சிந்திக்க கவிகள்-11

   வாழ்க மனித அறிவு!                                  வளர்க மனித அறிவு!!

சிந்திக்க கவிகள்11

01-07-2020புதன்

பயிற்சி:

  1. என்ன கூறுகிறார் உலக நல தொண்டரான நம் குருநாதர் வேதாத்திரி மகரிஷி அவர்கள்?
  2. வாழ்வு என்பது என்ன?
  3. வாழ்வில் வளம் என்பது என்ன?
  4. வினை, உயிர், மெய், அறிவதால் வளம் கிடைக்கின்றதா? இவற்றை அறிவதால் எவ்வாறு வளம் கிடைக்கும்?
  5. பஞ்சதன்மாற்றங்களின் வகை தெரிவான் கட்டே உலகு என்று 20 நூற்றாண்டுகளுக்கு முன்னர் திருவள்ளுவர் உரைத்தது போல அவரது 20 ஆம் நூற்றாண்டின் சீடரான வேதாத்திரி மகரிஷி அவர்கள் வினை, உயிர், மெய் ஆகியவற்றின் வகை அறிய என்ன செய்தார்?
  6. பகலிரவாய் எண்ணி எண்ணி என்றால் என்ன?

  7. ஆழ்ந்து ஆழ்ந்து சிந்தித்தேன் என்பதற்கு என்ன பொருள்? உத்தம நண்பர்காள் உங்கட்கும் உரியது என்கின்ற உறுதியை நினைவில் கொண்டு  மற்ற பணிகளுக்கும்-கடமைகளுக்கும் குந்தகம் ஏற்படாமல்  சிந்தித்து ஆன்மபலன் பெறலாமே?

  8. விடாமல் தொடர்ந்து ஆழ்ந்து ஆழ்ந்து சிந்தித்ததால் அவர் அடைந்த பலன்கள் என்ன? நாமும் அவ்வாறே பலன்களை அடையலாமே!
  9. வினாக்கள் எல்லாம் விடையாயிற்று என்றால் என்ன பொருள்?
  10. ஊழ் உணர்ந்தேன் என்றால் என்ன பொருள்?
  11. ஊழ், உயிர், வினை உணர்ந்தால்  வாழ்வில் வளம் பெருகும் என்கிறாரே! இது எளிமையாக உள்ளது அல்லவா?
  12. உயர் தொண்டு என்றால் என்ன? என்ன வகையான தொண்டு மகரிஷி அவர்களுடையது?
  13. தொண்டால் எப்படி மனநிறைவு உண்டாகும்? அந்த மனநிறைவை வரையறுக்க முடியுமா?

வாழ்க திருவேதாத்திரியம்!  வளர்க திருவேதாத்திரியம்!!

வாழ்க அறிவுச் செல்வம்!                         வளர்க அறிவுச் செல்வம்!!


 

Loading

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments