அறிஞர் பலர் அளித்துள்ள அறநூல்களே போதும். இனி அவசியமே இல்லை என்கிறாரே வேதாத்திரி மகரிஷி அவர்கள். ஏன் அவ்வாறு கூறுகின்றார்? அறநூல்கள் இனி அவசியமே இல்லை என்று கூறுபவர் அறம் ஊற்றெடுக்க தீர்வு என்ன கூறுகிறார்? (வாசிக்கவும் ஞா. க. க. எண். 533)
—————————-
அன்புடையீர்! தங்களின் மேலான கருத்துக்களை கருத்துரைக்க பகுதிக்கு அனுப்ப Click the link below
1. என்ன கூறுகின்றார் திரு. வி. க. அவர்கள்(1883-1953)?
2. அறத்தை அறியாதவர்களை மரத்தோடு ஒப்பிடுகிறாரே! எப்படி? என்ன விளங்கிக்கொள்ள வேண்டும்?
3. அடுத்த வரியில் அறம் என்றால் என்ன என்று தெரிந்தோ அல்லது தெரியாமலோ அதற்குப் புறம்பாக நடந்துகொள்கின்றவனை விலங்கிற்கு சமம் என்கிறாரே! எப்படி? என்ன விளங்கிக்கொள்ளப்பட வேண்டும்? வேதாத்திரி மகரிஷி அவர்கள்(1911-2006) மனிதர்கள் மக்களாகவும், மாக்களாகவும் இருக்கின்றனர் என்று ஆரம்பித்து இயற்றியுள்ள பாடலை* நினைவு கூறுவது நலம் பயக்கும்.
4. மூன்றாவது வரியில் அறம் என்றால் என்ன என்று அறிந்து கொண்டு அவ்வாறே நடப்பவன்தான் மனிதன் என்கிறார்? உண்மைதானே? மேலும் விரிவாக அறிந்து கொள்ளவேண்டியது என்ன? மீண்டும் மகரிஷி அவர்களின் பாடலை நினைவு கூறலாமே?
5. நான்காவது வரியில் அறத்தைக் காக்கும் அறிவே கடவுள் என்கிறாரே? இதுவும் சரிதானே? எப்படி? மீண்டும் மகரிஷி அவர்களின் பாடலை நினைவு கூற்வது நலம் பயக்கும்? எந்த வழியில் நலம் பயக்கும்?
6. நான்காவது வரியில் திரு. வி. க. கூறியிருப்பதனையே அவரது காலத்தில் சுமார் 42 (1953–1911=42) ஆண்டுகள் வாழ்ந்த, அவருக்கு இளையவரான வேதாத்திரி மகரிஷி அவர்கள் மனிதஇன தன்மாற்றத்தில்/பரிணாமத்தில் அறம் எப்போது தோன்றியதாகக் கூறுகிறார்?(ஞா.க. க.எண்.494) அறத்தை எவ்வாறு போற்றுகின்றார் ஒரு வரியில்? மேலும் அறத்தின் அங்கங்கள் என்னென்ன என்று கூறுகிறார்.
7. இன்று அறம் பற்றி நம்மை சிந்திக்க வைத்த அருட்பேராற்றலின் கருணையும், நம் குருநாதர் சூக்குமாக இருந்து கொண்டு நம்மை வழி நடத்திக் கொண்டிருப்பதையும் நினைந்து ஆனந்தமும், தன்முனைப்பில்லா பெருமையையும் அடைகிறோம் எனில் புண்ணியம், பெரும்பாக்கியம் செய்தவர்கள்தானே நாம் அனைவரும்?!
வாழ்க மனவளக்கலைஞர்கள்! வளர்க மனவளக்கலைஞர்கள்.
8. இச்சமயத்தில் வேறு அருளாளர்கள் அறம் பற்றி கூறியுள்ளதை நினைவு கூர்ந்து மகிழ்ந்து, அறம் ஊற்றெடுத்து சீவநதியாக ஓடக்கூடிய புதியதோர் உலகம் படைப்போம் என்கின்ற புனித எண்ண அலைகளை வான்காந்தத்தில் பரப்புவோம்.
தெய்வம் ஒன்றுதான். அவ்வாறிருக்கும்போது தெய்வநிலை அறிந்தவர்களில் இரண்டு வகையினர் எவ்வாறிருக்க முடியும்?
உயிரை உணர்ந்தவர்கள் தான் தெளிவாக தெய்வத்தை அறிந்தவர்களோ?
தெளிவாக அறிவறிந்தவர் ஒருவராகும் என்பதால் அறிவே தெய்வம் என அறிந்தவர்கள்தான் கோடியில் ஒருவரா?
அப்படியானால் வேதாத்திரி மகரிஷி அவர்களின் சீடர்களாகிய நாம் கோடியில் ஒருவரா? அந்த புண்ணியம், பெரும்பாக்கியம் செய்தவர்கள்தானே நாம் அனைவரும்?! அவர் கூறும் ஒருவர் இப்போது பலராகிவருகின்றனரா அவருடைய போதனையும் சாதனையும் கொண்ட மனவளக்கலையால்?
என்ன சொல்ல வருகிறார் மகரிஷி அவர்கள்? அதனை அறிய ஞானக்களஞ்சியம் பாடல் எண். 1693 ஐ வாசிக்கவும்.
வேறுயாராவது இது போன்று(in this context) கூறியுள்ளனரா?
வாழ்க வளமுடன்!
வாழ்க அறிவுச் செல்வம்! வளர்க அறிவுச் செல்வம்!!
அன்புடையீர்! தங்களின் மேலான கருத்துக்களை கருத்துரைக்க பகுதிக்கு அனுப்ப Click the link below
Please advise where I can buy your book, Naan Yaar? Thank you
மனிதன் உணர்ச்சி வயப்படும் பொழுது அறிவு வெளியே போய்விடும் என்பது சரியே. உணர்ச்சிவயத்தில் அறிவு கீழ் நிலையில் உள்ளது. அறிவு தெளிவாக சிந்திக்க முடிவதில்லை. இராஜயோகம் என்றாலே…
[…] சு. வாசன் Submitted on 06 Oct, 2015 at 7:04 am […]
[…] நாகேஸ்வரன் Submitted on 11 Oct, 2015 at 1:35 am […]
நான்கு அடி கவிக்கு 13 சிந்தனை வினாக்களா? பிரம்மிக்க வைக்கின்றன தங்கள் பயிற்சி முறைகள். நீங்களும் உங்கள் அன்புக் குடும்பமும் வாழ்க வளமுடன். நன்றி.
Unnötiges Drucken verursacht nicht nur unnötige Kosten für Papier und Tinte/Toner. Produktion und Transport dieser Verbrauchsmaterialien hat auch negative Auswirkungen auf die Umwelt. Jede nicht ausgedruckte Webseite hilft die Papierverschwendung zu reduzieren und damit die Umwelt zu entlasten.
Benutzen sie statt dessen bitte den PDF-Download auf der Seite, die Sie drucken wollten.
Powered by "Unprintable Blog" für Wordpress - www.greencp.de
Please advise where I can buy your book, Naan Yaar? Thank you
மனிதன் உணர்ச்சி வயப்படும் பொழுது அறிவு வெளியே போய்விடும் என்பது சரியே. உணர்ச்சிவயத்தில் அறிவு கீழ் நிலையில் உள்ளது. அறிவு தெளிவாக சிந்திக்க முடிவதில்லை. இராஜயோகம் என்றாலே…
[…] சு. வாசன் Submitted on 06 Oct, 2015 at 7:04 am […]
[…] நாகேஸ்வரன் Submitted on 11 Oct, 2015 at 1:35 am […]
நான்கு அடி கவிக்கு 13 சிந்தனை வினாக்களா? பிரம்மிக்க வைக்கின்றன தங்கள் பயிற்சி முறைகள். நீங்களும் உங்கள் அன்புக் குடும்பமும் வாழ்க வளமுடன். நன்றி.