admin

Author Archives

  • சிந்திக்க அமுத மொழிகள் – 330(26-03-2022)

    வாழ்க மனித அறிவு !                          வளர்க மனித அறிவு !!

    lotus

    சிந்திக்க அமுத மொழிகள் – 330

    26-03-2022 — சனி

    “ஆணவம் இல்லாத இடத்தில் அருள் ஒளி வீசும்.”
                                                                                             . . . வள்ளலார்.

    பயிற்சி—
    1) என்ன கூறுகிறார் அருட்பிரகாச வள்ளலார்?
    2) ஆணவம் என்று எதனைக் குறிப்பிடுகிறார்?
    3) அருள் என்பது என்ன?
    4) ‘அருள் ஒளி’ என்பது என்ன?
    5) அருள் நமக்கு வேண்டுமல்லவா?
    6) அருளுக்குப் பாத்திரமாக என்ன செய்ய வேண்டும்?
    7) ‘ஆணவம் இல்லாத இடத்தில்’ என்பதால் அந்த இடம் எது?

    வாழ்க அறிவுச் செல்வம்!                       வளா்க அறிவுச் செல்வம்!!

    Loading

  • சிந்திக்க அமுத மொழிகள் – 329-25-3-22

    வாழ்க மனித அறிவு!                                                                வளர்க மனித அறிவு!!

     

    சிந்திக்க அமுத மொழிகள் – 329

        25-03-2021 — வெள்ளி

     

    Fraction demands Totality supplies

                                                          . . . வேதாத்திரி மகரிஷி

    பயிற்சி:

    1) என்ன கூறுகிறார் வேதாத்திரி மகரிஷி அவர்கள்?

     2) ‘Fraction’ என்று எதனைக் குறிப்பிடுகிறார்? 

    3) ‘Totality’ என்று எதனைக் குறிப்பிடுகிறார்?

    4) மனிதகுலத்திற்கு என்ன தெரிவிக்க எண்ணி இப் பொன்மொழியினை அருளியுள்ளார் வேதாத்திரி மகரிஷி அவர்கள்?

    5) இப் பொன்மொழிக்கும் நேற்றைய(24.03.2022) சிந்திக்க வினாப் பயிற்சியில் சிந்தித்த கேள்வியான ‘எண்ணமே பரிணாமத்தின் வாகனம்’ என்பதற்கும் தொடர்புள்ளதா? (Click here)

    6) தொடர்பு இருப்பின் என்ன தொடர்பு?

     

    வாழ்க அறிவுச் செல்வம்!                                          வளா்க அறிவுச் செல்வம்!!


     

    Loading

  • சிந்திக்க வினாக்கள்-326-எண்ணமும் பரிணாமமும்

     

    வாழ்க மனித அறிவு!                                                                 வளர்க மனித அறிவு!!

     

    lotus

    சிந்திக்க வினாக்கள்-326

    எண்ணமும் பரிணாமமும்

                                                                                           24-03-2022-வியாழன்                            

    வாழ்க வளமுடன்!

    பிரதான வினா(Main Question): 326 

    எண்ணமே பரிணாமத்தின் வாகனம்’ என்பது எப்படி?

    துணை வினாக்கள் (Sub questions):

    1) பரிணாமம் அதாவது தன்மாற்றம் என்பது என்ன?

    2) எண்ணம் என்பது என்ன?

    3) எண்ணத்திற்கும்  பரிணாமத்திற்கும் தொடர்பு இருக்க முடியுமா?

    4) எதற்காக இயற்கை இரண்டிற்கும்  தொடர்பு வைத்துள்ளது?  இயற்கை எண்ணத்திற்கும் பரிணாமத்திற்கும் தொடர்பு வைத்துள்ளது என்று சொல்வதைவிட ,  எண்ணத்திற்கும் பரிணாமத்திற்கும் தொடர்பு இயற்கையிலேயே  உள்ளது. அவ்வாறெனில்   அது  எதற்காக என்று மனித அறிவு கேட்கின்றது?

    5) பரிணாமத்திற்கு  வாகனம்    என்றால் என்ன பொருள்?

    6) பரிணாமம் இன்னும் பூர்த்தியாகவில்லை என்கிறார்களே, அது சரியா?

    7) பரிணாமத்திற்கு பூர்த்தியாதல் என்பது உண்டா?

    8) பரிணாமத் தோட்டத்தில் கடைசியாக பூத்த மலர் மனிதன் என்கின்றபோது பரிணாமம் பூர்த்தியாகி விட்டதுதானே?!

    9) இயற்கையில் பரிணாமம் பூர்த்தியாக வேண்டுமெனில் எந்த எத்திசையில்(direction) பூர்த்தியாகும்?

    10)  அதனால் மனிதகுலத்திற்கு என்ன நன்மை ஏற்பட  உள்ளது?

    11) பரிணாமத்திற்கு நம் எண்ணம் அவசியமா?

    12) அவசியமெனில் நாம் எவ்வாறு  பரிணாமத்திற்கு உதவலாம்? 

    13) பரிணாமத்திற்கு உதவி புரிவது என்பது இயற்கைக்கே/இறைக்கே துணைபுரிவதாகுமன்றோ?! 

    14) இயற்கையின்/இறையின்  மனிதஇன பரிணாமத்தொழிற்சாலையில்  மனிதனும் பங்குதாரர்தானே(partner)!? இயற்கை, இறை,  மனிதன் வேறா என்ன? சொல்லுங்களேன்!

    15) பரிணாமத்திற்கும் இயல்பூக்கத்திற்கும் தொடர்பு உள்ளதா?  உள்ளது எனில் எவ்வாறு தொடர்பு உள்ளது?

    16) இயல்பூக்கம் தொடர்ந்து நடைபெற்று இயல்பு முழுவதுமாக வெளிப்பட   மனித   எண்ணம் எவ்வாறு துணையாக இருக்கலாம்? 

    17)  “Fraction demands Totality supplies” என்று வேதாத்திரி மகரிஷி அவர்கள் கூறுவதனை இப்போது இங்கு நினைவு கூர்வது பொருத்தமாக இருக்குமன்றோ?!  வாழ்க வையகம்!  வாழ்க வளமுடன்!!

    18) மேலும் ஏதாவது வினாக்கள் உங்களுள் இருந்தால் அவ்வினாக்களையும் எழுப்பி ‌நீங்களே சிந்திக்கலாமே!

     

    வாழ்க அறிவுச் செல்வம்!                                    வளர்க அறிவுச்   செல்வம்!!


     

     

    Loading