இன்றைய விருந்து

  • பகுத்துணர்வில் தொகுத்துணர்வு பண்பாட்டை உயர்த்தட்டும் – 5/?

    வாழ்க மனித அறிவு                           வளர்க மனித அறிவு

    FFC – 172

    16-03-2016—புதன்.

    FFC-169-6-3-16-பகுத்துணர்வில்

     வாழ்க வளமுடன்!
    உலகநல வாழ்த்துப்பாவில் நான்காவது வாழ்த்து மந்திரமான ‘பகுத்துணர்வில் தொகுத்துணர்வு பண்பாட்டை உயர்த்தட்டும்’ என்பதனை ஆழ்ந்தும் விரிந்தும் கடந்த நான்கு சத்சங்கங்களில் சிந்தித்து வருகிறோம் ஆழ்ந்தும் விரிந்தும் சிந்தித்து வருவதால் வாழ்த்துக்கான நேரிடை பொருளுக்குள்(அர்த்தம்-meaning) செல்வதற்கு நான்கு சத்சங்கக் கூட்டம் தேவையாக இருந்தது. காரணம் அருட்பாக்கள், தெய்வீகத்தை வெளிப்படுத்துவதால், மற்ற பாக்களைவிட மிக மிக சிறப்புடையவை, செறிவுடையவை. எவ்வாறு அருட்பா தோன்றுகிறது என்று, அதனையும் ஒரு பாவின் வாயிலாகவே(ஞானக்களஞ்சியம்-பாடல் எண். 1227) நம்குருதேவர் மாமுனிவர் முழுமனிதர் வேதாத்திரி மகரிஷி அவர்கள் கூறுகிறார். என்னே அவரின் அருள் நிலை! என்னே அவருடைய கவித்துவம்!!

    மனிதப் பிறவியின் சிறப்பறிந்து, உலகில் வாழ்ந்து, அறிவை அறிந்து, முடிவைக்கண்டவர்,
    தான் பெற்ற அனுபவத்தை,
    உலகத்தோர் அதனை சரியானபடி பயன்படுத்துவதற்கு,
    விரிந்த மனதால் ஆர்வம் கொண்டு,
    மழை பொழிந்து உலகத்தோர்க்கு உதவுவதுபோல்,
    வரிசையான வார்த்தைகளினால்,
    தான் ஆழ்ந்து விரிந்து சிந்தித்ததை சொல்வதற்காக
    மேன்மையுள்ள கவிகளாக வருகின்றன அருட்பாக்கள் என்கிறார் அருட்கவிஞர் வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

    எனவே அருட்கவிகளுக்குப் பொருள் சொல்ல வேண்டுமானால் உரைநடையில் அதற்கான விளக்கவரிகள் அதிகமாகத்தான் இருக்கும். உதாரணத்திற்கு ‘பகுத்துணர்வில் தொகுத்துணர்வு பண்பாட்டை உயர்த்தட்டும்’ என்கின்ற நான்கு வார்த்தைகளை உதித்தது ஒரே ஒரு நாளிலா?! பலநாட்கள், பல வாரங்கள், ஒரு சில அல்லது பல ஆண்டுகள் ஆழ்ந்து விரிந்து சிந்திக்கும்போது எண்ணிய எண்ணங்கள் எல்லாம் திரண்டு வந்து க்ஷண நேரத்தில் உதித்து, துணை எண்ணங்களை எல்லாம் உள்ளடக்கிய சுருக்கப்பட்ட வரிகள்தான் அருட்கவி. அப்படிபட்ட அருட்பாவின் வரிதான் ‘பகுத்துணர்வில் தொகுத்துணர்வு பண்பாட்டை உயர்த்தட்டும்’ என்பதும்.

    அருட்பாவை கண்ணுறுபவர், வாசிப்பவர், மனனம் செய்பவர், உச்சாடனம் செய்பவர், அருட்பா அருளிய கவிஞரை நேரிடையாக பார்க்க பெரும்பாலும் வாய்ப்பு இருப்பதில்லை. ஆனால் சென்ற நூற்றாண்டில் அவதரித்த உலகத்தை உய்விக்க வந்த வேதாத்திரி மகரிஷி அவர்களை நேரிடையாக தரிசித்தவர்கள் அநேகர், அநேகர். லட்சோபலட்சம் மக்கள். அவருடைய பூதவுடல் சமாதியில் உறங்கிக்கொண்டிருப்பதால், அவரை நேரிடையாக பார்க்க முடியாததால், அம்மகானை நேரில் பார்த்தவர்களும், பார்க்காதவர்களும், அவருடைய சூக்கும உடலை(அறிவாற்றலை) இன்றும், அவர் விட்டுச்சென்ற அறநூல்கள் வழியாக அறிந்து மகிழலாம்.

    அருட்பாவை உச்சாடனம் செய்பவர், அருட்பாவை ஆழ்ந்த விரிந்த சிந்தனைக்கு உட்படுத்தும்போது, அருட்பாவை அருளியவற்கு உதவியாக இருந்த, எண்ணிய துணை எண்ணங்களை(Sub thoughts) எல்லாம் ஒன்றுகூட விடாமல் அறிந்துகொள்வதால், அவரைப்போன்றே அக்கருத்தில் ஆர்வம் மிகுந்து, அருட்பாவை உச்சாடனம் செய்யும்போது, அந்த மந்திரம் உருவேற்றப்பட்டு அம்மந்திரம் சக்தி பெற்று, சீக்கிரம் பலன்கள் கிடைக்கும். விஞ்ஞானப்படி பார்த்தால், மந்திரங்கள் உச்சாடனம் என்பதே எண்ண ஆற்றலைப் பரப்புவதே அல்லது சுயஆலோசனை (auto-suggesstion) தானே. (வான்காந்தத்திலும், ஜீவகாந்தத்திலும் நன்மை தரக்கூடிய மாற்றங்களை பெறுவதற்கே)

    எனவே  ‘பகுத்துணர்வில் தொகுத்துணர்வு பண்பாட்டை உயர்த்தட்டும்’ என்கின்ற வரிக்கு நேரிடையாக நான்கு வார்த்தைக்கு மட்டும் பொருள் சொல்லாமல், அவ்வரியில் உள்ள சொற்களுக்கு ‘வார்த்தை விளக்கம்’ காண்பது,

    சொல்லப்பட இருக்கின்ற பொருள் பற்றிய விளக்கம்,
    கேட்பவர்களை கேட்பதற்கு ஆயத்தப்படுத்தவும்,
    கேட்கின்ற உற்சாகத்தைத் தூண்டவும்,
    கேட்பவர்களுக்கு மிகத் தெளிவாக சென்றடையவும்,
    அடுத்த என்ன சொல்லப் போகிறார் பேசுபவர் என சரியாக யூகிக்கவும் பேருதவியாக இருக்கும்.

    அடுத்ததாக அவ்வாழ்த்தின் அவசியம் என்ன, அவ்வாழ்த்து எவ்வாறு, அதில் கூறும் பயனை நிறைவேற்றும் என்று சிந்தனையை விரித்தால்தான் அவ்வரிகளை அருளியவரே, அவ்வரிகளை உச்சாடனம் செய்வதால்/கூறிவருவதால் என்ன பயன் இருக்குமோ, அதே அளவிற்குச் சமமாக மற்றவர்களும் அவ்வாழ்த்தை உச்சாடனம் செய்யும்போது/கூறும்போது பலன் ஏற்படும். எனவே அதற்காகத்தான் ஆழ்ந்து விரிந்து சிந்திக்கிறோம்.

    சத்சங்கத்தில் எதனைச் சிந்தித்தாலும், நோக்கம் ஒன்றே ஒன்றுதான். அறிவின் சிறப்பை அறிந்து, அதனை பேரறிவின் நிலைக்கு/இறைநிலைக்கு உயர்த்தி பண்பேற்றத்தை பெறுவதற்காகத்தான். ஆகவே வரிசையாக இதுவரை நான்கு நாட்களாக ஒவ்வொரு நாளும் என்ன சிந்தித்தோம் என நினைவுபடுத்திக் கொண்டு நேரிடையாக பகுத்துணர்வில் தொகுத்துணர்வு பண்பாட்டை உயர்த்தட்டும் என்கின்ற மந்திரத்துக்குள் செல்வோம்.

     table

        ஏற்கனவே இச்சிந்தனையின் முதல் நாளன்றே(02-03-2016—புதன்-FFC-168 Click here) பகுத்துணர்வு மற்றும் தொகுத்துணர்வு என்கின்ற சொற்களுக்கு வார்த்தை விளக்கத்தினை அறிந்துவிட்டோம். அதனை நினைவில் கொண்டு, இன்றைய சிந்தனையை நேரிடையாகவே ‘பகுத்துணர்வில் தொகுத்துணர்வு பண்பாட்டை உயர்த்தட்டும்’ என்பதில் செலுத்துவோம்.

     ‘பகுத்துணர்வில் தொகுத்துணர்வு பண்பாட்டை உயர்த்தட்டும்’ என்கின்ற வாழ்த்தில்,

    பண்பாட்டை உயர்த்தக் கூடியது தொகுத்துணர்வு என்று தெரிகின்றது.
     ஆனால் ‘தொகுத்துணர்வு’ என்று மட்டும் சொல்லாமல் ‘பகுத்துணர்வில்        தொகுத்துணர்வு’ என்பதால் இரண்டு வகையான உணர்வுகள் உள்ளது என்றாகின்றது.
     அதில் பகுத்துணர்வை விட தொகுத்துணர்வு மேலானது என்றும் தெரிகின்றது.
    அதே நேரத்தில் பகுத்துணர்வும் இல்லாமலும் இருக்க முடியாது என்றும் தெரிகின்றது.
     அதாவது பகுத்துணர்வை தவிர்க்காமலும் இருக்க முடியாது அறிவினால்.
     ஆனால் தொகுத்துணர்வுதான் மேலானதாக உள்ளது என்பதால், ‘பகுத்துணர்வில் தொகுத்துணர்வு’ என்கிறார் மகரிஷி அவர்கள் என்று தெரியவருகின்றது.

    எனவே இரண்டு உணர்வுகளுக்குள்ள வித்தியாசத்தை அறிவது அவசியமாகின்றது.

    ஆகவே பொதுவாக ‘உணர்வு’ என்பது என்ன என்றும்,
     அது ஏன் இரண்டு வகைகளாகப் பிரிக்கப்படுகின்றது என அறிய வேண்டிய அவசியம் ஏற்படுகின்றது.
    அவ்வாறு அறியும்போது
     பகுத்துணர்வும், தொகுத்துணர்வும் என்ன என்று தனித்தனியாக அறிவதோடு மட்டுமன்றி,
     பகுத்துணர்வையும், தொகுத்துணர்வையும் இணைத்து ‘பகுத்துணர்வில் தொகுத்துணர்வு’ என்றால் என்ன என்றும்,
     அது எவ்வாறு பண்பேற்றத்தைத் தர முடியும் என்பதனையும் அறியலாம்.

    உணர்வு என்றால் என்ன? – புலன் உணர்வு-ஐயுணர்வு, மெய் உணர்வு.

    அறிவு, உணர்ந்து கொள்வது உணர்வு. அறிவு புலன்களின் துணைகொண்டு உணர்ந்தால் அது புலன் உணர்வு எனப்படுகின்றது. புலன்கள் ஐந்து இருப்பதால் புலன் உணர்வை ஐயுணர்வு என்றும் கூறலாம்.
    அறிவு புலன்கள் வழியாக மட்டுமேதான் உணரமுடியும் என்றிருந்தால் அறிவு உணர்வதை, ‘புலன்’ என்கின்ற அடைமொழியைச் சேர்த்து ‘புலன் உணர்வு’ என்று சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. ‘உணர்வு’ என்றே சொல்லியிருக்கலாம். அறிவிற்கு வேறொரு உணர்வு உள்ளதால், அதிலிருந்து வித்தியாசப்படுத்துவதற்கு, புலன்கள் வழியாக உணர்வதை புலனுணர்வு, ஐயுணர்வு என்கிறோம்.

    ஆகவே அறிவு உணரும் கருவிகளாகிய புலன்களின் வழியாக உணர்வதோடு மட்டுமன்றி, வேறு வழியாகவும்/வகையாலும் உணரமுடியும் என்றாகின்றது. அது எவ்வாறு? உணரும் கருவிகள் புலன்கள். புலன்களில்லாமல் அறிவு உணரமுடியும் என்றால் அது எது? அந்த உணர்விற்கு என்ன பெயர்? அறிவு புலன்களில்லாமல் உணர்வதுதான் மெய்ப்பொருள். மெய்ப்பொருளுக்கு உருவமில்லை. அது அரூபம். ஆனால் அரூபம்தான் ரூபங்களுக்கு (உருவங்களுக்கு) காரணமாக உள்ளது என்பதனை நினைவில் கொண்டு ஆனந்தமடைய வேண்டும். அரூபமாகிய மெய்ப்பொருளை உணர்வது மெய்யுணர்வு. அறிவு மெய்ப்பொருளை உணர்வதற்கு புலன்கள் அவசியமே இல்லை.

    அறிவும் அரூபம். மெய்ப்பொருளும் அரூபம். அரூபத்தில் இரண்டிருக்க முடியாது. அப்படியானால் அரூபமாகிய மெய்ப்பொருளும், அரூபமாகிய அறிவும் ஒன்றே. எனவே அரூபம், அரூபத்தை, தானே உணர்ந்து கொள்ளும். அதாவது உணர்வதற்கு இன்னொரு ரூபமாகிய இடையீட்டுப்பொருளாக, சாதனமாக(medium) புலன் ஏதும் அவசியமில்லாமல் ஆகிவிடுகின்றது. எனவே அரூபத்தை உணர்வதற்கு புலன்கள் ஏதும் அவசியமில்லை.

    அறிவு, ரூபங்களையும்(உருவத்தோற்றங்ளையும்), அரூபா-ரூபங்களையும்(ஒலி. ஒளி, சுவை, மணம், அழுத்தம்) உணர்வதற்கு மட்டும் புலன்கள் அவசியம். அறிவு புலன்கள் இல்லாமல் உணர்வது எது என்கின்றபோது அறிவு தன்னையே உணர்வதாகும். அறிவு தன்னையே உணர்வதற்கு புலன்கள் எதற்காக அவசியம்? அவசியமே இல்லை. அறிவு தான் இருப்பதை உணர்வதற்கோ அல்லது ‘நான் இருக்கிறேன் — I exist) என்று சொல்வதற்கோ புலன் அவசியமில்லை.

    உணர்வு என்பது என்ன என்றும், அது இரண்டே இரண்டுதான், அது ஐயுணர்வு, மெய் உணர்வு என்றும் அறிந்தோம். அப்படி இருக்கும்போது உலக நல வாழ்த்தில் பகுத்துணர்வு. தொகுத்துணர்வு என்று இரண்டு புதிய உணர்வுகளாகச் சொல்லப்படுவது என்ன? ஐயுணர்வு, மெய்உணர்வு என்கின்ற இரண்டிற்கும், பகுத்துணர்வு, தொகுத்துணர்வு என்கின்ற இரண்டிற்கும் தொடர்பு உள்ளதா? அல்லது வேறு வேறா? அறிவது அறிவு என்றும், அது புலன்கள் வழியாக அறியும்போது அதனை ஐயுணர்வு என்கிறோம் புலன்களில்லாமல் அறிவு உணர்வது மெய் உணர்வு என்றும் தெளிவாக அறிந்துவிட்டோம். எனவே பகுத்துணர்வு, தொகுத்துணர்வு அறிவின் உணர்வுகளில் வேறு புதிதான உணர்வுகளாக இருக்க முடியாது. ஆகவே ஐயுணர்விற்கும், மெய்யுணர்விற்கும் ஆன மாற்று பெயர்கள்தான் பகுத்துணர்வு, மற்றும் தொகுத்துணர்வு. ஐயுணர்வை பகுத்துணர்வு என்றும், மெய்யுணர்வை தொகுத்துணர்வு என்றும் அழைக்கப்படுகின்றன இவ்வாழ்த்தில்.

    அப்படியானால் ‘ஐயுணர்வில் மெய்யுணர்வு பண்பாட்டை உயர்த்தட்டும்’ என வரிசைப்படுத்தி சொல்லியிருக்கலாமே மகரிஷி அவர்கள். அது கவிஞரின் உரிமையாகும். கவியில் வரிகள் இவ்வாறு அமைத்திருக்கலாமே என நாம் சொல்ல முடியாது. இது ஒரு பக்கம் இருந்தாலும், எதுவும் காரணமில்லாமல் நடக்காது என்பதால் ஐயுணர்வை பகுத்துணர்வு என்றும், மெய் உணர்வை தொகுத்துணர்வு என்றும் நம்முடைய குருதேவர் சொல்வதற்கானக் காரணம் அறிந்து, அவரது அறிவுக் கூர்மையையும், அறிவு விசாலத்தையும் நினைத்து, நினைத்து அவரை போற்றி போற்றி மகிழ்வோம்.

    இறையே வேதாத்திரி மகரிஷி வடிவில் வந்து உலக மக்களுக்கு கூறியுள்ளதுதான் திருவேதாத்திரியம். அரூபமான இறை எவ்வாறு உருவத்தில் வந்து சொல்ல முடியும்? ஐயப்படாது அகத்தினை உணர்ந்தவரே தெய்வத்துக்குச் சமம் என்று திருவள்ளுவர் மொழிந்துள்ளது போல் வேதாத்திரி என்கின்ற மனித உருவில், பண்பட்டு உச்சத்தினை அடைந்த அவரது அறிவின்வாயிலாக பேரறிவே, இறையே சொன்னதுதான் அவ்வளவு வேதாத்திரிய எழுத்துக்களும். இப்படி சொல்வது அத்வைதம், இருப்பினும், வேதாத்திரிய அத்வைதம் சுத்த அத்வைதம்(Pure advaidic Science). வேதாத்திரியத்தை சுத்த அத்வைதம் என்று சொல்வதற்கான காரணங்களில் ஒன்று, ‘ஒன்றே பலவாகியது என்று சொல்வதனை’, ஒன்றே தன்மாற்றம்(self transformation) அடைந்துள்ளது என்று தைரியமாக, உறுதியாக, தெளிவாகச் சொல்வதே முதலாம் காரணமாகும்.

    ‘பகுத்தறிவில் தொகுத்துணர்வு பண்பாட்டை உயர்த்தட்டும்’ என்கின்ற நேரிடையான விளக்கத்தனை இன்றே முடித்துக் கொள்ளலாம் என நினைத்துதான் சிந்தனையைத் தொடங்கினோம். ஆனால் அவ்விளக்கச் சிந்தனை இன்றோடு முடியவில்லை. காரணம் பகுத்துணர்வில் தொகுத்துணர்வு பண்பாட்டை உயர்த்தட்டும் என்கின்ற மந்திரம் 720 கோடி உலக மக்களையே வாழ்த்துகின்ற மந்திரமாவதால், அதற்கான பொருளை எப்படி ஒரு அறிவிற்கு விருந்திலேயே, 15-30 நிமிடங்களில் அறிந்து கொள்ள முடியும்?
    எனவே அடுத்த அறிவிற்கு விருந்தில் ‘பகுத்துணர்வில் தொகுத்துணர்வு பண்பாட்டை உயர்த்தட்டும்’ என்பதற்கான நேரிடை விளக்கத்தை ஐயுணர்வை பகுத்துணர்வு என்றும், மெய் உணர்வை தொகுத்துணர்வு என்றும் நம்முடைய குருதேவர் சொல்வதற்கானக் காரணத்தை அறிந்து கொண்டு, அதற்கடுத்து வரும் இரண்டு அறிவிற்கு விருந்தில் முறையே மகான் மகா கவி பாரதியார் இது பற்றி என்ன கூறியிருக்கிறார் என்றும், தெய்வப்புலவர் திருவள்ளுவர் என்ன கூறியிருக்கிறார் என தனித்தனியாக இரண்டு அறிவிற்கு விருந்தில் அறிய இருக்கிறோம்.
    மற்றொரு மகிழ்ச்சியான செய்தி. 28-03-2016 நம் குருதேவர் அவர்கள் பத்தாவது மகாசமாதி அடைந்த தினமாக இருப்பதால், அன்று சிறப்பு அறிவிற்கு விருந்தாக ‘தெளிவு’ என்கின்ற பொருள் பற்றி சிந்திக்க இருக்கிறோம்.

    அடுத்த அறிவிற்கு விருந்திற்காக(20-03-2016 ஞாயிறு) சத்சங்கத்தில் கூடுவோம். வாழ்க வளமுடன்.

    வாழ்க அறிவுச் செல்வம்                                          வளர்க அறிவுச் செல்வம்.

    Loading

  • பகுத்துணர்வில் தொகுத்துணர்வு பண்பாட்டை உயர்த்தட்டும் – 4/?

    வாழ்க மனித அறிவு                         வளர்க மனித அறிவு

     

    FFC – 171
    13-03-2016—ஞாயிறு.

    FFC-171-மகரிஷி படம்without captionபகுத்துணர்வில் பண்பாட்டை உயர்த்தட்டும்,
    நல வாழ்வை அளிக்கும் மெய்ஞ்ஞான ஒளி வீசட்டும்,
    நம் கடமை அறவாழ்வின் நாட்டத்தே சிறக்கட்டும்.
    … வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

    வாழ்க வளமுடன்.

    உலகநல வாழ்த்தின் எட்டு வாழ்த்து-மந்திரங்களில் நான்காவது வாழ்த்தான ‘பகுத்துணர்வில் தொகுத்துணர்வு பண்பாட்டை உயர்த்தட்டும்’ என்பதனை ஆழ்ந்தும், விரிந்தும் சிந்திக்க வேண்டி இருப்பதால் அதுபற்றி இன்று நான்காவது நாளாக சிந்திக்க இருக்கிறோம். இனி,

    இந்த வாழ்த்திற்கான அவசியம் என்ன என்று அறிய இருக்கிறோம்.

    விலங்கினத்திலிருந்து வந்த ஆதிமனிதனின் கருத்தொடர் வம்சாவளியாக வந்துள்ளதுதான் இன்றுள்ள மனிதகுலம். எனவே தற்போதைய மனித இனத்தின் பண்பாடு என்பது விலங்கினப்பண்பாட்டின் சுவட்டினைக்(trace-hereditary imprint) கொண்டுதான் உள்ளது.

    ‘சுவடு – trace’தானே என்று அலட்சியமாக இருந்து விடமுடியாது.

    ‘விலங்கினப்பண்பு’ என்பது விலங்கினத்திற்குள்ள குணத்தைக் குறிக்கின்ற சொல்லாகும். விலங்குகள் வெவ்வேறு வகைகள் உள்ளன. ஒவ்வொன்றிற்கும் தனித்தனி குணங்கள், திறமைகள் இருக்கின்றன. புலி, சிங்கம், சிறுத்தை, பாம்பு, கருடன், நரி இவ்வாறாக பல்வேறு வகை விலங்கினங்கள் உள்ளன. எல்லாமே விலங்கினம்தான். இவை அத்தனைக்கும் தனித்தனி குணங்கள் இருந்தாலும், பொதுவான குணம் ஒன்று உண்டு. அந்த பொதுவான குணம் என்பது என்ன? ஒரு சில விலங்குகளைத்தவிர(உதாரணத்திற்கு பசு, மான்) மற்றவைகள் உணவிற்காக மற்ற உயிரினங்களைக் கொன்று உட்கொள்கின்றன. அந்த பொதுவான குணத்தைத்தான், பண்பைத்தான் விலங்கினத்தன்மை/விலங்கினப்பண்பு என்கிறோம். அந்த விலங்கினப்பண்பு, மனித இனத்திலும் சுவடாக இருப்பது பற்றித்தான் நாம் கவலை கொள்ள வேண்டியிருக்கின்றது.

    இந்த விலங்கிப்பண்புதான், விலங்கினத்திலிருந்து கருத்தொடராக வந்த மனித இனத்தில் சுவடுகளாக (trace-hereditary imprint) இருந்து கொண்டு அவ்வப்போது வெளிப்பட்டுக் கொண்டு மனித இனம் மனிதத்தை முழுமையாக வெளிப்படுத்த முடியாமல் தடைசெய்து கொண்டிருக்கின்றது. அநேக நேரங்களில் மனிதம் வெளிப்படுத்தப்பட்டாலும், ஒரு சில நேரங்களில், சந்தர்ப்பம், சூழ்நிலை, இடம், நபரைப் பொருத்து வெளிப்படுத்தப்படும் விலங்கினப்பண்பால், ஏற்படுகின்ற மனிதம்—இழப்பால் அல்லது மனிதம்–குறைவால் தீமைகள் வருகின்றன. ஒரு குடம் பாலில் ஒரு துளி விஷம் கலந்துவிட்டாலும் அக்குடத்தின் பால் முழுதும் விஷம் கலந்து உபயோகமற்றல்லவா போய்விடும்.

    ஆகவே ஒருசில நேரங்களில் மனிதன் விலங்கினப்பண்பை வெளிப்படுத்தாத நிலைதான் குறிப்பாக, இறை உணர்வு ஆன்மீகத்திற்குத் மிக மிகத் தேவை. ஆழ்ந்து விரிந்து, ஆழ்ந்து விரிந்து சிந்தித்தால்,

    சினங்கொள்வது பழக்கமாகி வழக்கமாகி விட்ட நிலையில்,
    மனித குலம் வாழ்ந்து வந்தாலும்,
    உண்மையை மறைக்காமல் உள்ளபடி,
    அப்படியே உண்மையையே சொல்வதென்றால்,
    சினம் மனிதனுக்கு அவசியமே இல்லை.

    எப்படி அவ்வாறு சொல்லமுடியும் என ஐயம் எழலாம். சினம் கொள்ளாமல் எப்படி மனிதன் இருக்க முடியும் என வினா எழுப்பலாம். சினம் மனிதனுக்கு அவசியமே இல்லை என்று சொன்னால் எந்த உயிரினத்திற்கு சினம் அவசியமாகின்றது? விலங்கினங்கள் சினம் கொள்கின்றன. ஏன்?

    ஒருவிலங்கு மற்றொரு விலங்கை துரத்திச் சென்று, கொன்று உணவாக உட்கொள்ள முயற்சிக்கும் போது, பாதிக்கப்படும் விலங்கினம், தான் வாழவேண்டும் என்கின்ற தன்னுடைய நியாயமான ஆசைக்கு, மற்றொரு வலிமையான விலங்கினம் தடையை ஏற்படுத்துவதால் கொல்லப்படவிருக்கின்ற விலங்கினத்திற்கு கொல்ல இருக்கின்ற விலங்கினத்தின் மீது சினம் வருவதற்கு நியாயம் இருக்கின்றது.

    துரத்திப்பிடித்துக் கொல்கின்ற வலிமையான விலங்கினத்தின் ஆசையான வலிமையற்ற விலங்கினத்தைக் கொன்று உண்ண வேண்டும் என்கின்ற ஆசைக்கு, கொல்லப்படவிருக்கின்ற விலங்கிடமிருந்தே தடை ஏற்படுவதால் அதற்கும் சினம் வருகின்றது.

    ஆனால் மனிதனுக்கு சினமே அவசியமில்லை. எப்படி?
    சினம் எப்போது எழுகின்றது?
    சினத்தின் விஞ்ஞானம் என்பது என்ன?
    ஆசைக்கு தடை ஏற்படும்போது சினம் எழுகின்றது.

    அப்படியானால் ஒரு மனிதனுக்கு சினம் வருகின்றது என்றால் அவனுடைய ஆசைக்கு மற்றொரு மனிதன் தடையை ஏற்படுத்துகிறான் என்றுதானே பொருள்?!
    எவ்வாறு ஒரு மனிதன் மற்றொரு மனிதனின் ஆசைக்கு தடையை ஏற்படுத்த முடியும்!
    அது அந்த மனிதனின் சுதந்திரத்தை அல்லவா பறிக்கின்றான்.
    இது எவ்வாறு நியாயமாக இருக்க முடியும்?
    இது இயற்கையின் நீதிக்கு முரணாகவல்லவா இருக்கின்றது!
    மேலும் ஒழுக்கத்திற்கும் முரணாகவல்லவா இருக்கின்றது!

    மகரிஷி அவர்களின் உலக சமாதானத்திட்டங்கள் அமுலாகி உலக அமைதியில் மனிதர்கள் வாழ்கின்ற நிலையில் மனிதனே விரும்பி சினம் கொள்வதாக இருந்தாலும். சினம் எழவே வாய்ப்பில்லை. கற்பனை செய்து அந்நிலைக்கு மானசீகமாக வரவேற்பு கொடுங்கள்.

    விலங்கினப்பண்பாட்டின் சுவடினால் மனிதனிடம் விலங்கினத்தின் தன்மை அவ்வப்போது வெளிப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றது. உதாரணத்திற்கு சமையலறையில் பெருங்காயம் பாத்திரத்தில்(container) வைக்கப்பட்டுள்ளது. பெருங்காயம் தீர்ந்த பிறகும் பல நாட்கள் வரையில் அந்த காலிப்பாத்திரம் (container) பெருங்காயத்தின் வாசனையை வீசிக்கொண்டுதான் இருக்கும். அந்த காலி பெருங்காய container பாத்திரத்தில் வேறொரு புதிய பொருளை அடைத்து வைக்க வேண்டுமெனில் அந்த பெருங்காயப் பாத்திரத்தின் (டப்பாவின்) வாசனையை நீக்க அந்த பெட்டியை(container) நன்கு துலக்கி கழுவிய பிறகே அந்த பாத்திரத்தினுள்(டப்பாவினுள்) வேறோரு பொருளை அடைக்க முடியும்.

    அப்போதுதான் அந்த புதிய பொருள், பெருங்காய வாசனையின்றி புதிய பொருளின் தன்மையை பிரதிபலிக்கும். இல்லை எனில் பெருங்காய பெட்டியில் அடைக்கப்பட்ட புதிய பொருளும் தன்னுடைய வாசனையோடு பெருங்காய வாசனையும் சேர்த்தே வீசும். அந்த புதிய பொருளுக்கு பழைய பெருங்காய வாசனை ஒவ்வாததாக இருக்கும். அப்படியிருக்கும் போது அப்புதிய பொருளை உபயோகப்படுத்த முடியாமல் போகும்.

    அதேபோன்றுதான் பெருங்காயம் தீர்ந்துபோனாலும், காலி பெட்டி வாசனையை வீசிக்கொண்டிருப்பதுபோல், விலங்கினத்திலிருந்து வந்த பிறகு பல்லாயிரம் பிறவிகள் எடுத்தும், மனித இனம் விலங்கின வாசனையான விலங்கினப்பண்பை அவ்வப்போது வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றது.

    விலங்கினப் பண்பு சுவடாகத்தானே உள்ளது என்று அலட்சியமாக இருந்து விடமுடியாது. விலங்கினப் பண்பு என்பதனை ‘பிறர் வளம் பறித்தல்’ எனலாம். எப்படி?

    ஒரு சில தவிர விலங்கினங்கள் பெரும்பாலானவை உணவிற்காக பிற உயிரினங்களை கொன்று உணவாகக் கொள்கின்றன. இந்த விலங்கினப்பண்பில் நான்கு வகையான கொடுஞ் செயல்களைக் காணமுடிகின்றது.

    1) சினம் கொள்ளுதல்(புலி மானை துரத்திப் பிடிக்கும் போது, மான் எளிதில் அகப்படாததால் புலி சினம் கொள்கின்றது. புலிமட்டும் சினங்கொள்ளவில்லை. மானும் தன்னுடைய கொம்பினால் முட்டி புலியை எதிர்கொள்ள முயற்சி செய்யும்போது சினத்தை வெளிப்படுத்துகின்றது. ஆனால் பாவம் மானால் என்ன செய்ய முடியும்! பயனில்லாமல் போய்விடுகின்றது. இறையாகிவிடுகின்றது)

    2) பிற உயிரைப் பறித்தல்/உயிரைக் கொல்லுதல்.

    3) பிற உயிரைச் சித்திரவதை செய்வது(பிற உயிரைக் கொல்லும்போது சித்திரவதை செய்யப்படுகின்றது)

    4) அதன் வாழும் உரிமை பறிக்கப்படுகின்றது(பிற உயிரைக் கொல்வதால்).

    ஆதிமனிதனுக்குப் பிறகு, பல லட்சம் பிறவிகள் எடுத்த பிறகு இப்போது மனிதகுலம் வாழ்ந்து கொண்டிருக்கின்றது. இருப்பினும், இன்னமும் விலங்கினப்பண்பின் சுவடு மனிதகுலத்தில் காணப்படுகின்றது.  இங்கே, 03-01-1959 அன்று ‘மனிதருள் உயர்ந்தோர்’ என்கின்ற தலைப்பில் மனிதகுலத்தின் நிலை ஐவகைகளாகக் காணப்படுவதை, அருட்கவிஞர் வேதாத்திரி மகரிஷி அவர்கள் கவியின் வழியாகக் கூறுவதனை நினைவு கூர்வோம்.

     மனிதருள் உயர்ந்தோர்

    மனிதனென்ற உருவினிலே மாக்களுண்டு, மக்களுண்டு

    மனமறிந்த தேவருண்டு, மதிநிலைத்த மனிதருண்டு

    மனமறிந்து மன இதமாய், மாக்களுக்கும் மக்களுக்கும்

    மனமுவந்து தொண்டாற்றும், மாமுனிவன் முழுமனிதன்.

            . . . மாமுனிவர் வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

     

       இக்கவியின் பொருள் தானாகவே விளக்கக் கூடடியதாக(Self explanatory) இருப்பதால் மேலும் விளக்கம் தேவையில்லை. எனினும் கவியின் முதல் வரி தெரிவிப்பது என்ன? மனித வடிவத்தில் உள்ள இரண்டு நிலைகளை ஆதங்கத்தோடு தெரிவிக்கிறார் மாமுனிவர் வேதாத்திரி மகரிஷி அவர்கள். முதலில் சொல்லப்பட்டுள்ளது விலங்கு(மாக்களுண்டு) அடுத்ததாகத்தான் மனிதனைக் (மக்களுண்டு) குறிப்பிடுகிறார். எனவே மனிதனிடம் விலங்கினப்பண்பின் சுவடு இருப்பதால்தான் மனிதனென்ற உருவினிலே முதலில் தெரிவிப்பது விலங்கை. அடுத்ததாகத்தான் மனிதனைக் குறிப்பிடுகிறார்.

        சுவாமி விவேகானந்தரும் இதுபற்றி கூறுவதனைக் கவனிப்போம். மனிதன் என்பவன், விலங்கு, மனிதன், தெய்வம் ஆகிய மூன்றின் கலவையாக இருக்கிறான் என்கிறார்.

       எனவேதான் இயற்கையே/இறையே மனிதனாக தன்மாற்றமாகி இருந்தும் மனிதன் தெய்வீகத்தை வெளிப்படுத்த முடியாமல் அல்லலுறுகிறான்.   இயற்கைக்கும்/இறைக்கும் நேரிடையாக மனிதனாக தன்மாற்றம் அடைவதற்கு வாய்ப்பில்லை. வேறு வழியின்றி விலங்குகளாக தன்மாற்றம் அடைந்துதான் மனிதனாக தன்மாற்றம் அடைய முடிந்தது

         காரணம் பிரபஞ்ச நிகழ்ச்சிகளான அழுத்தம், ஒலி, ஒளி, சுவை, மணம் ஆகிய ஐவகை நிகழ்ச்சிகளை உணர்வதற்காக, ஒன்று முதல் ஐந்து வரை ஐவகை உயிரினங்களாக தன்மாற்றம் அடைந்த பிறகேதான் மிகவும் சிறப்புடைய ‘ஆறாம் உணர்வான’ ‘இறை உணர்வு’ பெறக்கூடிய மனிதனாக தன்மாற்றம் அடைய முடிந்தது. இது இயற்கைக்கே/இறைக்கே உள்ள கட்டாய நிலை(constraint) என்று கூட வைத்துக்கொள்ளலாம்.

     

       மேலும் அன்பர்கள், அவரவர்கள் விருப்பத்திற்கேற்ப, மகரிஷி அவர்கள் பஞ்சபூதத்தை பற்றி ஆராய்ந்த போது “பஞ்சபூத பூங்காவிலே உலாவினேன்“ என்று கூறியுள்ளதுபோல் உயிரினப்பரிணாமத்தை ஆராய ‘உயிரினப் பரிணாமப் பூங்காவில்’ உலவி வந்து உயிரினப் பரிணாமத்தை மனக்கண்ணில் அறிந்து கொள்வார்களாக. அதற்கு நம்முடைய குருதேவர் அவர்கள் துணை செய்வார்களாக. இது பற்றி மேலும் விரிவாக அறிந்து கொள்ள இயற்கை/இறை வேறொரு சமயத்தில் சந்தர்பம் அளிக்குமாக.

        இன்னமும் விலங்கினப்பண்பின் சுவடு மனிதகுலத்தில் காணப்படுவதற்கான காரணத்தை ஆராயப்போனால்,

    விலங்கினப்பண்பை செயலற்றதாக்கக்கூடிய,
    முறையான,
    பொருத்தமான உளப்பயிற்சிகள்,
    ஒழுக்கப்பயிற்சிகள்
    ஏதும் முற்பிறவிகளில் நம்முன்னோர்கள் செய்யாததே காரணமாகத் தெரிகின்றது.
    எனவே தான் பலலட்சம் பிறவிகள் கடந்தும், இப்பிறவியிலும் விலங்கினப்பண்பாட்டின் ‘சுவடு – trace’ இருக்கின்றது.

    அந்த விலங்கினப்பண்பாட்டின் சுவடினால்தான்,
    சூழ்நிலை, சந்தர்ப்பம் வரும்போது மனிதன்
    விலங்கினப்பண்பாட்டின் சுவடின் ஆதிக்கத்தால்,
    சினம், வெறுப்பு, வஞ்சம் ஆகிய பல்வேறு குற்றங்களைச் செய்கிறான்.

    சினங் கொள்வது ஒரு குற்றமா என்று கூட ஐயம் எழலாம்.
    சினம் நீடித்தால் அது எவ்வாறாக வடிவமெடுக்கும்?
    சினத்தை இருப்பு கட்டிவருவதே வஞ்சம் எனப்படுகின்றது.

    ‘சினம் கொள்வது’ என்பது குற்றம் என specific law ஏதும் நேரிடையாக இல்லையாயினும், பல்வேறு வகையான குற்றங்களை செய்யும் குற்றவாளிகளை தண்டிக்க வெவ்வேறு சட்டங்கள் இயற்றப்பட்டு அதன் கீழ் குற்றங்கள் செய்யும் மனிதன் தண்டிக்கப்படுகிறான்.

    அக்குற்றங்கள் வேறு பெயரால் அழைக்கப்படலாமே தவிர, அக்குற்றத்தின் அடிப்படை சினம், மற்றும் சினத்தை இருப்பு கட்டிய வஞ்சம் ஆகியவைகளாகத்தான் இருக்கும். பெரும்பாலும், மனிதனின் எல்லாவகை குற்றங்களும் இந்த விலங்கினப் பண்பாகிய பிறர் வளம் பறித்தல் என்பதிலேயே அடங்கிவிடும். எனவே விலங்கினப்பண்பே சில நேரங்களில் சூழ்நிலைகள் மற்றும் வாய்ப்பு ஆகியவற்றைப் பொருத்து பூதாகாரமாகவும் வெடிக்க காரணமாகின்றது மனிதனின் வாழ்வில்.

    விலங்கினத்திலிருந்து மனித இனம் வந்துள்ளதால், மனித மூளையில் ‘emotional area’ என ஒரு பகுதி உள்ளதால், மனிதன் அடிக்கடி உணர்ச்சிவயப்பட்ட நிலைக்கு ஆளாகிறான் எனக்கூறப்படுகின்றது. பரிணாமத்தால் வந்துள்ள மூளையின் ‘emotional area’ வை செயலிழக்கச் செய்தே ஆக வேண்டிய காலகட்டத்தில் இன்று மனித குலம் இருக்கின்றது.

         அதனை செயலிழக்கச் செய்வதை அறிவிற்கான விளக்கம்(மெய்ஞ்ஞானம்) பெறச்செய்வதன் மூலமாகத்தான் முடியும். அறிவிற்கான விளக்கமாகிய ஒழுக்கவியல் என்கின்ற பாடமாக, பள்ளிக்கல்வியில் ஒன்று முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை மற்ற பாடங்களுடன், கட்டாயமாக்கி கொண்டுவருவதன் மூலமேதான் சாத்தியமாகும். அப்போது அறிவிற்கான விளக்கத்தை ஒவ்வொருவரும் பெறுவர்.

    இதுவரை ஆன்மீகம் எனத் தனியாக வளர்ந்து, அந்தப் பணியை செய்து கொண்டு வருகின்றது. ஆன்மீகம் என்பது மனித வாழ்வில் கட்டாயமாக இடம் பெறாததால், அது Optional ஆக இருப்பதால் மனிதப்பண்பில், விரும்பிய அளவிற்கு(to the desired extent) பயன் ஏற்படாதுபோகின்றது. உண்மையில் ஆன்மீகம் விஞ்ஞானத்தின் முக்கிய கிளையாக(First and primary Branch of Science namely Spiritual Science) திகழ்வதால், அதனைக் கல்வியில் இணைத்துவிட்டால் அப்போது அது அதன் பயனை விரைவில் மனிதகுலம் எளிதாகவும், விரைவிலும் பெற்றுவிடும்.

    எப்படி, விலங்கினத்திலிருந்து மனித இனம் தோன்றியது, இயற்கைக்கு/இறைக்கு சடுதிமாற்றத்தால் சாத்தியமானதோ, அதுபோல் வளர்ந்து வரும் ஆன்மீகத்தில் திருப்பு முனையாகவும்(turning point), ஒரு மைல்கல்லாகவும்(mile stone), இயற்கையால்/இறையால் சடுதிமாற்றமாக அருளப்பட்டதுதான் திருவேதாத்திரியம் (Vethathriam is a sudden exposure to spirituallity).

    ஆகவே விலங்கினப்பண்பாட்டிலிருந்து மனிதஇனப் பண்பாட்டிற்கு உயரவேண்டும் என்பதற்காகத்தான் ‘பண்பாட்டை உயர்த்தட்டும்’ என்கின்ற அந்த வாழ்த்து. அதற்கு வெறும் வாழ்த்து மட்டும் இருந்தால் போதாது. அதற்குக்காரணமான நிலையும் மாறினால் தான் இந்த வாழ்த்து செயலுக்கு வரும் என்பதால் ‘‘பகுத்துணர்வில் தொகுத்துணர்வு பண்பாட்டை உயர்த்தட்டும்” என்று இரண்டு வாழ்த்துக்களையும் இணைத்து ஒரே வாழ்த்து போல் அருளியுள்ளார். பண்பாடு உயர்வதற்கு பகுத்துணர்வில் தொகுத்துணர்வு வேண்டும் என்று வாழ்த்தச் சொல்கிறார். இன்றைய அறிவிற்கு விருந்தில் ‘பகுத்துணர்வில் தொகுத்துணர்வு பண்பாட்டை உயர்த்தட்டும்’ என்கின்ற வாழ்த்திற்கான அவசியத்தை அறிந்தோம்.
    விலங்கினப்பண்பு—பிறர்வளம் பறித்தல் ஆகிய சுவடுகள் மனித வாழ்வில் எவ்வாறெல்லாம் வடிவமெடுக்கின்றன என்பது பற்றி வேறொரு சமயத்தில் இன்னும் விரிவாக அறியலாம். இத்துடன் இன்றைய சிந்தனையை நிறைவு செய்துகொள்வோம்.

    அடுத்த அறிவிற்கு விருந்தில்(16-03-2016–புதன்),
    ‘பகுத்துணர்வில் தொகுத்துணர்வு’ பற்றியும்,
    அது வேதாத்திரிய இறை இயலின் சாராம்சம் என்றும்,
    ‘பகுத்துணர்வில் தொகுத்துணர்வு’ எவ்வாறு பண்பாட்டை உயர்த்தும் எனவும் அறிய இருக்கிறோம்.

    அடுத்த சத்சங்கத்தில் சந்திப்போம். வாழ்க வளமுடன்.

    வாழ்க அறிவுச் செல்வம்                      வளர்க அறிவுச் செல்வம்.

    Loading

  • பகுத்துணர்வில் தொகுத்துணர்வு பண்பாட்டை உயர்த்தட்டும் – 3/?

    வாழ்க மனித அறிவு                           வளர்க மனித அறிவு

    FFC – 170

    09-03-2016—புதன்

     FFC-170-மகரிஷி படம்-அறத்தின் மாண்புணர்ந்து caption

    சென்ற இரு அறிவிற்கு விருந்தில், உலகநல வாழ்த்துப்பாவில் உள்ள எட்டு வாழ்த்துக்களில் நான்காவது வாழ்த்தான ‘பகுத்துணர்வில் தொகுத்துணர்வு பண்பாட்டை உயர்த்தட்டும்’ என்கின்ற வாழ்த்து–மந்திரம் பற்றி சிந்தித்து வருகிறோம். மந்திரங்களின்(மந்திரம்—வாழ்த்து) பொருள் தெரிந்து உச்சரிப்பதில் விசேஷ பலன் உண்டு என்பதால், ‘பகுத்துணர்வில் தொகுத்துணர்வு பண்பாட்டை உயர்த்தட்டும்’ என்பது பற்றி ஆழ்ந்தும், விரிந்தும் சிந்தித்து வருகிறோம். மூன்றாவது நாளாக இன்றும் அதே பொருள் பற்றி சிந்திக்க ஆர்வத்துடன் கூடியிருக்கிறோம். இன்று,

    1.  மனித இன பரிணாமத்தில் எப்போது அறம் தோன்றிற்று,

    2.  பகுத்துணர்வில் தொகுத்துணர்வு என்பது என்ன,

    3. எவ்வாறு அது பண்பாட்டை உயர்த்தும் என்பது பற்றியும்,

    4. வேறு அறிஞர்கள் இது பற்றி என்ன கூறியிருக்கிறார்கள், எவ்வாறு கூறியிருக்கின்றனர்,

    5. அது எவ்வாறு 20ஆம் நூற்றாண்டில் ‘பகுத்துணர்வில் தொகுத்துணர்வு’ என்கின்ற புனிதச் சொற்றொடராக மலர்ந்துள்ளது

    என்பது பற்றியும் அறிய இருக்கிறோம்.

    ஆழ்ந்த விரிந்த சிந்தனையாளரான வேதாத்திரி மகரிஷி அவர்கள் கண்டுபிடித்த பல கண்டுபிடிப்புகளில், மனிதஇன பரிணாமத்தைப்பற்றி சிந்தித்தபோது கிடைத்த மிக முக்கியமான கண்டுபிடிப்பாகிய ‘அறம்’ என்ன என்பதும் ஒன்றாகும். அந்த கண்டுபிடிப்பை தெரிவிப்பதற்கு சரியான வழி, பாடல் என்பதால் ‘அறத்தின் தோற்றம்’ என்கின்ற தலைப்பினைக் கொடுத்து ஒரு கவியினை 20-12-1959 அன்று அருட்கவிஞரான வேதாத்திரி மகரிஷி அவர்கள் அருளியுள்ளார். அப்பாடலை நினைவு கூர்வோம்.

    FFC-169-6-3-16பகுத்துணர்வில் அறத்தின் தோற்றம்

    இப்பாடலை 48 வயதில் இயற்றியுள்ளார். 35 வயதில் இறைவுஉணர்வில் தெளிவடைந்திருக்கிறார். ஈசன் மீது கொண்ட ஆசை நிறை வேறிவிட்டது. வேறு சில அருளாளர்கள் ஈசன் மீது கொண்ட ஆசையிலேயே தொடர்ந்து திளைத்திருப்பது போன்றில்லாமல், திருமூலத் தெய்வத்தை மானசீகக் குருவாக ஏற்று தன்னை அறியும் கலையில் நிறைவடைந்தவர் மகரிஷி அவர்கள். மேலும், அதனை சமுதாயத்திற்கு கற்றுத் தரும் விருப்பம் அவரிடம் இருந்ததால், அறிவுத் தொண்டிலும் நிறைவடைய, சிறக்க,

    ‘ஆசை அறுமின்கள், ஆசை அறுமின்கள் ஈசனோடு ஆயினும் ஆசை அறுமின்கள்’

    என்கின்ற திருமூலரின் எண்ணத்தின் ஊடுருவலால், மகரிஷி அவர்கள் உலக நல விரும்பியாக இருந்ததாலும், அதற்கேற்றபடி அறிவுத் தொண்டில் தன்னை உலக நலத் தொண்டராக அர்பணித்துக் கொண்டார். எனவே தான் மகரிஷி அவர்கள் இறை உணர்விலும் மற்றும் சமுதாயத் தொண்டிலும் நிறைவு பெற்றார். ஒரு முறை மகரிஷி அவர்கள் கூறியதாவது— ‘ஒரு சிலர் இறை உணர்விலேயே நிறைவு பெறுகிறார்கள். வேறு சிலர் தொண்டினால் நிறைவு பெறுகிறார்கள். ஆனால் நானோ இறைஉணர்வு, தொண்டு இரண்டிலும் சமமாக நிறைவு பெற்றேன்’ என்றார். அறிவுத் தொண்டில் அவருக்கு இருந்த ஈர்ப்பினாலே அவர் ஆழ்ந்து விரிந்த அற்புதத்திலும் அற்புதமான சிந்தனையாளராக திகழ்ந்தவர்.

         எனவே 35 வயதில் இறைவுணர்வில் தெளிவடைந்தாலும் இவ்வுலகம் உய்வதற்கான வழிவகைகளை தொடர்ந்து ஆராய்ந்து வந்தார். அதில் ஒன்று தான் இறையைப்பற்றிய தெளிவாக விளக்கம் இவ்வுலகிற்கு அளிக்க வேண்டும் என்பது. எனவே அவர் கடைசி சுவாசம் வரையில் சிந்தனை மூச்சையும் நிறுத்த வில்லை. மகா சமாதிக்கு ஒரு மாதத்திற்கு முன்னரும், ‘இறையின் தன்மாற்ற சரித்திரம் என்கின்ற ஒரு நூலை இயற்றிவிட்டுத் தான் விடை பெற்றார்.

        உயிரினங்களிலேயே மிக மிகச் சிறந்தது மனித இனம். மற்ற உயிரினங்களிலிருந்து மனிதன் தன்னை வேறுபடுத்தி சிறப்புறுவதற்கு காரணம் உள்ளதால்தான், மனிதன் தன்னை விலங்கினத்திலிருந்து வேறுபடுத்திக் காண்கிறான்.

         மற்ற உயிரினங்களுக்கு தன் உணர்வு மட்டுமே தெரியும். பிற உயிர்களின் உணர்வு தெரியாது. எப்படி? புலிக்கு மானின் உணர்வு தெரியாது. பாம்பிற்கு எலியின் உணர்வு தெரியாது. நரிக்கு முயலின் உணர்வு தெரியாது. ஏன் எனில் அவை விலங்கினங்கள். மேலும் பிற உயிர்களின் உணர்வு தெரிய வந்தால் புலி மானையும், பாம்பு எலியையும், நரி முயலையும் உணவாக்கிக் கொள்ள முடியாது. பின்னர் அவை உணவில்லாமல் எப்படி உயிர் வாழ முடியும்?

    ஆனால் மனிதன் தன்னுணர்வு போன்று அதே அளவில், ஏன் சிலசமயங்களில் கூடுதலாகவும் பிற உயிர்களின் உணர்வுகளையும் புரிந்து கொள்ள முடியும். மனிதனின் பிறஉயிர்படும் துன்பங்களை, தான் அனுபவிப்பதுபோல் உணரக்கூடியத் தன்மை ஆறாம் அறிவிற்கு உண்டு. ஆனால் ஆறாம் அறிவின் இந்த நிலை ஆதிமனிதர்கள் தோன்றியதுமே அவர்களுக்கு தோன்றவில்லை. ஆறாம் அறிவின் இந்த நிலை மனிதஇன பரிணாமத்தில் வருவதற்கு பல லட்சம் ஆண்டுகள் ஆகியிருக்கும். எனவே அவ்வாறு இருந்த நிலையில் ஆறாம் அறிவு பிறஉயிர் உணர்வுகளை புரிந்து கொள்ளும் நிலையை எந்த சம்பவத்தால் எத்தினம் ஏற்பட்டது என்பதனையே இப்பாடல் வரிகள் நமக்கு தெரிவிக்கின்றன.

    அறத்தின் தோற்றம் என்கின்ற பாடலுக்குள் ஆழ்ந்து செல்வோம். அப்பாடலிலுள்ள வரிகளைக் கவனிக்கவும். மகரிஷி அவர்களின் சிந்தனை அனுபவத்தை உள்ளது உள்ளவாறு அப்படியே பிரதிபலிக்கின்றது. மகரிஷி அவர்களின் மனக்கண்களில் அறம் தோன்றிய காட்சி தோன்றியதுபோல், நமக்கும் அவ்வாறே மனக்கண்களில் தோன்றுமாறு படம் பிடித்துக் காட்டுகின்றன பாடல் வரிகள்.

    பாடல் நான்கு வரிகளாக இருந்தாலும் அவை தெரிவிக்கும் ஐந்து மாபெரும் உண்மைகள் மனிதகுலம் அவசியம் அறிந்து கொள்ளவேண்டியவைகளாக உள்ளன.

    அவ்வுண்மைகளை விளக்க வரிகள் நாற்பதோ, ஐம்பதோ போதா. நானூறோ அல்லது ஐநூறு வரிகளும் தேவைப்படும். ஏனெனில் பலநாள் சிந்தித்து கண்டுபிடித்த உண்மைகளை தெரிவிக்க எளிய சுருக்கமான வழிதான் அருட்பாடல்(condensed form of thoughts is poem) என்பது. எனவே அருட்பாடலுக்கு விளக்கம் அளிப்பதென்றால் அதிக வரிகள் தேவைப்படுகின்றன. பாடல் வரிகள் தெரிவிக்கும் உண்மைகள் என்னென்ன?

    1) அறம் என்ன என்பதற்கும் விடையும்,

    2) மதம் தோன்றியதற்கான காரணம்,

    3) ஒன்றே குலம், ஒருவனே தேவன்’ என்று சுத்த அத்வைத விஞ்ஞானத்தை அன்றே திருமூலத் தெய்வம் கூறியிருந்தாலும், மதம் ஏன் பலவாகியதற்கான காரணம்,

    4) மதங்கள் பலவானாலும் எல்லா மதங்களின் நோக்கமும் ஒன்றுதான் எனவும்,

    5) அது தான் அறம் என்கின்ற விளக்கமும் அறியப்படுகின்றன.

        நீண்ட நாள் மனித இன பரிணாமத்தை ஆராய்ந்திருக்கிறார் மகரிஷி அவர்கள். மனித இன பரிணாமத்தை ஆராய்ந்த போது இயற்கையால்/.இறையால் அவருக்கு விளக்கப்பட்ட விளக்கங்களே அவை. ஆங்காங்கே ஆதிமனிதர்கள் தோன்றி இருப்பார்கள். முதன் முதலில் விலங்கினத்திலிருந்து வந்த ஆதிமனிதர்களிடம் விலங்கினப்பண்பேதான் முழுவதுமாக இருந்திருக்கும். நாள் செல்லச்செல்ல அறிவு வளர வளர, மனிதப்பண்பு வெளிப்பட ஆரம்பிக்கும்போதுதான் ‘பிறர் உணர்வை அறிய ஆரம்பித்திருப்பான் ஆதிமனிதன். ஆரம்பித்ததோடு இல்லாமல் அந்த துன்பத்தின் தன்மையையும், அளவினையும் தனது மனதால் யூகித்து உணர்ந்திருப்பான்.

    அப்போது ஏற்பட்ட மனநிலைதான் இரக்கம் என்பது. இரக்கம் ஏற்பட்டதோடு, பிற மனிதன் படும் துன்பத்தைப் போக்குவதற்கு, கைகள் இருந்ததால், கைகளின் துணையுடன் உதவியிருப்பான். எனவே இந்த இரக்கத்திற்கு வேறு பெயர் கருணை எனலாம். உலகில் எங்கோ ஒருமனிதனுக்கு இரக்கம் ஏற்பட்டு உதவி செய்த முதல் நிகழ்வு அறிவில், சிந்தனையில் ஏற்பட்டதனை சிறந்த திருப்பம் என்கிறார் அருட்கவிஞர் வேதாத்திரி மகரிஷி அவர்கள். அதுதான் அறம் என்றாயிற்று என்கிறார். இங்கே நாம் முதலில் ரசிக்க வேண்டியது ‘முதல் நாள்’ என்பது. மனிதகுலம் தோன்றி பல லட்சம் ஆண்டுகள் ஆனதாகக் கூறப்படுகின்றது. அதில் ஒரு நாள் இரக்கப்பட்டு உதவி செய்த நிகழ்வு ஏற்பட்டுள்ளது.

         அருட்கவிஞர் வேதாத்திரி மகரிஷி அவர்களுக்கு, ஆராயும் திறனும், அதன் மூலம் கண்டுபிடித்த உண்மைகளை எளிமையான வரிகளில் அவர் கவிகளாக படைக்கும் கவித்துவம் பெற்றதனாலும் நமக்கன்றோ பயன்!. அவருக்கு இயற்கை/இறை அறிவித்த எதனையும் விட்டுவைக்காமல் 1800க்கும்மேல் கவிகளாகவும், விரிவாக உரைநடை வடிவில் நூல்களையும் அருளியுள்ளார். இது இயற்கையால்/இறையால் திட்டமிட்டு சமுதாயத்தை விலங்கினத்திலிருந்து மனித நேயத்திற்கு திருப்புவதற்கு எடுத்த முயற்சியாகும்.

    அடுத்ததாக நாம் சிந்திக்க வேண்டிய சொற்கள் ‘சிறந்த திருப்பம்’ என்பது. திருப்பம் என்று மட்டும் சொல்லவில்லை நம் அருட்கவிஞரான வேதாத்திரி மகரிஷி அவர்கள். ‘சிறந்த’ என்கின்ற அடைமொழியினைச் சேர்த்துக் கொள்கிறார். காரணம் என்ன? இந்தக் காரணத்தை அறிந்துகொள்வது நமக்குச் சிறப்பு.

        ஐந்து புலன்களின் வாயிலாக அறிந்து கொண்டிருந்த ஐந்தறிவு விலங்கினமே சடுதி மாற்றத்தால் ஆறறிவுடைய சீவனாக மாற்றம் பெற்றுள்ளது. உணவிற்காக ஒன்று மற்றொன்றைக் கொன்று தின்னும் அன்பும் கருணையுமிலா(அன்பும் கருணையும் இல்லா தன்மை (ஐந்தறிவின் நிலை.) இயல்புடைய விலங்கினம்தான் சடுதிமாற்றத்தால் மனிதனாக மாற்றம் பெற்றுள்ளது. காரணமில்லாமலா இயற்கையோ/இறையோ எதனையாவது செய்யும்? மனிதனாக தன்மாற்றம் அடைந்தற்கான காரணம் என்ன?

        ஐவகை பிரபஞ்ச நிகழ்ச்சிகளை அறிவதற்காக ஐந்தறிவு வரை உயிரினங்களாக தன்மாற்றம் அடைந்த பிறகு மற்றொரு சீவ இனமான மனிதனாக தன்மாற்றம் அடைந்ததற்குக் காரணம் ஐவகை நிகழ்ச்சிகள் ஏன் நடக்கின்றன, எவ்வாறு நடக்கின்றன, இதற்கெல்லாம் மூலம் என்ன என்று அறிவதற்காகவேதான். இதனைத்தான் இப்போது நாம் மனிதப்பிறவியின் நோக்கம் என்கிறோம்.

    ஐந்தறிவு வரை, சீவ இனங்கள் விலங்கினங்களாகவே வாழ்கின்றன. ஐந்தறிவு சீவ இனங்கள் தோன்றி பல லட்சம் ஆண்டுகள் சென்றபிறகு, இயற்கை/இறை தன்னை அறிவதற்காக ஆறாம் அறிவு சீவ இனமாக தன்மாற்றம் அடைந்துள்ளது. ஆதிமனிதனின் தோற்றத்திற்கு பிறகு பல லட்சம் ஆண்டுகள் சென்ற பிறகும், விலங்கினத்தன்மையுடனே வாழ்ந்து வந்திருந்த ஆறாம் அறிவு சீவ இனம். ஆறாம் அறிவு சீவன் மனிதன் என்பதால், அது மனிதத்தை வெளிபடுத்தி ஆக வேண்டும். மேலும் இயற்கை/இறை தன்னை உணர்வதற்காகவே ஆறாம் சீவ இனமாக தன்மாற்றம் அடைந்துள்ளதால், அச் சீவ இனம் இயற்கையின்/இறையின் தன்மையான அன்பும் கருணையும் வெளிப்படுத்த வேண்டியது அவசியமாயிற்று. எனவே விலங்கினத்தன்மையோடு வாழ்ந்துவந்த மனித இனம், திடீரென்று, ஒரு நாள், பிறர் படும் துன்பத்தை அறிந்து, மனம் இரங்கி உதவி செய்ததை சிறந்த திருப்பம் என்கிறார் அருட்கவிஞரான வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

    இந்த இரக்கம் தான் மனிதனை விலங்கினத்திலிருந்து வேறுபடுத்திக் காண்பிக்கின்றது. பிறஉயிர் படும் சுக துக்க உணர்வினை மனிதனால் மட்டுமே உணர முடியம். இந்த நிகழ்வு மனித இன பரிணாமத்தில் ஒரு நாள் ஏற்பட்டதை சிறந்த திருப்பம் என்கிறார். அதுவரை விலங்கினமாகவே வாழ்ந்து வந்த மனிதன் ஒரு நாள் இரக்கம் கொண்டு உதவி செய்தது திருப்பம் தானே! அதுவும் அது சிறந்த திருப்பம்.

    விலங்கினத்திலிருந்து வந்த மனித இனம் வந்திருந்தாலும், தொடர்ந்து விலங்கினங்கள்போல் வாழமுடியாது. மனித குலத்தில் ஒரு மனிதன் மற்றொரு மனிதனுக்கு துன்பம் அளிக்காத அன்பு நிலையும், பிறர் படும் துன்பத்தைப் போக்கும் இரக்க குணமும்-கருணையும் மிக மிக அவசியம்.  இதுவே மகரிஷி அவர்கள்  இயற்றிக் கொடுத்துள்ள இரண்டொழுக்க சங்கல்பாமாகும். இந்நிலை மனிதகுலத்தில் மலர்வதற்கு என்ன வழி? ஒருநாள் ஏற்பட்ட சிறந்த திருப்பம் தொடர்ந்து, இயல்பாகி, மனிதகுலத்தில் மனித நேயமாக மலர வேண்டும். அதற்கு இயற்கையின்/இறையின் நோக்கத்தை நிறைவேற்றுவதற்கு மனிதன் இறைஉணர்வு பெறவேண்டும். இறைஉணர்வு பெறுவது என்பது விலங்கினத் தன்மை முற்றிலுமாக நீங்கும்போதுதான் சாத்தியம்.

         மனிதகுலம் பண்பின் உச்சத்தில் வாழ்வதற்கு அறஉணர்வு அவசியம். அறஉணர்விற்கு இறை உணர்வு அவசியம். பொதுவாக வெளிச்சத்தைக் காண கண்கள் அவசியமாக இருப்பதுபோல், மனிதகுலம் உயர்ந்த பண்பின் வெளிச்சத்தைக்காண்பதற்கு இரண்டு கண்கள் தேவைப்படுகின்றன. அவை ஒன்று இறை உணர்வு. மற்றொன்று அற உணர்வு. மனிதனுக்கு அறஉணர்வும் அவசியம். அதற்கு இறை உணர்வும் அவசியம். இறை உணர்வில்லாமல் அறஉணர்வில்லை. அற உணர்வில்லாமல் இறை உணர்வில்லை. ஒன்றை ஒன்று சார்ந்துதான் உள்ளது. அதனால்தான் அறத்தின் மாண்புணர்ந்து அறம் ஊக்கி, அறம் காக்கும் தகமையே இறை உணர்வு என்று இறை உணர்வை வரையறுக்கிறார்  மனிஇனப்பரிணாமத்தில் என்று அறம் தோன்றியது என அறுதியிட்டு கூறிய மெய்ஞ்ஞானி வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

         பின்னர் அறிவில் சிறந்த அறிஞர்கள் ‘இரக்கம் கொண்டு பிறர் துன்பத்தைப் போக்கும் குணத்தை’ மக்களிடம் பரவிட நெறிகளை போதனை செய்தார்கள். பின்னர் அந்நெறிகளை பின்பற்றி வாழ்ந்தவர்கள், அவற்றிற்கு அந்நெறிகளை போதித்தவரின் பெயரை வைத்து இன்னார் மதம் என அழைக்கலாயினர். இவ்வாறாக ஆங்காங்கே அறிஞர்கள் தோன்றி மக்களிடம் அன்பு நெறிகளை போதித்து, அவற்றை ஆங்காங்கே மக்கள் பின்பற்றி வந்த போது மதம் பலவானது என்கிறார் மகரிஷி அவர்கள்.

         அறம் தோன்றியதைக் கூறும் பாடலை மீண்டும் மீண்டும் வாசித்து மனனம் செய்து நேரம் கிடைக்கும் போதெல்லாம் நினைவுபடுத்திக் கொண்டு ஆழ்ந்து விரிந்து சிந்தித்தால் மகரிஷி அவர்களின் இந்த கண்டுபிடிப்பின் அலைநிலைக்கு சிந்தனையில் உயரலாம். ‘உத்தம நண்பர்காள் உங்களுக்கும் உரியது’ என்றுதானே கூறுகிறார்.

         இத்துடன் இன்றைய சிந்தனையை நிறைவு செய்து கொள்வோம். இன்று அறத்தின் தோற்றம் பற்றி அறிந்து கொண்டோம். அறம் ஓங்கியிருத்தலே மனிதபண்பாடாகும். மனிதஇன பரிணாமத்தில் என்றோ ஒரு நாள் ஏற்பட்ட சிறந்த திருப்பமான அறம், தொடர்ந்து செழிப்புடன் வளராமல் இருப்பதால், மனிதப்பண்பாடு உயர்ந்து சிறப்பது என்பது பகுத்துணர்வில் தொகுத்துணர்வால்தான் முடியும் என்பதால் பகுத்துணர்வில் தொகுத்துணர்வு’ என்பது என்ன என்று அடுத்த அறிவிற்கு விருந்தில்(13-03-2016—ஞாயிறு) அறிய இருக்கிறோம்.

    வாழ்க அறிவுச் செல்வம்              வளர்க அறிவுச் செல்வம்.

    Loading

  • பகுத்துணர்வில் தொகுத்துணர்வு பண்பாட்டை உயர்த்தட்டும் – 2/?

    வாழ்க மனித அறிவு                 வளர்க மனித அறிவு

    FFC – 169

    06-03-2016—ஞாயிறு

    FFC-169-6-3-16-பகுத்துணர்வில்

    சென்ற அறிவிற்கு விருந்தில் திருவேதாத்திரியத்தின் இறை இயலின் சாராம்சமான ‘பகுத்துணர்வு’, ‘தொகுத்துணர்வு’ ஆகிய இரு சொற்களுக்கான பொருளை வார்த்தை அளவில் அறிந்தோம். இன்று ‘பகுத்துணர்வில் தொகுத்துணர்வு’ என்பதன் உள்ளார்ந்த பொருளையும், இறை இயலின் சாராம்சம் என்று ஏன் சொல்கிறோம் என அறிய இருக்கிறோம். மேலும்
    இயற்கைக்கு/இறைக்கு உகந்த மனிதபண்பாடு எது என்பதனையும்,

    அறம் எப்போது மனிதஇன பரிணாமத்தில் தோன்றியது என்றும்,

    எவ்வாறு ‘பகுத்துணர்வில் தொகுத்துணர்வு’ இயற்கைக்கு/இறைக்கு உகந்த மனிதபண்பாட்டினை உயர்த்தும் என்றும்,

    அறவாழ்வினை நாடுவதே நம் கடமையின் சிறப்பாக அமைவது பற்றியும் அறிய இருக்கிறோம்.

    இயற்கைக்கும்/இறைக்கும் உகந்த பண்பாடு என்றால் என்ன?

    இயற்கைதான்/மனிதனாக வந்துள்ளதனை அறிவோம். அப்படியானால் அதற்கு இணக்கமாக, ஒத்த முறையில் ஒழுக்கப்பழக்க வழக்கங்களையும், குணத்தையும் பெற்றிருத்தலே மனிதப்பண்பாடு எனப்படுகின்றது.

    இயற்கை/இறைநீதி தவறாது மதித்து நடத்தலே அதற்கு ஒத்த முறையில் வாழ்வதாகும். இயற்கை/இறைநீதி தவறாது மதித்து நடத்தல் என்பது இயலாதது அல்ல. நீதி என்றால் அதனை மதித்து நடக்கத்தானே வேண்டும்?! நீதியினை மதித்து நடக்கும்போது, விளைவு, தனக்கும், தன்னால் பிறர்க்கும் துன்பம் எப்போதும் வராது. நன்மையே வரும். இவ்வாறாக ஒவ்வொருவரும் நடந்து கொண்டால் உலகில் அமைதியே நிலவும் அன்றோ! இயற்கை/இறைநீதி தவறாது மதித்து செயல்கள் ஆற்றினால், வருகின்ற விளைவு இன்பமே என்கின்றபோது, அவ்விளைவுக்குரிய அச்செயலை என்னவென்று சொல்வது? ஒழுக்கம் என்றேதான் சொல்ல முடியும். வேறு எந்த சொல்லால் அச்செயலை அழைப்பது? ஆகவே இயற்கை/இறை நீதி மதித்து நடத்தல் என்பது ஒழுக்கம் கடைபிடித்தலேதான். இந்த ஒழுக்கப்பழக்கமாகிய பண்பாடுதான் உயரவேண்டும் மனிதகுலத்தில் என்று வாழ்த்தச் சொல்கிறார் மகரிஷி அவர்கள்.

    பண்பாடு உயரட்டும் என வாழ்த்தச் சொல்கிறார் என்பதால் பண்பாடு மனித குலத்தில் இப்போது குறைந்த நிலையில்தான் உள்ளது என்றுதானே பொருளாகின்றது? பண்பு என்றால் குணம் என்று பொருள். பண்பாடு உயர வேண்டும் என்றால் மனித குலம் குணத்தில் உயர வேண்டும் என்பதாகின்றது. ஆதி மனிதன் தோன்றி பலலட்சம் ஆண்டுகள் ஆகியும், நாகரீகம் வளர்ந்த பிறகும், மனித குலம் குணத்திலும், பண்பிலும் இன்னமும் உயர வேண்டும் என்கின்ற நிலை இருப்பதற்குக் காரணம் என்ன?

    எதற்காக இயற்கை/இறை ஆறாம் அறிவுடைய மனித இனமாக தன்மாற்றம் அடைந்தது? இன்றுள்ள நிலையில் மனிதகுலம் அவதியுறுவதற்காகவா இயற்கை/இறை மனிதனாக வந்துள்ளது? இயற்கையின்/இறையின் திறமை இவ்வளவுதானா?

    இன்று மனிதகுல நிலை என்ன என்று சற்று சிந்தித்துப் பார்ப்போம். ஒழுங்கிற்கு ஈனத்தை விளைவிக்கின்ற ஒழுங்கீனம், சண்டை, சச்சரவு, பிணக்கு, போர், ஒருவன் மற்றொருவனுக்கு தீங்கிழைத்தல், பொய், சூது, வஞ்சம், கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்ற மனிதப்பண்பிற்கு ஒவ்வாத செயல்கள்தான் நடந்து கொண்டு வருகின்றன. இந்நிலைக்குக் காரணம் இயற்கை எதற்காக ஆறாம் அறிவுடைய மனிதனாக தன்மாற்றம் அடைந்து வந்ததோ, அதனை அறியாமல், அதற்கு முரணாக வாழ்ந்து வருவதேயாகும்.

    எதற்காக இயற்கை/இறை மனிதனாக தன்மாற்றம் அடைந்து வந்தது என்று விஞ்ஞானம் எடுத்துச் சொல்லவில்லை. இருப்பினும் மெய்ஞ்ஞானம் சொன்னாலும் அதற்கு மனித குலம் ஆா்வத்தோடு முழுவதுமாக கேட்டுக்கொள்ளவில்லை. அப்படியே கேட்டுக்கொண்டாலும் அதனை வாழ்க்கையில் முழுவதுமாக சாதனை செய்வதில்லை.

    அறநூல்கள் கூறுவதெல்லாம் ஏட்டினிலே இருப்பதற்காகவும், அதனை தேர்விற்காக பாடல்களை மனனம் செய்து மதிப்பெண் வாங்குவதற்காகவும் தானே உள்ளன! அந்த அருளாளர்/அறிஞர் அதனைக் கூறினார், இந்த அருளாளர்/அறிஞர் இதனைக் கூறினார் என்று அருளாளர்களை/அறிஞர்களை மறக்காமல் இருப்பதற்காகவே மட்டும் தான் உள்ளது. அருளாளர்களை/அறிஞர்களை மறக்காமல் இருப்பது நல்லதுதான். அது வரவேற்கத்தக்கது.. ஆனால் அருளாளர்களின்/அறிஞர்களின் அருட்குணத்தையும், அருட்செயலையும் நினைந்து, நினைந்து, மதித்து, மதித்து, போற்றி, நாமும் அவர்கள் கூறும் பண்பாட்டு நிலைக்கு உயர்வதற்கு முயற்சி செய்வதில்லை.

    திருவள்ளுர் ஏன் 133 அதிகாரங்களை இயற்ற வேண்டும்? மனித குலத்திற்கு வேண்டிய அறிவுரைகளைக் கூறுவதற்கு அத்தனை அதிகாரங்கள் தேவைப்பட்டன. ஒன்றல்ல, , பத்தல்ல, நூறல்ல—- 133 அதிகாரங்கள் தேவைப்பட்டிருக்கின்றன திருவள்ளுவருக்கு. மனிதகுலத்திற்கு வேண்டிய அறிவுரைகளை சொல்வதற்கு. இதற்கு மேலும் ஏதாவது சொல்ல வேண்டியுள்ளதா எனில் அது திருவள்ளுவரைத்தான் கேட்க வேண்டும். இப்போது அதே திருவள்ளுவர் மீண்டும் புவிக்கு வந்தால் என்ன நினைப்பாரோ தெரியவில்லை. 2047 ஆண்டுகள் சென்றும் ஒழுக்கமுடைமை, அறிவுடைமை, பண்புடைமை, நாணுடைமை போன்று பத்து உடைமைகளை உங்களுடைய செல்வமாக்கிக் கொள்ளுங்கள் என அறிவுறுத்தியும், அச்செல்வங்களை புறக்கணித்துவிட்டு அறிவின் ஏழ்மையில் அல்லவா வாழ்கின்ற நிலை நிலவுகின்றது.

    திருவள்ளுவர் கூறிய ஒழுக்கமும், பண்பும், அறிவும் உயர்ந்துள்ளதா எனில் இல்லை என்றேதான் சொல்ல வேண்டும்.

    திருவள்ளுவருக்குப்பிறகு எத்தனையோ அருளாளர்கள் தோன்றி அறநெறிகளைப் போதித்திருந்தாலும் பண்பு உயர்ந்துள்ளதா எனில் இல்லை என்றுதானே சொல்ல வேண்டியுள்ளது, பண்பாட்டை உயர்த்தட்டும் என்கின்ற வாழ்த்துக்கள் இந்த மனிதகுலத்திற்கு தேவைப்படுகின்றது என்பதால்தான் ‘பகுத்துணர்வில் தொகுத்துணர்வு பண்பாட்டை உயர்த்தட்டும்’ என்கின்ற மந்திரமே உருவாகியுள்ளது. ‘பகுத்துணர்வில் தொகுத்துணர்வு’ எவ்வாறு பண்பாட்டினை உயர்த்த முடியும் என்பதனை அறிந்து கொள்வதால், அம்மந்திர உச்சாடனத்தின் திணிவு அதிகமாகி, வெற்றியினை விரைவில் பெறமுடியும்.

    யார் ஒருவரும் தனக்குத் தானே துன்பங்களை இழைத்துக்கொள்ள விரும்பமாட்டார்கள். இருந்தாலும் அறியாமையாலும், அலட்சியத்தாலும், உணர்ச்சிவயத்தாலும் தனக்குத் தானே துன்பங்கள் இழைத்துக் கொள்வதும் நடைமுறையில் பெரும்பாலும் காணப்படுகின்றது. இது ஒருபக்கம் இருப்பினும் ஒரு மனிதன் மற்றொரு மனிதனுக்கு இழைக்கும் தீமைகளும் பெருகிக் கொண்டு வருகின்றன. அவை மனிதனின் செயல்பாடுகளான எண்ணம், சொல், செயல் ஆகிய மூன்றின் வழியாகவும் நடந்தேறி வருகின்றன. இது குடும்பத்திலேகூட காணமுடிகின்றது.

    எனவே குடும்பத்தை எவ்வாறு நடத்தி குடும்பஅமைதி காண்பதனைக் கற்றுக்கொள்ளவதற்காக குடும்ப அமைதி என்கின்ற பாடத்தை வைத்துள்ளார் மகரிஷி அவர்கள். அப்பாடத்தில் எதிர்பார்த்தல் இன்மை, ஒருவர் உள்ளம் புரிந்து மற்றவர் நடந்து கொள்ளுதல் ஆகிய தெய்வீகப் பண்புகளான ஒத்துப்போதல், பொறுமை, தியாகம்(adjustment, tolerance, sacrifice) ஆகியவற்றைப்பற்றிய விளக்கங்களை எடுத்துக்கூறி அவற்றை வளர்த்துக் கொண்டு கர்மயோகிகளாக வாழ்ந்து குடும்பம் ஒரு பல்கலைக்கழகமாகவே திகழும்படி வாழ்த்துகிறார்.

    அவர் அருளியுள்ள திருமண வாழ்த்துப்பாவில்
    அகமகிழ் அரிய காட்சி,
    ஒத்த உயர்வு,
    அன்பளிப்பு,
    பண்புப் பயிற்சி,
    நல்லுரை,
    வாழ்த்து ஆகிய ஆறு தலைப்புகளில் கவிகள் அருளியுள்ளார்.

    அவற்றைக் கூர்ந்து நோக்கினால் குடும்பம் எப்படி இருக்க வேண்டும் என அறியலாம். திருமண வாழ்த்துப்பாடலை வாசித்துப் பாருங்கள். குறிப்பாக திருமணம் ஆக இருப்பவர்கள் கவனியுங்கள். அந்தப் பாடலை எந்த அளவிற்கு ஆழ்ந்து விரிந்து வாசிக்கிறீர்களோ, ஆராய்ச்சி செய்து, மகரிஷி அவர்களின் புனித எண்ணத்துடன் உடன்பாடு ஏற்படுகின்றபோது, மகரிஷி அவர்களிடமிருந்து அது வாழ்த்தாக அமைந்து நீங்கள் எல்லாவளங்களையும் பெற்று ஞானக்குழந்தைக்கு காரணமான பொறுப்புடைய அருட்பெற்ளோர்களாவீர்கள். மகரிஷி எண்ணங்களை ஆராய்ந்து அவற்றை உங்களுடையதாக ஆக்கிக் கொள்ளும் போது அது உங்களுடைய விருப்பமாகின்றது. அதுபோல் உங்கள் திருமணவாழ்க்கை அமையும், ஏனெனில் ‘எதனை நீங்கள் விரும்புகிறீர்களோ நீங்கள் அதுவாக ஆவீர்கள்’ என சுவாமி விவேகானந்தர் அருளுரை உபநிடத விளக்கவுரை கூறியிருக்கிறார்கள். அருளுரை விஞ்ஞான அடிப்படியைில் உள்ளது. இயல்பூக்க நியதியின் அடிப்படையில் அமைந்துள்ளது. இது என்ன ஆன்மீகக் கருத்தா? இல்லையே!! இயல்பூக்க நியதி என்பது விஞ்ஞானம்தானே!?

    ஒரு மனிதன் மற்றொரு மனிதனுக்கு இழைக்கும் தீமைகளும் பெருகிக் கொண்டு வருவதற்கான காரணமாக வேதாத்திரி மகரிஷி அவர்கள் கூறுவதாவது:–

    1) மனிதன் மனிதனின் மதிப்பை உணராததேதான் என்கிறார்.
    அவரின் இந்த கண்டுபிடிப்பினை ஏற்றுக் கொண்டுதான் இருக்கிறோம்.

    2) ஒரு மனிதன் இன்னொரு மனிதனை மாற்றானாகக் கருதும்போதுதான்,
    அவனுக்கு துன்பம் இழைக்க மனம் வருகின்றது.

    3) அடுத்ததாக மனிதனுக்கே இருக்க வேண்டிய மற்ற உயிர் படும் துக்கத்தை தன் உயிர் அனுபவிப்பதுபோல் உணராமை ஏற்படுகின்றது. விலங்கினத்திற்கு மற்ற உயிர் படும் துக்கம் தன் உயிர் அனுபவிப்பது போல் உணரமுடியாது. எவ்வாறு எனில் மானைத் துரத்தும் புலிக்கு எவ்வாறு மானின் துக்கம் தெரிய முடியும்? தெரிய வந்தால் புலி பசித்திருந்து இறக்க நேரிடும்.

    4) ஆனால் மனிதன் மற்ற உயிர் படும் துன்பத்தை தன் உயிர் அனுபவிப்பதுபோல் உணரமுடியாமை. உணரமுடியாது எனில் மனித குலம் ‘அன்பு-‘கருணை –Love–Compassion’ ஆகிய சொற்களை ஏன் கண்டு பிடித்திருக்க வேண்டும்?

    5) இங்கேதான் மகரிஷி அவர்களின் கண்டுபிடிப்பான ‘விலங்கினப்பண்பு’ என்பதனை ஆழ்ந்து சிந்திக்க வேண்டும். விலங்கினத்திலிருந்து கருத்தொடராக மனிதஇனம் வந்துள்ளதால் மனிதனின் கருமையத்திலும் விலங்கினப் பண்பு தொடர்ந்து இன்று வரை வந்துகொண்டே இருக்கின்றது.

    இயற்கையின் மனித இனப்பரிணாமம் ஆதிமனிதனிலிருந்து ஆரம்பித்து இன்று வரை அது தொடர்ந்து நடந்து கொண்டே வருகின்றது. ஆதிமனிதன் தோன்றியதிலிருந்தே அறவுணர்வு தோன்ற ஆரம்பிக்கவில்லை. தோன்றியிருக்கவும் முடியாது. ஏனெனில் ஆதிமனிதன் விலங்கினத்திலிருந்து தோன்றியவன்.

    எப்படி பிறஉயிரைக் கொன்று உணவாகக் கொள்ளும் விலங்கினத்தில் அறஉணர்வை எதிர்பார்க்க முடியாதோ அது போல் விலங்கினத்திலிருந்து தோன்றிய உடனே ஆதிமனிதர்களிடமும் எவ்வாறு அறஉணர்வை எதிர்பார்க்க முடியும்?

    மனிதனுக்குத்தான் அறஉணர்வு அவசியம். நாகரீகமும் அவசியம். மனிதப்பண்பு(மனித குணம்) என்பதே ஒழுக்கம், கடமை, ஈகை ஆகிய மூன்று அங்கங்களைக் கொண்ட அறம்தானே? அதனால்தான் உலக நல வாழ்த்துப்பாடலில் கடைசி வாழ்த்து மனிதகுலம் அறவாழ்வு வாழ்வதற்காக அமைந்துள்ளது. மேலும் அவ்வாழ்த்தைக் கவனிக்கவும்.

    FFC-168-பகுத்துணர்வில் உல நல வாழ்

    மூன்றாவது மனிதனாக இருந்து கொண்டு உலகை வாழ்த்துகின்றவாறு அந்த சொற்றொடர் அமையவில்லை. அதாவது உலகை வாழ்த்துபவர்கள் தங்களையும் சேர்த்துக் கொண்டுதான் எண்ண அலைகளை பரப்புவதாக அமைந்துள்ளது அவ்வாழ்த்து – ‘நம்கடமை அறவாழ்வின் நாட்டத்தே சிறக்கட்டும்.’ என்றிருக்கிறது.

    இத்துடன் இன்றைய சிந்தனையை நிறைவு செய்து கொள்வோம் அடுத்த அறிவிற்கு விருந்தில்(09-03-2016 – புதன்) நம் அருட்தந்தை அவர்கள் மனித இன பரிணாமத்தில் அறம் தோன்றியதை கண்டுபிடித்து நமக்கு தெரிவித்துள்ளதை அறிவோம். அடுத்த அறிவிற்கு விருந்தில் உங்கள் நண்பர்களையும் அழைத்து வாருங்கள். வாழ்க வளமுடன்.

    வாழ்க அறிவுச் செல்வம்                 வளர்க அறிவுச் செல்வம்.

    Loading

  • பகுத்துணர்வில் தொகுத்துணர்வு பண்பாட்டை உயர்த்தட்டும்.1/?

    வாழ்க மனித அறிவு                            வளர்க மனித அறிவு

     

    FFC – 168

    02-03-2016—புதன்.

    FFC-168- மகரிஷி படம்

    வாழ்க வளமுடன். நம்முடைய குருநாதரும், உலகநலத் தொண்டருமான வேதாத்திரி மகரிஷி அவர்கள் உலக நலத்தின்பால் கொண்ட அக்கறையால்,

    இவ்வுலகம் எவ்வாறு/எவ்விதங்களில் எல்லாம் உய்ய வேண்டும் என தான் விரும்பியதை/ஆவல்கொண்டதை,

    உலக மக்களும் விளங்கி விரும்பி ஏற்றுக்கொண்டு,

    உலகநல விருப்பம் மக்களிடம் வெகு விரைவில் பரவிட,

    எண்ணங்கள்தான் பரிணாமப் பயணத்திற்கு வாகனமாக இருப்பதனை அறிந்து,

    தினந்தோறும் தவத்தின் முடிவில், மிக நுண்ணிய மனஅலைச்சுழலில்,

    எண்ண அலைகளை பரப்பிட,

    உலக நல மகா மந்திரமான ‘வாழ்க வையகம்’ என்கின்ற மந்திரத்தை உருவாக்கியதோடு.

    அம்மந்திரம் விரைவில் செயல்பட்டு உலக மக்கள் அனைவரும் தங்களது பூர்வீக சொத்தான பூரணஅமைதியினை நிரந்தரமாக அனுபவிக்க,

    உலக நல மகா மந்திரத்திற்கு துணை மந்திரங்களாக மூன்று பாடல்களை இயற்றியுள்ளார்.

    இதனை மனவளக்கலைஞர்கள் அனைவரும் அறிந்ததே.

    உலகம் எவ்வாறு நலத்துடன் வாழவேண்டும் என்று தான் சிந்தித்து மனத்தோற்றத்தில் மகிழ்ந்ததன் வாயிலாக, முடிவாக, உறுதியாக எண்ணிய எண்ணங்களை காரணத்தோடு ஒரே பாடலில் கூறாமல் முறைப்படுத்தி, மூன்று தலைப்புகளில் கூறியிருக்கிறார்.

    ஒன்று உலகநல வேட்பு,
    இரண்டாவது உலக நலவாழ்த்து,
    மூன்றாவது உலக நல நாட்டம்–எழுவகை திட்டம்.

    உலக நல வாழ்த்துப் பாடலில் வருகின்ற வரிகளில் ஒன்றான ‘பகுத்துணர்வில் தொகுத்துணர்வு பண்பாட்டை உயர்த்தட்டும்’ என்பது பற்றி ஆழ்ந்து விரிந்து சிந்திக்கவே இன்றைய சத்சங்கத்திற்கு கூடியிருக்கிறோம். வாழ்க வளமுடன்.

    எனவே பொன் வரிகளுக்கெல்லாம் பொன்னான வரி மற்றும் அறிவை ஈா்த்த ‘பகுத்துணர்வில் தொகுத்துணர்வு பண்பாட்டை உயர்த்தட்டும்’ என்கின்ற வரி இடம் பெற்றுள்ள உலக வாழ்த்துப் பாடலை இப்போது நினைவு கூர்வதன் வாயிலாக மகரிஷி அவர்களை சூக்குமமாக எழுந்தருளி இச்சத்சங்கத்தை நடத்தித் தர வணங்கி வேண்டுகிறோம். ‘பகுத்துணர்வில் தொகுத்துணர்வு பண்பாட்டை உயர்த்தட்டும்’ என்கின்ற வாழ்த்து அவரிடம் மந்திர எழுத்துக்களாக மலர்ந்ததற்குக் காரணமான அவரது சிந்தனைகள் நமக்கும் உதிக்குமாக. வாழ்க வேதாத்திரியம். வளர்க வேதாத்திரியம்.

    FFC-168-பகுத்துணர்வில் உல நல வாழ்

    இப்பாடலில் எட்டு வைர வரிகள் உள்ளன. ஒவ்வொரு வைர வரியிலும், இவ்வுலகம் உய்வு பெறவேண்டி வெவ்வேறு வகையில் வாழ்த்துக்களை அமைத்துக் கொடுத்துள்ளார். ‘வாழ்க வையகம்’ என்கின்ற உலகநல மகா மந்திரம், இந்த எட்டு வாழ்த்துக்களையும் மற்றும் இரண்டு பாடல்களிலுள்ள வேட்புகள் மற்றும் நாட்டங்களை எல்லாவற்றையும் உள்ளடக்கிய ஒரே மகா மந்திரம்.

    மந்திரங்களின் பொருள் தெரிந்து உச்சரிப்பதற்கான விசேஷ பலன் உண்டு என்பதால், உலகத்தை வாழ்த்துகின்றவர் இந்த மூன்று பாடல்களின் ஒவ்வொரு தனித்தனி வாழ்த்துக்கள், வேட்புகள், நாட்டங்கள் ஆகியவற்றின் ஆழ்ந்த விரிந்த பொருளை மகரிஷி அவர்கள் கொண்டிருந்ததுபோல், அறிந்திருத்தல் நலம் பயக்கும். அவ்வாழ்த்துக்களோ வேட்புகளோ, நாட்டங்களோ நிறைவேறினால் இவ்வுலகம் எவ்வாறு அமைதியோடு வாழும், வாழலாம் என்பதனை மனக்கண்ணால் பார்த்து மகிழ வேண்டும். அதாவது கனவு காண வேண்டும்.

    இன்று உலக நல வாழ்த்துப் பாடலில் நான்காவது வாழ்த்தாகிய ‘பகுத்துணர்வில் தொகுத்துணர்வு பண்பாட்டை உயர்த்தட்டும்’ என்பதனை சிந்தனைக்காக எடுத்துக் கொண்டுள்ளோம்.

    உலக நல வாழ்த்துப் பாடலில் உள்ள எட்டு வாழ்த்துக்களில் நான்காவது வாழ்த்தை தவிர்த்து மற்ற ஏழு வாழ்த்துகளாவன

    1. உலகமெலாம் பருவமழை ஒத்தபடி பெய்யட்டும்
    2. உழவரெலாம் தானியத்தை உவப்புடனே பெருக்கட்டும்
    3. பலதொழில்கள் புரிகின்ற பாட்டாளி உயரட்டும்
    4. கலகங்கள் போட்டிபகை கடந்தாட்சி நடக்கட்டும்
    5. கல்லாமை கடன்வறுமை களங்கங்கள் மறையட்டும்
    6. நலவாழ்வை அளிக்கும் மெய்ஞ்ஞனாஒளி வீசட்டும்
    7. நம்கடமை அறவாழ்வின் நாட்டத்தே சிறக்கட்டும்.

    என்பனவற்றிற்கு பொருள் தெரிந்ததே.

    ஆனால் நான்காவது வாழ்த்தான ‘பகுத்துணர்வில் தொகுத்துணர்வு பண்பாட்டை உயர்த்தட்டும்’ என்பது மட்டும் சற்று ஆழ்ந்து விரிந்து சிந்திக்க வேண்டியதாக உள்ளது. இம்மந்திர வார்த்தையில் மகரிஷி அவர்கள் உருவாக்கியுள்ள இயற்கையியல்/இறையியல் சாராம்சமே அடங்கியுள்ளது. ‘பகுத்துணர்வில் தொகுத்துணர்வு பண்பாட்டை உயர்த்தட்டும்’ என்கின்ற வாழ்த்து மந்திரத்தில் நான்கு சொற்கள் இடம் பெற்றுள்ளன.

    1. பகுத்துணர்வு,
    2. தொகுத்துணர்வு,
    3. பண்பாடு,
    4. உயர்வது

    ‘பகுத்துணர்வில் தொகுத்துணர்வு பண்பாட்டை உயர்த்தட்டும்’ என்கின்ற மந்திரத்தில் உள்ளது ஒரு வாழ்த்தா அல்லது இரண்டு வாழ்த்துக்களா? முதலில் அதனை அறிவோம். சந்தேகமின்றி இவ்வரியில் இரண்டு வாழ்த்துக்கள் உள்ளன. ஏன்? ‘பண்பாடு உயரட்டும்’ என்று மட்டும் வாழ்த்தாமல், ‘பகுத்தணர்வில் தொகுத்துணர்வு பண்பாட்டை உயர்த்தட்டும்’ என வாழ்த்தச் சொல்கிறார் மகரிஷி அவர்கள். அவ்விரண்டு வாழ்த்துக்களில்

    ஒன்று‘ பகுத்துணர்வில் தொகுத்துணர்வும்’ பெறவேண்டும்.
    மற்றொன்று, அதன் பயனாக பண்பாடு உயர வேண்டும் என்பது.

    பகுத்துணர்வில் தொகுத்துணர்வு தான் பண்பாட்டை உயர்த்த முடியும் என்பதனைக் கண்டுபிடித்து அம்மந்திர வரியினை அமைத்துள்ளார். மேலும் அவரது இயற்கைவியல்/இறையியல் சாராம்சமே அமையும்படி ‘பகுத்துணர்வில் தொகுத்துணர்வு’ என்கின்ற மந்திர சொற்றொடரை அமைத்ததிலிருந்து மகரிஷி அவர்களின் ஆழ்ந்த விரிந்த சிந்தனைத் திறனை அறிந்து போற்றி மகிழ வேண்டும். இயல்பாகவே அவ்வாறு செய்வதன் வாயிலாக, இப்போது இங்கே இயற்கை/இறை நமக்கு இயல்பூக்க நியதியினை பயன்படுத்திக் கொள்ளவும், அதன் கிளைத்தேற்றத்தைக் கொண்டு, நம் நிலையை நாமே சோதித்துப் பார்த்துக் கொள்ளவும் சந்தர்ப்பம் அளித்துள்ளது எனலாம்.

    அப்படியானால் மகரிஷி அவர்கள் எதிர்பார்க்கின்ற,

    1. இயற்கைக்கோ/இறைக்கோ இசைவோடும் இணக்கத்தோடும் இருக்கும்படியான மனிதபண்பாடு என்ன என்பதனையும்,

    2. அப்பண்பாடு உயர்வதற்கு எவ்வாறு ‘பகுத்துணர்வில் தொகுத்துணர்வு’ தான் தேவை என்பதனையும் அறிய வேண்டும்.

    பகுத்துணர்வு, தொகுத்துணர்வு இரண்டு சொற்களுக்கும் பொருள் தெரிந்து கொண்டால், ‘பகுத்துணர்வில் தொகுத்துணர்வு’ எவ்வாறு பண்பாட்டினை உயர்த்த முடியும் என்பதனை அறிந்து கொள்வது சுலபமாக இருக்கும். ஆகவே நமது வழக்கப்படி முதலில் வார்த்தை விளக்கம் காண்போம்.

    பகுத்துணர்வு(Perspective view) :

    ‘பகுத்துணர்வு’ என்கின்ற சொல்லில் ‘பகு’ மற்றும் ‘உணர்வு’ என்கின்ற இரண்டு சொற்கள் உள்ளன. ‘பகு’ என்றால் என்ன பொருள்? பிரித்தல் என்று பொருள். உணர்வு என்றால் அறிதல் என்று பொருள். ஆகவே ‘பகு’ வையும் ‘உணா்வையும்’ சேர்த்தால் ‘பகுத்துணர்வு’ ஆகின்றது.

     பகுத்துணர்வு என்றால் என்ன பொருள்?
     அதாவது பிரித்து உணர்வது பகுத்துணர்வு ஆகின்றது.

     பிரித்து உணர்வது என்றால் என்ன?
     பிரித்து பிரித்து உணர்வது பிரித்துணர்வு.

     பிரித்து என்றால் என்ன?
     முழுமையாக இருப்பதை பகுதிகளாக்குதல்.

    பகுத்துணர்வு என்பது புலனறிவுதான். (அதாவது புலன்களால் அறிவது, புலன்களால் அறிவது என்றால் புலன்கள் இல்லாமலும் அறிவது இருக்கின்றதா என ஐயம் எழலாம். ஆம் உள்ளது அதுதான் மெய்யுணர்வு. மெய்யுணர்விற்கு புலன் ஏதும் அவசியம் இல்லை. அறிவால் அறிவை அறிவது. எனவே இதுதான் தன்னிலை அறிதல்(Self Realisation)

     அது இது, அது. இது என்று பிரித்துப் பிரித்துப் அதன் தன்மையை உணர்ந்து கொண்டே போனால் அது பகுத்துணர்வு(Perspective view).

    தொகுத்துணர்வு (Holistic View):

    ‘தொகுத்துணர்வு’ என்கின்ற சொல்லில் ‘தொகு’ மற்றும் ‘உணர்வு’ ஆகிய இரு சொற்கள் உள்ளன.

    o ‘தொகு’ என்றால் என்ன? ஒன்று படுத்துதல் என்று பொருள்.
    o தொகுத்துணர்வு என்றால் எல்லாவற்றையும் ஒன்று படுத்தி உணர்தல் ஆகும்.

    o ஒன்று படுத்தி உணர்தல் என்றால் என்ன?
    o ஏன் ஒன்று படுத்திப் பார்க்க வேண்டும்?

    பகுத்துணர்வு என்ன என்பதனையும், தொகுத்துணர்வு என்ன என்பதனையும் அறிந்து கொண்டோம். இப்போது இவற்றில் எது சிறந்தது((Perspective view or Holistic View?) என அறிய வேண்டும். பகுத்துணர்வில் தொகுத்துணர்வு என்கின்ற போதே தொகுத்துணர்வுதான் சிறந்தது என தெரியலாகின்றது. அப்படியிருக்கும்போது நேரிடையாகவே தொகுத்துணர்வு பண்பாட்டை உயர்த்தட்டும் என்றே மகரிஷி அவர்கள் சொல்லியிருக்கலாமன்றோ! பகுத்துணர்வில் தொகுத்துணர்வு பண்பாட்டை உயர்த்தட்டும் என ஏன் சொல்ல வேண்டும்? காத்திருப்போம் அடுத்த அறிவிற்கு விருந்து வரை. வாழ்க வளமுடன்.

    அடுத்த அறிவிற்கு விருந்தில் (06-03-2016—ஞாயிறு)
    1. இயற்கைக்கு/இறைக்கு உகந்த மனிதபண்பாடு எது என்பதனையும்,
    2. அறம் எப்போது தோன்றியது என்றும்,
    3. எவ்வாறு ‘பகுத்துணர்வில் தொகுத்துணர்வு’ இயற்கைக்கு/இறைக்கு உகந்த மனிதபண்பாட்டினை உயர்த்தும் என்றும்,
    4. அறவாழ்வினை நாடுவதே நம் கடமையின் சிறப்பாக அமைவது பற்றியும் அறிய இருக்கிறோம்.
    வாழ்க வளமுடன்

    வாழ்க அறிவுச் செல்வம்                                 வளர்க அறிவுச் செல்வம்.

    Loading