admin

Author Archives

  • அ.வி. 334 சாகாவரமும் பரிபக்குவ நிலையும்

    வாழ்க வையகம்!                                                                                     வாழ்க வளமுடன்!!

    இனிய ‘சுபகிருது’ வருட புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    வாழ்க வையகம். வாழ்க வளமுடன்

    அ.வி. 334

    சாகாவரமும் பரிபக்குவ நிலையும்

    14-04-2022-வியாழன்

         படம்: வள்ளலார் திருக்காப்பிட்டுக் கொள்ளும் பொழுது திருவாய் மலர்ந்தது

     

    வாழ்க வளமுடன்!

    நேற்றைய (13.04.2022) சத்சங்கத்தில் சிந்திக்க வினாக்கள் பகுதியில் தொடுக்கப்பட்ட  வினாவின் தொடர்ச்சியாக…

    வள்ளல் பெருமானாரின் ஆன்மா வேதாத்திரி மகரிஷி அவர்களின் உடலில் பத்து வருடங்கள் இருந்து அருள்பாலித்தது மனவளக்கலைஞர்கள் அனைவரும் அறிந்ததே.

    வள்ளலாரின் கடைசி செய்தி:

    1. இதுவரை உங்களுக்கு நேரில் சொல்லி வந்தேன். ஒருவரும் கேட்டுத் திருந்தவில்லை; ஒருவரும் தேறவில்லை.
    2. அகவினத்தாருக்குச் சாகா வரமும் ஏனையோர்க்குப் பரிபாக நிலையும்அளிப்பேன்.
    3. இப்போது இந்த உடலில் இருக்கின்றேன் இனி எல்லா உடம்பிலும் புகுந்து கொள்வோம். எங்கெங்கு சென்றாலும் அங்கங்கும் இருப்போம்.
    4. திருத்திடுவோம். அஞ்சவேண்டாம்.

     

     

    1. ஏன் வள்ளலாரின் ஆன்மா வேதாத்திரி மகரிஷி அவர்களின் உடலில் பத்து வருடம் இருந்தது?
    2. ஒருவரும் தேறவில்லை என்று எதனை குறிப்பிடுகிறார்?
    3. அகவினத்தார் என்பவர்கள் யார்?
    4. சாகாவரம் என்றால் என்ன ?
    5. ஏன் அகவினத்தாருக்கு மட்டும் சாகா வரம் தருகிறேன் என்கிறார்?
    6. ஏனையோர்கள் என்பவர்கள் யாவர்?
    7. ஏன் அவர்களுக்கு பரிவக்குவ நிலை அளிப்பேன் என்கிறார்?
    8. பரிபக்குவ நிலை என்றால் என்ன?
    9. அகவினத்தார்க்கு சாகாவரம் தருவேன் என்கின்ற வரிசையில் மகரிஷி அவர்களிடம் வள்ளலார் ஆன்மா இருந்ததா?
    10. பரிபக்குவநிலை அளிப்பேன் என்ற நம்பிக்கையளிக்கும் உறுதியளிப்பு கவனிக்கப்பட வேண்டியதல்லவா?
    11. “திருத்திடுவோம்.  அஞ்சவேண்டாம்” என்கிறாரே,  அதன் பொருள் என்ன?
    12.  திருத்துதல் நடந்துகொண்டிருக்கின்றதா?  அதனால் கவலைப்படவேண்டாம் என்கிறாரே வள்ளலார் அவர்கள்?
    13. இப்பிறவியில் பரிபக்குவ நிலை கிடைத்தால் சாகா வரம் எப்போது?
      1. அடுத்த பிறவியிலா? காத்திருக்க வேண்டுமே!( வள்ளலார் அவர்கள்  அருட்தந்தை அவர்களுக்கு அருள்பாலித்த நிகழ்ச்சி பற்றி அறிய –please read page 111- of ‘எனது வாழ்க்கை விளக்கம்’ எனும் நூல்)
      2. இப்பிறவியில் பரிபக்குவ நிலை கிடைத்து அடுத்த பிறவியில் சாகாவரம் கிடைக்கும் என்றால் அடுத்த பிறப்பு கருவிலே திருஉடைய‌பிறப்பா?
      3. நினைத்தாலே மகிழ்ச்சியாக உள்ளதா?
      4. ஆனால் அடுத்த பிறவி‌ என்றால் நாம் இல்லையே அப்போது?
      5. நாம் இல்லை என்றால் என்ன ?
      6. நம் பிறவியின் தொடரான மகன் அல்லது பேரன் அல்லது கொள்ளுப் பேரன் அல்லது வம்சாவளி இருப்பார்களன்றோ!?
      7. பல்லாயிரம் பிறவிகள் எடுத்திருந்தாலும் இப்பிறவி ஒன்றே போதும் என உறுதி(ஞா.க.கவி.எண் 1743) அளிக்கின்றாரன்றோ நம் அருட்தந்தை அவர்கள்.

      21.அதற்கு என்ன செய்ய வேண்டும்? 

      1. மற்றொரு உறுதி மொழியும் அளித்துள்ளாரே! அது என்ன?
      2. எவரொருவர் குருவை மதித்தொழுகினாலும் தப்பாது குரு உயர்வு மதிப்போர் தம்மை தரத்தில் உயர்த்திப் பிறவிப் பயனை நல்கும் என்கிறாரே வையகத்துள்ளோரை வாழ்வாங்கு வாழவைக்க வந்த விடிவெள்ளி வேதாத்திரி‌ மகரிஷி அவர்கள்.

      வள்ளலார் அருள் தனக்கு கிடைத்ததுபற்றி மகரிஷி அவர்கள் கூறும் கவியினை நினைவுகூர்தல் நலம்பயக்கும்.

    வாழ்க வளமுடன்!

    வேறொரு சத்சங்கத்தில்  குருவை மதித்தொழுகல் பற்றி விரிவாக சிந்திப்போம்.  அதற்கு இறையருளும் குருவருளும் துணை புரியுமாக!

     

     வாழ்க திருவேதாத்திரியம்!                வளர்க திருவேதாத்திரியம்!!


     

    Loading

  • சிந்திக்க வினாக்கள்-329

    வாழ்க மனித அறிவு!                                                                 வளர்க மனித அறிவு!!

    சிந்திக்க வினாக்கள்-329

    13-04-2022-புதன்

    Vallalar - Prosper Spritually

    அருட்பிரகாச வள்ளலாரின் கடைசி செய்தி என்ன?

    (இதற்கான விடையை அடுத்த சத்சங்கத்தில் அறிந்து கொள்வோம்)

    வாழ்க வளமுடன்!

    வாழ்க அறிவுச்செல்வம்!                                        வளர்க அறிவுச்செல்வம்!!


     

     

     

     

    Loading

  • சிந்திக்க அமுத மொழிகள் – 333-மதித்தொழுகல்!!!

    வாழ்க மனித அறிவு!                                                                                      வளர்க மனித அறிவு!!

     

    சிந்திக்க அமுத மொழிகள் – 333

     

        09-04-2022 — சனி

    மதித்தொழுகல்!!!

    எவரொருவர் குருவை மதித்து ஒழுகினாலும், தப்பாது, குருவின் உயர்வு, மதிப்போரை தரத்தில் உயர்த்திப் பிறவிப்பயனை நல்கும் ”

    . . . வேதாத்திரி மகரிஷி.

    பயிற்சி—

    1. என்ன கூறுகிறார் வேதாத்திரி மகரிஷி அவர்கள்?
    2. குரு என்பவர் யார்?
    3. குருவை யார் மதிப்பர்?
    4. மதித்தல் என்றால் என்ன?
    5. ஒன்றின் மீதோ அல்லது ஒருவரின் மீதோ எப்போது மதிப்பு வரும்?
    6. ஒழுகுதல் என்றால் என்ன?
    7. மதித்தல் வேறு ஒழுகுதல் வேறா?
    8. ஒழுகுதலுக்கு மதிப்பு அவசியமா?
    9. “குருவை மதித்து ஒழுகினால் குருவின் உயர்வு மதிப்பவரின் தரம் உயரும்”  என்பது அறிவியலா?
    10. உயர்கின்ற பயன்  எந்த இறை நியதியின் கீழ் கிடைக்கின்றது?
    11. மதித்தொழுகலின் பயன் என்ன?
    12. குருவின் உயர்வு என்றால் என்ன?
    13. மதிப்போரின் தரம் என்றால் என்ன?
    14. மதிப்பவரின் தரம் உயரும் என்றால் அந்தத் தரம் என்ன?
    15. மதித்தொழுகலின் விளைவாக பிறவிப்பயன் கிடைக்கும் என்றால் பிறவிப்பயன் என்பது என்ன?
    16. பிறவிப்பயன் பெறுவது ஒவ்வோர் மனிதனுக்கும் அவசியம் தானே?
    17. எந்த கோணத்தில் பிறவிப்பயன் அவசியமாகின்றது மனிதனுக்கு?
    18. பிறவிப்பயன் தரும் நன்மைகள் என்ன? ஒன்றா? பலவா?
    19. ஏன் மனிதர்கள் பிறவிப்பயன் அடைவதற்கு முயற்சி செய்வதில்லை?
    20. குருவை மதிப்பதில் சீடருக்கு என்ன சிரமம் இருக்கப் போகின்றது?
    21.  ஏழு எழுத்துக்களைக் கொண்ட குருவை “ம தி த் தொ ழு க ல்“ என்கின்ற வார்த்தையில் என்னென்ன படிநிலைகள் உள்ளன என்பதனை  பட்டியலிட்டு செயல்படுத்தலாமன்றோ?
    22. “குருவின் உயர்வு (உயர்ந்த குருவின் தன்மைகளும், அருட்பார்வைகளும், அருட்செய்திகளும்) குருவை மதிப்பவரின் தரத்தை உயர்த்தும்” என்று மகரிஷி அவர்கள் கூறியிருப்பது,  திருமூலர் குருவைத் தேடுவதில் இருக்கும் எச்சரிக்கையை நினைவு படுத்துகின்றதல்லவா?

    அபக்குவன்!!

    குருட்டினை நீக்கும் குருவினைக் கொள்ளார்

    குருட்டினை நீக்காக் குருவினைக் கொள்வர்

    குருடும் குருடும் குருட்டாட்டம் ஆடிக்

    குருடும் குருடும் குழி விழுமாறே.”

                                                                                                             . . .  திருமூலர்

    (அபக்குவன் என்று கொடுக்கப்பட்ட  தலைப்பு சிந்திக்கக் கூடியது)

                           23.  திருமூலரின் உண்மை-குரு பற்றிய  எண்ணம்போல்   பக்குவ-      

                                   மனவளக்கலைஞர்கள்,  வேதாத்திரி மகரிஷி     அவர்களை    குருவாகப்           

                                  பெற்றமைக்கு பூர்வபுண்ணியம் செய்திருக்க  வேண்டும் அல்லவா?

    24.  இந்த அமுதமொழியில் ஐயங்கள் வேறு ஏதேனும் இருப்பின் அவற்றைக் கேள்விகளாக தங்களுக்குள்ளாகவே எழுப்பி சிந்தனை செய்து – சுயசத்சங்கம் நடத்தி பயன்பெறலாமன்றோ?

    வாழ்க அறிவுச் செல்வம்!                          வளா்க அறிவுச் செல்வம்!!


     

    Loading