இன்றைய விருந்து

  • 226-பிறவிப் பயனை நல்கும்! 10/10

    வாழ்க மனித அறிவு                                                        வளர்க மனித அறிவு

    பிறவிப் பயனை நல்கும்! 10/10

    அறிவிற்கு விருந்து—226

     14-09-2016—புதன்.

    perinbapppadikalum thunaipapadikalum

    குருவை மதித்து ஒழுகல்

    வாழ்க வளமுடன்!

                      மகரிஷி அவர்களின் ஜெயந்தி தினத்திலிருந்து ஒன்பது விருந்துகளில் ‘பிறவிப்பயனை நல்கும்’ என்கின்ற தலைப்பில் சிந்தித்து வருகிறோம்.  குருவின் சேர்க்கையால் பிறவிப்பயனை எய்தமுடியும் என்கிறார் மகரிஷி அவர்கள்.  எப்படி? பிறவிப்பயனை அடைவதற்கு, அதற்குரிய பயிற்சிகளை(தவம், தற்சோதனை) செய்து வரவேண்டும்.   பிறவிப்பயன் என்பதில் பண்பேற்றத்தில் மிக உயர்ந்தநிலையை அடைய வேண்டியிருப்பதால், சிரத்தையோடு பயிற்சிகளை செய்வதோடு எளிதாகவும், விரைவிலும் அந்த உயர்ந்த நிலையை அடைய இரண்டு சிறந்த வழிகளை 15-08-1984  அன்று ‘குருவின் சேர்க்கை’ என்கின்ற தலைப்பில் அருளியுள்ள பாடலில் தெரிவித்துள்ளார்.

         முதல் வழியான இயல்பூக்க நியதியின் பெருமையையும், அதனை எவ்வாறு பிறவிப்பயன் பெறுவதற்கான பண்பேற்றத்திற்கு பயன்படுத்த வேண்டும் என்பதனையும் நாம் ஏற்கனவே சிந்தித்திருக்கிறோம்.   இரண்டாவது வழியான ‘குருவை மதித்தொழுகல்’ பற்றி இன்று சிந்திக்க இருப்பதால்  அவ்வரிகளை மட்டும் மீண்டும் நினைவுபடுத்திக் கொள்வோம்.

    குருவின் சேர்க்கை(15-08-1984)    

    FFC-75-எவரோருவா குரு வழ to post on 19-4-15.png-1

      இவ்வரிகளுக்குள் புகுவோம் சிந்தனையோடு சிந்தித்தலால்! முதலில் இவ்வரிகளில் உள்ள வார்த்தைகளை தனித்தனியாக எடுத்துக் கொண்டு உற்று நோக்குவோம்.

    1)   குரு

    2)   குருவின் சேர்க்கை

    3)   மதித்தல்

    4)   ஒழுகுதல்

    5)   தப்பாது

    6)   குருவுயர்வு

    7)   மதிப்பவரின் தரத்தை உயர்த்தி

    8)   பிறவிப்பயனை நல்கும்.

           ஒவ்வொரு வார்த்தைகளின் சூட்சுமத்தை (மேலோட்டமாகத் தெரியாத நுணுக்கம்; நுட்பம்—intricacy; subtlety)) அறிந்து கொள்வோம்.

     1)   குரு என்பவர் யார்?

      குரு என்பவர் மனிதஅறிவின் அறியாமையைப் போக்குபவர். ஏன் அறியாமையைப் போக்கிக் கொள்ள வேண்டும்?  அறியாமை என்பது என்ன? அறிவது அறிவு.  அறிவு அறியவேண்டியதை அறிய வேண்டும். அறிவு மற்ற எல்லாவற்றையும் அறிந்து கொள்வதாக இருந்துவிட்டு அது தன்னை மட்டும் அறியாதிருப்பது(நான் யார்?) அறியாமைதானே?! அது தன்னை அறியக்கூடியதாகவும் இருக்க வேண்டும். அறியக்கூடியதை அறியாதிருப்பது அறியாமைதானே?! அப்படியானால் அறிவிற்கு அறியாமை என்பது குறைதானே!  பொதுவாக எந்த ஒன்றிலும்  குறை இருந்தால் அதனால் வரும் பயன் எவ்வாறு  நன்மையாக  இருக்க முடியும் என்பதனை அறிவு அறியும். அப்படியிருக்கும்போது தன்னிலேயே(அறிவிலே) குறை இருந்தால் அறிவின் பயனில் எவ்வாறு நன்மை இருக்க முடியும்? நன்மையில்லை எனில் துன்பம்தான் விளையும்.  இன்றைய மனிதகுலத்தின் சிக்கல்களுக்கு காரணம்  அறிவை அறியாததுதான். எனவே எல்லா சிக்கல்களுக்கும்  அடிப்படைக் காரணமாக உள்ளது அறியாமையே.

         அறியாமையில் இருக்கும் அறிவு எவ்வாறு சிறப்பாக செயலாற்ற முடியும்? செயலுக்கு ஏற்ற விளைவு உண்டு. குறை உடைய அறிவு சிறப்பாக செயல் ஆற்ற முடியவில்லை எனில்  அது ஆற்றும் செயல்களினால் விளைவு துன்பமாகத்தானே இருக்குமன்றோ!  எனவே யார் இந்த  மனிதஅறிவின் அறியாமையைப் போக்க முடியும்?  ஏற்கனவே மனிதஅறிவின் இருப்பிடம் அறிந்து இன்புற்று வாழ்பவர்தான் மற்றொரு  மனிதஅறிவிற்கு வழியைக்காட்டி, அறிவின் இருப்பிடத்தைக் காண்பித்து, உணரச்செய்து அறியாமையைப் போக்க முடியும்.  எப்போதுமே இன்பம் விரும்பும் மனிதன் அறிவை(தன்னை யார் என அறியவேண்டும்) அறிந்ததால்தான்  இன்புற்று வாழ முடியும். அறிவை அறிந்து அறியைாமையைப்போக்கி அறிவை அறியச்செய்பவரே  குருவாக  அமைகிறார்.  அறியாமையைப் போக்கி வழிகாட்டுபவரே குரு எனப்படுகிறார் பயனாளிகளால்.  அப்படிப் பார்க்கும்போது 1970 ல் அழைப்பு விடுத்திருக்கிறார் ஒரு மகா புருஷர்.  அந்த அழைப்பினை என்ன என்று அறிவோம்.

    anbargale vaareer-THAI

    எனவே இந்த அழைப்பினை விடுத்துள்ள மகா புருஷர்தான் திருவேதாத்திரியம் அளித்துள்ள   வேதாத்திரி மகரிஷி அவர்கள்.   இந்த அறியாமையால் மிகுந்த சிக்கல்களுக்குள்ளாகித் தவிக்கும் மனித சமுதாயத்திற்கு விடிவெள்ளியாக திகழ இயற்கையால்/இறையால் அனுப்பப்பட்ட அவதாரமே வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

        இந்த அவதாரப்புருஷரே  குருவானவர் யார் என்பதனை சூசகமாக குருவிற்கு வரையறை கூறுகிறார் தான் இயற்றிய குருவணக்கப்பாடலின் கடைசி வரிகளில்

      ‘அறிவில் அறிவாய் நிலைத்து அறம் வகுத்தோர்,

        அதை வாழ்ந்து காட்டினோர், நினைவு கூர்வோம்.’

          குருவின் சேர்க்கை ‘அறிவின் தன்மாற்றப் பயணத்தில் பரிபக்குவ நிலையை’ அடைந்தவருக்கு தானாகவே நிகழ்கின்றது.  அப்படி கிடைத்த பேறுதான் நாம் வேதாத்திரி மகரிஷி அவர்களை குருவாக அடைந்தது.  இந்த பேற்றினை வீடுபேறாக உயர்த்த வேண்டும்.  அதற்கு  குருவை மதித்து ஒழுகினால், குருவின் உயர்வு தப்பாது நம்முடைய தரத்தை உயர்த்தி பிறவிப்பயனை நல்கும் என்கிறார் நம்முடைய குருதேவர்.  இது வரை குரு என்பவர் யார் என அறிந்து கொண்டோம்.  அடுத்ததாக குருவின் சேர்க்கை என்பது என்ன, அந்த புனித நிகழ்வு என்ன செய்கின்றது குருவை அடைந்தவரிடம் எனவும் அறிந்து கொள்வோம்.. 

     2)   குருவின் சேர்க்கை:

      சிறப்பானச் சிந்தனை மூன்று வினாக்களை அடிப்படையாகக் கொண்டது.  என்ன? ஏன்? எப்படி? (What? Why? How?) என்பதே அம்மூன்று வினாக்களுமாகும்.

        குருவின் சேர்க்கை என்றால் என்ன?  ‘சேர்க்கை’ என்றால் தெரியும்.  சேரிடம் அறிந்து சேர் என்று கருணையால் எச்சரித்து அறிவுறுத்துகின்றனர்  ஆன்றோர் பெருமக்கள்.  ஏன்?  எந்த ஒரு செயலுக்கும் விளைவு இருப்பதால் சேர்க்கை என்கின்ற செயலுக்கும் பின்னர் விளைவு உண்டு. அந்த விளைவு என்ன? யாரிடம் சேர்கின்றோமே அவரின் தன்மையும் நமக்கும் வந்து சேரும்.  இங்கே குருவிடம் சேர்க்கை என்ன விளைவை ஏற்படுத்த இருக்கின்றது?   சுருங்கச் சொல்வதென்றால் (in a nut shell) தன்முனைப்பு நீங்கவே குருவின் சேர்க்கையை இயற்கை/இறை திருவுளம் கொண்டு அவரவர்கள் கருமையப் பதிவுகளுக்கேற்ப நடத்தி வைக்கின்றது.  இதனை ஞானக்களஞ்சியம் 1586 வது பாடலில்  ‘தன்முனைப்பு நீங்கஒரு குரு அடைந்து’ என்கின்ற முதல் வரியே தெரிவிக்கின்றது. 

    guru-disciple-relation

    3) மதித்தல்:

    மதித்தல் என்றால் என்ன என்று தெரியும். இருப்பினும் அதற்கான வார்த்தை விளக்கம் காண்போம். மதி என்பதற்கு அறிவு என்று பொருள். மதித்தல் என்றால், எண்ணுதல், கருதுதல் என்று பொருள். ஒருவரை உயர்வாகக் கருதும் நிலை. எப்போது ஒருவரை உயர்வாகக் கருதும் நிலை ஏற்படும்? அவர் எந்த அளவிற்கு அறிவின் நிலையில் உயர்ந்திருந்தால் அவரை அறிவு மதிப்பதும் அதிகமாக இருக்கும். எந்த ஒன்றிலுமே அறிவு பயனடையத்தான் எண்ணும். ஆகவே அவ்வாறு பயனடைதலில் சிறப்பானதாகக்கருதப்படக் கூடியது அறிவிற்குத் தேவையான தெளிவாகும். எனவே குருவின் சேர்க்கையில், குருவை மதித்தல் என்பது குருவால் சீடருக்கு அறிவு நிலையில் ஏற்படுகின்ற உயர்வைப் பொருத்து சிறப்புற்று விளங்கும். சீடர் அறிவு நிலையில் உயர்வதற்காகத்தான் குருவை அடைகிறான். எனவே ‘உயர்வு’ மற்றும் ‘மதிப்பது’ பற்றியும் மகரிஷி அவர்கள் கூறுவதனை நினைவில் கொள்வோம்.

    ‘தான் உயராது, மற்றவரது உயர்வை மதிக்கவும், ரசிக்கவும் முடியாது’ என்கிறார் மகரிஷி அவர்கள்.   இக்கூற்றின் உட்பொருளை அறிந்து கொள்வோம். அறிவு நிலையில் உயர்வதற்காகக் குருவை அடைகிறான் என்றால் குரு அறிவு நிலையில் உயர்ந்திருக்கிறார் என்றாகின்றது. அப்போது அந்த குரு-சீடர் உறவில் சீடர் குருவை மதிக்க வேண்டுமெனில் முதலில் குருவின் அறிவாற்றலைக் கண்டு ரசிக்க வேண்டும். ரசித்தல் இருந்தால் தானாகவே குருவை மதித்தல் ஆரம்பிக்கும். மதித்தலும், ரசித்தலும் ஒன்றிணைந்தால் சீடன் அறிவு நிலை உயர்ந்து வரும். இதைத்தான் மகரிஷி அவர்கள் ‘தான் உயராது மற்றவரது உயர்வை மதிக்கவும், ரசிக்கவும் முடியாது’ என்கிறார். குருவை மதித்தலோ, அல்லது அதன் காரணமாக மரியாதை செலுத்துவதோ குருவுடன் சேர்ந்ததன் பயன் அடைந்ததாகிவிடாது. அதனால்தான் பாடல் வரி ‘எவரொருவர் குருவை மதித்தாலும்’ என்றிராமல் ‘எவரொருவர் குருவை மதித்தொழுகினாலும்’ என்று அமையப்பெற்றுள்ளது. அப்படியானால் ஒழுகுதல் என்றால் என்ன என்று அறிந்து கொள்ள வேண்டும்.

    4) ஒழுகுதல்:

    ஒழுகுதல் என்றால் என்ன? ஒழுகுவது ஒழுகுதல்.  “ஒப்புர ஒழுகு” என்றும் “நேர்பட ஒழுகு” என்றும் அவ்வைத்தாய் கூறுவதனை அறிவோம். ஒழுகு என்றால் நட, நடந்துகொள் என்று பொருள். அறிவில் உயர்வது என்பது வேறொன்றுமில்லை. ஒழுங்காற்றலாய் விளங்கும் பேரறிவே மனிதஅறிவாக தன்மாற்றமடைந்து வந்துள்ளதால் மனிதஅறிவு ஒழுக்கத்தில் சிறந்து விளங்குவதே அறிவில் உயர்வதாகும். எனவே ஒழுக்கம் என்பது நெறியை ஒழுகி நடப்பது. நெறி என்பது ஒழுக்கத்திற்காக அமைந்துள்ள விதி. அதாவது இயற்கை விதி என்றே கொள்ளலாம். செயலுக்கு விளைவு உண்டு என்பது இயற்கை விதி.

       குருவை மதித்தொழுகல் என்பது குருவின் அறிவாற்றலை மதித்தலோடு நின்று விடாமல் அவ்வறிவாற்றல் கூறும் நெறிகளின்படி நடக்க வேண்டும். இவ்வாறு நடந்து கொண்டால் அதற்குரிய பயன் தப்பாது கிடைக்கும் என்கிறார். எனவே தப்பாது என்றால் என்ன என்று அறிவோம்.

     5) தப்பாது என்றால் தவறாமல், நிச்சயமாக என்று பொருள்.

    பாடல் வரி ‘எவரொருவர் குருவை மதித்து ஒழுகினாலும் குருவுயர்வு மதிப்போர் தம்மை’ என்று அமையாமல் ‘எவரொருவர் குருவை மதித்து ஒழுகினாலும் தப்பாது குருவுயர்வு மதிப்போர் தம்மை’ என்று அமைந்திருப்பதைக் கவனிக்க வேண்டும். ‘தப்பாது’ என்கின்ற சொல்லின் வாயிலாக பிறவிப்பயனை நல்கும் என்பது உறுதியாக்கப்படுகின்றது.

     6)  குருவுயர்வு:

    குருவின் உயர்வுதான் சீடனை, இயல்பூக்க நியதியின் படி சீடனை பண்பேற்றம்பெறச் செய்து பிறவிப்பயனை அடையச் செய்ய முடியம். எனவே தான் அறிஞர் திருமூலர் யாரை குருவாகக் கொள்ள வேண்டும் என்று சூசகமாக அபக்குவன் எவ்வாறு குருவைக் கொள்வான் என்று கூறுகிறார். அப்படியானால் பக்குவன் யாரை குருவாகக் கொள்ள வேண்டும் என்பதனை அறிந்து கொள்ள வேண்டும். நடைமுறையில் யாரை குருவாக கொள்வது என்பது தெரியாமல் உள்ளது. தகுந்த குரு கிடைப்பது அவரவர் கருமையப்பதிவுகளைப் பொருத்து அமையும்.

                      அபக்குவன்

    குருட்டினை நீக்கும் குருவினைக் கொள்ளார்

    குருட்டினை நீக்காக் குருவினைக் கொள்வர்

    குருடும் குருடும் குருட்டாட்டம் ஆடிக்

    குருடும் குருடும் குழி விழுமாறே.

    . . . திருமூலர்.

    பொருள்:

    குருட்டினை என்பது அறியாமை. அறியாமையைப் போக்கும் நல்லாசிரியரைத் தேடிப்போகாதஅபக்குவர்கள் அறியாமையை போக்க முடியாத ஒருவரை குருவாகக் கொண்டு அவரிடம் போவார் என்கிறார் திருமூலர். இவ்வாறாக அறிவில்லாதவரும், அறிவு புகுட்ட முடியாதவரும் ஆகிய இருவரும் ஒன்று சேர்ந்து இருப்பது குருடுக்கு வழிகாட்டக் குருடு முற்பட்டு, இருவரும் துன்பக் குழியில் விழுந்து துயருறுவதைப் போன்றதே ஆகும் என்கிறார் திருமூலர். (அபக்குவன் என்றால் பரிபக்குவம் அடையாதவன் என்று பொருள். பக்குவன் என்றால் பரிபக்குவ நிலையை அடைந்தவர் என்று பொருள்)

    7) மதிப்பவரின் தரத்தை உயர்த்தி:

    பிறவிப்பயன் அடைவது என்பது அறிவு பண்பேற்றத்தின் உச்சத்தை அடைவது என்பதால் குருவின் உயர்வு இயல்பூக்க நியதியின்படி சீடனின் தரத்தை உயர்த்தி பண்பேற்றம் பெறச் செய்து அதன் பயனாம் பிறவிப்பயனான வீடுபேற்றினை அளித்திடும்.

     8) பிறவிப்பயனை நல்கும்:

    பிறவிப்பயன் என்ன என்பது பற்றி முன்னதாகவே ஒன்பது விருந்துகளில் விரிவாக அறிந்து கொண்டோம்.

       பிறவிப்பயன் அடைவதற்காகத்தான் ஆன்மா இந்த பிறவி எடுத்துள்ளது. இதனை அறியாமல்போனால் மீண்டும் பாவப்பதிவுகளைச் சேர்த்து சேர்த்து வம்சாவளிக்கு சொத்தாகக் கொடுத்து அவர்களையும் துன்பத்திற்கு ஆளாக்கி, மீண்டும் பிறவா வரத்தினை பெறமால் இப்பிறவித் தொடரை நீட்டித்துக் கொண்டே செல்ல நேரிடும்.

       எனவே, பிறவிப்பயனின் அருமை பெருமையை உணர்ந்து கொண்டு குருவின் உயிரை, குருவின் குணத்தை, குருவின் செயலை அடிக்கடி நினைந்து நினைந்து இயல்பூக்க நியதியின்படி அறிவினில் உயர்ந்து, குருவை மதித்து ஒழுகி அடுத்த பிறவிக்கு பிறவிப்பயனை அடைவதை தள்ளிப்போடாமல், இப்பிறவியிலேயே பிறவிப்பயனை அடைவோம். உத்தம நண்பர்காள் உங்கட்கும் உரியது என உத்திரவாதம் அளித்துள்ள நம் குருதேவரின் பாதாரவிந்தங்களில் நம் ஆத்மார்த்த நன்றியைச் சமர்ப்பிப்போம். வாழ்க வளமுடன். இத்துடன் பிறவிப்பயனை நல்கும் என்கின்ற சிந்தனையை நிறைவு செய்கிறோம். அடுத்த விருந்தில் வேறொரு தலைப்பில் விருந்து அருந்துவோம்.

    guru_paadham

    வாழ்க அறிவுச் செல்வம்                       வளர்க அறிவுச் செல்வம்.

    Loading

  • 225-பிறவிப் பயனை நல்கும்! 9/?

    வாழ்க மனித அறிவு             வளர்க மனித அறிவு

    பிறவிப் பயனை நல்கும்! 9/? 

    அறிவிற்கு விருந்து—225

    11-09-2016—ஞாயிறு.

    perinbapppadikalum thunaipapadikalum

    ‘உறவிலே கண்ட உண்மை நிலை துறவு’

    வாழ்க வளமுடன்.

    இன்றைய தலைப்பான ‘உறவிலே கண்ட உண்மை நிலை துறவு’ என்பதனை சிந்திப்பதற்கு உதவியாக இருப்பதில் முதல் இடம் வகிப்பது மகரிஷி அவர்கள் கூறும் அறிவுரையான ‘சுயமாய்ச் சிந்திப்பது’ என்பதால் சென்ற விருந்தில் சிந்தனை எவ்வாறு இருக்க வேண்டும் என்று மகரிஷி அவர்கள் கூறுவதனை அறிந்து கொண்டோம். அதாவது ‘சிறப்பான சிந்தனை என்பது, சிந்தனையுடன் சிந்திப்பது’ என்று அறிந்துகொண்டோம். ஒவ்வொரு செயலையும் செய்வதற்கு முன்பே சிந்தித்தேதான் ஆக வேண்டும். அப்படிப்பார்த்தால் வாழ்வில் எவ்வளவு செயல்கள் செய்யப்படுகின்றன. அன்றாடம் செயல்கள் புரிந்து கொண்டேதான் இருக்கிறான் மனிதன். சிந்திக்கும் பருவம் வந்ததிலிருந்து(12 வயதிலிருந்து) இறக்கும் வரை சிந்திக்க வேண்டிய ஆயிரமாயிரம் சிந்தனைகள் இருக்கின்றன.

    மனிதன் ‘நான் எப்போதுமே சிந்தித்துதான் ஒவ்வொரு செயலையுமே செய்கிறேன்’ என்று தைரியமாகவும் உறுதியாகவும் சொல்ல முடிகிறதா? சிந்திக்காமலேயே உணர்ச்சிவயத்தில் விளைவை முன்னரே கணிக்காமல், அறியாமையில் எவ்வளவோ செயல்களை செய்து விளைவுகள் துன்பங்களாக வரும்போது துன்பமடைவதனைத்தான் கண்கூடாகப் பார்க்கின்றோமே! வாழ்நாளில் சிந்தித்து வாழவேண்டிய ஆயிரமாயிரம் சிந்தனைகளில் ஒரு சில முக்கியத்துவம் பெறுகின்றன.

    மகா சிந்தனை எது?

    அவ்வாறு முக்கியத்துவம் பெரும் சிந்தனைகளில் முதன்மை வகிப்பது பிறவிப் பயனை அறியும் சிந்தனையாகும். இதனை ஆறாவது அறிவின் மகா சிந்தனை என்று கூட வைத்துக் கொள்ளலாம். ஏன்? பிறவிப்பயனை உணரவைப்பதால் அது மகா சிந்தனையாகின்றது. அப்படியானால் பிறவிப்பயன் என்பது என்ன? ஏற்கனவே பிறவிப்பயன் என்ன என்று அருளாளர்கள் கூற நாம் அறிந்திருந்தாலும் இப்போது அதனை நினைவுபடுத்திக் கொள்வோம். பிறவிப்பயன் பற்றி அருளாளர்கள் கூறுவது என்ன? முன்னோர்கள் செய்துள்ள வினைப்பயனை அனுபவிக்கவே ஆன்மா பிறவி எடுத்துள்ளது. ‘வினைப்பயனே தேகம் கண்டாய்’ என்கிறார் ஒரு அறிஞர். அதாவது பெற்றோர்கள், அவர்களின் பெற்றோர்கள், இவ்வாறாக முன்னோர்கள் செய்துள்ள வினையின் பயனை அனுபவிக்கவே ஆன்மா இப்போது பிறவி எடுத்துள்ளதனை எப்போதும் மனிதன் நினைவில் கொண்டு இப்பிறவியில் எவ்வாறு வாழவேண்டும்? முன்னோர்கள் செய்துள்ள வினைகளுக்கேற்ப இன்பமும் துன்பமும் வரும். ஆகவே ஆன்மா இப்பிறவியில் கொண்டுவந்துள்ள தீயவினைப்பதிவுகளையும் செயலிழக்கச் செய்ய வேண்டும். மேலும், தானும் இப்பிறவியில் தீய வினைகளைச் செய்யாமல் விழிப்போடு இருந்து நல்ல செயல்களையே செய்துவர வேண்டும். இதற்கான பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். பிறவி எடுப்பதற்குக் காரணமான தீயவினைப்பதிவுகளை செயலிழக்கச் செய்து மீண்டும் பிறவாத நிலைக்கு ஆன்மா உயர்வதே பிறவிப்பயன் என்று அறிந்துகொள்ள வேண்டும். பயிற்சியினால் தீயவினைப் பதிவுகளை செயலிழக்கச் செய்வதால் மனம் தூய்மை அடையும். தூய்மை அடைந்த மனமே இறைமனமாகி தன்னை இறையுடன் இணையச் செய்யும். மனம் தூய்மை அடைந்து இறையோடு கலப்பதே பிறவிப்பயன் ஆகும். இது யாவருக்குமே பொது. இந்த உண்மையில் நம்பிக்கை இருக்கின்றதோ இல்லையோ இந்த உண்மையின் அடிப்படையில்தான் ஒவ்வொருவருடைய வாழ்க்கையும் அமைகின்றது. உண்மையை யாரும் மாற்ற முடியாது. மறைக்கவும் முடியாது. எனவே உற்ற வயதில் மனிதன் சான்றோர்களின் அறிவுரைகளின் துணையுடன், சுயமாகவும் சிந்தனையுடன் சிந்தித்து பிறவிப்பயனை அறிய வேண்டி இருப்பதால் இச்சிந்தனையை மகா சிந்தனை என்கிறோம்.

    விழிப்பும் மயக்கமும்:

    இந்த மகா சிந்தனை, வாழ்க்கையை எவ்வாறு துன்பமில்லாமல் இன்பமாக வாழ்வது என்பதனை வாழப்பிறந்த மனிதனுக்கு தெளிவு படுத்தும். இந்த மகா சிந்தனை வெற்றி பெற்றுவிட்டால் மற்ற சிறு சிறு சிந்தனைகள் எளிதாகிவிடும். அதெப்படி? ஏனெனில் மகா சிந்தனை எப்போது வெற்றி பெறும்? சிந்தித்ததை செயலுக்கு கொண்டுவந்து பயன் அடையும்போதுதான் சிந்தித்தது வெற்றி அடைந்ததாகும். அதாவது மேலும் தெளிவாக விளங்கிக் கொள்வோம். பேரறிவு அயரா விழிப்புடையது என்பதனை அறிவோம். அந்த அயராவிழிப்புடைய பேரறிவின் சிறு துளியே மனிதனின் அறிவாக இயங்குகின்றது. ஆனால் பல்வேறு பரிணாம நிலைகளை(EVOLUTIONARY PROCESS) கடந்து வரவேண்டியுள்ளதால் மனிதஅறிவு அந்த விழிப்பு நிலையை இழந்துவிடுகின்றது. விழிப்பு நிலையை இழந்து விடுவதற்கு மற்றொரு பெயர்தான் மயக்கம். எனவே பிறவிப்பயனை அறிந்து அதனை அடைவதற்கான தளம் அமைத்துக் கொடுத்த மகா சிந்தனை வெற்றி பெறுவது என்பது மனித அறிவு மயக்க நிலையிலிருந்து மீண்டும் விழிப்பு நிலையைப் பெறுதலாகும். எப்போதும் இயற்கையில் இல்லாததை மனிதன் பெற இயாலாது. ஆகவே ஏற்கனவே இயற்கையில் பேரறிவிற்கு விழிப்பு நிலை உள்ளது. விழிப்புநிலையே பேரறிவு. விழிப்புநிலையே இறை.

    விழிப்பு நிலையும் பிறவியின் நோக்கம் அறிதலும்:

    ஏனெனில் மகா சிந்தனை வெற்றி பெறுவது என்பது அயரா விழிப்பாகிய பேரறிவின் அங்கமான மனிதஅறிவு மயக்க நிலையிலிருந்து விழிப்பு நிலையைப் பெறுதலாகும். எனவே இருந்த விழிப்புநிலை(AWARENESS) இழக்கப்பட்ட நிலையில் மீண்டும் விழிப்பினை பெற்றுவிடும்போது அந்த விழிப்புநிலை என்பது அனிச்சையாகிவிடும். அதாவது மகா சிந்தனையில் வெற்றி பெற்ற பிறகு, அறிவு விழிப்பு நிலையிலேயே இருக்க ஆரம்பித்து விடும். வேறு விதமாக சொல்வதென்றால் விழிப்பு நிலை ஏற்பட்ட பிறகுதான் பிறவியின் நோக்கம் என்ன என்று தெளிவாகும். இன்னும் வேறுவிதமாக தெளிவாகச் சொல்வதென்றால் விழிப்புநிலை ஏற்படுவதும் பிறவியின் நோக்கம் தெளிவாவதும் ஒரே நேரத்தில் அறிவிற்கு ஏற்படும் அனுபவ சம்பவங்கள். சம்பவங்கள் என்று இரண்டாக பன்மையில் சொல்வது தெளிவான தெளிவு அல்ல. தெளிவானத் தெளிவு என்பது என்ன? சிந்தனையுடன் சிந்திப்பது போன்றதே இதுவும். தெளிவு வேறு சிந்தனை வேறா?! இல்லை. ஒன்றே. ஒரே அறிவின் நிலைகள்தானே சிந்தனையும், தெளிவும். விழிப்பு நிலை பெறுவதும், பிறவியின் நோக்கம் அறிவதும் வேறு வேறல்ல. இரண்டும் ஒன்றே. எனவே இரண்டும் ஒரே நேரத்தில் ஏற்படுகின்றன.

    மகா சிந்தனையால் மகா புருஷரானார்:

    இதுவரை சிந்தித்தில், மனிதனின் வாழ்நாளில் சிந்திக்கின்ற ஆயிரமாயிரம் சிந்தனைகளில், பிறவிப்பயனை அறிகின்ற சிந்தனை மகா சிந்தனை என்று முடிவு செய்துள்ளோம். அந்த மகா சிந்தனையால்தான் மகரிஷி அவர்கள் மகா புருஷனானார். பிறவியின் நோக்கத்தை அறிந்துள்ளார். அது பேரின்பப்படிகளில் முதல் படி. பிறகு அடுத்த மூன்றுபடிகளையும் கடந்து முழுமை அடைந்த அனுபவத்தை அறிவிக்கும் பாடலை சிந்தித்து வருகிறோம். ஏற்கனவே விருந்தில் இரண்டு படிகளை கடந்து வந்துவிட்டோம்.

    எனவே இப்போது பேரின்பப் படிகளில் மூன்றாவது மற்றும் நான்காவது படிகளைக் கடக்க இருக்கிறோம். ஆகவே அவற்றை நினைவு படுத்திக் கொண்டு சிந்தனையைத் தொடர்வோம்  

    ‘உறவுகளில் உண்மைநிலை உணர்ந்து ஆற்றி,

    உயர்வான துறவுநிலை உணர்ந்த போதும்,

    துறவுநிலை முடிவாகப் பெற்ற போதும்,

    துய்த்த பேரின்பம் எவ்வாறுரைப்பேன்!’                             

    . . . வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

    மூன்றாவது நிலை:

    பேரின்பப்படிகளின் மூன்றாவது நிலை என்ன தெரிவிக்கின்றது? ‘உறவுகளில் உண்மைநிலை உணர்ந்து ஆற்றி, உயர்வான துறவு நிலை உணர்ந்த போது பேரின்பம் அடைந்ததாகக் கூறுகிறார் மகரிஷி அவர்கள். இந்த நிலையை ஆய்விற்கு எடுத்துக் கொண்டு சிந்தனையுடன் சிந்திப்போம். அப்பாடல் வரிகளில் உள்ள வார்த்தைகளை எடுத்துக் கொள்வோம்.

    1) உறவுகளில் 2) உண்மைநிலை 3) உணர்ந்து 4) ஆற்றி 5) உயர்வான 6) துறவு நிலை 7) உணர்ந்த போதும். 8) உயர்வான 9) துறவுநிலை 10) உணர்ந்த போது

    உறவு என்பது என்ன?

    உறவு என்றால் சொந்தம்(RELATIONSHIP), தொடர்பு. பிணைப்பு(BONDAGE) என்று பொருள். உறவு என்பது மனிதர்களோடு உள்ள தொடர்பு மட்டுமல்ல. உயிரற்ற சடப்பொருட்களோடு ஏற்படும் தொடர்பும் உறவு என்றுதான் பொருள்.

    உண்மை நிலை என்பது என்ன?

    உண்மை என்பது மறுக்க முடியாதது. பொய் அல்லாதது, கற்பனைக்கு மாறானது, நடப்பில் உள்ளது, முறை பிறழாதது, இயல்பானது, முடிவாக இருப்பது என்று பொருட்கள் பல இருக்கின்றன. நிலை என்பது இருக்கும் தன்மை என்று பொருள். ‘உண்மை’ என்பதன் பொருளையும், ‘நிலை’ என்பதன் பொருளையும் இணைத்து ‘உண்மை நிலை’ என்பதற்கான பொருள் ஒன்றின் மறுக்க முடியாத கற்பனைக்கு மாறான நிலை. எவ்வாறு பொருள் மெய்ப்பொருள் என்று இரண்டாகக் கருதுவதுபோலவும், மெய்ப்பொருளை உண்மை என்று கூறுவதுபோலவும் உறவின் நிலையிலும் இரண்டு உள்ளன. உறவின் வெளிப்படையாகத் தெரியும் நிலை உண்மை நிலையாகாது. உறவின் உண்மை நிலை ஒன்றுள்ளது. அதுதான் துறவு. உறவிற்கு எதிர் சொல் உண்டா எனில், துறவு என்பதனை உறவின் எதிர்ச் சொல்லாகக் கருதலாம். இதனைத்தான் உறவின் உண்மை நிலை துறவு என்கிறார் மகரிஷி அவர்கள். இதுவரை, இவ்வாறு பொதுவாகவோ (உலகியலில்) அல்லது ஆன்மீகத்திலோ ‘உறவிலே கண்ட உண்மை நிலை தெளிவு’ என்கின்ற கண்டுபிடிப்பின் மூலமாக இதுவரை பற்றினைப்பற்றிய தெளிவானத் தெளிவு இல்லாதிருந்த குறையை திருவேதாத்திரியம் போக்கியுள்ளது என்று கூறுவதன் மூலம் மகிழ்ச்சியினையும், உளமார்ந்த நன்றியினையும் வேதாத்திரியத்திற்கு தெரிவித்துக் கொள்ளலாகின்றது.

    உணர்ந்து  என்றால் பொருள்  தெரியும். உணர்ந்து என்றால் ஒரு நிலையையோ தன்மையையோ மனதால் புரிந்து கொள்ளுதல் என்று பொருளாகின்றது.

    ஆற்றி என்றால் கடமையை நிறைவேற்றுதல் என்று பொருளாகின்றது. ‘உயர்வான’ என்றால் மதிப்பில் கூடுதலாக இருத்தல் என்று பொருளாகின்றது.

    ‘துறவுநிலை’ – ‘துற’ என்பதிலிருந்து வந்த வார்த்தையான ‘துறவு’ என்றால் நீக்குதல், கைவிடுதல் என்று பொருளாகின்றது. ‘துறவுநிலை’ என்பது அறமாகிய நல்லவை சேர அல்லதை நீக்கிய நிலை என்று பொருள். அதனால்தான் இல்லறம்(இல்+அறம்) என்பதுபோல் அல்லதை துறப்பதில் இல்லறத்தில் இருந்த அறம் மேலும் சிறப்புறுவதால் துறவறம் எனப்படுகின்றது. இல்லறம் அவசியம். இல்லறத்தில் அறம் காக்க நல்லதையே செய்து வர வர, அதன் பயனாகிய வீடுபேற்றினை அடையமுடியும். நல்லதையே செய்து வருவது என்பது அல்லதைத் துறந்து கொண்டு வந்தால்தான் சாத்தியமாகும். ஆகவே வீடுபேற்றைப் பெறுவதனை தடுக்கும் அல்லதை துறப்பதே துறவு ஆகும். இத்தகைய சிறப்புள்ள துறவினை பலவிதகோணங்களில் விளக்கவே திருவள்ளுவருக்கு 14 அதிகாரங்கள் தேவைப்பட்டுள்ளன.

    எனவே அறத்துப்பாலை மூன்றாகப் பிரித்து அதில் முதலில் பாயிரத்தை வைத்து, இரண்டாவதாக இல்லறவியலை வைத்து, இல்லறவியலுக்கு அடுத்ததாக துறவியலை வைத்துள்ள முக்கியத்துவத்தை அறிய வேண்டும். எனவே இல்லறமும், அதனுடன் தொடர்புடைய துறவறமும் அவசியம். இல்லறத்திலும் அறம் இருக்கின்றது. துறவறத்திலும் அறம் இருக்கின்றது. இல்லறத்தில் இருக்கின்ற அறம் மேலும் சிறப்புற துறவறம் அவசியமாகின்றது. இந்த பிறவிதான் ஆன்மாவிற்கு முதற்பிறவியன்று. பல்லாயிரம் பிறவிகள் எடுத்துள்ளது இந்த ஆன்மா. எனவே பல்லாயிரம் பிறவிகளாக இல்லறம் மட்டுமே சுகம் என்கின்ற நினைப்பில் வாழ்க்கையை நடத்திவிட்டு முறையான, சரியான துறவறத்தை புறக்கணித்துள்ளது ஆன்மா. எனவேதான் இந்த பிறவி எடுத்துள்ளது. ஆகவே வேதாத்திரியத்தை அறிந்த இந்தப்பிறவியிலாவது மீண்டும் ஒருமுறை இல்லறத்தையும் மேம்பட நடத்தி திருவள்ளுவர் மற்றும் அவரை மானசீகமாகக் கொண்ட வேதாத்திரி மகரிஷி அவர்கள் கூறும் துறவறத்தை முதன் முறையாக நடத்தி இறந்து-பிறக்கும் சுழற்சிக்கு முற்றுப்புள்ளி வைப்போம். எனவே வேதாத்திரிய ஆன்மீகத்தில் ஆழ்ந்து போகப் போக ஆனந்தமே. பொதுவாக ஆன்மீக சாதகர்களுக்கேயுரிய பற்றை விடவேண்டியதில் உள்ள அச்சம் வேதாத்திரிய ஆன்மீகத்தில் கிடையாது. துறவு பற்றி தெளிவினை பல கோணங்களில் ஏற்படுத்த 14 அதிகாரங்களை ஒதுக்கியுள்ளார் திருவள்ளுவர். அதில் ஒன்று துறவிற்கென்றே ஒரு அதிகாரம் ஒதுக்கியுள்ளார்.

    மூன்றாவது பேரின்பப் படி:

    ஆக ‘உறவுகளில் உண்மைநிலை உணர்ந்து ஆற்றி உயர்வான துறவுநிலை உணர்ந்த போதும்’, என்கின்ற சொற்றொடருக்கான பொருளாவது, மனிதர்களோடு அல்லது பொருட்களோடு ஏற்படும் தொடர்பில்(உறவு) மறுக்க முடியாத கற்பனைக்கு மாறான நிலையை, தன்மையை மனத்தால் புரிந்து கொண்டு கடமையைச் செய்யும்போது மதிப்பில் உயர்ந்த துறவுநிலை உணர்ந்த போதும் என்று பொருள்.

    கடமையைச் செய்து வரும்போது என்ன நடந்தது மகரிஷி அவர்களுக்கு? துறவு நிலை விளங்கியது. அதுவும் அத்துறவு நிலை உயர்வானதாகவும் இருந்திருக்கிறது மகரிஷி அவர்களுக்கு, ஆகவே மூன்றாவது பேரின்படியில் அறிந்து கொண்டது — மனிதர்களோடு அல்லது பொருட்களோடு ஏற்படும் தொடர்பில்(உறவு) மறுக்க முடியாத கற்பனைக்கு மாறான நிலையை, தன்மையை மனத்தால் புரிந்து கொண்டு கடமையைச் செய்யும்போது உயர்வான துறவு நிலை விளங்கியது. விளங்கியபோதே அதனை அடைவதற்கான உறுதிப்பாடு அவரிடம் இருந்ததால், பேரின்பம் அப்போதே கிடைத்துவிட்டது. அந்த நிறைவில் 30-11-1991 அன்று தன் மாணவர்களுக்குத் தெரிவிக்கவே மலர்ந்ததுதான் ‘மறைபொருள் உணர்ந்த நிறைவுக் கவி.

    மறைபொருள் உணர்ந்த நிறைவுக் கவி                           (30-11-1991)

    இன்று நான் நிறைவு பெற்றேன்! இறைவா! இன்று நான் நிறைவு பெற்றேன்!

    நின்றேன் நடந்தேன்; உன்னை நினைந்து தேடியலைந்தேன்; சென்றேன் பலஇடங்கள் சிந்தனை விரிந்தபின்.

    இன்று நான் நிறைவு பெற்றேன்! இறைவா! இன்று நான் நிறைவு பெற்றேன்! …………………………………………………………………. ………………………………………………………………….                             . . . வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

    நான்காவது பேரின்பப் படி:

    அறிவு ஒன்றை உணர்ந்து விட்டதாலேயே, உணர்ந்து விட்டது முழுமையானதாகாது. உணர்ந்ததை அடையும்போதுதான் அது முழுமையாகும், பயனுமாகும். எனவே மூன்றாவது பேரின்பப்படியில் உணர்ந்த துறவு நிலையை முடிவாகப் பெற்றபோது அடைந்த பேரின்பம்தான் நான்காவதும் இறுதியுமான துறவு நிலை. அதற்குப்பிறகு இவ்வுலகில் அனுபவிக்க வேண்டியது வேறு ஒன்றுமில்லை. அவர் மனிதப்பிறவி எடுத்ததன் பயனாக இறைஅருளாலும், அருளாளர்களின் அருளாசியுடனும்,

    தானாகவும், பிறவிப்பயன் என்பது இறை உணர்வு பெறுவது என்பதனைக் கண்டுபிடித்து, பிறகு இறை உணர்வு பெற அறநெறியில் வாழ்ந்து, அத்துடன் இல்லாமல் உண்மைப்பொருளை அறிய (இறைஉணர்வு) உறவு நிலையில் உண்மை நிலை துறவு என்று அறிந்து, முடிவாக அத்துறவு நிலையினை எய்தியுள்ளார். இந்த பேரின்ப அனுபவத்தை அவரது மாணவர்களும் ஐயமறத் தெளிவாகத் தெரிந்து கொண்டு இறைஉணர்வின் மனவுருத்தோற்றத்தினை(CONCEPT) அறிந்து கொண்டு அதற்தாக பெரும் முயற்சி செய்து இப்பிறவியிலேயே இறை உணர்வு பெறுகின்ற பேற்றினை அடைய 1998 சனவரியில் இப்பாடலை (இன்பம், இன்பம், இன்பம், இன்பம்) இயற்றியுள்ளார். இறைஉணர்வு என்பதனை வேறு வழிகளில் கூறியுள்ளதை, அதாவது நான்கு பேரின்பப்படிகளின் சாரத்தை நினைவு படுத்திக் கொள்வோம். ஆறறிவுடைய மனிதன் அதற்கு ஏற்ப பொருத்தமான பேறான உண்மைப் பொருளை உணர்ந்துவிட்டால் பிறவிப்பயன் அடைந்ததாக மலரே! மலரே! எனத்துவங்கும் பாடலின் கடைசியில் கூறுகிறார். பேரின்ப ஊற்று என்கின்ற தலைப்பில் உள்ள பாடலின் கடைசியில்

    பேரின்ப ஊற்று

    உன்னிலே நானடங்க, என்னுள்ளே நீ விளங்க,

    உனது தன்மை ஒளிர, எனதுள்ளம் தூய்மை பெற்றேன்.

    இன்னும் வேறென்ன வேண்டும் இப்பேறு பெற்ற பின்னர்?

    எடுத்த மனிதப் பிறப் பெய்தியதே முழுமை. . . . வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

    இதுவரை பிறவிப்பயன் நல்கும் என்பதில் பிறவிப்பயன் என்ன என்று விரிவாகப்பார்த்துவிட்டோம். இனி ‘எவரொருவர் குருவை மதித்து ஒழுகினாலும் குருஉயர்வு மதிப்பவரை தப்பாது தரத்தில் உயர்த்தி பிறவிப்பயனை நல்கும்’ என்பதில் ‘குருவை எவ்வாறு மதித்து ஒழுக வேண்டும்’ என்பதனை அடுத்த விருந்தில்(14-09-2016-புதன்) நிறைவு செய்வதோடு மகரிஷி அவர்களின் ஜெயந்தி தினத்திலிருந்து(14-08-2016) ‘பிறவிப்பயன் நல்கும்’ என்கின்ற தலைப்பில் அருந்தி வருகின்ற விருந்து நிறைவு பெறும். வாழ்க வளமுடன்.

    வாழ்க அறிவுச் செல்வம்              வளர்க அறிவுச் செல்வம்.

    Loading

  • 224-பிறவிப் பயனை நல்கும்! 8/?

    வாழ்க மனித அறிவு        வளர்க மனித அறிவு

     
    பிறவிப் பயனை நல்கும்! 8/?

    அறிவிற்கு விருந்து—224

    07-09-2016—புதன்.

    gurudevar

    சிந்தனையோடு சிந்திக்க வேண்டும்.

                                                                                . . . வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

    வாழ்க வளமுடன்.
    ஆன்மீகத்தில் ஆழ்ந்து செல்பவரின் நிலை,
    எல்லாவற்றையும் துறந்துவிடுவதுதான் எனத் தவறாக எண்ணி அச்சம் கொண்டு,
    வாழ்க்கையாகிய விருந்தில் ஆன்மீகத்தை ஊறுகாயாக மட்டுமே பயன்படுத்தி வரும் நிலையினை மாற்றி,
    சுடர் விடாமல் இருந்த சிந்தனை விளக்கை ஏற்றி தொடர்ந்து எறியச் செய்து,
    ஆன்மீகமும் உலகியல் வாழ்க்கையும் வேறு வேறன்று, ஒன்றேயான வாழ்வியல் கலை என்கின்ற தெளிவினை ஏற்படுத்தி,
    ஆன்மீகமும் உலகியல் வாழ்க்கையும் கலந்த சரிவிகித உணவாக்கி
    அறிவிற்கு இயற்கையின்/இறையின் கருணையினால் அருளப்பட்டுள்ள விருந்தாகிய
    மனவளக்கலையின் பயனாகவே தொடர்ந்து பிறவிப்பயன் பற்றி சிந்தித்து வருகிறோம்.

    சுடர் விடாமல் இருந்த சிந்தனை விளக்கு ஏற்றிவைக்கபட்டுள்ளது:

    இருபதாம் நூற்றாண்டில் அருளப்பட்ட மனவளக்கலை சமுதாயத்தில் என்ன செய்து வருகின்றது என மனவளக்கலைஞரல்லாதோர் அறிய விரும்பி வினவினால் என்ன பதில் அவர்களுக்காக காத்திருக்கின்றது?
    எண்ணெய், திரி இருந்தும் எரியாமல் இருந்த சிந்தனை விளக்கு ஏற்றிவைக்கப்பட்டு முதன் முதலாக தொடர் ஒளியை சமுதாயத்தில் வீசச் செய்துகொண்டுள்ளதே இந்த மனவளக்கலை’ என்பதே பதிலாகும்.
    சுடர் விடாமல் இருந்த சிந்தனை விளக்கு, தொடர்ந்து சுடர்விடும்படி ஏற்றிவைக்கப்பட்டுள்ளதால், அதற்கு சான்றாக சிந்தனையின் அருமை, பெருமைகளைத் தெரிந்துகொள்ள சிந்தனை என்பது என்ன என்று சிறிது நேரம் சிந்தித்துவிட்டு இன்றைய விருந்தை அருந்தச் செல்வோம். பொதுவாக அறிவிற்கு விருந்தே சிந்தனையின் அடிப்படையில் அமைந்திருந்தாலும்,  அடுத்தவிருந்தான,  ‘உறவிலே கண்ட உண்மை நிலை துறவு’ என்கின்ற பொருள் பற்றி அறிந்து கொள்வதற்கு அவரவர்களின் சுயசிந்தனையே உதவியாக இருக்கும் என்பதால் சிந்தனையைப்பற்றி இன்று சிந்தித்துவிட்டு அடுத்த விருந்தில் ‘உறவிலே கண்ட உண்மை நிலை துறவு’ என்கின்ற பொருள் பற்றி (11-09-2016) சிந்திப்போம்.

    சிந்தனையோடு சிந்திக்க வேண்டும்:

    சிந்தனையோடு சிந்திக்க வேண்டும் என்கின்ற சொற்றொடர் புதிதாகவும், புதிராகவும் உள்ளதே. சிந்தனையோடு சிந்திக்க வேண்டும் என்றால் என்ன? சிந்திப்போம்.

    இப்பூவுலகில், சிந்தித்து வாழ்பவர்கள் வெகு சிலரே! வாழ்கின்ற மக்களின் தொகை எண்ணிக்கையோடு ஒப்பிட்டுப்பார்த்தால், சிந்தித்து வாழ்பவர்கள் விரல் விட்டு எண்ணும் அளவிற்குத்தான் உள்ளனர். மற்றவர்கள் சிந்திப்பதில்லையா என்கின்ற கேள்வி எழலாம். சிந்தனையோடு சிந்திப்பவர்கள்தான் சிந்திப்பவர்கள். சிந்தனையோடு, சிந்தனை செய்து, பிறகு செயலுக்கு வரவேண்டும். அவ்வாறுச் சிந்தித்து செயலுக்கு வருபவர்கள் அரிதாக உள்ளனர்.

    இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன்னர் அவதரித்த சீன தேசத்து அறிஞர் கன்பூசியஸ் அவர்கள் “சரியானது எது என்று உணர்ந்த பிறகும் அதைச் செய்யாமல் இருப்பதுதான் மகாக் கோழைத்தனம்” என்கிறார். ஏன் அறிஞர் இவ்வாறு கூறுகிறார்? ‘சரியானது எது என்று உணர்ந்த பிறகும்’ என்று அறிஞர் கன்பூசியஸ் சொல்வது சிந்திப்பதைத்தான். எனவே இந்த அமுதமொழியை சிந்தனை செய்வதில் பொருத்திப் பார்த்தால், இரண்டு உண்மைகள், புலப்படும்.

    ஒன்று சிந்திப்பது என்றால் என்கின்ற வரையறை.
    மற்றொன்று சிந்தித்ததை செயல்படுத்தமால் இருப்பது கோழைத்தனம் என்பது.

    ‘சரியானது எது என்று’ உணர்வது எப்போது சாத்தியம்?

    ‘சரியானது எது என்று’ உணர்வது அறிவிற்கு எப்போது சாத்தியமாகின்றது? சிந்தனையோடு, சிந்திப்பவர்களுக்கு மட்டுமே  ‘சரியானது எது என்று’ உணர்வது சாத்தியமாகின்றது. சிந்திப்பதற்கு சிந்தனையையே அடைமொழியாகச் சேர்த்து ‘சிந்தனையோடு சிந்திப்பது’ என்று சொல்வதன் பொருள் என்ன?
    ஆறாம் அறிவின் சிறப்பே சிந்திப்பது என்றிருக்கும்போது மனிதனாகப் பிறந்தவர்கள் அனைவருமே சிந்திப்பதில்லை என்றும் ஒட்டு மொத்தமாகவும் கூறமுடியாது. சிந்திக்கின்ற ஒரு சிலர் ஒன்றைப் பற்றி சிந்திக்கிறார்கள் என்றால் தொடர் விடாமுயற்சியாக, சிந்திக்க எடுத்துக்கொண்ட பொருளில் தெளிவு கிடைக்கும்வரை (அதற்கு விடை கிடைக்கும் வரை) அச்சிந்தனையைத் தொடர் சிந்தனையாக நீட்டிப்பதில்லை. அவர்களுக்கு மனச்சோர்வு (MENTAL FATIGUE) அதற்குள் வந்து விடுகின்றது. திக்கு முக்காடுகின்றனர். அதனைப்போக்க புலன் வழி இன்பத்திற்குச் சென்று விடுகின்றனர் அல்லது அறிவை வேறு திசை நோக்கிச் செலுத்தத் தயாராகின்றனர். அவ்வாறு தொடர் விடாமுயற்சியாக சிந்திக்கின்ற ஒரு சிலரில் வெகு சிலரே முடிவு வரும் வரைச் சிந்தித்து தெளிவு/விடை கண்டு தானும் பயனடைந்து, தெளிவு கண்டதற்கு நன்றி செலுத்தும் முகமாக, தனக்குள்ள பொறுப்பாலும், பொறுப்பின் காரணமாக சமுதாயத்தின் மீது வளர்த்துக் கொண்ட அக்கறையால் அதனை சமுதாயத்திற்கு பொன்மொழிகளாகவோ, கவிகளாகவோ, உரைநடைகளாகவோ அருளி அறிவுத் தொண்டாற்றுகின்றனர்.

    அதனால் பயன் அடைந்த சமுதாயம் அவர்களை அறிஞர்கள், சிந்தனையாளர்கள், ஞானிகள் என்று அழைத்துப் போற்றுகின்றது. அந்த அளவிலேயே அந்த பயன் நின்றுவிடுகின்றது. ஆனால் அறிஞர்களைப் போன்று தானும் சுயசிந்தனையாளராக வேண்டும் என்கின்ற அவா எழவேண்டும். சரியான சிந்தனை என்றால் அந்த சிந்தனையின் முடிவைக் கொண்டு புரியும் செயலின் செயலால் விளைவு நல்லதாக அமைய வேண்டும். இல்லை எனில் அந்த செயல் சிந்தித்து எடுத்த முடிவின்படிதான் செய்யப்பட்டது என்று சொல்வதில் அர்த்தமில்லை. சிந்திப்பது எதற்காக என்கின்ற புரிதலில் சிந்தனை செய்வதைத்தான் மகரிஷி அவர்கள் சிந்தனையோடு சிந்திக்க வேண்டும் என்கிறார்கள். கேட்பதில் கவனத்தோடு கேட்பது சிறப்பு என்று சொல்வதில்லையா? அதுபோல் தான் சிந்தனையோடு சிந்திக்க வேண்டும் என்று சொல்வதும். அதுபோல்தான் சிந்தனையோடு சிந்திக்க வேண்டும் என்கிறார்கள். முதல் வாக்கியத்தில் கேட்பதற்கு கவனத்தோடு என்பது அடைமொழியாக உள்ளது. ஆனால் இரண்டாவது வாக்கியத்தில் சிந்தனைக்கு சிந்தனையே அடைமொழியாக உள்ளது. சிந்தனையின் தன்மை எவ்வாறு இருக்க வேண்டும் என வலியுறுத்திச் சொல்வதற்காக ‘சிந்தனையோடு’ என்கின்ற வார்த்தை அடைமொழியாக இல்லாமல் வேறு எந்த வார்த்தை பொருத்தமாக இருக்க முடியும்? எனவே சிந்தனையோடு சிந்திக்க வேண்டும் என்கிறார் இருபதாம் நூற்றாண்டின் மாபெரும் சிந்தனையாளரான நம் குருதேவர் வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

    அறிவின் பணி எண்ணுவது. எண்ணுவதுகூட ஒருவழியில் சிந்தனை என்றே கொண்டாலும் சிந்தனையோடு எண்ணுவது சிறப்பு. அதனைத்தான் சிந்தனையோடு சிந்திப்பது என்கிறார். சிந்தனையோடு சிந்திப்பது என்பதற்கு சிரத்தையோடு சிந்திப்பது என்றுகூட பொருள் கொள்ளலாம்.

    சிந்தனைப் பற்றி மகரிஷி அவர்களின் ஒரு சில பொன்மொழிகள்:

    சொல்லால் மட்டும் நம்பாதே சுயமாய்ச் சிந்தித்தே தெளிவாய் என்கிறார்.
    சிந்தனையுடன் செயலும், செயலுடன் சிந்தனையும் நிற்கப் பழகுதல் நற்பண்பு என்கிறார்.

    விளக்கம்: சிந்திப்பதெல்லாம் எதற்காக? மனிதனின் நன்மைக்காகத்தானே! நன்மை எப்போது வருகின்றது? சிந்தித்த பிறகு அதனை செயல்புரிவதன் மூலம் வருகின்றது. நல்லது விளைவாக வருகின்றது என்றால் அச்செயல் நல்ல செயலாகத்தானே இருக்க முடியும். பண்பு என்றால் ஒன்றின் பண்பு என்று பொருள். எனவே தான் சிந்தனையுடன் செயலும், செயலுடன் சிந்தனையும் நிற்கப் பழகுதலால் வருவது நன்மையாக இருப்பதால் அதனை நற்பண்பு என்கிறார்.

    இன்பத்தும் துன்பத்தும், இயற்கையும் கற்பனையும் சிந்தித்து அறிபவன் சிறப்பாக வாழ்வான் என்று, தான் வாழ்ந்து கண்ட அனுபவத்தால் உறுதி கூறுகின்றார்.
    தெய்வத்தைப் போற்றி வழிபட்டு வாழ்வோர் சிந்தனையும் மேற்கொண்டால் சிறந்து உயர்வார் என்கிறார்.  சினம், அச்சம்(FEAR IS THE GREATEST SIN) ஒழியச் சிந்தனையை ஏற்றி சீவன் நிலைகளை நன்குணர வேண்டும் என்கிறார். சமுதாயத்தில் உள்ள தனிமனிதனும், குடும்பங்களும் துன்பங்களையும் சிக்கல்களையும் அனுபவிக்கிறார்களே தவிர அவற்றைப் போக்குவதற்கு என்ன செய்ய வேண்டும் என்று சிந்தனை செய்ய யாருக்கும் நேரம் இல்லை என வருத்தத்துடன் கூறுகிறார்.

    யாவற்றையும் சிந்தித்து தங்கள் வாழ்க்கையில் கொண்டுவந்து, அப்புறம் அதை நாட்டிற்குக் கொடுங்கள் என்கிறார்.

    பிறந்தவர்கள் அனைவருமே இறக்கும் வரை வாழ்கிறார்கள். அதனால் எல்லோரையும் வாழ்ந்ததாகக் கொள்கின்றதா இந்த சமுதாயம்? கொள்வதில்லையே!
    இல்லையே! வாழ்கின்றவர்களில் ஒரு சிலரைத்தான் அறிஞர்கள், சிந்தனையாளர்கள், வாழ்வாங்கு வாழ்ந்தவர்கள் என்கின்றது இந்த சமுதாயம். ஏன்? அவர்கள் எல்லோரையும் போல், சிந்திக்காமல் வாழ்வதில்லை. அவர்களது மூச்சே சிந்திப்பதுதான். இடைவிடாது சுவாசம் நடந்த கொண்டிருப்பது போல் ஆராய்ச்சியும் சிந்தனையும் அவர்களிடம் நடந்துகொண்டே இருக்கும்.

    இறக்கும் வரை எவ்வாறு சுவாசம் அவசியமாக இருக்கின்றதோ, அதுபோல் சிந்திப்பதும் நடந்திருக்கின்றது அவர்களது வாழ்வில். சுவாசிப்பது அனிச்சைச் செயல். தானாக நடப்பது. அதுபோல் சிந்திப்பதும் அவர்களின் வாழ்வில் அனிச்சையாக நடப்பது. எனவே அவர்களை சிறப்புப் பெயர்களால் அறிஞர்கள், சிந்தனையாளர்கள், வாழ்வாங்கு வாழ்ந்தவர்கள் எனப்படுகின்றனர்.

    தவறு எப்போது நடக்கின்றது?

    சிந்திக்காமல் செயல்படும்போது தவறு நடக்கின்றது. ஏனெனில் சிந்திக்காதபோது செயலின் உடன் அல்லது பின்விளைவு கணிக்கப்படுவதில்லை. எனவே செயலுக்கு விளைவு, நோக்கம், திறமை, தொடர்பு கொள்ளும் பொருள், இடம், காலம் ஆகிய ஐந்து காரணிகளுக்கேற்ப வருவதால், சிந்திக்காதபோது உணர்ச்சிவயப்பட்ட நிலையில் செய்யப்படும் செயல்களின் விளைவு ஐந்தில் ஏதாவது ஒரு காரணி சரியாக அமையாவிட்டாலும் சரியானதாக இருக்காது. ‘விளைவு சரியானதாக இருக்காது’ என்பது விளைவு துன்பமாக வருவதைத்தான் குறிக்கின்றது. துன்பத்தை அனுபவிக்கவா மனிதன் செயல் புரிய வேண்டும்?’ தன் கண்களைத் தன்விரல் கொண்டே குத்திக் கொள்வதுபோல் அல்லவா உள்ளது சிந்திக்காது செயல்புரிவது!

    சரியானதை செய்யாது இருப்பது எவ்வாறு கோழைத்தனம்?

    சீன அறிஞர் கன்பூசியஸ் கூறும் ‘சரியாக எது என்று உணர்வது’ சிந்தனை என்று சிந்தித்து அறிந்து கொண்டோம். அவ்வாறு ‘சரியானது எது என உணர்ந்த பிறகும் அதனைச்
    செய்யாது இருப்பது கோழைத்தனம்’ என்று அறிஞர் கன்பூசியஸ் அவர்கள் கூறுவது எவ்வாறு சரி என்றும்,
    ஏன் இதனைக் கூறுகிறார் என்பதனை அறிந்து கொள்ள சிந்திக்க வேண்டும்.

    ‘கோழை’ என்பது என்ன? கோழை என்றால் கபம், சளி(PHLEGM, SPUTUM) எனப்படும். கபமும், சளியும் இருப்பது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. அதுபோல் ஒரு மனிதன் கோழையாக. இருப்பதும் அவன் சிறப்புற வாழ்வதற்கு உகந்ததல்ல. கோழை என்கின்ற சொல் மனிதனின் மனதைப் பற்றிக் கூறும் சொல்லாகவும் உள்ளதையும் அறிவோம். ஒருவரை ‘கோழை’ என்றால் என்ன பொருள்? அவர் மன உறுதியோ, துணிச்சலோ இல்லாத நபர்(COWARD) என்று பொருள். ‘ஒரு கோழை இன்னொரு கோழையை உருவாக்குகிறான்’ என்கின்ற கூற்றையும் கவனத்தில் கொள்ள வேண்டும் கோழையாக இல்லாமல் இருப்பதற்கு. கோழையாக இருக்கக் கூடாது எனில் பயம் கொள்ளக் கூடாது என்று பொருளாக இருந்தாலும், பயப்படுவதற்கு பயந்துதான் ஆக வேண்டும். உதாரணத்திற்கு ஒரு செயல் புரிவதற்கு முன் அதன் விளைவு நல்லதாக இருக்காது என்று தெரிந்தும் பயம் கொள்ளாமல் துணிச்சலோடு செய்வது விவேகமானதன்று. ‘செயலுக்கு விளைவு உண்டு’ என்கின்ற இயற்கை/இறைநீதியை மதித்து நடத்தல் கோழையன்று. பயம்கொள்வதன்று. பயத்தைப் பற்றி மகரிஷி அவர்கள் கூறுவது—‘FEAR IS THE GREATEST SIN’ என்பார். தேவையற்ற பயம் இருந்தால் கவலை வரும். அதற்காக அவ்வாறு கூறுகிறார் மகரிஷி அவர்கள்.

    “சரியானது எது என்று உணர்ந்த பிறகும் அதைச் செய்யாமல் இருப்பதுதான் மகாக் கோழைத்தனம்” என்பதில் செய்யாமல் இருப்பது எவ்வாறு கோழைத்தனம் என்பதற்கு வருவோம்.
    மகாக் கோழைத்தனம் என்பதால் மற்ற கோழைத்தனம் ஏதேனும் இருப்பின் அதனைவிட இது பெரிய கோழைத்தனம் என்றாகின்றது. கோழை என்பதால் சரி எனக் கண்டுபிடித்ததை செயல்படுத்தாதவர் மனஉறுதியோ, துணிச்சலோ இல்லாத தடுமாற்றம் (WAVERING) கூடிய மனத்தன்மை உடையவர் என்று பொருளாகின்றது என்பது. உண்மையன்றோ! ஏனெனில் சில அரிய சிந்தனைகள் மலர்வதற்கு நீண்ட காலம் எடுத்துக் கொண்டிருக்கும். அவ்வாறு நீண்ட காலம் எடுத்துக் கொண்ட சிந்தனையின் முடிவைச் செயலுக்குக் கொண்டுவராதவரை கோழை என்று சொல்லாமல் வேறு எவ்வாறு அழைக்க முடியும் சீன அறிஞர் கன்பூசியஸ். அவர்கள்?

    சிந்தித்ததை செயலுக்கு கொண்டுவர முடியாமல் போவது ஏன்?

    சரியென சிந்தித்ததை செயலுக்கு கொண்டுவந்தால்தானே சிந்தித்ததன் கனியை அருந்த முடியும்! சிந்திக்க முடிகின்ற அறிவிற்கு செயல்படுத்துவதற்கு ஏன் தயக்கம் ஏற்படுகின்றது? ஏன் பயம் ஏற்படுகின்றது? ஏன் கோழையாகிறான் செயல்படுத்துவதில் மனிதன்? ஒன்று அவன் சரி என சிந்தித்தது சரியில்லையோ என்கின்ற ஐயம் அவனுக்கே தெரியாமல் இருக்கலாம். ஒருவேளை சரியென சிந்தித்ததை செயலுக்கு கொண்டு வந்தால் அதன் விளைவு சரியாக இல்லாமல்போனால் என்ன செய்வது என்கின்ற அச்சம் அறிவிற்கு. அல்லது தன்மீது நம்பிக்கையில்லைாமை. அல்லது சரியென சிந்தித்ததை செயல்படுத்தும்போது அவனது சுற்றத்தார் எழுப்புகின்ற எதிர்ப்பு இருக்கலாம். அவர்களையும் மீறி செயல்படுத்துவது முடியாமல் போகலாம். எது எப்படி இருந்தாலும் சரியென தீர்மானமாகச் சிந்தித்ததை செயல்படுத்தாதது சீன அறிஞர் கன்பூசியஸ் அவர்கள் கூறுவது போன்று கோழைத்தனமே. பொதுவாக யாரும் தன்னை கோழை என்று கூறுவதனை ஏற்க மாட்டார்கள். காரணம் சுய கௌரவம். ஆனால் இதனை மேலும் துல்லியமாக அதாவது சரியென தீர்மானமாகச் சிந்தித்ததை செயல்படுத்திய உண்மைச் சம்பவத்தின் வாயிலாக அறிந்து கொள்வோம்.

    என்ன சம்பவம் அது?

    மகரிஷி அவர்கள் பிறவியின் நோக்கத்தை எவ்வாறு அறிந்து கொண்டார்? யாராவது சொல்லி அறிந்து கொண்டாரா? அல்லது தானாகவே அறிந்து கொண்டாரா? சான்றோர்களின் அறிவாற்றலின் துணையைக் கொண்டு, தானும் சுயமாகச் சிந்தித்து அறிந்து கொண்டதுதான் பிறவியின் நோக்கம் அறிந்தது. ‘பிறவியின் நோக்கம் இறை உணர்வு பெறுவது’ சரியென உணர்ந்ததை என்ன செய்தார் மகரிஷி அவர்கள்? செயலாக்கி வெற்றி பெற்றார். செயலாக்காமல் இருந்திருந்தால் இன்றைக்கு உலகிற்கே விடிவெள்ளியாகத் திகழ்கின்ற வேதாத்திரியம் கிடைத்திருக்குமா? பிறவியின் பயன் இறைஉணர்வு பெறுவது சரி என சிந்தனையுடன் சிந்தித்து முடிவுசெய்ததே,

    முதல்படியின் பேரின்பமே இரண்டாவது படி ஏற ஊக்கம்:

    ஆரம்பத்திலேயே, முதல் படியிலேயே அவருக்கு பேரின்பத்தை கொடுத்ததால், மேற்கொண்டு பிறவியின் நோக்கமான இறைஉணர்வு பெறுவதற்காக ஊக்கத்தோடு அறநெறியில் நின்று விழிப்போடு இருந்து பொறுப்புடன் திட்டங்களைத் தீட்டி அதற்கான புனிதச் செயல்களை ஆற்றினார். விளைவு பேரின்பப்படிகளின் இரண்டாவது நிலைக்கு உயர்ந்து மகிழ்வுற்றார். எனவே அதேபோன்று இறை உணர் ஆன்மீக சாதகர்கள் முதலில் பிறவியின் நோக்கம் என்ன என்று அவரவர்களே கண்டுபிடிக்க சிந்தனையுடன் சிந்தித்து உறுதிப்படுத்த வேண்டும். உறுதிப்படுத்தியதை எந்தவித தயக்கமும் இல்லாமல் நடைமுறைக்குக் கொண்டு வர எத்தனிக்க வேண்டும்.

    இறை அருள் தானே துணை புரியும்:

    அவ்வாறு ஊக்கத்துடன் முயற்சி செய்து வரும்போது இறையே காப்பாக அமைந்து அந்த சாதகருக்கு அருள் புரிய/தடுத்தாட்க் கொள்ளக் காத்திருக்கும். காரணம் மனிதன் இறையை நோக்கி ஒரு அடி எடுத்து வைத்தால், இறை பத்தடி நோக்கிவருவதற்கு காத்திருப்பதே! தன்னை உணர வேறு வழியின்றி மனிதன் வழியாக உணர்வதற்காகத்தானே இறை அசையாத ஆதிநிலையிலிருந்து அசைந்து துகள்களாகி பஞ்சபூதங்களாகி, மற்ற உயிரினங்களாகி கடைசியில் மனிதனாக வந்துள்ளது. எனவே மனிதன் ஒரு அடி எடுத்து வைத்தால் இறை பத்தடி எடுத்து வைக்கும் என்பது உண்மையாகத்தானே இருக்க முடியும். அதனை அனுபவித்துப் பார்ப்போமே!

    இதற்கு ஒரு உதாரணத்தைக் கூட அனுபவப்பட்ட பெரியவர்கள் கூறுவதுண்டு. கடலிருந்து நீர் ஆவியாகி மேகமாகி, மழைபெய்து நீர் நதியாகி நெடுந்தூரம் பயணித்து கடலில் சங்கமம் ஆகும் நிலையில் கடலே எதிர்கொண்டு சென்று நதியை தன்னுடன் இணைத்துக் கொள்ளுமாம்.

      இப்போது ‘உறவிலே கண்ட உண்மை நிலை துறவு’ என்பது பற்றி சிந்தனையுடன் சிந்திப்போம். துறவு என்பது எது என்று அறிவதும், அந்த துறவு நிலையை முடிவாகப் பெறுவதும் பேரின்பப் படிகளாகக் கூறுகிறார் மகரிஷி அவர்கள்.

    இதுவரை ஏழு அறிவிற்கு விருந்துகளில் பிறவிப்பயன் பற்றியே சிந்தித்து வருகிறோம். பிறவிப்பயன் அடையும் நான்கு படிகளில் முதல் இரண்டு படிகளை அறிந்து கொண்டோம். மற்ற இரண்டு படிகளான
    ‘துறவு’ என்பது என்ன என்றும்,
    துறவு என்பது வாழ்க்கையைத் (உலகியல்) துறந்து விட்டு, இவ்வுலகில் எவ்வாறு வாழமுடியும் என்கின்ற கேள்விக்கான விடையைத் தெளிவாகத் தெரிந்து கொள்வோம். சிந்திப்பதற்கேற்ப செயல்படுவோம்.

    உலக அமைதி எந்த அடிப்படை உண்மையின் மீது அமைய இருக்கின்றது?
    ‘வாழ்க வையகம் வாழ்க வளமுடன்’ என ஜபிக்கும் அறிவு ‘துறவு என்ன என்பதும் துறவு எய்துவது எவ்வாறு பேரின்பத்தைத் தரும்’ என்பதனை அறிந்து கொள்வது சிறப்பு. வையகத்தில் எல்லோரும் எல்லாம் பெற்று உலக சகோதரத்துடன் அமைதியாக வாழ்வதற்கான சூழ்நிலை நிலவுவதற்கு, அந்த சூழ்நிலை எந்த உண்மையை அடிப்படையாகக் கொண்டதாக இருக்க வேண்டும்? ‘உறவிலே கண்ட உண்மை நிலை துறவு’ என்கின்ற வேதாத்திரிய உண்மையை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும். காலங்காலமாக இருக்கும் பழக்கத்தை, நல்லதைக் கருதி மாற்ற வேண்டுமென்றாலும், மாற்றம் அடிப்படையில் உண்மையைக் கொண்டதாக இருக்கின்றது என்பதனைத் அறிவிற்குத் தெரிவித்தாக வேண்டுமல்லவா?!

    ‘வாழ்க வையகம் வாழ்க வளமுடன்’ – தாரக மந்திரம் வலிவு பெற. . .

    ‘உறவிலே கண்ட உண்மை நிலை துறவு’ என்கின்ற உண்மையை அறிந்துகொண்டு, அதில் உறுதியோடு இருப்பது ‘வாழ்க வையகம். வாழ்க வளமுடன்’ என்கின்ற உலகை வாழ்த்தும் தாரக மந்திரம் வலிவு பெறுவதற்கு பேருதவியாக இருக்கும். ‘உணர்ந்து ஓதுவது’ என்பது சிறப்புடையது என்று மகரிஷி அவர்கள் வலியுறுத்துவதால் மகரிஷி அவர்கள் கனவு கண்ட உலக அமைதியை, நாமும் கனவு காண்கிறோம் என்பதால் உலக அமைதிக்கு’ அச்சாரமான ‘உறவிலே கண்ட உண்மை நிலை தெளிவு துறவு’ என்கின்ற உண்மையினை மகரிஷி அவர்கள் உணர்ந்தவாறு நாமும் உணர்ந்து கொள்ள வேண்டும்.
    ‘உறவிலே கண்ட உண்மை நிலை துறவு’ என்பதனை உறுதி செய்ய அவரவர்களின் சுயசிந்தனைஅவசியமாக உள்ளதால் சிந்தனையின் அருமை பெருமைகளைப் பற்றி இதுவரை ஆராய்ந்தோம். சிந்தனையைப் பற்றிச் சிந்தனையுடன் சிந்தித்தோம். இத்துடன் இச்சிந்தனையை நிறைவு செய்துகொள்வோம். அடுத்த அறிவிற்கு விருந்தில்(11-09-2016-ஞாயிறு) பேரின்பத்தின் மூன்றாவது படியினையும், நான்காவது படியினையும் சிந்திப்போம்.

    வாழ்க அறிவுச் செல்வம்                       வளர்க அறிவுச் செல்வம்.

    Loading

  • 223-பிறவிப் பயனை நல்கும்!7/?

    வாழ்க மனித அறிவு                                                           வளர்க மனித அறிவு

    பிறவிப் பயனை நல்கும்!7/?

    அறிவிற்கு விருந்து—223

               04-09-2016—ஞாயிறு

    Swamiji

        இன்று ‘பொறுப்பு’ என்கின்ற வார்த்தைக்கான மூன்று பொருட்களை(meaning) அறிய இருக்கிறோம்.  அந்த மூன்று பொருட்களை(அர்த்தங்கள்)  மீண்டும் நினைவு படுத்திக் கொள்வோம்.

     பொறுப்பு’ என்பதற்கு மூன்று அர்த்தங்கள் உள்ளன.  அவையாவன:

     1)   விளைவுகளை உணர்ந்து செயல்படும் நிலை என்று பொருள். 

    2)   இரண்டாவது  பொருள்—விளைவுகளை உணர்ந்து செயல்பட வேண்டிய நிலையில் உள்ள பதவி.

    3)   மூன்றாவது பொருள்—ஒப்படைக்கப்பட்டிருப்பதை நிறைவேற்றுதல்; கடமை(duty, responsibility).

          ‘பொறுப்பு’ என்கின்ற வார்த்தைக்கான முதல் பொருளான-

             1) விளைவுகளை உணர்ந்து செயல்படும் நிலை என்பதனை எடுத்துக் கொள்வோம். 

         மனிதனின் துன்பங்களுக்கான காரணம் விளைவுகளை அறிந்து செயல் புரியாமையே. எனவே செயல் செய்த பிறகு விளைவு வரும்போது இரண்டு விதமாகவும் வரலாம்.  அதாவது இன்பமாகவும் இருக்கலாம்.  அல்லது துன்பமாகவும் இருக்கலாம்.  பெரும்பாலும் மனிதன் உணாச்சிவயப்பட்ட நிலையிலேயே (மனஅலைச் சுழல் அதிகமாக உள்ள நிலையில்) செயல்களைச் செய்கிறான்.  மனிதன் உணர்ச்சி வயப்பட்ட நிலையிலேயே, சிந்திக்காமலேயே  செய்கின்ற செயல்களின் விளைவு துன்பமாகவேதான் இருக்கும்.  அறிவு நுண்மாண் நுழைபுலன் நிலையினை அடையாமல் இருப்பதுவே இதற்குக் காரணம்.  நுண்மாண் நுழைபுலன் நிலை என்பது உணர்ச்சிவயப்பட்ட, மனஅலைச் சுழல் அதிகமாக இருக்கும்போது எவ்வாறு கிட்டும்?  எனவே விளைவுகளை அறிந்து செயல்படுவது மனிதனின் பொறுப்பாகும்.

     பொறுப்பு என்பதற்கு இரண்டாவது பொருள்—

      2) விளைவுகளை உணர்ந்து செயல்பட வேண்டிய நிலையில் உள்ள பதவி. விளைவுகளை உணர்ந்து செயல்பட வேண்டிய நிலையில் உள்ள பதவி என்பது என்ன?  உதாரணத்திற்கு அலுவலகத்தை எடுத்துக் கொள்வோம்.  அதில் பலர் பணிபுரிகின்றனர். அவர்கள்  ஒவ்வொருவருக்கும், அவர்கள் வகிக்கும் பதவிக்கு ஏற்ப பொறுப்புகள் உண்டு.  ஒவ்வொருவருக்கும்  விளைவுகளை உணர்ந்து செயல்பட வேண்டிய பதவி கொடுக்கப்பட்டுள்ளதால், ஒவ்வொருவரும் பொறுப்புகளை உணர்ந்து அவரவர் பதவிக்குரிய கடமைகளை ஆற்ற வேண்டும் என்பதனை அலுவலக நிர்வாகம் எதிர்பார்க்கின்றது.  யாராவது ஒருவர் பொறுப்பை உணர்ந்து தனது கடமையைச் சரிவரச் செய்யவில்லை எனில் அவர் முதலில் எச்சரிக்கை செய்யப்படுவார்.  அப்போதும் அவர் பொறுப்பை உணர்ந்து கடமையை சரிவர ஆற்றவில்லை எனில் அவ்வலுவலகச் சட்டத்தின் கீழ் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு அவருக்கு தண்டனை(punishment) வழங்கப்படும்.   

          அதேபோன்றுதான் கோடிக்கான உயிர்கள் இருக்கும்போது, இயற்கையின்/இறையின் தன்மாற்றத் தொழிற்சாலையில், இந்த உயிருக்கு(மனிதனுக்கு) பொறுப்பான மனிதப்பிறவி கிடைத்துள்ளது.   அதனால்தான் அவ்வைத்தாய் மானுடப்பிறவியினை ‘அரிது அரிது மானுடராய் பிறத்தல் அரிது’ என்கிறாள்.  எனவே இந்த ஆன்மாவிற்கு(individual concerned)  மனிதப்பிறவி கிடைத்தது என்பது இயற்கை/இறை கொடுத்துள்ள உயர் பதவியாகும்.  நிர்வாகத்தில் எதற்காக ஒரு பதவி ஏற்படுத்தப்படுகின்றது?  பொறுப்பையும் கொடுத்து கடமையை சீராகச் செய்ய(Duties and responsibilities) நிர்வாகத்தில் பதவி ஏற்படுத்தப்படுகின்றது.  அதுபோல் தன்னுடையத் தன்மாற்ற தொழிற்சாலையில்(self transformation industry) இயற்கை/இறை கொடுத்துள்ள உயர்பதவிதான் மனிதப்பிறவி என்பது.  மனிதப்பிறவி என்பது  மிக மிகப்  பொறுப்புள்ள பதவி.  இறைவனுக்கு அடுத்த பதவி மனிதப் பதவி(பிறவி). எனவே  இறைவனுக்கு அடுத்த மனிதப்பதவியின்(பிறவியின்) மிகுந்த பொறுப்புகளை சரிவர அறிந்து ( just like knowing the fundamental and conduct rules  Framed By the office in which he serves)கடமைகளை ஆற்றவேண்டும் மனிதன்.   

     மூன்றாவது பொருள் — ஒப்படைக்கப்பட்டிருப்பதை நிறைவேற்றுதல்; கடமை(duty, responsibility):

        அலுவலகத்தில் ஒவ்வொரு பதவிக்கும் கடமை ஏற்படுத்தப்பட்டிருக்கும் என்றும்  அப்பதவியை வகிப்பவர் அப்பதவிக்கான கடமையைச் செவ்வனே ஆற்ற நிர்வாகம் எதிர்பார்க்கும்.  பதவியில் இருப்பவர், கடமையை சரிவரச் செய்யவில்லை என்றாலும் கடமையைச் செய்யாமல் இருந்தாலும் நிர்வாகம் அதற்குரிய தண்டனையை அவருக்கு அளிப்பதற்கு சட்டத்தில் இடம் இருக்கின்றது என்றும் பார்த்தோம். அதுபோல், இயற்கையின்/இறையின்/பேரறிவின் மனிதஇனத் தன்மாற்ற தொழிற்சாலையில் மனிதப்பதவிக்கு(மனிதப்பிறவிக்கு) அளிக்கப்பட்டுள்ள கடமையை தெரிந்து கொள்ளாமல் இருந்தாலும்(கல்லார்), தெரிந்து கொண்டுச்(கற்றார்) செய்யாமல் இருந்தாலும் அதற்குரிய விளைவை துன்பமாக  மனிதன் எதிர்நோக்க வேண்டியிருக்கும்.

         கடமை என்பது என்ன?  கடமையை எவ்வாறு ஆற்றமுடியும்? செயலைச் செய்துதான் கடமையை ஆற்றமுடியும்.  எனவே செயலாற்றுவது  கடமை.  ஒப்படைக்கப்பட்ட கடமையை  நிறைவேற்றாமல் இருப்பதும் குற்றம்.  எனவே கடமையை உணர்ந்து  சரிவரச் செய்ய வேண்டும். இல்லை எனில் விளைவு துன்பம்தான். கடமையை(செயலை) உணர்ந்து சரியாக ஆற்றாமல் போனாலும் அல்லது கடமையை உணராமல் போனாலும் விளைவு துன்பமே. இதனை யார் அனுபவிப்பது? நேரிடையாகச் சொல்வதென்றால் கடமையை ஆற்றத் தவறியவர் எனலாம்.  ஆனால் நிர்வாகத்தின் உறுப்பினரான ஒருவருக்கு  நிர்வாகத்தால் கடமை ஒப்படைக்கப்பட்டு, அதனை அவர் உணர்ந்து சரியாகச் செய்யவில்லை எனில் அதனால் வரும் நட்டம் நிர்வாகத்திற்கேதான் போய்ச்சேரும். எனவே மனிதன் விளைவை உணர்ந்து செயல்புரிய வேண்டும் வாழ்க்கையில். இவ்வுண்மையினை இறைவணக்க முதல்பாடலிலேயே  ‘கல்லார் கற்றார் செயல்விளைவாய் காணும் இன்பம் துன்பமவன்’ என்று சுத்த அத்வைதத்தில் வலியுறுத்தி இயம்புகின்றார் மகரிஷி அவர்கள்.  காணும் இன்பம் துன்பமவன் யார்?  எவ்வாறு மனிதன் ஏற்படுத்திய தொழிற்சாலையில் பணிபுரிபவர்கள் கடமையைச் சரிவரச் செய்யவில்லை எனில், அதனால் ஏற்படும் நட்டம் நிர்வாகத்திற்கே போய்ச் சேர்வதுபோல், இயற்கையின்/இறையின் மனித இனத் தன்மாற்றத் தொழிற்சாலையின் பங்குதாரர்களான மனிதர்கள் தங்களின்  கடமையைச்(செயலை) சரிவரச் செய்யவில்லை எனில் அதனால் வருகின்ற துன்பத்தை அதிபரான இறைவனே(இறையே) ஏற்க நேரிடுகின்றது.

     என்ன கடமை இயற்கை/இறை மனிதனுக்கு அளித்துள்ளது?

           தானும் இன்பமாக வாழ்ந்து அதேபோல் தன்னுடன் வாழ்கின்ற  சமுதாயத்தில் உள்ள பிறரும் இன்பமாக வாழ்வதற்கு இடையூறு செய்யாமலும், தேவையிருந்தால், தன்னால் முடிந்தால், அவர்களும் இன்பமாக வாழ்வதற்கு,  உதவிசெய்யக்கூடியக் கடமையை இயற்கை/இறை வைத்துள்ளது,    மனிதனுடைய செயல்களுக்கு ஏற்ற விளைவைத் தருவது இயற்கை/இறை நீதி.  மனிதன் விளைவுகளைத்தான் இன்பமாகவோ, துன்பமாகவோ  அனுபவிக்கிறான்.  இன்பமே விரும்பும் மனிதன், அதற்கேற்ற  செயல்களைக் கடமையாகச் செய்ய வேண்டும்.  இல்லை எனில் மனிதன் துன்பங்களைத்தான் அனுபவிக்க வேண்டியிருக்கும்.  பிறரையும் வாழவைத்து தானும்  இன்பமாக வாழ மனிதன் செய்ய வேண்டியது என்ன?  இரண்டே இரண்டுதான்.

     இரண்டொழுக்க பண்பாடே  இயற்கை/இறை மனிதனுக்கு வைத்துள்ள கடமை:

       சுருங்கச் சொல்வதென்றால் இயற்கை/இறை மனிதனுக்கு வைத்துள்ள கடமைகள் இரண்டு.  என்ன அவை?  தன்னிலிருந்த(இறையிலிருந்து) தன்மாற்றடைந்து வந்துள்ள மனிதன் தனது(இறையின்) தன்மையை  அவனில்(மனிதனில்) ஒளிரச் செய்ய வேண்டிய பொறுப்பை மனிதனுக்கு வைத்துள்ளது இயற்கை/இறை.  அதற்கு இரண்டு கடமைகளை ஆற்றவேண்டியுள்ளது.  ஒன்று இயற்கையின்/இறையின் தன்மையான அன்பை வெளிப்படுத்த வேண்டும்.  மற்றொன்று  கருணையோடு இருக்க  வேண்டும்.  அதனை வெளிக் கொண்டுவர மகரிஷி அவர்கள் மனவளக்கலையை வடிவமைத்து சீரமைக்கும்போது ஒருயுக்தியினைக் கையாண்டிருக்கிறார்.  அதுதான் இரண்டொழுக்க பண்பாட்டுச் சங்கல்பம்.

    ஒன்று, தான் வாழ்கின்ற வரை யாருடைய உடலுக்கும், மனதுக்கும் துன்பம் தரக்கூடாது.

    மற்றொன்று துன்பப்படும் உயிர்களுக்கு தன்னால் முடிந்த உதவிகளைச் செய்ய வேண்டும்.

    முதலாமது அன்பை வெளிப்படுத்துவது.  சீவனில் சிவனைக் காண்கின்ற அன்பு மனம் எவ்வாறு பிறருக்கு துன்பம் விளைவிக்கும்?

    இரண்டாமது கருணையை வெளிப்படுத்துவது.  சிவத்தை அறிந்ததால்(துரியாதீத நிலையில் வெற்றி கொள்வது) அன்பு மலர்கின்றது.  அப்பேறு பெற்ற அறிவு கருணையைத்தான் வெளிப்படுத்தும்.  தவமுறையை இயற்றும்போது, ஆரம்பத்தில் மனிதனுக்கு வேண்டிய ஐந்து வள சங்கல்பத்தை(உடல்நலம், நீளாயுள், நிறைசெல்வம், உயர்புகழ், மெய்ஞ்ஞானம்) தவத்தின் முடிவில் இயற்றச் சொன்ன மகரிஷி அவர்கள், பிறகு இரண்டொழுக்க பண்பாட்டினையும் சங்கல்பமாக சேர்த்துள்ளார்.  காரணம் என்ன? 

       இரண்டொழுக்கப் பண்பாடில்லாமல் வாழ்க்கை வள சங்கல்பத்தில் உள்ள நான்காவதான உயர்புகழ் மற்றும் ஐந்தாவதான மெய்ஞ்ஞானம் ஆகிய இரண்டும் சாத்தியமில்லை. உயர்புகழ் மற்றும் மெய்ஞ்ஞானம் ஆகிய வளங்களை விரும்பும் சாதகன்  வெளியிலிருந்து அறிவுறுத்தல் இல்லாமலேயே தானாகவே இரண்டொழுக்கப் பண்பாட்டில் சிறந்தே விளங்குவார்.  உயர்புகழ், மெய்ஞ்ஞானம் ஆகிய இரண்டு வளங்களிலும் இரண்டொழுக்க பண்பாடு   சங்கல்பம் மறைந்து (Hidden).  இருப்பினும், என்ன வேண்டுமோ அதனை சங்கல்பமாக இயற்றுவதில் வார்த்தைகள் தெளிவாக இருக்க வேண்டும் என்பதற்காக பின்னர் தவமுறையை சீரமைக்கும்போது இரண்டொழுக்கப் பண்பாட்டினையும் தவமுறையில் இணைத்துள்ளார்.

        சமுதாயத்திற்கு  மனிதர்களால் என்ன தேவை?  அன்பும் கருணையுமேதான்.  முதல்  சங்கல்பத்தில் தனிமனிதனுக்கு தேவையானவைகள் உள்ளன.  இரண்டாவது  சங்கல்பத்தில் தன்னை வாழவைத்துக் கொண்டிருக்கின்ற சமுதாயத்திற்கு தேவையானது உள்ளது. எனவே சமுதாயத்தில் மனிதர்களிடம் அன்பும் கருணையும் மலர்வதற்கு இரண்டொழுக்க பண்பாட்டு சங்கல்பத்தை இயற்றச் சொல்லி வான்காந்தத்தில்  பரவவிடச் செய்துள்ளார்.  இது திணிவு பெற பெற ‘when fraction demands, Totality supplies” என்பதற்கிணங்க சமுதாயத்தில் பண்பேற்றத்தில் சிறந்துவிளங்கும் குடிமக்கள் உருவாவதற்கான சூழ்நிலையை ஏற்படுத்தும் இயற்கை/இறை.

     இறை உணர்வு என்பது இறையின் தன்மை சாதகனில் ஒளிர்தலே:

        பிறவியின் நோக்கம் என்பது

        இறை உணர்வு பெறுவது என்றும்,

        இறை உணர்வு என்பது   இறையின் தன்மை சாதகனிடம் ஒளிர்ந்து  

        சாதகனின் உள்ளம் தூய்மை பெறுவதே

    என்பதற்கேற்ப தானும் அவ்வாறே  இறை உணர்வு   பெறுவதற்கு  விழிப்போடு பொறுப்புடன் திட்டமிட்டு

    செயல்கள் ஆற்றி  பேரின்ப ஊற்றின் அனுபவத்தை அடைந்ததை தனது  மாணர்வகளுக்கு தெரிவிக்க  மகரிஷி அவர்கள், பின்னாளில்  பேரின்ப ஊற்று என்கின்ற பாடலிலே அதனை இயம்பியுள்ளார்,

        இதுவரை மகரிஷி அவர்கள் மனம் செயல் ஆகிய இரண்டிலும்  தூய்மை பெற எவ்வாறு பொறுப்புடன் செயல்கள் ஆற்றினார் என்பதனை அறிய, ‘பொறுப்பு’ என்கின்ற வார்த்தை ஏற்கனவே நமக்குத் தெரிந்த வார்த்தையாக இருந்தாலும்,  நாமும் அவர் கூறும் அந்த பொறுப்புடன் செயல்கள் ஆற்றி மனம், செயல் ஆகிய இரண்டில் தூய்மை பெற்று இன்பமுறுவதில் அழுத்தம் பெற,  ‘பொறுப்பு’ என்கின்ற வார்த்தைக்கான பொருளை மூன்று கோணங்களில் அறிந்து கொண்டோம்.

        இப்போது பாடல் வரிகளுக்குள் செல்வோம்

     அறநெறியில் விழிப்போடு பொறுப் புணர்ந்து,

      ஆற்றி மனம் செயல் தூய்மை ஆனபோதும்,

    •  பிறவியின் நோக்கத்தை அறிந்துவிட்டார். 
    • பிறவியின் நோக்கத்தை அடைவதற்கும் தனக்கும் எவ்வளவு தூரம் உள்ளது என்பதனை அளந்து பார்க்கிறார். 
    • அதாவது பிறவியின் நோக்கத்தை அடைவதற்கும், பிறவியின் நோக்கத்தை அறிகின்றபோது தான்  இருந்த நிலைக்கும் உள்ள இடைவெளியைக் கணக்கிடும்போது, அதன் எல்லையினை உணர்கிறார்  மகரிஷி அவர்கள். 
    • அந்த எல்லையினை அடைவதற்கு என்ன செய்ய வேண்டும் என முடிவு  செய்கிறார். 
    • பிறவியின் நோக்கமான இறை உணர்வு பெறுவதற்கு, பின்னாளில்  ‘செயலிலே விளைவாக    வருபவன் இறைவன்’ என்கின்ற பொன்னான பொன்மொழியை அருளிய மகரிஷி அவர்கள், 

                  ஒழுக்கம், கடமை, ஈகை ஆகிய மூன்று அங்கங்களைக் கொண்டு அறநெறிவாழ்க்கை     

                  வாழவேண்டும்   என அறிந்து முடிவுசெய்து, அவ்வாறே வாழ்ந்து அறநெறி வாழ்க்கையில்     வெற்றி பெறுகிறார்.

         அந்த முடிவுதான் அறநெறியில் விழிப்போடு பொறுப்புணர்ந்து செயல்களை ஆற்றி மனம், செயல் ஆகியவற்றை தூய்மையாக்கிக் கொள்வது.   அறநெறியில் விழிப்போடு பொறுப்புடன் செயல்கள் ஆற்றி மனம் தூய்மை ஆன ஆனந்த அனுபவத்தை மற்றொரு பாடலின் வாயிலாக சமுதாயத்திற்கு அறிவிக்கிறார்.  அப்பாடலை மீண்டும் நினைவு கூர்வது பொருத்தமாக இருக்கும்.

     பேரின்ப ஊற்று

     உன்னிலே நானடங்க*, என்னுளே நீ விளங்க,

    உனது தன்மை ஒளிர, எனதுள்ளம் தூய்மை பெற்றேன்.

    இன்னும் வேறென்ன வேண்டும் இப்பேறு பெற்ற பின்னர்?

    எடுத்த மனிதப் பிறப் பெய்தியதே முழுமை.

                     . . . வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

          * நானடங்க – நான் அடங்க.  அடங்க’ என்பதற்கான ஆழ்ந்த பொருள் கொண்ட இறை அனுபவத்தை அறிய மகரிஷி அவர்கள் அருளிய திருக்குறள் உட்பொருள் விளக்கம் – பக்கம் 72 இல் காண்க.   அப்பக்கத்தில்

    ‘அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை

    ஆரிருள் உய்த்து விடும்.’

    என்கின்ற குறளுக்கான உட்பொருள் அருளியுள்ளார் மகரிஷி அவர்கள்.

    பேரின்பப்படிகளில் இரண்டாவது படியான  ‘உள்ளம் தூய்மை பெற்று பேரின்பத்தை அனுபவிப்பதற்கு’, சுத்த அத்வைத உண்மைக்கேற்ப, இறைவனுள்ளே(உன்னுள்ளே-பேரறிவில்) ஆத்மசாதகன்(சாதகனின் அறிவு)  அடங்க, இறைவனின்(பேரறிவின்) தன்மை ஆத்மசாதகனிடம் ஒளிர, ஆத்மசாதகனின் உள்ளம் தூய்மை பெறும் பேற்றினை பெற்ற பிறகு மனிதனுக்கு வேறு என்ன வேண்டும்?  எடுத்த மனிதப் பிறவி முழுமை அடைந்து விடுகின்றது. அதாவது இறைவனுள் ஆத்மசாதகன் அடங்குவது என்பது இறைவனையும் சாதகனையும்  பிரித்துவைத்துள்ள தன்முனைப்புத் திறை நீங்குவது என்று பொருள்.  இறைவனும் மனிதனும் இரண்டறக்கலப்பது என்று பொருள்.  இரண்டாவது படியுடன் பிறவியின் நோக்கமான இறைஉணர்வு பெறுவது முடிவடைந்து  விடுகின்றது.  வீடுபேறு கிட்டுகின்றது.  அத்துடன் இறைஉணர்வு பெறுவது முடிந்துவிடுகின்றதல்லவா?  பின்னர் அதன் தொடர்ச்சியாக மேலும் இரண்டு படிகளைக் கூறுகிறார் மகரிஷி அவர்கள். ஏன்? சிந்திப்போம்! 

        மகரிஷி அவர்களின் ஜெயந்தி தினத்திலிருந்து, மகரிஷி அவர்கள் அளித்துள்ள உறுதிமொழியான ‘யாரொருவர் குருவை மதித்து ஒழுகினாலும், தப்பாது குருவின் உயர்வு மதிப்பவரைத் தரத்தில் உயர்த்திப் பிறவிப்பயனை நல்கும்’ என்பது பற்றி சிந்தித்து வருகிறோம்.  உறுதிமொழியின் பிற்பகுதியை முதலில் எடுத்துக்கொண்டு சிந்தித்து வருகிறோம்.  அச்சிந்தனை இன்னும் முடிவு பெறவில்லை.  பிற்பகுதியை  சிந்திப்பதன் விளைவால் ஏற்படுகின்றத்  தெளிவு

    •  எதற்காக பிறவிப்பயன் அடையவேண்டும் என்றும், 
    • பிறவிப்பயன் அடைதல் என்பது மீண்டும் பிறப்பு-இறப்பு சுழற்சியிலே சிக்கித் தவித்து, இன்ப-துன்பத்தை அனுபவிக்காமல் இருப்பதற்கே என்று அறியவும்
    • அதற்கு எவ்வாறு  குருவை மதித்து ஒழுகி தரத்தில் உயர்வது பற்றி அறியவும்,
    • பிறவிப்பயன் என்பது இறையாட்சியில் இறைக்கு அடுத்த பதவி கொடுக்கப்பட்டிருக்கும்  மனிதன் அதற்கேற்ற தரத்திற்கு  உயர்வது என்பதனை அறியவும் வைக்கும்.

        இத்துடன் இன்றைய சிந்தனையை நிறைவு செய்து கொள்வோம். பிறவிப்பயனை அடையும் நான்கு படிகளில் கடைசி இரண்டு படிகளான உறவுகளில் உண்மை நிலை துறவு என்பதனை அறிந்தபோதும்,  முடிவாகத் அத்துறவு நிலை எய்தியது மகரிஷி அவர்களுக்கு எவ்வாறு பேரின்பத்தை அளித்தது என அறிந்துகொள்ள  இனிவரும் விருந்துகளில் சிந்திக்க இருக்கிறோம்.

     இன்றையச் சிந்தனையின் சாரம்: 

    1)    பிறவியின் நோக்கமான இறை உணர்வு பெறுவதற்கு எவ்வாறு ஒழுக்கம், கடமை, ஈகை ஆகிய மூன்றைக் கொண்ட அறநெறியில்

    2)    அயரா விழிப்போடு பொறுப்பை உணர்ந்து

    3)    எண்ணம், சொல், செயல், ஆகியவற்றில் தூய்மை அடைவது பற்றி
    யும்

    4)    இறை உணர்வு பெறுவது என்பது மனம் தூய்மை அடைவதே என்றும், அதற்கு  பழிச்செயல் பதிவுகளின் ஆணிவேரான இறையையும் மனிதனையும் பிரித்து வைத்திருக்கின்ற  தன்முனைப்புத் திரையை விலக்கி ஆத்ம தரிசனம் பெறுவதே  என்றும் அறிந்து .கொண்டோம். 

    5)   இயற்கை/இறை மனிதப்பதவிக்கு (பிறவி) வைத்துள்ள கடமை இரண்டொழுக்க பண்பாடே என்பதனையும் அறிந்து கொண்டோம்.

     

      வாழ்கஅறிவுச் செல்வம்                                                       வளர்க அறிவுச் செல்வம்.


     

     

    Loading

  • 222-பிறவிப் பயனை நல்கும்!6/?

    வாழ்க மனித அறிவு                        வளர்க மனித அறிவு

    பிறவிப் பயனை நல்கும்!6/?

    அறிவிற்கு விருந்து—222

               31-08-2016—புதன்

        perinbapppadikalum thunaipapadikalum

    ‘பிறவிப்பயனை நல்கும்’ என்கின்ற தலைப்பில் பிறவிப்பயன் என்ன என்பதனை பல்வேறு கோணங்களில் உறுதி படுத்தி வருகிறோம்.  அவற்றில் நம் குருதேவர் அவர்கள் ‘பிறவிப்பயன் பெற்ற அனுபவத்தையே’ எடுத்துக் கொண்டு,  ஒவ்வொரு படிகளாக சிந்தித்து உறுதி படுத்தி வருகின்றோம். 

         இன்றைய விருந்தில் மனம் தூய்மை அடையும் ஏணிப்படிகளில் (துணை) மூன்றாவது படியான விழிப்புணர்வு மற்றும் நான்காவது படியான பொறுப்புணர்வு பற்றியும் சிந்திப்போம்.

    விழிப்புணர்வு என்பது என்ன?

    ‘பின்அந்த எல்லையினை அடைவதற்கு

                  அறநெறியில் விழிப்போடு பொறுப் புணர்ந்து ஆற்றி’,

    என்கிறார் மகரிஷி அவர்கள்.

     தான் கண்டுபிடித்த பிறவியின் நோக்கத்தின் எல்லையினை அடைய அறநெறியில் விழிப்புடன் இருந்து செயல்கள் ஆற்றி மனம் செயல் தூய்மை ஆனபோது அடைந்த பேரின்பத்தை இரண்டாவது  படியாகக் கூறுகிறார் மகரிஷி அவர்கள்.  அறநெறி என்பது ஒழுக்கம், கடமை, ஈகை ஆகிய மூன்று அங்கங்களைக் கொண்டது  என்று சென்ற விருந்தில் அறிந்து கொண்டோம்.  இப்போது ‘விழிப்போடு, பொறுப்புணர்ந்து’ என்பது பற்றி ஆராய இருக்கிறோம்.

        ‘விழிப்பு’ என்றால் என்ன? ‘உத்தம நண்பர்கள்காள் உங்கட்கும் உரியது’ என்று உறுதி அளித்திருக்கிறாரே மகரிஷி அவர்கள். அந்த அருள் மொழி  பிடித்திருந்தால், ஈர்த்திருந்தால், அதனை எப்போதும் கவனத்தில் கொள்வதுகூட விழிப்பு நிலைதான். விழிப்பு நிலை அவ் அருள் மொழியைக் கேட்ட அன்றே ஆரம்பித்து விட்டது என்றே சொல்லலாம். எனவே  அவர் அடைந்த விழிப்பு நிலையினை அடைய ‘விழிப்பு’ என்கின்ற சொல்லுடன் தொடர்புடைய மற்ற மூன்று சொற்களின் பொருளையும் அறிய வேண்டும்  அதிலிருந்து ‘விழிப்போடு’ என்று மகரிஷி அவர்கள் கூறுவதற்கான அவரது அனுபவத்தைப் பெறலாம்.

        பொதுவாக ‘விழிப்பு’ என்றால் தூக்கம் கலைந்த நிலை அல்லது மயக்கம் நீங்கிய நிலை என்று    பொருள். 

       ‘விழித்துக் கொள்’ என்றால் ஜாக்கிரதை உணர்வு பெறுதல், உஷார் நிலை அடைதல்(awake) என்று    பொருள்.

      ‘ விழிப்புணர்வு’ என்றால் கவனத்துடன் செயல்படுவதற்குரிய அறிவு(state of awareness, awakening)    என்று பொருள்.

    இங்கே மகரிஷி அவர்கள் கூறும் விழிப்பு நிலை என்பது கண்கள் விழித்துக் கொண்டிருக்கும் நிலை அன்று.

      இப்போது மகரிஷி அவர்கள் கூறும் அவரின் விழிப்படைந்த அனுபவநிலைக்குள் செல்வோம்.    ‘விழிப்போடு‘ என்பதால் தூக்கம் கலைந்த நிலை என்று பொருளா? 

        அல்லது மயக்கம் கலைந்த நிலை என்று பொருள் கொள்வதா? 

        விழித்துக் கொண்ட நிலை, அதாவது ஜாக்கிரதை உணர்வு பெற்ற நிலை என்று பொருள் கொள்வதா?  

        அல்லது கவனத்துடன் செயல்படுவதற்குரிய அறிவின் நிலை என்று பொருள் கொள்வதா? 

        மனிதன் தன் பிறவியின் நோக்கத்தை அறியாத வரை ‘விழிப்பு’ என்பதற்கு எல்லாப்பொருட்களிலும்-எல்லா அர்த்தங்களிலும் விளக்கம் கொள்வதும் சரியே. சாதரணமாக விழிப்பு என்றால் தூங்கும் நேரத்தைத் தவிர மற்ற நேரங்களில் அறிவின் நிலையை விழித்திருக்கும் நிலை என்று பொருள் கொள்வோம்.

     விழித்திருப்பது என்ன?

       விழித்திருப்பது என்பது தூங்காமல் இருப்பது.  கண்களை திறந்து கொண்டிருப்பது.  தூங்கும் நேரத்தில் கண்கள் திறந்திருப்பதில்லை. தூங்கும் நேரத்தில் அறிவு விழித்திருப்பதில்லை.  ஆனால் தூங்காமல் கண்விழித்திருக்கும்,  நினைவிருக்கும் நேரங்களிலும் மனிதன் விழித்துக் கொண்டிருப்பதில்லை என்பது மனித சமுதாயத்தைப்பற்றிய அருளாளர்களின் கவலையாக உள்ளது.  காரணம் என்ன? 

         பிறவியின் நோக்கத்தை அறியவில்லை; அல்லது 

         பிறவியின் நோக்கம் அறிந்திருந்தாலும் அதனை  மறந்துவிடுவது. 

         அதனால் பிறவியின் நோக்கத்திற்கேற்ப மனிதன் வாழமுடியவில்லை.

         ஆகவே பிறவிப்பயனை அடைவதற்கான செயல்கள் ஆற்ற முடிவதில்லை.

         ஆகவே துன்பத்தில் மூழ்கி செய்வதறியாது தவிக்கிறான்.

         உறங்காதபோது மனிதஅறிவு விழிப்போடு இருந்து செயல்பட்டால், இறையோடு ஒன்றி  அல்லது இறையாகவே செயல்படும். எப்படி?  இறை என்பது என்ன என்று அறிவோம்.

        ‘துணிந்துரைப்போம் அறிவே தெய்வம்’ என்கிறார் மகரிஷி அவர்கள்.  தெய்வமாகிய அறிவே மனிதனிடமும் அறிவாக உள்ளது.  தெய்வமாகிய அறிவின் தன்மைகள் என்னென்ன?  பேரறிவு சர்வ வல்லமை உடையது; எல்லாம் அறியத்தக்கது. எல்லாம் அறியத்தக்கதாக இருப்பதால்தான் அது ஆட்சியின்றி இப்பிரபஞ்சத்தை ஆளமுடிகின்றது. ‘செயலுக்கு ஏற்ப  விளைவு ஏற்படும் (செயல்விளைவுத்தத்துவத்தை)’ நீதியை பரிபாலனம் செய்ய முடிகின்றது. ஆகவே அந்த நிலைக்கு   மனித அறிவு தவத்தாலும், தற்சோதனையாலும் வந்துவிட்டால் எந்த தவறுமே அறிவு செய்வதற்கு வாய்ப்பில்லை.  அதுவே அறிந்தது சிவம் மலர்ந்தது அன்பு நிலை.  அறிவு அன்பையும்  கருணையையுமே வெளிப்படுத்தும் நிலை அது. ஆங்கில ஆன்மீக நூல்கள் இறையை ‘Awareness  is God’ என்கின்றன. Awakening stage is God.  எனவே மகரிஷி அவர்கள் மற்ற அருளாளர்களின் ஆசியுடன், வழிகாட்டுதலுடன் பிறவியின் நோக்கத்தை நீண்ட நாள் சிந்தித்து அறிந்தபோதே அவரின் அறிவு விழிப்புநிலைக்கு வந்துவிட்டது.  எனவே அவர் அந்த முதல் நிலையிலேயே பேரின்பம்  அடைந்ததாகக் கூறுகிறார். மேலும்  சிறுவயதிலேயே அவரிடம்  பிற்காலத்தில் அவரை மகானாக்கிய நான்கு வினாக்கள்’ எழுந்து அரித்துக் கொண்டிருந்தன.  மகானாக்கிய அந்த நான்கு வினாக்களாவன:

    1)   கடவுள் என்பவர் யார்?

    2)   உயிர் என்பது என்ன?

    3)   இன்பதுன்பம் என்பதென்ன?

    4)   வறுமை ஏன் வருகின்றது?

    இந்த வினாக்கள் எழுந்து அவரது உள்ளத்தை சதா அரித்துக் கொண்டிருந்ததே அவரை பிறவியின் நோக்கத்தை அறிய வைத்தது எனலாம்.  அவ்வினாக்களுக்கு கண்டுபிடித்த விடைகளே இப்போது வேதாத்திரியம் என்றும் மனவளக்கலையோகா  என்றும் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும், பல்கலைக்கழங்களிலும் நடத்தப்பட்டு வருகின்றன.

        இங்கே ஒரு ஐயம் எழலாம்.   என்ன அந்த ஐயம்?  மகானாக்கும் நான்கு கேள்விகள் எழுந்து அதற்கான விடைகள் கண்டுபிடிக்கப்பட்டு அதனை மனவளக்கலை யோகா என்கின்ற பெயரில் பயின்று வருகிறோம்.  அப்படியிருக்கும்போது மீண்டும் அந்த அரிய நான்கு வினாக்களுக்கு பயிற்சியாளர்களும் விடை கண்டுபிடிக்க வேண்டுமா?  அவ்வினாக்களுக்கான விடைகளை அப்படியே எடுத்துக் கொள்ளக் கூடாதா என்பதே அந்த ஐயம்.  அவ்வினாக்களுக்கான விடைகளை பயிற்சியாளர்கள் அதனை தாங்களாகவே கண்டுபிடித்து அவ்விடைகள் சரியானதுதானா என உறுதி படுத்த வேண்டும்அவ்வாறு உறுதி படுத்தும்போது பிறவியின் நோக்கமும் என்ன என்று அறியப்படும். 

     எப்போது பேரின்பநிலை கிட்டும் அறிவிற்கு?

       அயரா விழிப்புநிலையில் பேரின்பம் கிட்டும்.  புலன்களைக் கடந்த நிலையில்இறையை உணரும்போது. இறையோடு ஒன்றியிருக்கும்போது பேரின்பம் கிட்டும்.  ஆகவே பிறவியின் நோக்கம் அறிந்தபோதே மகரிஷி அவர்கள் பேரின்பம் அடைந்ததாகக் கூறுவதால், அவர் இறையை உணர்வது உறுதியாகிவிட்டது.  எனவே அவர் ஆரம்ப நிலையிலேயே பேரின்பத்தை அடைந்ததாகக் கூறுகிறார்.  ஆரம்ப நிலையிலேயே பேரின்பநிலையை ருசிக்க ஆரம்பித்த அறிவு அதனை தொடர்ந்து ருசிக்க,  பல்லாயிரம் பிறவிகள்தோறும் ஏற்படுத்திக் கொண்ட பழக்கத்தால் எத்தகைய இடர்பாடுகள் வந்தாலும், அவற்றில் வெற்றி பெற்று முடிவாக இறையை உணர்ந்துவிடும் என்பதனை மனவளக்கலைஞர்களுக்குத் தெரிவிக்கவே இப் பாடல் அருளப்பட்டுள்ளது.

    அயராவிழிப்பு (constant awareness)

    அறநெறி என்பது ஒழுக்கம், கடமை, ஈகை ஆகிய மூன்று அங்கங்களைக் கொண்டது என்றும், எனவே  ‘அறநெறியில் விழிப்போடு’  என்பது ஒழுக்கத்தில் இருந்து எப்போதும் தவறிடாமல் இருந்து  கடமைகளை ஆற்றுவதும்,  பிறர்க்கு உதவி செய்வதன் மூலம் கருணையை வெளிப்படுத்துவதும் பிறவிப்பயனாகிய இறை உணர்வு பெறுவதற்கான அடிப்படை அம்சங்கள் என்றும் இதுவரை அறிந்து கொண்டோம்.  

      மகரிஷி அவர்கள் இதனை அயராவிழிப்பு நிலை(constant awareness) என்பார். விழிப்புநிலை அயர்ந்து விடக்கூடாது அதாவது எப்போதுமே விழிப்பு நிலையில் அறிவு இருந்து கொண்டே இருக்க வேண்டும். அவ்வப்போது விழிப்பு நிலைக்கு வருவதன்று அயராவிழிப்பு என்பது. அவ்வப்போது விழிப்புநிலைக்கு வருவது என்றால், விழிப்புநிலைக்கு வராதபோது அல்லது விழிப்பு நிலையில் இல்லாதபோது அறிவின் நிலை என்னவாக இருக்கும்? இறையை மறந்துவிட்ட நிலை அது. அதாவது தன்னை மறந்தநிலை. ‘இறையே நானாக இருக்கிறேன் என்பதனை மறந்த நிலை’. உணர்ச்சிவயத்தில் உள்ள நிலை. அமைதியும் சாந்தமும் இல்லாத  நிலை அது, அதனால்தான் பாடலில் ‘அறநெறியில் விழிப்போடு’ என்று வலியுறுத்திக் கூறுகிறார் மகரிஷி அவர்கள்.       இப்போது ‘அறநெறியில் விழிப்போடு பொறுப்புணர்ந்து ஆற்றி’ என்கின்ற பாடல் வரியில் பொறுப்புணர்ந்து என்பது என்ன என்பதனை ஆராய்வோம்.

     பொறுப்புணர்வு என்பது என்ன?

       பிறவிப்பயனைக் கண்டுபிடித்த பிறகு,  ‘இறை உணர்வு பெறுதலின்’  எல்லையினை அடைவதற்கு, அறநெறியில்(ஒழுக்கம், கடமை, ஈகையில்) விழிப்போடு இருந்து கொண்டு, பொறுப்புணர்ந்து அன்றாட செயல்களை ஆற்றி, மனம், செயல் தூய்மை ஆனதை பேரின்பப்படிகளின் இரண்டாவது படியாகக் கூறுகிறார் மகரிஷி அவர்கள்.அதில் பொறுப்புணர்வு என்று குறிப்பிடுவதன் பொருள் என்ன என்று இப்போது அறிய இருக்கிறோம். நமது வழக்கம்போல் ‘பொறுப்பு’ என்கின்ற வார்த்தைக்கு  விளக்கம் காண்போம்.

     ‘பொறுப்பு’ என்றால்

     1)   விளைவுகளை உணர்ந்து செயல்படும் நிலை என்று பொருள். 

    2)   இரண்டாவது  பொருள்—விளைவுகளை உணர்ந்து செயல்பட வேண்டிய நிலையில் உள்ள பதவி.

    3)   மூன்றாவது பொருள்—ஒப்படைக்கப்பட்டிருப்பதை நிறைவேற்றுதல்; கடமை(duty, responsibility).

        இப்போது மகரிஷி அவர்கள் பிறவிப்பயனைக் கண்டுபிடித்த பிறகு, அடுத்ததாக அதனை நிறைவேற்றிக் கொள்ள ‘தேவையானப் பொறுப்பு’ பற்றி அவர் அறிந்தவாறே நாம் அறிந்து கொள்ள அவரது அறிவாற்றலை வணங்கி நின்று ஆய்வு செய்வோம்.

        மனிதனாகப்  பிறந்து மூன்று இன்றியமையாத தேவைகள் பூர்த்தியானவர்கள் எல்லோருமே கண்டுபிடிக்க வேண்டியது கட்டாயக் கண்டுபிடிப்பாகிய ‘பிறவிப்பயன் என்பது என்ன, அது இறை உணர்வு பெறுதலே’ என்பதாகும்.  அவ்வாறு இல்லாத நிலையில் பின்னாளில் அருளாளர்கள் ஆக இருக்கும் ஆன்மாக்கள் மட்டுமே அதனை வாழ்நாளில்  கண்டுபிடிக்கின்றது.  மற்றவர்கள் கண்டுபிடிக்காத நிலையில் அவர்களால் மட்டும் எவ்வாறு கண்டுபிடிக்க முடிகின்றது?  ஒரு காரணம் பரிபக்குவ நிலை என்று சொல்லலாம்.

     பரிபக்குவ நிலை என்றால் என்ன?    

      பக்குவம் என்றால் என்ன?  பக்குவம் என்றால் ஒன்றிற்கு அளவான இருக்க வேண்டிய தன்மை என்று பொருள்.  உதாரணத்திற்கு மாமரம் காய்க்கும் பக்குவத்தில் இருக்கின்றது என்பது.   மனிதனிடம் வரும்போது அதுநிலை (சூழ்நிலை) அறிந்து செயல்படும் தன்மை என்று பொருளாகும்.‘பரிபக்குவம்’ என்கின்ற சொல் ஒரு சொல்லாகத் தெரியவில்லை.  ‘சுத்தம்’, ‘பரிசுத்தம்’ என்று இரு சொற்கள் இருப்பதுபோல் ‘பக்குவம்’, ‘பரிபக்குவம்’ என்கின்ற இரு சொற்கள் உள்ளன.  பக்குவம் என்பதுடன் ‘பரி’ என்கின்ற இடைச் சொல்  சேர்ந்திருக்கின்றது.  அப்படியானால் ‘பரிபக்குவம்’ என்றால் என்ன?  ‘பரி’ என்றால் என்ன?  ‘பரி’ என்பது மிகுதிப் பொருள்  தரும் ஒர் இடைச் சொல் –- a particle meaning excess. பரி என்றால் பெருமை, உயர்வு, அன்பு, வருந்திக்காத்தல், அறிதல் செய், கடந்து செல், பேறு —- greatness, elevation, love, to protect with difficulty,  to know, to pass, to get  என்று பொருள்.

        பொதுவாக பரிபக்குவம் என்றால் ஏற்ற சமயம் என்று பொருள்.  எனவே ‘ஆன்மாவை உணரும் ஆன்மீகத்தில் பரிபக்குவம்’ என்பது ஆன்மாவை உணர்கின்ற உயர்ந்த நிலையை அடைவதற்கு எந்த இடையூறுகள் வரினும் அதனையெல்லாம் கடந்து சென்று கிடைத்தற்கரிய பேறாகிய ‘ஆன்ம உணர்வு’ பெறுகின்ற ஏற்ற சமயத்திற்கு(right time, ripened state) ஆன்மா பரிணாமத்தில் வந்துள்ளது என்றே பொருள்இதுவே கருவில் திருஉடையவர்களின் நிலையாகும்.

       ‘பொறுப்புடன்’  என்பதற்கான பொருளை ஆராய்ந்து கொண்டிருக்கும்போது,  பரிபக்குவம் என்கின்ற வார்த்தை குறுக்கிட்டதால் அதன் பொருளையும் அறிந்து கொண்டோம்.  பரிபக்குவம் என்கின்ற நிலையினையும் அறிந்து கொள்வது இறை உணர் ஆன்மசாதகர்களுக்கு அவசியமானது. இத்துடன் இன்றைய சிந்தனையை நிறைவு செய்து கொள்வோம்.  அடுத்த அறிவிற்கு விருந்தில்(04-09-2016-ஞாயிறு) பொறுப்பு என்பதற்கான மூன்று பொருட்களை அறிவோம்.

    இன்றைய சிந்தனையின் சாராம்சம்:

    1)   விழிப்புணர்வு என்பது என்ன? மகரிஷி அவர்கள் கூறும் அயரா விழிப்புணர்வு(constsnt awreness) பற்றி அறிந்து கொண்டோம். அவருடைய துணையுடன் அவர் கூறும் அயரா விழிப்புநிலையிலேயே இருப்போம்.

    2)   பரிபக்குவ நிலை என்பது,  இயற்கையின்/இறையின் தன்மாற்றத்தில்(பரிணாமத்தில்), ஆன்மா தன்னை உணர்கின்ற மிகுந்த ஆர்வ நிலைக்கு இப்பிறவியில் வந்துவிட்டதே ஆகும்.

     வாழ்க அறிவுச் செல்வம்                                                           வளர்க அறிவுச் செல்வம்.


    Loading