இன்றைய விருந்து

  • C252-இனிதினும் இனிது அறிவினரைக் கனவிலும் நனவிலும் காண்பதுதானே! 3/?

    C252-இனிதினும் இனிது அறிவினரைக் கனவிலும் நனவிலும் காண்பதுதானே! 3/?

    C252-FFC –

    14-12-2016—புதன்

    ‘இனிதினும் இனிது அறிவினரைக் கனவிலும் நினைவிலும் காண்பதுதானே’ என்பது எவ்வாறு நடைபெறுகின்றது என ஆராய்ந்து வருகிறோம். இந்த தலைப்பைக் கொடுத்தது அவ்வையாரே என்பதால் அவர் அருளிய பாடல்கள் வழியாகவே ஆராய்ந்தோம். இருப்பினும், அறிவை அறிந்த அறிவினர், வேறு யாராவது இது பற்றிக் கூறியிருக்கின்றார்களா என்று ஆராய்ந்ததில் நம்மிடையே எழுந்தருளுபவர் அறிஞர் திருமூலர். எனவே, இப்போது அறிஞர் திருமூலர் கூறுவதையும் நினைவு கூர்வோம். அறிஞர் திருமூலர் அறிவினரைச் சேர்ந்து எவ்வகையிலெல்லாம் இனிதை அனுபவிக்க முடியும் என்று கூறுவதைக் காண்போம்.

    FFC-71-தெளிவு குருவின்- to post on 4-4-15

    இக்கவியில் திருமூலர் குருவைச் சேர்தல் தெளிவு என்கிறாரே! ஆனால் அவ்வையார் அறிவினரைச் சேர்தல் இனிதிலும் இனிது என்கின்றாரே என ஐயம் எழலாம். இந்த இரண்டு மகான்களின் கருத்துக்களை ஒப்பிட்டுப் பார்க்க வேண்டிய கடமை நமக்குள்ளது. அவ்வாறு ஒப்பிட்டுப் பார்க்கும்போது. இரண்டு ஐயங்கள் எழலாம்.

    1) அறிவினரும் குருவும் ஒரே தன்மையானவரா? அதாவது ஒரே ஆளுமையுடையவரா?

    2) தெளிவும், இனிதினும் இனிதும் ஒன்றா?

    அறிவுடையோர், குரு ஆகிய இருவரும் ஒரே இனத்தவரா, அதாவது ஒரே தன்மையானவரா என சற்று விரிவாகப் பார்ப்போம்.

    அவ்வையார் மூன்றாவது இனிதாக அறிவினரைச் சேர்தல் என்கிறார். நான்காவது இனிதாக அறிவுடையோரைக் கனவிலும் நனவிலும் காண்பது தானே என்று ஆச்சரியத்துடன் நம்மிடமே வினவுகிறார். நாம்தான் இதற்குப் பதில் சொல்ல வேண்டும். நாம் சொல்லாமல் வேறு யார் பதில் சொல்ல முடியும்? பயனாளியைத் தவிர வேறு யார் உண்மையைச் சொல்ல முடியும்?

    அறிவினர் என்பவர் யார்? அறிவுடையவரா? மனிதன் என்றாலே எல்லோரிடமேதான் அறிவு உள்ளது. அப்படியானால் எல்லோருமே அறிவினரா? இருக்க முடியாது. அறிவை அறிந்தவர், அறிவினர். ‘அறிவு’ மற்றும் ‘இனம்’ என்கின்ற இரு சொற்களும் சேர்ந்து வந்ததுதான் அறிவினர் என்கின்ற சொல். இனம் என்றால் பல வகைகளை உள்ளடக்கியப் பெரும் பிரிவு என்று பொருள். அறிவு இனர் என்றால் அறிவின் இருப்பிடம், இயக்கம், பூரணம், சிறப்பு, முழுமை ஆகியவைகளை அறிந்தவர் அறிவினர் ஆவார். அறிவை விட பெரும் பிரிவு வேறு ஏது? எனவே இனம் என்கின்ற சொல்லின் பொருளான ‘பல வகைகளை உள்ளடக்கியப் பெரும் பிரிவாகிய’ அறிவை அறிந்தவர் அறிவினர். அந்த அறிவினரைச் சோ்தல் மூன்றாவது இனிதாகக் கூறுகிறார்.

    நான்காவது இனிதைக் கூறும்போது, ‘அறிவுடையோரைக் கனவிலும் நனைவிலும் காண்பது தானே’ என்கிறார். அங்கே அறிவினர் என்கிறார். இங்கே அறிவுடையோர் என்கிறார். இவர் வேறா? அறிவினர்தான் அறிவுடையோர். எல்லோருக்கும் ஆறாம் அறிவிருந்தும், அது புலனளவிலே மட்டும் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது. மாறாக புலன்களைக் கடந்து, அறிவு நிலையிலே அறிவை செயல்பட வைத்துக் கொண்டிருப்பவர்களே அறிவுடையராவார். புலன்களுக்கும் அப்பாலும் அறிவை செயல்படுத்துபவர்களே அறிவை உடையவர்களாகக் கருத முடியும் என்பதால் அறிவுடையோர் என்கிறார், அறிவினர் மற்றும் அறிவுடையோர் ஆகிய இருவருமே ஒருவா்தான்.

    திருமூலர் கூறுகின்ற குரு என்பவர் யார்? குரு என்கின்ற சொல்லுக்கு ஆசிரியர், ஆசான், முன்னுதாரணமாக இருப்பவர் என்று பெயர். ஆசிரியர் என்பவர் எதற்காகத் தேவைப்படுகிறார்? அறிந்து கொள்ள வேண்டியதை அறியாமல், அறியாமையில் இருக்கும் போது தேவைப்படுகிறார். எனவே குரு என்பவர் அறியாமையைப் போக்குபவர். மேலும் பண்டைய ஆன்மீக நூல்கள் குருவைப்பற்றிக் கூறுவதனைக் கவனத்தில் கொள்வோம். ‘குரு’ என்கின்ற சொல்லில் கு – ரு என்கின்ற இரண்டு எழுத்துக்கள் உள்ளன. ‘கு’ என்கின்ற சொல் அறியாமை அல்லது ஞானமடையாத அஞ்ஞான நிலையைக் குறிக்கின்றது. ‘ரு’ என்கின்ற எழுத்து, அருள் அல்லது கருணை என்கின்ற சொல்லில் வரும் இரண்டாவது எழுத்து, ஆகவே ஒருவரின் அறியாமையை எவர் ஒருவர் தனது அருளால் போக்குகின்றாரோ அவரே குரு எனப் போற்றப்படுவர்.

    மனிதனின் அடிப்படைத்தன்மையை, அதாவது சுயத்தை தெரிந்து கொள்ளாது இருக்கும் நிலையை நீக்கி, அருள்பவா் ஆன்மீகக் குருவாவார். அதாவது அறிவுநிலையில் குன்றியவரை, தனது அருளால் அறிவுநிலையில் உயர்த்துபவரை, ‘குன்றியதிலிருந்து’ என்கின்ற சொல்லிருந்து முதல் எழுத்தாகிய ‘கு’ வை எடுத்துக் கொண்டும், அருள் என்கின்ற சொல்லில் உள்ள ‘ரு’ என்கின்ற இரண்டாவது எழுத்தையும் எடுத்துக்கொண்டு ஒரே சொல்லாக்கியது தான் ‘குரு’ என்கின்ற காரணப் பெயர். குரு என்பவருக்கு விளக்கம் பார்த்தோம். குருவும் அவ்வையார் கூறும் அறிவினா்/அறிவுடையோரும் ஒருவரா என அறிய வேண்டும். குரு என்பவர் அறியாமையை நீக்குகிறார். அறிவினரோடு சோ்வதாலும் அறியாமை நீங்குகின்றது. எனவே திருமூலர் கூறும் குருவும் அவ்வையார் கூறும் அறிவினா்/அறிவுடையோரும் ஒரே தன்மையைக் கொண்டவரே (same personlity). ஆகவே முதல் ஐயத்திற்கு விளக்கம் கண்டாகிவிட்டது. இரண்டாவது ஐயமான ‘இனிதினும் இனிதும்’, ‘தெளிவும்’ ஒன்றா என்கின்ற ஐயத்தைப் போக்கிக் கொண்டால் திருமூலர் கூறும் நான்கு வழிகளில் எவ்வாறு தெளிவு கிடைக்கின்றது என அறிவோம்.
    தெளிவு என்பது அறிவு மேம்பட உதவும். அறிவை விசாலமடையச் செய்யும். அறிவுக்கு விளக்கம் கிடைக்கும். தெளிவு என்பது அறிதல், விளக்கமுறல். அறிவு தெளிந்தால்தான் நல்லறிவாக இருக்கும். தெளிந்த அறிவு பாவங்களைச் (தீயவைகளைச்) செய்யாது. எனவே சமுதாயத்தை, ‘தெளிந்த நல்லறிவு வேண்டும்’, என இறைவனை வேண்டச் சொல்கிறார் மகாகவி பாரதியார் ஒரு பாடலில்.

    தெளிவில்லாமல், பல பிறவிகளாக இருட்டில் வாழ்ந்து கொண்டிருக்கும் அறிவிற்கு ஒளி கிடைத்து அது அறிவொளியாகிவிட்டால், அது அவ்வையார் கூறும் இனிதினும் இனிதாகத்தானே இருக்க வேண்டும். திருமூலர் கூறும் முதல் வழி என்ன?

    1) தெளிவு குருவின் திருமேனி காண்டல்:
    இந்த வரி கூறுவதென்ன? குருவினுடைய திருமேனியைக் காண்பது தெளிவைக் கொடுக்கும் என்கிறார் அறிஞர் திருமூலர். இது எப்படி சாத்தியமாகின்றது? தெளிவு அறிவிற்குரியது. அப்படியிருக்கும்போது, அறிவிற்குரியது எப்படி திருமேனியைக் கண்டால் ஏற்படுகின்றது? அது அவருடைய அனுபவமோ?! அது அவருடைய அனுபவமாக இருந்தாலும், அது எல்லோருக்கும் பொதுவானது என்பதால்தான் அதனை பாடல் வாயிலாக சமுதாயம் பயன்பெறுவதற்காகக் கூறியுள்ளார். திருமூலர் வாழ்ந்தது பல நூற்றாண்டுகளுக்கு முன்னர், அன்று சொன்னதை இன்று, அதனைப் பயன் பெறும் வகையில் நாம் சிந்திக்கவில்லையா? பண்டைக் காலத்தில் குருகுலக் கல்வி முறையிலே, குருவின் நடை, உடை, பாவனையிலிருந்தும் கல்வியைக் கற்றுக் கொண்டனர்.

    குரு என்பவர் அகம் தூய்மையானவர். அகத்தினை உணர்ந்தவர். எனவே அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பதால், குருவினது பார்வை என்பது அருள் பார்வை. அகத்தில் உள்ளதைத்தான் முகமும், உடலும் எடுத்துக் காட்டும். மேலும் உடலுக்குள்ளே இருக்கும் தூய்மையான அகம், முகம், உடல் மூலம் பிரதிபலிக்கும். நாம் பார்ப்பது அவரது உடலை என்றாலும் அவர்கண்களும் எண்ணமும் நம்மீது அருளைப் பாய்ச்சுமல்லவா? அந்த புனித நிகழ்வால் சீடனின் தெளிவில்லாத அறிவு தெளிவு பெருகின்றது. எனவே குருவின் திருமேனி காண்டல் தெளிவைத் தரும் என்கிறார் திருமூலர்.

    2) தெளிவு குருவின் திருநாமம் செப்பல்:

    இது எவ்வாறு சாத்தியமாகின்றது. திரு நாமம் என்பது குருவினுடைய பெயர். குருவின் பெயர் அவரது உடலைக் குறிக்கின்றதா? அல்லது அவரது அறிவைக் குறிக்கின்றதா? குருவின் பெயர் அவரது அறிவாற்றலைக் குறிக்கின்றது. அறிவில் அறிவாய் நிலைத்து அறம் வகுத்து அதனை வாழ்ந்து காட்டுகின்றவர் குருவாக உள்ளதால் அவரது அறிவாற்றல் முழுமை அடைந்துவிடுகின்றது. அவரது அறிவின் முழுமையைச் சொல்வதென்றால் அது ஒன்றா, இரண்டா? ஆனால் அவ்வளவையும் ஒரு சொல்லால் சொல்வது எளிது. எனவே குருவின் பெயர் என்பது அவரது அறிவின் முழுமையெல்லாம் ஒன்றடக்கிய சுருக்கிய புனிதச் சொல்(abbreviated divine word). மேலும் குருவின் பெயர் மந்திரம் போன்றது. குருவின் பெயர்கள் நாமவளி போன்றது.

    நாமவளி என்றால் என்ன? ஒரு குறிப்பிட்ட தெய்வத்தின் பெயர் வரிசையாகும்(string of names of a deity for chanting). அதுபோல் குருவினுடைய பூரணத்துவத்தை அறிந்து பயனடையும் சீடன், அவரை வெவ்வேறு பெயா்களால் அழைத்து இன்பம் காண்பான். இது குருவிற்காக செய்யப்படுவதில்லை இது, சீடன் பயன்பெற வேண்டி இயற்கையில் அமைந்துள்ள யுக்தி என்றே சொல்லலாம். ஆகவே குருவின் பெயரைச் சொல்லும் போது அவருடைய அறிவின் முழுமை அவன் மனக் கண்முன்னே வந்து நிற்கும். அந்நிலை உருவானால் மெல்ல, மெல்ல சீடனின் அறிவினில் ஞானத் தெளிவு ஏற்படத்தானே செய்யும். இதனைத்தான் திருமூலர் “தெளிவு குருவின் திருநாமம் செப்பல்” என்கிறார்.
    அடுத்ததாக திருமூலர் கூறும் மூன்றாவது வழிக்குள் செல்வோம்.

    அடுத்த விருந்தில்  தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல், தெளிவு குருஉரு சிந்தித்தல் ஆகிய இரண்டைப்பற்றியும் அறிவோம். தொடரும்.

    Loading

  • C251-இனிதினும்  இனிது அறிவினரைக் கனவிலும் நனவிலும் காண்பதுதானே! 2/?

     

    இனிதினும்  இனிது அறிவினரைக் கனவிலும்

    நனவிலும் காண்பதுதானே! 2/?

    C251-FFC 

                            11-12-2016—ஞாயிறு

     

    சென்ற விருந்தில்  ஏகாந்தம் இனிது, அதனினும் இனிது ஆதியைத் தொழுதல், மற்றும் அதனினும் இனிது அறிவினரைச் சேர்தல் பற்றியும் ஆராய்ந்தோம். இன்று அறிவுள்ளோரைக் கனவிலும், நனவிலும் காண்பது எல்லாவற்றையும் விட எவ்வாறு இனிதாக இருக்கின்றது என ஆராய இருக்கின்றோம்.

     4)  அறிவுள்ளோரைக்கனவிலும்நனவிலும்காண்பதுஅதனினும்இனிது:

         இனியவைகளில், அளவில்அதிகமானதும், நான்காவதுமானஇனிது என்பது,அறிவுள்ளோரைக் கனவிலும், நனவிலும் காண்பது என்கிறார் அவ்வையார்.இனிதினும் இனிது வரிசையில் அறிவுள்ளோரைக் காண்பதைக் கடைசியாகக் கூறுகிறார் அவ்வையார்.  இனியது எது என முருகன் அவ்வையாரிடம் கேட்டதற்கு நான்கோடு நிறுத்திவிட்டார் அவ்வையார்.  அப்படியானால் இதற்கும் மேலும் இம்மண்ணுலக வாழ்க்கையில் வேறு ஏதும் இனிதினும் இனிது இல்லை என்பதுதான்.  இனியது எது என்கின்ற கேள்விக்கு நான்கோடு பதில் நின்று விட்டது.  வேறு ஏதும் இனிதினும் இனிது இல்லாததால் இயற்கை/இறை நான்கோடு பதிலை நிறுத்தி விட்டது.

         அறிவுள்ளோரைக் கனவிலும் நனவிலும் காண்பதே  இனிதினும் இனிதாகிவிடுமா? எவ்வாறு அது இனிதினும் இனிதாகின்றது? வாழ்நாள் முழுவதும், அறிவுள்ளோரைக் கனவிலும் நனவிலும் கண்டு இனிதினும் இனிதை அனுபவிப்பதோடு முடிந்துவிடுவதுதானா வாழ்க்கை?  அறிவுள்ளோரைக் கனவிலும் நனவிலும் காண்பது என்பது மனிதனின் செயல்.  இயற்கையின் நீதியின்படி மனிதனுடைய செயலுக்கு அவனுடைய நோக்கம், திறமை, தொடர்பு கொள்ளும் பொருள், காலம், இடம்  ஆகிய ஐந்து காரணிகளைக் கொண்டு, உரிய விளைவு, உரிய நேரத்தில் வரும் என்பதால் இனிதினும் இனிது என்கின்ற விளைவோடு நின்று விடுகிறதா?   செயலுக்கு விளைவு உண்டு என்பது உண்மைதான் என்றாலும் ஒரு செயலுக்கு ஒரு விளைவு தான் என்று இயற்கை நீதி சொல்லவில்லையே.  ஒரு செயலுக்குத் தொடர் விளைவு இருக்கலாமன்றோ. ஒரு சில செயலுக்கு முதலில் ஒரு விளைவும், அத்துடன்அது முடிந்திடாமல், தொடா்ந்து வாழ்நாள் முழுவதும்கூட விளைவுகள் வரலாம்.

        இனிதினும் இனிதிற்கானத் தொடர் விளைவு என்னவாக இருக்கும்?

    பிறவிப்பயனை அடைவதே.  பிறவிப்பயன் என்பது என்ன?  மனிதனாகப் பிறந்தவன், ஆறாம் அறிவுடையவனாக இருப்பதால் ஞானம் பெற வேண்டும்.  ஞானம் என்பது என்ன?  ஆறாம் அறிவின் தெளிவினிலும் தெளிந்த நிலை.  இதுதான் மனிதன் பிறவி எடுத்ததற்கான உச்ச கட்டப் பயன்.  யாரும் விரும்பிப் பிறப்பதில்லை.  வினைப்பயனை அனுபவிப்பதற்காக  பிறவி தோன்றிவிட்டது ஆன்மாவிற்கு. ஆகவே எவ்வாறு வாழ வேண்டுமோ அவ்வாறு வாழ்ந்து, மீண்டும் பிறவாதிருத்தலாகும்.  இதனை, அவ்வையார் கூறும் மற்றொரு கவி உறுதி செய்கிறது.

        “அரியது எது” எனக் கேட்ட முருகனுக்கு, அவ்வையார் கூறும் பதிலைப் பாருங்கள் !

    அரியது எது?

    அரியது கேட்கின் வரிவடி வேலோய் !

    அரிதரிது! மானிடர் ஆதல் அரிது!

    மானிட ராயினும் கூன், குருடு, செவிடு,

    பேடு நீங்கிப் பிறத்தல் அரிது !

    பேடு நீங்கிப் பிறந்த காலையும்,

    ஞானமும், கல்வியும் நயத்தல் அரிது !

    ஞானமும், கல்வியும் நயத்த காலையும்,

    தானமும், தவமும், தான்செய்தல் அரிது !

    தானமும், தவமும் தான்செய்பவர் ஆயின்

    வானவர் நாடு வழிதிறந் திடுமே !

                                                           …. அவ்வையார்.

    இப்பாடலின் விளக்கம், தானாகவே விளங்குவதாக உள்ளது.

    1)   உயிருக்கு மனிதப் பிறவி கிடைப்பது அரிது தானே!  உயிர், ஓரறிவிலிருந்து ஐந்தறிவு வரை பல பிறவிகள் எடுத்த பிறகுதான் மனிதப் பிறவி கிடைத்துள்ளதால், மானிடராய்ப் பிறத்தல் அரிது என்கிறார் அவ்வையார்.

    2)   அப்படியே மானுடப் பிறவி கிடைத்தாலும் உடலளவிலும், மனஅளவிலும் குறைபாடுகள் இல்லாமல் பிறப்பது அரிது என்கிறார்.

    3)   அப்படியே குறைகள் நீங்கிப் பிறந்தாலும், ஞானத்தையும், கல்வியையும் விரும்புதல் அரிது.

    4)   அப்படியே ஞானத்தையும், கல்வியையும் சிறப்பாக அடைந்தாலும், தானமும் தவமும் செய்வது அரிது.

    5)    இப்படியாக எல்லா அரிதினையும் கடந்து வந்து, தானத்தையும் தவத்தையும் ஒருமனதாகச் செய்து வருவார்களானால், வானவர் நாடு வழியைத் திறக்கும்.  அதாவது வீடுபேறு கிட்டும் என்கிறார்.

    அதாவது பிறவிப்பயன் கிட்டும். பிறவிப் பயன் என்பது இன்பத்திற்கெல்லாம் பெரிதானது. ஆகவே அறிவினரைச் சேர்தலும், அவரைக் கனவிலும் நினைவிலும் காண்பதும், வீடுபேறு கிட்டக்கூடிய பயனைத் தரும். வீடுபேறு, இறுதியான  (ultimate) இன்பத்தினைத் தருவதால் அது பேரின்பமாக கொள்ளப்படுகின்றது.  வீடுபேற்றைப் பெறுவதற்காக, அறிவை அறிந்த அறிவினத்தாரை சேர்தலும், அவரைக் கனவிலும் நினைவிலும் காண்பது, ஆரம்ப நிலையிலேயே  இனிதினும்    இனிதாகத்தானே

    இருக்கும்.  இனிதினும் இனிதாக இருந்தால்தானே கடைசிவரை ஆன்மீகச் சாதகன் தொடா்ந்து பயிற்சியில் நீடித்துப் பயனைப் பெறமுடியும்.

        இப்போது, கனவிலும், நினைவிலும் என்பதற்கு வருவோம். அதாவது தூங்காமல்விழித்துக்கொண்டிருக்கும்போதும் (நினைவிலும்), தூங்கும்போதும்(கனவிலும்)  காண்பதுஇனிதுஎன்கிறார்அவ்வையார்.  இன்னும் நேரிடையாகச் சுருங்கச் சொல்ல வேண்டுமென்றால் அறிவினருடன் சேர்தல்  என்பது சம்பிரதாயமாக இருக்கக்கூடாது என்கிறார்.  அறிவினருடன் சோ்ந்தமையின் அளவைக் கூறுகிறார்.  அறிவினருடன் சோ்ந்ததில் என்ன அளவு உள்ளது என ஐயம் எழலாம்.   அறிவினருடன் சேர்ந்தமையால் ஏற்படுகின்ற பிணைப்பில் ஏற்படும் ஆர்வமிகும் ஆர்வத்தைக் கூறுகிறார். அந்த ஆர்வமிகும் ஆர்வம் (intense desire) இல்லாவிடில் கனவிலும் நனவிலும் காண்பது என்பது  எவ்வாறுசாத்தியமாகும்?

         விழித்துக்கொண்டிருக்கும்போதுஅறிவுள்ளோரைகாண்பதுசாத்தியம்.  அறிவினர்களைநேரில்சந்திப்பதால்அவர்களைக்காண்பதுசாத்தியமாகின்றது.  அறிவினர்களைச்சந்திக்காதபோதும்  அவர்களைநினைவில்கொண்டுவந்துபார்க்கலாம். இதுசாத்தியமென்றாலும்,பெரும்பாலோருக்கு சாத்தியமாவதில்லை.  பெரும்பாலோருக்கு சாத்தியமாகி இருந்திருந்தால் வேதாத்திரி மகரிஷி அவர்கள் கீழ்கண்ட கவியினை எழுத வேண்டிய அவசியமே இருந்திராது.

    FFC-70- image-சாதனையே அறநெறி

     

     

    அதற்குக் காரணம், அவா்களின்கருமையத்திற்கும்அறிவினரின்கருமையத்திற்கும்ஈர்ப்புஇல்லாததேயாகும். அதாவது அறிவினர் கூறும் அறிவுரைகளுக்கும் பெரும்பாலோர்  பழகிய பழக்கத்திற்கும் உள்ள இடைவெளி அதிகமாக இருத்தலே காரணம். உதாரணத்திற்கு, காதலர்கள்காதலிக்கும்காலத்தில்நேரில்சந்திக்காவிட்டாலும்ஒருவரையொருவர்எப்போதும்நினைந்து

    கொள்வதுசாத்தியமாகவில்லையா?  ஏனெனில்இருவரும்ஒருவரைஒருவா்காதலிக்கின்றனர்.  அதுபோல்அறிவினரைக்காதலிக்கவேண்டும்.  அந்தக் காதலில் சிலர்  உடலளவில்காதலிப்பதுபோன்றுஅன்றுகுரு-சீடர்காதல்.  குருவிற்குக்கீழ்படிதலும்,அவரின்போதனைகளைவிரும்புவதாகவும்இருக்கவேண்டும்குரு-சீடர்காதல்.  குருவின் அரிய பெருமைகளைப் போற்றி மகிழ வேண்டும்.  அறிவினர் பூதவுடலில் இருந்தால் அவரை அடிக்கடி நேரில் சந்திக்க விரும்ப வேண்டும்.  அறிவினர் பூதஉடல் இல்லை என்றால் அவரது வாழ்க்கைச் சரித்திரத்தை, அவர் எழுதிய நூல்களை ஆர்வத்துடன் வாசிக்க வேண்டும்.  சத்சங்கத்தில் மனமுவந்து கலந்து கொண்டு நல்லவைகளை ஆராய வேண்டும்.

    சீடனுக்கும் அறிவினரான குருவிற்கும் இடையில் கருமைய ஈர்ப்பு காதல் இருந்தால் இது சாத்தியமாகும்.

    எவ்வாறுகாதலர்கள்காதலிக்கும்காலத்தில்இரவிலும்,தூக்கத்திலும்நினைந்துகொள்வதும், கனவிலும்ஒருவரைஒருவா்காண்பதுசாத்தியமாகின்றதோ,அதுபோல்குரு-சீடர்பிணைப்பு  மலர்ந்துவிட்டால்கனவிலும்குருவைக்காண்பதுசாத்தியமாகி பிறவிப்பயனை அடைவது சாத்தியமாகும்.

    இதுவரைஅவ்வையார் கூறிய நான்காவது இனிதாகிய அறிவினைரைக் கனவிலும் நினைவிலும் காண்பது எவ்வாறு சாத்தியம் என்றும் இனிதினும் இனிதாக இருக்கும் என ஆராய்ந்தோம். அடுத்த அறிவிற்கு விருந்தில் அறிஞர் திருமூலர், அறிவினரைச்சேர்தல் எந்தெந்த வகையில் இனிதாக இருக்கும் என்று கூறுவதனை அறிய இருக்கிறோம்.  ….தொடரும்.

    வாழ்க அறிவுச் செல்வம்   வளர்க அறிவுச் செல்வம்

    Loading

  • C250-இனிதினும்  இனிது அறிவினரைக் கனவிலும் நனவிலும் காண்பதுதானே! 1/?

     

    C250-FFC

     இனிதினும்  இனிது அறிவினரைக் கனவிலும் நனவிலும் காண்பதுதானே! 1/?

     

                              07-12-2016-புதன்

         வேதாத்திரி மகரிஷி  அவர்கள் கண்டுபிடித்த இயற்கையியல்/இறையியல் மற்றும் வாழ்வியல் உண்மைகள்/கண்டுபிடிப்புகள் பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் பாடங்களாக போதிக்கப்படுகின்றன.  அவர் எந்த பல்கலைக்கழங்களிலும் படித்துப் பட்டம் பெறாதவர்.  ஒரு முறை அமெரிக்காவில் அருளுரை ஆற்றிய பிறகு கேட்கப்பட்ட வினாக்களுக்கெல்லாம் தயக்கமின்றி விடை அளித்ததை வியந்து ஒருவர், மகரிஷியை ‘எந்த  University ல் படித்தீர்கள்’  என்று கேட்டதற்கு மகரிஷி அவர்கள் கூறிய பதில் –  “I studied in the city of Universe”. உண்மைதானே.  அவர் படித்ததெல்லாம் பிரபஞ்சம் எனும் பல்கலைகழகத்தில் தானே! பிரபஞ்சம் முழுவதும் நிறைந்து நிற்கும் பேறு கிடைத்ததால் அங்கிருந்து அனைத்தையும் அறிந்து கொண்டார் மகரிஷி அவர்கள்.  மகரிஷி அவர்கள் தன்னிலை உணர்ந்தவர்.  அவருள் மகானாக்கும் நான்கு உன்னத கேள்விகள் எழுந்தன?

        அவையாவன:

    1)   கடவுள் என்பவர் யார்?  அவர் இந்த உலகைப் படைத்தார்?

    2)   உயிர் என்பது என்ன?

    3)   இன்பம் துன்பம் என்பது என்ன?

    4)   வறுமை ஏன் வருகின்றது?

        இந்த நான்கு கேள்விகளுக்கும் விடைகள் கண்டுபிடித்து, அவற்றை சரிபார்த்து சமுதாயத்திற்கு அளிக்கப்பட்டுள்ளதுதான் வேதாத்திரியம்.  உலக சமுதாயம் இன்றுள்ள நிலையிலிருந்து உய்ய வேண்டுமென்றால் வேதாத்திரியத்தைத் தவிர வேறு நிவாரணம் ஏதும் இல்லை என்றே தான் சொல்ல வேண்டும்.   வேதாத்திரியம் உலகிலிலுள்ள எல்லாத் துன்பங்களுக்கும் தீர்வுகளைக் கூறுகின்றது.  உலக ஒற்றுமையை, உலக சகோதரத்துவத்தையும், ஒன்றே குலம், ஒருவனே தேவன் என்கின்ற உண்மையையும் எடுத்துக் கூறுகின்றது வேதாத்திரியம்.

         இவ்வளவு சிறப்பு வாய்ந்த குழந்தை வேதாத்திரியை இதுவரை இயற்கை அன்னை பெறவில்லை எனக் கூறும் அளவிற்கு மகரிஷி அவர்கள், தம்முடைய மாணவர்களுக்குத்   தெளிவை ஏற்படுத்தி, சிந்திக்கத் தூண்டி,  இருளில்  இருந்த  மனதை அறிவொளியைக் கொண்டு பிரகாசிக்கச் செய்துள்ளார்.  மொத்தத்தில் மனிதன், பண்பில் ஏற்றம் பெற பண்பேற்றக் கல்வியினை அளித்துள்ளார்.  மாற்றிச்சொல்ல வேண்டுமென்றால், மனிதகுலத்தை, நலமுடன், அமைதியாக வாழவைக்க வேண்டிய பொறுப்புடைய இறை/இயற்கை, இதுவரை அவ்வப்போது மனிதத் தெய்வங்கள் வழியாகச் சொல்லி வந்ததனைத்தையும் தொகுத்து, காலத்திற்கேற்ப, வேதாத்திரி மகரிஷி அவர்கள் வழியாக ஒட்டுமொத்தமாகச் சொல்லி விட்டது என்பதுதான் சரியாக இருக்கும்.  அதாவது அப்பட்டமாக இறை, வேதாத்திரி மகரிஷி அவர்கள் வழியாக வெளிப்பட்டுவிட்டது எனலாம்.  அறிவாகிய இறையே  மாந்தருள்ளும் அறிவாக இருப்பதால் சமுதாயம் அவற்றை ஏற்றுக் கொள்ளவும் செய்து கொண்டிருக்கின்றது.  யாராக இருந்தாலும் இயற்கை நியதி எல்லோருக்கும் ஒன்றே என்பதால், தோன்றியவர்  மறைவதும் இயற்கை என்பதால், மனிதகுலத்தின் அறிவுக்கண்களை எல்லாம் திறந்து வைத்த வேதாத்திரி மகரிஷி அவர்கள் 2006 ம் ஆண்டு, 28 நாள் தன் பூதவுடலை நீத்தார்.

         அவரது  பூத உடல்  நம்மிடையே இல்லையே தவிர அவா் நம்முடன் வாழ்ந்து கொண்டு, பேசிக் கொண்டு, அறிவுறுத்திக் கொண்டுதான் இருக்கிறார்.  ஏனெனில் ஆன்மா அழியாததன்றோ! அவர் அருளியுள்ள 1854 பாடல்கள் வழியாகவும், எழுதியுள்ள நூல்களின் வாயிலாகவும், குறிப்பாக, அவா் எழுதிய ‘எனது வாழ்க்கை விளக்கம்’ எனும் நூல் வழியாகவும் நம்முடன் பேசிக் கொண்டுதான் இருக்கிறார்.  அவர் மறைந்த இந்த நாளில் நாமெல்லாரும் ஒன்று கூடியிருக்கிறோம்.   எதற்காக?  அவ்வையார் கூறும் வகையில் இனிதினும் இனிதை அனுபவிக்க, அறிவினரை, அவரை, கனவிலும், நினைவிலும் கண்டுகளித்துக் கொண்டிருந்தாலும், இதுவரை மகரிஷி அவர்களைப் பற்றி அறியாதவர்களுக்கு எடுத்துச் சொல்வதற்காக கூடியிருக்கிறோம்.

        ஒருவர்   மறைந்த தினத்தை வருடந்தோறும், நினைவு தினமாக கொண்டாடும் வழக்கம் சமுதாயத்திலும், குடும்பங்களிலும்  உள்ளது.  தலைவர்கள், சான்றோர்கள் மறைந்த தினத்தை சமுதாயமே கொண்டாடும்.

        தலைவர்களை, சான்றோர்களை நினைவிற் கொள்ளுதல் என்றால் என்ன?  அவர்கள் கூறிய அறிவுரைகளை, ஆராய்ந்து, உறுதிபடுத்திக் கொண்டு, அவர்கள் கூறியுள்ளதுபோல், நம்முடைய குணநலன்களை உயா்த்திக் கொண்டு பண்பேற்றம் பெறுவதே, அவர்களை நினைவிற் கொள்ளுதலின் நோக்கமாகும்.  சான்றோரைப் பின்பற்றி வாழ்பவர்கள், எப்போதும், தினந்தோறும் அவர்களை நினைவிற்கொண்டிருந்தாலும், சான்றோர் மறைந்த தினத்தன்று, அவரைப் பின்பற்றி வாழ்பவர்கள் அனைவரும் ஒன்று கூடி சான்றோருக்கு மரியாதையும், நன்றியும் தெரிவித்துக் கொள்ளும் வகையில் நினைவு தினமாக கொண்டாடுகின்றனர். மேலும், அச்சான்றோரை அறியாதவர்கள், மற்றும்  வருங்கால சமுதாயத்தினருக்கும் அச்சான்றோரைப் பற்றி எடுத்துச் சொல்லி அவர்களையும் அச்சான்றோர் கூறிய அறவழியில் வாழ்வதற்கு  அழைப்பு விடுவது நினைவு தினத்தில் வழக்கம்.

        இந்த அறிவிற்கு விருந்தில்,  நம் குருபிரானை எவ்வாறு, எப்போதும் நினைவில் கொள்வது பற்றி மகரிஷி அவர்களே கூறுகின்ற வழியில் ஆராய இருக்கிறோம்.  அதற்கு முன்னர் அறிவில் அறிவாய் நிலைத்து அறம் வகுத்து வாழ்ந்துகாட்டிய பேரறிவின் அம்சங்களான மனிதத்தெய்வங்கள் அனைவரின் அறிவாற்றலும் துணை நிற்க வேண்டுவோம்.

             குரு வணக்கம்    (11-08-1981)

    “அறிவேதான் தெய்வம் என்றார் தாயுமானார்;

    அகத்ததுதான் மெய்ப்பொருள் என்று எடுத்துக்காட்டி,

    அறிவதனை அறிவித்தார் திரு வள்ளுவர்;

    அவ்வறிவை அறிவதற்கு முறைகள் சொன்னார்,      

    அறிஞா் திருமூலர்;  அவ்வறிவில் ஆழ்ந்து,

    ஆனந்தக் கவியாத்தார் இராம லிங்கர்,

    அறிவில் அறிவாய் நிலைத்து அறம் வகுத்தோர்,

    அதை வாழ்ந்துகாட்டினோர், நினைவு கூர்வாம்”

    ….வேதாத்திரி மகரிஷி அவர்கள். 

     

        அவ்வையார் கூறும் இனிதினும் இனிதை அனுபவிக்க, அவரை அவரது பாடலின் வழியாக நினைவு கூர்ந்து, வணங்கி, அவரை நம் சத்சங்கத்தில் சூக்குமமாக எழுந்தருளச் செய்வோம்.

    FFC-70-இனிது இனிது அவ்வையார் பாடல்

    பொருள்:முருகன் கேட்ட‘இனியதுஎது?’ என்கின்ற ஒரு கேள்விக்கு விடையாக நான்கு இனியவைகளைக்  கூறுகிறார் அவ்வையார்.  அவ்வையார், தான் கூறும் இனியவைகளை அதன் அளவிற்கேற்றவாறு வரிசைப்படுத்திக்கூறுகிறார்.

    1)   ஏகாந்தம்இனிது.

    2)   அதனினும்இனிதுஆதியைத்தொழுவது.

    3)   அதனினும்இனிதுஅறிவினரைச்சோ்ந்திருத்தல்.

    4)   அதனினும்இனிதுஅந்தஅறிவுள்ளோரைக்கனவிலும், நினைவிலும்காண்பதுதான்.

    இந்தநான்குஇனியவைகளையும்வரிசையாகஒவ்வொன்றாகச்சிந்திப்போம்.

    1)   ஏகாந்தம்இனிது?

    இனிது என்பது எல்லோருக்கும் தெரிந்ததே. இனிது என்றால் மனதுக்கு நிறைவு அல்லது மகிழ்ச்சியைத் தருவது என்று பொருள். துன்பமும் சலிப்பும் இல்லாதநிலை.  எல்லோரும் விரும்புவது இன்பம்.  ஆனால் வாழ்க்கையில் துன்பமும் வந்து விடுகின்றது. சலிப்பும் வருகின்றது.  சலிப்பு என்பதுஎன்ன? சலிப்பு என்பது ஒன்றையே மீண்டும் மீண்டும் செய்வது ஆகியவற்றால் அல்லது துன்பம் மிகுதியால் வரும் சோர்வு அல்லது வெறுப்பு ஆகும்.

    இன்பமே அனுபவிக்க விரும்பும் மனிதனுக்குத் துன்பம் வருகின்றது என்றால் எப்படி இருக்கும் அவனது மனம்? துன்பம் மிகமிக சலிப்பும், வாழ்க்கையின் மீது வெறுப்பும் உண்டாகும். தான் விரும்புகின்ற இன்பத்தைப் புலன்களின் வழியாக மட்டுமேதான் அடைவதற்குத் தெரிந்து வைத்திருக்கிறான் மனிதன். புலன்வழி இன்பம் ஒருஅளவிற்கு மேல் சென்றால் அதுவே துன்பமாக மாறிவிடும்.

    இதுவரை விஞ்ஞானம்கூட எடுத்துரைக்காத இன்பதுன்ப விஞ்ஞானத்தை (Science of Enjoyment)மகரிஷி அவர்கள் காந்தத்தத்துவம் (Philosophy of Magnetism) வழியாக அழகாக எளிமையாக எடுத்து இயம்புகிறார்.  “இன்பம் புறப்பொருளில் இல்லை” என்று கூறப்படுகின்ற ஆன்மீகத் தத்துவத்தை மகரிஷி அவர்கள் விஞ்ஞானமாக்கியுள்ளார்.

    அவ்வையாரின் கூற்றிற்குச் செல்வோம்.  அவர் கூறும் ஏகாந்தம் (solitude)என்பதுதனிமையும், அமைதியும்நிறைந்தது.  தனிமையும் அமைதியும் புலன்கள் இயங்காத நிலையாகும்.  அதாவது புலன்களைத் தேவைக்கு மீறி அதிகமாகப் பயன்படுத்தினால் துன்பமும் சலிப்பும் வரும். தேவைக்கு  மீறிய முறையை மாற்றி, தனிமையையும் நாடினால் இன்பம் இருக்கும் என்கிறார் அவ்வையார்.

    2)   அதனினும்இனிதுஆதியைத்தொழுதல்:

           ஏகாந்தத்தை விட இனியது ஆதியைத் தொழுதல் என்கிறார்.  தொழுதல் என்ன என்பது யாவரும் அறிந்ததே.  தொழுதல் என்றால் வணங்குதல், வழிபடுதல் என்று பொருள்.   பொதுவாக  வழிபடுதல் என்றால் கடவுளை வழிபடுவதாகும்.  எனவே அவ்வையார் ஆதியைத் தொழுதல் என்கிறார் என்றால், ஆதி, கடவுளாகின்றது.

         யார்இந்தஆதி?  அவ்வையார்கூறும்  ஆதி யார்?  எழுத்துக்களெல்லாம் அகரத்தை முதலாகக் கொண்டுள்ளது போல், உலகம் ஆதிபகவனை முதலாகக் கொண்டுள்ளது என்கிறார் திருவள்ளுவர். அந்த ஆதிபகவன்தான் (ஆதியாகியபகவன்) அவ்வையார்கூறும்ஆதி.   ஆதிஎனும்இறைவன்உருவக்கடவுள்இல்லை. அப்படியானால் அவ்வையார் குறிப்பிடும் இந்தக் கடவுள் எப்படி ஆதிஎனும் பெயர்பெற்றார்?  ஆதி என்கின்ற சொல்லின் பொருளைக் கொண்டே ஆதி என அழைக்கப்படுகின்றார் கடவுள்.

          ஆதிஎன்கின்றசொல்லிற்கானப்பொருட்கள்:

    1)   முதல்

    2)   தொடக்ககாலம்

    3)   தொடக்கம்அறியப்படமுடியாதபழமை

    4)   அடிப்படை

         ஏதோ ஒன்று தான், துகள்கள் (particle  in  science)முதல், அதனைத் தொடர்ந்து பஞ்சபூதங்கள், அதனைத் தொடர்ந்து இந்தப் பிரபஞ்சம்,  அதனைத் தொடர்ந்து ஓரறிவுமுதல் ஆறறிவு வரையிலான மனித இனமாக தன்மாற்றம்(self transformation)அடைந்துள்ளது.  அந்தப்பொருள் தான்

    • காணுகின்றபிரபஞ்சம்முதல்உயிர்கள்வரைஎல்லாத்தோற்றங்களுக்கும்முதலாகி  தன்மாற்றம்அடைந்துள்ளதாலும்,
    • முதல்துகள்உருவாகியகாலத்திலிருந்தும்அதாவது, தொடக்ககாலத்திலிருந்தும்,
    • அதனுடையதொடக்கம்அறியமுடியாதபழமையானதாகவும்,
    • எல்வாவற்றிற்கும்அடிப்படையானதாகவும்இருந்தது.

    எனவே, அந்தஒன்று  “ஆதி” என்கின்ற சொல்லிற்கான பொருள் அனைத்தையும் கொண்டிருந்ததால்  அவ்வையார் அதனை “ஆதி”என்று அழைக்கிறார்.  கடவுளுக்கு ஆதிமூலம் என்கின்ற பெயரும்உண்டு.  அதாவது பிரபஞ்சத்திற்கு மூலமான துகள்களுக்கு ஆரம்பமாகவும், ஆதியாகவும் உள்ளதால் அது ஆதிமூலம் என்று அழைக்கப்படுகின்றது.  விஞ்ஞானத்தின்படி இப்பிரபஞ்சத்திற்கு மூலம் துகள்கள்.  அந்த மூலமான துகள்களுக்கு ஆரம்பமாக இருந்தது என்பதால் மூலத்திற்கு ஆதிநிலை(primordial state)என்பதால் அது ஆதிமூலம் என அழைக்கப்படுகின்றது.

     ஆதி என்று மட்டும்  சொல்லவில்லை, அதனையே இறைவன் என்கிறார்.  எது இறைவனாக இருக்கமுடியும்?  இறைவனுக்கு இலக்கணம் வகுத்துக்கொண்டு, ஆறாம்அறிவு, இறைவனைத் தேடினால், இந்த ஒன்றினைத் தானே இறைவன் என ஏற்றுக்கொள்ளும்.  எது அல்லது யார் அந்த ஆதி?  தன்னிலுள்ள ஆற்றலை இப்பிரபஞ்சமாகவும், உயிரினங்களாகவும் வெளிப்படுத்திய ஒன்றுதான் அந்த ஆதி.   அதுதன்னை, வெளிப்படுத்தியதால்,  ‘ வெளி ’ (Eternal Space) என்கின்றக் காரணப்பெயரை பெறுகின்றது.

    இப்பிரபஞ்சத்தின் ஆதிநிலைதான் இறைவன் என்பதால், அந்த ஆதியைத் தொழுதல் இனிது என்கிறார் அவ்வையார்.  தொழுதல் இனிதுஎன்றுகூறுவதையும்கவனிக்கவேண்டும். உருவமிலா இறையை எவ்வாறு தொழுவது?  அருவமான இறைதான் (பரமாத்மா) அறிவாகவும் (ஜீவாத்மா), மனமாகவும்  வந்துள்ளது.  எனவே மீண்டும் பரமாத்மாவுடன் ஜீவாத்மாவை இணைப்பதுதான் இறைக்கு இணக்கமான இறைவணக்கமாக இருக்க முடியும். அப்படியானால்  அதனை எவ்வாறுதொழுவது எனில்,  அருவ வழிபாட்டின் மூலமாகத்தான் தொழமுடியும்.  அதுதான் விஞ்ஞான காலத்திற்கேற்ற அகவழிபாடாகும்.  மனவளக்கலை யோகாவில் அதுதான் துரியாதீத தவமாகும்.  ஆகவே துரியாதீத தவத்தை இயற்றுவது இரண்டாவது இனிதாக அவ்வையார் கூறுகிறார்.  அடுத்ததாக மூன்றாவது இனிதிற்குச்செல்வோம்.

    3)  அதனினும்இனிதுஅறிவினரைச்சேர்தல்:

    ஆதியைத் தொழுவது என்பது ஒரு குருவின் வழியாகத்தான் சாத்தியமாகும். உதாரணத்திற்கு  மனவளக்கலையோகிகள் துரியாதீததவத்தை இயற்றுவதே வேதாத்திரிமகரிஷி அவா்களை குருவாக ஏற்றுக்கொண்டததால் தானே சாத்தியமாயிற்று.  “குரு இல்லாத வித்தை பாழ்” மற்றும்“குருவருள் இன்றேல் திருவருள் இல்லை” என்பதால், அகத்தவம் இயற்றுவதற்கு அறிவினர்ச் சேர்க்கை, வழிகாட்டியாக இருக்கும். அறிவை அறிந்த அறிஞராகிய ஒருவரைத்தான் அவ்வையார் அறிவினர் என்கிறார். அவரைச் சேர்ந்திருத்தல்  அதனினும் இனிது என்று இனியவையின் அதிகப்படி வரிசையில் (increasing order of ecstasy)மூன்றாவதாகக் கூறுகிறார்.

         அறிவினரைச்சோ்தல் என்பதற்கு இலக்கணம் வைத்துள்ளார் அவ்வையார்.  அறிவினரைச் சோ்தல் என்பது நடந்து கொண்டுதான் இருக்கின்றது.  ஆனால் அறிவினரைப் பார்த்தோம், சேர்ந்தோம் என்றிருப்பது மட்டும் அவ்வையார் கூறும் அறிவினரைச் சோ்தல் அல்ல. பின்னா் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதனை நான்காவது இனியதாகக் கூறுகிறார் அவ்வையார். அடுத்த அறிவிற்கு விருந்தில் ‘அறிவுள்ளோரைக் கனவிலும் நனவிலும் காண்பது அதனினும் இனிது  என்பது எவ்வாறு?’ என்பதனை அடுத்த அறிவிற்கு விருந்தில்  அறிவோம். .. .தொடரும்.

      

    Loading

  • C249-எல்லாப்புகழும் இறைக்கே –     9/9

    வாழ்க மனித அறிவு                                                 வளர்க மனித அறிவு

    அ.வி. C249

                                                04-12-2016-ஞாயிறு

      ‘புகழ்’ பற்றி மகரிஷி அவர்கள் அருளியுள்ள கவிகளை நினைவு கூர்வோம்.

    ffc-55- படம்- pugazh-உயர்புகழ்

    மேலும் புகழ் பற்றி மகரிஷி அவர்கள் கூறுவதாவது:

    1  புகழ் என்பது தன்முனைப்புக்கு போடும் தூபமில்லை.

    2  ஒருவரின் செயலின் நல்விளைவினால் மக்கள் கொடுக்கும் மதிப்புணர்வே புகழ்.

    சுருக்கமாக அறிந்து கொள்ள வேண்டியது:

          இறையே எல்லாமாகவும், உயிர்களாகவும், அறிவாகவும், எல்லா நிகழ்ச்சிகளுக்கும் காரணமாகவும் இருக்கின்றது.  அப்படி இருக்கும்போது மனிதன் என்பவன் யார்?  அவன் உயிர் யாருடையது?  அவன் அறிவு யாருடையது?  அவன் கைகள், கால்கள் ஆகிய உறுப்புகள் யாருடையது?  இந்த எல்லா வினாக்களுக்குமே ஒரே பதில் இறையினுடையதுதான் என்பது.

         புகழ் ஏற்படும்படி மனிதன் செய்த செயல் யாரால் செய்யப்பட்டது.  அந்தச் செயலை செய்யும் சூழல் யாரால் ஏற்படுத்தப்பட்டது? அந்தச் செயல் புரிந்ததில் அவனது உடலாற்றலும், மனமும், அறிவும், ஒன்று சேர்ந்தது யாரால்?  எல்லாமே இறையினால்தானே!  இது சம்பிரதாய பதில் இல்லை.  இதுதானே உண்மை. இந்த உண்மையறிந்து விழிப்போடு இருப்பதுதானே பேரின்பம்.

        அஃதன்றி புகழ் தன்னுடையது என்று நினைத்தால் என்ன பொருள்? நினைப்பது ஒன்று, செய்வது வேறு.  தன்முனைப்புதான் மனிதனையும் இறையையும் பிரித்து வைக்கும் திரை.  தன்முனைப்பு என்கின்ற திரையை நீக்கவேண்டிய பயிற்சியில்,  புகழுக்கு ஆசைப்படுவது தன்முனைப்பு என்கின்ற திரைக்கு மேலும் மேலும் திரையை போர்த்துவதாகும்.  ஏற்கனவே விலங்கினப் பண்பான பிறர் வளம் பறித்தல் மனிதனிடம் கருமையத் தொடர்பாக நீடித்துக் கொண்டிருப்பதால் பிறருடைய புகழையும் மனிதன் அபகரிக்கத் தயங்குவதில்லை. 

          புகழ் இறையுணர் நோக்கத்தையே மறைத்துவிடும். மறக்கச்செய்துவிடும்.

          புகழை விரும்புவதுபிறவியின் நோக்கத்தை உறுதியும் செய்யாது, உறுதி செய்தாலும் பிறவியின் நோக்கத்தை அடையவும் விடாது.

          புகழ் தன்முனைப்பை ஊக்குவிக்கும்.

          புகழ், ‘இன்முகத்தையும், எளிமையையும்’ தனது செல்வமாக மகரிஷி அவர்கள் அனுபவித்ததை, ஒரு ஆன்மீக சாதகனை அனுபவிக்க முடியாதபடி  செய்துவிடும்.

          புகழ் ஆன்மீகத்தின் உச்ச நிலையானத் தெளிவினை ஏற்படுத்தாது.

          புகழ் ஏகவெளியான வீடு பேற்றினை அடையவிடாது.

      பொருளையும், புலன் இன்பத்தையும் இழப்பதற்கு வேண்டுமென்றாலும்கூட தயாராக இருக்கும் மனிதன், புகழையும், செல்வாக்கையும் இழக்கத் தயாராக இருப்பதில்லை. 

        மகரிஷி அவர்கள், மனிதனுக்கு வேண்டிய வளங்களில் ‘உயர்புகழை’ ஒன்றாகக் கருதி, அதனை மெய்ஞ்ஞானத்திற்கு முன்னா் நான்காவது வரிசையில் இணைத்துள்ளார்.  காரணம் என்ன?  புகழ் மனிதனுக்கு அவசியம் என்று கருதியா சோ்த்துள்ளார்?  பிறவியின் நோக்கம் மெய்ஞ்ஞானத்தின் உச்சத்தை அடைவது.   அந்த மெய்ஞ்ஞானத்திற்கு முன்னர் உயர்புகழை இணைத்துள்ளார்,

        மனிதன் சமுதாயத்தால் வளர்க்கவும், காக்கவும் படுகிறான்.  எனவே அந்த சமுதாயம் வளமாக இருக்க வேண்டும். அப்படியானால் ஒவ்வொரு மனிதனும் சமுதாயத்திற்கு திருப்பி செலுத்த வேண்டிய  ‘கடன்’ உள்ளது.(Man has due to the society. Due to the society becomes duty).  அந்த கடன்தான்  ‘கடமை’ எனப்படுகின்றது. அந்த வாங்கிய கடனை திருப்பிச் செலுத்துவதில் என்ன புகழ் உள்ளது?  அதனை புகழ் எனக்கருதினால் அங்கே தன்முனைப்பு வந்துவிடுகின்றது.  ஆனால் மனிதன் செய்யும் கடமையினால் பயன் பெறும் மக்கள் மனம் குளிர்ந்து வாழ்த்துவது தான் உயர்புகழ் என்கிறார் மகரிஷி அவர்கள்.

       புகழ் என்பது விரும்பிப் பெறுவதோ, ஏதேனும் ஒன்றைச்செய்து பெறுவதோ என்று நினைப்பதோ அல்ல என்கிறார் மகரிஷி அவர்கள். சமுதாயத்திற்கு நன்மையான காரியங்களைச் செய்து, அதனாலே மக்களின் துன்பங்கள் நீங்கி, அந்த மக்கள் பெறும் மனநிறைவுதான் புகழ்.  மனநிறைவால் வரும் வாழ்த்தே உயர் புகழ் என்கிறார்.   உதாரணம் மகரிஷி அவர்கள் செய்துள்ள அறிவுத் தொண்டேயாகும்.

        ஆகவே மனிதனுக்கு புகழ் அவசியம் எனக்கருதி  உயர் புகழை  சங்கல்பங்களில் ஒன்றாக சேர்க்கப்படவில்லை.  ஒவ்வொரு மனிதனும் சமுதாயத்திற்கு ஆற்ற வேண்டிய கடமையை ஆற்ற வேண்டும் எனக்கருதி. நேரிடையாக கடமையை ஆற்றுங்கள் என வற்புறுத்தாமல் சொன்னது தான் உயர்புகழ்.

        மகான்கள் வரலாற்றில் தெளிவடைந்து இறையை உணர்ந்த பெரியோர்கள் அனைவருமே சமுதாயத்திற்கு சேவையைச் செய்ய முடியவில்லை.   அவ்வாறே மகரிஷி அவர்கள் இறையை உணர்ந்து விட்ட நிலையிலேயே இருந்து விட்டிருந்தால் ஆன்மீகத்தில் ஒரு திருப்புமுனை ஏற்பட்டிருக்காது இன்று.  கல்விநிலையங்களில் ஒழுக்கப்பழக்க அறிவையும், இயற்கைத்தத்துவ அறிவையும் கொண்டுசென்றிருக்க முடியாது.   இப்போது செய்யப்பட்டுவரும் அறிவுத்தொண்டே இல்லாமல் போயிருக்கும்.    “சிலர் இறையுணர்வால் பேரின்பம் பெறுகிறார்கள்,  வேறுசிலர் தொண்டால்  மனநிறைவு பெறுகிறார்கள்.  ஒரு சிலர்  இறையுணர்வாலும், தொண்டாலும்  மனநிறைவு பெறுகிறார்கள்” என்று கூறும் மகரிஷி, தான் இறையுணர்வாலும், தொண்டாலும் சரிசமமாக மனநிறைவு பெற்றதாகக் கூறியுள்ளார்கள். மகரிஷி அவர்கள் தான் சமுதாயத்திற்கு இயற்கையைப்பற்றி கூறும் உண்மைகள் எல்லாம் இயற்கை தனக்கு அறிவித்தது.  எனவே அவர் அதனை சமுதாயத்திற்கு தெரிவித்து விடுவது தனது கடமையாகக் கருதினார்கள்.  இயற்கை தனக்கு தெரிவிக்கின்றது என்பதில் மனிதனுக்கு எங்கே புகழ்? 

       இயற்கை தெரிவிப்பதை எடுத்துச் சொல்வதால் மக்கள் பயன் அடைவதால் வரும் மனநிறைவும், அதைக் கண்டு தான் மனநிறைவு பெறுவது தான் உயர் புகழாகும்.  ஆகவே இயற்கை சமுதாயத்திற்கு  தெரிவிக்க மகரிஷி அவர்களை ஒரு கருவியாகத் தேர்ந்தெடுத்துக் கொண்டது.  எல்லோரையும் கருவியாகத் தேர்ந்தெடுப்பதில்லை.  அதற்குரிய தகுதியுடையவரைத் தேர்ந்தெடுத்துக் கொள்கின்றது. ஆனால் மகரிஷி அவர்கள், தன்னுடைய மாணவர்களை இயற்கை கருவியாகத் தேர்ந்தெடுக்கும் வகையிலே உருவாக்கியிருக்கிறார்கள்.  ஆகவே இன்று சமுதாயம் உள்ள நிலையில் அறிவை மேம்படுத்தக் கூடிய அறிவுத்தொண்டு மிக, மிக அவசியமாக உள்ளது.  அந்த அறிவுத் தொண்டை செய்யவல்லவர்கள் வேதாத்திரி சிந்தனாப்பள்ளி மாணவர்கள்(Students of Vethathiri school of thoughts)  இவர்களை  ‘இறைத் தூதுவா்கள்’ என்கிறார் மகரிஷி அவர்கள்.

       தூதுவர் என்றால் என்ன?  தூது என்றால் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்குச் செய்தி அறிவிக்கும் பணி.  தூதுவர் என்றால் செய்தி அறிவிக்கும் பணியைச் செய்பவர்.  அப்படியானால் இறைத்தூதர் என்பவர்,  சிந்திப்பதன் மூலம், இறையிடமிருந்து செய்திகளை வாங்கி, விளங்கி, யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்பதற்கிணங்க அதனை சமுதாயத்திற்கு அறிவிப்பவராவார். இதன் மூலம் அறிவுத் தொண்டாற்றி, அதனால் சமுதாயம் பயன் பெற்று வாழ்வதை கண்ணுறும் நிகழ்ச்சியே உயர்புகழுக்கான செயலாகும். 

      பாராட்டு என்கின்ற சொல்லுக்கு மகரிஷி அவர்கள் கூறும் விளக்கமாவது:

    ஒருவரது செயலால் பாரே (உலகமே) பயனடைந்து மகிழ்ச்சியால் ஆடி குலுங்குவதால் (பார்+ ஆடுவது = பாராட்டு) வரும் சொற்களே பாராட்டு என்பார்.

       ஆகவே இன்றைய சமுதாயச் சூழலில்  சமுதாயத்திற்கு தேவைப்படுவது அறிவுத் தொண்டு.  ஆகவே அறிவுத் தொண்டாற்ற இறைத்தூதுவர்களாக செயலாற்ற வேண்டியே மகரிஷி அவர்கள் பயிற்சி அளித்து  ‘அருள்நிதி’ என்கின்ற பட்டத்தை அளித்துள்ளார்கள்.  எனவே உயர்புகழ் என்கின்ற சங்கல்பம் நிறைவேறுவதற்கேற்றவாறு அறிவில்  நாளும், நாளும் மேம்பட்டு அறிவுத் தொண்டாற்றி இன்புற்று வாழ்வோம்.  வாழ்க வேதாத்திரியம்.  வளர்க வேதாத்திரியம்.  முற்றும்.

     வாழ்க  அறிவுச் செல்வம்                                                            வளர்க அறிவுச் செல்வம்

    *****

    Loading

  • C248-எல்லாப் புகழும் இறைக்கே! – 8/?

     வாழ்க மனித அறிவு                                          வளர்க மனித அறிவு

    FFC – C248

    30-11-2016 -புதன்

    மீண்டும் காந்த தத்துவத்தின் இரண்டாவது பாடலை நினைவு படுத்திக் கொள்வோம்.

    FFC-144-பொருள் புகழ் செல்வாக்கு

     

            காந்த தத்துவத்தின் இரண்டாவது பாடல் எட்டு வரிகளைக் கொண்டிருக்கின்றது. ஆனால் காந்த தத்துவ நூலில் மகரிஷி அவர்கள் அதற்காக அளித்துள்ள விளக்கவுரை 86 வரிகளில் அமைந்துள்ளது. இங்கே சுருக்கமாக அவ்விரிவுரையை அறிந்துகொள்வோம். இருப்பினும் அன்பர்கள் மீண்டும் மகரிஷி அவர்களின் விரிவுரையை வாசித்து பயன் பெற அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

         மனிதப் பிறவியின் நோக்கம் அறியாததால், அறிவை இறையோடு இணைத்து, விழிப்போடு ஒழுக்கம், கடமை, ஈகை ஆகியவைகளைக் கொண்ட அறநெறியை பழகிக் கொள்வதில்லை. ஆகவே பல பிறவிகளாக, கருத்தொடராக வந்துள்ள விலங்கினப் பதிவாகிய ‘பிறர் வளம் பறித்துண்டு வாழும் தன்மை’ சஞ்சித கா்மாவாக வந்துவிட்டது. அது பிறரிடமிருந்து பொருள், புகழ், அதிகாரம் (செல்வாக்கு) புலனின்பம், இவற்றினை கவர்ந்து கொள்ளும் ஆசையாகிப் பெருகிவிட்டது. ஆசை பெருகுவதால்,

    1)   எவ்வளவு இருந்தாலும், இன்னும் வேண்டும், இன்னும் வேண்டும் என்கின்ற மனநிலை பேராசையாகின்றது.

    2)   அதற்கேற்ற செயல்களால் உடல் கெட்டு விடுகின்றது. உள்ளமும் கெடுகின்றது. அதற்கும் மேலாக மனித உறவில் இனிமை கெடுகின்றது.

    3)   தன்னுடைய செயல்களைத் தொடரவும் முடிவதில்லை. நிறுத்தவும் முடிவதில்லை. தேக்கம் ஏற்படுகின்றது.

    4)   விளைவு, மனம் புண்ணாகி வருந்திக் கொண்டிருக்கின்றனர் மனிதர்கள் என்கிறார் மகரிஷி அவர்கள்.

    அவ்வாறு மனம் புண்பட்டு அமைதியிழந்து தவிப்பவர்களுக்கு தனது அனுவங்களைக் கொண்ட விளக்கங்ளைக் கூறுவதாக மகரிஷி அவர்கள் கூறுகிறார் இப்பாடலின் விரிவுரையில்.

       பொருள், புகழ், செல்வாக்கு, புலன் இன்பம், ஆகியவைகளில் புகுந்தழுந்தி மனித மனத்தைப் புண்ணாக்கிக் கொண்டவர்கள் இருள் வாழ்க்கையில் வாழ்கின்றனர் என்கிறார் மகரிஷி அவர்கள். இங்கே புகுந்து, அழுந்தி, புண்ணாகுதல், மனித மனம் ஆகிய நான்கு சொற்களைக் கவனிக்க வேண்டும்.

    1)   புகுந்து — தடையில்லாமல், யோசனை இல்லாமல், உள்ளே நுழைதல்

     

    2)   அழுந்தி – உள்ளிறங்குதல், புதைதல், ஒட்டிக் கொள்ளுதல், நிலை கொள்ளுதல்.

    எனவே புகுந்து, அழுந்தி என்கின்ற இருசொற்களின் பொருளை உற்று நோக்கினால், ‘புகுந்தழுந்தி” என்று மகரிஷி அவர்கள் கூறும் உட்பொருளை புரிந்து கொள்ள முடியும்.

    முன் யோசனை இல்லாததால்,

    நுண்மாண் நுழைபுலனறிவு  இல்லாது – விளைவறியாது,

    பொருள், புகழ், செல்வாக்கு, புலனின்பம் ஆகிய நான்கிலும் புதைந்து கொள்ளுதலை,

    புதைகுழியில் விழுந்து தானாகவே எழுந்து வரமுடியாத நிலையோடு ஒப்பிடுவதாகத் தெரிகின்றது.

    புதைகுழியில் விழுந்தவர் வேறொருவரின் உதவியின்றி எழுந்து வர முடியாது. அதுபோல் இருளிலுள்ள இந்த சமுதாயம் மருள் என்கின்ற மயக்க நிலையில் ஏற்ற ஆசை, அதனால் வருகின்ற பழிச்செயல்களிலிருந்து மீள்வதற்கு, புதைகுழியில் விழுந்தவருக்கு உதவும் வேறொருவர் போல், மகரிஷி அவர்கள் விளக்கம் தந்து உதவுகிறார்.

    3)   புண்ணாகுதல் –

         உடல் உறுப்புகளில் புண் உண்டாவதை அறிவோம். உறுப்புகளில் சதை, இரத்தம் இருக்கும். அங்கே புண் உண்டாகும். புண் சரியாகவில்லையென்றால் சீழ் வரும். ஆனால் அரூபமாக இருக்கின்ற மனதில் எவ்வாறு புண் வரும்? புண்ணாகும் என்று கூறிச் சிந்திக்கச் செய்கிறார்   இங்கே மகரிஷி.

     

    4)   மனித மனம்

    ‘மனித மனம்’ என்று கூறியிருப்பதனை கவனிக்க வேண்டும். மனம் என்றே சொல்லியிருக்கலாம்.      ஆனால் மனித மனம் என்கிறார். மனம் இதமாக இருப்பவன் மனிதன் (மனம்+இதம்=மனிதன்). மனிதனுக்கு மனம் இதமாக இருக்கவேண்டும். மனம் ‘புண்ணாகி’ என்பது இதமாக இருக்க வேண்டிய மனம், இதமிழந்து இருப்பதனைக் குறிப்பிடுகின்றது.

       ‘இதம்’ என்பது சுகத்தைக் குறிக்கின்றது? எப்போது சுகம் கிடைக்கும் மனதிற்கு?

         மனம் இசைவாக இருக்கும்போது சுகம் கிடைக்கும். இசைவு என்பது ஒத்துப்போகுதல். அதாவது தனக்கும் பிறர்க்கும் துன்பம் தராமல் இருப்பதும், முடிந்தால் நன்மை செய்வதும்தான் இசைவும், ஒத்துப் போகுதலுமாகும். இதுவே இயற்கையின் நோ்மறை(positiveness) யாகும். ஆகவே மனதிற்கு சுகமளிக்கும்.

         அளவாகவும், அனுபவிக்கத் தகுந்த கட்டுப்பாட்டிலும் இருக்கும் மனம், இதமாக இருக்கும். மனம் எந்த ஒன்றையும் அனுபவித்தாலும், இன்பவியல் சூத்திரமான(formula) அளவையும், முறையையும் கடைபிடிக்க வேண்டும். இல்லையெனில் இன்பமே துன்பமாகும் விந்தையினை சந்திக்க வேண்டிவரும்.

       ஆகவே உருவமில்லாத மனம் புண்ணாகுதல் என்பது, இசைவில்லாமலும், அளவையும்,    முறையையும் முறையே மீறுதலும், மாற்றுதலாகும்.

          பொருள், புகழ், செல்வாக்கு, புலன் இன்பம் ஆகிய நான்கில் புகுந்து அழுந்தி மனித மனம் புண்ணாகி, இருளடைந்துவிட்ட வாழ்க்கையில் ஒளியைக்கொண்டு வர தனது விளக்கத்தினைக் கூறுகிறார் மகரிஷி அவர்கள். புகுந்து அழுந்தி அனுபவிக்கும்போது இன்பவியல் (இன்பம்+இயல்) மறக்கப்படுவதால், இயற்கையின் இனிமை கெட்டு வாழ்வில் துன்பங்களே விளைகின்றன.

       இன்பவியல் என்பது என்ன? இன்பதுன்ப நிகழ்ச்சியினை வேதாத்திரியம் அறிவியல் அடிப்படையில் விளக்குவதால் இன்பதுன்ப நிகழ்ச்சியினை இயல் என்கிறோம்.

    மனிதனின் உறுப்புகள் இயங்குவதனை மருத்துவ இயலாகக் கொள்கின்ற போது,

    உறுப்புகள் இயங்குவதே இன்பம் அனுபவிப்பதற்கே என்றிருக்கும் போது,

    அந்த இன்பம் என்பது என்ன என்று இதுவரை மருத்துவ விஞ்ஞானம் கூறாத நிலையில்

    வேதாத்திரியம் இன்ப துன்ப நிகழ்ச்சியினை அறிவுபூர்வமாகக் கூறுவதால்

    இன்பதுன்ப நிகழ்ச்சியினை அறிவியலாகக் கருத வேண்டியுள்ளது

    வேதாத்திரிய சிந்தனாப்பள்ளி மாணவர்களால்.

    இன்பவியலின் சூத்திரத்தை மட்டும் இங்கே நினைவு கொள்வோம். இன்பவியலை முழுவதுமாக   வேறொரு விருந்தில் விரிவாக அறிவோம். இன்பவியலின் சூத்திரம் என்ன?

    ஒன்று அளவை (limit) மீறக்கூடாது; மற்றொன்று முறையை (method) மாற்றக்கூடாது என்பதாகும்.

    துன்பத்திற்குக் காரணமான அளவு மீறுவதிலும், முறை மாறுவதிலும் எச்சரிக்கையும் விழிப்புணர்வும் இருக்க வேண்டும்.

       இன்பம் அனுபவிப்பதில், இன்பவியல் முன்னரே தெரிந்திருந்தாலும் பழக்கத்தால் அலட்சியப்படுத்தினாலும், தெரியாதிருந்தால் அது அறியாமையாகி, இரண்டுமே மனிதஅறிவின் குறைபாடுகளாக இருப்பதால் இயற்கையின் இனிமை கெடுகின்றது. விளைவு – வாழ்வில் துன்பங்களாக விளைகின்றது.

    அடுத்த அறிவிற்கு விருந்தில் ‘புகழ்’ பற்றி மகரிஷி அவர்கள் அருளியுள்ள கவிகளை அறிந்து கொள்வோம்.

     

     

     

     

     

     

     

     

     

     

    Loading