admin

Author Archives

  • சிந்திக்க வினாக்கள்-302

    வாழ்க மனித அறிவு                                                                   வளர்க மனித அறிவு

    lotus

    சிந்திக்க வினாக்கள்-302 

     

                                                08-06-2020 – திங்கள்

    கோடிட்ட  இடங்களைப் பூர்த்தி செய்து வாசித்து இன்புறலாமே! 

    அறிவொளியைப் பெருக்கிக்கொள்ளலாமே! வாழ்க வளமுடன்!

    1. கதிரவன் காலத்தே காணாத ___________ ,புதிர்போன்ற அறிவுநிலை ___________ இயங்குங்கால் தோன்றா.

    2. எல்லையற்றதை ___________ பார்ப்பது ___________ குறைபாடு.

    3. மனிதனுடைய ___________ பிரபஞ்சத்திற்கு ___________உள்ள ___________.

    வேதாத்திரி மகரிஷி அவர்கள்

     


     அன்புடையீர்!  தங்களின் மேலான கருத்துக்களை கருத்துரைக்க பகுதிக்கு அனுப்ப   Click the link below

    https://www.prosperspiritually.com/contact-us/

          வாழ்க அறிவுச் செல்வம்!              வளர்க அறிவுச் செல்வம்!!


    Loading

  • சிந்திக்க அமுத மொழிகள்- 306(62)

    வாழ்கமனிதஅறிவு                                               வளர்கமனிதஅறிவு

    சிந்திக்க அமுத மொழிகள்- 306(62)

    07.06.2020-ஞாயிறு

     

    உழைப்பில் உறுதிகொண்டு வாழ்நாளைப் பயனுள்ளதாக்குங்கள். உலகில் பிறந்ததற்கு அறிகுறியாக ஏதாவது நல்ல செயலைச் செய்து உங்கள் அடையாளத்தை உலகில் விட்டுச்செல்லுங்கள்.”

    – சுவாமிவிவேகானந்தர் 

    பயிற்சி—

    1. இந்த ஆலோசனை எல்லோருக்கும்தானே? எல்லோருக்கும் இது சாத்தியமா?
    2. பிறந்ததற்கான அடையாளத்தை உலகில் விட்டுச் செல்வதற்கான நற்செயல்கள் என்னென்ன இருக்கின்றன?
    3. அவற்றுள் இன்றுள்ள உலக சூழ்நிலையில் எது முக்கியமானதாக இருக்கும்?
    4. ஒருசிலராவது அடையாளம் நிலைப்பதற்கான நற்செயல்களைப் பெருக்கினால் எப்படி இருக்கும் இவ்வுலகம்? சற்று கற்பனை செய்துபாருங்களேன்!

     வாழ்கஅறிவுச்செல்வம்               வளா்கஅறிவுச்செல்வம்


    Loading

  • சிந்திக்க அமுத மொழிகள் – 305(282)

    வாழ்க மனித அறிவு! வளர்க மனித அறிவு!!

    lotus

    சிந்திக்க அமுத மொழிகள் – 305(282)

     

    06-06-2020 — சனி

    பழக்கம் என்பது மிகவும் சக்தி வாய்ந்தது. எனவே நல்ல செயல்களையே பழகிக்கொள்ள வேண்டும்”   

    . . .    ஓர் அறிஞர்.

    பயிற்சி—
    1) என்ன கூறுகிறார் அறிஞர்?
    2) பழக்கம் என்பது என்ன?
    3) பழக்கம் என்பது மிகவும் சக்தி வாய்ந்தது என்றால் என்ன பொருள்?
    4) பழக்கம் என்பது சக்தி வாய்ந்தது என்று சொல்லி இருக்கலாம் அறிஞர். ஆனால் மிகவும் சக்தி வாய்ந்தது என்கிறார் அறிஞர். இதனை எவ்வாறு எடுத்துக் கொள்ள வேண்டும்?
    5) ஒழுக்கம் என்பதற்கும் பழக்கம் என்பதற்கும் ஏதேனும் தொடர்புள்ளதா?
    6) பழக்கத்திற்கும் எண்ணத்திற்கும் தொடர்புள்ளதா?
    7) இந்த அறிஞரும் வேதாத்திரி மகரிஷி அவர்களும் பழக்கம் மிகவும் சக்தி வாய்ந்தது என்கின்ற கண்டுபிடிப்பில் எவ்வாறு இணைகிறார்கள்?
    8) விளக்கம் என்பதற்கும் பழக்கம் என்பதற்கும் ஏதேனும் தொடர்புள்ளதா?
    9) பண்பேற்றம், பழக்கம், விளக்கம், ஒழுக்கம் இந்நான்கிற்கும் என்ன தொடர்பு?
    10) அறிஞர் ரூஸோ ஒழுக்க வாழ்வு பற்றி என்ன கூறுகிறார்? (இந்த இணையதள சத்சங்கத்தில் அது பற்றி உரையாடி இருக்கிறோம். Click here)
    11) ‘இளமையில் கல்’ என்று ஏன் கூறப்படுகிறது?
    12) ‘ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா?’ ,’தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும்’ என்பதற்கும் பழக்கத்திற்கும் என்ன தொடர்பு?
    13) இச்சிந்தனையின் முடிவில் நாம் என்ன முடிவிற்கு வர இருக்கிறோம்?
    14) வேதாத்திரியக் கல்வி முறையில் ஒழுக்கப்பழக்க அறிவு இடம் பெற்றிருப்பதாலும், கல்வி என்பது பள்ளியிலிருந்து ஆரம்பிப்பதால், கருத்தியலும், செய்முறையும் இணைந்த ஒழுக்கவியல் பாடம் ஒன்றாம் வகுப்பிலிருந்து பன்னிரண்டாம் வகுப்பு வரை மற்ற பாடங்களைப்போல் கட்டாயப் பாடமாக்க வேண்டும். இந்த புனித அலைகளை எல்லா அருளாளர்களையும் மனதில் நினைந்து வணங்கி வான்காந்தத்தில் பரவவிடுவோம்.

     

    வாழ்க திருவேதாத்திரியம்! வளர்க திருவேதாத்திரியம்!!

     

    வாழ்க அறிவுச் செல்வம்!                                                                  வளா்க அறிவுச் செல்வம்!!

    Loading