண்டே போகும் என்பதால்,    அதற்கு பதிலாக, ஒன்றைக் குறிப்பிட்டு ‘இது பற்றி ஏதாவது கூறப்பட்டிருக்கின்றதா’ எனக் கேட்டால்,    ‘இருக்கின்றது’ என்கின்ற பதிலைத்தரும் எடுக்க, எடுக்க, அள்ள, அள்ளக் குறையாத அட்சய பாத்திரமாக திகழ்கின்றது திருவேதாத்திரியம். ஏனெனில் பிரபஞ்ச களத்தில் பிறந்தது திருவேதாத்திரியம். தாய்த்திரு நாட்டின் புகழைக்கூறும் ‘என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்’ என்கின்ற திரைப்பாடல் வரியைப் போன்று என்ன வளம் இல்லை, இந்த மனவளத்தைப் பெருக்கும் மனவளக்கலை அருளியுள்ள இந்த திருவேதாத்திரியத்தில்’ என மகிழ்ச்சி பொங்கவே கூறுவர், ஐயமின்றி, இறையும்-மனமும் ஒன்றுபட்ட லட்சோப லட்ச பயனாளிகளான மனவளக்கலைஞர்கள்.

     வாழ்க திருவேதாத்திரியம்!   வளர்க திருவேதாத்திரியம்!!

    வாழ்க வையகம்!              வாழ்க வளமுடன்!!


  • சிந்திக்க அமுத மொழிகள்- 311

    வாழ்க மனித அறிவு!             வளர்க மனித அறிவு!!

     

    சிந்திக்க அமுத மொழிகள்- 311

    20.06.2020— சனி

    வாழ்வில்நமக்குசொந்தம்என்றுசொல்லக்கூடியசொத்துநம்செயல்களே

    ஜேம்ஸ் ஆலன்

    பயிற்சி:

      1. என்ன கூற விரும்புகிறார் அறிஞர் ஜேம்ஸ் ஆலன்?
      2. சொந்தம் என்றால் என்ன?
      3. சொந்தம், சொத்து, செயல்கள் ஆகிய மூன்றையும் ஏன் இணைத்தும்தன் கண்டுபிடிப்பை சமுதாயத்திற்கும் கூறுகிறார்?
      4. எப்படி மூன்றையும் இணைத்து கூற முடிகிறது அறிஞரால்? இதுவரை நாம் இவ்வாறு சிந்திக்கவில்லையே!   அறிஞர்கள்  மட்டும் தான் சிந்திக்க முடியுமாஇப்போது சிந்திக்கின்றோமே! அது எவ்வாறு சாத்தியமாகின்றது?
      5. வாழ்வில் வேறு சொந்தம் ஏதும் இல்லையா? அது பற்றி ஒன்றும் கூறவில்லையே!
      6. சொத்து என்றால் என்னநம்முடைய செயல் எப்படி சொத்தாகின்றது?
      7. நம்முடைய செயலை நம் சொத்து என்கிறார். சரிஒப்புக்கொள்கிறோம்செயல் புரிந்துதான் சொத்து சேர்க்க முடியும். ஆனால் நாம்  செயல் ஏதும் புரியாமலேயே நமக்கு ஒரு சொத்து இருக்கின்றது.   அந்த சொத்தில் எல்லோருக்குமே பங்கு உண்டு. அது எது
      8. நாம் செயல் புரியாமலேயே நமக்காக சொத்து ஒன்று காத்துக்கொண்டிருக்கின்றதுஅதனைத் தேடிக் கண்டுபிடித்து நமதாக்கிக் கொள்ள வேண்டாமா?!  அந்த சொத்தை  அனுபவிப்பது தானே நமது பிறப்புரிமை
      9. அதற்கு நாம் என்ன பெயர் சூட்டலாம்ஏற்கனவே பெயர் சூட்டியிருக்கிறோமா
      10. அறிஞர்களின் அமுத மொழிகளை அறிந்துகொண்டால் மட்டுமே போதாவாஅறிந்து கொண்டு மகிழ்வதே போதுமானதா?! இவ்வாறெல்லாம் சிந்திக்க வேண்டுமாஏன் சிந்திக்க வேண்டும்?
      11. இல்லையென்றால் இயல்பூக்க நியதியினை எவ்வாறு பயன்படுத்தி பயன் பெறமுடியும்?
      12. சுருக்கமாக, அமுதமொழிகளின் ஆழ்ந்து  ஆழ்ந்த புரிதலின் பயன்கள் என்ன? ஒன்றா? பலவாவாழ்க வளமுடன்!

     

    குறிப்பு: 

         அன்பர்களே வாழ்க வளமுடன்! 

    இந்தப் பயிற்சியில் இதுவரை 12 வினாக்கள் கேட்கப்பட்டுள்ளன.  இவ்வளவு வினாக்கள் மட்டும் தான் உள்ளனவா இப்பயிற்சியில் சிந்திப்பதற்கு என ஐயம் எழலாம். இதற்கு மேலும் வினாக்கள் இருக்கும்/இருக்கலாம்/இருக்கின்றன! ஒவ்வொரு வினாக்களுக்குள்ளும் பல துணைக்கேள்விகள் மறைந்திருக்கலாம் (hidden questions). இப்பயிற்சியினை செய்யும்போது மேலும் ஏதேனும் மறைந்துள்ள துணை வினாக்கள் தங்களுக்கு எழுந்தால் அவற்றையும் சேர்த்து சிந்தித்து விடைகண்டு மகிழவும். இவ்வாறாக சிந்தனைத் திறனை மேலும் மேலும் தினந்தோறும் வளர்த்துக் கொள்ளலாம். 

    வாழ்க சிந்தனைச் செல்வம்!  வளர்க சிந்தனைச் செல்வம்!!

    வாழ்க அறிவுச் செல்வம்!                  வளா்க அறிவுச் செல்வம்!!