admin

Author Archives

  • ஐவகை மயக்கம்

    ஐவகை மயக்கம்

    1- FFC-NEW-7

    02-11-2014

    இன்றைய சிந்தனைக்கான பொருள் ‘ஐவகை மயக்கம். மயக்கம் என்றால் என்ன என்று தெரியும். மயக்கம் என்பது அறிவு தன் சுயநினைவு அற்றலாகும்;. உறவினர் யாராவது மயக்கம், அடைந்துவிட்டால் அதிர்ச்சியும் கவலையும் அடைவோம். எப்போது மயக்கம் தெளிந்து சுய நினைவிற்கு வருவார் என்கின்ற கவலை இருக்கும். அநேக நேரங்களில் மயக்கம் சீக்கிரம் தெளிந்து விடுவதும் உண்டு.

    மயக்கம் நீடித்தால் நீண்ட மயக்கத்திற்கு (coma) நோயாளி தள்ளப்பட்டுவிடுவார். இன்னும் கவலை அதிகரிக்கும். மருத்துவ சிகிச்சையின் பயனாக நீடித்த மயக்கத்திலிருந்து தெளியலாம். அல்;லது சில நேரங்களில் நீடித்த மயக்கம் தெளியாமலேயே நோயாளி படுக்கையிலேயே இருப்பார். அப்போது படுக்கைப் புண்(Bed soar) ஏற்பட்டுவிடும். பிழைப்பதும் கடினமாகிவிடும்.

    எண்ணிக்கையில் இந்த மயக்கம் ஒன்றுதான். ஒரு மயக்கமே இந்த நிலையை ஏற்படுத்துகின்றது என்றால் ஒரு மயக்கத்திற்கு மேலாக ஐவகை மயக்கம் வந்துவிட்டால் என்ன ஆகும் மனிதனின் நிலை? வந்து விட்டால் என்பதில்லை, இப்போதே ஐவகை மயக்கத்தில்தான் சமுதாயம் வாழ்ந்து கொண்டிருக்கின்றது என்கின்றனர் அறிவை அறிந்த அறிஞர்கள். ஐவகை மயக்கம் என்பது என்ன?

    அதுதான் ஐம்புலன் மயக்கம். ஐந்து புலன்கள் வழியாகப் பெறும் இன்பங்களில் மயங்கி, மூழ்கி அறிவு துன்பத்துக்குள்ளாகின்றது. புலன்கள் இருப்பதே இன்பத்தை அனுபவிக்கும் கருவிகள் தானே என ஐயம் எழலாம். புறப்பொருட்களிலோ அல்லது புறநிகழ்ச்சிகளிலோ இருந்து வரும் இன்பத்தை அனுபவிக்கத்தான் புலன்கள் உள்ளன என்பதில் ஐயமில்லை. ஆனால் புலன்கள் வழியாக அனுபவிக்கும் இன்பம் அளவு மீறும்போதும், முறை மாறும் போதும் துன்பமாகிவிடுகின்றதே! அதனைக் கவனியாமல் புலன் இன்பங்களைத் துய்ப்பதில் அளவு மீறுவதிலும், முறை மாறுவதிலும் பழக்கமாகி ஒரு காலகட்டத்தில் புலன்களுக்கு அடிமையாகி விடுகிறான் மனிதன். மேலும் எந்த புலனை அதிகமாகப் பயன்படுத்துகிறானோ அந்த புலன் சீக்கிரம் பழுதடைந்து துன்பத்துக்கள்ளாக நேரிடும்.

    எனவே அளவு மீறியும் முறை மாறியும் புலன் இன்பம் துய்க்கும் மனிதனை புலன் மயக்கத்தில் இருக்கிறான் என்கின்றனர் அறிவை அறிந்த அறிஞர்கள். விளக்கம் கிடைத்தாலும் பழையப் பழக்கத்திலிருந்து விடுபட கடுமையான தளரா விடாமுயற்சி (பிரம்ம பிரயத்தனம்) செய்ய வேண்டியிருக்கும். அதில் எல்லோராலும் வெற்றி பெற முடிவதில்லை. இதனாலேயே ஆரம்பத்தில் ஆா்வமாக ஆன்மீகப் பயிற்சியினைத் தொடங்கியவர்கள் வெற்றி பெறும் வரை பயிற்சியினை தொடரமுடியமால், ஒழுக்க நெறிக்கு வரமுடியாமல் ஆன்மீகப் பயிற்சியினை விட்டு விடும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.

    இந்த நிலையைத் தெளிவு படுத்தி,

    •  இனிமேலாவது, தீய பழக்கங்களை புதிதாக பழகிக் கொள்ளாதிருக்க எச்சரிக்கவும்,
    • ஏற்கனவே ஏற்படுத்திக் கொண்ட தீய பழக்கங்களில் இருந்து விடுபட முயற்சிப்பதில் தொய்வு ஏற்படாமல் இருக்கவும்

    ”பழக்கத்திற்கும் விளக்கத்திற்கும் போராடிக் கொண்டிருக்கும் ஒரு சீவன் மனிதன்” என்கிறார் இன்ப – துன்ப அறிவியலைக் (Science of Enjoyment and Suffering) கண்டுபிடித்த வேதாத்திரி மகரிஷி அவர்கள். அதே நேரத்தில்

                           ” பல்லாயிரம் பிறவி எடுத்து ஏற்ற பழிச்சுமைப்
                                பதிவுகளை ஒரு பிறவி காலத்திலேயே மாற்றலாம்.
                             நலமடைந்து மனிதனாகி தெய்வமாக உயரலாம்
                                நல்வாய்ப்பு ஆற்றலிவை கருணையோடு இறைநிலை
                             நிலஉலகில்.மனிதருக்கு அளித்துள்ளது இயல்பென
                                நெடுங்காலத் தொடர்புடைய கருமையத் தூய்மையால்
                             பலனைடய அகத்தாய்வும் அகத்தவமும் இறையுணர்
                                பாதையிலே விழிப்புடனே வாழ்வதுதான் அவ்வழி.
                                                           ….. வேதாத்திரி மகரிஷி

    என்று இக்கவியின் வழியாக நம்பிக்கையை அளிக்கிறார் வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

    தொடரும் நாளை…..

    Loading

  • வயிற்றுப் பசியும் அறிவுப் பசியும் (நேற்றையத் தொடர்ச்சி)

    வயிற்றுப் பசியும் அறிவுப் பசியும் (நேற்றையத்  தொடர்ச்சி)

    01-11-2014

     எண்: அ.வி.மா. 002-2-6

    வயிற்றுப் பசியும் அறிவுப் பசியும்
    இப்போது அறிவுப் பசியைப் பற்றிச் சிந்திக்க உள்ளோம். வயிற்றுப் பசி என்பது சரி. அறிவுப் பசி என்பது வார்த்தை ஜாலமா? உண்மையில் அறிவிற்குப் பசி இருக்குமா என ஐயம் எழலாம். அறிவோ அரூபம். அதாவது உருவமில்லாதது, உருவமில்லா அறிவிற்குப் பசி எவ்வாறு ஏற்பட முடியும் ஐயம் எழலாம்?

    வயிற்றுப் பசியின் போது வயிற்றில் ஏற்படும் பசியாகியத் துன்ப உணர்வை அறிவது அறிவு. அதேபோல் மற்ற உடல் உறுப்புகளில் ஏற்படும் துன்ப உணர்வுகளையும் அறிந்து கொள்ளும் அறிவு. அப்படி இருக்கும்போது தனக்கேகூட(அறிவிற்கேகூட) துன்ப உணர்வு ஏற்படுமா? பசி என்பது துன்ப உணர்வு என்பதால் அறிவுப்பசி என்பது அறிவிற்கு ஏற்படும் துன்பம் என்றுதானே பொருள்?

    அப்படியானால் அறிவுப்பசி என்பது என்ன என்று அறிந்து கொள்ள வேண்டும். வயிற்றுப் பசியில் பசி என்கின்ற துன்ப உணர்வை, உணவை உட்கொண்டு சரி செய்து கொள்கிறோம். வயிறு ஓர் உறுப்பு. உருவமுள்ளது. வயிற்றில் இரைப்பை உள்ளது. நாம் அருந்தும் உணவு இரைப்பையில் நிறைகின்றது. வயிறும் பருப்பொருள். உணவும் பருப்பொருள்(கெட்டிப் பொருளாகவோ அல்லது நீர்ப்பொருளாகவோ இருக்கும்) வகையைச் சார்ந்தது, ஆனால் அறிவோ அரூபம். அதாவது உருவமில்லாதது. அப்படி இருக்கும்போது உருவமில்லா அறிவிற்கு ஏற்படும் பசியை எவ்வகையான உணவுப் பொருளைக் கொண்டு அறிவு தனது பசியைப் போக்கிக் கொள்ள முடியும்?

    உருவத்தைக் கொண்ட வயிறு பருப்பொருள்(உருவமுள்ள) உணவைக் உட்கொண்டு பசியைப் போக்கிக் கொள்வதுபோல் அறிவு தன் பசியை போக்கிக் கொள்வதற்கு பருப்பொருள் உணவு ஏதும் கிடையாது. உருவமில்லா உணவைக் கொண்டுதான் அறிவு தன் பசியைப் போக்கிக் கொள்ள வேண்டும். அதுதான் சிந்தனை. இதனை சிந்தனை விருந்தும் என்றும் சொல்லலாம். அறிவு ஐம்புலன்கள் வாயிலாக புற நிகழ்ச்சிகளை உணர்கின்றது. இன்பதுன்பங்களை உணர்கின்றது. இதுமட்டுமேவா அறிவின் வேலை? இது மட்டுமே அறிவிற்கு .இன்பம் தரமுடியுமா?
    அப்படியானால் அறிவுப்பசி என்பது என்ன? அறிய வேண்டிய இறுதியானதை(அதாவது தன்னையே) அறியவேண்டும் அறிவு. உடலுக்கு ஏற்படுகின்ற இன்பதுன்ப உணர்வுகளை அறிந்து கொள்வது எதுவோ அது அறிவு. புறத்தே நடக்கின்ற நிகழ்ச்சிகளை எல்லாம் அறிகின்றது. இவற்றை எல்லாம் அறிந்து கொண்டு, இவற்றிற்கெல்லாம் மேலாக, அறிய வேண்டி இறுதியானதை அறியக் கூடியது அறிவு. அப்படியானால் அறிவு அறிய வேண்டியது எது? அறிவு தான் யார் என்றும், தன் இருப்பிடம் எது என்றும் அறிய வேண்டும். அப்போதுதான் அறிவு முழுமை பெறும். மகாகவி கூறும் தெளிந்த நல்லறிவாகும் அறிவு.
    அறிவு தனது பூர்வீகத்தை அறிய வேண்டும். இது வரை அறிவைப்பற்றிய விஞ்ஞான பூர்வமான தகவல் ஏதும் இல்லாதபோது அறிவைப்பற்றிய(Consciousness) தகவல்களை எங்கிருந்து அறிவது என்கின்ற ஐயம் எழலாம். அறிவுப்பசியைப் போக்கிட இயற்கை தயாரித்துள்ள விருந்துதுான் வேதாத்திரியம். தனக்கு எது பிரியமோ அதனை அறிவு அறிய வேண்டும். அப்போதுதான் அதற்கு பேரின்பம். இந்த நிலை அறிவிற்கு இல்லாதபோது ஏற்படுகின்ற துன்பத்தைத்தான் அறிவிற்குப் பசி உள்ளது என்கிறோம்.
    தனக்குப்(அறிவிற்கு) பிரியமானதை அறியாமல், அதற்கு வழியும் தெரியாமல், பிரியமில்லாததை உணர்வதிலேயே காலம் கடத்துவது அறிவிற்குத் துன்பம்தான். எந்த நோக்கத்திற்காக அறிவு(இந்த ஆன்மா உடல் எடுத்ததோ) இந்த உடலில் அறிவாக இயங்க வந்ததோ அதனை அடைவதற்கான ஏக்கம் தான் அறிவுப்பசி. அறிவிற்கு தன்னை அறிவதில் ஆசை வந்துவிட்டால் தன்னை அறிகின்ற வரை அதற்கு ஓய்வே கிடையாது. எப்போது தன்னை உணா்கின்றதோ அன்றுதான் அறிவிற்கு ஓய்வு. அன்றுதான் அறிவின் பசி முழுவதுமாகத் தீரும். அன்றுதான் அறிவிற்கு விருந்து. ஆகவே ஆறாம் அறிவுடைய மனிதன் சிந்திக்க வேண்டும். சிந்தித்தலின் வாயிலாக வாழ்வின் நோக்கத்தை தானே அறிந்து அதுபோல் வாழ்க்கை வாழ்ந்து, மற்றவர்களுக்கும் வழிகாட்டும் புண்ணியக் கடமையை ஆற்றும் போது தான் அறிவிற்குப் பசி தீரும். இப்பூமியில் வந்து பிறந்ததற்கான சுவடை விட்டுவிட்டுச் செல்லலாம். குருவின் தாள் படிந்து – வேதாத்திரி நாமம் வாழ்க.
    இன்றைய விருந்தில் அறிந்து கொண்டது என்னவென்று சுருக்கமாகப் பார்ப்போம்.

    1. எந்த நோக்கத்திற்காக அறிவு(இந்த ஆன்மா உடல் எடுத்ததோ) இந்த உடலில் அறிவாக இயங்க வந்ததோ அதனை அடைவதற்கான ஏக்கம் தான் அறிவுப்பசி.
    2. சிந்தனைதான் அறிவுப் பசியைத் தீர்க்கும்.
    3. அறிய வேண்டிய இறுதியானதை அறியாத அறியாமையால் வருவது துன்பம்..
    4. அறிவுப் பசியைத் தீர்க்க இயற்கை தயாரித்துள்ள விருந்துதுான் வேதாத்திரியம்.

    இன்றைய விருந்தில் அறிவிற்கான ஏழு சத்துக்களைப் பெற்றுள்ளோம். இதனை மீண்டும் மீண்டும் சிந்தித்து உறுதி படுத்திக் கொண்டு நினைவில் கொள்ள வேண்டும்..

    வாழ்க மனித அறிவு. வளர்க மனித அறிவு.
    அறிவுவாழ்க அறிவுச் செல்வம். வளர்க அறிவுச்செல்வம்.

    *****

    Loading

  • வயிற்றுப் பசியும் அறிவுப் பசியும்

    31-10-2014

    எண்: அ.வி.கா. 001-2-5

    ’பசி’ என்பதனை எல்லோரும் அறிவர். பசி என்பது அறிவிற்கு ஏற்படும் ஒரு துன்ப உணர்வு. அது தோன்றுமிடம் வயிறு. நான் பசியாக இருக்கிறேன்.( I am hungry) என்போம். அல்லது வயிறு பசிக்கின்றது என்போம். உடல் இயக்கத்திற்கு சக்தி தீர்ந்ததும், சக்தி தேவை என்கின்ற நிலையை அறிவிப்பது பசி என்கின்ற துன்ப உணர்வு. அந்தப் பசிக்கு ”வயிற்றுப் பசி” எனப் பெயர் வைத்துள்ளோம்.

    வயிற்றுப் பசியைப் போக்க உணவு உட்கொள்வோம். அந்த உணவு வயிற்றுக்குள் சென்று சீரணிக்கப்பட்டு உடலுக்கு வேண்டிய ரசம், இரத்தம், சதை, கொழுப்பு, எலும்பு, மஜ்ஜை, சுக்கிலம் என்ற ஏழு வித தாதுக்களாகி பிறகு எந்தெந்த உடல் உறுப்புகளுக்குப் போய்ச் சேர வேண்டுமோ அங்கு போய்ச் சேரும். இதனை செய்வது யார்? நாமா?
    வாயிலிருக்கும் உணவை நாக்கால் உணவுக் குழாய்க்குள் தள்ளும் வரை நமது வேலை. பிறகு உணவு கூழாகி, ரசமாகி, ஏழுவித தாதுக்களாகி, பிறகு எந்தெந்த உடல் உறுப்புகளுக்கு எது எது போய்ச் சேர வேண்டுமோ அதனைச் செய்வது யார்? நாமா? இல்லையே! இது இயற்கையாக நடக்கின்றது என்போம். ஆனால் இயற்கை செய்கின்றது எனச் சொல்ல மாட்டோம். ஆனால் இதனைச் செய்வது இயற்கை. இதில் யாருக்கும் கருத்து வித்தியாசம் இருக்க முடியாது, இது கருத்து என்றும் சொல்ல முடியாது. இது உண்மைச் சம்பவம். எனவே உண்மையை ஏற்றுக் கொள்வதில் கருத்து வித்தியாசத்திற்கே இடமில்லை. இந்த விந்தையை நினைத்து மகிழலாமன்றோ!

    திருவள்ளுவர் மொழிந்துள்ளது போல் ஐயப்படாது அகத்தினை உணர்ந்தவர்கள் இந்த இயற்கையை இறை என்றனர். இயற்கைகையை இயற்கை என்று சொல்லாமல் ஏன் இறை என்கின்றனர்? காரணப் பெயராக இறை என்கின்றனர். இயற்கை எனும் பேராற்றல் எங்கும் இருப்பதால், அதாவது இறைந்து கிடப்பதால் அதனை இறை என்று கூறுகின்றனர்.
    மீண்டும் வயிற்றுப் பசிக்கு வருவோம். உணவில் சாதாரண உணவும் உண்டு. விருந்தும் உண்டு. சாதாரண உணவும் பசியினைப் போக்கும். விருந்தும் பசியினைப் போக்கும். விருந்தில் பல வகையான உணவுகள் பரிமாறப்படும். விருந்தில் உணவு செயற்கையாக ருசியைக்கூட்டித் தயாரிக்கப்பபடும். உணவு கிடைக்கின்ற பெரும்பாலோருக்கு சாதாரண உணவுதான் கிடைக்கின்றது. இந்த சாதாரண உணவு கூடக் கிடைக்காத வறுமை நிலையும் உள்ளது இந்த சமுதாயத்தில் என்பது மிக மிக வருத்தத்திற்குரியது.

    விருந்து ஒரு சிலருக்குத்தான் எப்போதாவது கிடைக்கின்றது. சாதாரண உணவே போதுமானது. ருசி இருந்தால் தான் நாக்கு, உணவுக்குழாய்க்குள் உணவைத் தள்ளும் என்பது உண்மைதான். இருந்தாலும் பசிக்காகத்தான் உணவு. ருசிக்காக உணவு இல்லை என்பதனையும் மறந்து விடக்கூடாது, ருசியைச் செயற்கையாக அதிகமாக்கினால் சில நேரங்களில் தீமையையும் விளைவிக்கும்.

    எனவே வயிற்றுப் பசிக்கு சாதாரண உணவே போதுமானது. விருந்து சிடைப்பதாக வைத்துக்கொண்டாலும் தினந்தோறும் விருந்து உண்ண முடியாது. சலிப்பு ஏற்படும். விருந்து என்பது தேவைக்கு அதிகமான உணவுதானே? தினந்தோறும் விருந்து உண்பது வயிற்றுக்குத் தீங்கையும் விளைவிக்கும். உணவு உண்பதில் ”அளவும்” (limit) முறையும் (method) அவசியம். இன்பம் துய்த்தலில் அளவும் மீறி, முறையும் மாறினால் இன்பமே துன்பமாக மாறும் என்கின்ற இயற்கை நியதியைக் கவனிக்க வேண்டும்.
    இன்று காலை விருந்தில் வயிற்றுப் பசியைப் பற்றி அறிந்து கொண்டோம். தலைப்பு வயிற்றுப் பசி என இருந்தாலும், மூன்று முக்கியமான உண்மைகளைத் தெரிந்து கொண்டோம்.

    1. உணவு சீரணமாகி உடலுக்கு வேண்டிய சக்தியாக மாற்றுவது இயற்கை அல்லது மறுபெயரைக்கொண்ட இறை என்றும்,
    2. உணவு உட்கொள்வதில் அளவும் முறையும் கடைபிடிக்க வேண்டும் என்றும்,
    3. இல்லையெனில் இயற்கையின் நீதி மீறப்பட்டு இன்பமே துன்பமாக மாறிவிடும் என்பதனை அறிந்து கொண்டோம்.

    நானை விருந்திற்குக் கூடுவோம். அப்போது அறிவுப்பசியைப் பற்றிச் சிந்திப்போம்.. வாழ்க வளமுடன்.

    ………………… தொடரும் நாளை

    Loading