இன்றைய விருந்து

  • அறிவிற்கு விருந்து2/2-25-10-2017

    வாழ்க மனித அறிவு            வளர்க மனித அறிவு

    lotus

    அ.வி.261

    25-10-2017-புதன்

    அறிவிற்கு விருந்து2/2

    28-3-2016-NEW- அவ்வையாா-தெளிவு

    அவ்வையார் கூறும் அந்த அறிவினர் யார்?

         அருட்தந்தை வேதாத்திரி மகரிஷிகளே ஆவார்.   ஆன்மீக உலகில் பல அறிவினர்கள் தோன்றியிருந்தாலும் சமீபத்தில் இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்த நம்மை அருள் துறையில் ஊக்குவித்து உயர்த்தி, சிறந்து விளங்க வைத்து,  அவர் நிலைக்கு உயர்த்துவதற்காக கருணையான  நல்லெண்ணம் கொண்ட இறையின் அவதாரமான மகரிஷி அவர்களே ஆவார்.

    அவ்வையார்கூறும்அப்படிப்பட்டஅறிவினர்யார்?

     ஏறக்குறைய நாற்பத்துஏழு ஆண்டுகளுக்கு முன்னர் ஆயிரத்து தொள்ளாயிரத்து எழுபதாம் ஆண்டு அன்பர்களுக்கு அழைப்பு விடுத்துள்ள வேதாத்திரி மகரிஷிகளாவார். அவரது அழைப்பை நினைவு படுத்திக் கொள்வோமே.

    anbargale vaareer-THAI ஆகவே,  பலநூற்றாண்டுகளுக்கு முன்னர் அவ்வையார்  “அறிவினரைச் சேர்வது இனியது” என்று கூறியது இப்போது,  இந்தநூற்றாண்டில், அறிவை அறிந்து அனுபவித்து,  “அறிவின் இருப்பிடம் அறிந்து இன்பமுற,  “அன்பர்களேவாரீர்” என உலக மக்கள் அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ள வேதாத்திரி மகரிஷி அவர்களின் வாயிலாக இயற்கை நடத்திக் கொண்டிருக்கின்றது. வாழ்க வேதாத்திரி மகரிஷியின் அறிவாற்றல்.

    வேதாத்திரியம் ஒரு பாரிஜாத மலர்:   

      வேதாத்திரியம் என்ன விருந்து படைக்கின்றது என்று வினவினால்,  வேதாத்திரியம் ஒரு பாரிஜாதமலர் என்பதுதான் பதில்.   ஒரு புராணக்கதையில் வரும் பாரிஜாதமரம் போன்றது வேதாத்திரியம்.

    அந்தப்புராணக்கதைக்கூறுவது:  தேவலோகத்தில் பாரிஜாதமரம் உள்ளதாகவும், அம்மரத்தில் பூக்கும் பாரிஜாதமலர் விரும்பியதை எல்லாம் கொடுக்கும் என்று அக்கதை கூறுகின்றது. மகரிஷியின் அறிவாற்றல், அதாவது வேதாத்திரியம் ஒரு பாரி ஜாதமலரைப் போன்றது. அப் பாரிஜாதமலரில் அறிவுத்தேன் நிரம்பிவழிகின்றது. அறிவிற்கு வேண்டிய விருந்தைத் தரும் மகரிஷியின் அறிவாற்றல். அறிவுத் தேனிக்களாகிய நாம் எல்லோரும் பருகிக்கொண்டு ஆனந்த போதையில் உள்ளோம். யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்பதற்கேற்ப, அவ்வறிவுத் தேனை மற்றவர்களும் பருகி ஆனந்தமடைய வழிகாட்டும் அறிவுத்தொண்டாற்றி மகிழ்ந்து, எப்போதும் இறைஅருளுக்குப்பாத்திரமாகி, அதே நேரத்தில் இப்பிறவிப்பயனை அடுத்தப்பிறவிக்கு தள்ளிப்போடாமல், இப்பிறவியிலேயேப் பெற்றிடுவோம். ஆம்! இப்பிறவியிலேயேப்பெற்றிடுவோம்!

    அறிவுத்தேனீக்கள்

    அறிவிற்கு விருந்தை எவ்வாறு தயார் செய்து அருந்த வேண்டும் எனத்தோன்றும்! அவ்வையார் கூறுவது போன்று மூன்றாம்நிலை இனியதைக் கொடுக்கக் கூடியதான அறிவினரைச் சேர்ந்து, நான்காம்நிலையும் இறுதியானதுமான அறிவினரைக் கனவிலும், நனவிலும் காண்பதாலும் அறிவிற்கான விருந்தை அருந்த முடியும். வயிற்றுக்கு விருந்து நாவிற்கு மிகுந்த சுவையைத் தரும். வயிற்றுப் பசியினைப் போக்கும். வயிறு, உணவிலுள்ள சாறை உடல் வளர்ச்சிக்காக எடுத்துக்கொண்டு, சக்கையை மலமாக வெளியே அனுப்பி விடுகின்றது. இப்படியாக வளர்ந்து வந்த உடல் மீண்டும் பஞ்ச பூதங்களாகி மறைந்து விடுகின்றது(மரணம்).

    ஆனால் அறிவிற்கு அளித்த விருந்து அப்படியாவதில்லை. உடல் அழிந்தாலும் அறிவிற்கு அளித்த விருந்து வம்சாவளி வம்சாவளியாகச் சென்று கொண்டிருக்கின்றது.  எப்படி?  கருமையத்தின் தரத்தை மேம்படுத்து வதற்காக அறிவிற்கு விருந்து அளிப்பதால், அளிக்கும் ஒவ்வொரு விருந்தும் அதற்குரிய தரமாற்றத்தை அளிக்கின்றது.  அந்த தரமாற்றம் என்றுமே அழியாத ஆன்மாவாகிய கருமையத்தில் பதிவதால், அந்த கருமையத்தின் செராக்ஸ் நகலே ஒருவரின் அடுத்த வம்சாவளி என்பதால் அறிவிற்கு அளிக்கும் விருந்தால் ஏற்படும் தரஉயர்வு தன்னுடைய வம்சாவளிக்குச் சென்றடையும். இவ்வாறாகத்தான், நல்ல தரமுள்ள வம்சாவளியை உருவாக்குவதன் மூலம் மனிதகுலத்தை உய்யச் செய்ய முடியும். இஃதன்றி மனிதகுலத்தை எவ்வாறு உய்வடையச் செய்ய முடியும்?  இது இயற்கையின் புனித ஏற்பாடு.

    அறிவிற்கு விருந்து தெளிவினைத் தரும். அது அறிவிற்கு ஆனந்தத்தைத் தரும். அதனால்தான் அவ்வையார் அறிவினரைச் சேர்ந்திருக்கச் சொல்கிறார். அறிவினர் என்று அவ்வையார் கூறுவது அறிவையறிந்த குருவைச் சோ்ந்திருக்கச் சொல்கிறார். அறிவையறிந்த குருவை அடைதலின் பயனை, திருமூலர் அருளிச் செய்துள்ள பாடலின் மூலம் நினைவிற்குக் கொண்டுவருவோம்.

    குருஅருளேதிருவருள்

    thelivu_guruvin

          அவ்வைத் தாய் கூறுவதனையும் நினைவுபடுத்திக்கொள்ளலாம்.

    தினசரி வாழ்வில் கடைபிடிக்க வேண்டிய நீதிகள்

                               ஆத்திச்சூடி

    1. சான்றோர் இனத்து இரு. (சான்றோர்களிடம் சேர்ந்திரு)
    2. பெரியாரைத் துணைக் கொள். (அறிவிற் சிறந்த பெரியவா்களை உனக்குத் துணையாக வைத்துக்கொள்)
    3. மேன்மக்கள் சொல் கேள். (உயர்ந்தவர்களுடைய சொல்லைக்கேட்டுநட)
    4. மூத்தோர் சொன்ன வார்த்தை அமிர்தம்.(பெரியவர்கள் சொன்ன வார்த்தை தேவாமிர்தம் போல் இன்பம் செய்யும்)

    moodhurai-ovvaiyar பொருள்: நல்லாரைக் காண்பது, அவர் சொல்லைக் கேட்பது, அவர் குணங்களைப் பேசுவதும், அவரோடு கூடியிருப்பது நமக்கு நல்லறிவையும் நல்லொழுக்கத்தையும் உண்டாகும். உலகநீதி

    மூத்தோர் சொன்ன வார்த்தைகளை மறக்க வேண்டாம்” …..என்கிறார் உலகநாதர்.

    மனிதனுக்கு வேண்டிய 133 அறிவிப்புகள்:   

    திருவள்ளுவர் 133 அதிகாரங்களை இயற்றியுள்ளார் என்றால் என்னபொருள்? அந்த 133 அதிகாரத் தலைப்புகள் தெரிவிப்பவைகள் அத்தனையும் மனிதனுக்கு அவசியமானது. சொல்ல வேண்டிய ஒரு வாழ்வியல் உண்மையை ஒரு குறளிலே சொன்னால் அது போதாது என்று எண்ணி பத்து கோணங்களில் கூறுவதற்குப் பத்து குறட்பாக்களில் கூறியுள்ளார். ஒழுக்கத்திற்கென்று தனி அதிகாரத்தை ஒதுக்கி பத்து குறட்பாக்களை அருளியுள்ளார்.  அதுபோல் அறிவைப் பற்றி பத்து பாக்களில் கூறி அறிவுடைமை அதிகாரத்தை ஏற்படுத்தியுள்ளார்.

    சமுதாயம் அதனைக் கண்டு கொள்ளவே இல்லை!?:

    இயற்கை, தனது மனிதகுலத் தன்மாற்ற தொழிற்சாலையில், விலங்கினப்பண்பால் மனிதகுலத்திற்கு வந்துவிட்ட பரிணாமக்கசடுகளை நீக்க, அறிஞர்கள் வழியாக அறநெறி அறவுரைகள் வழங்கினாலும்  சமுதாயம் அதனைக் கண்டு கொள்ளவே இல்லை. எப்படி, உடலுக்கு நோய் வந்தால் மருந்தைக் கொண்டு சரி செய்து கொள்ள மனித சமுதாயம் கண்டுபிடித்துள்ளதோ அதுபோல், பிறவிப்பிணிக்கு, இயற்கை இவ்வளவு அறநெறிகளை தனது மூத்த குழந்தைகளில் ஒரு சிலர் வழியாகத் தெரிவித்து வந்தாலும் மனித சமுதாயம்அதனை ஏற்றுக் கொள்வதில்லை. கைமேல் பலன் தரும் புலனின்பத்தை அனுபவித்துக் கொண்டு துன்பத்துக்குள்ளாகின்றது. இதனைத்தான்அறிஞர்கள் எல்லோருமே புலன்மயக்கம் என்கின்றனர்.

    எனவே புலன் இன்பம் மட்டுமே அனுபவிக்க ஆன்மா இந்த உடல் எடுக்க வில்லை. அதுதான் பிறப்பிற்கானக் காரணம் என்றால், ஆன்மா மீண்டும், மீண்டும் பிறவி எடுத்து வெறும் பிறப்பு-இறப்புசூழலில் (cycle mere of birth and death only?) சிக்கித் துன்பக் கடலில் தத்தளிக்கவேண்டுமா? சலிப்பிற்கும், நடைமுறையில் மனிதனால், அளவும், முறையும் கடைபிடிக்க முடியாமல் வரும் துன்பங்களுக்குக் காரணமான புலன் இன்பம் மட்டுமே அனுபவிக்கும் அற்ப நோக்கத்திற்காகவா, எல்லாம் வல்ல இறை ஆதி மனிதனிலிருந்து இன்றுவரை, கடலிலுள்ள நீர்த்துளிகள் எவ்வளவு என்று கணக்கிட முடியாதோ, அதுபோல், ஆதிமனிதனிலிருந்து இன்று வரைக் கணக்கிட முடியாத அளவில் பல கோடிகோடி மக்களாக வெறும், பிறப்பு –இறப்பு சுழற்சிக்காகவா தன்மாற்றம் அடைந்தது? இதிலே என்ன ரசனை இருக்கின்றது இறைக்கு? அல்லது இருக்கமுடியும்!

    முகம் பார்க்க கண்ணாடி வேண்டும்:

              இறையாகிய பேரறிவு, ஆதிநிலையில் வெளியாக இருந்தபோது இல்லாத சிறப்பினை மனிதவடிவில் தன்னை அறியும் போது பெறுகின்றது.  இந்த சுத்த அத்வைத தத்துவத்தை நமக்குத் தெளிய வைப்பதற்கு, மனிதனை “Man is a sophisticated God” என்பார் மகரிஷி அவர்கள். 

    God = man-impurities’ என்பார் மகரிஷி .

    Man is none other than God but with impurities such as ego, sinful imprints and maya.

    வெட்ட வெளியில் பேரறிவிற்கு உணர்வு கிடையாது. உணர்வு அடக்கமாக இருந்தது. ஆகவே பேரறிவிற்கு, மனிதனாகி இப்போது தன்னை உணர்ந்து பேரின்பம் அடைகின்ற நிலை, வெட்டவெளியாக இருந்த போது கிடையாது. இயற்கை இரகசியங்களை மனித அறிவின் மூலமாக அறிந்து மகிழ்ச்சி அடைகின்றது. முகம் பார்ப்பதற்குக் கண்ணாடித் தேவைப்படுவது போல், தன்னையே ரசிக்க பேரறிவிற்கு மனிதஉடலும், ஆறாம் அறிவும் தேவையாய் இருந்தது. முகம் பார்க்கக் கண்ணாடி வேண்டும். அழகனோ, அழகியோ தனது அழகினை இரசிக்கக் கண்ணாடி வேண்டும். கண்ணாடியே இல்லாத ஊரில் பிறந்த அழகனோ அல்லது அழகியோ எவ்வாறு தன் அழகினை இரசிக்க முடியும்?

    அதுபோல், இயற்கைக்கும்/இறைக்கும் தன் சிறப்பினை யெல்லாம் அறிந்து மகிழ்வதற்கு, மனிதவடிவக் கண்ணாடி தேவைப்பட்டது.

    இறைவன் கள்வன்??? !!!!

    என்ன இறைவன் கள்வனா?? மேலே கூறிய சுத்த அத்வைத நிலையினை ரசித்த ஓர் அறிஞர், இறையை கள்வன் என்கிறார். ஏனெனில் இறைவன் மனிதஉடலைக் கொண்டுதான் தன்னையே இரசிப்பதால் இறையை கள்வன் என்று இறையை அனுபவித்து, துவைதத்தில் சொல்கின்றார். சொல்வது துவைதம் தான். ஆனால்அறிஞர் அனுபவித்தது சுத்த அத்வைதம். சுத்த அத்வைதத்தை அனுபவிக்காமல் இப்படியொரு “இறைவன் கள்வன்” என்கின்ற உள்ளம் பூரிப்படைந்த ஆனந்த வர்ணனை வெளிவராது.

    அத்வைதியானாலும் நடைமுறையில் துவைதியாகத்தான் பேச முடிகின்றது, இருக்க வேண்டியுள்ளது. ஆனால் அத்வைத நினைப்பு அயரா விழிப்புநிலையில் இருக்கவேண்டும்உண்மையில் உடலும், அறிவும் இறைவன் தானே. மனிதன் யாரோ, அறிவு எதுவோ, கடவுள் யாரோஅல்லவே. “இறைவன் கள்வன்” என்பது அத்வைதத்தை அனுபவித்து சொல்வது மட்டும் துவைத்தில் சொல்வதாக உள்ளது. சுத்த அத்வைதத்தை ரசித்துஅனுபவித்து, சுத்த அத்வைதத்திலேயே சொல்வதென்றால் “இறையே தன்மாற்றம் அடைந்து மனிதவடிவில் அறிவாக இருந்து கொண்டு தன் பெருமைகளையும், தன்னையும்ரசிக்கின்றது. (God Himself enjoys His beauties, admirations and Himself) காஞ்சீபுரத்தில் இறைவனுக்கு கள்வன் என்கின்ற பெயரிலே கோயில் இருப்பதாகச்சொல்லப்படுகின்றது.

    ஏன் அசைந்தேனோ? – இறை(வெட்டவெளி)

    ஆனால் இப்பேறு பெற்ற மனிதன் புலன் இன்பங்களிலேயே மூழ்கி அல்லலுறுகிறான். வேதாத்திரி மகரிஷி அவர்கள், ஆதங்கமாகவும், வேடிக்கையாகவும் “ஏன் அசைந்தேனோ? இவ்வாறு மனித வடிவில் துன்பங்களை அனுபவிக்க வேண்டியுள்ளதே என்று இறைவன் நினைப்பான்” என்று  நகைச் சுவையாக,  ஆனால் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்துவார். ஆகவே ஆன்மா தனது பழிச்செயல் பதிவுகளை நீக்கிக்கொண்டு, மீண்டும் இப்பிறவியில் பழிச்செயல்கள்புரியாத அயராவிழிப்புடன் இருந்து, தன்னை உணர்ந்து, ஆன்ம உணர்விலேயே வாழ்ந்து பெருவாழ்வு வாழ்வதற்கு அறிவிற்கு விருந்தை அருந்துவதற்காக செய்ய வேண்டியவைகள் என்னென்ன?

    விருந்து  அருந்த அறிவுசெய்யவேண்டியவைகள்:

    1. முதலில் சரியான அறிவினரைத் தேடி அவருடன் இணைந்திருத்தல் வேண்டும்.
    2. அந்த அறிவினர் கூறும் அறநெறிகள் சரியானவையா என சுயசிந்தனையின் மூலம் வேதாத்திரி மகரிஷி அவர்கள் கூறுவது போல் “Information, Confirmation, Transformation”சோதித்து அறிய வேண்டும். அறிந்து நடந்து அதுபோல் நடக்கவேண்டும்.
    3. வானொலி, மற்றும் தொலைக் காட்சியின் வாயிலாக ஒலி, ஒளிபரப்பப்படும் நிகழ்சிகளான சான்றோர் சிந்தனைகளைக் கேட்க வேண்டும். செய்தித்தாளில் “அறிவோமாஆன்மீகம்” போன்ற பகுதிகளை ஆர்வமாகப் படிக்கவேண்டும்.
    4. மகரிஷி அவர்களின் வாழ்க்கை மலர்களிலுள்ள சிந்தனை விருந்தை அன்றாடம் தவறாமல் படிக்கவேண்டும்.
    5. அறிஞா்களின் அறநூல்களைத் தினந்தோறும் ஒருமணி நேரமாவது படிக்க வேண்டும்.
    6. சத்சங்கத்தில் நேரிடையாகக் கலந்து கொள்ளவேண்டும். வாய்ப்பில்லாதபோது அறநூல்களை தினந்தோறும் வாசிப்பதே சத்சங்கம். அந்த அறநூல்கள் அருளிய அறிஞரின் அறிவாற்றலுடன் இணைகிறோம்.
    7. இவைகளுக்கெல்லாம் வாய்ப்பில்லாதபோது தானே சிந்திப்பது பேரறிவோடு, சிற்றறிவு சத்சங்கத்தில் கலந்து கொள்வதேயாகும்.

    நவீன தொழில்நுட்பத்தில், www.prosperspiritually.com ஏற்பாடாகி அது சத்சங்கமாகப் பயன்பட்டு, கருத்துக்கள் பரிமாறிக் கொள்ளப்படுவதற்காகவே உருவானதுதான் இந்தஅறிவிற்கு விருந்துஎன்கின்றபகுதி. இதனைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு உலகசகோதரிகளும், சகோதரர்களும், அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.    வாழ்கவளமுடன். வாழ்க www.prosperspiritually.com வளர்க www.prosperspiritually.com.   guru_paadham

    வாழ்க அறிவுச் செல்வம்              வளர்க அறிவுச் செல்வம்.

     

    Loading

  • அறிவிற்கு விருந்து

    வாழ்க மனித அறிவு            வளர்க மனித அறிவு

    lotus

    அ.வி.260

    22-10-2017-ஞாயிறு

    அறிவிற்கு விருந்து1/2

    குறள் 491-421

    அறிவுடைமை:

    இன்று அறிவுடைமை(அறிவு+உடைமை, உடமை=செல்வம்) பற்றி சிந்திக்க இருக்கிறோம்.

    அறிவைப்பற்றிக் கூறவந்த திருவள்ளுவர், பொருட்பாலில் அறிவுடைமை என்கின்ற ஒர் அதிகாரத்தையே ஒதுக்கிப் பத்துக் குறட்பாக்களை அருளியுள்ளார். அதிகாரத்திற்கு “அறிவு” என்று பெயர் வைத்திருக்கலாம் திருவள்ளுவர். ஆனால் அறிவுடைமை எனப் பெயர் வைத்துள்ளார். காரணத்தோடுதான் அறிவுடைமை எனப் பெயா் வைத்துள்ளார். உடைமை என்றால் செல்வம் என்று பொருள். ஆகவே அறிவுடைமை எனப் பெயர் வைத்துள்ளதால், அறிவை செல்வத்திற்கெல்லாம் மேலான செல்வமாகக் கருதி, அறிவை அறிவுச் செல்வமாக்கிக் கொள்ள வேண்டுகிறார் நம்மையெல்லாம்.

    அறிவைப்பற்றிக் கூற வேண்டியதை எல்லாம் ஒன்பது குறட்பாக்களில் கூறிவிட்டு நிறைவாக அறிவைப்பற்றி ஒட்டு மொத்தமாக இரத்தினச் சுருக்கமாக (to sum up) கடைசிக் குறட்பாவில் மொழிவதைக் கவனிப்போம்.

    அறிவுடையார் எல்லாம் உடையவர்; அறிவிலார்
    என்னுடைய ரேனும் இலர்.”

    வேறொன்றும் இல்லாது இருந்தாலும் அறிவுடையவர் எல்லாம் உடையவரே ஆகிறார் என அழுத்தமாகக் கூறுகிறார். வேறு என்ன இருப்பினும், அறிவில்லாதவர், ஒன்றும் இல்லாதவர் ஆவார் என ஆதங்கத்தோடு கூறுகிறார். வாழ்க்கைக்கு வேண்டிய மற்ற எல்லா வளங்கள் இல்லாவிடினும், அறிவுவளம் இருப்பவர் எல்லாம் உடையவராகிறார் என்கிறார். அறிவு வளமில்லாமல் வாழ்க்கைக்கு வேண்டிய மற்ற வளங்களைப் பெற்றிருப்பவரை ஒன்றும் இல்லாதவர் என்கிறார்.

    அறிவுடையவர், அறிவில்லாதவர் என்று பிரித்து இருதரப்பினராகக் கூறியிருப்பதால் அறிவுடைய மனிதன், அறிவில்லாத மனிதன் என்று பொருளல்ல. உயிரினம் என்றாலே அறிவு உண்டு. மனித உயிரினத்திற்கு பிரத்தியேகமாக ஆறாவது அறிவு உள்ளது என மனிதன் கூறுகிறான். உண்மைதான். ஆறாவது அறிவை சரியாக, முறையாகப் பயன்படுத்தத் தெரியாது அறியாமையில் உள்ளவனுக்கு ஆறாம் அறிவு இருந்து என்ன பயன் என்று கருதிதான், அம்மனிதரை அறிவில்லாதவர் என்கிறார் அறிஞர் திருவள்ளுவர்.

    ஒரு “மனிதனை எல்லாம் உடையவர்” என்பது பற்றிய சமுதாயக் கருத்து என்ன? முதலில் வாழ்க்கைக்கு வேண்டிய செல்வ வளத்திலிருந்து எல்லாவளங்களும் பெற்று, பிறகு துன்பமிலா இன்பவாழ்வு வாழ்பவரை, எல்லோராலும் மதிக்கத்தக்க பெருவாழ்வு வாழ்பவரை, எல்லாம் உடையவர் என்று சமுதாயம் கூறும். இஃதெல்லாம் மனிதனுக்கு எவ்வாறு, எப்போது கிட்டும்?

    FFC-260-22-10-17-அறிவிற்கு-வி-பாரதியார்-பாடல்

    பாரதி கூறும் தெளிந்த நல்லறிவைக் கொண்டுதான்

    அறவழியில் செல்வம் ஈட்ட முடியும்,

    துன்பமிலா இன்ப வாழ்வு வாழ முடியும்,

    பெரு வாழ்வு வாழமுடியும்.

    பாரதியார் கூறும் நல்லறிவு வேண்டும்:

    இயற்கைக்கு வேறு வழியில்லை:

    இயற்கைக்கு/இறைக்கு நேரிடையாகவே மனிதனாக தன்மாற்றம் அடைய வேறு வழியில்லை. காரணம் ‘தன் தன்மாற்ற நிகழ்வுகளான’ அழுத்தும், ஒலி, ஒளி, சுவை, மணம் ஆகியவற்றை உணர்ந்த பிறகுதான் அவற்றிற்கு காரணமான மூலம் எது, அவற்றை உணர்ந்து கொண்டிருக்கின்ற தான் யார் என அறிய வேண்டியிருப்பதால் ஓரறிவு சீவ இனத்திலிருந்து ஐந்தறிவு சீவஇனங்களாக தன்மாற்றம் அடைந்து பிறகு மனிதனாக(ஆதி) தன்மாற்றம் அடைந்துள்ளது. வேறு வழியில்லாமல் பேரறிவு, விலங்கினங்களாகத் தன்மாற்றம் அடைந்து வந்து கடைசியாகத்தான், மனித இனமாக வந்ததால், அறிவுடன் சேர்ந்து விட்ட விலங்கினப் பண்பான பரிணாமக் கசடை(animal imprint as evolutionary effluent that has come out during the process of transformation of Consciousness from fifth sense living beings to sixth sense living beings) நீக்கினால்தான் திருவள்ளுவர் கூறும் அறிவிற்கான வரையறையை(definition of consciousness) தனிமனித அறிவு எய்த முடியும்.

    மனிதனும் ஆனந்தமய கோசமும்:

    விலங்கினத்திற்கும் மனித இனத்திற்கும் உள்ள வித்தியாசங்களில் ஒன்று மனிதன் ஐந்து கோசங்களில் ஆனந்தமய கோசத்தை அனுபவிப்பது. விலங்கினங்களின் அறிவு, ஐந்து கோசங்களில், அன்னமய கோசம், மனோ மயகோசத்தைத் தவிர மற்ற கோசங்களில் இயங்கத் தேவையில்லை; அவசியமும் இல்லை. ஆனால் மனிதன் அன்னமயகோசம், மனோமயகோசம் ஆகிய இரண்டிற்கு மட்டுமே முக்கியம் எனக் கருதாமல், மற்ற கோசங்களுக்கும் அதிமுக்கியத்துவம் கொடுத்து, பிராணமய கோசம், விஞ்ஞானமய கோசம், ஆனந்த மய கோசத்திற்கு உயர்ந்து வர வேண்டும். விஞ்ஞான மய கோசத்தில் அறிவு சிந்திக்கின்றது. சிந்தித்தலின் விளைவாக அடுத்த கட்டமான ஆனந்தமய கோசத்திற்கு வரமுடியும்.

    ஆனந்த மயகோசத்தில்தான் ஒருமனிதர் எல்லாம் உடையவராகிறார். எல்லாம் இருந்தும் ஆனந்தம் இல்லையென்றால் என்ன பயன்? தேங்காயை உடைத்து சாப்பிடத் தெரியாத நாயிடம் தேங்காய் கிடைத்தால் என்ன செய்யும் நாய்? உருட்டிக் கொண்டே இருக்கும் என்று ஆன்மீக நூல்கள் எடுத்து இயம்புகின்றன. கோசம் என்றால் ஆன்மாவின் இயக்க நிலையையும் எல்லை விரிவையும் குறிக்கும் சொல்லாகும்.

    அறிவு சிந்திக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்:

    ஆகவே அறிவு பிராணமய கோசத்திற்கு வந்து விஞ்ஞான மயகோசத்திற்கு வருவதற்கு ஆர்வம் கொள்ள வேண்டும். அதாவது சிந்திக்க வேண்டும். சிந்திக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். அதற்கு சிந்தனாப் பள்ளியில் (School of Thought) சேர்ந்து பண்பேற்றக் கல்வி படிக்க வேண்டும். அப்படியென்று ஒரு தனி பள்ளி உள்ளதா? உள்ளது. அதுதான் அவ்வைத்தாய் கூறும் இனியதை அனுபவிக்க அறிவினருடன் சேர்ந்திருத்தலும், மேலும்மேலும் அனுபவிக்க, அறிவினரைக் கனவிலும் நினைவிலும் காண்பதும் தான் அந்த சிந்தனாப் பள்ளி.

    மேலும் அறிவினருடன் சேர்ந்து இனிய பயனை அனுபவிக்க, வேதாத்திரி மகரிஷி அவர்கள் கூறுவதுபோல், அறிவினரை மதித்து நடந்து இயற்கையின், திறனான இயல்பூக்க நியதிப்படி தரத்தில் உயரவேண்டும். அவ்வை கூறும் நான்கு இனியவைகளில் கடைசியும் இறுதியுமான இரண்டையும் பெற்றால் அறிவு ஆனந்தமயகோசத்திற்கு வந்து விட்டது என்று பொருள்.

    அறிவிற்கு பசி வேண்டும்:

    இதற்கெல்லாம் அறிவிற்குப் பசி வேண்டும். வயிற்றுப் பசியைப் போக்குவதற்கு உணவு தரப்படுகின்றது. உணவால் உடல் மட்டுமே வளர்கின்றது. உடல் மட்டும் வளர்ந்து பயனில்லை. அறிவும் வளர வேண்டும்.(ஆளும் வளரனும், அறிவும் வளரனும் — திரைப்படப்பாடல் வரி) அறிவு வளர்வதற்கு உணவு அவசியம். அதுவும் விருந்தாக இருக்க வேண்டும். ஏன்? விருந்து என்றால் பல உணவு வகைகள் இருக்கும் ருசி ஊட்டப்பட்டிருக்கும். நாவிற்குச் மிகச்சுவையாக இருக்கும். ஆனால் தினந்தோறும் வயிற்றுக்கு விருந்து அவசியமில்லை. ஒரு காரணம் எல்லோரும் தினந்தோறும் விருந்து அருந்த வசதி இருக்காது. மற்றொரு காரணம், தினந்தோறும் விருந்தி அருந்தினாலும் வயிற்றுக்கு உபாதைகள் வரும். சலிப்பும் வரும்.

    அறிவிற்கு அளிக்கும் உணவு விருந்தாகவே இருக்க வேண்டும். விருந்து சாப்பிடுவதில் அறிவிற்கு சலிப்பே வராது. வயிற்றுக்கு அதிக உணவு அளித்தால் அசீரணம் வருவது போல் அறிவிற்கு விருந்து அளிப்பதில் எந்த வித கெடுதலும் வர வாய்ப்பில்லை. மாறாக அறிவு மேம்பட்டுக் கொண்டே வரும். பல்லாயிரம் பிறவிகள் தோறும் அறிவிற்கு விருந்தில்லாமல் அறிவு இளைத்து மனிதத்தில் பலவீனப்பட்டுள்ளது. ஆகவேதான் பரிணாமக்கசடான விலங்கினப் பண்பையே வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றது மனித அறிவு.

    ஆகவே சரியான அறிவினரைச் சோ்ந்து மதித்து நடந்தால், அறிவிற்கு எப்போதும் விருந்தையே அருந்துவதில் பஞ்சமே இராது. அட்சய பாத்திரம் போல் அறிவிற்கு விருந்து தடையின்றி எந்நேரமும் கிடைத்துக் கொண்டே இருக்கும். இது நிச்சயம். அறிவினரைச் சோ்தலால் அறிவிற்கு விருந்து கிடைப்பதால் அது இனிதாகத்தானே இருக்கும். அறிவினரைச் சேர்தலால் எவ்வகையான விருந்து அறிவிற்கு கிடைக்கும்?

    அறிவிற்கு எவையெல்லாம் விருந்தாக இருக்க முடியும்?

    1) அறிவு எதனை அறிவதற்காக இந்தப் பிறவி எடுத்ததோ அதுபற்றிய உண்மை விளக்கங்கள்,
    2) தன்னுடைய பூா்வீகம் பற்றிய உண்மைகள்,
    3) வாழ்க்கையைப் பற்றிய எதார்த்தம் புரிதல்,
    4) துன்பமிலா இன்ப வாழ்வு வாழ்வதற்கான வழிவகைகள்,
    5) அதற்கு மேலும் தனது பூர்வீக சொத்தான அமைதியை அனுபவித்தல்
    6) பேரின்பத்தில் திளைத்தல்,
    7) சமுதாய அக்கறை ஏற்படுதல்,
    8) சலிப்பில்லா பயனுள்ள வாழ்க்கை வாழ்தல்,
    9) சுருங்கச் சொல்வதெனில் சிந்தனைச் செல்வத்தை அறிவின் உச்சத்திற்கு வளர்ப்பது
    போன்ற அறிபூர்வமான உண்மைகள் எல்லாம் அறிவிற்கு விருந்தாக இருக்கும்.

    அவ்வையார் கூறும் அந்த அறிவினர் யார்? அடுத்த அறிவிற்கு விருந்து நிகிழ்வில்(25-10-2017–புதன்) அறிவோம்.

    வாழ்க அறிவுச் செல்வம்              வளர்க அறிவுச் செல்வம்.

     

    Loading

  • C259-இனிதினும் இனிது அறிவினரைக் கனவிலும் நனவிலும் காண்பதுதானே! 10/10

     

    இனிதினும் இனிது அறிவினரைக் கனவிலும் நனவிலும் காண்பதுதானே! 10/10

    FFC – C259 

                                 

    08-01-2017-ஞாயிறு 

         சென்ற விருந்திலிருந்து, துறவு பற்றி திருவள்ளுவர், மற்றும் மகரிஷி அவர்கள் கூறுவது பற்றி ஆராய்ந்து வருகிறோம். அதனைத் தொடர்ந்து இந்த விருந்திலும் மேலும் மகரிஷி அவர்கள் துறவு பற்றி கவிகள் மற்றும் உரைநடை வாயிலாகவும் கூறுவதனை அறிந்து கொள்வோம்.

     sanyasam

                     பாடலின் பொருள்: முதலில் ‘வியாசம்’ என்கின்ற வார்த்தைக்குப் பொருள் காண்போம். ‘வியாசம்’ என்றால்

    1)   விரிவு

    2)   கட்டுரை

    3)   பகுத்தறிவு என்று பொருள்.

    கட்டுரை என்றால் ஒன்றைப் பற்றி விரிவாக தகவல் தந்து எழுதுவது.

        இப்போது ‘தன்வியாசம்’ என்கின்ற சொல்லிற்கு வருவோம். தன்வியாசம் என்றால் தன்னைப்பற்றிய சரித்திரத்தை, விரிவாக, முழுவதுமாக பகுத்தறிவோடு அறிவது.

         அடுத்ததாக சன்யாசம் என்கின்ற சொல்லிற்கு வருவோம்.

     சன்யாசம் என்றால் நடைமுறையில் உள்ள பொதுவான விளக்கம் யாதெனில்: — உலகப் பற்று, குடும்பப் பாசம், முதலியவற்றை விடுத்த நிலை, துறவு என்று பொருள்.

     

       கவியின் பொருளுக்குள் செல்வோம். தன்னுடைய பூர்வீக சரித்திரத்தை முழுவதுமாக பகுத்தறிவோடு அறிந்த அறிவாளி, சத்து, சித்து, அனந்தனாகிய தன்வியாசம் அறிந்தவர் வாழும் நிலையினை விளங்கிக் கொள்ளாத மக்களால், ‘குடும்பப் பொறுப்பை உதறிவிட்டு, சன்யாசம் மேற்கொண்டு விட்டார்’ என்றுத் தவறாக ‘சன்னியாசம்’ என்கின்ற சொல் பயன் படுத்தப்பட்டு வருகின்றது.

     சந்யாசிக்கும் பசிக்கும்.

     சந்யாசிக்கும் உடை தேவை.

    சந்யாசிக்கும் உறைவிடம் தேவை.

     

    ஆகவே சாதாரண மனிதனுக்குத் தேவையான உணவு, உடை, உறைவிடம் சந்யாசிக்கும் தேவை.

    அவர், மக்களிடமிருந்து வேறுபட்டுக் காண்பதில் எவ்வாறு வித்தியாசப்படுகின்றார்?

    இன்பம் துய்த்தலில் அளவும், முறை இருக்கும்.

    ஒழுக்க நெறி கொண்ட வாழ்வு வாழ்வார்.

    நிலையில்லாத தன்மையை நினைவில் கொண்டு மக்களுடனே மக்களாக வாழ்வார்.

    POST 29-4-15-FFC-78- இனிதி-  ஈட்டல்-29-4-15 RCD FR NAG

     

    இது வரை மகரிஷி அவர்கள் துறவு பற்றி கவியின் வாயிலாகப் பேசியவற்றைக் கேட்டோம்.

    இப்போது உரைநடை வாயிலாகத் துறவு பற்றி மகரிஷி அவர்கள் நம்முடன் பேசுவதைக் கேட்போம்.

    1)   துறவறம் என்பது உறவிலே கண்ட உண்மை நிலைத் தெளிவே!

    2)   துறவை விடுதலையோடு (liberation) இணைத்துப் பேசுவதைக் கேட்போம். உண்மையை உணர்ந்த அறிவின் தெளிந்த கருத்தே துறவு, அதுவே விடுதலை. அது என்ன விடுதலை? அஞ்ஞானி புலன்களில் சிறைப்படுத்திக் கொண்டு(get trapped by his own senses) வாழ்வதிலிருந்து விடுபட்டு, அளவும், முறையும் காத்து வாழ்வது விடுதலை எனப்படுகின்றது. மீண்டும் பிறவியில்லை என்பதே துன்பச் சிறையிலிருந்து விடுதலைதானே!

     

    3)   காயினை மூடிவைத்து கனியச் செய்வது போன்றது உலகியலோடு ஒழுகி இல்லறம் ஆற்றாத துறவு.   —- இன்னும் ஏன் அச்சம் நமக்கு இறைவனை நாடுவதில்? வேதாத்திரிய இறை உணா் ஆன்மீகத்திற்கு அச்சம் தேவையில்லை. ஆம், அச்சம் தேவையில்லை!   எல்லா நிலைகளிலும் வழிகாட்டும் மந்திரங்களைக் கொண்டிருக்கின்றது இயற்கை/இறை மனிதகுலத்திற்கு கருணையோடு அருளியுள்ள திருவேதாத்திரியம்.

    4)   உற்ற உலகிலோடொழுகி இல்லறம் ஆற்றிப் பெற்ற அறிவின் உயர்வே பெருந்துறவு.

     

    5)   துறவையும் உள்ளத்தூய்மையும் இணைத்துப் பேசுவதைக் கவனிப்போம். உறவிலே அமைந்துள்ள உண்மையை உணர்ந்திடு. துறவிலே உள்ள உள்ளத்தூய்மை பெற்றுய்யலாம். ஆகவேதான் மகரிஷி அவர்கள்,

    அறநெறியில் விழிப்புடனும், பொறுப்புடனும் செயல்களாற்றி,

    எண்ணம், சொல், செயல் ஆகியவற்றில் தூய்மை அடைந்துவிட்டாலும்,

     இறை உணா்வு பெறுவது அதனுடன் முழுமை அடையாதலால், அதாவது முதல் இரண்டு படிகளிலே முடிவு பெறாமையால்,

    பாடலின் அடுத்த நான்கு வரிகளில் துறவைப் பற்றித் தெளிவடைந்த உயர்அனுபவத்தைக் பேரின்ப நிலைகளின் மூன்றாவதும் மற்றும் நான்காவதும் இறுதியுமான படிகளாகக் கூறுகிறார் மகரிஷி அவர்கள்.

     6) வெறுத்து ஒதுக்குவது துறவாகாது, அறிந்து உணர்ந்து, தொடர்பு மற்றும் உறவினைச் சரியாகக் கணக்கிட்டு அளவு முறையுடன் அனுபோகம் கொள்ளும் விழிப்பு நிலை கொண்ட மனநிலைதான் துறவு என்கிறார் மகரிஷி அவர்கள். மேலும் துறவி என்பவர் யார் எனக் கூறுவதனைக் கவனிப்போம்.

    துறவி பற்றி ….

    துறவறத்தான் என்பவர், பொருளீட்டிக் காப்பதைத் தவிர்த்து, அறிவுத் துறையில் உயர்ந்து, அதாவது அறிவின் இருப்பிடம் மற்றும் சரித்திரம் அறிந்து பிறர்க்கு எடுத்துச் சொல்லி தொண்டாற்றுபவர் என்கிறார் மகரிஷி அவர்கள்.

        நான்கு வாரங்களாக ‘இனிதினும் இனிது அறிவினரைக் கனவிலும் நனவிலும் காண்பதுதானே!’ என்கின்ற தலைப்பில், அறிவினரான வேதாத்திரி மகரிஷி அவர்களை, அவ்வையார் கூறுவது போல் நினைவு கொள்வது எப்படி என்று ஆராய்ந்து வந்திருக்கிறோம். அறிவினரைக் கனவிலும், நனவிலும் காண்பது என்பது வார்த்தைக்கு உள்ள பொருளில்(literal meaning) எவ்வாறு சாத்தியம் எனத் தோன்றலாம். அவ்வையார் அறிவினரோடு பாமரன் சேர்ந்ததால் ஏற்படும் பிணைப்பின் தீவிரத்தின் (intensity of bond between Guru and disciple) அளவை வேறு எவ்வாறு கூறமுடியும்? அவ்வையார் கூறுவது போல் அறிவினரைக் கனவிலும், நனவிலும் காண்பது சாத்தியமா என்பதற்கு வருவோம்.   அறிவினர் கூறும் அறிவுரைகளை சிரமேற்கொண்டு, ரசித்து. மதித்துக்கும் நிலை சீடனுக்கு இருக்குமேயானால் அறிவினரோடு பிணைப்பு அதிகமாகும்.

       சுருங்கச் சொல்ல வேண்டுமெனில் மூச்சுவிடுவதுபோல் சிந்தனை   செயல்பட ஆரம்பித்தால், இறையின் திருவிளையாடல் இல்லாத எந்த நிகழ்ச்சியும் இல்லை என்பதால் அங்கே இறைவனின் திருவிளையாடலைக் கண்டு ஆனந்தப்படலாம். அவ்வாறு ரசிக்கும் போது கூடவே அறிவினரின் நினைப்பும் வந்துவிடும். அறிவினரோடு சேர்ந்த பலன்தானே எப்போதும் சிந்திப்பது!

       இனிதினும் இனிது அறிவினரைக் கனவிலும், நனவிலும், காண்பதுதானே என்று சிந்திக்க ஆரம்பித்து, இயல்பூக்க நியதியினை மனிதன் தன்னுடைய பண்பேற்றத்திற்கு எவ்வாறு பயன்படுத்திக் கொண்டு, பிறவிப்பயனை அடைவது என்பதனை அறிந்து கொண்டோம்.   அத்துடன் மகரிஷி அவர்கள் பிறவிப்பயனை அறிந்து, தான் எவ்வாறு இறை உணர்வு பெற்றார் என்கின்ற அனுபவத்தையும் அறிந்து

    கொண்டோம். இறை உணர்வு என்பது சாதாரணமானவர்களுக்கு அரிதாக இருந்ததை சாதாரணமானவர்களும் இறை உணா்வு என்கின்ற புனிதச் சொற்றொடரை அன்றாட வாழ்வில் பயன்படுத்தவும், அதற்கான பயிற்சிகளையும் முயற்சியோடு மேற்கொள்ளும் காலம் திருவேதாத்திரியத்தால் ஏற்படுத்தப்பட்டுவிட்டது என்பது இயற்கையின் தன்மாற்ற சரித்திரத்தில் முக்கிய திருப்புனையாகும். வாழ்க திருவேதாத்திரியம். வளர்க திருவேதாத்திரியம்.

       வேறொரு சமயத்தில் பிறவிப்பயன் என்பது என்ன, அதனை எவ்வாறு கண்டுபிடிப்பது, அதனை எவ்வாறு அடைவது, இறை உணர்வு என்பது முறையான – சரியானத் துறவையும் அடக்கிக் கொண்டது என்பதனையும் பார்ப்போம். ஏற்படுத்தப்பட்டுவிட்டது என்பது இயற்கையின் தன்மாற்ற சரித்திரத்தில் முக்கிய திருப்புனையாகும். வாழ்க திருவேதாத்திரியம். வளர்க திருவேதாத்திரியம்.

       வேறொரு சமயத்தில் பிறவிப்பயன் என்பது என்ன, அதனை எவ்வாறு கண்டுபிடிப்பது, அதனை எவ்வாறு அடைவது, இறை உணர்வு என்பது முறையான – சரியானத் துறவையும் அடக்கிக் கொண்டது என்பதனையும் பார்ப்போம். இன்றைய சிந்தனையை மகாகவி பாரதியாரை நினைவு கூர்ந்து வணங்கி முடித்துக் கொள்வோம். வாழ்க வளமுடன்.

    POST 29-04-15-FFC-78-இ இ ஏன ஏழுது பாரதி

     மகாகவி பாரதியார் தான் எழுதுவது எப்படியெல்லாம் இருக்க வேண்டும் என வாணியை வேண்டுகிறார்.

    1)   தெளிவான சிந்தனை வேண்டும் என்கிறார்.

    2)   தெளிவான பேச்சு வேண்டும் என்கிறார்.

    3)   தெளிவான எழுத்து ஆகிய மூன்றும் வேண்டும் என வேண்டுகிறார் மகா கவி பாரதியார்.

    வாழ்க பாரதியாரின் அறிவாற்றல். எட்டட்டும் பாரதியாரின் அறிவாற்றல் எல்லோருக்கும். மகாகவி பாரதியார் கூறுவது போன்றுதானே பாரதியாரின் இளவலான வேதாத்திரி மகரிஷி அவர்களின் எழுத்துக்களும் பாடல்களும் உள்ளன?  வாழ்க திருவேதாத்திரியம். வளா்க திருவேதாத்திரியம்.

       அடுத்த விருந்தில் புதியதொரு சிந்தனையில் சந்திப்போம்

    Loading

  • C258-இனிதினும் இனிது அறிவினரைக் கனவிலும் நனவிலும் காண்பதுதானே! 9/?

    இனிதினும் இனிது அறிவினரைக் கனவிலும் நனவிலும் காண்பதுதானே! 9/?

    FFC – C258

    04-01-2017—புதன்

    சென்ற விருந்தில், திருவேதாத்திரியத்தின் 1849 ஆம் மந்திரமான ‘இன்பம் இன்பம் இன்பம் இன்பம்’ என்கின்ற தலைப்பின் கீழுள்ள பாடலின் முதல் நான்கு வரிகளில், மகரிஷி அவர்கள், தான் இறைமையை அடைவதற்கானத் தேவைகளை எவ்வாறு பூர்த்தி செய்தார் என்று கூறியுள்ளதனை அறிந்து கொண்டோம். இன்றைய விருந்தில், உலக மக்கள் வாழும் இப்போதைய நிலையில், உலகமக்களுக்கு, இறைமைக்கு வழிகாட்டவும், அதன் விளைவாக உலக சமாதானத்தை, மக்கள் மனங்களிலே வித்திடச் செய்யவும், மகரிஷி அவர்களை கருவியாக்கி, உயர்த்தி, அவருள் இறை/இயற்கை அன்னை, ஏற்படுத்திய புரிதல் அனுபவங்களை அடுத்த நான்கு வரிகளின் வாயிலாக அறிவோம். பிறவியின் நோக்கம் இறை உணர்வு பெறுவது. அதற்கு மனத்தூய்மை அவசியம். எனவே இறை உணர்வு பெறுவதற்கான உளப்பயிற்சியும், மனம் தூய்மை பெற அறநெறியில் விழிப்புடனும், பொறுப்புடனும் செயல்களாற்றி மனம் தூய்மையானபோது பேரானந்தம் அடைந்ததாகக் கூறுகிறார் மகரிஷி அவர்கள் முதல் நான்கு வரிகளில். மனம் தூய்மையாவதால் பெறும் பேறு இறை உணர்வு. மனம் தூய்மை அடைந்துவிட்டது, விளைவாக இறை உணர்வு பெற்றாகிவிட்டது. பிறவியின் நோக்கம் நிறைவேறிவிட்டது. பிறவியின் நோக்கத்தை அறிந்த போது என்று ஆரம்பித்த பாடல் அந்த நான்கு வரிகளோடு, பாடலை முடித்திருக்கலாமே இறை/இயற்கை. அப்பாடலை முடிக்காமல், மேலும் நான்கு வரிகளை இயற்றச்செய்துள்ளது இறை/இயற்கை. எனவே மகரிஷி அவர்கள் அடுத்த நான்கு வரிகளை இயற்றியுள்ளார். ஆகவே இறை உணர்வு பெற்றது/பெறுவது என்பது அறநெறியில் ஒழுக்கம், கடமை, ஈகை ஆகியவைகளை உள்ளடக்கிய அறநெறி வாழ்க்கையோடு முடிந்துவிடுவதில்லை எனத்தெளிவாகத் தெரிகின்றது. அந்தக் கடைசி நான்கு வரிகள் கூறுவதென்ன?

    POST 26-04-2015-FFC-77 இ இ உறவுகளில் கடைசி நான்கு வரிகளில் உறவு, துறவு பற்றி கூறுகிறார். வாழ்க்கை உறவு இல்லாமல் நடைபெறாது. உறவிற்கு எதிர் சொல்போல் இருக்கின்ற துறவைப் பற்றிக் கூறுகின்றார். ஆனால் மகரிஷி அவர்கள், சமுதாயம் கொண்டுள்ள பொருளில் துறவினை ஆதரிக்கவில்லை. ஆனால் மகரிஷி அவா்கள்,

    மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்

    பழித்தது ஒழித்து விடின்”

    என்று திருவள்ளுவர் கூறுகின்ற நிலையில் துறவு பற்றி கூறுகிறார்.

    மகரிஷி அவர்கள் துறவை, பொதுவாக சமுதாயம் கொண்டுள்ள பொருளில் ஆதரிக்க வில்லையாயினும், பிறவியின் நோக்கத்தை அடைந்த தன் அனுபவத்தைக் கூற வந்த மகரிஷி அவா்கள், உறவையும் துறவையும் இணைத்தும்,

    சரியானத் துறவுநிலை என்ன என்று அறிந்து, அதனை உயர்வானதாக உணர்ந்ததை மூன்றாவது நிலையாகவும், முடிவாக அத்துறவு நிலையினை அடைந்ததை நான்காவதும், இறுதியுமான பேரானந்த நிலைகளாகக் கூறி அப்பாடலை முடித்து வைக்கிறார் ஆன்மீக விஞ்ஞானத்தின் சிகரத்திற்கே சென்றுள்ள மகரிஷி அவர்கள்.

    அப்படியானால் துறவு பற்றி மகரிஷி அவர்கள் கூறுவதென்ன என்று ஆராய்வோம். துறவு பற்றி மகரிஷி அவர்கள் பல்வேறு இடங்களில் கூறியுள்ளதை கவனத்திற்கு கொண்டு வருவோம்.

    1) உறவிலே கண்ட உண்மை நிலை துறவு என்கிறார். இதற்கு அவா் கூறும் உதாரணமாவது:- தூங்கும் வரை தலையணை தேவையாய் இருக்கின்றது. விழித்த பிறகு தலையணைத் தேவையில்லை. விழித்த பிறகு யாரும் தலையணையைத் தூக்கிக் கொண்டு செல்வதில்லை. என்கின்ற உதாரணத்தைக் கூறுவார். தேவையிருக்கும்போது அப்பொருளின் நினைவு இருக்கலாம். தேவையை முடித்துக் கொண்ட பிறகு அப்பொருளை மறந்துவிடவேண்டும். பசி உணர்வு ஏற்படும்போது உணவின் மீது எண்ணம் செல்லலாம். ஆனால் பசி உணர்வு தீர்ந்த பிறகு உணவின் மீது எண்ணம் அவசியமில்லை. உணவின் மீது எண்ணம் கொண்டிருப்பதே வாழ்க்கையாகிவிடக் கூடாது. அன்பர்களை அறிவின் இருப்பிடம் அறிந்து இன்பமுற அழைப்பு விடுக்கும்போது ”தின்றுத் திரிந்து உறங்கவாப் பிறந்தோம்” என்று கூறி அறிவுறுத்துவதனை நினைவில் கொள்ள வேண்டும்..

    2) “பற்று அற்ற கண்ணே பிறப்புஅறுக்கும்; மற்று நிலையாமை காணப்படும்.” ……………………………………. என்கிறார் வாசுகி என்கின்ற மாதர்குல ரத்தினத்தை இல்லத்தரசியாக்கிக் கொண்டு வாழ்ந்த, இல்லறத்து ஞானியான திருவள்ளுவர். திருக்குறளில் அறத்துப்பால், பொருட்பால் ஆகிய இரண்டுடன் இன்பத்துப்பாலையும் சேர்த்தவர், அறத்துப்பாலில் துறவறவியலில் பத்துக் குறட்பாக்களையும் எழுதியுள்ளார். திருவள்ளுவர் காலத்திற்குப் பிறகு, 19 நூற்றாண்டுகளுக்குப் பிறகு திருவள்ளுவருக்கு மானசீகச் சீடராகிய வேதாத்திரி மகரிஷி அவர்கள் இல்லறத்தை வலியுறுத்தியும் அதே நேரத்தில் இல்லறத்திலேயே துறவு பற்றியும் கூறியிருக்கிறார். மகரிஷி அவர்கள் கூறும் துறவறம் என்பது என்ன? எப்படி இல்லறமும், இல்லறத்தைத் துறந்து துறவறமும் ஒன்று சோ்ந்து இருக்க முடியும் என ஐயம் எழலாம். என்ன கூறுகிறார் மகரிஷி அவர்கள் என ஆராய்வோம்.

    ஆங்கிலத்திலே சொல்லும் போது “Detached attachment” தேவை என்பார் மகரிஷி அவர்கள். ‘Detachment’, ‘attachment’ ஆகிய இரண்டு எதிர்ச் எதிர்சொற்கள் இணைந்த “Detached attachment” சொற்றொடரை (phrase) உருவாக்கியிருக்கிறார். தமிழில் கூறும்போது ‘பற்றற்ற பற்று’ வேண்டும் என்பார். அப்படியானால் பற்று இல்லாமல் இருக்க முடியாது என்று புரிந்து கொள்ள முடிகின்றது. ஆனால் அந்த பற்று பற்றற்றதாக இருக்க வேண்டும் என்றல்லவா பொருளாகின்றது. எப்படி?

    அதாவது உணவில் உப்பும் தேவை. ஆனாலும் உப்பு மிகுந்து விடக் கூடாது. உப்பில்லா பண்டம் குப்பையிலே. உப்பு அவசியம் என்றாலும், உப்பு அதிகமாகிவிட்டாலும் உணவு, உண்ணப்படுவதற்கானத் தகுதியை இழந்துவிடும். எனவே உணவிற்கு உப்பைச் சேர்க்கும் போது எவ்வளவு கவனம் தேவையோ அதேபோல் இல்லறத்திலேயே துறவறம் நடத்த வேண்டும். அந்த துறவறம் என்ன என்று தெரிந்து கொள்ள வேண்டும். இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டுமென்றால் தாமரை இலை போல் வாழ்க்கை வாழ வேண்டும். அதாவது தாமரை இலை தண்ணீரிலேயே வாழ்ந்தாலும், தண்ணீரைத் தன் மீது ஒட்டிக் கொள்ளாமல் வாழ்கின்றது. அதுபோல் மனித வாழ்க்கை என்பது உறவில்லாமலும் வாழ முடியாது. அந்த உறவே சிக்கலை ஏற்படுத்திவிடும்படியும் ஆகிவிடக்கூடாது. உறவு என்றால் மனிதர்களோடு தொடா்பு கொள்வது மட்டுமல்ல. பொருட்களோடு தொடர்பு கொள்வதும் அடங்கும். ஒருவரை சார்ந்திருக்கும் மனிதா்களின் எண்ணிக்கை மற்றும் தேவைக்கு மேல் பொருட்கள் அதிகமாக அதிகமாக  ஒருவரின் சுதந்திரம் பறிபோகும் என்பார் மகரிஷி அவர்கள். சுதந்திரம் பறிபோவது என்பது துன்பம்தானே? இதனையே திருவள்ளுவர்

    யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்

    அதனின் அதனின் இலன்.”                                 என்கிறார்.

    இதற்கு என்ன பொருள்? ஒருவா் எந்தெந்தப் பொருள்களிலிருந்து பற்று நீங்கி இருக்கின்றாரோ, அந்தப் பொருள்களிலிருந்து அவருக்குத் துன்பம் இல்லை என்கிறார் திருவள்ளுவர், துறவு என்கின்ற அதிகாரத்தின் முதல் குறளிலேயே. இது உண்மைதானே! திருவள்ளுவரை மானசீகக் குருவாக ஏற்றுக் கொண்ட மகரிஷி அவா்கள் வகுத்துக் கொடுத்துள்ள தற்சோதனைப் பயிற்சியின் இரண்டாவது அங்கமான ஆசை சீரமைத்தலில் வெற்றி அடைந்தவர் வள்ளுவர் கூறும் துன்பத்திலிருந்து விடுதலை அடைந்தவர்தானே?

    வள்ளுவர் கூறுவதிலுள்ள நியாயத்தை–தர்க்க சாஸ்திரத்தைப் ‘logic—the Science of reasoning’ ஐ பார்ப்போம். பொருட்கள் நிலையில்லாதது. மாறக்கூடியது. அழியக் கூடியது. ‘நான் யார்–தத்துவ–-உண்மை’ யின் படி, மனிதன் அழியக் கூடிய உடலல்ல. அழியாத ஆன்மாதான் மனிதன். பிறவிச் சுழற்சியை முடித்துக் கொள்ள, அழியாததிலிருந்து (மெய்ப்பொருள்) வந்த, அழியாதது (ஆன்மா) எதனுடன் பிணைப்பை வைத்துக்கொள்ள வேண்டும்? அழியாததுடன்தானே பிணைப்பை வைத்துக் கொள்ள வேண்டும். அதாவது ஜீவாத்மா பரமாத்மாவுடன் பிணைப்பை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். அந்த பிணைப்பை ஏற்படுத்தித் தருபவர் தான் அறிவை அறிந்த அறிவாளி. அழியும் பொருட்களோடு பிணைப்பை வைத்துக் கொண்டு என்ன செய்துவிடப் போகிறான் மனிதன்? கீதாசாரக் கருத்தை நினைவிற்கு கொண்டு வாருங்கள். வந்த நோக்கம் அழியாத பொருளைப் பற்றிக் கொண்டு அழியாத பொருளாக மாற வேண்டும், அதனைத் தவிர்த்துவிட்டு, அறவே அதனை மறந்துவிட்டு, அழியும் பொருட்களோடு அளவும் முறையும் இன்றி உறவு வைத்துக் கொண்டால் விளைவு துன்பம்தானே வரும். மீண்டும் மீண்டும் அழிகின்ற பொருட்களோடு தொடர்பு ஏற்படுத்திக் கொண்டு, வள்ளுவப் பெருந்தகை கூறும் பிறவிப் பெருங்கடலில் தத்தளித்துக் கொண்டிருக்க வேண்டிய நிலைதான் உருவாகும்.

    ‘இல்லறம் துறவறம்’ என்கின்ற தலைப்பில்(560—581) 22 பாக்களை இயற்றியுள்ளார் மகரிஷி அவர்கள். அவற்றில் சிலவற்றைப் பார்ப்போம்.

    POST 26-04-2015-FFC-77-இ இ இல்லறமும் கருத்துரை: துறவறம் என்பது எண்ணத்தில் இருக்க வேண்டும் என்கிறார். அகம் துறவறத்தை ஏற்க வேண்டும். அகமாக உள்ளது இறைதானே?! அதாவது இயற்கையின் எதார்த்தம் விளங்கியத் தெளிந்த தெளிவு வேண்டும். எண்ணமே இயற்கையின்/இறையின் சிகரம், எண்ணம் இயற்கையின்/இறையின் சிறப்பு, இயற்கைக்கோ/இறைக்கோ, பற்று தான் இருக்கின்றதா? இல்லையே! ஆகவேதான் இயற்கையாகிய/இறையாகிய எண்ணத்தில் துறவு வேண்டும் என்கிறார் மகரிஷி அவர்கள். ஜீவாத்மா இறைமையை எய்துவதற்கு எண்ணத்தில்தானே துறவு இருக்க வேண்டும். புற வேடங்களிலும், சொல்லிலும் துறவு இருந்து என்ன பயன்? எண்ணத்தில் துறவு இருந்தால்தானே, “அவன் நீ ஒன்றாய் அறிந்த இடம் அறிவு முழுமை, அது முக்தி” என்று திருவேதாத்திரியம் தனது முதல் மந்திரத்திலேயே இயம்பியுள்ளது சாத்தியமாகும். மேலும் துறவு பற்றி மகரிஷி அவர்கள் கவிகள், உரைநடைகள் வாயிலாகவும் என்ன கூறியிருக்கிறார் என்று அடுத்த விருந்தில் பார்ப்போம். தொடரும்…

    Loading