2020

Yearly Archives

  • சிந்திக்க அமுத மொழிகள்- 294(191)

    வாழ்க மனித அறிவு                வளர்க மனித அறிவு

    சிந்திக்க அமுத மொழிகள்- 294(191)

    16-05-2020—சனி

     

    எந்த உயிரிடத்திலும் பேதமின்றி தம் உயிர் போன்று காண்பவன் உள்ளத்தில் இறைவனும் நடனமாடுகிறார்.”

    . . . இராமலிங்க அடிகள்.

    பயிற்சி:

    1) மற்றவர்கள் உள்ளத்தில் …. ?

    2) இந்த அருள் மொழியை மகரிஷி அவர்கள் எவ்வாறு கூறுகிறார்?

    3) இறைவன் நடனமாடுகிறார் என்பது அவரது பேரின்ப அனுபவம்! இது எல்லோருக்கும் உரியதுதானே?

    4) இந்த உண்மையினை மகான் மகாகவி பாரதியார் எவ்வாறு கூறுகிறார்?

    வாழ்க அறிவுச் செல்வம்                          வளா்க அறிவுச் செல்வம்


     

    Loading

  • சிந்திக்க அமுத மொழிகள்- 293(187)

    வாழ்க மனித அறிவு!               வளர்க மனித அறிவு!!

    சிந்திக்க அமுத மொழிகள்- 293(187)

    15-05-2020 — வெள்ளி

    நம்மிடம் அறிவு இருக்கிறது. ஆனால் உழைக்கும் திறன் இல்லை. வேதாந்தக் கோட்பாடு உள்ளது.   ஆனால் நடைமுறைப்படுத்தும் ஆற்றல் இல்லை”

     
    . . . சுவாமி விவேகானந்தர்.

    பயிற்சி:

    1) என்ன கூறுகிறார் சுவாமி விவேகானந்தர்?

    2) எதனை வலியுறுத்த அறிவையும் உழைக்காத  திறனையும் இணைத்து ஆதங்கப்படுகிறார்?

    3) அதேபோல் எதனை வலியுறுத்த வேதாந்த கோட்பாட்டையும் அதனை நடைமுறைபடுத்தும் ஆற்றல் இன்மையையும்   இணைத்து ஆதங்கப்படுகிறார்?

    4) இக்கூற்று ஆன்ம சாதகர்களுக்கு அறிவுறுத்துவது என்ன?

    வாழ்க அறிவுச் செல்வம்!                  வளா்க அறிவுச் செல்வம்!!


    Loading

  • சிந்திக்க வினாக்கள்-296(205)

    வாழ்க மனித அறிவு                    வளர்க மனித அறிவு

    சிந்திக்க வினாக்கள்-296(205)

    14-05-2020 – வியாழன்

    அறியாமை

     

    அ) பொதுவாக அறியாமை என்பது என்ன?

    (ஆ) அதனால் விளைவது என்ன?

    (இ) வாழ்வியலோடு இணைத்து அறியாமைக்கு பொருள் கூறவும்.

    (ஈ) எவையெல்லாம் அறியாமைகள்?

    (உ) ஒருவரின் அறியாமையால் மற்றவருக்கு பாதிப்பு உண்டா? எவ்வாறு?

    (ஊ) அவ்வாறு பாதிப்பு உண்டாகும்போது முதலாமவரின் நிலை என்ன?

    (எ) முதலாமவர் அந்நிலையினை எவ்வாறு ஏற்றுக் கொள்வது?

    (ஏ) ஏன் இயற்கையில் இந்த நிலை?! இது நியாயமா?

    (ஐ) அறியாமையை சமுதாயத்தில் எவ்வாறு நீக்கலாம்?

    (ஒ) இவ்வினாக்களுக்கான விடையைத் தொகுத்து அறியாமை என்கின்ற தலைப்பில் கட்டுரை எழுதிப்பார்க்கலாமே!

     

    வாழ்க அறிவுச் செல்வம்                வளர்க அறிவுச் செல்வம்


    Loading